Jump to content

டெல்ரா வைரஸ்: தொற்றுத்தடுப்பிற்கு உதவும் புதிய தகவல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டெல்ரா வைரஸ்: தொற்றுத்தடுப்பிற்கு உதவும் புதிய தகவல்கள்.

(முக்கியத்துவம் கருதி இந்தப் பதிவை நான் ஆரம்பித்த டெல்ரா தொடரில் இருந்து தனியாக இணைக்கிறேன். அவசியமெனின் அந்தத் தொடரோடு நிர்வாகம் இணைத்து விடலாம்!) 

உலகின் பிரதானமான கோவிட் 19 தோற்றுவிக்கும் வைரசாக டெல்ரா  வகை வைரஸ் உருவாகியிருக்கிறது. மேற்கு நாடுகள் சிலவற்றில், முகக் கவசம் அணியும் அவசியம், மூடிய இடங்களில் ஒன்று கூடும் ஆட்களின் எண்ணிக்கை மீதான கட்டுப் பாடு என்பவற்றை மீள அமல் படுத்தும் தேவை ஆகியவை டெல்ரா வைரஸ் பரவலால் ஏற்பட்டிருக்கின்றன. இது வரையில் டெல்ரா வைரஸ் வேகமாகப் பரவும் சக்தி கொண்டது எனப் பொதுவாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தாலும், அப்பரவலின் உயிரியல் ரீதியான பின்னணி சரியாக இனங்காணப் பட்டிருக்கவில்லை. தற்போது சீனாவில் இருந்து வெளி வந்திருக்கும் ஆய்வுத் தகவல்களை (கீழுள்ள இணைப்பின் தழுவலாக) ப் பகிர்கிறேன்.

நோயறிகுறி தோன்ற முன்னரே பரவும் டெல்ரா

: அனேகமான நுண்ணுயிர்க் கிருமிகளாலேற்படும் தொற்று நோய்கள், தொற்றிய உடனேயே உருவாவதில்லை. உடலில் தொற்றிய நோய்க்கிருமி பெருகி, உடலில் உரிய தாக்கங்களை உருவாக்கிய பின்னரே நோயறிகுறிகள் வெளிப்படும் (இந்த நிலையை, உள்ளே இயந்திரம் சிறிது பழுதடைந்த பின்னர் வாகனங்களில் "check engine" எச்சரிக்கை விளக்கு எரியும் நிலையோடு ஒப்பிடலாம்). இந்த தொற்று ஏற்பட்ட நாளில் இருந்து நோயின் அறிகுறி வெளிப்படும் நாள் வரைக்கும் இடையேயான காலத்தை நோயரும்பு காலம் என்றுஅழைக்கலாம். சாதாரண கோவிட் 19 வைரஸ் (சீனாவில் முதன் முதலில் தொற்றை ஏற்படுத்திய வைரஸ்), 6.3 நாட்கள் நீண்ட நோயரும்புக் காலத்தைக் கொண்டிருந்ததாகக் கணிப்புகள் கூறுகின்றன. டெல்ரா வைரஸ் தொற்று ஏற்பட்டோரில், சிறிது விரைவாக 5.8 நாட்களில் நோய் உருவாகியதாக தற்போதைய ஆய்வு கணித்திருக்கிறது.

இந்த அரை நாள் விரைவான  நோயரும்பு காலம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததல்ல. முக்கியமான தகவல் என்னவெனில், இந்த நோயரும்பு காலத்தின் இறுதிப் பகுதியில் டெல்ரா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் வைரசை ஏனையோருக்குப் பரப்ப ஆரம்பித்து விடுகின்றனர். தொற்று உருவான நாளில் இருந்து சராசரியாக 4 நாட்களில் பி.சி.ஆர் மூலமாக நோயாளிகளின் மூக்கிலும், தொண்டையிலும் டெல்ரா வைரசுகளை அடையாளம் காணக்கூடியதாக இருந்திருக்கிறது: அதாவது, நோய்க் குணங்குறிகள் வெளிவருவதற்கு கிட்டத் தட்ட 2 நாட்கள் முன்பாகவே டெல்ரா தொற்றுக்குள்ளானோர் வைரசுகளைக் காற்றின் வழியே பரப்ப ஆரம்பித்து விடுகின்றனர் என்பதே முக்கியமான தகவல்!

இது எப்படி பழைய கோவிட் 19 வைரசுகளில் இருந்து வேறு படுகிறது? பழைய கோவிட் 19 வைரசுகளைப் பொறுத்த வரையில், தொற்றைத் தொடர்ந்து சராசரியாக 5.5 நாட்களின் பின்னரே பி.சி.ஆர் மூலம் தொண்டையில்/மூக்கில் வைரசுகளைக் கண்டறியக் கூடியதாக இருந்திருக்கிறது - அதாவது நோய் அறிகுறிகள் வெளிவருவதற்கு 1 நாள் முன்னதாக ஒருவர் வைரசுகளைப் பரப்பும் இயலுமையைக் கொண்டிருக்கிறார்.

சாராம்சமாக, : டெல்ரா வைரஸ் தொற்றினால், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உருவாவதற்கு கிட்டத் தட்ட 2 நாட்கள் முன்னதாகவே தொற்று ஏனையோருக்குப் பரவும் வாய்ப்புகள் இருக்கின்றன! இதன் பாதகமான விளைவு, அந்த 2 நாட்களில் தொற்று இருப்பது தெரியாத ஒருவர் சாதாரணமாக நடமாடினால் பலருக்கும் டெல்ரா வைரசைப் பரப்பி விடக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்தத் தகவலை எங்கள் சுயபாதுகாப்பிற்காக எப்படிப் பயன்படுத்தலாம்? அடிக்கடி பி.சி.ஆர்  பரிசோதனைகள் செய்து கொள்ளாத ஒருவர், சாதாரணமாக நாளாந்த சமூக வாழ்வில் ஈடுபடுபவராக இருந்தால், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணல் ஆகிய முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். சிறப்பாக இளைஞர்கள், வயதானோர், உடல் பலவீனமான நோயாளிகளோடு நெருக்கமாக உறவாடுவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது கூடிய எச்சரிக்கைகளைக் கடைப் பிடிக்க வேண்டும். முழுவதுமாக கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டோர், ஏனையோருக்கு டெல்ரா வைரசைப் பரப்புவதும் குறிப்பிடத் தக்க அளவு குறைவாகவே இருப்பதாகவும் ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. எனவே, சாதாரணமாக சமூக வாழ்வில் ஈடுபட்டிருப்போர், தடுப்பூசி எடுத்துக் கொள்வதாலும் டெல்ரா பரவலைப் பெருமளவில் குறைத்துக் கொள்ள முடியும்!

இங்கே மேற்கோள் காட்டப்படும் ஆய்விலும், இன்னுமோர் ஆய்விலும் வெளிவந்த தகவல்களின் படி, டெல்ரா வைரசுகள் தொற்றின் போது உருவாகும் வைரசுகளின் எண்ணிக்கையும் முன்னைய கோவிட் 19 வைரசுகளை விட அதிகமாக இருக்கின்றன. இதன் அர்த்தம், ஒருவர் இன்னொருவருக்கு தொற்றைக் கடத்தும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என்பதாகும். R0 என அழைக்கப் படும் வைரஸ் பரவுகை வீதம் டெல்ரா வைரசைப் பொறுத்த வரையில் 6.4 என ஒரு ஆய்வு கணித்திருக்கிறது: இதன் அர்த்தம் டெல்ரா தொற்றுக்குள்ளான ஒருவர், முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளி பேணாமல் நடமாடும் போது சராசரியாக ஆறிற்கு மேற்பட்ட நபர்களுக்கு வைரசைக் கடத்தும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதாகும்! (முன்னைய கோவிட் 19 வைரசுகளில் இந்தப் பரவல் வீதம் 2 - 4 பேர்களாகக் கணிக்கப் பட்டிருக்கிறது).  

கடந்த சில நாட்களாக இலங்கையில் ஒன்றுகூடும் இடங்கள், வழிபாட்டுத் தலங்கள் கோவிட் கட்டுப் பாட்டினால் பூட்டப் படும் நிலைமைகளைக் கையாளவும் விளங்கிக் கொள்ளவும் இத்தகைய  ஆய்வுத் தகவல்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது என் அபிப்பிராயம்.

டெல்ராவைப் பொறுத்த வரை, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் எவையும் தோன்ற முன்னரே தொற்றுப் பரவுகிறது, ஒருவரில் இருந்து குறைந்தது 6 பேருக்குப் பரவுகிறது. இந்த இலக்கங்களே முடிவுகளை எடுக்க அடிப்படையாக இருக்க வேண்டும்! வேறெந்த உணர்ச்சிபூர்வமான  கருத்துகளும் சுயபாதுகாப்பிற்கு உதவப் போவதில்லை!

 

மேற்கோள்: https://doi.org/10.1038/d41586-021-02259-2

(101 பேரில் நடத்தப் பட்ட சிறியளவிலான ஆய்வு)

சொற்களும் அர்த்தங்களும்:

நோயரும்பு காலம் – incubation period

பி.சி. ஆர் -PCR – polymerase chain reaction

நோயறிகுறிகள் – symptoms

பரவும் வீதம் – R0 – reproduction number  

- ஜஸ்ரின்    

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.