Jump to content

Muscular Dystrophy treatment in tamil | தசை சிதைவு நோய் கட்டுப்படுத்த சித்த மருத்துவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Muscular dystrophy நோயாளிகள் குறிப்பாக எண்ணெய் போட்டு massage பண்ணகூடாது, இருப்பதையும் பலவீனப்படுத்திவிடுமாம்.
பல ஆயுள்வேத மருத்துவர்கள் தவறாக எனக்கு சிகிச்சை அளித்துள்ளார்கள். உடலில் அழுத்தம் கொடுக்காது மெதுவாக பூசிவிடும் ஒருவகை எண்ணெய் தசைகளை பலப்படுத்தும் என்று கூறுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு Muscular dystrophy பாதிக்கப்பட்ட சகோதரர் ஒருவர் சமைக்கும்போது எடுத்தது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தசை சிதைவு நோய் | Treatment for Muscular Dystrophy | Dr Vidhya 

ஹோமியோபதி மருத்துவம் சிறிது உதவுவதாக மருத்துவர் வித்தியா தெரிவிக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்றம் அறக்கட்டளை | Yetram Trust Erode for muscular dystrophy

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீடியோக்களைநான் இன்னும் பார்க்கவில்லை.நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன். இணைப்பிற்குநன்றி ஏராளன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Muscular dystrophy சார்ந்த பதிவுகளை இத்திரியில் தொடரலாம் என்று எண்ணுகிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தசைவளக்கேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 
 
Jump to navigationJump to search
தசைவளக்கேடு / தசையழிவு / தசை அழிவு
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்பு நரம்பியல், pediatrics, medical genetics
ஐ.சி.டி.-10 G71.0
ஐ.சி.டி.-9 359.0-359.1
MedlinePlus 001190
ஈமெடிசின் orthoped/418
MeSH D009136

தசை வளக்கேடு / தசையழிவு / தசை அழிவு (Muscular Dystrophy) என்பது உடலை அசைக்க உதவும் தசைகளை பலவீனமடையச் செய்யும், சந்ததிகளூடாக கடத்தப்படக்கூடிய பல தசை நோய்களை உள்ளடக்கி கூட்டாக குறிக்கும் ஒரு சொல்லாகும்[1][2]. இவ்வகையான நோய்களில் எலும்புத்தசை பலவீனம், தசை புரதங்களில் குறைபாடுகள் காணப்பட்டு, அவை தீவிரமடையும்போது தசைக் கலங்களும், தசை இழையங்களும் இறப்புக்குள்ளாகும்[3]. Duchenne, Becker, Limb girdle, Congenital, Facioscapulohumeral, Myotonic, Oculopharyngeal, Distal, Emery-Dreifuss ஆகிய 9 நோய்கள் தசை வளக்கேட்டு நோய்களாக பாகுபடுத்தப்பட்டிருப்பினும்[4] நூற்றுக்கு மேற்பட்ட நோய்கள் இவ்வகையான தசை வளக்கேட்டை ஒத்திருக்கின்றன. இதனால் இதயம், இரையகக்குடல் (gastrointestinal), நரம்புத் தொகுதி, அகச்சுரப்பிகள், தோல், கண்கள், மூளை போன்றவற்றிலும் குறைபாடுகள் ஏற்படும். இதனால் மனநிலை மாற்றங்கள் (mood swings), கற்றலில் சிக்கல்களும் தோன்றலாம்[4].

1860 ஆம் ஆண்டுகளில், வலுவின்மை காரணமாகவும், நடக்கும் திறனை இழந்தும், மற்றும் இளம் வயதிலே இறந்து போகும் சிறுவர்களைப் பற்றிய செய்திகள் மருத்துவ நாளேடுகளில் வந்த வண்ணம் இருந்தன. தொடர்ந்து வந்த பத்தாண்டுகளில், பிரான்சு நாட்டைச் சார்ந்த நரம்பியல் நிபுணரான குய்லாவ்மே டக்சென்னி என்பவர் 13 சிறுவர்களைக் கொண்டு பொதுவான, தீவிரமான இந்த நோயின் பல்வேறு தோற்றத்தினை விளக்கினார். அதனால் தற்போது அந்த நோயானது டக்சென்னி தசைவளக்கேடு என்று அவருடைய பெயரிலேயே அழைக்கப்படுகின்றது. அந்த நோயானது பல்வேறு வடிவங்களைக் கொண்டிருக்கிறது என்பதற்கு டக்சென்னியின் விளக்கங்கள் மிகப்பெரிய சான்றாக அமைந்தன என்பதுடன், அந்நோய் அனைத்து தரப்பு வயதிலான ஆண்களை பாதித்தது[சான்று தேவை]

. இந்த நோய்க்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. உடலை படிப்படியாக ஊனமாக்கி, உயிரைக் குடிக்கும் இந்த நோய், பெரும்பாலும் ஆண் குழந்தைகளை மட்டுமே தாக்கக் கூடியது. இந்தக் கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், 20 முதல் 30 வயதுக்குள் பெரும்பாலும் உயிரிழக்க நேரிடுகிறது. இந்த நோயின் வீரியத்தை குறைந்தது 5 வயதுக்கு மேல்தான் உணரமுடியும்.[சான்று தேவை]

பொருளடக்கம்

மரபியல் காரணம்[தொகு]

இந்தத் தன்மைகள் அனைத்தும் மரபினை அடிப்படையாகக் கொண்டவை என்பதுடன், பல்வேறு தசைவளக்கேடுகள் அனைத்தும் வெவ்வேறு மரபியல் மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன. நன்கறிந்த வகையான, டக்சென்னி தசைவளக்கேடு (டிஎம்டி) எக்ஸ் தொடர்பிலான மரபியல் மாதிரியைச் சார்ந்தது, இதன் அர்த்தம் யாதெனில் இந்நோய்க்கு காரணமான மரபணு மொத்தமுள்ள இரண்டு பாலியல் நிறமிகளில் எக்ஸ் என்ற நிறமியில் காணப்படுகிறது, ஆகவே இந்நோயானது பாலியல் தொடர்பை அடிப்படையாகக் கொண்டதாகவும் கருத இயலும். ஆண்களின் (ஒரே ஒரு எக்ஸ் நிறமியை மட்டும் உடையவர்கள்), ஒவ்வொரு உயிரணுவிலும் உள்ள மரபணுக்களின் இரண்டில் ஒரு மாதிரியே இந்நோயை உருவாக்க காரணமாகிறது. பெண்களில் (இரண்டு எக்ஸ் நிறமிகளை உடையவர்கள்), ஒவ்வொரு உயிரணுவிலும் உள்ள மரபணுக்களின் இரண்டு மாதிரிகளும் இந்நோயை உருவாக்க காரணமாகிறது. விதிவிலக்காகவும், சில சமயங்களில் X தொழிற்படாத்தன்மை ஈடுசெய்வதிலும் ஏற்படும். மொத்தத்தில் ஆண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

நோய் அறிகுறிகளும் உணர்குறிகளும்[தொகு]

சில அறிகுறிகள், மருத்துவப் பரிசோதனைகள் மூலம்தான், இந்நோயைப் பற்றி அறியமுடியும் எனத் தெரிவிக்கும் மேலைநாட்டு மருத்துவர்கள் மற்றும் மரபணு ஆராய்ச்சியாளர்கள், இந்நோய்க்கான மருந்தைக் கண்டறியும் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நோயின் முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு:

  • தசைத் திசுக்களின் தொடர்ச்சியான அழிவு
  • சமநிலைப்படுத்திக் கொள்ள இயலாமை
  • தொடர்ந்த நிலை தடுமாற்றம்
  • நடப்பதில் சிரமம்
  • மெதுவான நடை
  • கொண்டைக்கால் சதை ஒழுங்கின்றி காணப்படுவது
  • குறிப்பிட்ட அளவிலான இயக்கம்
  • சுவாச சம்பந்தமான பிரச்சினைகள்
  • வலிமையிழந்த கண்ணிமைகள்
  • பாலுறுப்புச் சுரப்பியின்மை
  • சிறுநீர்ப்பை கோளாறு
  • பக்க விளைவுகள் (முதுகெலும்பு மற்றும் பின்புறம் வளைந்து காணப்படுதல்)
  • நடக்க இயலாமை

இந்த நோயை அறுதியிடுவதற்கு முன்பாக மேற்கூறிய சில அறிகுறிகள் தென்படலாம் அல்லது தென்படாமலும் போகலாம். தசைவளக்கேட்டின் சில பிரிவுகள் இதயத்தை பாதிக்க வாய்ப்புள்ளது என்பதுடன், இதயத் தசைநோய் அல்லது குருதி ஊட்டக்குறை[சான்று தேவை] போன்றவற்றை ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைகிறது.

நோய் கண்டறிதல்[தொகு]

தசை உயிரகச்செதுக்கு மற்றும் அதிகப்படுத்தப்பட்ட creatine kinase (CK) ஆகியவற்றின் முடிவுகளின் அடிப்படையில் தசைவளக்கேடு நோய் கண்டறியப்படுகிறது. சில நேரங்களில், டி.என்.ஏ இரத்தப் பரிசோதனையை மேற்கொள்வது அவசியமாகிறது.

உடற் பரிசோதனை மற்றும் நோயாளியின் மருத்துவ விவரம் உள்ளிட்டவை தசைவளக்கேட்டின் வகையைக் கண்டறிய மருத்துவருக்கு உதவியாக இருக்கும். குறிப்பிட்ட தசைக் குழுக்கள் பல்வேறு வகையான தசைவளக்கேட்டினால் பாதிக்கப்படுகிறது.

கொழுப்பு மற்றும் தசையைப் பெரிதாக்கும் திசுக்களின் உருவாக்கத்திற்கு குறிப்பிட்ட வகையான தசைவளக்கேடு காரணமாக இருப்பதால், அடிக்கடி ஏற்படும் அதிகப்படியான தசை இழப்பைத் (திசு அழிவுறுதல்) தடுப்பது அவசியமாகிறது. இதுவே கெண்டைக் கால் தசை அதிகரிப்பு என்றழைக்கப்படுகிறது.

நோய் முன்கணிப்பு[தொகு]

தசைவளக்கேடு பிரச்சினையுள்ள மக்களை இனம் கண்டறிவது நோயின் தீவிரத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. தசைக் குறைபாடுகள், செயல்பட இயலாமை மற்றும் நடக்க இயலாமை போன்ற பல்வேறு குறைபாடுகளை தசைவளக்கேடு ஏற்படுத்தி வரும் நிலையில், குறிப்பிட்ட தசைவளக்கேட்டு வகைகள் நோயின் தீவிரத்தை அதிகப்படுத்துவதில்லை. தசைவளக்கேடு காரணமாக சில குழந்தைகள் சிறு வயதிலேயே இறந்துவிடுகின்றன, இருப்பினும் பெரும்பாலான குழந்தைகள் பலவீனத்துடன் வாலிபப் பருவம் வரை உயிருடன் இருக்கின்றன. தசைகளின் பாதி்ப்பு சூழ்நிலைக்கேற்றார் போல மாறுபடும், இருப்பினும் இடுப்பெலும்பு, தோள், முகம் அல்லது வேறு இடங்களில் அந்நோயின் பாதிப்பு பெருமளவில் காணப்படுகிறது. தசைவளக்கேடு வயது வந்தோரை பாதிக்கும், இருப்பினும் அந்நோயின் பல்வேறு செயல்பாடுகள் குழந்தைப் பருவத்திற்கு முன்பாகவே பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டவை.

சிகிச்சை[தொகு]

தசைவளக்கேட்டை குணப்படுத்தும் சிகிச்சை முறை எதுவும் இல்லை. செயலற்ற தன்மை (படுக்கை ஓய்வு மற்றும் நீண்ட காலமாக உட்கார்ந்து கொண்டிருத்தல்) அந்நோயை மேலும் தீவிரப்படுத்த வாய்ப்புள்ளது. நலமீட்பு உடற்பயிற்சி ஊட்ட உணவு சிகிச்சை, தொழில்வழி சிகிச்சை, இயல்பான அணுகுமுறை, பேச்சு பிறழ்வு சிகிச்சை மற்றும் எலும்பியல் சம்பந்தமான உபகரணங்கள் (உதாரணமாக , சக்கர நாற்காலி, நிற்க உதவும் சட்டங்கள்) ஆகியவை இந்நோயைத் தீர்க்க உதவியாக இருக்கும்.

தசைவளக்கேட்டை குணப்படுத்துவதற்கான குறிப்பிட்ட சிகிச்சை முறை என்று எதுவும் இல்லை. நலமீட்பு உடற்பயிற்சி ஊட்ட உணவு சிகிச்சை முறையானது சுருக்கங்களைத் தடுக்கவும் மற்றும் தசை இறுக்கத்தைப் பராமரிப்பதற்கும் பயன்படுகிறது, மேலும் நேர்த்தியான (எலும்பியல் உபகரணங்களின் ஆதரவு) மற்றும் சரிசெய்யப்பட்ட எலும்பியல் அறுவைச் சிகிச்சை உள்ளிட்டவை நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்குத் தேவைப்படுகின்றன.

Emery-Dreifuss, myotonic ஆகிய தசைவளக்கேடு வகைகளுக்கு செயற்கை இதயமுடுக்கி தேவைப்படலாம். Myotonic தசைவளக்கேட்டில் கடினமான தசைச்சுருக்கத்தத் தொடர்ந்து, தாமதமாக தசை தளர்வு வரும் நிலையைக் குறிக்கும் myotonia வுக்கான சிகிச்சையாக quinine, phenytoin, mexiletine போன்றன பயன்படுத்தப்படும். ஆனால் நீண்டகால சிகிச்சை எதுவும் அறியப்பட்டிருக்கவில்லை.

எம்டியுடன் உள்ள ஒருவர் தினந்தோறும் மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்கு (தானே உண்பது, தன்னைத் தானே காத்துக்கொள்ளுதல் மற்றும் பல) தொழில்வழி சிகிச்சை முறை உதவியளிக்கிறது என்பதுடன், ஓய்வு நேரத்தின்போதான நடவடிக்கைகளுக்கும் உதவி புரிகிறது. இந்த முறையானது உபகரணங்கள் அல்லது ஆற்றல் பாதுகாப்புத் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி நிறைவேற்றப்படுகிறது. வீட்டிலோ அல்லது அலுவலகங்களிலோ ஒருவரின் செயல்பாடுகள் மற்றும் அணுகும் தன்மையை உயர்த்துவதற்கு, தொழில்வழி சிகிச்சை முறை சூழ்நிலைக்கு ஏற்றாற்போல பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. தொழில்வழி சிகிச்சை முறை வல்லுநர்கள் தசைவளக்கேட்டில் ஏற்படக்கூடிய உளவியல் மாற்றங்களையும், புலன் உணர்வில் ஏற்படும் வீழ்ச்சியையும் கவனிப்பதுடன், இந்நோயுள்ளவர்களின் குடும்பத்துக்குத் தேவையான அறிவையும், ஆதரவையும் வழங்குவர்[5].

அமெரிக்காவில் ஆராய்ச்சி[தொகு]

அமெரி்க்காவிலுள்ள National Institute of Neurological Disorders and Stroke (NINDS), National Institute of Arthritis and Musculoskeletal and Skin Diseases (NIAMS), National Institute of Child Health and Human Development (NICHD) ஆகிய நிதியளிக்கும் மூன்று அமைப்புகள் கூட்டாக இணைந்து தசைவளக்கேட்டில் கவனம் செலுத்தி வருகின்றன.[4]

1966 ஆம் ஆண்டில், தசைவளக்கேடு அமைப்பு ஆண்டுதோறும் Jerry Lewis MDA Telethon என்ற நிகழ்ச்சியை நடத்தத் தொடங்கியது என்பதுடன், அந்நிகழ்ச்சியானது மற்ற அனைத்து நிகழ்ச்சிகளைக் காட்டிலும் குறிப்பிடத் தகுந்த முறையில் தசைவளக்கேடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தது.

2001 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி, பல்வேறு வகையான தசைநார்த் தேய்வைக் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக, MD Care Act சட்டத்தின் கீழ், பொது நலச் சேவை சட்டம் திருத்தம் செய்யப்பட்டது. முரண்பாடற்ற ஆய்வு உத்திகளின் மூலம் தசைvaLakkeedu ஆராய்ச்சியின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் வகையில், இந்தச் சட்டம் தசைவளக்கேடு ஒருங்கிணைப்பு அமைப்பை உருவாக்கியது.[6][7]

மேலதிக விபரங்களுக்கு கீழ் உள்ள விக்கிபீடியா இணைப்பினை அழுத்துங்கள்.

https://ta.wikipedia.org/wiki/தசைவளக்கேடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தசை சிதைவு நோய்: உதவ காத்திருக்கும் பாதிக்கப்பட்ட சகோதரிகள்!

தசை சிதைவு நோய்: உதவ காத்திருக்கும் பாதிக்கப்பட்ட சகோதரிகள்!

தசை சிதைவு நோய்: உதவ காத்திருக்கும் பாதிக்கப்பட்ட சகோதரிகள்!

தசை சிதைவு நோய்: உதவ காத்திருக்கும் பாதிக்கப்பட்ட சகோதரிகள்!

பிரீமியம் ஸ்டோரி

சை சிதைவு நோய் (muscular dystrophy)  ஒரு கொடிய நோய் என்று பலர் சொன்னாலும்  தன்னம்பிக்கை, முயற்சி என இந்த நோயின் தாக்கத்திலிருந்து தன்னை மீட்டுக்கொண்டு, தம்மைப்போன்று இதே நோயால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் உதவ தயாராக இருப்பதாக நம்பிக்கை தெறிக்க பேசுகிறார் வானவன் மாதேவி.

"ஆரம்பத்தில் நடக்கத் தடை போடும் இந்த நோய், அடுத்தடுத்து தன் வேலைகளை காட்டும். கால்களை முடக்கிய பின்கைகளுக்குத் தாவி கைகளையும் செயலிழக்கச் செய்யும். படிப்படியாக ஒரே இடத்தில் படுக்கச் செய்து அதன் உக்கிரத்தை காட்டும். உடல் அசைவற்று எதுவுமே செய்ய முடியாமல் போய்விடும்" என்பதுதான் பொதுவான மருத்துவ வட்டார கூற்று. 

தசை சிதைவு நோய்: உதவ காத்திருக்கும் பாதிக்கப்பட்ட சகோதரிகள்!
 

இத்தகைய கொடிய நோய், ஒரே வீட்டில் உள்ள அக்கா, தங்கை என இருவரையும் தாக்குகிறது. அப்பாவும், அம்மாவும் ஆஸ்பத்திரிக்கு அலைந்து அலைந்து, ஒரு கட்டத்திற்கு மேல் அலுத்து போய்விட்டார்கள்.   சேலத்தைச் சேர்ந்த வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி, 30களை கடந்த இந்த இரு  சகோதரிகள்தான் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள். பள்ளிப்பருவத்திலயே இந்த நோயால் பாதிக்கப்பட்ட இவர்கள் கடந்து வந்த பாதையை வார்த்தைகளில் வடித்துவிட முடியாது.  இப்போது, 'ஆதவ் டிரஸ்ட்' என்கிற பெயரில் தசை சிதைவு  நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டி கொண்டிருக்கிறார்கள்.

"இந்த நோய் குணப்படுத்த முடியாத நோய்தான். ஆனால், இதை மேலும் வளரவிடாமல் தடுக்க முடியும்!"- வானவன் மாதேவியிடமிருந்து நம்பிக்கை நிரம்பிய வார்த்தைகள் தெறிக்கிறது.

 ''அப்ப நான் ஆறாம் வகுப்பு படிச்சிகிட்டு இருந்தேன். ஒரு நாள் ஸ்கூலுக்கு போகும்போது நடக்க முடியாம திடீர்னு கீழே விழுந்துட்டேன். என்னால கொஞ்ச தூரத்துக்கு மேல எழுந்து நடக்கவே முடியல. லோக்கல்ல ஒரு டாக்டர்கிட்ட போய் காட்டினோம். நடக்க சொல்லி பாத்துட்டு, எங்க அப்பாகிட்ட,  'உங்க பொண்ணுக்கு சை சிதைவு நோய். இதுக்கு ட்ரீட்மெண்டே கிடையாது'னு சொல்லிட்டார்.

தசை சிதைவு நோய்: உதவ காத்திருக்கும் பாதிக்கப்பட்ட சகோதரிகள்!
 

கொஞ்ச தூரம் நடக்குறது, கீழ விழுறதுனு ஒருவருஷம் அப்படியே ஓடுச்சி. சென்னை போய் பாக்கலாம்னு சென்னை ஜி.ஹெச்க்கு போனோம். அங்க நான் அட்மிட் ஆகியிருந்தப்பதான், தங்கச்சியும் நடக்க முடியாம கீழ விழுந்துட்டானு வீட்ல இருந்து ஃபோன் வந்துச்சு. இந்த நோய் மரபியல் காரணங்களால்தான் வருது. அதனால உங்க வீட்ல வேறு யாருக்காவது தாக்கலாம்னு டாக்டர் ஏற்கனவே செல்லியிருந்தார். இதை கேட்டவுடனயே எல்லோரும் துடிச்சிப் போயிட்டோம். நானும், என் தங்கச்சியும் நடக்க முடியாம சிரமப்பட்டோம். எனக்கு நம்ம வாழ்க்கை என்னனு தெரிஞ்சு போச்சு. அதனால படிக்கணும்னு மட்டும்தான் ஆசைப்பட்டேன். நானும், என் தங்கச்சியும் பத்தாவது வரைக்கும் படிச்சோம். ஆட்டோலதான் போவோம். ஸ்கூல் பேக் கூட தூக்க முடியாது. நாங்க சிரமப்படுறத பாத்துட்டு இதுக்கு மேல படிக்க வேண்டாம்னு நிறுத்திட்டாங்க.

ஆனா நாங்க விடல, எங்க அப்பாவை தொந்தரவு பண்ணிக்கிட்டே இருந்தோம். டுடோரியல் ஆசிரியர்களை வீட்டுக்கே வரழைச்சு படிக்க வச்சாங்க. பன்னிரெண்டாவது பாஸ் பண்ணோம். டி.டி.பி., டி.சி.ஏ.னு கோர்ஸ்களும் படிச்சி முடிச்சோம். படிக்கும்போதே நாம சீக்கிரமே இந்த சமுதாயத்துக்கு ஏதாவது செஞ்சிடணும்னு தோணுச்சி. எந்த ட்ரீட்மெண்டுமே பலனளிக்கல. அப்பதான் ஒரு டாக்டர் மூலமா பிஸியோ தெரபி அறிமுகமாச்சு. தொடர்ந்து பிஸியோ தெரபி ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டோம். இந்த நோயோட தாக்கம், இந்நேரம் எங்களுடைய கைகளை பாதிச்சி எங்களை முடக்கியிருக்கணும். ஆறு வருஷத்துக்கு மேலாக கால் பாதிப்போட நிறுத்தி வச்சிருக்கோம்னா, அதுக்கு பிஸியோ தெரபிதான் காரணம்.

தசை சிதைவு நோய்: உதவ காத்திருக்கும் பாதிக்கப்பட்ட சகோதரிகள்!
 

எங்களால வீட்ல உட்கார்ந்து மூணு வேளையும் சாப்பிட்டுட்டு, தூங்குறது பிடிக்கல. கொஞ்ச நாள் வீட்ல இருந்தபடியே டி.டி.பி. ஒர்க் செஞ்சு கொடுத்தோம். ஆனா, அது சக்சஸா போகல. நாங்க இப்படி இருக்குறது ஒரு கட்டத்துக்கு மேல அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பழகிடுச்சி. கண்டுக்கவே மாட்டாங்க. எங்ககிட்ட கோபமா நடந்துக்கவும் ஆரம்பிச்சாங்க. டி.வி. பாக்கணும்னா கூட ரிமோட்டை எடுத்து கீழ வச்சிட்டு போய்டுவாங்க. எங்களால இறங்கி எடுக்க முடியாது. இப்படி பல விஷயங்கள் நடக்கும். எனக்கு படிக்கணும்னு மட்டும்தான் ஆசை.  ஆனா என் தங்கச்சி எல்லார் மாதிரியும் இருக்கணும்னு ஆசைப்படுவா. ஆனா அது முடியாதுல்ல, அதான் ரெண்டு பேருமே எல்லாரைவிடவும் வித்தியாசமா இருக்கலாம்னு முடிவு பண்ணோம்.

சமூகத்துக்கு கூட பொறுமையா செஞ்சுக்கலாம், முதல்ல நம்மள மாதிரி இந்த நோய்ல பாதிக்கப்பட்டு கஷ்டப்படுறவங்களுக்கு எதாவது செய்யணும்னு தோணுச்சி. அதுக்கு அப்பாவும், அம்மாவும் ஒத்துழைச்சாங்க. தெரிஞ்சவங்க, நண்பர்கள் மூலமா ஆலோசனை கேட்டு 2009ல் 'ஆதவ் டிரஸ்ட்' ஆரம்பிச்சோம். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு போய் சை சிதைவு நோயால பாதிக்கப்பட்டவங்க லிஸ்டை வாங்கி, அவங்களுக்கு வீல் சேர், கட்டில்னு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தோம். அது பத்தாதுனு தோணுச்சி. வாரா வாரம்  ஞாயிற்றுக்கிழமை கேம்ப் போட்டோம்.

அந்த கேம்ப்புக்கு ஆட்டோ வச்சி எல்லோரையும் அழைச்சிட்டு வந்து, ஒரு நாள் சாப்பாடு போட்டு, பிஸியோதெரபி ட்ரீட்மெண்ட் கொடுத்தோம். ஆனா, அதுவும் பத்தாதுனு தோணுச்சி. தங்க வச்சி ட்ரீட்மெண்ட் கொடுக்கணும்னு முடிவு பண்ணோம். அதுக்கான ஏற்பாடுகளை செஞ்சு ,ஏழு குழந்தைகளை தங்க வச்சி ட்ரீட்மெண்ட் கொடுத்தோம். ட்ரீட்மெண்ட், மருந்து, சாப்பாடு எல்லாமே இலவசம்தான். சில இடங்கள்ல காசு வாங்குறாங்க. ஆனா இங்க அப்படி இல்ல. ஏழு பேர்ல அஞ்சுபேர் வீட்டுக்கு போய்ட்டாங்க. இப்போ கார்த்திகேயன், துஷிந்த் என ரெண்டு பசங்கதான் இருக்காங்க. இங்க இன்னும் ஐந்து பேர் தங்கி ட்ரீட்மெண்ட் எடுத்துக்கலாம். ஆனா, இந்த நோயால பாதிக்கப்பட்டவங்களை தேடி பிடிக்க முடியல.

அடுத்து, 20 பேர் தங்கி சிகிச்சை எடுத்துக்கிறதுக்கான ஏற்பாடுகள் நடந்துகிட்டு இருக்கு. இந்த நோயால் பாதிக்கப்பட்டவங்க எங்களை தைரியமா அணுகலாம். அவங்களுக்கு உதவ நாங்க காத்துகிட்டு இருக்கோம். ஏன்னா, இந்த நோயோட பாதிப்பை எங்களால மட்டும்தான் முழுசா உணர முடியும்" என்றார் மனம் தளராமல் வானவன் மாதேவி.

வானம் தொடும் வரத்தை வாங்கி வந்தவன் நீ
உன்னை பிடிக்காத சிலர்
உன்னை பிடிக்க வலை விரிக்கலாம்
உன்னை ஒழிக்க அம்பை எய்யலாம்
உன்னை முடக்க சிறகை நறுக்கலாம்
ஆனாலும், ஒன்றை உணர்,
பறக்கப் பிறந்தவன் நீ...
என்ற வாசகத்தை எழுதி தங்கள் எதிரில் ஒட்டி வைத்திருக்கிறார்கள் இந்த சகோதரிகள்!

-எம்.புண்ணியமூர்த்தி

படங்கள்: பா.காளிமுத்து

https://www.vikatan.com/government-and-politics/politics/50951-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் உள்ள இந்த சிகிச்சை நிலையத்திற்கு எனது தம்பி சென்று வந்தவர். கட்டு சிகிச்சை என ஏமாற்றுகிறார்கள். எப்படியாவது நோயை மாற்ற முயல்வோரின் மனநிலையை பாவித்து ஏமாற்றுகிறார்கள். தயவு செய்து அந்த இடத்திற்கு சென்றுவிடாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அளவான உடற்பயிற்சி போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/9/2021 at 05:46, ஏராளன் said:

தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் உள்ள இந்த சிகிச்சை நிலையத்திற்கு எனது தம்பி சென்று வந்தவர். கட்டு சிகிச்சை என ஏமாற்றுகிறார்கள். எப்படியாவது நோயை மாற்ற முயல்வோரின் மனநிலையை பாவித்து ஏமாற்றுகிறார்கள். தயவு செய்து அந்த இடத்திற்கு சென்றுவிடாதீர்கள்.

கனடாவில் இந்ந கட்டு சிகிச்சை கை,கால் முறிவு ஏற்படும் போது பொதுவாக முதல் தரம் கட்டுவார்கள்.அடுத்து மற்ற,மற்ற முறைகளுகக மாற்றி விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

கனடாவில் இந்ந கட்டு சிகிச்சை கை,கால் முறிவு ஏற்படும் போது பொதுவாக முதல் தரம் கட்டுவார்கள்.அடுத்து மற்ற,மற்ற முறைகளுகக மாற்றி விடுவார்கள்.

அது மாவுக்கட்டு(plaster of paris) என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 40,000/= பொதி வண்டி தள்ளுபவர்களுக்கு கூலி ஒரு சூட்கேசிற்கு எத்தனை ரூபாக்கள் என்று அவர்களது ஜக்கெட்டில் போட்டிருக்கும் (தற்போது 250/= என நினைக்கிறேன்) டிப்ஸ் கோடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவர்கள் உங்களிடமிருந்து காசு பார்ப்பதிலேயே குறியாக இருப்பார்கள். மேலதிகாரிகளிடம் முறையிடுவேன் என்று கூறி தப்பிக்க வேண்டியது தான்.
    • தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு March 19, 2024   இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார்.   https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/  
    • யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!   பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! (புதியவன்) ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (ஏ) https://newuthayan.com/article/யாழ்._பல்கலையில்_இன்று_போராட்டம்!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.