Jump to content

பனம்பழஞ் சூப்பி - ஜூட் பிரகாஷ்


Recommended Posts

பனம்பழஞ் சூப்பி
 
யாழ்ப்பாணத்திலிருந்து தம்பி செந்தூரன் தபாலில் அனுப்பிய பொதி நேற்று பத்திரமாக மெல்பேர்ண் வந்தடைந்தது.
மறந்தும் மறவாத மண்ணின் வாசனையை தாங்கிவந்த அந்தப் பொதிக்குள், பருத்தித்துறை வடை, வல்வெட்டித்துறை வடகம், பருத்தித்துறை பப்படம், வல்வெட்டித்துறை எள்ளுப்பா, கன்னாதிட்டி மோர் மிளகாய், பனங் குட்டான் இவற்றோடு கற்பகம் நிறுவனம் தயாரிக்கும் பனம் சொக்கலேட்டும் (Palm Chocolate) இருந்தது. அடுத்த முறை பினாட்டும் புளுக்கொடியலும் அனுப்பச் சொல்லோணும்.
 
கிட்டத்தட்ட அந்தக் கால புளூட்டோ டொபியை ஞாபகப்படுத்திய பனம் சொக்கலேட்டை வாயில் போட்டு கடிக்கும் போது, ஏனோ சிறுவயதில் சூப்பிய சுட்ட பனம்பழத்தின் ஞாபகம் வந்து தொலைத்தது.
 
ஒவ்வொரு முறை யாழ்ப்பாணம் போகும் போதும், தவறவிடும் இரண்டு விடயங்களில் ஒன்று இந்த பனம் பழம் சூப்புவது, மற்றது பருத்தித்துறை ஓடக்கரை வீதியில் அப்பம் சாப்பிடுவதும் தான்.
 
யாழ்ப்பாணத்தில் பனம் பழஞ் சூப்பிய நாட்களை மீண்டும் இரை மீட்ட, இன்று மத்தியானம், யாழ்ப்பாணத்தில் இருக்கும் நண்பன் டாக்குத்தர் கோபிஷங்கருக்கு அழைப்பெடுத்தேன்.
 
“மச்சான்.. பிஸியா இருக்குறியா?”
 
“ஓமடா.. இன்றைக்கு theatre நாள்.. ஒரு ஒபரஷேனை முடிச்சிட்டு.. அடுத்ததுக்கு wait பண்ணுறன்.. சொல்லு”
“உனக்கு முந்தி பனம் பழம் சூப்பின ஞாபகம் இருக்கா?”
பேந்தென்ன…..
 
யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களிற்கான ஓய்வறையில் இருந்து கொண்டு, அடுத்த அறுவை சிகிச்சைக்கு ஓட முதல், டாக்குத்தர் கோபி பனம்பழக் கதை சொல்லத் தொடங்க, அந்தக் காலத்தில் பனம் பழம் சூப்பிய நாட்கள் மனத்திரையில் மீண்டும் விரியத் தொடங்கியது.
 
“மரத்தால விழுந்த பனம் பழத்தை காலம்பறயே போய் பொறுக்கிடோணும், இல்லாட்டி பழத்துக்குள் கொசு, வண்டு பூந்திடும். பனம் பழங்களால தான் ஊரில கொசு சீஸன் களைகட்டுறது.
 
ராத்திரியே பனம் பழம் விழும் சத்தம் “பொதக்…பொதக்” என்று கேட்கும். அப்பவே எத்தனை பழங்கள் பனம் பத்தைக்குள் விழுந்திருக்கு என்று ஓரளவு கணக்கு போட்டிடலாம்.நல்ல காத்துக்கு பனங்கீற்று உராசும் சத்தம் பயங்கரமாத் தான் கேட்கும். தென்னங் கீற்று மாதிரி பனங்கீற்றில் தென்றல் வந்து மோதாது.
 
“தென்னங் கீற்றில் தென்றல் வந்து மோதும்.. என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்” என்று பாட்டு எழுதேக்க பனங்கீ்ற்றை விட்டிட்டு தென்னங்கீற்று என்று எழுதினது அதால தான்.
 
பன மரத்தால விழும் போதே பனம் பழத்தை சுத்தியிருக்கிற அந்த கறுப்பு நார் பழத்தில் இருந்து வெடித்து சாதுவா கழறத் தொடங்கிடும்.
 
நார் வெடித்து சிதறிய பனம் பழத்தை அப்படியே கொண்டு போய், தணலில சுடப் போடோணும்.
தணலில சுட்டுச் சாப்பிடுறது யாழ்ப்பாண சமையலின் ஒரு தனித்துவமான முறைமை, அதை சுட்டுச் சாப்பிடுறது என்று சொல்லுறவ.
 
சுட்டுச் சாப்பிடுறதுக்கும் ஒரு முறை இருக்கு, கண்டபாட்டுக்கு கண்டதையும் சுடுறேல்ல. இராசவள்ளிக் கிழங்கை தணலுக்க உள்ளே போட்டுச் சுடுறது.
 
பனம் பழத்தை அப்படி சுடுறேல்ல. பனம் பழத்தை தணலுக்கு மேல போட்டு சுடோணும். ஒவ்வொரு பக்கமாக உருட்டி பிரட்டி தணலுக்கு மேல வைத்து தான் பனம் பழத்தைச் சுடுறது.
 
பனம் பழம் பின்னேர சூரியனின் நிறத்திற்கு வரும் வரை தணலில் சுடோணும். பனம் பழம் தங்கம் மாதிரி தகதகக்காது. கருக்கலில் மறையும் சூரியனின் நிறத்திற்கு வந்திட்டுது என்றால் சிங்கன் பதத்திற்கு வந்திட்டார் என்று அர்த்தம்.
பனம் பழத்தை தணலுக்கால எடுத்து, உச்சியில ஓங்கி ஒரு குத்து குத்தினா, சுத்தவர சூடா இருக்கிற நார், நைஸா கழறத் தொடங்குவார்.
 
நாரை கையால இழுத்தும் பல்லால பிய்த்தும் பிடுங்கி எடுத்தால், சுடச் சுட பனம் பழம் இரண்டு கைகளிலும் தவழும்.
சுட்ட பனம் பழத்தை ஒரு கையால பிடிக்க ஏலாது. அதை சூப்பச் சூப்ப நார் நாரா வரும். அதோட முகம் கை எண்டு எல்லா இடமும் பனம்பழச் சாறு பிரட்டிச் சாப்பிடுறது உண்மையான சம்பிரதாயம்.
 
பனங்கொட்டையைச் சுற்றி இருக்கிற பனஞ்சாறை அப்படியே சூப்பி உறிஞ்சத் தொடங்க, கையால பனஞ்சாறு வடியும்.
மாங்காய் சாறு மாதிரி கையெல்லாம் வழிஞ்சோடாமல், பனம் பழச்சாறு கைக்குள்ளேயே தேங்கி, சின்னி விரலால வடிஞ்சு முழங்கை வரை வடியும்.
 
முழங்கை வரை வடிஞ்ச பனஞ்சாறை நாக்கால அப்படியே வழித்துக் கொண்டு வந்து, திரும்ப பனம் பழத்தை அடைவதில் தான் பனம்பழஞ் சூப்பும் அனுபவம் முழுமையடையும்.
 
பனம் பழம் சூப்பின கையின்டை மணம் மூன்று நாலு நாளைக்கு நிக்கும் எண்டும் சொல்லிறவை.
 
பனம் பழத்தை எந்த மனுசராலும் முழுசாக உறிஞ்சி சாப்பிட ஏலாது. பனம் பழத்தை முழுசா உறிஞ்சி சாப்பிட மாடுகளால் மட்டுமே ஏலும்.
 
அதால தான் “மாடு சூப்பிய பனம்பழம்” என்ற சொல்லாடல் வழக்கில் வந்தது.”என்று கமுக்கமாக, ஆனால் நிறைவாக, கற்பனையில் மீண்டும் என்னை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு போய், பனம் பழஞ் சூப்ப வைத்து விட்டு, டாக்குத்தர் அடுத்த அறுவை சிகிச்சைக்கு பறந்தோடினார்.
 
ஜூட் பிரகாஷ்
மெல்பேர்ண்
Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முகம் எல்லாம் பனம் பழம் அப்பி சாப்பிடுவது சின்ன வயதில் ஓகே ஆனால் இந்த ஏழு கழுதை வயசில் சரி வருமா யூட்🤣.

இதனால்தானோ என்னவோ முன்பும் பெரிய ஆக்கள் பனம் பழம் சாப்பிட்டு நான் காணவில்லை.

வளவை முழுக்க கூட்டி, குப்பைக்குள் பனம் பழத்தை போட்டு எரித்து, சுடுவதும் உண்டு.

பனங்காய் சூப்பி எண்டு மட்டகளப்பில் பகிடி பண்ணுவதும் உண்டு.

வல்வெட்டிதுறை எள்ளுபா பற்றி இன்னொரு திரியில் எழுதி இருந்தேன் 😋.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நிழலி.

பனங்காய் பணியாரம் பினாட்டு இரண்டுமே கெடுவில் சாப்பிடுவேன்.

2017 இல் ஊர் போனபோது நல்லூரடியில் உள்ள கற்பகதருவில் பினாட்டுக்காக ஒவ்வொரு நாளும் கடை ஏறி இறங்கினேன்.

நாளைநாளை என்ற கடைக்காரன்  5-6 நாள் தொடர்ந்து போக கடைசியில் சாமான் இப்போதைக்கு வராது என்று கைவிரித்துவிட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

இணைப்புக்கு நன்றி நிழலி.

பனங்காய் பணியாரம் பினாட்டு இரண்டுமே கெடுவில் சாப்பிடுவேன்.

2017 இல் ஊர் போனபோது நல்லூரடியில் உள்ள கற்பகதருவில் பினாட்டுக்காக ஒவ்வொரு நாளும் கடை ஏறி இறங்கினேன்.

நாளைநாளை என்ற கடைக்காரன்  5-6 நாள் தொடர்ந்து போக கடைசியில் சாமான் இப்போதைக்கு வராது என்று கைவிரித்துவிட்டார்.

அண்ணை, 

சாவச்சேரி அல்லது சுன்னாகம் சந்தைகளில் இனி தேடிப்பாருங்கள். 

அல்லது கற்பகத்தின் மெயின் ஒபிஸ் மானிப்பாயில் உள்ளது. அங்கே போனால் புது ஸ்டொக் எடுக்கலாம். பனம் பியரும் உண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அண்ணை, 

சாவச்சேரி அல்லது சுன்னாகம் சந்தைகளில் இனி தேடிப்பாருங்கள். 

அல்லது கற்பகத்தின் மெயின் ஒபிஸ் மானிப்பாயில் உள்ளது. அங்கே போனால் புது ஸ்டொக் எடுக்கலாம். பனம் பியரும் உண்டு. 

தகவலுக்கு நன்றி கோசான்.

போத்தலில் வரும் பனம்கழி வாங்கி சுட்டுப் பார்த்தேன்.ஊரில் உள்ள சுவை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

தகவலுக்கு நன்றி கோசான்.

போத்தலில் வரும் பனம்கழி வாங்கி சுட்டுப் பார்த்தேன்.ஊரில் உள்ள சுவை இல்லை.

பிரான்ஸ்,லண்டன்,கனடா கடையளிலை கட்டாயம் பனங்காய் இருக்குமெண்டு நினைக்கிறன். இந்த நாடுகளிலை இருக்கிற சகோதரங்கள் தகவல் சொன்னால் நல்லாயிருக்கும்....

Link to comment
Share on other sites

3 hours ago, goshan_che said:

முகம் எல்லாம் பனம் பழம் அப்பி சாப்பிடுவது சின்ன வயதில் ஓகே ஆனால் இந்த ஏழு கழுதை வயசில் சரி வருமா யூட்🤣.

 

நீங்கள் என் அப்பா பனம்பழம் சாப்பிடுவதைக் கண்டு இருக்க வேண்டும்... சின்ன பிள்ளைகள் தோற்றுவிடும் 

44 minutes ago, குமாரசாமி said:

பிரான்ஸ்,லண்டன்,கனடா கடையளிலை கட்டாயம் பனங்காய் இருக்குமெண்டு நினைக்கிறன். இந்த நாடுகளிலை இருக்கிற சகோதரங்கள் தகவல் சொன்னால் நல்லாயிருக்கும்....

கனடாவில் சில தமிழ் கடைகளில் அடிக்கடி கண்டுள்ளேன். முக்கியமாக நாவல் பழம் கூட விற்கும் எஸ்.பி.இம்போர்ட்டர்ஸ் எனும் கடையில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனங்காய் சூப்பியதில்லை, பனங்காய் பணியாரம் தான் சாப்பிட்டிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

முகம் எல்லாம் பனம் பழம் அப்பி சாப்பிடுவது சின்ன வயதில் ஓகே ஆனால் இந்த ஏழு கழுதை வயசில் சரி வருமா யூட்🤣.

இதனால்தானோ என்னவோ முன்பும் பெரிய ஆக்கள் பனம் பழம் சாப்பிட்டு நான் காணவில்லை.

வளவை முழுக்க கூட்டி, குப்பைக்குள் பனம் பழத்தை போட்டு எரித்து, சுடுவதும் உண்டு.

பனங்காய் சூப்பி எண்டு மட்டகளப்பில் பகிடி பண்ணுவதும் உண்டு.

வல்வெட்டிதுறை எள்ளுபா பற்றி இன்னொரு திரியில் எழுதி இருந்தேன் 😋.

முழுதும் பனங்கொட்டை சூப்பிகளா இருக்கு கிழக்கில் தணலில் வாட்டி வதைப்பது கிடையாது  பழம் விழுந்தால் ஆளாளுக்கு பிரிச்சு சூப்புவதுதான் நாரை உரித்த பிறகு அதெல்லாம் ஒரு காலம் 

பக்கத்து வளவில் சீனிப்பனை என்பார்கள் ஒரு பனை இனம் தோல் மஞ்சளா இருக்கும் கறுப்பு கிடையாது  இன்றும் 4 பனங்காய் விழுந்து கிடந்த்து பணியாரத்துக்கு சித்தியிடம் கொடுத்து விட்டேன். தற்போது பனை சீசன் நம்ம யூட் அண்ணையே யூட் பிரகாஷ் ( கற்பகதரு)

நாளை அந்த பனம்பழத்தின் படங்களை இணைக்கிறேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பிரான்ஸ்,லண்டன்,கனடா கடையளிலை கட்டாயம் பனங்காய் இருக்குமெண்டு நினைக்கிறன். இந்த நாடுகளிலை இருக்கிற சகோதரங்கள் தகவல் சொன்னால் நல்லாயிருக்கும்....

எப்போதாவது இருந்துட்டு பனங்காய் கண்டுள்ளேன். ஆனால் பனாட்டு உள்ளிட்ட இதர சாமன்கள் எப்போதும் கிடைக்கும்.

@பெருமாள்சரிதானே?

22 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தற்போது பனை சீசன் நம்ம யூட் அண்ணையே யூட் பிரகாஷ் ( கற்பகதரு).

இல்லை வேற வேற ஆக்கள். ஒருவர் விஞ்ஞானத்துறை மற்றவர் கணக்கியல். வயதும் வித்தியாசம். வாழும் நாடுகளும்.

1 hour ago, நிழலி said:

நீங்கள் என் அப்பா பனம்பழம் சாப்பிடுவதைக் கண்டு இருக்க வேண்டும்... சின்ன பிள்ளைகள் தோற்றுவிடும் 

❤️

Link to comment
Share on other sites

27 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நம்ம யூட் அண்ணையே யூட் பிரகாஷ் ( கற்பகதரு)

 

இல்லை.

முள்ளிவாய்க்கால் முடிவை எல்லாம் ரசிக்கின்றவன் இல்லை என் நண்பன் ஜூட் பிரகாஷ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் வீட்டுக்கு அண்மையில் அதிகமாக பன மரங்கள் இல்லை, இருந்ததே ஒரு பத்து பதினைஞ்சு மரம் இருக்கும்.அதிகாலையில் பனம் தின்னும்  பழ ஆசையில் அதை  பொறுக்க வீட்டில் உள்ளவர்களுடன் ரோச் அடிக்கும் டிப்பார்மெண்டை பொறுப்பெடுத்து  கொண்டு அவர்களுடன் கூட போன நினைவுண்டு.

சிலர் பழபுளி தண்ணியில் பனம்பழத்தை முக்கி பினைஞ்சு சாப்பிட்டதா ஞாபகம். அதிகாலையில் பொறுக்க போகிறவர்களின் தலையில் பனங்காய் விழுந்த சம்பவங்களும் உண்டு, எங்கட அன்ரி ஒரு ஆளுக்கு விழுந்து கோமாவுக்கு போய் பிறகு மீண்டு வந்தவ ஆனால் பிறகு குரல் இயக்குனர் விசு ரேஞ்சுக்கு மாறிவிட்டது, இன்றுவரை அவவுக்கு அதே குரல்தான்.

நான் ஒருநாள் பெரிய ஆக்களோட பனங்காய் பொறுக்கபோய் ரோச் லைற் அடிச்சதில தங்க நிறத்தில தக தக எண்டு பாம்பு மினுங்கிச்சுது, அதுதான் கடைசி அந்தபக்கம் போனது, பனங்காயைவிட உயிர் முக்கியம்ல.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருக்கலில தலையில் முக்காடு போல கோணிச்சாக்கை போட்டுகொண்டு மழை பெஞ்சால் என்ன பனி பெஞ்சால் என்ன  ஆச்சியுடன் கையில் அரிக்கன் லாம்பும் தூக்கிக் கொண்டு எங்கட பனங்காணிகளுக்குள் போய் பனம்பழங்கள் காவோலைகள் குப்பைகள், சாணிகள்  எல்லாம் பொறுக்கி ......... ம்......எல்லா ஞாபகமும் வந்து தொலைக்குது.......!  😇

பகிர்வுக்கு நன்றி நிழலி .......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நம்ம யூட் அண்ணையே யூட் பிரகாஷ் ( கற்பகதரு)

 

இல்லை.

முள்ளிவாய்க்கால் முடிவை எல்லாம் ரசிக்கின்றவன் இல்லை என் நண்பன் ஜூட் பிரகாஷ்

நிழலி 
இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

எப்போதாவது இருந்துட்டு பனங்காய் கண்டுள்ளேன். ஆனால் பனாட்டு உள்ளிட்ட இதர சாமன்கள் எப்போதும் கிடைக்கும்.

ஒரு பனங்காய் பார்சல்லை  அமெரிக்காவுக்கு   அனுப்ப எவ்வளவு காசு வரும்? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

முழுதும் பனங்கொட்டை சூப்பிகளா இருக்கு

ஒரு கிராமம்.
அந்த கிராம வெளிப்புறம் ஒரே பனங்காடு.
அதில் அரைப்பங்கு என்னுடையது.
பனங்கொட்டை தொடக்கம் வடலி வளர்ந்து காவோலை விழும் வரைக்கும் ஆயிரம் கதைகள் இருக்கு ராசன்.

கற்பகதரு ஒரு சரித்திரம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

பிரான்ஸ்,லண்டன்,கனடா கடையளிலை கட்டாயம் பனங்காய் இருக்குமெண்டு நினைக்கிறன். இந்த நாடுகளிலை இருக்கிற சகோதரங்கள் தகவல் சொன்னால் நல்லாயிருக்கும்....

யோவ் பெரிசு
ஜேர்மனியில் இல்லையோ?

செய்து பார்க்கலையோ?அல்லது சரிவரல்லையோ?

Link to comment
Share on other sites

சுட்ட பனம்பழத்தைப் பழப்புளித் தண்ணியில் தோய்த்துச் சூப்பிய அந்நாள் ஞாபகத்திற்கு, நிழலி அவர்களின் பதிவு என்னைக் கொண்டு சென்றதுமட்டும் அல்லாது, யாழ்கள உறவுகள் சிலருக்கு எங்கள் பனை ஒரு கற்பகதரு என்றும், அதன் மகத்துவம் தெரியாதிருப்பதும் தெரியவந்தது, கற்பகதரு பற்றிப் பாரிசில் இருந்து யோகன் என்பவர் அன்று தந்த ஆக்கத்தை இங்கு தருகிறேன்.   

 

ஈழத் தமிழரின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த, இந்தப் பனை மரத்தை அதன் முழுப் பயன் கருதி “கற்பகதரு” என்பர். போர்ச்சூழலிலும், பல தழிழர்களின் வாழ்வாதாரமாகத் திகழும், பனையின் பயன் பற்றி எமது இளைய தலைமுறையில் அறியாதிருக்கும் சிலர் அறிய பகிர்வதே இப்பதிவின் நோக்கம்.

இளையோர் மாத்திரமன்றி நகர்ப்புற வாழ்வோடு தம்மை இணைத்துக்கொண்ட சில 50 க் கடந்தவர்கள் கூட அறியப் பல பனை பற்றிய தகவல்கள் உள்ளதாலும் பலவற்றை மறக்கக் கூடிய சூழ்நிலையில் வாழும் எல்லோருக்குமுரிய மீட்டலாக  இது அமைகிறது.

குருத்து:- பனை தறிக்கும் போதோ, ஓர் வடலியை வெட்டிப் பிளந்தோ மரத்தின் வட்டுப் (தலை) பகுதியின் மிக இளம் மிருதுவான ஓலை மற்றும் மட்டைப் பகுதிகள் குருத்து என்பர். இது இனிப்புச் சுவையுடன் மிக ருசியாக இருக்கும்.

கள் :- பூம்பாளையைச் சீவிக் கள் இறக்குவார்கள். முட்டிக்குள் சுண்ணாம்பிட்டு சேகரித்த   கள்ளைக் கருப்பணியென்பர், தென்னிந்தியாவில் பதநீர் என்பர். சூட்டு உடம்புக்காரர் பதநீரைக்   காலையில் அளவுடன் குடிப்பது நல்லதென்பர். சுண்ணாம்பு இடாதிருக்கும் கள்ளானது சிறிது நேரத்தில் நொதித்துப் போவதால் சற்றுப் புளிப்பு இருக்கும், இதைக் குடித்தால் வெறிக்கும். அளவுடன் குடித்தால் தீங்கற்ற பானம்.

கள் கள்

பனங்கட்டி:- இதைப் பனைவெல்லம், பனங்கருப்பட்டி எனவும் கூறுவர். கருப்பணியைப் பதமாக வற்றக் காச்சிப் பெறும் இனிப்புப் பொருள் இது. இதைச் சீனிக்குப் பதில் பாவிக்கும் பழக்கம் உண்டு. ஆயுள் வேத வைத்தியத்தில் தேனுடன் உட்கொள்ளும் மருந்துகளுக்கு தேன் கிடைக்காத போது இதைச் சேர்க்கும்படி வைத்தியர்கள் கூறுவார்கள். சலரோகமுள்ளவர்கள் கூட சிறிது பாவிக்கலாம். ஈழத்தில் பருத்தித்துறை இதன் தயாரிப்பிலும் செய்பாங்கிலும் பிரபலம். 

பனங்கட்டி
 

நுங்கு:- பனங்காயின் இளம் பருவத்தில் முற்றாத விதையை வெட்டி அதன் உட்பகுதியை உண்பர். மிக இனிமையான உணவு. 

நுங்கு
 

பனம்பழம்:- இதைச் சுட்டு, சற்றுப் புளிக்கரைசலில் தோய்த்துச் சாப்பிட்ட அருமையாக இருக்கும். பசியும் அடங்கும்.

பனம்பழம் பனம்பழம்
 
பனங்காய்ப் பணியாரம்:- பிளிந்தெடுத்த பனம்பழக்களியுடன் கோதுமை மாவும் சேர்த்து கொதிக்கும் எண்ணெயில் பாக்களவு உருண்டைகளாக உருட்டிப் போட்டுப் பொரித்தெடுப்பது. மிக்க வாசமாகவும் சுவையாகவும் இருக்கும், சுமார் ஒரு வாரகாலம் எந்தவிதமான விசேட பாதுகாப்புமின்றி வைத்துச் சாப்பிடக் கூடியது.
பனங்காய்ப் பணியாரம்
 
பனாட்டு:- பனம்பழக்களியை பாயில் ஊற்றி வெய்யிலில் காயவைத்துத் தட்டுத்தட்டாக வெட்டி மடித்து, ஓலை உமலில் கட்டி அடுப்படிப் பறனில் புகைபடக் கூடியதாகக் கட்டி வருடக்கணக்கில் வைத்து உண்ணக்கூடிய பனம் பண்டம். தேங்காய்ச் சொட்டுடன் உண்பதற்கு மிக அருமையாக இருக்கும். அதிகமாக இதனைக் காலை, மாலை உணவுடன் உண்பார்கள்.
பனாட்டு
 
சீக்காய்:- இது நொங்கு முற்றி வரும் செங்காய்ப்பதம். இதன் தோலைச் சீவி, மஞ்சள் சதைப் பகுதியை தட்டுத்தட்டாக அரிந்து சப்பிடலாம். அதனுள் இருக்கும் சாற்றை உறிஞ்ச அதன்சுவை  ஆகா சொல்ல வார்த்தைகள் இல்லை.
சீக்காய்
 
பூரான்:- பனம் விதையைக், கிழங்கிற்காகப் பாத்தி போட்டு அவை முளைத்துவரும் நேரத்தில்  அதன் பூரான் மாத்திரம் முதிர்ந்துவிடும். அந்த விதையைப் பிளந்து உள்ளிருக்கும் பூரானை உண்ண மிகுந்த சுவையாக இருக்கும். முளை முதிர்ந்துவிட்டால் உள்ளே பூரான் இறுக்கமாக இராது. இதைச் “சிதவல்” என்பர். நீர்த்தன்மையுடன் சுவை குன்றியிருக்கும்.
பூரான்
 
ஒடியல்:- “நாராய் நாராய் செங்கால் நாராய்-பனம்படு கிழங்கின் பிளந்தன்ன வாய்” என உவமை கொண்ட இக்கிழங்கை இரண்டாகப் கிழித்துக் காயவைத்துப் பெறுவதைப் ஒடியல் என்பர். அவித்துக் காயவைத்தால் புளுக்கொடியல் என்பர் அதனை அப்படியே முறித்து உண்ணலாம். ஒடியலை இடித்து அரித்து எடுக்கும் மாவுடன் முருங்கையிலை சேர்த்துப் பிட்டு அவிப்பர். கறியுடனோ, சீனி, சக்கரையுடனோ சாப்பிடலாம். அன்றைய தமிழரின் பாரம்பரிய உணவிது.
 
அடுத்து இம்மாவில் தயாரிக்கப்படும் முக்கிய உணவு கூழ். இதில் சைவக்கூழ், மச்சக்கூழ் எனக் காச்சுவார்கள். ஒடியல்மாவுடன் மிளகாய், உள்ளி, மிளகு, புளி, உப்பு கரைசல், உழுந்து, பயறு, மரவள்ளிக்கிழங்கு, பூசணிக்காய், ஈரப்பலாக்காய், பலாக்கொட்டை, அவரைக்காய், முல்லை, முசுட்டை,  முருங்கைக் கீரை சேர்த்துக் காச்சுவதுண்டு,  தேங்காய்ச் சொட்டும் சேர்த்தால் அருமையாக இருக்கும். இது ஒரு நிறையுணவு. இது சைவ உணவு உண்பவர்களுக்கானது. இத்துடன் மீன், நண்டு, கணவாய், இறால், திருக்கை, மட்டிச்சதை சேர்த்துச் சமைப்பது மச்சக்கூழ். இது மச்சப் பிரியர்களுக்கு. முல்லைத்தீவு சார்ந்த இடங்களில் இத்துடன் மான், மரை வத்தல் இறைச்சியும் சிறிது சேர்ப்பர். இது தடிமனுக்கு நல்ல கைவைத்தியம். 
ஒடியல்
 
அவித்த கிழங்கு:- இதை மாலை நேரச்சிற்றுண்டியாக உண்பர். கிழங்குக்காலத்தில் இலங்கையில் சகல இனமக்கள் வீட்டிலும் உண்பர்.
அவித்த கிழங்கு
 
கிழங்குத் துவையல்:- அவித்த நன்கு தும்பு வார்ந்து எடுத்த கிழங்குத் துண்டுகளுடன் பச்சைமிளகாய், உள்ளி, மிளகு, உப்பு, வெங்காயம் சேர்த்திடித்து உருண்டையாக்கி உண்பர். செமிபாட்டை இலகுவாக்கி சிறுவர்கூடச் சாப்பிடக் கூடியது. மிக வாசமாகவும், சுவையானதும் கூட.
 
புழுக்கொடியல்:- அவித்த கிழங்கை நன்கு தும்புவார்ந்து இரண்டாகப் பிளந்து நன்கு வெயிலில்  காயவைப்பது. இதை நீளமாகவும், வட்டமாகவும் சீவிக் காயவிடுவதுமுண்டு. அதைச் சீவலொடியல் என்பர். மாலை நேரச்சாப்பாடு, தேங்காச்சொட்டுடன் பிரமாதமாகக் கூட்டுச் சேரும். பலவருடம் பாதுகாக்கக் கூடியது. இதனை இடித்துவரும் மாவுக்கு தேங்காய்த் துருவல், சீனி, சர்க்கரை, பனங்கட்டி சேர்த்து சிறுவர்களுக்கும் பல்லுச் சப்பமுடியாத முதியவர்களுக்கும் கொடுப்பர். அண்றைய நாட்களில் பற்கள் பலமாக வருவதற்கும் இதைக் கடித்துச் சாப்பிடுவார்கள்.

சுவடி:- ஆதிகாலத்தில், எழுது பொருளாகப் பனையோலைச் சுவடிகளே பயன்படுத்தப்பட்டது. இன்றும் பல சங்க இலக்கியங்கள் பலையோலைச்சுவடியாக பல நூலகங்களில் உண்டு. யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது தேடக்கிடைக்காத பல சுவடுகள் எரிந்தன. பண்டைய தமிழ் எழுத்துக்களுக்கு குற்றிடுவதில்லை. காரணம் ஓலையில் எழுத்தாணியால் குற்றிட்டால் கிழிந்துவிடுமென்பதால் குற்றுத் தவிர்க்கப்பட்டதென்பர்.
சுவடி சுவடி
 

கால்நடை உணவு:- புல் அருகியுள்ள காலங்களில் பச்சோலை வெட்டிக் கிழித்து மாமு ஆட்டிற்கு உணவாக போடுவர்.

கால்நடை உணவு

கூரை:- ஓட்டுப் பாவனை வருமுன் இல்லங்கள் பனையோலை, தென்னங்கிடுகு, வைக்கோல் என்பவற்றால் வேயப்பட்டது. வெப்பவலையமான எங்கள் பிரதேசங்களில் இக்கூரைகள் மிகுந்த சுவாத்தியமாக அமைந்த தென்பதை அவற்றில் வாழ்ந்து அனுபவித்தோர் இன்றும் கூறக்கேட்கலாம். பனையோலைக் கூரை அதில் தேர்ந்தோராலே நேர்த்தியாக வேயக்கூடியது.
கூரை
 

வேலியடைத்தல்:- அன்றைய கதியால் வேலிகளுக்கு முகமறைப்பாகவும், பாதுகாப்பாகவும், பனையோலையோ, தென்னங்கிடுகோ கொண்டு மறைத்தடைக்கும் வழக்கம் உண்டு. இவை செலவு குறைந்தது. கதியாலுக்குப் பதில் பனைமட்டையும் வேலியடைக்க உபயோகிப்பர்.

வேலியடைத்தல் வேலியடைத்தல்

பன்ன வேலை:- இது பனையோலை குறிப்பாகக் குருத்தோலை, நார், ஈர்க்கு, மட்டை என்பவற்றைக் கொண்டு வீட்டுக்குத் தேவையான பாவனைப் பொருட்களான பெட்டி, கடகம், சுளகு, பாய், நீற்றுப்பெட்டி, தடுக்கு, குட்டான், உமல், தொன்னை, வட்டில், விசிறி, தொப்பி, கிலிகிலுப்பை என்பவற்றை இழைப்பதாகும். ஈழத்தில் அன்றைய பெண்கள் பங்கேற்கும் முக்கிய குடிசைக் கைத்தொழில்.
பன்ன வேலை பன்ன வேலை
 

அடுக்குப் பெட்டி:- இன்றைய அடுக்கு அலுமினியம், எவர் சில்வர்ச் சட்டிகள் போல், அன்று அடுக்குப் பெட்டிகள் 1/2′ முதல் 1 1/2′ விட்டம் வரை சுமார் 1/2′ உயரத்தில் ஒன்றினுள் ஒன்று வைக்கக் கூடியதாக இழைக்கப்பட்டவை. ஒரு அடுக்கில் 5 முதல் 10 பெட்டிகள் இருக்கும்…பலவித தேவைகளுக்கும் அவற்றின் அளவுக்கேற்ப பயன்படுத்துவர். நல்ல இளங்குருத்தோலையில் இழைத்தவை அதிகம் நனையவிடாமலோ, அல்லது காயவிடாமலோ நிழலில் பாவித்தால் 15 வருடங்கள் கூடப் பழுதுபடாமல் இருப்பவையும் உண்டு.

அடுக்குப் பெட்டி

அஞ்சறைப் பெட்டி(ஐந்தறைப்பெட்டி):- சுமார் 8″- 10″ , நீள அகலமுள்ள சற்சதுரவடிவான பெட்டி, இருஅடுக்கு அமைப்பாக இருக்கும் முதல் அடுக்கு, பெட்டியின் 1/2 வாசி உயரத்துடன் 4 அறைகளாகப் பிரித்திருப்பார்கள். கீழ்த் தட்டுஅப்படியே இருக்கும் மேல்தட்டு தனியே எடுத்து கீழ்த்தட்டுள் உள்ளவற்றை எடுக்கலாம். அன்றைய நாட்களில் சந்தை வியாபாரிகள் சில்லறைக் காசுகள் வைக்க இதனைப் பாவித்தனர். சமையலறையிலும், பலசரக்குப் பெட்டியாகவும், ஆயுள் வேத வைத்தியர்கள் மருந்து காவும் பெட்டியாகவும், பாவித்தார்கள். இதை 9 அறையுடனும் இழைப்பர். இன்று காட்சிக்குக் கூட ஒன்று கிடைக்குமோ! தெரியவில்லை.

கொட்டைப்பெட்டி:-இதை வெற்றிலை பாக்கு, புகையிலை பாவிப்பவர்கள். அதைப் பத்திரமாக வைப்பதற்கு உபயோகிப்பர். இது ஒன்றினுள் ஒன்றை வைக்கக் கூடிய வகையில் 3 அல்லது 4 தட்டையான அமைப்புடைய வாய்திறந்த அமைப்பில், தனியான மூடியுடன் கூடியது. இடுப்பில் செருகக் கூடிய தட்டையாகவும், சிறிய அமைப்பிலும் நிறவோலைகளால் அழகிய வேலைப்பாடுகளுடன் இருக்கும்.
கொட்டைப்பெட்டி
 

மூடு பெட்டி:- சாதாரண பல அளவுப்பெட்டிகளுக்கு பொருத்தமான மூடியும் இழைத்து, மூடியில் பனையீர்க்கால் வசதியாகத் திறந்து மூடக் கைபிடியும் வைத்திருப்பார்கள்.

வட்டில்:-பழையகாலங்களில் பயணங்களுக்கு, வேலைக்குச் செல்வோர் சாப்பாடு எடுத்துச் செல்ல பாவித்த சிறிய பெட்டி. நல்ல இளங்குருத்தோலையில் மிக நெருக்கமாக இழைத்தது. இலகுவில் இறுக்கம் குறைந்த கறிகள் வெளியேறாது. கழுவிக் கழுவிப் பல காலம் பாவிப்பர்.

சுளகு:- பனையீர்க்காலும், மட்டையாலும் பின்னுவது. அரைச் செவ்வக வடிவில் புடைப்பதற்கும், வட்டவடிவில் உணவுப்பொருட்களைக் காயவைப்பதற்கும் பல அளவுகளில் முடைவார்கள்.
சுளகு
 

கடகம்:- பனையோலை நார் கொண்டிழைப்பது, சாதாரண பனையோலைப் பெட்டிக்கும் கடகத்துக்கும் உள்ள வித்தியாசம் கடகத்துக்கு வெளிப்பாகம் நாரால் இழைத்து வாய்ப்பகுதிக்கு பலத்திற்காக தடிப்பான நார் பொருத்தியிருப்பார்கள். பாவனையிலும் கடகத்தின் உபயோகத்துக்கு சாதாரண பெட்டியைப் பாவித்தால் பிய்ந்து விடும். உ+ம்- மண், கல் அள்ளுதல். சும்மாடு என்பது பாரமான பொருட்களைத் தலையில் காவும் போது அழுத்தாமல் மென்மையாக இருக்க பழைய துணி, சால்வை, முந்தானைச் சேலை போன்றவற்றால் உடன் செய்வது. அதாவது வட்டவடிவமாக ஒரு சாண் விட்ட அளவில் சுருட்டுவது. இதை துணிவகையிலேயே செய்வர். தலைக்கு மெத்தென இருப்பதே நோக்கமும் தேவையும். 

 

கடகம்
பட்டை:- இளங்குருத்தோலையில் செய்வர். இது தோட்டத்துப் பயிர்களுக்குத் தண்ணீர் தண்ணீர் ஊற்றவும். கிணற்றில் இருந்து நீர் அள்ளவும் பாவிப்பர். சுமார் 1 கலன் கொள்ளக் கூடியவையும் செய்வர்.
பட்டை
திருகணை:- கழிவு ஈர்க்கை ஒரு சாண் விட்டமுள்ள வட்டமாகச் சுற்றி, அதற்கு முறுக்கிய ஈர்க்கால், மேற்சுற்றுச் சுற்றுவர். பனை, சட்டி, குடம் உருளாமல் இருக்க உபயோகிப்பர்.
திருகணை
 

உறி:-திருகணைக்கு 3, 4 ஈர்க்கில் பின்னிய சுமார் 3′ நீளமான தொடுப்பு (கயிறு போல்) தொங்குப்படி அமைத்து சாப்பாட்டுப் பொருட்களை பூனை, நாயிடமிருந்து பாதுகாக்கப் பாவித்தார்கள். (வெண்ணெய் உண்ணும் கண்ணன் படத்தில் பார்த்திருப்பீர்கள்)
உறி
 

உமல்:-பலையோலையில் இழைப்பது. இன்றைய பசுமதி அரிசிப்பை போல் இருக்கும். அன்று பொருள் காவப் பாவித்தார்கள். 

பிளா:-உடன் தேவைக்குப் பச்சையோலையிலும் பல காலப் பாவனைக்கு குருத்தோலையிலும் அரை முட்டைவடிவில் அமைப்பது. கிராமக் கோவில்களில் சித்திரைக் கஞ்சிக்கும் வயல் வேலை செய்யும் போது சாப்பிடவும் பாவிப்பர். சுடு சாப்பாடு பச்சையோலையை வேகவைக்கும் போது வரும் வாசமே! அருமையாக இருக்கும். குருத்தோலைப் பிளா கள்ளுத் தவறணைகளில் வைத்திருப்பர்.
பிளா
 

தொன்னை:-பனையோலையில் உடன் பாவனைக்கு இழைக்கப்படும்;சிறு பெட்டிகள்; வழிபாடுகளுக்குப் பாவிப்பது. இந்தோனேசியா,தாய்லாந்து,கம்போடியா போன்ற நாடுகளிலும் வழிபாட்டில் இத் தொன்னைகள் முக்கிய இடம் வகுக்கின்றன.

பறி:-மீனவர்கள் பிடித்த மீனைக் கரைக்குக் கொண்டுவர பாவித்த ஒடுங்கிய வாயுடைய பைபோன்ற அமைப்புடையது.

நீற்றுப்பெட்டி:-பனையோலை,ஈர்க்குக் கொண்டிழைக்கப்படும் கூம்புவடிவுடையது;இதை உணவுப்பண்டங்களை அவிக்க, திரவப் பதார்த்தங்களை வடிக்க உபயோகிப்பர்.

நீற்றுப்பெட்டி

 

பாய்கள்:- படுக்க உபயோகிக்கும் 5’x7′ பாய்கள், சூடடிக்கப் பாவிக்கும், பந்தலுக்கு விரிக்கும் 20’x 25′ களப்பாய்கள், பந்திக்கு விரிக்கும் 2’x30′பந்திப்பாய், பிற்கூறிய இரண்டும் முற்றாகப் பாவனையற்று விட்டது. முற்றலோலையில் பனாட்டுப் போட பனாட்டுப் பாயுமுண்டு. ஒரு தடவையே பாவிப்பர்.

பாய்கள்

 

தடுக்கு:-பிறந்த குழந்தைகளைக் கிடத்தப் பாவிக்கும் 3’x3′; சிறு பாய், குறிப்பாக எண்ணெய் பூசிக் காலை இளஞ் சூரியக் குளியலுக்குப் பிள்ளையை இதில் கிடத்துவார்கள்.

தட்டி:-அன்றைய வீடுகளுக்கு, பாய், மட்டை, சலாகை கொண்டு செய்யப்படும் மறைப்பு.

குட்டான்:-பனையோலையில் இழைக்கப்படும். பொதியாக்கக் கொள்கலன். இதைப் பனங்கட்டிப் பொதியாக்கத்துக்குப் பயன்படுத்துவார்கள்.3″x6″ முதல் 1/2″x1″ அளவில் கூடச் செய்வார்கள்.

குட்டான்

 

நெட்டி:-அளவாக வெட்டிய பனையோலை; கரண்டிகள் போல் சுடு களி உண்ணப் பயன்படுத்துவர்.

விசிறி, தொப்பி, கிலுகிலுப்பை:- முழு வடலி ஓலையில் விசிறி செய்வார்கள். வார்ந்த ஓலையால் தொப்பி சிறுவர் விளையாடக் கிலுகிகுப்பை இழைப்பார்கள்.

தொப்பி விசிறி

 

விளக்குமாறு:- கழிவு ஈர்க்கினால் செய்யப்படும். அன்றைய சமையலறை இருந்து கூட்ட இச்சிறிய விளக்குமாறு மிக உதவியது.

விளக்குமாறு

 

வாழ்விடங்கள்:-வீடு, முதலான கட்டிடங்களின் கூரைகளின் மரப்பகுதிகளான வளை, தீராந்தி, பாவுமரம், சலாகை என யாவும் பனைமரத்தைத் தறித்து, அளவாக வெட்டிச் சீவி எடுப்பார்கள். 40′ நீளமானமரத்தில் சுமார் 25′ வைரமான பகுதியாக பாவுமரமாகவும் ஏனையபகுதில் சுமார் 10′ வைரம் குறைந்த பகுதி சலாகை யாக்கப்படும்.

துலா:- ஓர் முழுமரத்தின் வைரப்பகுதில், துலாச்செய்து அன்று, கிணற்றில் தண்ணீர் அள்ளினர். நீர் இறைப்பு இயந்திர வருகையின் பின் படிப்படியாக வழக்கொழிந்து போய்விட்டது.

துலா

இறங்கு துறைகள்:- குறிப்பாக தீவுப்பகுதிகளில் இறங்கு துறைகள் கல்லாலும் மண்ணாலும் அமைத்தபோதும், அதன் படகுகள் முட்டும் நுனிப்பகுதி பனைமரத்தாலானதாகவே காணக்கூடியதாக இருந்தது. காரணம் ஏனைய மரங்களிலும் பனைவைரம் உப்புநீரில் உழுத்துப்போகும் தன்மை மிகக் குறைந்தது. அதனால் நீண்ட காலம் பயனில் இருக்கக் கூடியது.

வண்டில் துலா:-வண்டிலின் அடிப்பாகத்திலமைந்துள்ள நீண்ட நுகத்தடி பொருத்தும் பகுதி. இதுவும் பனை வைரத்திலேயே அமைப்பார்கள் அதன் உறுதிக்காக.

தேர் சப்பறம்:- கோவில் கட்டுத் தேர், சப்பறத்தின் சகடைக்கு மேற்பகுதி அடிப் பனை வைரங்களாலே செய்யப்பட்டவை, பாவித்தபின் கழட்டி வைப்பர், அவற்ருக்கு வயதெல்லை இல்லை. நிழலில் இருப்பதால் பலகாலம் பாவனையில் இருக்கும். நெருப்புத் தவிர வேறு எதிரி இல்லாதது.

பிள்ளைத் தண்டு:- இதுவும் கோவில்களில் விக்கிரகங்களை விழாக்காலத்தில் திருவாசியுடன் கூடியருப்பில் வைத்து வாகனங்களுக்கோ தேருக்கொ சுமந்து வரும் சுமார் 2.5 மீட்டர் நீளமுள்ள பனை வைரத்தில் உருளையாகச் சீவப்பட்டது. சுமார் 200கிலோ நிறை தாங்கக் கூடியது. எந்தக் கோவிலிலும் குறைந்தது ஒரு சோடியாவது இருக்கும்.

மரக்குத்திகள்:-அன்று பாரமான பொருட்களை இடம் பெயர்க்க உருளையாக பனைமரத் துண்டுகள் பாவிப்பர்.

மரவேலை:- குறிப்பாக ஆணிக்குப் பதிலாக பொருத்துக்களுக்குச் சீவிய பனைவைரம் பாவிக்கப்பட்டது.

கொட்டுப்பனை:- எங்கள் நாட்டுப் பச்சைக்கிளிகளும், மைனாக்களும் தம் பாதுகாப்பான வாழ்விடங்களாகத் தேர்வு செய்தது. இக் கொட்டுப்பனைகளே!!!(இறந்த பனைகள்)

விறகு:- பனையின் சகல பாகங்களும் விறகாகப் பாவிக்கப்படும். ஓலை, மட்டை, பன்னாடை, கொக்கரை, பாளை, மூரி, ஊமல், பழுதடைந்தமரம்  யாவும் எரிக்க உதவும். எரிபொருட் செலவைக் குறைத்தது.

பசளை:- பனையோலை முதல் அத்தனை பனைக்கழிவுகளும் உழுத்தால் நல்ல இயற்கைப் பசளையே! சுற்றுச் சூழலுக்கு எந்த மாசும் ஏற்படுத்தாதது. விவசாயத்தில் ஈழத்தில் பெரும் பங்கேற்றது. பனைக் கழிவுகள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஈழப்பிரியன் said:

யோவ் பெரிசு
ஜேர்மனியில் இல்லையோ?

செய்து பார்க்கலையோ?அல்லது சரிவரல்லையோ?

ஜேர்மனியிலை  பனங்காய் இன்னும் என்ரை காந்தக்கண்ணுக்கு  சிக்கவேயில்லை....பனங்கிழங்கு விக்கிறாங்கள் நாய் பேய் விலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

சுட்ட பனம்பழத்தைப் பழப்புளித் தண்ணியில் தோய்த்துச் சூப்பிய அந்நாள் ஞாபகத்திற்கு, நிழலி அவர்களின் பதிவு என்னைக் கொண்டு சென்றதுமட்டும் அல்லாது, யாழ்கள உறவுகள் சிலருக்கு எங்கள் பனை ஒரு கற்பகதரு என்றும், அதன் மகத்துவம் தெரியாதிருப்பதும் தெரியவந்தது, கற்பகதரு பற்றிப் பாரிசில் இருந்து யோகன் என்பவர் அன்று தந்த ஆக்கத்தை இங்கு தருகிறேன்.   

 

ஈழத் தமிழரின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த, இந்தப் பனை மரத்தை அதன் முழுப் பயன் கருதி “கற்பகதரு” என்பர். போர்ச்சூழலிலும், பல தழிழர்களின் வாழ்வாதாரமாகத் திகழும், பனையின் பயன் பற்றி எமது இளைய தலைமுறையில் அறியாதிருக்கும் சிலர் அறிய பகிர்வதே இப்பதிவின் நோக்கம்.

இளையோர் மாத்திரமன்றி நகர்ப்புற வாழ்வோடு தம்மை இணைத்துக்கொண்ட சில 50 க் கடந்தவர்கள் கூட அறியப் பல பனை பற்றிய தகவல்கள் உள்ளதாலும் பலவற்றை மறக்கக் கூடிய சூழ்நிலையில் வாழும் எல்லோருக்குமுரிய மீட்டலாக  இது அமைகிறது.

குருத்து:- பனை தறிக்கும் போதோ, ஓர் வடலியை வெட்டிப் பிளந்தோ மரத்தின் வட்டுப் (தலை) பகுதியின் மிக இளம் மிருதுவான ஓலை மற்றும் மட்டைப் பகுதிகள் குருத்து என்பர். இது இனிப்புச் சுவையுடன் மிக ருசியாக இருக்கும்.

கள் :- பூம்பாளையைச் சீவிக் கள் இறக்குவார்கள். முட்டிக்குள் சுண்ணாம்பிட்டு சேகரித்த   கள்ளைக் கருப்பணியென்பர், தென்னிந்தியாவில் பதநீர் என்பர். சூட்டு உடம்புக்காரர் பதநீரைக்   காலையில் அளவுடன் குடிப்பது நல்லதென்பர். சுண்ணாம்பு இடாதிருக்கும் கள்ளானது சிறிது நேரத்தில் நொதித்துப் போவதால் சற்றுப் புளிப்பு இருக்கும், இதைக் குடித்தால் வெறிக்கும். அளவுடன் குடித்தால் தீங்கற்ற பானம்.

கள் கள்

பனங்கட்டி:- இதைப் பனைவெல்லம், பனங்கருப்பட்டி எனவும் கூறுவர். கருப்பணியைப் பதமாக வற்றக் காச்சிப் பெறும் இனிப்புப் பொருள் இது. இதைச் சீனிக்குப் பதில் பாவிக்கும் பழக்கம் உண்டு. ஆயுள் வேத வைத்தியத்தில் தேனுடன் உட்கொள்ளும் மருந்துகளுக்கு தேன் கிடைக்காத போது இதைச் சேர்க்கும்படி வைத்தியர்கள் கூறுவார்கள். சலரோகமுள்ளவர்கள் கூட சிறிது பாவிக்கலாம். ஈழத்தில் பருத்தித்துறை இதன் தயாரிப்பிலும் செய்பாங்கிலும் பிரபலம். 

பனங்கட்டி
 

நுங்கு:- பனங்காயின் இளம் பருவத்தில் முற்றாத விதையை வெட்டி அதன் உட்பகுதியை உண்பர். மிக இனிமையான உணவு. 

நுங்கு
 

பனம்பழம்:- இதைச் சுட்டு, சற்றுப் புளிக்கரைசலில் தோய்த்துச் சாப்பிட்ட அருமையாக இருக்கும். பசியும் அடங்கும்.

பனம்பழம் பனம்பழம்
 
பனங்காய்ப் பணியாரம்:- பிளிந்தெடுத்த பனம்பழக்களியுடன் கோதுமை மாவும் சேர்த்து கொதிக்கும் எண்ணெயில் பாக்களவு உருண்டைகளாக உருட்டிப் போட்டுப் பொரித்தெடுப்பது. மிக்க வாசமாகவும் சுவையாகவும் இருக்கும், சுமார் ஒரு வாரகாலம் எந்தவிதமான விசேட பாதுகாப்புமின்றி வைத்துச் சாப்பிடக் கூடியது.
பனங்காய்ப் பணியாரம்
 
பனாட்டு:- பனம்பழக்களியை பாயில் ஊற்றி வெய்யிலில் காயவைத்துத் தட்டுத்தட்டாக வெட்டி மடித்து, ஓலை உமலில் கட்டி அடுப்படிப் பறனில் புகைபடக் கூடியதாகக் கட்டி வருடக்கணக்கில் வைத்து உண்ணக்கூடிய பனம் பண்டம். தேங்காய்ச் சொட்டுடன் உண்பதற்கு மிக அருமையாக இருக்கும். அதிகமாக இதனைக் காலை, மாலை உணவுடன் உண்பார்கள்.
பனாட்டு
 
சீக்காய்:- இது நொங்கு முற்றி வரும் செங்காய்ப்பதம். இதன் தோலைச் சீவி, மஞ்சள் சதைப் பகுதியை தட்டுத்தட்டாக அரிந்து சப்பிடலாம். அதனுள் இருக்கும் சாற்றை உறிஞ்ச அதன்சுவை  ஆகா சொல்ல வார்த்தைகள் இல்லை.
சீக்காய்
 
பூரான்:- பனம் விதையைக், கிழங்கிற்காகப் பாத்தி போட்டு அவை முளைத்துவரும் நேரத்தில்  அதன் பூரான் மாத்திரம் முதிர்ந்துவிடும். அந்த விதையைப் பிளந்து உள்ளிருக்கும் பூரானை உண்ண மிகுந்த சுவையாக இருக்கும். முளை முதிர்ந்துவிட்டால் உள்ளே பூரான் இறுக்கமாக இராது. இதைச் “சிதவல்” என்பர். நீர்த்தன்மையுடன் சுவை குன்றியிருக்கும்.
பூரான்
 
ஒடியல்:- “நாராய் நாராய் செங்கால் நாராய்-பனம்படு கிழங்கின் பிளந்தன்ன வாய்” என உவமை கொண்ட இக்கிழங்கை இரண்டாகப் கிழித்துக் காயவைத்துப் பெறுவதைப் ஒடியல் என்பர். அவித்துக் காயவைத்தால் புளுக்கொடியல் என்பர் அதனை அப்படியே முறித்து உண்ணலாம். ஒடியலை இடித்து அரித்து எடுக்கும் மாவுடன் முருங்கையிலை சேர்த்துப் பிட்டு அவிப்பர். கறியுடனோ, சீனி, சக்கரையுடனோ சாப்பிடலாம். அன்றைய தமிழரின் பாரம்பரிய உணவிது.
 
அடுத்து இம்மாவில் தயாரிக்கப்படும் முக்கிய உணவு கூழ். இதில் சைவக்கூழ், மச்சக்கூழ் எனக் காச்சுவார்கள். ஒடியல்மாவுடன் மிளகாய், உள்ளி, மிளகு, புளி, உப்பு கரைசல், உழுந்து, பயறு, மரவள்ளிக்கிழங்கு, பூசணிக்காய், ஈரப்பலாக்காய், பலாக்கொட்டை, அவரைக்காய், முல்லை, முசுட்டை,  முருங்கைக் கீரை சேர்த்துக் காச்சுவதுண்டு,  தேங்காய்ச் சொட்டும் சேர்த்தால் அருமையாக இருக்கும். இது ஒரு நிறையுணவு. இது சைவ உணவு உண்பவர்களுக்கானது. இத்துடன் மீன், நண்டு, கணவாய், இறால், திருக்கை, மட்டிச்சதை சேர்த்துச் சமைப்பது மச்சக்கூழ். இது மச்சப் பிரியர்களுக்கு. முல்லைத்தீவு சார்ந்த இடங்களில் இத்துடன் மான், மரை வத்தல் இறைச்சியும் சிறிது சேர்ப்பர். இது தடிமனுக்கு நல்ல கைவைத்தியம். 
ஒடியல்
 
அவித்த கிழங்கு:- இதை மாலை நேரச்சிற்றுண்டியாக உண்பர். கிழங்குக்காலத்தில் இலங்கையில் சகல இனமக்கள் வீட்டிலும் உண்பர்.
அவித்த கிழங்கு
 
கிழங்குத் துவையல்:- அவித்த நன்கு தும்பு வார்ந்து எடுத்த கிழங்குத் துண்டுகளுடன் பச்சைமிளகாய், உள்ளி, மிளகு, உப்பு, வெங்காயம் சேர்த்திடித்து உருண்டையாக்கி உண்பர். செமிபாட்டை இலகுவாக்கி சிறுவர்கூடச் சாப்பிடக் கூடியது. மிக வாசமாகவும், சுவையானதும் கூட.
 
புழுக்கொடியல்:- அவித்த கிழங்கை நன்கு தும்புவார்ந்து இரண்டாகப் பிளந்து நன்கு வெயிலில்  காயவைப்பது. இதை நீளமாகவும், வட்டமாகவும் சீவிக் காயவிடுவதுமுண்டு. அதைச் சீவலொடியல் என்பர். மாலை நேரச்சாப்பாடு, தேங்காச்சொட்டுடன் பிரமாதமாகக் கூட்டுச் சேரும். பலவருடம் பாதுகாக்கக் கூடியது. இதனை இடித்துவரும் மாவுக்கு தேங்காய்த் துருவல், சீனி, சர்க்கரை, பனங்கட்டி சேர்த்து சிறுவர்களுக்கும் பல்லுச் சப்பமுடியாத முதியவர்களுக்கும் கொடுப்பர். அண்றைய நாட்களில் பற்கள் பலமாக வருவதற்கும் இதைக் கடித்துச் சாப்பிடுவார்கள்.

சுவடி:- ஆதிகாலத்தில், எழுது பொருளாகப் பனையோலைச் சுவடிகளே பயன்படுத்தப்பட்டது. இன்றும் பல சங்க இலக்கியங்கள் பலையோலைச்சுவடியாக பல நூலகங்களில் உண்டு. யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது தேடக்கிடைக்காத பல சுவடுகள் எரிந்தன. பண்டைய தமிழ் எழுத்துக்களுக்கு குற்றிடுவதில்லை. காரணம் ஓலையில் எழுத்தாணியால் குற்றிட்டால் கிழிந்துவிடுமென்பதால் குற்றுத் தவிர்க்கப்பட்டதென்பர்.
சுவடி சுவடி
 

கால்நடை உணவு:- புல் அருகியுள்ள காலங்களில் பச்சோலை வெட்டிக் கிழித்து மாமு ஆட்டிற்கு உணவாக போடுவர்.

கால்நடை உணவு

கூரை:- ஓட்டுப் பாவனை வருமுன் இல்லங்கள் பனையோலை, தென்னங்கிடுகு, வைக்கோல் என்பவற்றால் வேயப்பட்டது. வெப்பவலையமான எங்கள் பிரதேசங்களில் இக்கூரைகள் மிகுந்த சுவாத்தியமாக அமைந்த தென்பதை அவற்றில் வாழ்ந்து அனுபவித்தோர் இன்றும் கூறக்கேட்கலாம். பனையோலைக் கூரை அதில் தேர்ந்தோராலே நேர்த்தியாக வேயக்கூடியது.
கூரை
 

வேலியடைத்தல்:- அன்றைய கதியால் வேலிகளுக்கு முகமறைப்பாகவும், பாதுகாப்பாகவும், பனையோலையோ, தென்னங்கிடுகோ கொண்டு மறைத்தடைக்கும் வழக்கம் உண்டு. இவை செலவு குறைந்தது. கதியாலுக்குப் பதில் பனைமட்டையும் வேலியடைக்க உபயோகிப்பர்.

வேலியடைத்தல் வேலியடைத்தல்

பன்ன வேலை:- இது பனையோலை குறிப்பாகக் குருத்தோலை, நார், ஈர்க்கு, மட்டை என்பவற்றைக் கொண்டு வீட்டுக்குத் தேவையான பாவனைப் பொருட்களான பெட்டி, கடகம், சுளகு, பாய், நீற்றுப்பெட்டி, தடுக்கு, குட்டான், உமல், தொன்னை, வட்டில், விசிறி, தொப்பி, கிலிகிலுப்பை என்பவற்றை இழைப்பதாகும். ஈழத்தில் அன்றைய பெண்கள் பங்கேற்கும் முக்கிய குடிசைக் கைத்தொழில்.
பன்ன வேலை பன்ன வேலை
 

அடுக்குப் பெட்டி:- இன்றைய அடுக்கு அலுமினியம், எவர் சில்வர்ச் சட்டிகள் போல், அன்று அடுக்குப் பெட்டிகள் 1/2′ முதல் 1 1/2′ விட்டம் வரை சுமார் 1/2′ உயரத்தில் ஒன்றினுள் ஒன்று வைக்கக் கூடியதாக இழைக்கப்பட்டவை. ஒரு அடுக்கில் 5 முதல் 10 பெட்டிகள் இருக்கும்…பலவித தேவைகளுக்கும் அவற்றின் அளவுக்கேற்ப பயன்படுத்துவர். நல்ல இளங்குருத்தோலையில் இழைத்தவை அதிகம் நனையவிடாமலோ, அல்லது காயவிடாமலோ நிழலில் பாவித்தால் 15 வருடங்கள் கூடப் பழுதுபடாமல் இருப்பவையும் உண்டு.

அடுக்குப் பெட்டி

அஞ்சறைப் பெட்டி(ஐந்தறைப்பெட்டி):- சுமார் 8″- 10″ , நீள அகலமுள்ள சற்சதுரவடிவான பெட்டி, இருஅடுக்கு அமைப்பாக இருக்கும் முதல் அடுக்கு, பெட்டியின் 1/2 வாசி உயரத்துடன் 4 அறைகளாகப் பிரித்திருப்பார்கள். கீழ்த் தட்டுஅப்படியே இருக்கும் மேல்தட்டு தனியே எடுத்து கீழ்த்தட்டுள் உள்ளவற்றை எடுக்கலாம். அன்றைய நாட்களில் சந்தை வியாபாரிகள் சில்லறைக் காசுகள் வைக்க இதனைப் பாவித்தனர். சமையலறையிலும், பலசரக்குப் பெட்டியாகவும், ஆயுள் வேத வைத்தியர்கள் மருந்து காவும் பெட்டியாகவும், பாவித்தார்கள். இதை 9 அறையுடனும் இழைப்பர். இன்று காட்சிக்குக் கூட ஒன்று கிடைக்குமோ! தெரியவில்லை.

கொட்டைப்பெட்டி:-இதை வெற்றிலை பாக்கு, புகையிலை பாவிப்பவர்கள். அதைப் பத்திரமாக வைப்பதற்கு உபயோகிப்பர். இது ஒன்றினுள் ஒன்றை வைக்கக் கூடிய வகையில் 3 அல்லது 4 தட்டையான அமைப்புடைய வாய்திறந்த அமைப்பில், தனியான மூடியுடன் கூடியது. இடுப்பில் செருகக் கூடிய தட்டையாகவும், சிறிய அமைப்பிலும் நிறவோலைகளால் அழகிய வேலைப்பாடுகளுடன் இருக்கும்.
கொட்டைப்பெட்டி
 

மூடு பெட்டி:- சாதாரண பல அளவுப்பெட்டிகளுக்கு பொருத்தமான மூடியும் இழைத்து, மூடியில் பனையீர்க்கால் வசதியாகத் திறந்து மூடக் கைபிடியும் வைத்திருப்பார்கள்.

வட்டில்:-பழையகாலங்களில் பயணங்களுக்கு, வேலைக்குச் செல்வோர் சாப்பாடு எடுத்துச் செல்ல பாவித்த சிறிய பெட்டி. நல்ல இளங்குருத்தோலையில் மிக நெருக்கமாக இழைத்தது. இலகுவில் இறுக்கம் குறைந்த கறிகள் வெளியேறாது. கழுவிக் கழுவிப் பல காலம் பாவிப்பர்.

சுளகு:- பனையீர்க்காலும், மட்டையாலும் பின்னுவது. அரைச் செவ்வக வடிவில் புடைப்பதற்கும், வட்டவடிவில் உணவுப்பொருட்களைக் காயவைப்பதற்கும் பல அளவுகளில் முடைவார்கள்.
சுளகு
 

கடகம்:- பனையோலை நார் கொண்டிழைப்பது, சாதாரண பனையோலைப் பெட்டிக்கும் கடகத்துக்கும் உள்ள வித்தியாசம் கடகத்துக்கு வெளிப்பாகம் நாரால் இழைத்து வாய்ப்பகுதிக்கு பலத்திற்காக தடிப்பான நார் பொருத்தியிருப்பார்கள். பாவனையிலும் கடகத்தின் உபயோகத்துக்கு சாதாரண பெட்டியைப் பாவித்தால் பிய்ந்து விடும். உ+ம்- மண், கல் அள்ளுதல். சும்மாடு என்பது பாரமான பொருட்களைத் தலையில் காவும் போது அழுத்தாமல் மென்மையாக இருக்க பழைய துணி, சால்வை, முந்தானைச் சேலை போன்றவற்றால் உடன் செய்வது. அதாவது வட்டவடிவமாக ஒரு சாண் விட்ட அளவில் சுருட்டுவது. இதை துணிவகையிலேயே செய்வர். தலைக்கு மெத்தென இருப்பதே நோக்கமும் தேவையும். 

 

கடகம்
பட்டை:- இளங்குருத்தோலையில் செய்வர். இது தோட்டத்துப் பயிர்களுக்குத் தண்ணீர் தண்ணீர் ஊற்றவும். கிணற்றில் இருந்து நீர் அள்ளவும் பாவிப்பர். சுமார் 1 கலன் கொள்ளக் கூடியவையும் செய்வர்.
பட்டை
திருகணை:- கழிவு ஈர்க்கை ஒரு சாண் விட்டமுள்ள வட்டமாகச் சுற்றி, அதற்கு முறுக்கிய ஈர்க்கால், மேற்சுற்றுச் சுற்றுவர். பனை, சட்டி, குடம் உருளாமல் இருக்க உபயோகிப்பர்.
திருகணை
 

உறி:-திருகணைக்கு 3, 4 ஈர்க்கில் பின்னிய சுமார் 3′ நீளமான தொடுப்பு (கயிறு போல்) தொங்குப்படி அமைத்து சாப்பாட்டுப் பொருட்களை பூனை, நாயிடமிருந்து பாதுகாக்கப் பாவித்தார்கள். (வெண்ணெய் உண்ணும் கண்ணன் படத்தில் பார்த்திருப்பீர்கள்)
உறி
 

உமல்:-பலையோலையில் இழைப்பது. இன்றைய பசுமதி அரிசிப்பை போல் இருக்கும். அன்று பொருள் காவப் பாவித்தார்கள். 

பிளா:-உடன் தேவைக்குப் பச்சையோலையிலும் பல காலப் பாவனைக்கு குருத்தோலையிலும் அரை முட்டைவடிவில் அமைப்பது. கிராமக் கோவில்களில் சித்திரைக் கஞ்சிக்கும் வயல் வேலை செய்யும் போது சாப்பிடவும் பாவிப்பர். சுடு சாப்பாடு பச்சையோலையை வேகவைக்கும் போது வரும் வாசமே! அருமையாக இருக்கும். குருத்தோலைப் பிளா கள்ளுத் தவறணைகளில் வைத்திருப்பர்.
பிளா
 

தொன்னை:-பனையோலையில் உடன் பாவனைக்கு இழைக்கப்படும்;சிறு பெட்டிகள்; வழிபாடுகளுக்குப் பாவிப்பது. இந்தோனேசியா,தாய்லாந்து,கம்போடியா போன்ற நாடுகளிலும் வழிபாட்டில் இத் தொன்னைகள் முக்கிய இடம் வகுக்கின்றன.

பறி:-மீனவர்கள் பிடித்த மீனைக் கரைக்குக் கொண்டுவர பாவித்த ஒடுங்கிய வாயுடைய பைபோன்ற அமைப்புடையது.

நீற்றுப்பெட்டி:-பனையோலை,ஈர்க்குக் கொண்டிழைக்கப்படும் கூம்புவடிவுடையது;இதை உணவுப்பண்டங்களை அவிக்க, திரவப் பதார்த்தங்களை வடிக்க உபயோகிப்பர்.

நீற்றுப்பெட்டி

 

பாய்கள்:- படுக்க உபயோகிக்கும் 5’x7′ பாய்கள், சூடடிக்கப் பாவிக்கும், பந்தலுக்கு விரிக்கும் 20’x 25′ களப்பாய்கள், பந்திக்கு விரிக்கும் 2’x30′பந்திப்பாய், பிற்கூறிய இரண்டும் முற்றாகப் பாவனையற்று விட்டது. முற்றலோலையில் பனாட்டுப் போட பனாட்டுப் பாயுமுண்டு. ஒரு தடவையே பாவிப்பர்.

பாய்கள்

 

தடுக்கு:-பிறந்த குழந்தைகளைக் கிடத்தப் பாவிக்கும் 3’x3′; சிறு பாய், குறிப்பாக எண்ணெய் பூசிக் காலை இளஞ் சூரியக் குளியலுக்குப் பிள்ளையை இதில் கிடத்துவார்கள்.

தட்டி:-அன்றைய வீடுகளுக்கு, பாய், மட்டை, சலாகை கொண்டு செய்யப்படும் மறைப்பு.

குட்டான்:-பனையோலையில் இழைக்கப்படும். பொதியாக்கக் கொள்கலன். இதைப் பனங்கட்டிப் பொதியாக்கத்துக்குப் பயன்படுத்துவார்கள்.3″x6″ முதல் 1/2″x1″ அளவில் கூடச் செய்வார்கள்.

குட்டான்

 

நெட்டி:-அளவாக வெட்டிய பனையோலை; கரண்டிகள் போல் சுடு களி உண்ணப் பயன்படுத்துவர்.

விசிறி, தொப்பி, கிலுகிலுப்பை:- முழு வடலி ஓலையில் விசிறி செய்வார்கள். வார்ந்த ஓலையால் தொப்பி சிறுவர் விளையாடக் கிலுகிகுப்பை இழைப்பார்கள்.

தொப்பி விசிறி

 

விளக்குமாறு:- கழிவு ஈர்க்கினால் செய்யப்படும். அன்றைய சமையலறை இருந்து கூட்ட இச்சிறிய விளக்குமாறு மிக உதவியது.

விளக்குமாறு

 

வாழ்விடங்கள்:-வீடு, முதலான கட்டிடங்களின் கூரைகளின் மரப்பகுதிகளான வளை, தீராந்தி, பாவுமரம், சலாகை என யாவும் பனைமரத்தைத் தறித்து, அளவாக வெட்டிச் சீவி எடுப்பார்கள். 40′ நீளமானமரத்தில் சுமார் 25′ வைரமான பகுதியாக பாவுமரமாகவும் ஏனையபகுதில் சுமார் 10′ வைரம் குறைந்த பகுதி சலாகை யாக்கப்படும்.

துலா:- ஓர் முழுமரத்தின் வைரப்பகுதில், துலாச்செய்து அன்று, கிணற்றில் தண்ணீர் அள்ளினர். நீர் இறைப்பு இயந்திர வருகையின் பின் படிப்படியாக வழக்கொழிந்து போய்விட்டது.

துலா

இறங்கு துறைகள்:- குறிப்பாக தீவுப்பகுதிகளில் இறங்கு துறைகள் கல்லாலும் மண்ணாலும் அமைத்தபோதும், அதன் படகுகள் முட்டும் நுனிப்பகுதி பனைமரத்தாலானதாகவே காணக்கூடியதாக இருந்தது. காரணம் ஏனைய மரங்களிலும் பனைவைரம் உப்புநீரில் உழுத்துப்போகும் தன்மை மிகக் குறைந்தது. அதனால் நீண்ட காலம் பயனில் இருக்கக் கூடியது.

வண்டில் துலா:-வண்டிலின் அடிப்பாகத்திலமைந்துள்ள நீண்ட நுகத்தடி பொருத்தும் பகுதி. இதுவும் பனை வைரத்திலேயே அமைப்பார்கள் அதன் உறுதிக்காக.

தேர் சப்பறம்:- கோவில் கட்டுத் தேர், சப்பறத்தின் சகடைக்கு மேற்பகுதி அடிப் பனை வைரங்களாலே செய்யப்பட்டவை, பாவித்தபின் கழட்டி வைப்பர், அவற்ருக்கு வயதெல்லை இல்லை. நிழலில் இருப்பதால் பலகாலம் பாவனையில் இருக்கும். நெருப்புத் தவிர வேறு எதிரி இல்லாதது.

பிள்ளைத் தண்டு:- இதுவும் கோவில்களில் விக்கிரகங்களை விழாக்காலத்தில் திருவாசியுடன் கூடியருப்பில் வைத்து வாகனங்களுக்கோ தேருக்கொ சுமந்து வரும் சுமார் 2.5 மீட்டர் நீளமுள்ள பனை வைரத்தில் உருளையாகச் சீவப்பட்டது. சுமார் 200கிலோ நிறை தாங்கக் கூடியது. எந்தக் கோவிலிலும் குறைந்தது ஒரு சோடியாவது இருக்கும்.

மரக்குத்திகள்:-அன்று பாரமான பொருட்களை இடம் பெயர்க்க உருளையாக பனைமரத் துண்டுகள் பாவிப்பர்.

மரவேலை:- குறிப்பாக ஆணிக்குப் பதிலாக பொருத்துக்களுக்குச் சீவிய பனைவைரம் பாவிக்கப்பட்டது.

கொட்டுப்பனை:- எங்கள் நாட்டுப் பச்சைக்கிளிகளும், மைனாக்களும் தம் பாதுகாப்பான வாழ்விடங்களாகத் தேர்வு செய்தது. இக் கொட்டுப்பனைகளே!!!(இறந்த பனைகள்)

விறகு:- பனையின் சகல பாகங்களும் விறகாகப் பாவிக்கப்படும். ஓலை, மட்டை, பன்னாடை, கொக்கரை, பாளை, மூரி, ஊமல், பழுதடைந்தமரம்  யாவும் எரிக்க உதவும். எரிபொருட் செலவைக் குறைத்தது.

பசளை:- பனையோலை முதல் அத்தனை பனைக்கழிவுகளும் உழுத்தால் நல்ல இயற்கைப் பசளையே! சுற்றுச் சூழலுக்கு எந்த மாசும் ஏற்படுத்தாதது. விவசாயத்தில் ஈழத்தில் பெரும் பங்கேற்றது. பனைக் கழிவுகள்.

 

நன்றி பாஞ்ச் ஐயா.

இந்த லிஸ்டில் இன்னொன்றையும் சேர்க்கலாம். 

யுத்த காலத்தில் மக்கள் தமது பதுங்கு குழிகளின் கூரையாகவும். போராளிகுழுக்கள், இராணுவம் தமது காவலரகளின் சுவராகவும் பனையை பாவித்தனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

நன்றி பாஞ்ச் ஐயா.

இந்த லிஸ்டில் இன்னொன்றையும் சேர்க்கலாம். 

யுத்த காலத்தில் மக்கள் தமது பதுங்கு குழிகளின் கூரையாகவும். போராளிகுழுக்கள், இராணுவம் தமது காவலரகளின் சுவராகவும் பனையை பாவித்தனர்.

அவசரத்துக்கு சுழல் கக்கூசாகவும் 😁

Link to comment
Share on other sites

5 hours ago, goshan_che said:

இந்த லிஸ்டில் இன்னொன்றையும் சேர்க்கலாம். 

யுத்த காலத்தில் மக்கள் தமது பதுங்கு குழிகளின் கூரையாகவும். போராளிகுழுக்கள், இராணுவம் தமது காவலரகளின் சுவராகவும் பனையை பாவித்தனர்.

யோகன் அவர்களின் ஆக்கத்தைப் பிரதிபண்ணிப் பதியும்போது சில எழுத்துக்களை இயன்றளவு சரிசெய்யவும் முயன்றுள்ளேன். உங்கள் சிந்தனையில் உதித்தவையும் ஞாபகம் வந்தது. ஆனாலும் பனைகளைத் தறித்து அழிப்பதை ஊக்குவிக்கக்கூடாது என்ற எண்ணமும் ஏற்பட்டது. எங்கள் தமிழ்படை தறித்தது பாதிப்பைத் தரவில்லை, அவர்கள் தறித்த குற்றத்திற்கு ஈடாக ஈழத்தில் 5இலட்சம் பனை மரங்களை நாட்டும் முயற்சியை மேற்கொண்டனர். ஆனால் சிங்களப்படை ஒன்றைக்கூட நாட்ட முன்வந்ததாக அறிந்ததில்லை. 

4 hours ago, நந்தன் said:

அவசரத்துக்கு சுழல் கக்கூசாகவும் 😁

உண்மைதான்! ஆனாலும் பனைக்குப் பின்னால் இருக்கும்போது தலையில் பனங்காய் வீழ்ந்து பாதிக்கப்பட்ட மக்களும் ஞாபகத்திற்கு வந்தனர். 😲

(சுற்றுலாப் பயனி ஒருவர் ஈழத்தில் உலாவியபோது, அதிகாலையில் பனைகளுக்குப் பின்னால் சில தலைகள் தெரிந்ததைக் கண்டு "அது என்ன செய்கிறார்கள்" என்று கேட்டுள்ளார், பயனியின் வழிகாட்டியாக வந்தவருக்கு அவமானமாகப் போய்விட்டது. "அது அவர்கள் அதிகாலையில் சூரியக்குளியல் எடுக்கிறார்கள்" என்று சொல்லிச் சமாளித்தாராம்.) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

ஒரு கிராமம்.
அந்த கிராம வெளிப்புறம் ஒரே பனங்காடு.
அதில் அரைப்பங்கு என்னுடையது.
பனங்கொட்டை தொடக்கம் வடலி வளர்ந்து காவோலை விழும் வரைக்கும் ஆயிரம் கதைகள் இருக்கு ராசன்.

கற்பகதரு ஒரு சரித்திரம்.

 

No description available.No description available.No description available.No description available.

இந்த கறுப்பு நார் உள்ள பழத்தை விட மிக இனிப்பானது அந்த மஞ்சள் நிறத்திலான பழம்  அதனால் காலையில் எடுத்துப்போக கன பேர் வருவார்கள்

@satan பழம் வேண்டுமா என்ன? பிரான்ஸ் பழம் 😂😅😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

No description available.No description available.No description available.No description available.

இந்த கறுப்பு நார் உள்ள பழத்தை விட மிக இனிப்பானது அந்த மஞ்சள் நிறத்திலான பழம்  அதனால் காலையில் எடுத்துப்போக கன பேர் வருவார்கள்

@satan பழம் வேண்டுமா என்ன? பிரான்ஸ் பழம் 😂😅😆

இது நீங்கள் சுட்ட பனம்பழமா ....யாரிடம்.....!  😂

(நீங்கள் எங்கே  அதிகாலையில் பனங்காட்டுக்கு போகமாட்டியல் என்ற நம்பிக்கைதான்).

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
    • தேர்தல் வருகின்றது என்பதற்காகவா.............🙃.........சரத் வீரசேகர உட்பட இன்னும் பலர் தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களே. நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன். தேர்தல் முடிந்த பின், இவருக்கு ஒரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டமும் இருக்கலாம். அமெரிக்கா, இந்தியா, இலங்கை - இந்த மூன்று இடங்களில் இருந்து வரும் அரசியல் செய்திகள் ஒரே மாதிரியே இருக்கின்றன......😀
    • ஸ்கன்டினேவிய நாடுகளில் மத ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தும் புட்டினின் முயற்சியாக இருக்குமோ?  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.