Jump to content

ஞாபக சக்தியை அதிகரித்துக்கொள்ள மிக முக்கியமான 4 விஷயங்கள் என்ன? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா?


Recommended Posts

ஞாபக சக்தியை அதிகரித்துக்கொள்ள மிக முக்கியமான 4 விஷயங்கள் என்ன? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? ஆரோக்கியம் ஞாபக சக்தியை அதிகரித்துக்கொள்ள மிக முக்கியமான 4 விஷயங்கள் என்ன? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா?

brain-memory-1024x576.jpg

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஞாபக மறதி பிரச்சனை என்பது பெரும்பாலானவருக்கு இருக்கத்தான் செய்கிறது. மாணவர்களாக இருந்தால், நன்றாக படிக்கும் மாணவர்கள்கூட தேர்வுக்கு செல்லும் சமயத்தில் கேள்வித்தாளை பார்த்தவுடன் படைத்தது அத்தனையையும் மறந்து விடுவார்கள். பெரியவர்களாக இருந்தால் அவர்கள் செய்யும் தொழிலில் அல்லது பணிக்குச் செல்பவர்களாக இருந்தால் அவர்கள் ஈடுபடும் வேலையில் பலவகையான நுணுக்கங்களை மறந்துவிடுகிறார்கள். நன்றாக படித்த அறிவாளிகள் கூட நேர்காணலில் போது தடுமாறுவார்கள். எதுவுமே அறியாதவர்கள், எதையுமே சரியாகப் படிக்காதவர்கள் என்றால் அதில் பிரச்சினை இல்லை. எல்லாம் தெரிந்தும், எல்லாவற்றையும் நன்றாக மனப்பாடம் செய்தும் அந்த சமயத்தில், அந்த நேரத்திற்கு என்ன வார்த்தைகளைப் போட்டு பேச வேண்டும். எதை எழுதவேண்டும். என்று சிலருக்கு புரியாது. இது ஒன்றும் குணப்படுத்த முடியாத ஒரு வியாதி அல்ல. சுலபமான முறையில் இதை சரி செய்து விடலாம். நீங்கள் மாணவர்களாக இருந்தாலும் அல்லது பெரியவர்களாக இருந்தாலும் இந்த நான்கு விஷயங்களை பின்பற்றினாலே போதும். உங்களது ஞாபக சக்தி திறன் கட்டாயம் அதிகரிக்கும்.

1. ஆர்வம்: எந்தவொரு செயலையும் ஆர்வத்தோடும், அக்கறையோடும் செய்யும் போது அது நமக்கு மறக்கவே மறக்காது. படிப்பதன் மூலம் புதியதாக பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தோடு செயல்படுவதன் மூலம், நம்மால் நம் மூளைக்கு கொண்டு செல்லும் எப்படிப்பட்ட விஷயங்களையும் எளிதில் மறந்துவிட முடியாது. கண் புத்தகத்தை பார்த்துக்கொண்டிருக்கும். மூளையும், மனதும் வேறொன்றை யோசித்துக் கொண்டிருக்கும். இப்படி இருந்தால் நீங்கள் படிப்பது நிச்சயமாக உங்களுக்கு நினைவில் இருக்காது.

2. காட்சி படுத்துவது: நாம் படிப்பதை நம் மனதிற்குள் ஒரு காட்சியாக பதிவு செய்துகொள்ள வேண்டும். அதாவது ஒரு விஷயத்தை படித்து மனப்பாடம் செய்வதை விட, அதை ஒரு காட்சியாக, கதையாக வடிவமைத்து புரிந்துகொண்டு படிப்பது வாழ்க்கையில் என்றுமே மறக்காது. நல்ல திரைப்படத்தை ஒரு முறை பார்தால், பல வருடங்கள் கழித்தும் அந்த படத்தின் கதையை சொல்லுவோம். இதுவே அதற்கு உதாரணம். நீங்கள் அறியாத ஒரு விஷயத்தை தெரிந்து தெரிந்து கொள்ளும் போதோ அல்லது புதியதாக கற்கும்போதோ, உங்களுக்கு முன்னதாகவே தெரிந்த ஏதாவது ஒரு விஷயத்தில் தொடர்புபடுத்திக் கொள்ள முடியுமா என்று பாருங்கள். நமக்கு அறியாத ஒரு விஷயத்தை, நன்கு அறிந்த விஷயத்தோடு தொடர்புபடுத்தி படிக்கும் போது அது நமக்கு என்றும் நினைவில் நிற்கும். சுலபமான எடுத்துக்காட்டு பழைய பாடல்களை, புது பாடல்களாக ரீமேக் செய்யும்போது பழைய பாடல்களின் வரிகள் கூட நமக்கு மனப்பாடம் ஆகிறது அல்லவா அப்படித்தான்.

3. அறிந்ததை பயன்படுத்தாமல் இருக்கக்கூடாது: நாம் எவ்வளவு பெரிய அறிவாளிகளாக இருந்தாலும், நாம் படித்ததை நினைவு கூறாமல், எதற்கும் பயன்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டோம் என்றால், நிச்சயம் நாம் படித்ததோ, கற்றுக்கொண்டதோ மறந்து போகத்தான் செய்யும். அதை பயன்பாட்டில் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். படித்ததை குறிப்புகளாக எழுதி, மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொண்டிருந்தால் அது நல்லது. இல்லை என்றால் நீங்கள் படித்ததை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு சொல்லித் தரும் விதத்தில் நீங்கள் படித்த விஷயங்கள் இன்னும் ஆழமாக பதியுமே தவிர என்றுமே மறக்காது.

4. இப்படி எல்லாம் செய்தால் கூட  படித்தது மறந்துதான் போகின்றதா? இறுதியாக இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்தால்! பயம். படித்ததும், கற்றுக் கொண்டதும் மறந்து போய்விடுமோ என்ற பயம் நம்மிடத்தில் இருந்தால் நிச்சயம் மறந்து போகத்தான் செய்யும். நான் படித்தவை எல்லாம் நன்றாக புரிந்து கொண்டுதான் படித்து இருக்கின்றோம். தேர்வில் மட்டுமல்ல, தேர்வு முடிந்த பிறகும் அவை நம் நினைவில் இருக்கும் என்பதை, நம் மனதில் வைத்துக் கொண்டாலே போதும். தேர்வாக இருந்தாலும், நேர்காணலாக இருந்தாலும் பயம் இல்லாதவர்கள் நிச்சயமாக வெற்றி அடைய முடியும்.

https://dheivegam.com/how-to-increase-memory-power/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.