Jump to content

கொரோனாவுக்கு 109 நாள் சிகிச்சை - நிமிடத்துக்கு 10 லிட்டர் ஆக்சிஜன்; 62 நாள் எக்மோ - மீண்டும் பிறந்த திருச்சி முத்திஜா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவுக்கு 109 நாள் சிகிச்சை - நிமிடத்துக்கு 10 லிட்டர் ஆக்சிஜன்; 62 நாள் எக்மோ - மீண்டும் பிறந்த திருச்சி முத்திஜா

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
109 நாள் கொரோனா; 62 நாள் எக்மோ - மீண்டும் பிறந்த திருச்சி முத்திஜா

பட மூலாதாரம்,MAKSIM LABKOUSKI / GETTY IMAGES

கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் தொடர்ந்து 62 நாள்கள் எக்மோ சிகிச்சையில் இருந்து மீண்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

"நோயாளிக்கு ஆக்சிஜன் கொடுத்தும் பலன் கிடைக்காததால் எக்மோ சிகிச்சையளித்தோம். அவ்வாறு செய்தால் ஒரு மாதத்துக்குள் நுரையீரல் சரியாவதற்கு வாய்ப்புகள் உள்ளன," என்கிறார் இந்த சிகிச்சை நடந்த ரேலா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் முகமது ரேலா. என்ன நடந்தது?

நிமிடத்துக்கு 10 லிட்டர் ஆக்சிஜன்

திருச்சியை சேர்ந்த தொழிலபதிபரான 56 வயது எம்.முகமது முத்திஜா என்பவர், கடந்த ஏப்ரல் மாத இறுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவரது உடலில் ஆக்சிஜன் அளவு 92 சதவிகிதம் என்ற அளவுக்கே இருந்துள்ளது. அவரது நுரையீரலும் கடுமையாக பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் முத்திஜா அனுமதிக்கப்பட்டார். அந்த நேரத்தில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 10 லிட்டர் ஆக்சிஜன் அவருக்கு தேவைப்பட்டுள்ளது. முத்திஜாவின் நுரையீரல் கடுமையாக பாதிப்படைந்ததை அடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு எக்மோ கருவியைப் பயன்படுத்தத் தொடங்கியது.

ECMO treatment patient

பட மூலாதாரம்,GRAPHIC_BKK1979 / GETTY IMAGES

 
படக்குறிப்பு,

எக்ஸ்ட்ராகார்போரியல் மெம்ரேன் ஆக்சிஜனேஷன் (Extracorporeal membrane oxygenation - ECMO) என்பதன் சுருக்கமே எக்மோ.

மனித உடலில் ஆக்சிஜனை பிரித்து ரத்தத்தில் ஏற்றும் நுரையீரலின் பணியில் தடங்கல் ஏற்பட்டால் நோயாளிக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு அதிகரித்து நுரையீரல், இதயம் போன்றவை செயலிழக்கத் தொடங்கும். இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. அந்தநேரத்தில் நுரையீரல் மற்றும் இதயத்தின் செயல்பாடுகளை அதிகரிக்க எக்மோ கருவி பொருத்தப்படுகிறது. `அதுவும் 30 நாள்கள் வரையில் மட்டுமே இது சாத்தியப்படும்' எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

62 நாள்களாக எக்மோ

முத்திஜாவுக்கு கடுமையான மூச்சுத் திணறல் இருந்ததால் வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சையில் தொடர்ந்து 62 நாள்கள் வைக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் 109 நாள்களுக்குப் பிறகு குணமடைந்துள்ளார்.

பொதுவாக, ஒருவர் எக்மோ சிகிச்சைக்குள் சென்றுவிட்டால் மீள்வது கடினம் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், நோயாளி ஒருவர் 62 நாள்களுக்குப் பிறகு மீண்டிருப்பதை அரிய சாதனையாக இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கொண்டாடுகின்றனர்.

``கொரோனா முதல் அலையின்போது நோயாளிகளை எக்மோ சிகிச்சைக்குள் கொண்டு செல்லவில்லை. இரண்டாம் அலையின்போது எக்மோ சிகிச்சையளிக்கப்பட்டது. அதிலும், கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் இருந்தார்கள். அவர்களுக்கு வெண்டிலேட்டரின் உதவியோடு 100 சதவிகித ஆக்சிஜன் கொடுத்தும் அவர்களது உடலில் ஆக்சிஜன் சேரவில்லையென்றால் எதுவும் செய்ய முடியாது."

மருத்துவக் குழுவினருடன் முத்திஜா
 
படக்குறிப்பு,

மருத்துவக் குழுவினருடன் முத்திஜா

"மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் முத்திஜாவுக்கு தீவிர நுரையீரல் பாதிப்பு இருந்தது. அவருக்கு ஆக்சிஜன் கொடுத்தும் பலன் கிடைக்காததால் எக்மோவில் போட்டோம். அப்படிச் செய்தால் ஒரு மாதத்துக்குள் நுரையீரல் சரியாவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஒரு மாதத்துக்கு மேல் சரியாகவில்லையென்றால், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்" என்கிறார் மருத்துவர் முகமது ரேலா.

அமெரிக்க நோயாளியின் 147 நாள் சாதனை

தொடர்ந்து பேசியவர், `` முத்திஜாவுக்கு முதலில் வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சையளித்தோம். அதில் குணமாகாததால் எக்மோ சிகிச்சை வழங்கப்பட்டது. அப்போதும் குணமாகாததால் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தோம். ஆனால், நுரையீரலுக்காக காத்திருந்த நேரத்தில் எக்மோவிலேயே அவர் இரண்டு மாதங்கள் இருக்க நேரிட்டது."

"இவ்வாறு இரண்டு மாதங்கள் (62 நாள்கள்) ஒருவர் உயிர் பிழைத்து இருப்பது என்பது மிகவும் அரிதானது. பின்னர், அவருக்கு படிப்படியாக எக்மோ சிகிச்சையை குறைத்தோம். தொடர்ந்து, எக்மோ சிகிச்சையே தேவையில்லை என்ற நிலை உருவானது. வெண்டிலேட்டர் கருவியின் உதவியும் தேவைப்படவில்லை."

"இதே வரிசையில், அமெரிக்காவில் நோயாளி ஒருவர் 147 நாள்கள் இருந்ததாக அறிக்கை ஒன்று பதிவாகியுள்ளது. நம் நாட்டில் இதுதான் முதல் வழக்காக பதிவாகியுள்ளது. மற்றவர்கள் யாரும் அறிக்கை கொடுத்துள்ளார்களா எனத் தெரியவில்லை. 2 மாதங்கள் எக்மோவில் இருந்த முத்திஜாவுக்கு, பிற்காலத்திலும் நுரையீரல் மாற்று தேவையில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. இது மிகவும் அரிதானது" என்கிறார் ரேலா.

கொரோனா;

மேலும், `` நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடக்கும்வரையில் தற்காலிக ஏற்பாடாக எக்மோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், எக்மோ சிகிச்சை என்பது உண்மையிலேயே உயிர்காக்கும் சிகிச்சை முறையாக மாறியுள்ளது. இதன் மூலம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் உயிர்வாழ முடியும். அவர்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கும் இது வாய்ப்பாக அமையும்" என்கிறார்.

"மறு பிறப்பாக உணர்கிறேன்"

``எக்மோ சிகிச்சையில் 54 நாள்கள் கழிந்தவுடன் முத்திஜாவின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் தென்பட்டது. இதையடுத்து, அவருக்கு வழங்கப்பட்டு வந்த எக்மோ சிகிச்சையை குறைத்தோம். 62 நாள்களுக்குப் பிறகு அவர் முழுமையாக குணமடைந்துவிட்டார். எங்கள் கண்முன்னால் இந்த அதிசயத்தைப் பார்த்தோம். ஜூலை 29 அன்று வெண்டிலேட்டர் சிகிச்சையை அகற்றினோம். இதன்பிறகு உட்கார்வது, நடப்பது, இயல்பான உணவுகளை எடுத்துக் கொள்வது என முத்திஜா தேறிவிட்டார். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில்லாமல் குணமடைந்த ஒரே நபர் இவர் மட்டும்தான்" என்கிறார் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான சி.ஆறுமுகம்.

"பலநேரங்களில் நான் சுயநினைவில்லாமல் இருந்தேன். அடிப்படையில் நான் ஒரு விளையாட்டு வீரனாக இருந்ததால் மனதை வலிமையாக வைத்துக் கொள்ள அது உதவியது. நோயில் இருந்து மீண்டு வருவதற்கு கடவுளின் துணையோடு அனைத்து முயற்சிகளையும் செய்தேன். இதனை மறு பிறப்பாக நான் உணர்கிறேன். என்னை குணப்படுத்திய மருத்துவக் குழுவுக்கு நன்றி" என்கிறார் முத்திஜா.

https://www.bbc.com/tamil/india-58279709

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.