Jump to content

ராஜபக்சக்களின் படு தோல்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Gotabaya-Mahinda-Basil-678x381.jpg

இங்கையின் பொருளாதாரம் படு மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது. ஒரு நாடு -ஒரு சட்டம் – நாட்டைத் தட்டி நிமித்துகிறேன் எனப் பதவிக்கு வந்த ராஜபக்சக்களால் நாட்டைச் சீனாவிடம் அடைக்கலம் வைக்க முடிந்ததே தவிர நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப முடியவில்லை. ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் போன்றவற்றில் பெரும் வெற்றி ஈட்டிய ராஜபசக்களின் செல்வாக்கு தற்பொழுது தேய்ந்து போய்க்கொண்டிருக்கின்றது. இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, அந்நிய செலவாணியின் வீழ்ச்சி, என ஓட்டுமொத்த பொருளாதாரமே வீழ்ச்சி அடைந்துள்ளது. எரிபொருள், உரம்  மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. வெளிநாடுகளில் வாங்கிய கடனை கட்ட முடியாமல்  திணறுகிறது இலங்கை. இந்து சமுத்திரத்தின் முத்து இப்போது கடனில் தாண்டுவிடும் முத்தாகி விட்டது. இலங்கை கடன் கொடுக்க முடியாது திவாலாகும் நிலை சாத்தியம் என கூறப்படுகிறது.

முதலில் மஹிந்த ராஜபக்ச நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வார் என்றார்கள். அதன் பின்னர் கோத்தபாய கொண்டு செல்வார்கள் என்றார்கள். இப்பொழுது பசில் நாட்டின் பொருளாதாரத்தை நிமித்தப் போகிறார் என்கிறார்கள். இவர்கள் எவரிடமுமே மக்கள் சார்பான நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கான அரசியல் பொருளாதாரக் கொள்கை இல்லை. இனத்துவேசத்தை வளர்த்து விடுவதை அரசியல் கொள்கையாவும் -சீனாவிடம் கடனை வாங்குதலை பொருளாதாரக் கொள்கையாகவும் மட்டுமே கொண்டிருக்கின்றனர். பசில் அல்ல அதன் பின்னர் நாமல் வந்தாலும் இந்தப் பாதையில் பயணித்து நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப முடியாது. கொரோனாவைக் கட்டுப்படுத்த ,சரிந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசிடம் எந்த விதமான காத்திரமான வேலைத்திட்டமும் இல்லை என்பதே நிதர்சனம்.

 பசில்  நிதியமைச்சர் ஆனவுடன் பங்குச் சந்தை ஆகா ஓகோ என வளரப் போகிறது என்றெல்லாம் ஆருடம் கூறினார்கள். பசில் நிதியமைச்சர் ஆன தொடக்கம் பங்கு சந்தையில் எதுவித மாற்றமும் நிகழவில்லை. ஆக இவர்கள் இல்லாத ஒன்றை ஊதிப் பெருப்பித்து இருப்பது போல் காட்டுகின்றனரே தவிர உண்மையான பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை. அண்மையில் இலங்கை மத்திய வங்கி வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகளவான பணத்தை அச்சிட்டுள்ளது. அண்மையில் 20845 கோடி ரூபா பெறுமதியான , பணம் அச்சிடப்பட்டுள்ளது. இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியையே அரசின் இந் நடவடிக்கை எடுத்துக் காட்டுகின்றது. அரச வருமானம் அரசின் அன்றாட நடவடிக்கைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு உள்ளது

தமது அதிகாரத்தை நிலை நிறுத்தி வைத்துக் கொள்ளுதலே – குடும்ப ஆட்சியை விஸ்தரித்தலே, ராஜபக்ச குடும்பங்களின் நோக்கமாக உள்ளது. அடுத்த 2024 ஜனாதிபதி தேர்தலிலும் கோட்டா, தானே போட்டியிடுவது  அல்லது பசிலை நிறுத்துவது, அதன் பின் வரும் ஜனாதிபதி தேர்தலில் நாமலை நிறுத்துவது என தமது அதிகாரத்தை தக்க வைப்பதிலேயே ராஜபக்ச குடும்பம் மும்முரமாக நிற்கின்றது.   நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் பி திஸநாயக்க , பிரியங்கர ஜயரத்ன போன்றோர் தம்மால் சுயாதீனமாக இயங்கமுடியவில்லை என வெளிப்படையாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்கள். ராஜபக்ச குடும்ப அரசு அனைத்து அதிகாரத்தையும் தமக்குள் வைத்துக்கொண்டு இருக்கின்றது என்பது இதிலிருந்து புலனாகின்றது

மறுபக்கத்தில் பொருளாதார நெருக்கடியில் திணறும் இவ்வரசைக் கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் மும்முரமாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கு ஆளும் கட்சியும், ஆட்சியை கைபற்றிக் கொள்வதற்கும் எதிர்கட்சியும் என  இரு கட்சிகள் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றன. தலையணையை மாற்றினால் தலைவலி தீராது என்பது போல், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் பிரச்சனை தீர்க்கப்படப்போவதில்லை. இங்கு மக்கள் பிரச்சனை என்பது இரண்டாம் பட்சமே.

 நாட்டின் தேசிய வளங்கள் ஒவ்வொன்றும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு கொண்டு வருகின்றது. கொழும்புத் துறைமுக நகர் சீனாவுக்கு ,திருகோணமலை துறைமுகம் மற்றும் எண்ணெய் குதங்கள் இந்தியாவுக்கும் , கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையம் அமெரிக்காவிற்கும் என மோடிக்கு நிகராக நாட்டை கூறு போட்டு விற்கின்றனர். தமது சொந்த சொத்துக்கள் போல் வளங்களை விற்பனை செய்வதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய பாதிப்பு உருவாக்கி உள்ளது. சீனா  அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் தமது அரசியல் அதிகாரப் போட்டியை நடத்தும் களமாக மாறிக்கொண்டிருக்கின்றது இலங்கை. தனது தலையை வெட்ட தானே தலையைக் கொண்டு போய்க் கொடுக்கும் ஆடு போல் செயற்படுகின்றது தற்போதைய கோத்தபாய அரசு

சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து அண்மையில் 70 கோடி டொலர் கடனாகப் பெற ஒப்பந்தம் கைச்சாத்தானது. அது தவிர மேலும் பல கோடி டொலரை கடனாகப் பெற இலங்கை அரசு உத்தேசித்துள்ளது. அது தவிர ஏற்கனவே வறுமை நாடான பங்களாதேஷிடமிருந்து கூட  20 கோடி டொலரை கடனாகப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. உலகம் முழுக்க கடனுக்கு கையேந்தும் நிலைக்கு சென்றுவிட்டது இலங்கையின் பொருளாதாரம்.

‘யாழ்ப்பாண மக்களின் கருத்து என்ன என்பது குறித்து எனக்கு அக்கறையில்லை. அவர்களைப் பற்றி நாம் இப்போது சிந்திக்க முடியாது’ என 1983 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்த்தன டெலிகிராப் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். ஜே ஆரின் பாணியைப் பின்பற்றும் கோத்தபாயவும் சிறிய மாற்றத்துடன்  இதே கருத்தை தான் கொண்டிருக்கின்றார். அதாவது ஜே ஆர் யாழ்ப்பாண மக்களைப் பற்றி மட்டும்தான் கருத்திற்கொள்ளவில்லை கோத்தபாயவோ ஒரு படி மேலே சென்று ஒட்டு மொத்த இலங்கை மக்களைப் பற்றியே கருத்திற் கொள்ளவில்லை என்பது அவரின் அரசியல் பொருளாதார நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுகின்றது. இவ்வரசை நம்பி வாக்களித்த 69 லட்சம் மக்களை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இலங்கை மக்களையும் இவ் அரசு ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது.

கொரோனா பெரும்தொற்று பரவும் இந்த மோசமான காலகட்டத்தில் கூட அதிகாரத்தைக் கைப்பற்றுவதையும் தமது குடும்பத்தை விஸ்தரிப்பதையும் மட்டுமே நோக்காக கொண்டு இயங்கும் இவ்வரசை மக்கள் இனியும் நம்பிக்கொண்டிருக்காமல், மக்கள் சார்பான அரசியல் பொருளாதாரக் கொள்கைகளுடன்  இயங்கும் அமைப்புகளுடன் இயங்கி தமக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ளவேண்டும். 

https://ethir.org/?p=6883

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மினத்தின் மீது கொட்டப்பட்ட அடிக்கொரு குண்டுகளுக்கும் இன்று நாட்டை வித்தும் ......???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

இங்கையின் பொருளாதாரம் படு மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது.

சிறிலங்காவின் வங்குரோத்து

இது எக்காலமும்  எக்காரணம் கொண்டும் ஈழத்தமிழரை பாதிக்காது.
இதற்கு ஆயிரம் காரணங்கள் உதாரணங்கள் சொல்லலாம்.

 

Link to comment
Share on other sites

On 24/8/2021 at 11:25, குமாரசாமி said:

சிறிலங்காவின் வங்குரோத்து

இது எக்காலமும்  எக்காரணம் கொண்டும் ஈழத்தமிழரை பாதிக்காது.
இதற்கு ஆயிரம் காரணங்கள் உதாரணங்கள் சொல்லலாம்.

 

ஆயிரம் வேண்டாம், ஒரு இருநூறை எடுத்துவிடலாமே? ஈழத்தமிழரெல்லாம் ஐரோப்பாவிலும் கனடாவிலும் இருப்பவர்கள் என்ற கணக்கு என்றால் ஆயிரமும் விளக்கத்துக்கு வந்துவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/8/2021 at 19:25, குமாரசாமி said:

இது எக்காலமும்  எக்காரணம் கொண்டும் ஈழத்தமிழரை பாதிக்காது.
இதற்கு ஆயிரம் காரணங்கள் உதாரணங்கள் சொல்லலாம்.

நடுக்கடலில் நித்திற்கும் 200 அடி  கப்பலில் ஓர் முனையில்  பெரிய வெடிப்பு ஏற்றப்பட்டு தண்ணீர் உள்ளே வருகிறது, வடிப்பும் பெரிதாகிறது, போதாகுறைக்கு புயலும் வருவதாக காலநிலை அறிவிப்பும் வருகிறது.

கப்பலில் இருக்கும் எவராவது, நான் வெடிப்பு இல்லாத முனையில் இருப்பதால், ஒரு பிரச்னையும்  இல்லை என்று  எவராவது சொல்ல முடியமா?    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் முடியாது   ஆனால்  ஒரு  தீவிலுள்ளவர்கள்  சொல்லலாம்  தீவை இரண்டாக  பிரித்து விட்டால் சரி 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

ஆயிரம் வேண்டாம், ஒரு இருநூறை எடுத்துவிடலாமே? ஈழத்தமிழரெல்லாம் ஐரோப்பாவிலும் கனடாவிலும் இருப்பவர்கள் என்ற கணக்கு என்றால் ஆயிரமும் விளக்கத்துக்கு வந்துவிட்டது.

ஈழத்தமிழர் அபிவிருத்து நிதியம் அல்லது ஈழத்தமிழர் அபிவிருத்தி அறக்கட்டளை என பகிரங்கமாக ஏதாவது உள்ளதா?

விடுதலைப்புலிகள் காலத்தில் யுத்தம் சம்பந்தமில்லாமல் புலம்பெயர் மக்கள் மனவுமந்து வழங்கிய நிதிகள் எல்லாம் உங்கள் குருட்டு மூளைக்கு ஏதாவது தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

நடுக்கடலில் நித்திற்கும் 200 அடி  கப்பலில் ஓர் முனையில்  பெரிய வெடிப்பு ஏற்றப்பட்டு தண்ணீர் உள்ளே வருகிறது, வடிப்பும் பெரிதாகிறது, போதாகுறைக்கு புயலும் வருவதாக காலநிலை அறிவிப்பும் வருகிறது.

கப்பலில் இருக்கும் எவராவது, நான் வெடிப்பு இல்லாத முனையில் இருப்பதால், ஒரு பிரச்னையும்  இல்லை என்று  எவராவது சொல்ல முடியமா?    

நான் சொல்ல வருவது எந்த கஷ்டத்திலும் உயிர் பிழைத்த சமுதாயம் அது. 

நான் வாழ்ந்த ஊரைப் போல் பல்லாயிரம் ஊர்கள் இயற்கையை மட்டும் நம்பி வாழ்பவர்கள்.

கூப்பன் மாவும் தேவையில்லை
மின்சாரமும் தேவையில்லை
டுக்குட்டுக்கு வாகனமும் தேவையில்லை.


இனியில்லையென்ற யுத்தம் நடந்தும் இன்னும் தலைநிமிர்ந்து நிற்கும் வடக்கு கிழக்கு. அவ்வளவிற்கு இயற்கையின் கொடை இலங்கையில் உள்ளது.

தொடர்ந்தால் தொடரலாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kandiah57 said:

ஆம் முடியாது   ஆனால்  ஒரு  தீவிலுள்ளவர்கள்  சொல்லலாம்  தீவை இரண்டாக  பிரித்து விட்டால் சரி 😂

இந்த புலம்பெயர்ந்த மக்கள் கூட்டம் என்பது பல நாடுகளை வாழவைக்கும். வைக்கிறது. இலங்கையை தவிர.

இன்று கூட தமிழருக்கு ஒரு நிரந்தர தீர்வை வைக்க முடிந்தால்???? இலங்கை வளர்ச்சி பெற்ற நாடாக மாறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, விசுகு said:

இந்த புலம்பெயர்ந்த மக்கள் கூட்டம் என்பது பல நாடுகளை வாழவைக்கும். வைக்கிறது. இலங்கையை தவிர.

இன்று கூட தமிழருக்கு ஒரு நிரந்தர தீர்வை வைக்க முடிந்தால்???? இலங்கை வளர்ச்சி பெற்ற நாடாக மாறும்.

உண்மை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலிபான்களின் அனைத்துப் பயங்கரவாதத்தையும் அங்கீகரித்து அவர்களுடன் உறவாடி நிற்கும் அமெரிக்கனை வைச்சு புலிகளுக்கு வகுப்பெடுத்தவர்களும் இதற்குள் நிற்கினம். இப்ப அமெரிக்காவுக்கு என்ன வகுப்பெடுப்பினமோ தெரியல்ல.

தலிபான்கள்.. அமெரிக்காவை ஒரு புறம்.. மறுபுறம் சீனாவையும் அணைச்சுக் கொண்டு.. அரபுலகத்தையும் தாஜா பண்ணிக்கிட்டு போகிறார்கள். ஹிந்தியா.. சார்க் எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. 

புலிகள் ஹிந்தியாவையும் மேற்குலகையும் கூடிய கவனத்தில் வைத்த வேளை மற்றைய தரப்புக்களை அணுகக் கூட இல்லை. இது அவர்களின் இராஜதந்திரத் கொள்கை வகுப்புத் தோல்வி. அதுவே அவர்களை அழிக்க நினைத்தவர்களுக்கு சவாலற்ற சூழலையும் உருவாக்கித் தந்துவிட்டது. 

புலிகளை அழிக்க உதவிய அணைவரும்.. இன்று தலிபான்களை அவர்களின் பயங்கரவாதத்தை ஏற்று நிற்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.

ஆக பயங்கரவாதத்திற்கு ஒரு வரவிலக்கணம் கிடையாது. எல்லாம் அவரவர் தேவைக்கு ஏற்ப தான் அமைகிறது. இதில புலிகளுக்கு வகுப்பெடுப்பு..?!

ராஜபக்சங்கள் எப்பவோ தோற்றுவிட்டார்கள். அதுதான் ரோட்டை வைச்சு அரசியல் செய்யினம். அது நாட்டை கோட்டை விடும் அளவுக்கு போயிட்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kadancha said:

கப்பலில் இருக்கும் எவராவது, நான் வெடிப்பு இல்லாத முனையில் இருப்பதால், ஒரு பிரச்னையும்  இல்லை என்று  எவராவது சொல்ல முடியமா?    

பல பாரிய புயல்களையும் பாரிய நீண்ட கடலோட்டம்களையும் கண்டவர்களுக்கு அந்த கப்பல் தாழ்வது ஒரு பிரச்சனையே இல்லை கடலே காணாத மனிதர்களுக்குத்தான்  அந்த பிரச்சனை அவர்களின் வாழ்வின் கடைசி நேர பிரச்சனை யாக இருக்கும் .

இப்ப இப்படியான கருத்துக்கள் எழுவது இயற்கைதான் ஆனால் யதார்த்தம் இன்னும் சில வருடங்களில் தெரிந்து விடும் .

குடிக்கவேண்டாம் அப்பத்தான் பணம் அனுப்புவேன் என்று நட்ப்பு ஒன்று அவரின் சிறிய தகப்பனுக்கு சொல்ல  சித்தப்பரோ  போடாங் நீயும் உந்த பணமும் என்று சொல்லிவிட்டு விசுவமடு காட்டுக்குள் அவரின் சொந்த நிலத்தில் ஒதுங்கிக்கொண்டு சுய விவசாயம் மரக்கறியில் இருந்து அரிசி பால் இறைச்சி மட்டும் அல்ல அவரின் சொந்த தேவைக்கு கசிப்பும் காய்ச்சி நன்றாய் குடித்துவிட்டு வாட்ஸுப் கோலில் பிறமகனுடன் வாரத்தில் ஒருநாள் லைவ் பைட்டிங் நடக்கும்🤣 அதுவும் உயர மரமொன்றில் ஏறி இருந்தபடி  .நம்ம சனம் பல தடங்களை கண்டதுகள் பாஸ் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சிலர் ஊரில் இருந்து கிளம்பி ஐரோப்பா வந்த பிறகு ஊரின் நிலைமை தவிர வேறெல்லாவற்றையும் அப்டேற் செய்திருக்கிறார்கள்.

யுத்த காலத்திலும் சரி, பின்னர் சுனாமிக்குப் பின்னரும் சரி தமிழர்கள் தப்பி வாழ்ந்தது உள்ளூர் உற்பத்தியின் தன்னிறைவால் அல்ல! வெளிநாட்டுப் பணம், நிவாரணம் , தொண்டு நிறுவனங்களின் திட்டங்கள் என்பனவே பிரதான காரணங்கள். இதில் வெளிநாட்டுப் பணம் எல்லாத் தாயக தமிழருக்கும் நேரடியாகக் கிடைப்பதில்லை. நிவாரணம், தொண்டு நிறுவனங்கள் முன்பு போல இப்போது மும்முரமாக செயல்படுவதில்லை.

 ஆளுக்காள் மாறி மாறி  முதுகு சொறியச் சுகமாகத் தான் இருக்கும்! அது தானே முக்கியம்?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Justin said:

வெளிநாட்டுப் பணம்

 

பணம் இருந்தாலும், பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது முடங்குகிறது.

 ஏனெனில், letter of credit ஐ வங்கிகள் கொடுக்க மறுக்கிறது அல்லது தாமதிக்க வைத்து, பொருட்களின் அத்தியாவசிய தேவை அடிப்படையில் கையிருப்பில் இருக்கும் டாலர் பகிரப்படுகிறது. அது கூட, காத்திருந்தே பெற வேண்டிய  நிலை.  

 

 

1 hour ago, பெருமாள் said:

பல பாரிய புயல்களையும் பாரிய நீண்ட கடலோட்டம்களையும் கண்டவர்களுக்கு அந்த கப்பல் தாழ்வது ஒரு பிரச்சனையே இல்லை கடலே காணாத மனிதர்களுக்குத்தான்  அந்த பிரச்சனை அவர்களின் வாழ்வின் கடைசி நேர பிரச்சனை யாக இருக்கும் .

 

1 hour ago, பெருமாள் said:

இப்ப இப்படியான கருத்துக்கள் எழுவது இயற்கைதான் ஆனால் யதார்த்தம் இன்னும் சில வருடங்களில் தெரிந்து விடும் .

குடிக்கவேண்டாம் அப்பத்தான் பணம் அனுப்புவேன் என்று நட்ப்பு ஒன்று அவரின் சிறிய தகப்பனுக்கு சொல்ல

cancer க்கு  கீமோ மருந்து எடுக்க முடியாமல் இருக்கிறது. 

ஒன்றை நீங்கள் யோசிக்கவில்லை. 

corana வில் இழப்பு கூடவாயினும், black death அளவு வீதம் இல்லை. black death 75 -200 மில்லியன் காவு கொண்டது ஓர் காரணம், சராசரி உடல் நலம் அந்த நேரத்தில் சராசரி சனத்தொகையில் குறைவு.    

இலங்கையை பொறுத்தவரை, சனத்தொகையின் பெரும் பகுதி 3 நேரம் ஏதோ ஓர் உணவு எடுக்க கூடியதாக இருப்பதால். முழு உலகமும் என்றால் ஒரு நாளைக்கு ஒரு வேளை  உணவு.

இப்படி பொருளாதர  தாக்கம், முழு சமூகத்தின் நோயெதிர்ப்பு தரத்தை குறைக்கும். மறுபடி இன்னொரு corana அலை வந்தால், நிலை என்ன ? 

ஒருவர் குடிப்பதை வைத்து கொண்டு, மில்லியன்  அளவான சனத்தொகைக்கு விளக்கம் கற்பிகிறீர்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Copied
நாங்கள்_சாக மாட்டோம்.
நாங்கள் சாகவே மாட்டோம்.!!!

விலை இன்னும் ஒருமடங்கு அதிகரித்தாலும் நாங்கள் சாகவே மாட்டோம்......💯

எங்கள் அனுபவங்களை விசாரித்துப்பாருங்கள்.💔💔

ஆயிரம் இடம்பெயர்வுகளை சந்தித்தோம் நாங்கள் சாகவே இல்லை.....💥💥💥

பலவருடம் மின்சாரமின்றி வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை.....🤯

எரிவாயு என்றால் என்னவென்று தெரியாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை....💯

எரிபொருள் இன்றியும் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. தொலைபேசி இல்லாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை.....🤳

மரக்கறி இல்லாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை....🌶🥕🥦

சீனி இன்றி பனங்கட்டியுடன் பிளேன்ரீ குடித்தோம் நாங்கள் சாகவே இல்லை....☕(டெல்டா_ரெபி)

அங்கர் இன்றியும் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை.....🥛
பசளை இன்றியிம் விவசாயம் செய்தோம் நாங்கள் சாகவே இல்லை.....🌱🌾

இனவாதப் படுகொலையால் மட்டும் அதிகமாகச் செத்தோம் .....🧟‍♂️

வயலுண்டு, தோட்டமுண்டு, பனையுண்டு, தென்னையுண்டு, கடலுண்டு, குளமுண்டு,
மீனுண்டு உப்புண்டு
பகிர்ந்துண்டு பல்லுயிரோம் பண்புண்டு.
நாம் சாகப்போவதே இல்லை.....

நெருப்பிலும்💥💥 நீந்திக் கரைசேர்வோம்...💥💥💥
உங்களால் இவ்வளவும் தாண்டி நீந்திக் கரைசேர முடியுமானால் மனம் மாறாதிருங்கள.......

நன்றி முகநூல் பதிவுக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பெருமாள் said:

எங்கள் அனுபவங்களை விசாரித்துப்பாருங்கள்.


வன்னியில் உள்ள ஓர் பகுதி சனத்தொகையே, 2009 இல், உண்மையான பகுதி  உணவு பஞ்சத்தை எதிர்நோக்கியது. நல்ல  காலம் அது நீடிக்கவில்லை. நீடித்து இருந்தால், பஞ்சத்தால் இறந்தது, கொல்லப்சட்டத்தை விட கூடாவாக இருந்து இருக்கும்.  

வட கிழக்கின் மற்ற பகுதிகள், மற்றும் இலங்கைத் தீவின் ஏனைய பகுதிகள், உண்மையான உணவு  பஞ்சத்தை சமகால வரலாற்றில் காணவில்லை.  

இந்த அனுபவம் எல்லாம், சிங்கள பகுதிகளுக்கு தாராளமாக எல்லாம் கிடைத்த போது, மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் நடந்த வழங்கல்.

புலிகழும் , அப்படி மட்டுப்படுதப்பட்ட அளவில் வந்ததை பங்கிட்டு எடுத்து வெளிப்படை. 

புலிகளும் அவர்களுக்கும், அவர்களை நேரடியாக  சார்ந்த சனத்தொகைக்கும் புலிகளின் வழங்கல் வழியாக வழங்கல் செய்தது என்பதும் நடந்தது. 

இப்பொது, சிங்கள பகுதிகளுக்கு மட்டுப்படுத்தப்படும் போது, வடகிழக்குக்கு எத்தகைய  வழங்கல்  இருக்கும் என்பது.

மற்றது, வெளிப்படையாக, கொரானா  பெருத்தொற்றுக்கு  மத்தியில்.

வடகிழக்கில், இன்னமும் முழுமையாக food security இல்லாத நிலையில்.  

தொண்டு நிறுவனங்களும், 2008 இல் சிங்களதால் வ்லோற்றகரமாக வெளியேற்றப்படும் வரை, இருந்த ஊக்கமும், மும்மரமும் இல்லாத நிலையில்.     

கொரன முடக்கத்தில், அங்கிளருபவர்கள், ,  முழுமையாக தனிப்பட்டுக்கு விட்ட ஊர்களுக்கு, கிராமங்களுக்கு , வெளி  உதவி இன்றி வழங்க முடியாது இருந்தது என்பதை இதில் எவ்வாறு எடுத்துக் கொள்வது.     

இவைகளே  வேறுபாடு. 

Link to comment
Share on other sites

நாங்கள் சாகவல்லை. ஏனென்றால் எப்போதோ தப்பியோடி புலம் பெயர்ந்த நாடுகளில் வாழ்கிறோம். 

செத்ததும் உறவுகளை இழந்ததும், வீடிழந்ததும்  ஊரில் வாழும் மக்கள் தானே. 

தமிழ் தேசியம் பேசி உசுப்பேற்றி காது குளிர யுத்த செய்திகளை கேட்ட நாம் சாகவில்லை. செத்ததும் அங்கவீனர் ஆகியதும் ஊரில் வாழ்ந்த மக்கள் தானே. 

தொடர்ந்தும் உசுப்பேற்றி முன்பு செய்தது  போல்  அடுத்தடுத்த தலைமுறையையும்  நாசப்படுத்தலாம்   என்ற நப்பாசையில் துடிக்கும் நாம் இன்னும் சாகவில்லை. 

அடுத்த தலைமுறைக்கும் நஞ்சையும் எமது தோற்று போன முட்டாள் தன போராட்ட  முறையையும் திணிக்காமல் மண்டையை போட்டுவிடுவோமோ என்பதே எமது தற்போதைய கவலை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருட்டுக்குள் ஒளித்து நின்று புனைபெயர் முகமூடி போட்டு வெளிச்சத்தில் நிற்பவர் மேல் கல்லெறிவது இலகுவான ஒன்று .முன்பெல்லாம் புலிகள் பிழை செய்தார்கள் அவர்களின் ஆதரவாளர்கள் பிழை செய்தார்கள் என்று நேரடியாக புலி இருக்கும்போதே சுட்டி காட்டினார்கள் புலி  மவுனித்த பின்னரும் ஆக்கபூர்வமான செயல்பாட்டில் இன்றும் உள்ளனர் தங்களின் காலத்தின் பின்னரும் அமைதியானவழியில் ஊரில் இருப்பவர்களுக்கு நல்லது நடக்கணும் என்று வாழுபவர்கள் உண்மையில் மகான்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இருட்டுக்குள் ஒளித்து நின்று புனைபெயர் முகமூடி போட்டு வெளிச்சத்தில் நிற்பவர் மேல் கல்லெறிவது இலகுவான ஒன்று .முன்பெல்லாம் புலிகள் பிழை செய்தார்கள் அவர்களின் ஆதரவாளர்கள் பிழை செய்தார்கள் என்று நேரடியாக புலி இருக்கும்போதே சுட்டி காட்டினார்கள் புலி  மவுனித்த பின்னரும் ஆக்கபூர்வமான செயல்பாட்டில் இன்றும் உள்ளனர் தங்களின் காலத்தின் பின்னரும் அமைதியானவழியில் ஊரில் இருப்பவர்களுக்கு நல்லது நடக்கணும் என்று வாழுபவர்கள் உண்மையில் மகான்கள் .

அட? பெருமாளின் உண்மையான பெயர் பெருமாள் தானா? அவதார் படத்தில் இருப்பதும் பெருமாளா?

(வெளிச்சத்தில் இருப்பவர் என்று சொல்லியிருக்கிறாரே?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Justin said:

அட? பெருமாளின் உண்மையான பெயர் பெருமாள் தானா? அவதார் படத்தில் இருப்பதும் பெருமாளா?

(வெளிச்சத்தில் இருப்பவர் என்று சொல்லியிருக்கிறாரே?)

பெருமாளின் கருத்துக்கு... இது, பதில் அல்ல.  
மீண்டும்... ஒரு முறை, முயற்சிக்கவும்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

பெருமாளின் கருத்துக்கு... இது, பதில் அல்ல.  
மீண்டும்... ஒரு முறை, முயற்சிக்கவும்.  🤣

வாய்ப்பேயில்ல ராஜா! நான் ஒரு தடவை முயற்சித்தா மூன்று தடவை முயற்சித்த மாதிரி!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

அட? பெருமாளின் உண்மையான பெயர் பெருமாள் தானா? அவதார் படத்தில் இருப்பதும் பெருமாளா?

(வெளிச்சத்தில் இருப்பவர் என்று சொல்லியிருக்கிறாரே?)

வயதுக்கு மூத்தவர்களுடன் வாய் காட்ட கூடாதாம் உங்கப்பாட்டுக்கு முழங்குங்க 🤣

2 hours ago, தமிழ் சிறி said:

பெருமாளின் கருத்துக்கு... இது, பதில் அல்ல.  
மீண்டும்... ஒரு முறை, முயற்சிக்கவும்.  🤣

உண்மை படிப்பவர்களுக்கு விளங்கும் தள்ளி போவம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

வெளிநாட்டுப் பணம்,

மண்ணாங்கட்டி வெளிநாட்டு பணம்.😡 😡 😡


சாமானும் பொருட்களும் கரண்டும் இல்லையெண்டால் காசு ஒண்டையும் இறைக்காது...புடுங்காது.

சகல தடைகளும் தமிழருக்கெதிராய்  உங்கடை சிங்களம் கொண்டு வந்த பிறகுதான் தமிழன் இயற்கையை நம்பி வாழ்ந்தான். வேலியில் படர்ந்த செடியும் பனை தென்னையும்  அவன் வாழ்வாதாரம்.

இனியும் இது பற்றி கதைத்தால் ஒட்ட நறுக்கப்படும். ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். நீங்கள் அல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, குமாரசாமி said:

மண்ணாங்கட்டி வெளிநாட்டு பணம்.😡 😡 😡


சாமானும் பொருட்களும் கரண்டும் இல்லையெண்டால் காசு ஒண்டையும் இறைக்காது...புடுங்காது.

சகல தடைகளும் தமிழருக்கெதிராய்  உங்கடை சிங்களம் கொண்டு வந்த பிறகுதான் தமிழன் இயற்கையை நம்பி வாழ்ந்தான். வேலியில் படர்ந்த செடியும் பனை தென்னையும்  அவன் வாழ்வாதாரம்.

இனியும் இது பற்றி கதைத்தால் ஒட்ட நறுக்கப்படும். ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். நீங்கள் அல்ல

அப்படியா? எப்படிப் பாதிக்கப் பட்டீர்கள்? கிழக்கு ஜேர்மனியில் இருந்தா அல்லது மேற்கு ஜேர்மனியில் இருந்தா? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/8/2021 at 05:03, விசுகு said:

இந்த புலம்பெயர்ந்த மக்கள் கூட்டம் என்பது பல நாடுகளை வாழவைக்கும். வைக்கிறது. இலங்கையை தவிர.

இன்று கூட தமிழருக்கு ஒரு நிரந்தர தீர்வை வைக்க முடிந்தால்???? இலங்கை வளர்ச்சி பெற்ற நாடாக மாறும்.

தமிழன் பல குற்றங்களை சொல்வான் ஆனால் வாழவைப்பான் ....வைத்தைருக்கிறான்..சுயநலம் உள்ளவன் தான் ஆனால் பொதுநலமும் அவனிடம் உண்டு ....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.