Jump to content

நான்கு விடயங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து செயற்பட முடிவு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு விடயங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து செயற்பட முடிவு!

நான்கு முக்கிய விடயங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து செயற்பட முடிவு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான கோரிக்கை, அரசியல் கைதிகள் விடுதலை, தாயகப் பரப்பில் நடைபெறும் திட்டமிட்ட காணி அபகரிப்பு நடவடிக்கைகளை நிறுத்துதல் மற்றும் அரசமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நடைமுறைப்படுத்த அரசையும் இந்தியாவையும் கோருதல் உள்ளிட்ட விடயங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து செயற்பட முடிவெடுத்துள்ளன.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து மெய்நிகர் இணைய வழியின் ஊடாக நேற்று தமக்குள் பேச்சு நடத்தியுள்ளனர். தமிழ் மக்களின் அரசியல் விடயங்களில் ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்படும் நோக்கிலே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் மேற்படி நான்கு விடயங்களில் ஒருமித்துச் செயலாற்றுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், ரெலொவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், அந்தக் கட்சியின் உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், குருசுவாமி சுரேந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா, ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

புளொட் தலைவர் சித்தார்த்தன் இதில் கலந்துகொள்வார் எனக் கூறப்பட்டது. எனினும், மெய்நிகர் உரையாடல் இணைப்பு ஏற்பாடு சீரமைக்கப்படுவதில் சிக்கல் நேர்ந்தமையால் அவர் பங்குபற்ற முடியாமல்போனது.
ஒருமித்த நிலைப்பாட்டில் செயலாற்றக் கூடிய விடயங்கள், எதிர்வரும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் மற்றும் தமிழ்த் தரப்பினரோடு அரசு முயற்சிக்கும் பேச்சு ஆகியவையும் முக்கிய விடயங்களாக இதன்போது பேசப்பட்டன.

வரவிருக்கும் ஐ.நா. கூட்டத் தொடரில் 46/1 தீர்மானம் சம்பந்தமாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது. அதன் பொருட்டு தமிழ்த் தரப்பினால் ஒருமித்து அறிக்கை ஒன்று தயாரித்து சமர்ப்பிப்பது என்றும், தீர்மானத்தில் உள்ள விடயங்களை அரசு நிறைவேற்றாமலும் அதேவேளை அவருக்கு எதிராகவும் செயற்படுவதைச் சுட்டிக்காட்டியும் குறிப்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அரசால் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும்  நடவடிக்கைகளின் விபரங்களையும் அந்த அறிக்கையில் உள்ளடக்குவது என்றும் இணக்கம் காணப்பட்டது.
 

 

https://newuthayan.com/நான்கு-விடயங்களில்-தமிழ்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல்… ஏதாவது, கிட்டடியில் வருகின்றதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே கஜேந்திரன்களை காணோம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

எங்கே கஜேந்திரன்களை காணோம்??

கஜேந்திரகுமாருக்கும்  ,அவர் குடும்பத்திற்கும் கொரோனா கேள்விப்படவில்லையா ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

கஜேந்திரகுமாருக்கும்  ,அவர் குடும்பத்திற்கும் கொரோனா கேள்விப்படவில்லையா ?
 

இலங்கையில் ஏற்பட்டுள்ள மரண வீதம் 7300ஐ கடந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ரதி said:

கஜேந்திரகுமாருக்கும்  ,அவர் குடும்பத்திற்கும் கொரோனா கேள்விப்படவில்லையா ?
 

நீங்கள் செய்தியை முழுமையாக உள் வாங்கினீர்களா? 

(தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து மெய்நிகர் இணைய வழியின் ஊடாக நேற்று தமக்குள் பேச்சு நடத்தியுள்ளனர். )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

நீங்கள் செய்தியை முழுமையாக உள் வாங்கினீர்களா? 

(தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து மெய்நிகர் இணைய வழியின் ஊடாக நேற்று தமக்குள் பேச்சு நடத்தியுள்ளனர். )

நான் செய்தி வாசிக்கவில்லை ...சில நேரம் அவருக்கு உடம்பு சரியில்லாமல் இருக்க கூடும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நான் செய்தி வாசிக்கவில்லை ...சில நேரம் அவருக்கு உடம்பு சரியில்லாமல் இருக்க கூடும் 

இரண்டு கஜேந்திரனுக்குமா? :(

Link to comment
Share on other sites

சரியான தருணத்தில் சரியான முடிவெடுக்கும் கடமை தமிழர் தலமைக்கு உண்டு.

இல்லையேல் இதுவும் கடந்து போகும் என்று எமது இயலாமையை தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான கோரிக்கை, அரசியல் கைதிகள் விடுதலை, தாயகப் பரப்பில் நடைபெறும் திட்டமிட்ட காணி அபகரிப்பு நடவடிக்கைகளை நிறுத்துதல் மற்றும் அரசமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நடைமுறைப்படுத்த அரசையும் இந்தியாவையும் கோருதல் உள்ளிட்ட விடயங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து செயற்பட முடிவெடுத்துள்ளன.

இனிமேதானா?

அப்போ இவ்வளவு நாளும் எந்த விடயங்கள் சம்பந்தமாக தமிழ் தேசிய கட்சிகள் இயங்கிகொண்டிருந்தன என்று யாராவது கேட்டு சொல்ல முடியுமா?

தமிழ்தேசிய கட்சிகள் என்பவை தமிழர்பகுதியில் வாக்கு வாங்கி  சிங்கள பாராளுமன்றம்போய்  சிங்கள அரச ஊதியம்  வாங்க அலைபவை.,

அவர்களுக்கு திடீர் திடீர் என்று ஏதாவது பேச தோன்றும், அப்படி பேச தோன்றும்போது உடனடியாக அவர்களுக்கு நினைவுக்கு வருவது தமிழர் பிரச்சனை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.