Jump to content

வெளி நாட்டு, வாழ் இலங்கையர்களிடம்... உதவி கோரிய, இராஜாங்க அமைச்சர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு எப்படி நிதி சேர்ந்தது என்று புலிகளுக்கு தெரியும் ...கடைசியில் விட்டுட்டு ஓடேக்குள்ள எந்தெந்த  மரத்துக்குள்ள எவ்வளவு புதைச்சது என்று புதைச்ச போராளிகளுக்கு தெரியும் ...எனக்கு பாடம் எடுக்காமல் போய் அவரவர் வேலையை பாருங்கோ ...புதைச்ச காசை எடுத்து தான் அந்த மக்களுக்கு றோட்டாவது போட்டு கொடுக்கிறான்.

வெளிநாட்டு புலி வால்கள் மனசாட்சியே இல்லாமல் அமுக்கின மாதிரி அவர்கள் அமுக்கவில்லை ..வெளிநாட்டில் அமுக்கின காசை எல்லாம் சேர்த்தால் மகிந்தா சகோதரர்களிடம் இருப்பதை விட  மும் மடங்கு வரும் 

20 hours ago, குமாரசாமி said:

 நீங்கள் லக்ஷ்மன் கதிர்காமர் பக்கத்து வீடு போல.....😂

 

14 hours ago, பெருமாள் said:

யாழில் இது வியாதி எந்த ஆதாரமும் இல்லாமல் புலிகள் மேல் கல்லெறிவது வெட்டு விழாமல் அந்த புலிகளுக்கு எதிரான கருத்து யாழில் இருப்பது எழுதியவருக்கு உள்ளுக்குள் சந்தோசம் ஆக்கும் .

உங்கள் இருவருக்கும் விடிஞ்ச பிறகு ,மற்றவர் தட்டி எழுப்பின பிறகு தான் தெளிஞ்சதாக்கும் .😉
 

Link to comment
Share on other sites

  • Replies 116
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

இலங்கையில் இருந்து வங்கிகள் ஊடாக இவ்வளவு பணம் அனுப்பமுடியாது என்று நினைக்கிறேன். உண்டியல் மூலம் அனுப்பி இருக்கலாம்.

இங்கிருந்து கொழும்பில் இருக்கும் ஒருவருக்கு அனுப்பப்பட்டு அதன்பிறகே சென்று இருக்கிறது. ஒரு வேளை அவர் அப்படி அனுப்பி இருக்கலாம். பண விடயங்கள் சொல்ல மாட்டார்கள் முழுமையாக 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kadancha said:

தெரியாமல் கதைக்க கூடாது.

சுனாமி பணம், மற்ற நாடுகள் மற்றும் உதவி நிறுவனங்கள் அளித்தது,  புலிகளுக்கு போகவில்லை.

சில உதவி நிறுவங்கள், சில பொருட்களாக புலிகளின் இடத்துக்கு கொண்டு சென்று சேர்த்து இருக்கலாம், ஆனால் பணம் அல்ல. 

புலிகளிடம் சென்றது, புலிகள் தாமாக சேர்த்தது, மற்றும் விரும்பிய மக்களின் பங்களிப்பு. அது ஒரு போதும் நிறுவனமயப்பட்ட உதவியை மிஞ்சி இருக்க முடியாது.  

சுனாமி பணம், சிலவேளை, கருணாவிற்கு கொடுக்கப்பட்டு இருக்கலாம்.

தொண்டு நிறுவனங்கள் அந்தந்த நாட்டு அரசாங்கத்தை மீறி செயற்பட முடியாது ....மக்களுக்கு உதவி செய்வதற்கும் மகிந்த அரசுக்கு கணிசமான லஞ்சம் கொடுத்த்தார்கள் .
புலிகளும் அந்த நேரம் வன்னியில் ஆட்சி செய்தனர் ...அவர்களுக்கு ஒரு சதமும் கொடுபடாமல் நேரடியாய் தொண்டு நிறுவனங்கள் செயற்பட்டன என்று சொல்லி உங்களை நீங்களே ஏமாத்திக் கொள்ளுங்கோ.
மகிந்தா சகோதரர்களிடம் எக்கசக்க பணம் இருக்கு ...அரைவாசி உலக நாடுகளிடம் இருந்து அபிவிருத்தி அது,இது என்று ஆட்டையை போட்டது ...மிச்சம் புலிகளிடம் இருந்தும் ,தமிழர்களிடம் இருந்தும் புடுங்கினது.உங்களால ஒன்றும் செய்ய முடியாது...இப்படியே வேடிக்கை பார்த்து புலம்பிக் கொண்டு இருக்க வேண்டியதான்  
 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

தொண்டு நிறுவனங்கள் அந்தந்த நாட்டு அரசாங்கத்தை மீறி செயற்பட முடியாது ....மக்களுக்கு உதவி செய்வதற்கும் மகிந்த அரசுக்கு கணிசமான லஞ்சம் கொடுத்த்தார்கள் .
புலிகளும் அந்த நேரம் வன்னியில் ஆட்சி செய்தனர் ...அவர்களுக்கு ஒரு சதமும் கொடுபடாமல் நேரடியாய் தொண்டு நிறுவனங்கள் செயற்பட்டன என்று சொல்லி உங்களை நீங்களே ஏமாத்திக் கொள்ளுங்கோ.


நீங்கள் சொன்னது பணம். அதுவும்  சுனாமிக்கு சிங்கள அரசுக்கு வந்த பணம், புலிகளுக்கு கொடுத்தது.

நாங்கள் ஒரு போதும் ஏமாறவும் இல்லை, ஏமாற்றவும் இல்லை.

பொருட்கள்  என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். எவ்வளவு பொருட்கள்  கொடுக்க முடியும்?

நீங்கள் தெரியாமல் கைது விட்டு, இப்பொது என்ன்னிடம்  நியாயப்படுத்த வேண்டாம்,  பின்பு அதை தொண்டு நிறுவனர் புலிகள் பிரதேசத்தில் வேலை செய்ய புலிகளுக்கு கொடுத்த  பணம் என்று திரிப்பது. 

தேவை இல்லாத, சாத்தியம் அற்ற கதைகள். 

பணம் என்பது வங்கித்துறையால் மட்டுமே மாற முடியும், அப்படி இல்லாத இடங்களில் (இப்போதும்) தொண்டு நிறுவனகள் பொருட்களாவே கொடுக்க முடியும் (மிக சமீப உதாரணம்  சிரியா). 

ஏனெனில், புலிகலின் வங்கி என்பது அவர்களோடு, ஒரு தொடர்பும் இல்லாதது.

அப்படி இருந்தாலும் நேரடியாக செய்ய முடியாது, தொண்டு நிறுவங்கள் சர்வதேச அடிப்படையில் audit செய்யப்படுவவை, புலிகளை, அமெரிக்கா தடை காரணமாக, நேரடியாக ஒரு போதும் (வசதி இருந்தால் கூட) கொடுக்க முடியாது.  

சிங்கள வாங்கி துறை, அதாவது சிங்கள அரசுக்கு கொடுப்பதன் வழியாக, இதை தடுத்து விட்டது சிங்கள அரசு. 

இவ்வளவு ஏன், சமாதானம் வசதி செய்வதற்கு வந்த நோர்வே கூட புலிகளுக்கு பணம் கொடுக்க முடியவில்லை.

பொருட்களே கொடுக்க முடிந்தது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

உங்கள் இருவருக்கும் விடிஞ்ச பிறகு ,மற்றவர் தட்டி எழுப்பின பிறகு தான் தெளிஞ்சதாக்கும் .😉

ஓமோம்...நீங்கள் கிழக்கின் விடியலை நோக்கி.....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் புதைத்ததை எடுத்து றோட்டு போட்டார்கள். வெளிநாடுகளிடமிருந்து அபிவிருத்தி என்று வாங்கி றோட்டு போட்டார்கள். 

றோட்டு அமெரிக்காவிற்கா போட்டிருக்கு???

அதைவிட மகிந்த & கோவின் அரைவாசி பணம் புலிகளினதும் தமிழர்களினதும்.

அப்பாடா….

சிலவேளை

@ரதி  எண்ணிப் பார்த்திருப்பாவோ🤔🤔🤔

33-D24219-4-B70-4-E7-B-890-F-82689-DA114
6-AC5-DA5-D-C2-DF-48-AC-B3-F0-ACB5-A421-

சிறீலங்காவின் தற்போதைய நிலை….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@ ஏராளன், பிரபா சிதம்பரனாதன், கோசான், தனிகாட்டுராஜா நன்றி.

இது ஒரு செவிவழிக்கதை, முன்பொரு காலத்தில் இலங்கையில் உள்ள ஒரு வங்கி ( இலங்கை வங்கி அல்லது மக்கள் வங்கியாகவிருக்கலாம்), திவாலாகப்போவதாக மக்கள் கருதினார்கள், மக்கள் தமது வைப்பிலுள்ள பணத்தை எடுப்பதற்கு முண்டியடித்தார்கள்.

பொதுவாக வங்கிகள் தமது முழுப்பெறுமதியில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் பாதுகாப்பு வைப்பாகப்பேணுவார்கள் (இலங்கையில் 5% இருகலாம்) மிகுதி சொத்துகளை 80% திரவ முதலீடாகவும் (மிக சொற்ப வருமானம் அல்லது வருமானமே அற்ற) 20% திண்ம முதலீடுகளில் முதலிடுவார்கள் (அதிக வருமானம் ஆனால் அவசரத்திற்கு உடனடியாக பணத்தை பெற முடியாது). 

அனைத்து மக்களும் ஒரே நேரத்தில் தமது வைப்பு பணத்தினை மீட்டால், வங்கி திவாலாகி விடும், அதனால் வங்கி ஒரு திட்டத்தினை அமுல்படுத்தியது, அனைத்து பணத்தினையும் சில்லறையாக மாற்றி வைத்துக்கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு அதனை வழங்கியது இதனால் மிகத்தாமதம் ஏற்பட்டதாம் மக்கள் நீண்ட நேரமாக கியூவில் நிற்கவேண்டி ஏற்பட்டது இது நாள்கள் நிடித்த போது ஒரு காலகட்டத்தின் பின் மக்கள் வங்கி எப்படியும் பணத்தை கொடுத்துவிடும் என்று நம்பி பணத்தினை எடுப்பதை நிறுத்திவிட்ட்டார்களாம்.

இன்று இலங்கை கடன் வாங்கி வட்டி கட்டுகிறது, பொருளாதார ஊடகங்கள் இலங்கை எப்போது credit default ஆகும் என அரூடம் கூறுகின்றன. இந்தநிலையில் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் மட்டுப்படுத்தப்படும், இலங்கை பொருளாதார சரிவு தானாகவே ஏற்படலாம், அரசு துணிகரமான முடிவுகளை எடுக்காவிட்டால் இது தவிர்க்க முடியாமல் போகலாம்.

1900 - 1929 (குத்து மதிப்பான காலம்) காலப்பகுதியில் அமெரிக்காவில் பெருமளவான முதலீட்டு செலவினால், பண நெருக்கடி ஏற்பட்டது 1905 - 1907 ( இடைப்பட்ட காலப்பகுதியாகவிருக்கலாம்) பங்குச்சந்தை சரிவு ஏற்படும் நிலை உருவாகியது, JP மோர்கன் வங்கிகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தாராம் உங்கள் பாதுகாப்பு வைப்புகளை கடனாக வழங்குங்கள் என்று ஆரம்பத்தில் வங்கிகள் அது பாதுகாப்பு இருப்பு அவசரத்தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என முரண்டு பிடிக்க அதற்கு JP மோர்கன் சொன்னாராம் அதனால்தான் கூறுகிறேன்.

அதன் மூலம் பங்கு சந்தை சரிவை JP மோர்கன் தடுத்தார் என கூறப்படுகிறது, ஆனால் 1929 பங்கு சந்தை சரிவு ஏற்பட்டது, அதே போல் நாட்டின் வைப்பிலிருந்த தங்கத்தினை விற்குமாறு அரசுக்கு ஆலோசனை வழங்கி நாட்டை பொருளாதார நெருககடியில் இருந்து மீட்டார் என்று  கூறப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

புலிகள் புதைத்ததை எடுத்து றோட்டு போட்டார்கள். வெளிநாடுகளிடமிருந்து அபிவிருத்தி என்று வாங்கி றோட்டு போட்டார்கள். 

றோட்டு அமெரிக்காவிற்கா போட்டிருக்கு???

அதைவிட மகிந்த & கோவின் அரைவாசி பணம் புலிகளினதும் தமிழர்களினதும்.

அப்பாடா….

சிலவேளை

@ரதி  எண்ணிப் பார்த்திருப்பாவோ🤔🤔🤔

33-D24219-4-B70-4-E7-B-890-F-82689-DA114
6-AC5-DA5-D-C2-DF-48-AC-B3-F0-ACB5-A421-

சிறீலங்காவின் தற்போதைய நிலை….

நான் சொன்னால் நீங்கள் நம்பவேணும். ஏன், எப்பிடியெண்டெல்லாம் கேள்வி கேட்கப்படாது மீரா.

தலைவரும், தளபதிகளும் இயக்கத்தின்ர காசையெல்லாம் களவெடுத்துக்கொண்டு குடும்பங்களை மலேசியாவுக்கால லண்டனுக்கு  அனுப்பிப் போட்டு தாங்களும் லண்டனுக்குப் போலிப் பாஸ்போட்டில போக இருந்தவையாம். இதைக் கருணா அம்மான் பாத்துப்போட்டுத்தான் மகிந்த மாமாவிட்ட போட்டுக் குடுத்தவராம். 

அண்டைக்கு புலிகள் மரத்துக்குக் கீழ புதைச்சுவைச்ச பணமெல்லாம் பெரிய மரமா வளந்து இப்பக் காசு காசாக் காய்ச்சுக் கொட்டுதாம். அதிலதான் மகிந்த மாமாவும், கோத்தா மாமாவும் காசு புடுங்கி ரோட்டுப் போட்டவையள். உந்தக் காசில கருணா அம்மான் ஒரு சதமெண்டாலும் எடுக்கேல்லையெண்டு என்னட்டைச் சொன்னவர் எண்டால் பாத்துக்கொள்ளுங்கோவன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலிருந்து தனிநபர்கள் பணத்தை  officially வெளிநாட்டிற்கு அனுப்பமுடியாது என்பது உண்மையாக தான் இருக்க வேண்டும். [பல நாடுகளில் உள்ள முறை தான்] வெளிநாட்டில் இருந்து இலங்கையில் வீடு காணி விற்கும் தமிழர்கள் வேறு முறையால் தான் பணத்தை எடுப்பிக்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

இன்று இலங்கை கடன் வாங்கி வட்டி கட்டுகிறது, பொருளாதார ஊடகங்கள் இலங்கை எப்போது credit default ஆகும் என அரூடம் கூறுகின்றன. இந்தநிலையில் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் மட்டுப்படுத்தப்படும், இலங்கை பொருளாதார சரிவு தானாகவே ஏற்படலாம், அரசு துணிகரமான முடிவுகளை எடுக்காவிட்டால் இது தவிர்க்க முடியாமல் போகலாம்.

சிங்களம் இவ்வளவு கூலாக இருபதற்கு காரணம் , ஒன்றில் சீன, அல்லது ஹிந்தியை.

சீனாவை விட, கிந்தியா, சிங்களத்திற்கு மிகவும் கடன் பட்டதாக, சிங்களத்தின் நினைப்பு இருக்கிறது.

2009 இல் சோனியா, IMF இ வெருட்ட  முடிந்தது, ஏனெனில் US ஐ பல நாடுகள் 2008 -2009 நெருக்கடியால்  எதிர்த்தன. US ஆல் IMF ஐ நிறுத்த முடியவில்லை.

2016 இல், IMF ரணிலின் நடிப்பு நல்லாட்சியை வைத்து, US  சம்மதத்துடன் கொடுத்தது. ரணில் அதற்கு பிரதி உபகாரமாக , சீனவை உள்ளே இழுத்து விட்டார்.    

இப்பொது, கிந்தியவள் IMF ஐ  வெருட்டவும்  முடியாது, ஒரு நாடும் கிமந்தியாவுக்கு அகடவு அளிக்காது. மற்றும் US அதிகாரம் பண்ணைக் கூடிய நிலையில் உள்ளது.

உ.ம்.ஏப்ரலில், கிந்தியாவின் பொருளாதார வலய கடடற்பரப்பை US navy, எதையும் கிந்தியவுக்கு தெரிவிக்காது     ஊடறுத்து சென்றது. அதை பகிரங்கமாக அறிவித்தது.

கிந்தியாவுக்கு, சினமும், ஆத்திரமும் வந்தாலும், அடக்கி கூட வாசிக்கமல்  விட்டது.

இது, US இன் ஓர் சமிக்ஞை, அதாவது எல்லா விடயத்திலும், இந்த பிராந்தியத்தில் கிந்தியவை கேட்டு அதன் அமோதிப்புடன்  US நடக்காது என்பதற்கு.   
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சொல்வதை புரிவதற்கு, பொருளியலியலில் ஓர் சிறப்பு தேர்ச்சியும் தேவை இல்லை. 
கேட்டு நீங்களே தெரிந்து கொள்ளலலாம்.

இங்கு சிலர், இவரை விட கோதாவும், தாங்களும் அனுபவத்தில் கூடியவர்கள் என்று எண்ணி எழுதிக்கிறார்கள். அவர்களும், விருப்பம் இருந்தால், இதை கேட்டு, தமது நிலையை எடை போடலாம்.

அனால், கோதாவுக்கும், அவர்கள் என் கோத்த இருக்க வேண்டும் என்று விருப்புகிறர்கள் என்பதற்கு வேறு காரணங்கள் இருக்கிறது. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இவர் சொல்வதை புரிவதற்கு, பொருளியலியலில் ஓர் சிறப்பு தேர்ச்சியும் தேவை இல்லை. 
கேட்டு நீங்களே தெரிந்து கொள்ளலலாம்.

இங்கு சிலர், இவரை விட கோதாவும், தாங்களும் அனுபவத்தில் கூடியவர்கள் என்று எண்ணி எழுதிக்கிறார்கள். அவர்களும், விருப்பம் இருந்தால், இதை கேட்டு, தமது நிலையை எடை போடலாம்.

அனால், கோதாவுக்கும், அவர்கள் என் கோத்த இருக்க வேண்டும் என்று விருப்புகிறர்கள் என்பதற்கு வேறு காரணங்கள் இருக்கிறது. 

 

 

நல்ல ஒரு ஒளிப்பதிவு, பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவுள்ள பெற்றோலியத்தின் நிலை இலங்கையில் எவ்வாறு உள்ளது? ஏறத்தாழ 1/2 பில்லியன் டாலர் பெறுமதியான பெற்றோலிய இறக்குமதியில் ஏதாவது கட்டுப்பாட்டினை அரசு விதித்துள்ளதா? எதிர்காலத்தில் பெற்றோலின் விலை தங்கம் போல் உயருமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையிலிருந்து தனிநபர்கள் பணத்தை  officially வெளிநாட்டிற்கு அனுப்பமுடியாது என்பது உண்மையாக தான் இருக்க வேண்டும். [பல நாடுகளில் உள்ள முறை தான்] வெளிநாட்டில் இருந்து இலங்கையில் வீடு காணி விற்கும் தமிழர்கள் வேறு முறையால் தான் பணத்தை எடுப்பிக்கின்றனர்.

ஆம். முன்பே இலங்கையில் இருந்து உத்தியோக பூர்வமாக பணத்தை எடுக்க, மத்திய வங்கியின் அனுமதி பெற வேண்டும். ஜூலை 2021 இல் இருந்து இதை இன்னும் இறுக்கியுள்ளார்கள்.

https://www.reuters.com/article/sri-lanka-cenbank-forex-idUSL3N2EN2G6

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kadancha said:

சிங்களம் இவ்வளவு கூலாக இருபதற்கு காரணம் , ஒன்றில் சீன, அல்லது ஹிந்தியை.

சீனாவை விட, கிந்தியா, சிங்களத்திற்கு மிகவும் கடன் பட்டதாக, சிங்களத்தின் நினைப்பு இருக்கிறது.

2009 இல் சோனியா, IMF இ வெருட்ட  முடிந்தது, ஏனெனில் US ஐ பல நாடுகள் 2008 -2009 நெருக்கடியால்  எதிர்த்தன. US ஆல் IMF ஐ நிறுத்த முடியவில்லை.

2016 இல், IMF ரணிலின் நடிப்பு நல்லாட்சியை வைத்து, US  சம்மதத்துடன் கொடுத்தது. ரணில் அதற்கு பிரதி உபகாரமாக , சீனவை உள்ளே இழுத்து விட்டார்.    

இப்பொது, கிந்தியவள் IMF ஐ  வெருட்டவும்  முடியாது, ஒரு நாடும் கிமந்தியாவுக்கு அகடவு அளிக்காது. மற்றும் US அதிகாரம் பண்ணைக் கூடிய நிலையில் உள்ளது.

உ.ம்.ஏப்ரலில், கிந்தியாவின் பொருளாதார வலய கடடற்பரப்பை US navy, எதையும் கிந்தியவுக்கு தெரிவிக்காது     ஊடறுத்து சென்றது. அதை பகிரங்கமாக அறிவித்தது.

கிந்தியாவுக்கு, சினமும், ஆத்திரமும் வந்தாலும், அடக்கி கூட வாசிக்கமல்  விட்டது.

இது, US இன் ஓர் சமிக்ஞை, அதாவது எல்லா விடயத்திலும், இந்த பிராந்தியத்தில் கிந்தியவை கேட்டு அதன் அமோதிப்புடன்  US நடக்காது என்பதற்கு.   
 

https://www.dailymirror.lk/latest_news/SL-receives-US-780-million-in-SDR-from-IMF/342-218919
 

இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் யூ எஸ்  அளவான நிதியை ஐ எம் எப். இன்று  ஒதுக்கி உள்ளது. 

இலங்கை பெரும் கடன் நெருக்கடியில் உள்ளது. ஆனால் திவாலாகும் நிலையில் உள்ளதா? நான் அப்படி நினைக்கவில்லை.

3 hours ago, vasee said:

நல்ல ஒரு ஒளிப்பதிவு, பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவுள்ள பெற்றோலியத்தின் நிலை இலங்கையில் எவ்வாறு உள்ளது? ஏறத்தாழ 1/2 பில்லியன் டாலர் பெறுமதியான பெற்றோலிய இறக்குமதியில் ஏதாவது கட்டுப்பாட்டினை அரசு விதித்துள்ளதா? எதிர்காலத்தில் பெற்றோலின் விலை தங்கம் போல் உயருமா? 

பெற்றோலிய இறக்குமதியில் அரசு ஏலவே நேரடியாகவும், மறைமுகமாகவும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது என நினைக்கிறேன்.

அதனால்தான் எரிவாயு விலை கூடி - ஒன்லைனில் விறகு விற்கும் நிலை வந்துள்ளது. ஒரு கட்டு விறகு வாங்கினால், உமி அடுப்பு இலவசம் என்று ஒரு விளம்பரமும் பார்த்தேன்.

பெற்றோலை குறுகிய கால அடிப்படையில் ஈரானிடம் இருந்து தேயிலைக்கு பண்டமாற்று மற்றும் கடன் அடிப்படையில் பெற முயலக்கூடும். ஆனால் அமெரிக்காவின் ஈரான் மீதான தடைகள் குறுக்கே நிற்கும்.

கஜானா காலி என்றால் - கப்பல்கள் பெற்றோலை இறக்காது. இப்போதே காசை டாலரில் டிரான்ஸ்பர் பண்ணிய பின்பே எண்ணையை இறக்குகிறார்களாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

https://www.dailymirror.lk/latest_news/SL-receives-US-780-million-in-SDR-from-IMF/342-218919
 

இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் யூ எஸ்  அளவான நிதியை ஐ எம் எப். இன்று  ஒதுக்கி உள்ளது. 

இலங்கை பெரும் கடன் நெருக்கடியில் உள்ளது. ஆனால் திவாலாகும் நிலையில் உள்ளதா? நான் அப்படி நினைக்கவில்லை.

தை பற்றியும் விஜேவர்த்தனே பேட்டியில்   இருக்கிறது.

SDR என்பது பரிவர்த்தனை செய்யக் கூடிய  கரன்சி  அல்ல. 

அது IMF ஆல் உருவாக்கப்படும் (Supra national) special drawing rights, கடனை ஓர் நாட்டுக்கு இழுத்து, பெற்றுக் கொள்ளும் வசதி ஆகும்.  

SDR ஐ  டாலர் இற்கு அல்லது வேறு நாணயத்திடற்கு மாற்ற வேண்டும். அனால் வட்டி மிகவும் குறைவகையால், ஒருவரும் இப்போதைய நிலையில் ஆயத்தம் இல்லை, US கூட, US இற்கு வேறு (அரசியல்) காரணங்களும் இருக்கலாம்.  

SDR ஆல் IMF இடம் கொடுக்க வேண்டிய கடன் என்றால் நேரடியாக பாவிக்கலாம்  

நான் நினைக்கிறேன், IMF ஓர் கோடி காட்டி இருக்கிறது இதன் மூலம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/8/2021 at 03:37, ஈழப்பிரியன் said:

எமது போராட்டமே றோட்டுக்கும் மின்சாரத்துக்கு மானதே.

அது தான் கிடைச்சிட்டுதில்லை.

எதை கேட்டு ஈழத்தமிழர் போராடினார்களோ.......அதையெல்லாம் மறக்கடிக்கப்பட்டு இன்று அபிவிருத்தி.....அபிவிருத்தி எனும் சொல்லுடன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள் என்றால் பாருங்கள் யாரவர்கள் என்று??????? 
இன்று வீதி புனரமைப்பையும் மின்சார இணைப்பையும் தமிழர் பிரச்சனையாக மாற்றி விட்டார்கள்.

சிங்களக்கொடி தூக்கும் குத்துக்கரணங்கள்தான் ஈழத்தமிழனுக்கான சாபக்கேடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இலங்கை பெரும் கடன் நெருக்கடியில் உள்ளது. ஆனால் திவாலாகும் நிலையில் உள்ளதா? நான் அப்படி நினைக்கவில்லை.

 

இலங்கை திவாலாவதற்கு சாத்திய கூறுகள் உள்ளன, இலங்கையின் Credit rating CCC  ஆகத்தரப்படுத்தியுள்ளார்கள், அதாவது Credit default முன்னதான நிலை.இந்த வகையான தரநிலையில் சில ஆபிரிக்க நாடுகள் உள்ளன. 

Credit rating B கீழ் இருப்பவை Credit default ஆகப்போகின்ற நிலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இலங்கை திவாலாவதற்கு சாத்திய கூறுகள் உள்ளன, இலங்கையின் Credit rating CCC  ஆகத்தரப்படுத்தியுள்ளார்கள், அதாவது Credit default முன்னதான நிலை.இந்த வகையான தரநிலையில் சில ஆபிரிக்க நாடுகள் உள்ளன. 

Credit rating B கீழ் இருப்பவை Credit default ஆகப்போகின்ற நிலை

விரைவில் இலங்கை SD தரத்துக்கு ஆகும் என நினைக்கிறீர்களா? 

எனக்கு என்னமோ இப்படி ஆக விடமாட்டார்கள் என்றே படுகிறது.

அப்படியே ஆனாலும் பரோட்டா சூரியின் கணக்கு போல, எல்லாவற்றையும் (bonds) அறவிட முடியா கடனாக சொல்லிவிட்டு, மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாதா?

சர்வதேச சந்தையில் இலங்கையின் பிணை முறிகளுக்கு கோரல் இருக்காது.

ஆனால் வெனிசுலாவும் காலத்தை ஓட்டுதுதானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

விரைவில் இலங்கை SD தரத்துக்கு ஆகும் என நினைக்கிறீர்களா? 

எனக்கு என்னமோ இப்படி ஆக விடமாட்டார்கள் என்றே படுகிறது.

அப்படியே ஆனாலும் பரோட்டா சூரியின் கணக்கு போல, எல்லாவற்றையும் (bonds) அறவிட முடியா கடனாக சொல்லிவிட்டு, மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாதா?

சர்வதேச சந்தையில் இலங்கையின் பிணை முறிகளுக்கு கோரல் இருக்காது.

ஆனால் வெனிசுலாவும் காலத்தை ஓட்டுதுதானே?

நாடுகளின் பல்வேறு வகையான அமைவிடம் இயற்கை வளம் போன்றவை வங்குரோத்து போகும் நேரத்தை தீர்மானித்தாலும் இறுதி போரில் நின்ற நாடுகளுக்கு வகிபாகம் கொடுக்கப்படணும் என்பதில் அவர்கள் குறியாக நிக்கிறார்கள் வங்குரோத்து நீங்கள்  சொல்வது போல் போகவிடமாட்டார்கள் ஆனால் குறைந்தபட்சம் போர் வெற்றி கொண்டாடிய காலப்பகுதிகளில் இருந்த பொருளாதார வசந்தகாலம் இனி லங்காவில் கிடையாது கிடைக்கவும் விடமாட்டார்கள் ஏனென்றால் வந்த ஒட்டகங்களுக்கு தெரியும் இனி ஒரு பொருளாதார சுபீட்சம் ஏற்பட்டால் முதலாவதாய் திறத்த படுபவர்கள் அவர்களாக இருப்பார்கள் பத்து  வருடங்களுக்கு பின்  வரப்போன பிரச்சனை கொரனோ வால்  வேளைக்கே  வந்துவிட்டது இந்த சந்தர்ப்பத்தை வந்த ஒட்டகங்கள் தவற விடமாட்டார்கள் சோ இனி லங்காவில் நெருக்கடி நிலைதான் இப்பவே பத்தாயிரம் பவுன்ஸ் ஊருக்கு அனுப்ப இருக்கு என்று மெயின் உண்டியல் ஆட்களிடம் கேட்டு பாருங்கள் இன்றைய ரேட் ஐ விட 30லிருந்து 60 ரூபா வரை கூட தருவதுக்கு டீல் பேசுவார்கள் அவர்களிடம் உள்ள நம்பிக்கை இங்கு லங்கா கொடி பிடிப்பவர்களிடம் கிடையாது .🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

விரைவில் இலங்கை SD தரத்துக்கு ஆகும் என நினைக்கிறீர்களா? 

எனக்கு என்னமோ இப்படி ஆக விடமாட்டார்கள் என்றே படுகிறது.

அப்படியே ஆனாலும் பரோட்டா சூரியின் கணக்கு போல, எல்லாவற்றையும் (bonds) அறவிட முடியா கடனாக சொல்லிவிட்டு, மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாதா?

சர்வதேச சந்தையில் இலங்கையின் பிணை முறிகளுக்கு கோரல் இருக்காது.

ஆனால் வெனிசுலாவும் காலத்தை ஓட்டுதுதானே?

அந்த ஒளிப்பதிவில்  B இன் Credit default  நிகழ்தகவு 1-4 வீதம், 8% அளவினை எட்டினாலே ஆபத்து என கூறுகிறார், தற்சமயம் இலங்கையின் அளவு 27% என்று புளூம்பேர்க் இணையத்தளம் கூறுகிறது.

இதுவரைக்கும் இலங்கை அத்தியாவசியங்களை நிரல்படுத்தவில்லை, ஒன்றில் அரசிற்கு நிலமையின் தீவிரம் புரியவில்லை அல்லது ஏதாவது திட்டம் அரசிடம் இருக்கலாம்.

அந்நிய செலாவணி நிலுவை என்பது ஏற்றுமதி (பொருள்கள் சேவைகள்) இறக்குமதி, தேறிய உல்லாசப்பிரயாணம் மற்றும் கல்வி சேவைகள் ஆகியவற்றின்நிலுவை ஆகும். இலங்கை அரிசியைக்கூட வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறது, கொரோனா பாதிப்பினால் உல்லாசப்பிரயாணமும் பாதிக்கப்பட்டுள்ளது, இலங்கைக்கு எவ்வாறு அந்நிய செலாவணி வரும் வெறும் செலவு மட்டுமுள்ளது. 

ஐ எம் எப் கடன் தீர்வல்ல, அது இலங்கைக்கு கால அவகாசத்தை மட்டுமே கொடுக்கும். 

இப்போது இலங்கை கடன் வாங்கி வட்டி கட்டுகிறது, ஒரு கட்டத்தில் கடன் சுமை அதிகரித்து கடன் செலுத்த முடியாமல் போகும் (Credit default), அதன் பின் இலங்கை கடனை திருப்பிக்கொடுக்காது. 

அரசின் வரவு செலவுத்திட்டத்தில் பாதிப்பு ஏற்படும். (வருமான இடைவெளியை வெளிநாட்டு உள்நாட்டுக்கடன் ஈடு கட்ட முடியாது)

அரசு செலவுகள் பல, அரசியல்வாதிகளின் ஊழல் நோக்கத்திற்காக செய்யப்படும் தேவையற்ற செலவுகள் உதாரணமாக கடற்கரை கிராமம் ஒன்றில் நீச்சல் குளம் கட்டுவது.பொதுவாக மொத்த தேசிய உற்பத்தியில் 7% மேலான அரசின் செலவுள்ள நாடு உருப்படாது என்பார்கள் இலங்கை 20%, மொத்த தேசிய உற்பத்தியில் கால் பங்கை அரசே செலவே விழுங்கிவிடும். 

அரசின் முதலீட்டு செலவுகள் குறைய வருமானம்  ஈட்ட முடியாத தொழில்த்துறைக்கு முக்கியமான வீதிப்புனரமைப்பு போன்ற அடிப்படை கட்டுமானப்பணிகள் தடைப்பட்டு ஒரு சங்கிலித்தொடர் பாதிப்பை நாட்டிற்கு  ஏற்படுத்தலாம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, vasee said:

அந்த ஒளிப்பதிவில்  B இன் Credit default  நிகழ்தகவு 1-4 வீதம், 8% அளவினை எட்டினாலே ஆபத்து என கூறுகிறார், தற்சமயம் இலங்கையின் அளவு 27% என்று புளூம்பேர்க் இணையத்தளம் கூறுகிறது.

இதுவரைக்கும் இலங்கை அத்தியாவசியங்களை நிரல்படுத்தவில்லை, ஒன்றில் அரசிற்கு நிலமையின் தீவிரம் புரியவில்லை அல்லது ஏதாவது திட்டம் அரசிடம் இருக்கலாம்.

அந்நிய செலாவணி நிலுவை என்பது ஏற்றுமதி (பொருள்கள் சேவைகள்) இறக்குமதி, தேறிய உல்லாசப்பிரயாணம் மற்றும் கல்வி சேவைகள் ஆகியவற்றின்நிலுவை ஆகும். இலங்கை அரிசியைக்கூட வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறது, கொரோனா பாதிப்பினால் உல்லாசப்பிரயாணமும் பாதிக்கப்பட்டுள்ளது, இலங்கைக்கு எவ்வாறு அந்நிய செலாவணி வரும் வெறும் செலவு மட்டுமுள்ளது. 

ஐ எம் எப் கடன் தீர்வல்ல, அது இலங்கைக்கு கால அவகாசத்தை மட்டுமே கொடுக்கும். 

இப்போது இலங்கை கடன் வாங்கி வட்டி கட்டுகிறது, ஒரு கட்டத்தில் கடன் சுமை அதிகரித்து கடன் செலுத்த முடியாமல் போகும் (Credit default), அதன் பின் இலங்கை கடனை திருப்பிக்கொடுக்காது. 

அரசின் வரவு செலவுத்திட்டத்தில் பாதிப்பு ஏற்படும். (வருமான இடைவெளியை வெளிநாட்டு உள்நாட்டுக்கடன் ஈடு கட்ட முடியாது)

அரசு செலவுகள் பல, அரசியல்வாதிகளின் ஊழல் நோக்கத்திற்காக செய்யப்படும் தேவையற்ற செலவுகள் உதாரணமாக கடற்கரை கிராமம் ஒன்றில் நீச்சல் குளம் கட்டுவது.பொதுவாக மொத்த தேசிய உற்பத்தியில் 7% மேலான அரசின் செலவுள்ள நாடு உருப்படாது என்பார்கள் இலங்கை 20%, மொத்த தேசிய உற்பத்தியில் கால் பங்கை அரசே செலவே விழுங்கிவிடும். 

அரசின் முதலீட்டு செலவுகள் குறைய வருமானம்  ஈட்ட முடியாத தொழில்த்துறைக்கு முக்கியமான வீதிப்புனரமைப்பு போன்ற அடிப்படை கட்டுமானப்பணிகள் தடைப்பட்டு ஒரு சங்கிலித்தொடர் பாதிப்பை நாட்டிற்கு  ஏற்படுத்தலாம்

 

விரிவான பதிலுக்கு நன்றி. உங்களதும், கடஞ்சாவினதும், பெருமாளினதும் பதில்கள் எனது இது பற்றிய எண்ணத்தில் மாற்றத்தை ஏற்படுத்துயுள்ளது.

நான் நினைத்ததை விட பாரதூரமான சிக்கலில் இலங்கை இருப்பதாகவே படுகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

விரைவில் இலங்கை SD தரத்துக்கு ஆகும் என நினைக்கிறீர்களா? 

 

11 hours ago, vasee said:

இப்போது இலங்கை கடன் வாங்கி வட்டி கட்டுகிறது, ஒரு கட்டத்தில் கடன் சுமை அதிகரித்து கடன் செலுத்த முடியாமல் போகும் (Credit default), அதன் பின் இலங்கை கடனை திருப்பிக்கொடுக்காது. 

 

மிகவும் பிந்திய பதிவுகளில் இருந்தே ஆரம்பிக்கிறேன்.  imf இன் SDR விளைவுகளை பின்பு பார்போம், ஏனெனில், SDR ஐ  உடனடியாக பாவிக்க முடியாது.  

விஜேவர்த்தனே இந்த முழு பேட்டியையும் கவனமா கேட்டீர்களா? குறிப்பாக,  அந்த உரையாடலில், 36 - 40 நிமிட நேர இடைவெளியில்.

விஜேவர்த்தனே சொல்வதின் படி ஏற்கனவே உத்தியோகபூர்வ முறையில் (உத்தியோக பற்றற்ற அறிவிப்பால்)  SD ஆகி விட்டது என்று நினைக்கிறன்.

இதை இங்கு எல்லோருக்குமாக சற்று விளக்கமாக எழுதுகிறேன்.

இங்கே, அவ்வப்போது சொல்லி இருக்கிறேன், சிங்கள அரசின்  மத்திய வங்கி அதன் மீது இருக்கும் உண்மையான கடன் தொகையை  மறைக்கிறது என்று.

இப்பொது சிங்கள அரசின்  மத்திய வங்கி, மறைக்கப்பட்டது என்ற கடன் தொகையயை, written  off பண்ணி இருக்கிறது, நகைப்பபிலும் கேவலமான கணக்கியல்  பதிவின் மூலம். 

அதை எப்படி என்று விஜேவர்த்தனே விளக்குகிறார் அந்த உரையாடலில், 36 - 40 நிமிட நேர இடைவெளியில்.

முதலில் தனிமனித உதாரணத்தை வைத்து சுருக்கமாக சொல்கிறேன். பின்பு விஜேவர்த்தனே சொல்வதை சுருக்கமாக சொல்கிறேன்.

 £200, 000 வங்கியில் (lender or creditor) இருந்து  கடன் எடுத்து தனி நபர் ஒருவர் (debtor) வீடு வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். 2 வருடங்களின் பின் வீட்டின் விலை (கேள்வி) £100,000 க்கு குறைந்து விடுகிறது. அப்போது கடன் எடுத்தவர், கடன் எடுத்த மொத்த தொகையான £200, 000 இல் £10, 000 கடனை கட்டி முடித்து இருக்கிறார் என்றும்  வைத்துக் கொள்வோம். கடன் எடுத்தவருக்கு  (debtor) நிலுவையில் இருக்கும் கடன் இப்பொது, £190, 000. 

கடன் எடுத்து வீடு வாங்கியவர் (debtor) சொல்ல்கிறார், வீட்டின் £100,000 க்கே விலை போகும் (கேள்வி உள்ளதால் ) என்பதால்,  கடன் எடுத்தவரன் (debtor) நிலுவையில் இருக்கும் கடன்   £100, 000 மட்டுமே . 

இந்த கணக்கியல் , வங்கிக்கே (lender) சரியும் பொருத்தமானதும்.. ஏனெனில், வங்கியின் (lender) இன் பார்வையில் இப்பொது அறவிடக் கூடியது (வீட்டை கடனாளியிடம் இருந்து எடுத்து விற்றபத்தின் மூலம்)   £100, 000 மட்டுமே. அதாவது, கடன் கொடுத்தவருக்கான கடன் பத்திரத்தை  (loan instrument) , வங்கி (lender), அந்தப loan instrument ஐ வாங்க விரும்பும் வேறு எந்த (சட்ட அங்கீகாரமுள்ள) நிறுவனத்திற்கு £100, 000 க்கு மேல் விற்க முடியாது.      

கடன் எடுத்தவர் (debtor) இந்த கணக்கியலை (தனி நபர் ஆக) சொன்னால், கடன் எடுத்தவர் பகுதியாக கடன் பொறுப்பில் இஇருந்து வழுவி (default ) விட்டார்.   

சிங்கள அரசின் மத்திய வங்கியும் இந்த அடிப்படையிலான கணக்கியல்  விளக்கத்தையே  தான் வாங்கிய கடனுக்கு (international sovereign bonds) சொல்கிறது.  அதாவது, கடனாளியான (debtor) சிங்கள அரசு, கடன் கொடுப்பவரின் (lender அல்லது creditor ) கணக்கியலை சொல்கிறது. 

அதாவது,  சிங்கள அரசின் international sovereign bonds இன் கடன் எடுக்கும் போது இருந்த கடன் முறியின்  விலை விலை (மதிப்பு, face value,), $14.5 பில்லியன், இது ஏறத்தாழ கடன் வாங்கிய தொகைக்கு சமனாக அல்லது சற்று  மதிப்பு கூடாவாக இருக்கும் (கூடவாயின் அந்த தொகை கடனாக எடுக்கப்பட்டு இருக்கலாம்). கடன் எடுக்கும் போது face value ஐ, நிதி சந்தைகளே தீர்மானிப்பதால், கடன் எடுக்கும் போது face value உம், market value உம்  வேறுபாடு இருக்க முடியாது.

இப்பொது, சிங்கள அரசின்  இறைமை கடன்  தராதரம் (sovereign credit rating) குறைந்துள்ளதால், அதே கடன் முறியின் மதிப்பு $7.5 billion  (இற்கு குறைந்துள்ளதாக) நிதி சந்தைகள் மதிக்கின்றன.  அதாவது, கடன் எடுக்கும் போது அந்தக் கடன் முறிக்கு இருந்த கேள்வி (demand) இப்போது ஏறத்தாழ பாதியாக குறைந்து விட்டது (தனி நபர் உதாரணத்தில் வீட்டின் கேள்வி, பெறுமதி  £100, 000 க்கு குறைந்தது போல). ஆனால், கடனாக  பெறப்பட்ட தொகை, அதாவது நிலுவையில் இருக்கும் கடன் இப்போதும் $14.5 பில்லியன்.

சொறி சிங்களத்தின் மத்திய  வாங்கி சொல்கிறது, அதே கடன் முறியின் மதிப்பு $7.5 billion இற்கு  சந்தையில் குறைந்துள்ளதால் (தனி   நபர் உதாரணத்தில் வீட்டின் கேள்வி, பெறுமதி  £100, 000 க்கு குறைந்து இருப்பது போல), சிங்கள அரசின் நிலுவையில்  உள்ள கடன் தொகையும்   $7.5 billion !!!!

அதாவது, கடனாளியான (debtor) சிங்கள அரசு, கடன் கொடுத்தவரின்(lender அல்லது creditor ) கணக்கியலை பதிவிட்டு, ஏறத்தாழ $7 billion ஐ நிலுவையில் உள்ள கடன் இல் இருந்து நீக்கி விட்டது (written off).

இப்படி சொறி  சிங்கள அரசின் சொறி மத்திய வங்கி பகிரங்கமாக செய்யம் போது, 

  1) நிதி (மற்றும் ஏனைய ) சந்தைகள் எல்லாமே பூட்டப்பட்டு விட்டது   சொறி  சிங்கள அரசுக்கு.
    
  2) வேறு நாடுகள் கொடுத்தாலும், (சீன போல) வேறு பிணைகள் இல்லாமல் கொடுக்காது. 

  3) இனி, IMF வந்தாலும்,  முதலில் இந்த $14.5 billion ஐ எவ்வாறு தீர்ப்பது  என்பதே பிரச்சனை. IMF, 
சந்தையையும், தனியார் நிறுவனங்களுக்கும் பக்க சார்பாக நடப்பதாக குற்றசாட்டு இருந்தாலும், சொறி சிங்களம் செய்ததால், IMF சந்தைகளையும்,   தனியார் நிறுவனங்களையும் கடனை தள்ளி  போடுமாறு கேட்க முடியாது.

இவை எல்லாவற்றிலும் மிகப் பெரிய தாக்கம், எல்லா சந்தைகளும் (markets), தனியார் நிறுவனங்களும்  சொறி மத்திய வங்கி மீது கொண்டுள்ள  மதிப்பையும் (credibility), நம்பிக்கையையும் (trust) இழந்து விட்டன.

அதனால் சொறி சிங்கள அரசாலோ அல்லது மத்திய வங்கியாலோ நிலைமைகளை வாயால் சொல்லி சமாளிக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாது.

முன்பு, சந்தைகளையும்  (markets), தனியார் நிறுவனங்களையும், சொறி மத்திய வங்கி  வலி நடத்த கூடியதாக இருந்தது.

இனி, சந்தைகளும் (markets), தனியார் நிறுவனங்களும் சொறி சிங்கள அரசையும், மத்திய வங்கியையும் வழி நடத்தும்.
   
இப்போதுள்ள கறுப்பு சந்தையே இதன் யதார்த்தம், அதாவது விலைகட்டுப்பாடுகள் இருப்பது தெரிந்தும், கருப்பு சந்தை பகிரங்கமாக அதை புறக்கணித்து, விலைகளை நிர்ணயிக்கிறது, அதற்கு கேள்வியும் (demand) இருக்கிறது.   

Link to comment
Share on other sites

12 hours ago, vasee said:

இதுவரைக்கும் இலங்கை அத்தியாவசியங்களை நிரல்படுத்தவில்லை, ஒன்றில் அரசிற்கு நிலமையின் தீவிரம் புரியவில்லை அல்லது ஏதாவது திட்டம் அரசிடம் இருக்கலாம்.

2018 இல் 2.3 மில்லியன் உல்லாசப்பயணிகள் இலங்கைக்குள் நுளைந்தார்கள். இதில் தமிழர்களே கணிசமானவர்கள்.

வெள்ளைக்காரர் விமானம் விடுதி என்று ஆகக் குறைந்து 1700 $ அளவில் ஒருவருக்குச் செலவளிக்கிறார். விமானம் தவிர்த்துப் பார்த்தால் குறைந்தது உள்நாட்டுக்கு இலவசமாகக் கொண்டு செல்லும் அந்நியச் செலாவணி குறைந்தது 1000 $. ஒரு வருட வருமானம் 2.3 பில்லியன் $. உண்மையில் இத் தொகை இதைவிட அதிகமாக இருக்க வேண்டும்.

இன்னும் 6 மாதம் பொறுங்கோ, இலங்கையின் வருட வட்டியை நாங்கள் கட்டி முடிக்கிறோம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kadancha said:

 

 

மிகவும் பிந்திய பதிவுகளில் இருந்தே ஆரம்பிக்கிறேன்.  imf இன் SDR விளைவுகளை பின்பு பார்போம், ஏனெனில், SDR ஐ  உடனடியாக பாவிக்க முடியாது.  

விஜேவர்த்தனே இந்த முழு பேட்டியையும் கவனமா கேட்டீர்களா? குறிப்பாக,  அந்த உரையாடலில், 36 - 40 நிமிட நேர இடைவெளியில்.

விஜேவர்த்தனே சொல்வதின் படி ஏற்கனவே உத்தியோகபூர்வ முறையில் (உத்தியோக பற்றற்ற அறிவிப்பால்)  SD ஆகி விட்டது என்று நினைக்கிறன்.

இதை இங்கு எல்லோருக்குமாக சற்று விளக்கமாக எழுதுகிறேன்.

இங்கே, அவ்வப்போது சொல்லி இருக்கிறேன், சிங்கள அரசின்  மத்திய வங்கி அதன் மீது இருக்கும் உண்மையான கடன் தொகையை  மறைக்கிறது என்று.

இப்பொது சிங்கள அரசின்  மத்திய வங்கி, மறைக்கப்பட்டது என்ற கடன் தொகையயை, written  off பண்ணி இருக்கிறது, நகைப்பபிலும் கேவலமான கணக்கியல்  பதிவின் மூலம். 

அதை எப்படி என்று விஜேவர்த்தனே விளக்குகிறார் அந்த உரையாடலில், 36 - 40 நிமிட நேர இடைவெளியில்.

முதலில் தனிமனித உதாரணத்தை வைத்து சுருக்கமாக சொல்கிறேன். பின்பு விஜேவர்த்தனே சொல்வதை சுருக்கமாக சொல்கிறேன்.

 £200, 000 வங்கியில் (lender or creditor) இருந்து  கடன் எடுத்து தனி நபர் ஒருவர் (debtor) வீடு வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். 2 வருடங்களின் பின் வீட்டின் விலை (கேள்வி) £100,000 க்கு குறைந்து விடுகிறது. அப்போது கடன் எடுத்தவர், கடன் எடுத்த மொத்த தொகையான £200, 000 இல் £10, 000 கடனை கட்டி முடித்து இருக்கிறார் என்றும்  வைத்துக் கொள்வோம். கடன் எடுத்தவருக்கு  (debtor) நிலுவையில் இருக்கும் கடன் இப்பொது, £190, 000. 

கடன் எடுத்து வீடு வாங்கியவர் (debtor) சொல்ல்கிறார், வீட்டின் £100,000 க்கே விலை போகும் (கேள்வி உள்ளதால் ) என்பதால்,  கடன் எடுத்தவரன் (debtor) நிலுவையில் இருக்கும் கடன்   £100, 000 மட்டுமே . 

இந்த கணக்கியல் , வங்கிக்கே (lender) சரியும் பொருத்தமானதும்.. ஏனெனில், வங்கியின் (lender) இன் பார்வையில் இப்பொது அறவிடக் கூடியது (வீட்டை கடனாளியிடம் இருந்து எடுத்து விற்றபத்தின் மூலம்)   £100, 000 மட்டுமே. அதாவது, கடன் கொடுத்தவருக்கான கடன் பத்திரத்தை  (loan instrument) , வங்கி (lender), அந்தப loan instrument ஐ வாங்க விரும்பும் வேறு எந்த (சட்ட அங்கீகாரமுள்ள) நிறுவனத்திற்கு £100, 000 க்கு மேல் விற்க முடியாது.      

கடன் எடுத்தவர் (debtor) இந்த கணக்கியலை (தனி நபர் ஆக) சொன்னால், கடன் எடுத்தவர் பகுதியாக கடன் பொறுப்பில் இஇருந்து வழுவி (default ) விட்டார்.   

சிங்கள அரசின் மத்திய வங்கியும் இந்த அடிப்படையிலான கணக்கியல்  விளக்கத்தையே  தான் வாங்கிய கடனுக்கு (international sovereign bonds) சொல்கிறது.  அதாவது, கடனாளியான (debtor) சிங்கள அரசு, கடன் கொடுப்பவரின் (lender அல்லது creditor ) கணக்கியலை சொல்கிறது. 

அதாவது,  சிங்கள அரசின் international sovereign bonds இன் கடன் எடுக்கும் போது இருந்த கடன் முறியின்  விலை விலை (மதிப்பு, face value,), $14.5 பில்லியன், இது ஏறத்தாழ கடன் வாங்கிய தொகைக்கு சமனாக அல்லது சற்று  மதிப்பு கூடாவாக இருக்கும் (கூடவாயின் அந்த தொகை கடனாக எடுக்கப்பட்டு இருக்கலாம்). கடன் எடுக்கும் போது face value ஐ, நிதி சந்தைகளே தீர்மானிப்பதால், கடன் எடுக்கும் போது face value உம், market value உம்  வேறுபாடு இருக்க முடியாது.

இப்பொது, சிங்கள அரசின்  இறைமை கடன்  தராதரம் (sovereign credit rating) குறைந்துள்ளதால், அதே கடன் முறியின் மதிப்பு $7.5 billion  (இற்கு குறைந்துள்ளதாக) நிதி சந்தைகள் மதிக்கின்றன.  அதாவது, கடன் எடுக்கும் போது அந்தக் கடன் முறிக்கு இருந்த கேள்வி (demand) இப்போது ஏறத்தாழ பாதியாக குறைந்து விட்டது (தனி நபர் உதாரணத்தில் வீட்டின் கேள்வி, பெறுமதி  £100, 000 க்கு குறைந்தது போல). ஆனால், கடனாக  பெறப்பட்ட தொகை, அதாவது நிலுவையில் இருக்கும் கடன் இப்போதும் $14.5 பில்லியன்.

சொறி சிங்களத்தின் மத்திய  வாங்கி சொல்கிறது, அதே கடன் முறியின் மதிப்பு $7.5 billion இற்கு  சந்தையில் குறைந்துள்ளதால் (தனி   நபர் உதாரணத்தில் வீட்டின் கேள்வி, பெறுமதி  £100, 000 க்கு குறைந்து இருப்பது போல), சிங்கள அரசின் நிலுவையில்  உள்ள கடன் தொகையும்   $7.5 billion !!!!

அதாவது, கடனாளியான (debtor) சிங்கள அரசு, கடன் கொடுத்தவரின்(lender அல்லது creditor ) கணக்கியலை பதிவிட்டு, ஏறத்தாழ $7 billion ஐ நிலுவையில் உள்ள கடன் இல் இருந்து நீக்கி விட்டது (written off).

இப்படி சொறி  சிங்கள அரசின் சொறி மத்திய வங்கி பகிரங்கமாக செய்யம் போது, 

  1) நிதி (மற்றும் ஏனைய ) சந்தைகள் எல்லாமே பூட்டப்பட்டு விட்டது   சொறி  சிங்கள அரசுக்கு.
    
  2) வேறு நாடுகள் கொடுத்தாலும், (சீன போல) வேறு பிணைகள் இல்லாமல் கொடுக்காது. 

  3) இனி, IMF வந்தாலும்,  முதலில் இந்த $14.5 billion ஐ எவ்வாறு தீர்ப்பது  என்பதே பிரச்சனை. IMF, 
சந்தையையும், தனியார் நிறுவனங்களுக்கும் பக்க சார்பாக நடப்பதாக குற்றசாட்டு இருந்தாலும், சொறி சிங்களம் செய்ததால், IMF சந்தைகளையும்,   தனியார் நிறுவனங்களையும் கடனை தள்ளி  போடுமாறு கேட்க முடியாது.

இவை எல்லாவற்றிலும் மிகப் பெரிய தாக்கம், எல்லா சந்தைகளும் (markets), தனியார் நிறுவனங்களும்  சொறி மத்திய வங்கி மீது கொண்டுள்ள  மதிப்பையும் (credibility), நம்பிக்கையையும் (trust) இழந்து விட்டன.

அதனால் சொறி சிங்கள அரசாலோ அல்லது மத்திய வங்கியாலோ நிலைமைகளை வாயால் சொல்லி சமாளிக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாது.

முன்பு, சந்தைகளையும்  (markets), தனியார் நிறுவனங்களையும், சொறி மத்திய வங்கி  வலி நடத்த கூடியதாக இருந்தது.

இனி, சந்தைகளும் (markets), தனியார் நிறுவனங்களும் சொறி சிங்கள அரசையும், மத்திய வங்கியையும் வழி நடத்தும்.
   
இப்போதுள்ள கறுப்பு சந்தையே இதன் யதார்த்தம், அதாவது விலைகட்டுப்பாடுகள் இருப்பது தெரிந்தும், கருப்பு சந்தை பகிரங்கமாக அதை புறக்கணித்து, விலைகளை நிர்ணயிக்கிறது, அதற்கு கேள்வியும் (demand) இருக்கிறது.   

தெளிவாக விளக்கியமைக்கு நன்றி. தனி நபர் உதாரணம் மேலும் தெளிவாக்கியது.

ஆகவே நான் மேலே சொன்னது போல அறவிடமுடியா கடன் என 7.5 பில்லியனை இலங்கை ஏற்கனவே தள்ளுபடிகாக்கி விட்டது என நான் விளங்கி கொள்கிறேன். இது சரிதானே?

இது இலங்கையின் நம்பகதன்மையை பாதித்தமையால் இனி யாரும் தனியார், வங்கிகள் இலங்கை பிணைகளை வாங்க முன் வரமாட்டர்கள். ஆகவே இலங்கை இனி கடன் வெளி சந்தையில் எடுக்க முடியாது?

இதே போல் மீதியையும் இலங்கை “ஸ்வாகா” சொல்லி முழு கடனுக்கு கையை விரித்தாலும் - இப்போ இருக்கும் நிலைதான் ? ( சந்தையில் கடன் எடுப்பதை பொறுத்தவரை). 

இதே நிலைதான் முதலீடுகளுக்கும்.

ஆனால் நாடுகளுக்கு இடையான கொடுக்கல் வாங்கல் தொடரும்.

இலங்கையை மட்டும் அல்ல வேறு எந்த ஒரு நாட்டையும் கடனில் தாழ வைக்க முடியாது என நான் நினைகிறேன்.

எப்படி? 👇

இப்படி எல்லா கடன்களையும் right off பண்ணி விட்டு, கொரோனா கட்டுக்குள் வந்தபின், வரும் வியாபார, அந்நிய செலாவணி, இதர பண வரத்தை வைத்து இலங்கை ஒரு clean start எடுக்க முடியும் அல்லவா?

உங்கள் தனியார் உதாரணத்தை எடுத்தால் கூட bankruptcy ஆகிய பின், பழைய கடன் சுமைகள் எல்லாம் ஒழிய, 5-10 வருடத்தில் புதிய credit record உடன் மீள சந்தைக்கு வர முடியும். பல சர்வதேச தமிழ் வர்தக புள்ளிகளை கூட உதாரணம் காட்ட முடியும்.

அதில்லாமல், தனி நபர் சொத்துகள் போல அன்றி, இலங்கையின் வளங்கள் அசையாதன, இராணுவ படை எடுப்பின்றி பறிக்க பட முடியாதன.

ஆகவே கடன் கொடுத்தவர்களுக்கு நாமத்தை போட்டு விட்டு, கொரோனா தணிந்த பின் உள்ளே வரும் அந்நிய செலாவணி, நாடுகளின் முதலீடு, நாடுகள் கொடுக்கும் கடன், aid இவற்றுடன் ஒரு கொஞ்ச காலத்தை ஓட்டி பின் மீள வரமுடியும் அல்லவா?

அப்படி வந்தால் அப்போ மீள சந்தையில் கடன் கொடுப்பார்கள், ஏனென்றால் அதுதான் முதளாலிதுவத்தின் குணவியல்பு.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

ஆகவே நான் மேலே சொன்னது போல அறவிடமுடியா கடன் என 7.5 பில்லியனை இலங்கை ஏற்கனவே தள்ளுபடிகாக்கி விட்டது என நான் விளங்கி கொள்கிறேன். இது சரிதானே?

அனால், இவை ஒன்றையும் கடன் கொடுத்தவர்கலால் நிர்ணயிக்கப்பட்டு, சிங்கள அரசால் செய்யப்படவில்லை.  

எழுந்தாமானமாக, மத்திய வங்கியால் செய்யப்பட்டு உள்ளது.

உண்மையில் கடன் கொடுத்தவர், கொடுத்தக கடனை சிங்களம் திருப்பி தர வேண்டியதில்லை என்பதை தீர்மானித்து  இருந்தால், நிலுவையில் இருக்கும் கடனின் தொகையை  குறைத்து பதிந்து , அதற்கு ஒத்த இரண்டாம் பதிவாக (double entry), அரசின் வருமானப் பதிவில் அதே அளவால் கூடி இருக்க வேண்டும். இதை, சொறி சிங்கள மத்திய வங்கி செய்யத் தயாரில்லை. 

அதே வேளையில், ஜூலை 27 இல் ஒருபகுதி கடனை தீர்க்கும் போது,  நிலுவையில் உண்மையாக இருக்கும் கடன் எடுத்த தொகையையே, அதாவது face value இலேயே  தீர்த்தது. 

இன்னொன்றையும் சொறி மத்திய வங்கி செய்துள்ளது. அதாவது, நாட்டுக்கு உள்ளே இருப்பவர்களால் (இதில் வங்கிகளும், கம்பனிகளும், தனியாரும் இருக்கலாம்)  வாங்கப்பட்டு இருக்கும்  ISB (international sovereign bonds) ஐ, அரசுக்குள்ள  உள்நாட்டு கடன் என்றும் பதிவிட்டு உள்ளது. இதை மனதில் வைத்தே, July 27 தீர்த்த கடனில், Ajith Cabraal சொல்லி இருந்தார், தீர்த்ததில் 200 million  USD மீண்டும் திருப்பி நாட்டுக்கு வரும் என்று. ISB, US dollar இல் இருப்பதால், இப்போதைய இக்கட்டான நிலையில் இது தவறான நிதி வழிநடத்தல். ஏனெனில், இப்போதைய இக்கட்டான நிலையில், உள்நாட்டில் உள்ளர்வர்கள் கூட dollar கிடைத்தவுடன் வெளி நாட்டுக்கே அனுப்புபவார்கள்.       

அது உண்மை, ஏனெனில், Ajith Cabraal  சொன்னது  போல நடக்கவில்லை, கையிருப்பில் உள்ள dolars உம் கூடவில்லை (200 million  USD வந்து இருந்தால் கூடி இருக்கும்). 

ஒரு பயனுள்ள விளைவுகளும் இல்லாமல், மதிப்பையும்,  நம்பிக்கையையும் மத்திய வங்கி இழந்ததே நிகர  விளைவு. 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.