Jump to content

ஜேர்மனி ஊடகத்தில் பணியாற்றும்... ஊடகவியலாளரின், உறவினரைக் கொன்ற தலிபான்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி ஊடகத்தில் பணியாற்றும் ஊடகவியலாளரின் உறவினரைக் கொன்ற தலிபான்கள்!

ஜேர்மனி ஊடகத்தில் பணியாற்றும்... ஊடகவியலாளரின், உறவினரைக் கொன்ற தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானை தங்களது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தலிபான்கள், கடந்த காலங்களில் வெளிநாட்டு துருப்புகளுக்கு உதவி செய்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் ஜேர்மனியைச் சேர்ந்த ‘டாயிஷ் வில்லே’ என்ற ஊடகத்தில் பணியாற்றி வந்த ஒரு ஊடகவியலாளரின் உறவினரை தலிபான்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

குறித்த ஊடகவியலாளரைக் கண்டுபிடிக்க நடத்தப்பட்ட சோதனையில் அவரது உறவினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதோடு மற்றொரு உறவினர் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இவரைப் போலவே இன்னும் மூன்று டாயிஷ் வில்லே ஊடகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை தலிபான்கள் வீடுவீடாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்து டாயிஷ் வில்லேவின் இயக்குநர் பீட்டர் லிம்பார்க் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் தங்கள் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பயங்கர ஆபத்தில் இருக்கிறார்கள்.

காபூல் மற்றும் ஆப்கானிஸ்தானின் மாகாணங்களில் தலிபான்கள் முறையாக ஊடகவியலாளர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி. நமக்கு நேரம் குறைவாகத் தான் இருக்கிறது’ என கூறினார்.

முன்னதாக நேட்டோ மற்றும் முன்னாள் ஆப்கான் அரசாங்கத்திற்காக பணியாற்றியவர்களை தேடும் பணியில் தலிபான்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளதாக நோர்வேயை சேர்ந்த உலகளாவிய பகுப்பாய்வு மையம் வெளியிட்டுள்ள இரகசிய அறிக்கையில் தெரியவந்தது. இது தற்போது உண்மையாகியுள்ளது.

https://athavannews.com/2021/1235463

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2021 தலிபான்.. பழைய கள்.. புதிய பாத்திரம். 

தலிபானின் மீள் எழுச்சி.. உலக இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதத்திற்கு புதிய புத்தூட்டம். இதற்கு பைடன் தான் முழுப்பொறுப்பும் ஏற்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்லரசுகள் தமது  நலன் கருதி போரென்று பிறநாடுகளினுள் நுழையும்போது அங்குள்ள மக்களில் ஒரு சாராரை  தமக்கு சார்பாக பயன்படுத்திவிட்டு தமது காரியம் முடிந்ததும் அவர்களை அம்போ என்று விட்டுவிட்டு கிளம்பிவிடுவார்கள்,

அவர்கள் போனதும் இடையில் நின்று தகவல் பரிமாற்று வேலை செய்தவர்கள் தேடி தேடி கொல்லப்படுவார்கள்.அது அன்றைய பனிபோர் காலத்திலிருந்து  இலங்கையில் இந்தியபடைகள் வந்து போனவரை தொடர்ந்தது , இன்று ஆப்கானில் தொடர்கிறது.

அந்நியபடைகளுக்கான ஆதரவில் உள்ளூர் மக்கள் எப்போதும் விழிப்பாக இருந்தே ஆகவேண்டும், அவர்கள் தமது காரியம் முடியும் மட்டுமே உள்ளூர் மக்கள்மேல் அக்கறை காண்பிப்பதுபோல் பாவனை செய்வார்கள்,சிரித்து பேசுவார்கள்..

சர்வவல்லமை பொருந்திய நேட்டோ படைகள் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக அவர்களுக்கு ஆதரவளித்த ஆப்கான் மக்களின் உயிருக்கு எந்த உத்தரவாதமும் கொடுக்காமல், அவர்களை தலீபான்கள் கையில் ஒப்படைத்துவிட்டு   அவர்கள் பாட்டுக்கு மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு புறப்பட்டு சென்றது நய வஞ்சகத்திலும் நயவஞ்சகம், நம்பிகை துரோகம்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.