Jump to content

வெளி நாட்டு, வாழ் இலங்கையர்களிடம்... உதவி கோரிய, இராஜாங்க அமைச்சர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களிடம் உதவி கோரிய இராஜாங்க அமைச்சர்

வெளி நாட்டு, வாழ் இலங்கையர்களிடம்... உதவி கோரிய, இராஜாங்க அமைச்சர்

இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு உதவிகளை வழங்குமாறு வெளிநாட்டு வாழ் இலங்கையார்களிடம், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே வேண்டுகோள் விடுத்தார்.

அவுஸ்ரேலியாவின் மெல்பர்னிலுள்ள சிங்கள வானொலி ஒன்றுடனான உரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதாவது, நாட்டின் வைத்தியசாலைகளில் வைத்திய உபகரணங்கள் பற்றாக்குறை நிலவுவதால் அவற்றை வழங்குமாறு  அவர் கோரியுள்ளார்.

மேலும், ஒட்சிசன் தட்டுப்பாடும் நிலவுகிறது. இவற்றை பெற்றுக்கொடுக்குமாறும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களிடம் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கேட்டுள்ளார்.

இதேவேளை, மூன்று இலட்சத்து அறுபது ஆயிரம் லீற்றர் ஒட்சிசனை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2021/1235336

Link to comment
Share on other sites

  • Replies 116
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழரின் முதலீடுகளுக்கு முட்டுக்கடை, உதவிகளுக்கு தடை. என்று கடை விரித்தவர்கள் கைநீட்டும் காலம். ஆமா.....  வெளிநாட்டு வாழ் இலங்கையர் 
 என்று இவர் பொத்தாம் பொதுவாய்  யாரை குறிப்பிடுகிறார்? இல்லை, தமிழர் வந்தேறு குடிகள் என்று அடிக்கடி கூறுவதால் எனக்கொரு சந்தேகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவவும் ஒரு தமிழிச்சி, நம்புவீர்களா? சிங்களவர்களுக்கு காவடி தூக்கும் தமிழிச்சி. முன்னாள் அமைச்சரும், சிங்கள விசுவாசியுமான ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே எனும் பெர்ணாந்துப்பிள்ளையின் மகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ரஞ்சித் said:

இவவும் ஒரு தமிழிச்சி, நம்புவீர்களா? சிங்களவர்களுக்கு காவடி தூக்கும் தமிழிச்சி. முன்னாள் அமைச்சரும், சிங்கள விசுவாசியுமான ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே எனும் பெர்ணாந்துப்பிள்ளையின் மகள்.

எவ்வளவு தூரத்திற்கு... தமிழர்களை, 
இனம் மாற்றி, மூளைச்  சலவை செய்து,
சிங்களவர்களாக மாற்றிய கொடுமை..
கண் முன்னே... நடந்து இருக்கின்றது.

இதனை... உணராத, நாம்.. அடுத்த  50 ஆண்டுகளில்,
வேரோடும், வேரடி மண்ணோடும்... அழிக்கப் பட்டு விடுவோம்... 😢

சுத்த, சூனியங்களான..அரசியல் அறிவற்ற... பிணங்களை, 
பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தால்,  இதுதான் நடக்கும். 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

சுத்த, சூனியங்களான..அரசியல் அறிவற்ற... பிணங்களை, 
பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தால்,  இதுதான் நடக்கும்.

இவவை நாம் அனுப்பவில்லை சிறி, சிங்களவர்கள் தேர்ந்தெடுத்து அனுப்பியவர். எஜமான விசுவாசத்திற்காக. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கத்துல மம்மி டாடி என்டுதானே எடுக்க சொல்லினம். இதென்ன புதுசா இருக்கு.☺️..😊

IMG-20210821-073733.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரஞ்சித் said:

இவவை நாம் அனுப்பவில்லை சிறி, சிங்களவர்கள் தேர்ந்தெடுத்து அனுப்பியவர். எஜமான விசுவாசத்திற்காக. 

ரஞ்சித்... நான்,  "சுத்த, சூனியங்கள்" என்று...
சம்பந்தனையும், சுமந்திரனையும் தான்... குறிப்பிட்டேன்.
அதனை... சொல்லியதில், கருத்துப்  பொருள் மாறி விட்டதை உணர்கின்றேன்.

ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே.... 
சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே....
போன்று.... இன்னும் எத்தனை, எத்தனை  லட்சம்  தமிழர்கள்..
சிங்களவராக  மாறியிருப்பார்கள் என, நினைக்க.. பயங்கர கவலையாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

இதனை... உணராத, நாம்.. அடுத்த  50 ஆண்டுகளில்,
வேரோடும், வேரடி மண்ணோடும்... அழிக்கப் பட்டு விடுவோம்..

ஐம்பது ஆண்டுகள் அதிகம் சிறியர்! போகிற போக்கில்  காலத்தோடு அழிந்துபோன தாவரங்கள், விலங்குகள், பறவைகள் போல நம் இனமும் மறைந்து விடுமோ என்றுதான் கவலையாய் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

ஐம்பது ஆண்டுகள் அதிகம் சிறியர்! போகிற போக்கில்  காலத்தோடு அழிந்துபோன தாவரங்கள், விலங்குகள், பறவைகள் போல நம் இனமும் மறைந்து விடுமோ என்றுதான் கவலையாய் இருக்கு.

சாத்தான்...  "தக்கன பிழைக்கும்"
உலகத்தில்...  போராடிய, உயிரினம் பிழைக்கும். என்பார்கள்.

நாம்தான்... காக்கை  வன்னியிலிருந்து... கருணா, டக்ளஸ், சம்பந்தன்..
வரை, பல விளக்குமாறுகாளை  பார்த்து விட்டோம்.

போனால் போகுது...  இலங்கையில் உள்ள தமிழன் செத்து அழிந்தாலும்,
தமிழ் நாட்டு தமிழன்.... உயிர்ப்பிடன் இருப்பான் என்று பார்த்தால்...
அதுகள்... சினிமா பைதித்தியங்களாகி, 
தெருத்தெருவாக... விசில் அடிச்சுக்  கொண்டு திரியுதுகள்.      

தமிழனாக... பிறந்தற்காக பெருமைப் பட்ட  காலம், ஒன்று இருந்தது.
இப்போ.. அப்படியான உணர்வு,  கேள்விக் குறியாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

"தக்கன பிழைக்கும்"

இதுக்கு ஏற்கெனவே  இங்கு ஒருவர் விளக்கம் தந்துள்ளார். அந்த விளக்கத்தால்  மிகவும் வெறுப்படைந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, satan said:

இதுக்கு ஏற்கெனவே  இங்கு ஒருவர் விளக்கம் தந்துள்ளார். அந்த விளக்கத்தால்  மிகவும் வெறுப்படைந்தேன்.

யார்... ஏன்? 
அந்தப் பதிவை... உண்மையில்... நான் பார்க்கவில்லை.
எனது.. மன ஒட்டத்தில், வரும் சிந்தனைகளை மட்டுமே...
என்னால்,  பதிய முடியும்.  இது.. சத்தியமான உண்மை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பழைய பதிலை தேடி எடுக்க என்னால்  முடிவதில்லை. ஆனால் அதன் தாக்கம் அவர் வைக்கும் பல கருத்துக்களில் கண்டிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

இவவும் ஒரு தமிழிச்சி, நம்புவீர்களா?

இவர்கள் ஆதி நீர்கொழும்பைச்  சேர்ந்த தமிழ் கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர்கள் என கேள்விப்பட்டேன். முன்பு தமிழரும் சிங்களவரும்  கிறிஸ்தவராய் இருப்பதால் பெயரில் அடையாளம் காண்பதற்காக தமிழர் தங்கள் கிறிஸ்தவ  பெயரோடு பிள்ளை என்பதையும் சேர்த்துக்கொண்டிருப்பார்கள் என நினைக்கிறன். பதவிக்காக இனத்தை துறந்தவர்கள் பிள்ளையை "புள்ளே" என்றும் மாற்றிக்கொண்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

ஐம்பது ஆண்டுகள் அதிகம் சிறியர்! போகிற போக்கில்  காலத்தோடு அழிந்துபோன தாவரங்கள், விலங்குகள், பறவைகள் போல நம் இனமும் மறைந்து விடுமோ என்றுதான் கவலையாய் இருக்கு.

நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை வடகிழக்கில் தமிழர்கள் வாழ்வார்கள் தமிழினம் வாழும் ஒர் ஓரத்திலாவது 👌 

இத்தனை ஆண்டுகள் போர் நடந்தும் தமிழினம் வாழும் போது இனிவரும் காலமும் வாழும் நீங்கள் உங்கள் நீங்கள் வாழும் நாட்டில் நலமாக வாழுங்கள் அவர் உதவி கேட்டது இலங்கையிலிருந்து வெளியேறிய சிங்களவர்களிடம் இருக்கலாம் குழப்பி கொள்ளாதீர்கள் சாரன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை வடகிழக்கில் தமிழர்கள் வாழ்வார்கள் தமிழினம் வாழும் ஒர் ஓரத்திலாவது 👌 

இத்தனை ஆண்டுகள் போர் நடந்தும் தமிழினம் வாழும் போது இனிவரும் காலமும் வாழும் நீங்கள் உங்கள் நீங்கள் வாழும் நாட்டில் நலமாக வாழுங்கள் அவர் உதவி கேட்டது இலங்கையிலிருந்து வெளியேறிய சிங்களவர்களிடம் இருக்கலாம் குழப்பி கொள்ளாதீர்கள் சாரன் 

நீங்கள் சொன்னால் அது சரியாத்தான் இருக்கும் ராசா. இனி நான் நிம்மதியாய் தூங்குவேன். தமிழர் நிலத்தில் புதையல் இருப்பதாக சிங்களவர் நினைத்து அங்கங்கு தோண்டுகிறார்கள். நீங்கள் கேள்விப்பட்டீர்களோ என்னவோ? தமிழரை அழித்துவிட்டால் அது தங்களுக்கு சொந்தமாகிவிடும் என்று நினைக்கிறார்களோ? அதன்பின் தெரியும் புதையலுமில்லை, ஒன்றுமில்லை, தமிழனின் கடின உழைப்பும், சிக்கனமுந்தான் அவர்களின் வாழ்க்கையின் இரகசியம் என்பது. பொன்வாத்தை வெட்டின கதையாய் இருக்கும். தமிழன் இருந்தாற்தான் சிங்களம் சுரண்டி வாழ முடியும்.                                     .

Link to comment
Share on other sites

7 hours ago, ரஞ்சித் said:

இவவும் ஒரு தமிழிச்சி, நம்புவீர்களா? சிங்களவர்களுக்கு காவடி தூக்கும் தமிழிச்சி. முன்னாள் அமைச்சரும், சிங்கள விசுவாசியுமான ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே எனும் பெர்ணாந்துப்பிள்ளையின் மகள்.

இவர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளையின்  மகள் அல்ல மனைவி ஆவார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, satan said:

நீங்கள் சொன்னால் அது சரியாத்தான் இருக்கும் ராசா. இனி நான் நிம்மதியாய் தூங்குவேன். தமிழர் நிலத்தில் புதையல் இருப்பதாக சிங்களவர் நினைத்து அங்கங்கு தோண்டுகிறார்கள். நீங்கள் கேள்விப்பட்டீர்களோ என்னவோ? தமிழரை அழித்துவிட்டால் அது தங்களுக்கு சொந்தமாகிவிடும் என்று நினைக்கிறார்களோ? அதன்பின் தெரியும் புதையலுமில்லை, ஒன்றுமில்லை, தமிழனின் கடின உழைப்பும், சிக்கனமுந்தான் அவர்களின் வாழ்க்கையின் இரகசியம் என்பது. பொன்வாத்தை வெட்டின கதையாய் இருக்கும். தமிழன் இருந்தாற்தான் சிங்களம் சுரண்டி வாழ முடியும்.                                     .

இது உங்கள் சிந்தனையில் இலங்கையில் இப்ப முஸ்லீம்கள் வாழ்ந்தால்தான் இலங்கையும் சுரண்டி வாழும் தமிழர்களை விடவும் வியாபாரம் செய்வது முஸ்லீம்கள் அவர்களாலும் இலங்கை சிங்களவர்கள் வாழுவார்கள் தமிழர்கள் இவர்கள் இருவரையும் வைத்து பிழைத்து வாழ்வார்கள் 

அதாவது பன்னை சேற்றினுள் பிடுங்கி தமிழர்கள் அதை கொண்டு கொடுத்து பாய் வாங்கி வருவார்கள் இதுதான் இப்ப உள்ள நிலை

6 minutes ago, zuma said:

இவர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளையின்  மகள் அல்ல மனைவி ஆவார் 

நான் சொல்லாம் என நினைத்தன் சில நேரம் ஏற்றுக்கொள்வாரோ தெரியாது  சில நேரம் தட்டச்சு பிழைத்து இருக்கலாம் 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தமிழர்களை விடவும் வியாபாரம் செய்வது முஸ்லீம்கள்

முஸ்லீம்களும், சிங்களவரும் தமிழரின் வியாபாரத்தை  முறிச்சு முடிஞ்ச்சுது. தமிழன் முறிச்சு வாழ்ந்திருந்தால் முறிஞ்சிருக்க மாட்டான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

நான் சொல்லாம் என நினைத்தன் சில நேரம் ஏற்றுக்கொள்வாரோ தெரியாது  சில நேரம் தட்டச்சு பிழைத்து இருக்கலாம் 🙂

தட்டச்சு பிழைக்கவில்லை. தவறுதலாகவே எழுதினேன். நீங்கள் தாராளமாகச் சொல்லியிருக்கலாம் தனி. பிழையினைப் பிழை என்று சொல்ல ஏன் தயங்கவேண்டும்.

Link to comment
Share on other sites

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இத்தனை ஆண்டுகள் போர் நடந்தும் தமிழினம் வாழும் போது இனிவரும் காலமும் வாழும்

முற்றிலும் உண்மை.

முந்தி வந்த செவியைப் பிந்திவந்த கொம்பு மறைப்பது இயல்பு. ஆனால் கொம்பு முறியக்கூடியது, முறியும். செவி முறியாது மடித்தாலும் நிமிர்ந்துவிடும். 😌

Link to comment
Share on other sites

அரசாங்கம் கோரியுள்ளதால் வெளிநாட்டில் உள்ள அமைப்புகள் ஒன்றிணைந்து பகிரங்கமாக சில உதவிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்கலாம். இதன்மூலம் இரு துருவங்களாகவுள்ள அரசாங்கமும் புலம்பெயர்ந்த தமிழர்களும் புரிந்துணர்வு ஒன்றுக்கான அடிக்கல்லை நாட்டலாம். அரசாங்கத்தை எதிர்த்து நாம் இங்கிருந்து ஒன்றுமே செய்ய முடியாது. 

இது உத்தியோகபூர்வமான எமது தலையீடாகவும் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு கடக்கும்வரை அண்ணன் தம்பி, கடந்தபின் நீ யாரோ நான் யாரோ? எப்பபோதும் உதவி செய்து கையை சுட்டுக்கொள்வதுதானே தமிழனின் விதி. செய்யுங்கோ... செய்யுங்கோ! வீழ்த்தப்பட்ட இனம் நாம், வீழ்ந்தவன் எதிரி என்றாலும் கையை நீட்டுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, இணையவன் said:

அரசாங்கம் கோரியுள்ளதால் வெளிநாட்டில் உள்ள அமைப்புகள் ஒன்றிணைந்து பகிரங்கமாக சில உதவிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்கலாம். இதன்மூலம் இரு துருவங்களாகவுள்ள அரசாங்கமும் புலம்பெயர்ந்த தமிழர்களும் புரிந்துணர்வு ஒன்றுக்கான அடிக்கல்லை நாட்டலாம். அரசாங்கத்தை எதிர்த்து நாம் இங்கிருந்து ஒன்றுமே செய்ய முடியாது. 

இது உத்தியோகபூர்வமான எமது தலையீடாகவும் இருக்கும்.

சிங்களம் விழும்போதெல்லாம் இப்படித்தான் நடிப்பார்கள் பொன்னம்பலம் காலம் தொட்டு அக்கினி கீல  நடவடிக்கையில் தோத்து போகும் சமயங்களில் தமிழரை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் பலம் பெற்றதும் அதே தமிழரை ஏறி மிதிப்பது சிங்களத்தின் இயல்பு .

ஒருவேளை நீங்கள்  சொல்வது போல் சரிவந்தாலும் ஒற்றுமையை தோற்றுவித்தாலும்  பக்கத்தில் இருக்கும்  டெல்லிக்கு நித்திரை வராது இந்திய மத்திய அரசுக்கு முக்கிய வருவாயாக உள்ள மாநிலங்களில் ஒன்று பிரிந்துபோய் விடுமே எனும் பயம் காரணமாக இலங்கையை கொளுத்தியபடியே இருப்பார்கள் .வங்குரோத்து காரணமாக வடகிழக்கை சிங்களவர் விட்டுத்தந்தாலும் கிந்தியர்கள் விடமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் இது தான் உண்மை நிலவரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

அரசாங்கம் கோரியுள்ளதால் வெளிநாட்டில் உள்ள அமைப்புகள் ஒன்றிணைந்து பகிரங்கமாக சில உதவிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்கலாம். இதன்மூலம் இரு துருவங்களாகவுள்ள அரசாங்கமும் புலம்பெயர்ந்த தமிழர்களும் புரிந்துணர்வு ஒன்றுக்கான அடிக்கல்லை நாட்டலாம். அரசாங்கத்தை எதிர்த்து நாம் இங்கிருந்து ஒன்றுமே செய்ய முடியாது. 

இது உத்தியோகபூர்வமான எமது தலையீடாகவும் இருக்கும்.

முதலில் பிள்ளையார் சுழி போடுங்க ராசா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.