Jump to content

பனம்பழஞ் சூப்பி - ஜூட் பிரகாஷ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

இது நீங்கள் சுட்ட பனம்பழமா ....யாரிடம்.....!  😂

(நீங்கள் எங்கே  அதிகாலையில் பனங்காட்டுக்கு போகமாட்டியல் என்ற நம்பிக்கைதான்).

அண்ணை எனது பக்கத்து வளவில் இருக்கும் மரம் இது பனங்காட்டுக்கு போவது கிடையாது ஆனால் வேலைக்கு போகணும் தற்போது நண்பர்களுடன் வேலைக்கு செல்வது பாடசாலை பூட்டு என்ற படியால். இன்றுமுதல் 30 வரை வரை பொது முடக்கம் அறிவித்துள்ளார்கள் இனி வீட்டிலதான் 

கிழக்கில் எனக்கு தெரிந்து யாரும் சுட்டு பனம்பழம் சாப்பிடுவது இல்லை  ,இன்னொன்றும் சொல்ல வேண்டும் பிட்டுடன் பலாப்பழம் சேர்த்து சாப்பிடுவதும் இல்லை யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்கள் சாப்பிடலாம் நாங்கள் சொதி, சம்பல் , இறைச்சிக்கறிதான் 

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உணவு மற்றும் மரங்கள் புதிதாக உருவாக்கி  வளர்வதற்கு மிகவும் கடினமான மண்ணில், பனை மரத்தின் உபயோகங்களை மனித திறனின் கூர்ப்பாகவே பார்க்க வேண்டி இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அண்ணை எனது பக்கத்து வளவில் இருக்கும் மரம் இது பனங்காட்டுக்கு போவது கிடையாது ஆனால் வேலைக்கு போகணும் தற்போது நண்பர்களுடன் வேலைக்கு செல்வது பாடசாலை பூட்டு என்ற படியால். இன்றுமுதல் 30 வரை வரை பொது முடக்கம் அறிவித்துள்ளார்கள் இனி வீட்டிலதான் 

கிழக்கில் எனக்கு தெரிந்து யாரும் சுட்டு பனம்பழம் சாப்பிடுவது இல்லை  ,இன்னொன்றும் சொல்ல வேண்டும் பிட்டுடன் பலாப்பழம் சேர்த்து சாப்பிடுவதும் இல்லை யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்கள் சாப்பிடலாம் நாங்கள் சொதி, சம்பல் , இறைச்சிக்கறிதான் 

விறகு கடடைகளை எரித்து பின் அதில் இருக்கும் தணலில் பழத்தைச் சுட்டு சாப்பிடுங்கள், ஜூஸ் அந்தமாதிரி ஒழுகும் .....பிட்டுக்கு பிலாப்பழம் செம டேஸ்ட் தெரியுமா....இன்றே இரண்டையும் சாப்பிட்டுவிட்டு சொல்லுங்கள்....வாழ்நாளில் 1/2 வாசியை வீணாக்கிப் போட்டியல் தனி.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

விறகு கடடைகளை எரித்து பின் அதில் இருக்கும் தணலில் பழத்தைச் சுட்டு சாப்பிடுங்கள், ஜூஸ் அந்தமாதிரி ஒழுகும் .....பிட்டுக்கு பிலாப்பழம் செம டேஸ்ட் தெரியுமா....இன்றே இரண்டையும் சாப்பிட்டுவிட்டு சொல்லுங்கள்....வாழ்நாளில் 1/2 வாசியை வீணாக்கிப் போட்டியல் தனி.......!  😁

10 நாள் விடுமுறை செய்து பார்ப்போம் (பொது முடக்கம்)

Link to comment
Share on other sites

26 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நாங்கள் சொதி, சம்பல் , இறைச்சிக்கறிதான் 

நானும் மட்டக்களப்பில் பல காலம் வாழ்ந்துள்ளேன் அங்கு "சொதி" என்று சொல்லக் கேட்டதில்லை. "ஆணம்"  என்றுதான் சொல்லக் கேட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Paanch said:

நானும் மட்டக்களப்பில் பல காலம் வாழ்ந்துள்ளேன் அங்கு "சொதி" என்று சொல்லக் கேட்டதில்லை. "ஆணம்"  என்றுதான் சொல்லக் கேட்டுள்ளேன்.

ஆணம் என்று சொல்வது அதிகம் முஸ்லீம்கள் அதிலும் தேங்காய்ப்பூ சொதியை பால் ஆணம் என்றே சொல்வார்கள் 

Link to comment
Share on other sites

நல்ல பனம்பழம் விழும்போதே சற்று வெடித்துப் பிளந்துவிடும். தணல் பட்டும் படாமலும் பக்கவாட்டாக வைக்க வேண்டும். கருகாமல் அடிக்கடி சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும். நன்கு வேகத் தொடங்கியதும் தோலுக்கிடையில் பாணி வெளியேறி சூட்டில் எரிந்து பொசுங்கி நல்ல வாசனை வரும் 😀
 

ஏனோ தெரியவில்லை, இப்போது ஆர்வமில்லை. கடைசியாக யாழ்ப்பாணம் போனபோது சாப்பிட்ட பினாட்டு நான் முன்னர் சுவைத்த சுவையைத் தரவில்லை. இன்னும் சாப்பிட விருப்பமனது பனங்க்கொட்டை முளை வரும்போது அதைப் பிழந்து பூரான் சாப்பிடுவது. தேங்காய் போல் பெரிதாக இல்லாவிட்டாலும் சுவையாக இருக்கும். பனங்கொட்டையை இரண்டாகப் பிழப்பதுதான் கடினம். மற்றது பனங் குருத்து. இதைச் சாப்பிட மரத்தையே தறிக்க வேண்டுமென்பதால் சாப்பிடுவதில்லை.

இன்னொன்று. பனம்பழச் சாற்றைப் பிழிந்து தேங்காய்ப் பால், சக்கரை கலந்து சோறு அல்லது பிட்டுக்குள் விட்டுக் குழைத்துச் சாப்பிட நன்றாக இருக்கும். முஸ்லிம் ஊர்களில் சோறு சாப்பிட்ட பின் இதை உண்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யாரும் பனம் பிட்டு சாப்பிடவில்லைபோல் இருக்கிறது. பனங்களி சேர்த்து, அரிசிமாவில் குழைத்து, சிறு உருண்டைகளாக உருட்டி, நீத்துப்பெட்டியில் அவித்து, பின் தேங்காய்ப்பால், சீனி சேர்த்து கொதித்ததும் அவித்த உருண்டைகளை அந்தக்கலவையில் கொட்டி, பிரட்டி சாப்பிட்டுப் பாருங்கள். அதன் சுவையே தனி. அதோடு என்தாயார் சொல்வார், ஒருகாலத்தில் பனையோலையில் கூடை பின்னி, அதில் வெங்காயம் போட்டு கொழும்புக்கு அனுப்புவார்களாம். அன்று பல பெண்களை வேலைக்கு அமர்த்தி, ஒருபுறம் வெங்காயம் ஆய்வார்களாம், மறுபுறம் கூடை இளைப்பார்களாம், காலையில் வாகனம் வைத்து  தென்பகுதிக்கு வெங்காய ஏற்றுமதி கூட்டுறவுமூலம் நடந்ததாம். வெங்காய சாக்கு என்று வருவதற்கு முன் வெங்காய  கூடையே பயன்படுத்தினார்களாம். குழல் வடிவில் பெரிய ஓட்டை உடையதாய் இருக்குமாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

 

பொது முடக்கம்)

முடக்கம்
 
அல்லது

அடக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

நானும் மட்டக்களப்பில் பல காலம் வாழ்ந்துள்ளேன் அங்கு "சொதி" என்று சொல்லக் கேட்டதில்லை. "ஆணம்"  என்றுதான் சொல்லக் கேட்டுள்ளேன்.

யாழில் ஆணம் என்றால் குழம்பை தானே சொல்வார்கள்?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Paanch said:

சுட்ட பனம்பழத்தைப் பழப்புளித் தண்ணியில் தோய்த்துச் சூப்பிய அந்நாள் ஞாபகத்திற்கு, நிழலி அவர்களின் பதிவு என்னைக் கொண்டு சென்றதுமட்டும் அல்லாது, யாழ்கள உறவுகள் சிலருக்கு எங்கள் பனை ஒரு கற்பகதரு என்றும், அதன் மகத்துவம் தெரியாதிருப்பதும் தெரியவந்தது, கற்பகதரு பற்றிப் பாரிசில் இருந்து யோகன் என்பவர் அன்று தந்த ஆக்கத்தை இங்கு தருகிறேன்.

பயனுள்ள தகவலை இணைத்தமைக்கு நன்றி.. இதன் மூல இணைப்பையும் ஒரு தரம் தந்து உதவமுடியுமா? 

Sydney Institute of Community Languageயினால், இங்கே கற்பிக்கும் மொழிகள், அவர்களது இனம், அவர்களது பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறார்கள், இந்த தகவல், இங்கே தமிழ்மொழியை கற்கும் மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.. 

இந்த தகவலின் மூல இணைப்பு இருந்தால் இதை என்னால் SICLEற்கு அனுப்பமுடியும்..

படங்களுடனும் இலகுவான மொழிநடையுடன் அதிகளவு பக்கங்கள் இல்லாமல் இருப்பதால்.. இந்த கட்டுரையையும் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன்..

Link to comment
Share on other sites

15 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

பயனுள்ள தகவலை இணைத்தமைக்கு நன்றி.. இதன் மூல இணைப்பையும் ஒரு தரம் தந்து உதவமுடியுமா? 

Sydney Institute of Community Languageயினால், இங்கே கற்பிக்கும் மொழிகள், அவர்களது இனம், அவர்களது பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறார்கள், இந்த தகவல், இங்கே தமிழ்மொழியை கற்கும் மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.. 

இந்த தகவலின் மூல இணைப்பு இருந்தால் இதை என்னால் SICLEற்கு அனுப்பமுடியும்..

படங்களுடனும் இலகுவான மொழிநடையுடன் அதிகளவு பக்கங்கள் இல்லாமல் இருப்பதால்.. இந்த கட்டுரையையும் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன்..

கூளில் தேடும் போது இரண்டு மூலங்கள் இதற்கு வருகின்றது.

படங்கள் இல்லாமல் 
http://johan-paris.blogspot.com/2006/08/blog-post_18.html


படங்களுடன்

https://ourjaffna.com/tradition/கற்பகதரு

இரண்டுமே ஜோகனால் எழுதப்பட்டது:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பனங்கூடல்களுக்குள் பிறந்து வளர்ந்தபோதும் (வீட்டில் பின் வளவில் இப்போதும் பனைகள் சில நிற்கின்றன), பனையில் இருந்து சாப்பிடக்கூடிய எல்லாவற்றையும் சாப்பிட்டும், பனம்பழம் மட்டும் சாப்பிட்டதில்லை!

அதை எப்போதும் மாடுகளுக்கே கொடுப்போம்.😀

ஒழுங்காக எண்ணை வைத்து தலை சீவாமல் பள்ளிக்கூடம் வருபவர்களை மாடு சூப்பின பனங்கொட்டை சிலும்பிக் கொண்டு வரக்கூடாது வாத்தியார், ரீச்சர்மார் சொல்லுவினம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

கூளில் தேடும் போது இரண்டு மூலங்கள் இதற்கு வருகின்றது.

படங்கள் இல்லாமல் 
http://johan-paris.blogspot.com/2006/08/blog-post_18.html


படங்களுடன்

https://ourjaffna.com/tradition/கற்பகதரு

இரண்டுமே ஜோகனால் எழுதப்பட்டது:

மிக்க நன்றி.. 

நான் அவர்களுக்கு இதை அனுப்பிவிடுகிறேன்.. 

இப்பொழுது 12 மொழிகள் சம்பந்தமான தகவல்களை எதிர்கால சந்ததிக்காக சேகரிக்க தொடங்கியுள்ளார்கள்.. அந்த 12 மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. University of Sydneyயின் ஒரு அங்கம்தான் இந்த SICLEம்.. 

எங்களிற்கு தந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் எங்களது பிள்ளைகளே பயனடைவார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா... பனம் பழத்துடன், பனை மரத்தை பற்றிய அனைவரின் கருத்தும் அருமை. 👍

இலங்கையில்... வடக்கு, கிழக்கு பகுதிகளில் மட்டும் தான்.. 
அதிக பனை மரங்கள் உள்ளது என நினைக்கின்றேன்.

அதே... போல், தமிழ் நாட்டிலும்... திருச்சி, தஞ்சாவூர் போன்ற... 
சில குறிப்பிட்ட மாவட்டங்களில் தான்.. பனை மரங்களை அதிகம் கண்டுள்ளேன்.
இதற்கு ஏதாவது, விசேட காரணங்கள் உண்டா... என தெரியவில்லை.

யாழ். மாவட்டத்தை சேர்ந்த, தமிழர்களை...  "பனங் கொட்டைகள்" என்று,
மற்றைய மாவட்டத்தினர், சொல்லும் போது... எனக்கு கோபம் வருவதில்லை. :)
மாறாக... அதனை கேட்க,  எனக்கு  மகிழ்ச்சியாக இருக்கும். 🥰

மற்றவர்களுக்கு... என்ன உணர்வு ஏற்படுகின்றது என்பதை அறிய ஆவலாக உள்ளது. 

Link to comment
Share on other sites

2 hours ago, நிழலி said:

படங்களுடன்

https://ourjaffna.com/tradition/கற்பகதரு

இரண்டுமே ஜோகனால் எழுதப்பட்டது:

என் பதிவிற்கான மூலத்தை இங்குதான் கண்டெடுத்தேன். நன்றி நிழலி.🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆணம் என்று சொல்வது அதிகம் முஸ்லீம்கள் அதிலும் தேங்காய்ப்பூ சொதியை பால் ஆணம் என்றே சொல்வார்கள் 

நீங்கள் வீட்டிலை என்ன மாதிரி?
சொதியா ஆணமா? 😎

Link to comment
Share on other sites

7 hours ago, ஏராளன் said:

யாழில் ஆணம் என்றால் குழம்பை தானே சொல்வார்கள்?!

குழம்பையும் ஆணம் என்றும் சொல்வதுண்டு. மற்றும்படி சொதியை ஆணம் என்றும், ஆணத்தைச் சொதி என்றும் சொல்வது அவரவர் நாட்டு வழக்கம். 

 

Quellbild anzeigen

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Paanch said:

குழம்பையும் ஆணம் என்றும் சொல்வதுண்டு. மற்றும்படி சொதியை ஆணம் என்றும், ஆணத்தைச் சொதி என்றும் சொல்வது அவரவர் நாட்டு வழக்கம். 

 

Quellbild anzeigen

நோ ....ஓ .....ஓ ....பாஞ்ச் . ஆணம் என்பது தனித்துவமானது.....சும்மா சொதியையும் குழம்பையும் ஆணத்துடன் சேர்த்து ஆணத்தின் மானத்தை வாங்கக் கூடாது.......!

இது ஆணம் ......அப்படியே இதை பார்த்து மொக்கங் கடையை நினைத்துக் கொண்டு மூக்கால் உறிஞ்சினால் சுவை சிரசில் அடிக்கும்........!   😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கில் எனக்கு தெரிந்து யாரும் சுட்டு பனம்பழம் சாப்பிடுவது இல்லை  ,இன்னொன்றும் சொல்ல வேண்டும் பிட்டுடன் பலாப்பழம் சேர்த்து சாப்பிடுவதும் இல்லை யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்கள் சாப்பிடலாம் நாங்கள் சொதி, சம்பல் , இறைச்சிக்கறிதான் 

 

9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆணம் என்று சொல்வது அதிகம் முஸ்லீம்கள் அதிலும் தேங்காய்ப்பூ சொதியை பால் ஆணம் என்றே சொல்வார்கள் 

 

7 hours ago, ஏராளன் said:

யாழில் ஆணம் என்றால் குழம்பை தானே சொல்வார்கள்?!

 

1 hour ago, குமாரசாமி said:

நீங்கள் வீட்டிலை என்ன மாதிரி?
சொதியா ஆணமா? 😎

 

25 minutes ago, Paanch said:

குழம்பையும் ஆணம் என்றும் சொல்வதுண்டு. மற்றும்படி சொதியை ஆணம் என்றும், ஆணத்தைச் சொதி என்றும் சொல்வது அவரவர் நாட்டு வழக்கம். 

 

Quellbild anzeigen

 

24 minutes ago, suvy said:

நோ ....ஓ .....ஓ ....பாஞ்ச் . ஆணம் என்பது தனித்துவமானது.....சும்மா சொதியையும் குழம்பையும் ஆணத்துடன் சேர்த்து ஆணத்தின் மானத்தை வாங்கக் கூடாது.......!

இது ஆணம் ......அப்படியே இதை பார்த்து மொக்கங் கடையை நினைத்துக் கொண்டு மூக்கால் உறிஞ்சினால் சுவை சிரசில் அடிக்கும்........!   😇

என்னப்பா.... யாழ். களத்தில், சொதிக்கும், ஆணத்துக்கும்...  
வித்தியாசம் தெரியாதவர்கள், இத்தனை பேர் இருக்கிறார்களா?  

சொதி... என்பது, சைவ சாப்பாடு. விதி விலக்காக...  
சிலர், மீன் தலையை... போட்டு, சொதி வைப்பவர்களும் உள்ளார்கள்.

ஆணம்  என்பது, இஸ்லாமியர்களின்  சாப்பாடு.
அதற்குள்.. மாட்டு  எலும்பை.. அடித்து, நொருக்கி... 
அதற்கு உள்ளிருந்து எடுத்த, மச்சையை  கலந்து, சொதி  "ஸ்ரைலில்" செய்யப் படுவது.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணத்துக்கு ஒரு ஆபத்து என்றதும் கிளர்ந்தெழுந்த சிறி, சுவி அண்ணாக்களுக்கு நன்றி 🤣.

ஆனால் சொதி சைவ சாப்பாடு என்று சொல்லி ஒரு பெரும் குண்டை தூக்கி போடுவதை ஏற்க முடியாது.

இறால் சொதிக்கு வாழ்க்கை பட்ட கனபேர் உள்ளனர்🤣.

27 minutes ago, தமிழ் சிறி said:

 

 

 

 

 

என்னப்பா.... யாழ். களத்தில், சொதிக்கும், ஆணத்துக்கும்...  
வித்தியாசம் தெரியாதவர்கள், இத்தனை பேர் இருக்கிறார்களா?  

சொதி... என்பது, சைவ சாப்பாடு. விதி விலக்காக...  
சிலர், மீன் தலையை... போட்டு, சொதி வைப்பவர்களும் உள்ளார்கள்.

ஆணம்  என்பது, இஸ்லாமியர்களின்  சாப்பாடு.
அதற்குள்.. மாட்டு  எலும்பை.. அடித்து, நொருக்கி... 
அதற்கு உள்ளிருந்து எடுத்த, மச்சையை  கலந்து, சொதி  "ஸ்ரைலில்" செய்யப் படுவது.  :grin:

 

53 minutes ago, suvy said:

நோ ....ஓ .....ஓ ....பாஞ்ச் . ஆணம் என்பது தனித்துவமானது.....சும்மா சொதியையும் குழம்பையும் ஆணத்துடன் சேர்த்து ஆணத்தின் மானத்தை வாங்கக் கூடாது.......!

இது ஆணம் ......அப்படியே இதை பார்த்து மொக்கங் கடையை நினைத்துக் கொண்டு மூக்கால் உறிஞ்சினால் சுவை சிரசில் அடிக்கும்........!   😇

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, goshan_che said:

ஆணத்துக்கு ஒரு ஆபத்து என்றதும் கிளர்ந்தெழுந்த சிறி, சுவி அண்ணாக்களுக்கு நன்றி 🤣.

ஆனால் சொதி சைவ சாப்பாடு என்று சொல்லி ஒரு பெரும் குண்டை தூக்கி போடுவதை ஏற்க முடியாது.

இறால் சொதிக்கு வாழ்க்கை பட்ட கனபேர் உள்ளனர்🤣.

கோசான்...  ஆணத்துக்கு, விளக்கம் சொல்ல... சுவியரும், நானும் மட்டுமல்ல,
அவுஸ்திலரேயாவில் இருந்து.. புங்கையூரானும், 
அமெரிக்காவில் இருந்து.. ஈழப் பிரியனும்,
கனடாவில் இருந்து... நிழலியும்  கிளம்பி... வந்து கொண்டிருக்கிறார்கள். :grin:

ஓமப்பா...  இறால் சொதியை, சொல்ல மறந்து விட்டேன்.
அதற்குள்... கொஞ்சம் தூக்கலாக... மிளகு தூளும், தேசிக்காய் புளியும்  விட்டால்,
ஓஓஓஓஓ... சொல்ல முடியாத, ருசியாய் இருக்கும். 😋

############  ############  #############

அட பகவானே! இது என்ன சோதனை!! | Memes on various issues - Tamil Oneindia

பகவானே.... இது, என்ன சோதனை?
வெள்ளிக்கிழமை நாளில், அதுகும்  நல்லூர் திருவிழா நடக்கிற நேரம்...
என்னை... இப்பிடி எல்லாம், எழுத வைச்சு...  
ஏன்... உன்,
திருவிளையாடலை காட்டுகின்றாய். 😢

"கந்தன் கருணையே,,, கருணை"  
ஞானப் பழத்தைப் பிழிந்து... 
முருகா... பழம் நீயப்பா...  ஞானப்  பழம் நீயப்பா... 
தமிழ் ஞான பழம் நீ அப்பா...  🙏 :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, goshan_che said:

ஆணத்துக்கு ஒரு ஆபத்து என்றதும் கிளர்ந்தெழுந்த சிறி, சுவி அண்ணாக்களுக்கு நன்றி 🤣.

ஆனால் சொதி சைவ சாப்பாடு என்று சொல்லி ஒரு பெரும் குண்டை தூக்கி போடுவதை ஏற்க முடியாது.

இறால் சொதிக்கு வாழ்க்கை பட்ட கனபேர் உள்ளனர்🤣.

 

 

மச்சசொதிக்கு றால் மட்டுமல்ல மீன் தலை, கணவாய் கூந்தல் மற்றும் சின்ன மீன்கள் திரளி, நகர,கார, தேற, சூடை போன்றவை சொதிக்காகவே  படைக்கப் பட்டவை அதிலும் கணவாய் மையுடன் சேர்த்து சொதி வைத்தால் கறுப்பாகத்தான் இருக்கும் ஆனால் சுவை அள்ளும் கோஷான்.......!  😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பழம் வேண்டுமா என்ன? பிரான்ஸ் பழம் 

 

12 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அண்ணை எனது பக்கத்து வளவில் இருக்கும் மரம் இது பனங்காட்டுக்கு போவது கிடையாது

ம்.... ம் .....  பத்துப்பிள்ளை பெத்தவவுக்கு, ஒரு பிள்ளை பெத்தவ முக்கிக் காட்டினாவாம், ஊரில உள்ள பழமொழி. கொரோனாவும் அதுவுமா  அனுப்ப வேண்டும் என்று அடம் பிடிக்கிற உங்களை  நான்  ஏன் தடுக்க போகிறேன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

மச்சசொதிக்கு றால் மட்டுமல்ல மீன் தலை, கணவாய் கூந்தல் மற்றும் சின்ன மீன்கள் திரளி, நகர,கார, தேற, சூடை போன்றவை சொதிக்காகவே  படைக்கப் பட்டவை அதிலும் கணவாய் மையுடன் சேர்த்து சொதி வைத்தால் கறுப்பாகத்தான் இருக்கும் ஆனால் சுவை அள்ளும் கோஷான்.......!  😂 

😋 வாசிக்கவே வாயூறூதே🤣.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.