Jump to content

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் இணையத்தில் விறகு விற்பனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணத்தினால் இணையத்தள விற்பனை நிறுவனங்கள் ஒன்லைனில் விறகு மற்றும் விறகு அடுப்புக்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

இவ்வாறு வர்த்தகத்தை முன்னெடுக்கும் இலங்கையின் பிரபல்ய நிறுவனமொன்றில் 5 கிலோ கிராம் விறகுகள் 140 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதே நேரத்தில் ஒரு மண் அடுப்பும் 5 கிலோ கிராம் விறகுகளும் 390 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Dara-mitiya-.jpg

இது தொடர்பில் பெயர் குறிப்பிடப்படாத இணையத்தளத்தின் தலைவர் தனது முகநூல் பக்கத்தில், "நாங்கள் விறகுகளை ஒன்லைனில் விற்பனை செய்வோம் என்று கற்பனை கூட செய்யவில்லை. இது உண்மையில் வெற்றியளித்துள்ளதாக கூறியுள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் இணையத்தில் விறகு விற்பனை | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கப்ருகா இணையதளம் இலங்கையில் இணையத்தளமூடு பொருட்கள் வாணிபம் செய்வதில் முன்னோடி. இது ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட இருபது வருடங்கள் வரும் என நினைக்கின்றேன். நான் ஆரம்ப காலம் தொட்டு வாடிக்கையாளன். ஆனால் இப்போது பல வருடங்களாக பயன்படுத்துவது இல்லை. காரணம் விலை நியாயவிலையை விட மிக அதிகம். இதைவிட உறவுகளுக்கு நேரடியாக பணத்தை அனுப்பி தேவையானதை வாங்குவிக்கலாம். ஆனால், அவசர தேவைகளுக்கு நம்பிக்கையான சேவை. இப்போது பாரிய வளர்ச்சி கண்டுள்ளது. கொரனா பேரிடர் காலத்தில் பொருட்களை மிக அதிக அளவில் விற்றதாக முறைப்பாடுகள் சொல்லப்பட்டு இவை சம்மந்தமான வீடியோக்களும் கடந்த வருடம் சமூக வலைத்தளங்களில் வந்தன.

https://www.kapruka.com/shops/deliveryProductPreview.jsp?id=grocery002049

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

நேரத்தில் ஒரு மண் அடுப்பும் 5 கிலோ கிராம் விறகுகளும் 390 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

 கெடுதலிலும் ஒரு நன்மை என்பதுபோல் ஆரோக்கிய சமையல் மட்டுமல்ல அன்றைய ஊர் நினைவுகளும்   மீண்டும் எட்டி பாக்குது.

அம்மா மண் அடுப்பில் விறகு வைச்சு எரிச்சு ஒரு முட்டை பொரிச்சால் வாசனை மூக்கை துழைச்சிருக்கு

கோழி இறைச்சி பிரட்டி சமைச்சால் ஊருக்கே மணந்திருக்கு, மசிச்ச கீரைகறி  நாக்கு சொட்ட சொட்ட சுவையாய் இருந்திருக்கு.

ஆவி பறக்க பறக்க தேங்காய்பாலில் ஒரு சொதி வைச்சால் வீட்டில உள்ளவங்கள் சாப்பிட்டாங்களா என்று சிந்திக்காமலே அதோடு மட்டும் பத்து பதினைந்து இடியப்பம் அமுக்கிய நீங்காத நினைவுகள் இப்பவும் இருக்கு 

இங்கேயெல்லாம் கோழிகறி சட்டிக்குள்ள நாட்டுவெடிகுண்டு வீசினாலும் பக்கத்தில நிக்குறவனுக்கும்  மணக்குதில்ல.

அதீத மசாலா வாசனைகள் புலம்பெயர்நாடுகளில் பலரால் விரும்பபடுவதில்லையென்றாலும் அந்தநாள் ஞாபகங்களை எப்படி விரும்பாமல் இருக்கிறது?.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீமாவோ பண்டாரயநாயக்கா காலம் போல சனம் பாணுக்கு கியூவில நிற்கேக்க தான் தெரியும்..  கோத்தாவோட சேர்ந்து ரணிலும் காணாமல் போவார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, valavan said:

 கெடுதலிலும் ஒரு நன்மை என்பதுபோல் ஆரோக்கிய சமையல் மட்டுமல்ல அன்றைய ஊர் நினைவுகளும்   மீண்டும் எட்டி பாக்குது.

அம்மா மண் அடுப்பில் விறகு வைச்சு எரிச்சு ஒரு முட்டை பொரிச்சால் வாசனை மூக்கை துழைச்சிருக்கு

கோழி இறைச்சி பிரட்டி சமைச்சால் ஊருக்கே மணந்திருக்கு, மசிச்ச கீரைகறி  நாக்கு சொட்ட சொட்ட சுவையாய் இருந்திருக்கு.

ஆவி பறக்க பறக்க தேங்காய்பாலில் ஒரு சொதி வைச்சால் வீட்டில உள்ளவங்கள் சாப்பிட்டாங்களா என்று சிந்திக்காமலே அதோடு மட்டும் பத்து பதினைந்து இடியப்பம் அமுக்கிய நீங்காத நினைவுகள் இப்பவும் இருக்கு 

இங்கேயெல்லாம் கோழிகறி சட்டிக்குள்ள நாட்டுவெடிகுண்டு வீசினாலும் பக்கத்தில நிக்குறவனுக்கும்  மணக்குதில்ல.

அதீத மசாலா வாசனைகள் புலம்பெயர்நாடுகளில் பலரால் விரும்பபடுவதில்லையென்றாலும் அந்தநாள் ஞாபகங்களை எப்படி விரும்பாமல் இருக்கிறது?.

 ஊர்ச்சாப்பாடு நினைத்தாலே இனிக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, valavan said:

இங்கேயெல்லாம் கோழிகறி சட்டிக்குள்ள நாட்டுவெடிகுண்டு வீசினாலும் பக்கத்தில நிக்குறவனுக்கும்  மணக்குதில்ல.

ஹா..... ஹா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.