Jump to content

சீனாவிடம் இருந்து ஒட்சிசன் கேட்டது இலங்கை! - வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய ஒட்சிசனை உடனடியாக வழங்குவதற்கு சீனாவின் உதவியை இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், கொழும்பிலுள்ள சீனத் தூதர் சீ ஷென்ஹொன்னிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது இது குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான தொடர்ச்சியான ஆதரவுக்கு சீன அரசுக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளை, சீனாவின் உறுதியான உதவிக்கு வெளிவிவகார அமைச்சர் தனது பாராட்டை தெரிவித்தார்.

இந்நிலையில், இலங்கையின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதில் சீனாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை சீனத் தூதர் மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த கலந்துரையாடல் கோவிட் -19 ஒத்துழைப்பு, பொருளாதார மேம்பாடு, வறுமை ஒழிப்பு மற்றும் சீனா மற்றும் இலங்கை இடையே பலதரப்பு ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, இந்தியாவில் இருந்து முதல் தொகுதி ஒட்சிசன் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள், இந்தியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்திருந்தன.

இதில், சென்னையில் இருந்து 40 தொன் மருத்துவ ஒட்சிசனை ஏற்றிவந்த கப்பல், நேற்று இரவு இலங்கையை வந்தடைந்து விட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம், தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.  

https://tamilwin.com/article/sri-lanka-heard-oxygen-from-china-1629578895?itm_source=parsely-detail

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய ஒட்சிசனை உடனடியாக வழங்குவதற்கு சீனாவின் உதவியை இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐயா ஏன் இந்தியாவை கேக்கவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஓட்ஸிசன் பிரச்சனை!  இந்தியாவிடம் இருந்தும் பெற்றுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய படிப்பு பரீட்சை எல்லாம் வைக்கும் சொறீலங்காவுக்கு.. ஒக்சிசனை பிரித்தெடுத்து தயாரிக்கக் கூட வக்கில்லை. அந்தளவுக்கு வெறும் ஏட்டுச் சுரைக்காய் படிப்பு தான் அங்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய ஒட்சிசனை உடனடியாக வழங்குவதற்கு சீனாவின் உதவியை இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கேட்காமலே உதவி செய்தவனிட்டையே உதவி கேட்க வேண்டியிருக்கு எண்டால்.....????????
நாட்டின்ரை நிலமை படு மோசம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

கேட்காமலே உதவி செய்தவனிட்டையே உதவி கேட்க வேண்டியிருக்கு எண்டால்.....????????
நாட்டின்ரை நிலமை படு மோசம்

அவயின்டை நாட்டிலையே உதுதான் பிரச்சின...பஸ்சு ரெய்னிலேயே கோக்கான் மாதிரி தூக்கித் தியிறவை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

ஐயா ஏன் இந்தியாவை கேக்கவில்லை?

இந்தியாவும் அனுப்பியுள்ளது அண்ணை ஆனால் போதாமல் போகும் போல இருக்கு இறப்பு 7200 ஐ தொட்டு இருக்கிறது இது இன்னும் அதிகரிக்கும் போல் தெரிகிறது 

6 hours ago, nedukkalapoovan said:

பெரிய படிப்பு பரீட்சை எல்லாம் வைக்கும் சொறீலங்காவுக்கு.. ஒக்சிசனை பிரித்தெடுத்து தயாரிக்கக் கூட வக்கில்லை. அந்தளவுக்கு வெறும் ஏட்டுச் சுரைக்காய் படிப்பு தான் அங்கு. 

இஞ்ச பிரித்தெடுக்கிற நேரத்தில் கொரோனா பிரிச்சு மேஞ்சிடும் எல்லோரையும்  பிறகு நீங்க ஆழ்ந்த அனுதாபத்தை சொல்லி கடந்திடுவீங்க 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இஞ்ச பிரித்தெடுக்கிற நேரத்தில் கொரோனா பிரிச்சு மேஞ்சிடும் எல்லோரையும்  பிறகு நீங்க ஆழ்ந்த அனுதாபத்தை சொல்லி கடந்திடுவீங்க 

கதையோட கதையாய்.......போடாமல் கிடப்பில கிடந்த மில்லியன்கணக்கான அஸ்ராசெனிக்கா ஊசியளை உக்கிரேனுக்கு  ஓசியாய் ஜேர்மன்காரன் குடுத்து தள்ளீட்டான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

கதையோட கதையாய்.......போடாமல் கிடப்பில கிடந்த மில்லியன்கணக்கான அஸ்ராசெனிக்கா ஊசியளை உக்கிரேனுக்கு  ஓசியாய் ஜேர்மன்காரன் குடுத்து தள்ளீட்டான் 

நல்ல மனசுக்காரன் சாமி உங்க நாட்டுக்காரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நல்ல மனசுக்காரன் சாமி உங்க நாட்டுக்காரன்

இஞ்சத்தையான் சனம் வேண்டாம் எண்டு சொன்ன ஊசியள் எண்டதை நீங்கள் கவனத்திலை எடுக்கோணும் கண்டியளோ. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

இஞ்சத்தையான் சனம் வேண்டாம் எண்டு சொன்ன ஊசியள் எண்டதை நீங்கள் கவனத்திலை எடுக்கோணும் கண்டியளோ. 😁

இல்லாதவனுக்கு எது கொடுத்தாலும் அதன் நிகர் வேறு சாமி சாப்பிட்டு கிடந்தவனுக்கு சாப்பிடாமல் கிடந்தவனுக்கும்ம் ஏற்படும் பசியே வேறல்லவா

இஞ்ச கூடத்தான் ஒரு ஊசியும் போடமாட்டோம் என ஒரு குறுப்பு இருக்கிறது தானே

தமக்கு விருப்பமான தடுப்பூசிக்காக காத்திருக்காமல், கிடைக்கபெறும் ஏதேனும் ஒரு கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இல்லாதவனுக்கு எது கொடுத்தாலும் அதன் நிகர் வேறு சாமி சாப்பிட்டு கிடந்தவனுக்கு சாப்பிடாமல் கிடந்தவனுக்கும்ம் ஏற்படும் பசியே வேறல்லவா

இஞ்ச கூடத்தான் ஒரு ஊசியும் போடமாட்டோம் என ஒரு குறுப்பு இருக்கிறது தானே

தமக்கு விருப்பமான தடுப்பூசிக்காக காத்திருக்காமல், கிடைக்கபெறும் ஏதேனும் ஒரு கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று நான் அறிந்ததின் படி எனது ஊரில் பல வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டு விட்டதாம். அதில் எனது சொந்தங்கள் உட்பட...

இதில்  இன்னொரு சம்பவம் எனது ஊரில் (my family 😎)

ஊரடங்கு சட்டத்தையும் மீறி   ஐம்பது பேருடன் திருமணம் நடந்த வீட்டில் போலிசார் புகுந்ததால் மணமக்கள்,மாமா மாமிமார் தவிர்த்து அனைவரும் சிதறி தப்பியோட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலை… 2000 ஊசிப் போத்தல், வைத்திருந்த பெட்டி ஒன்று களவு போயிட்டுதாம் என்று கதை அடிபடுகுது.

என்னத்தை களவு எடுக்கிறதெண்டு, விவஸ்தையே இல்லாமல் போச்சு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையிலை… 2000 ஊசிப் போத்தல், வைத்திருந்த பெட்டி ஒன்று களவு போயிட்டுதாம் என்று கதை அடிபடுகுது.

என்னத்தை களவு எடுக்கிறதெண்டு, விவஸ்தையே இல்லாமல் போச்சு. 

இதுதான் இப்ப பொன் .....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.