Jump to content

ராஜபக்சக்களின் படு தோல்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Gotabaya-Mahinda-Basil-678x381.jpg

இங்கையின் பொருளாதாரம் படு மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது. ஒரு நாடு -ஒரு சட்டம் – நாட்டைத் தட்டி நிமித்துகிறேன் எனப் பதவிக்கு வந்த ராஜபக்சக்களால் நாட்டைச் சீனாவிடம் அடைக்கலம் வைக்க முடிந்ததே தவிர நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப முடியவில்லை. ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் போன்றவற்றில் பெரும் வெற்றி ஈட்டிய ராஜபசக்களின் செல்வாக்கு தற்பொழுது தேய்ந்து போய்க்கொண்டிருக்கின்றது. இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, அந்நிய செலவாணியின் வீழ்ச்சி, என ஓட்டுமொத்த பொருளாதாரமே வீழ்ச்சி அடைந்துள்ளது. எரிபொருள், உரம்  மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. வெளிநாடுகளில் வாங்கிய கடனை கட்ட முடியாமல்  திணறுகிறது இலங்கை. இந்து சமுத்திரத்தின் முத்து இப்போது கடனில் தாண்டுவிடும் முத்தாகி விட்டது. இலங்கை கடன் கொடுக்க முடியாது திவாலாகும் நிலை சாத்தியம் என கூறப்படுகிறது.

முதலில் மஹிந்த ராஜபக்ச நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வார் என்றார்கள். அதன் பின்னர் கோத்தபாய கொண்டு செல்வார்கள் என்றார்கள். இப்பொழுது பசில் நாட்டின் பொருளாதாரத்தை நிமித்தப் போகிறார் என்கிறார்கள். இவர்கள் எவரிடமுமே மக்கள் சார்பான நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கான அரசியல் பொருளாதாரக் கொள்கை இல்லை. இனத்துவேசத்தை வளர்த்து விடுவதை அரசியல் கொள்கையாவும் -சீனாவிடம் கடனை வாங்குதலை பொருளாதாரக் கொள்கையாகவும் மட்டுமே கொண்டிருக்கின்றனர். பசில் அல்ல அதன் பின்னர் நாமல் வந்தாலும் இந்தப் பாதையில் பயணித்து நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப முடியாது. கொரோனாவைக் கட்டுப்படுத்த ,சரிந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசிடம் எந்த விதமான காத்திரமான வேலைத்திட்டமும் இல்லை என்பதே நிதர்சனம்.

 பசில்  நிதியமைச்சர் ஆனவுடன் பங்குச் சந்தை ஆகா ஓகோ என வளரப் போகிறது என்றெல்லாம் ஆருடம் கூறினார்கள். பசில் நிதியமைச்சர் ஆன தொடக்கம் பங்கு சந்தையில் எதுவித மாற்றமும் நிகழவில்லை. ஆக இவர்கள் இல்லாத ஒன்றை ஊதிப் பெருப்பித்து இருப்பது போல் காட்டுகின்றனரே தவிர உண்மையான பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை. அண்மையில் இலங்கை மத்திய வங்கி வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகளவான பணத்தை அச்சிட்டுள்ளது. அண்மையில் 20845 கோடி ரூபா பெறுமதியான , பணம் அச்சிடப்பட்டுள்ளது. இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியையே அரசின் இந் நடவடிக்கை எடுத்துக் காட்டுகின்றது. அரச வருமானம் அரசின் அன்றாட நடவடிக்கைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு உள்ளது

தமது அதிகாரத்தை நிலை நிறுத்தி வைத்துக் கொள்ளுதலே – குடும்ப ஆட்சியை விஸ்தரித்தலே, ராஜபக்ச குடும்பங்களின் நோக்கமாக உள்ளது. அடுத்த 2024 ஜனாதிபதி தேர்தலிலும் கோட்டா, தானே போட்டியிடுவது  அல்லது பசிலை நிறுத்துவது, அதன் பின் வரும் ஜனாதிபதி தேர்தலில் நாமலை நிறுத்துவது என தமது அதிகாரத்தை தக்க வைப்பதிலேயே ராஜபக்ச குடும்பம் மும்முரமாக நிற்கின்றது.   நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் பி திஸநாயக்க , பிரியங்கர ஜயரத்ன போன்றோர் தம்மால் சுயாதீனமாக இயங்கமுடியவில்லை என வெளிப்படையாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்கள். ராஜபக்ச குடும்ப அரசு அனைத்து அதிகாரத்தையும் தமக்குள் வைத்துக்கொண்டு இருக்கின்றது என்பது இதிலிருந்து புலனாகின்றது

மறுபக்கத்தில் பொருளாதார நெருக்கடியில் திணறும் இவ்வரசைக் கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் மும்முரமாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கு ஆளும் கட்சியும், ஆட்சியை கைபற்றிக் கொள்வதற்கும் எதிர்கட்சியும் என  இரு கட்சிகள் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றன. தலையணையை மாற்றினால் தலைவலி தீராது என்பது போல், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் பிரச்சனை தீர்க்கப்படப்போவதில்லை. இங்கு மக்கள் பிரச்சனை என்பது இரண்டாம் பட்சமே.

 நாட்டின் தேசிய வளங்கள் ஒவ்வொன்றும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு கொண்டு வருகின்றது. கொழும்புத் துறைமுக நகர் சீனாவுக்கு ,திருகோணமலை துறைமுகம் மற்றும் எண்ணெய் குதங்கள் இந்தியாவுக்கும் , கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையம் அமெரிக்காவிற்கும் என மோடிக்கு நிகராக நாட்டை கூறு போட்டு விற்கின்றனர். தமது சொந்த சொத்துக்கள் போல் வளங்களை விற்பனை செய்வதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய பாதிப்பு உருவாக்கி உள்ளது. சீனா  அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் தமது அரசியல் அதிகாரப் போட்டியை நடத்தும் களமாக மாறிக்கொண்டிருக்கின்றது இலங்கை. தனது தலையை வெட்ட தானே தலையைக் கொண்டு போய்க் கொடுக்கும் ஆடு போல் செயற்படுகின்றது தற்போதைய கோத்தபாய அரசு

சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து அண்மையில் 70 கோடி டொலர் கடனாகப் பெற ஒப்பந்தம் கைச்சாத்தானது. அது தவிர மேலும் பல கோடி டொலரை கடனாகப் பெற இலங்கை அரசு உத்தேசித்துள்ளது. அது தவிர ஏற்கனவே வறுமை நாடான பங்களாதேஷிடமிருந்து கூட  20 கோடி டொலரை கடனாகப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. உலகம் முழுக்க கடனுக்கு கையேந்தும் நிலைக்கு சென்றுவிட்டது இலங்கையின் பொருளாதாரம்.

‘யாழ்ப்பாண மக்களின் கருத்து என்ன என்பது குறித்து எனக்கு அக்கறையில்லை. அவர்களைப் பற்றி நாம் இப்போது சிந்திக்க முடியாது’ என 1983 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்த்தன டெலிகிராப் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். ஜே ஆரின் பாணியைப் பின்பற்றும் கோத்தபாயவும் சிறிய மாற்றத்துடன்  இதே கருத்தை தான் கொண்டிருக்கின்றார். அதாவது ஜே ஆர் யாழ்ப்பாண மக்களைப் பற்றி மட்டும்தான் கருத்திற்கொள்ளவில்லை கோத்தபாயவோ ஒரு படி மேலே சென்று ஒட்டு மொத்த இலங்கை மக்களைப் பற்றியே கருத்திற் கொள்ளவில்லை என்பது அவரின் அரசியல் பொருளாதார நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுகின்றது. இவ்வரசை நம்பி வாக்களித்த 69 லட்சம் மக்களை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இலங்கை மக்களையும் இவ் அரசு ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது.

கொரோனா பெரும்தொற்று பரவும் இந்த மோசமான காலகட்டத்தில் கூட அதிகாரத்தைக் கைப்பற்றுவதையும் தமது குடும்பத்தை விஸ்தரிப்பதையும் மட்டுமே நோக்காக கொண்டு இயங்கும் இவ்வரசை மக்கள் இனியும் நம்பிக்கொண்டிருக்காமல், மக்கள் சார்பான அரசியல் பொருளாதாரக் கொள்கைகளுடன்  இயங்கும் அமைப்புகளுடன் இயங்கி தமக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ளவேண்டும். 

https://ethir.org/?p=6883

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மினத்தின் மீது கொட்டப்பட்ட அடிக்கொரு குண்டுகளுக்கும் இன்று நாட்டை வித்தும் ......???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

இங்கையின் பொருளாதாரம் படு மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது.

சிறிலங்காவின் வங்குரோத்து

இது எக்காலமும்  எக்காரணம் கொண்டும் ஈழத்தமிழரை பாதிக்காது.
இதற்கு ஆயிரம் காரணங்கள் உதாரணங்கள் சொல்லலாம்.

 

Link to comment
Share on other sites

On 24/8/2021 at 11:25, குமாரசாமி said:

சிறிலங்காவின் வங்குரோத்து

இது எக்காலமும்  எக்காரணம் கொண்டும் ஈழத்தமிழரை பாதிக்காது.
இதற்கு ஆயிரம் காரணங்கள் உதாரணங்கள் சொல்லலாம்.

 

ஆயிரம் வேண்டாம், ஒரு இருநூறை எடுத்துவிடலாமே? ஈழத்தமிழரெல்லாம் ஐரோப்பாவிலும் கனடாவிலும் இருப்பவர்கள் என்ற கணக்கு என்றால் ஆயிரமும் விளக்கத்துக்கு வந்துவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/8/2021 at 19:25, குமாரசாமி said:

இது எக்காலமும்  எக்காரணம் கொண்டும் ஈழத்தமிழரை பாதிக்காது.
இதற்கு ஆயிரம் காரணங்கள் உதாரணங்கள் சொல்லலாம்.

நடுக்கடலில் நித்திற்கும் 200 அடி  கப்பலில் ஓர் முனையில்  பெரிய வெடிப்பு ஏற்றப்பட்டு தண்ணீர் உள்ளே வருகிறது, வடிப்பும் பெரிதாகிறது, போதாகுறைக்கு புயலும் வருவதாக காலநிலை அறிவிப்பும் வருகிறது.

கப்பலில் இருக்கும் எவராவது, நான் வெடிப்பு இல்லாத முனையில் இருப்பதால், ஒரு பிரச்னையும்  இல்லை என்று  எவராவது சொல்ல முடியமா?    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் முடியாது   ஆனால்  ஒரு  தீவிலுள்ளவர்கள்  சொல்லலாம்  தீவை இரண்டாக  பிரித்து விட்டால் சரி 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

ஆயிரம் வேண்டாம், ஒரு இருநூறை எடுத்துவிடலாமே? ஈழத்தமிழரெல்லாம் ஐரோப்பாவிலும் கனடாவிலும் இருப்பவர்கள் என்ற கணக்கு என்றால் ஆயிரமும் விளக்கத்துக்கு வந்துவிட்டது.

ஈழத்தமிழர் அபிவிருத்து நிதியம் அல்லது ஈழத்தமிழர் அபிவிருத்தி அறக்கட்டளை என பகிரங்கமாக ஏதாவது உள்ளதா?

விடுதலைப்புலிகள் காலத்தில் யுத்தம் சம்பந்தமில்லாமல் புலம்பெயர் மக்கள் மனவுமந்து வழங்கிய நிதிகள் எல்லாம் உங்கள் குருட்டு மூளைக்கு ஏதாவது தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

நடுக்கடலில் நித்திற்கும் 200 அடி  கப்பலில் ஓர் முனையில்  பெரிய வெடிப்பு ஏற்றப்பட்டு தண்ணீர் உள்ளே வருகிறது, வடிப்பும் பெரிதாகிறது, போதாகுறைக்கு புயலும் வருவதாக காலநிலை அறிவிப்பும் வருகிறது.

கப்பலில் இருக்கும் எவராவது, நான் வெடிப்பு இல்லாத முனையில் இருப்பதால், ஒரு பிரச்னையும்  இல்லை என்று  எவராவது சொல்ல முடியமா?    

நான் சொல்ல வருவது எந்த கஷ்டத்திலும் உயிர் பிழைத்த சமுதாயம் அது. 

நான் வாழ்ந்த ஊரைப் போல் பல்லாயிரம் ஊர்கள் இயற்கையை மட்டும் நம்பி வாழ்பவர்கள்.

கூப்பன் மாவும் தேவையில்லை
மின்சாரமும் தேவையில்லை
டுக்குட்டுக்கு வாகனமும் தேவையில்லை.


இனியில்லையென்ற யுத்தம் நடந்தும் இன்னும் தலைநிமிர்ந்து நிற்கும் வடக்கு கிழக்கு. அவ்வளவிற்கு இயற்கையின் கொடை இலங்கையில் உள்ளது.

தொடர்ந்தால் தொடரலாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kandiah57 said:

ஆம் முடியாது   ஆனால்  ஒரு  தீவிலுள்ளவர்கள்  சொல்லலாம்  தீவை இரண்டாக  பிரித்து விட்டால் சரி 😂

இந்த புலம்பெயர்ந்த மக்கள் கூட்டம் என்பது பல நாடுகளை வாழவைக்கும். வைக்கிறது. இலங்கையை தவிர.

இன்று கூட தமிழருக்கு ஒரு நிரந்தர தீர்வை வைக்க முடிந்தால்???? இலங்கை வளர்ச்சி பெற்ற நாடாக மாறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, விசுகு said:

இந்த புலம்பெயர்ந்த மக்கள் கூட்டம் என்பது பல நாடுகளை வாழவைக்கும். வைக்கிறது. இலங்கையை தவிர.

இன்று கூட தமிழருக்கு ஒரு நிரந்தர தீர்வை வைக்க முடிந்தால்???? இலங்கை வளர்ச்சி பெற்ற நாடாக மாறும்.

உண்மை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலிபான்களின் அனைத்துப் பயங்கரவாதத்தையும் அங்கீகரித்து அவர்களுடன் உறவாடி நிற்கும் அமெரிக்கனை வைச்சு புலிகளுக்கு வகுப்பெடுத்தவர்களும் இதற்குள் நிற்கினம். இப்ப அமெரிக்காவுக்கு என்ன வகுப்பெடுப்பினமோ தெரியல்ல.

தலிபான்கள்.. அமெரிக்காவை ஒரு புறம்.. மறுபுறம் சீனாவையும் அணைச்சுக் கொண்டு.. அரபுலகத்தையும் தாஜா பண்ணிக்கிட்டு போகிறார்கள். ஹிந்தியா.. சார்க் எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. 

புலிகள் ஹிந்தியாவையும் மேற்குலகையும் கூடிய கவனத்தில் வைத்த வேளை மற்றைய தரப்புக்களை அணுகக் கூட இல்லை. இது அவர்களின் இராஜதந்திரத் கொள்கை வகுப்புத் தோல்வி. அதுவே அவர்களை அழிக்க நினைத்தவர்களுக்கு சவாலற்ற சூழலையும் உருவாக்கித் தந்துவிட்டது. 

புலிகளை அழிக்க உதவிய அணைவரும்.. இன்று தலிபான்களை அவர்களின் பயங்கரவாதத்தை ஏற்று நிற்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.

ஆக பயங்கரவாதத்திற்கு ஒரு வரவிலக்கணம் கிடையாது. எல்லாம் அவரவர் தேவைக்கு ஏற்ப தான் அமைகிறது. இதில புலிகளுக்கு வகுப்பெடுப்பு..?!

ராஜபக்சங்கள் எப்பவோ தோற்றுவிட்டார்கள். அதுதான் ரோட்டை வைச்சு அரசியல் செய்யினம். அது நாட்டை கோட்டை விடும் அளவுக்கு போயிட்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kadancha said:

கப்பலில் இருக்கும் எவராவது, நான் வெடிப்பு இல்லாத முனையில் இருப்பதால், ஒரு பிரச்னையும்  இல்லை என்று  எவராவது சொல்ல முடியமா?    

பல பாரிய புயல்களையும் பாரிய நீண்ட கடலோட்டம்களையும் கண்டவர்களுக்கு அந்த கப்பல் தாழ்வது ஒரு பிரச்சனையே இல்லை கடலே காணாத மனிதர்களுக்குத்தான்  அந்த பிரச்சனை அவர்களின் வாழ்வின் கடைசி நேர பிரச்சனை யாக இருக்கும் .

இப்ப இப்படியான கருத்துக்கள் எழுவது இயற்கைதான் ஆனால் யதார்த்தம் இன்னும் சில வருடங்களில் தெரிந்து விடும் .

குடிக்கவேண்டாம் அப்பத்தான் பணம் அனுப்புவேன் என்று நட்ப்பு ஒன்று அவரின் சிறிய தகப்பனுக்கு சொல்ல  சித்தப்பரோ  போடாங் நீயும் உந்த பணமும் என்று சொல்லிவிட்டு விசுவமடு காட்டுக்குள் அவரின் சொந்த நிலத்தில் ஒதுங்கிக்கொண்டு சுய விவசாயம் மரக்கறியில் இருந்து அரிசி பால் இறைச்சி மட்டும் அல்ல அவரின் சொந்த தேவைக்கு கசிப்பும் காய்ச்சி நன்றாய் குடித்துவிட்டு வாட்ஸுப் கோலில் பிறமகனுடன் வாரத்தில் ஒருநாள் லைவ் பைட்டிங் நடக்கும்🤣 அதுவும் உயர மரமொன்றில் ஏறி இருந்தபடி  .நம்ம சனம் பல தடங்களை கண்டதுகள் பாஸ் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சிலர் ஊரில் இருந்து கிளம்பி ஐரோப்பா வந்த பிறகு ஊரின் நிலைமை தவிர வேறெல்லாவற்றையும் அப்டேற் செய்திருக்கிறார்கள்.

யுத்த காலத்திலும் சரி, பின்னர் சுனாமிக்குப் பின்னரும் சரி தமிழர்கள் தப்பி வாழ்ந்தது உள்ளூர் உற்பத்தியின் தன்னிறைவால் அல்ல! வெளிநாட்டுப் பணம், நிவாரணம் , தொண்டு நிறுவனங்களின் திட்டங்கள் என்பனவே பிரதான காரணங்கள். இதில் வெளிநாட்டுப் பணம் எல்லாத் தாயக தமிழருக்கும் நேரடியாகக் கிடைப்பதில்லை. நிவாரணம், தொண்டு நிறுவனங்கள் முன்பு போல இப்போது மும்முரமாக செயல்படுவதில்லை.

 ஆளுக்காள் மாறி மாறி  முதுகு சொறியச் சுகமாகத் தான் இருக்கும்! அது தானே முக்கியம்?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Justin said:

வெளிநாட்டுப் பணம்

 

பணம் இருந்தாலும், பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது முடங்குகிறது.

 ஏனெனில், letter of credit ஐ வங்கிகள் கொடுக்க மறுக்கிறது அல்லது தாமதிக்க வைத்து, பொருட்களின் அத்தியாவசிய தேவை அடிப்படையில் கையிருப்பில் இருக்கும் டாலர் பகிரப்படுகிறது. அது கூட, காத்திருந்தே பெற வேண்டிய  நிலை.  

 

 

1 hour ago, பெருமாள் said:

பல பாரிய புயல்களையும் பாரிய நீண்ட கடலோட்டம்களையும் கண்டவர்களுக்கு அந்த கப்பல் தாழ்வது ஒரு பிரச்சனையே இல்லை கடலே காணாத மனிதர்களுக்குத்தான்  அந்த பிரச்சனை அவர்களின் வாழ்வின் கடைசி நேர பிரச்சனை யாக இருக்கும் .

 

1 hour ago, பெருமாள் said:

இப்ப இப்படியான கருத்துக்கள் எழுவது இயற்கைதான் ஆனால் யதார்த்தம் இன்னும் சில வருடங்களில் தெரிந்து விடும் .

குடிக்கவேண்டாம் அப்பத்தான் பணம் அனுப்புவேன் என்று நட்ப்பு ஒன்று அவரின் சிறிய தகப்பனுக்கு சொல்ல

cancer க்கு  கீமோ மருந்து எடுக்க முடியாமல் இருக்கிறது. 

ஒன்றை நீங்கள் யோசிக்கவில்லை. 

corana வில் இழப்பு கூடவாயினும், black death அளவு வீதம் இல்லை. black death 75 -200 மில்லியன் காவு கொண்டது ஓர் காரணம், சராசரி உடல் நலம் அந்த நேரத்தில் சராசரி சனத்தொகையில் குறைவு.    

இலங்கையை பொறுத்தவரை, சனத்தொகையின் பெரும் பகுதி 3 நேரம் ஏதோ ஓர் உணவு எடுக்க கூடியதாக இருப்பதால். முழு உலகமும் என்றால் ஒரு நாளைக்கு ஒரு வேளை  உணவு.

இப்படி பொருளாதர  தாக்கம், முழு சமூகத்தின் நோயெதிர்ப்பு தரத்தை குறைக்கும். மறுபடி இன்னொரு corana அலை வந்தால், நிலை என்ன ? 

ஒருவர் குடிப்பதை வைத்து கொண்டு, மில்லியன்  அளவான சனத்தொகைக்கு விளக்கம் கற்பிகிறீர்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Copied
நாங்கள்_சாக மாட்டோம்.
நாங்கள் சாகவே மாட்டோம்.!!!

விலை இன்னும் ஒருமடங்கு அதிகரித்தாலும் நாங்கள் சாகவே மாட்டோம்......💯

எங்கள் அனுபவங்களை விசாரித்துப்பாருங்கள்.💔💔

ஆயிரம் இடம்பெயர்வுகளை சந்தித்தோம் நாங்கள் சாகவே இல்லை.....💥💥💥

பலவருடம் மின்சாரமின்றி வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை.....🤯

எரிவாயு என்றால் என்னவென்று தெரியாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை....💯

எரிபொருள் இன்றியும் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. தொலைபேசி இல்லாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை.....🤳

மரக்கறி இல்லாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை....🌶🥕🥦

சீனி இன்றி பனங்கட்டியுடன் பிளேன்ரீ குடித்தோம் நாங்கள் சாகவே இல்லை....☕(டெல்டா_ரெபி)

அங்கர் இன்றியும் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை.....🥛
பசளை இன்றியிம் விவசாயம் செய்தோம் நாங்கள் சாகவே இல்லை.....🌱🌾

இனவாதப் படுகொலையால் மட்டும் அதிகமாகச் செத்தோம் .....🧟‍♂️

வயலுண்டு, தோட்டமுண்டு, பனையுண்டு, தென்னையுண்டு, கடலுண்டு, குளமுண்டு,
மீனுண்டு உப்புண்டு
பகிர்ந்துண்டு பல்லுயிரோம் பண்புண்டு.
நாம் சாகப்போவதே இல்லை.....

நெருப்பிலும்💥💥 நீந்திக் கரைசேர்வோம்...💥💥💥
உங்களால் இவ்வளவும் தாண்டி நீந்திக் கரைசேர முடியுமானால் மனம் மாறாதிருங்கள.......

நன்றி முகநூல் பதிவுக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பெருமாள் said:

எங்கள் அனுபவங்களை விசாரித்துப்பாருங்கள்.


வன்னியில் உள்ள ஓர் பகுதி சனத்தொகையே, 2009 இல், உண்மையான பகுதி  உணவு பஞ்சத்தை எதிர்நோக்கியது. நல்ல  காலம் அது நீடிக்கவில்லை. நீடித்து இருந்தால், பஞ்சத்தால் இறந்தது, கொல்லப்சட்டத்தை விட கூடாவாக இருந்து இருக்கும்.  

வட கிழக்கின் மற்ற பகுதிகள், மற்றும் இலங்கைத் தீவின் ஏனைய பகுதிகள், உண்மையான உணவு  பஞ்சத்தை சமகால வரலாற்றில் காணவில்லை.  

இந்த அனுபவம் எல்லாம், சிங்கள பகுதிகளுக்கு தாராளமாக எல்லாம் கிடைத்த போது, மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் நடந்த வழங்கல்.

புலிகழும் , அப்படி மட்டுப்படுதப்பட்ட அளவில் வந்ததை பங்கிட்டு எடுத்து வெளிப்படை. 

புலிகளும் அவர்களுக்கும், அவர்களை நேரடியாக  சார்ந்த சனத்தொகைக்கும் புலிகளின் வழங்கல் வழியாக வழங்கல் செய்தது என்பதும் நடந்தது. 

இப்பொது, சிங்கள பகுதிகளுக்கு மட்டுப்படுத்தப்படும் போது, வடகிழக்குக்கு எத்தகைய  வழங்கல்  இருக்கும் என்பது.

மற்றது, வெளிப்படையாக, கொரானா  பெருத்தொற்றுக்கு  மத்தியில்.

வடகிழக்கில், இன்னமும் முழுமையாக food security இல்லாத நிலையில்.  

தொண்டு நிறுவனங்களும், 2008 இல் சிங்களதால் வ்லோற்றகரமாக வெளியேற்றப்படும் வரை, இருந்த ஊக்கமும், மும்மரமும் இல்லாத நிலையில்.     

கொரன முடக்கத்தில், அங்கிளருபவர்கள், ,  முழுமையாக தனிப்பட்டுக்கு விட்ட ஊர்களுக்கு, கிராமங்களுக்கு , வெளி  உதவி இன்றி வழங்க முடியாது இருந்தது என்பதை இதில் எவ்வாறு எடுத்துக் கொள்வது.     

இவைகளே  வேறுபாடு. 

Link to comment
Share on other sites

நாங்கள் சாகவல்லை. ஏனென்றால் எப்போதோ தப்பியோடி புலம் பெயர்ந்த நாடுகளில் வாழ்கிறோம். 

செத்ததும் உறவுகளை இழந்ததும், வீடிழந்ததும்  ஊரில் வாழும் மக்கள் தானே. 

தமிழ் தேசியம் பேசி உசுப்பேற்றி காது குளிர யுத்த செய்திகளை கேட்ட நாம் சாகவில்லை. செத்ததும் அங்கவீனர் ஆகியதும் ஊரில் வாழ்ந்த மக்கள் தானே. 

தொடர்ந்தும் உசுப்பேற்றி முன்பு செய்தது  போல்  அடுத்தடுத்த தலைமுறையையும்  நாசப்படுத்தலாம்   என்ற நப்பாசையில் துடிக்கும் நாம் இன்னும் சாகவில்லை. 

அடுத்த தலைமுறைக்கும் நஞ்சையும் எமது தோற்று போன முட்டாள் தன போராட்ட  முறையையும் திணிக்காமல் மண்டையை போட்டுவிடுவோமோ என்பதே எமது தற்போதைய கவலை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருட்டுக்குள் ஒளித்து நின்று புனைபெயர் முகமூடி போட்டு வெளிச்சத்தில் நிற்பவர் மேல் கல்லெறிவது இலகுவான ஒன்று .முன்பெல்லாம் புலிகள் பிழை செய்தார்கள் அவர்களின் ஆதரவாளர்கள் பிழை செய்தார்கள் என்று நேரடியாக புலி இருக்கும்போதே சுட்டி காட்டினார்கள் புலி  மவுனித்த பின்னரும் ஆக்கபூர்வமான செயல்பாட்டில் இன்றும் உள்ளனர் தங்களின் காலத்தின் பின்னரும் அமைதியானவழியில் ஊரில் இருப்பவர்களுக்கு நல்லது நடக்கணும் என்று வாழுபவர்கள் உண்மையில் மகான்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இருட்டுக்குள் ஒளித்து நின்று புனைபெயர் முகமூடி போட்டு வெளிச்சத்தில் நிற்பவர் மேல் கல்லெறிவது இலகுவான ஒன்று .முன்பெல்லாம் புலிகள் பிழை செய்தார்கள் அவர்களின் ஆதரவாளர்கள் பிழை செய்தார்கள் என்று நேரடியாக புலி இருக்கும்போதே சுட்டி காட்டினார்கள் புலி  மவுனித்த பின்னரும் ஆக்கபூர்வமான செயல்பாட்டில் இன்றும் உள்ளனர் தங்களின் காலத்தின் பின்னரும் அமைதியானவழியில் ஊரில் இருப்பவர்களுக்கு நல்லது நடக்கணும் என்று வாழுபவர்கள் உண்மையில் மகான்கள் .

அட? பெருமாளின் உண்மையான பெயர் பெருமாள் தானா? அவதார் படத்தில் இருப்பதும் பெருமாளா?

(வெளிச்சத்தில் இருப்பவர் என்று சொல்லியிருக்கிறாரே?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Justin said:

அட? பெருமாளின் உண்மையான பெயர் பெருமாள் தானா? அவதார் படத்தில் இருப்பதும் பெருமாளா?

(வெளிச்சத்தில் இருப்பவர் என்று சொல்லியிருக்கிறாரே?)

பெருமாளின் கருத்துக்கு... இது, பதில் அல்ல.  
மீண்டும்... ஒரு முறை, முயற்சிக்கவும்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

பெருமாளின் கருத்துக்கு... இது, பதில் அல்ல.  
மீண்டும்... ஒரு முறை, முயற்சிக்கவும்.  🤣

வாய்ப்பேயில்ல ராஜா! நான் ஒரு தடவை முயற்சித்தா மூன்று தடவை முயற்சித்த மாதிரி!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

அட? பெருமாளின் உண்மையான பெயர் பெருமாள் தானா? அவதார் படத்தில் இருப்பதும் பெருமாளா?

(வெளிச்சத்தில் இருப்பவர் என்று சொல்லியிருக்கிறாரே?)

வயதுக்கு மூத்தவர்களுடன் வாய் காட்ட கூடாதாம் உங்கப்பாட்டுக்கு முழங்குங்க 🤣

2 hours ago, தமிழ் சிறி said:

பெருமாளின் கருத்துக்கு... இது, பதில் அல்ல.  
மீண்டும்... ஒரு முறை, முயற்சிக்கவும்.  🤣

உண்மை படிப்பவர்களுக்கு விளங்கும் தள்ளி போவம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

வெளிநாட்டுப் பணம்,

மண்ணாங்கட்டி வெளிநாட்டு பணம்.😡 😡 😡


சாமானும் பொருட்களும் கரண்டும் இல்லையெண்டால் காசு ஒண்டையும் இறைக்காது...புடுங்காது.

சகல தடைகளும் தமிழருக்கெதிராய்  உங்கடை சிங்களம் கொண்டு வந்த பிறகுதான் தமிழன் இயற்கையை நம்பி வாழ்ந்தான். வேலியில் படர்ந்த செடியும் பனை தென்னையும்  அவன் வாழ்வாதாரம்.

இனியும் இது பற்றி கதைத்தால் ஒட்ட நறுக்கப்படும். ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். நீங்கள் அல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, குமாரசாமி said:

மண்ணாங்கட்டி வெளிநாட்டு பணம்.😡 😡 😡


சாமானும் பொருட்களும் கரண்டும் இல்லையெண்டால் காசு ஒண்டையும் இறைக்காது...புடுங்காது.

சகல தடைகளும் தமிழருக்கெதிராய்  உங்கடை சிங்களம் கொண்டு வந்த பிறகுதான் தமிழன் இயற்கையை நம்பி வாழ்ந்தான். வேலியில் படர்ந்த செடியும் பனை தென்னையும்  அவன் வாழ்வாதாரம்.

இனியும் இது பற்றி கதைத்தால் ஒட்ட நறுக்கப்படும். ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். நீங்கள் அல்ல

அப்படியா? எப்படிப் பாதிக்கப் பட்டீர்கள்? கிழக்கு ஜேர்மனியில் இருந்தா அல்லது மேற்கு ஜேர்மனியில் இருந்தா? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/8/2021 at 05:03, விசுகு said:

இந்த புலம்பெயர்ந்த மக்கள் கூட்டம் என்பது பல நாடுகளை வாழவைக்கும். வைக்கிறது. இலங்கையை தவிர.

இன்று கூட தமிழருக்கு ஒரு நிரந்தர தீர்வை வைக்க முடிந்தால்???? இலங்கை வளர்ச்சி பெற்ற நாடாக மாறும்.

தமிழன் பல குற்றங்களை சொல்வான் ஆனால் வாழவைப்பான் ....வைத்தைருக்கிறான்..சுயநலம் உள்ளவன் தான் ஆனால் பொதுநலமும் அவனிடம் உண்டு ....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.