Jump to content

தற்கொலையில் முடியும் மனநலப் பிரச்னைகள் - அடையாளம் கண்டு தடுப்பது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • கெளதமன் முராரி
  • பிபிசி தமிழுக்காக
23 ஆகஸ்ட் 2021
மனநலப் பிரச்சனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

மனநலம். இந்த சொல் கடந்த வெகு சில தசாப்தங்களாகத் தான் கவனம் பெற்று வருகிறது. மன நலம் என்கிற ஒரு சொல்லுக்குள் பல்வேறு பிரச்னைகளையும், மன நல குறைபாடுகளையும் பட்டியலிடலாம்.

கடந்த சில ஆண்டுகளாகத்தான் மன அழுத்தம், மனச் சோர்வு போன்ற மனநலம் சார் சொற்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளின் போது கூட உலக புகழ்பெற்ற அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ், தன் மன நலனை கருத்தில் கொண்டு, தான் கலந்து கொள்ளவிருந்த பல போட்டிகளிலிருந்து வெளியேறினார். அது சர்வதேச அளவில் பெரிதாக பேசப்பட்டடு, தற்போது மனநலம் சார் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதற்கான சாட்சியாகப் பார்க்கலாம்.

மறு பக்கத்தில், இந்தியாவில் கடந்த 2017 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்.சி.ஆர்.பி) தரவுகள் கூறுகின்றன.

இந்தியாவில் 2019ஆம் ஆண்டில் 1.39 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்கிறது என்.சி.ஆர்.பி தரவு. மகாராஷ்டிரா (18,916 பேர்) 13.6 சதவீதத்தோடு முதலிடத்திலும், தமிழ்நாடு (13,493 பேர்) 9.7 சதவீதத்தோடு இரண்டாமிடத்திலும் இருக்கிறது.

குடும்ப பிரச்னைகள், உடல்நலக் குறைவு, போதைப் பழக்கம், காதல் மற்றும் திருமண பிரச்னை போன்ற காரணங்களால் தான் 2019ஆம் ஆண்டில் நடந்த மொத்த தற்கொலையில் 65 சதவீத தற்கொலைகள் நடந்திருக்கின்றன என்கிறது என்.சி.ஆர்.பி என்கிற தேசிய குற்ற ஆவணக் காப்பகம்.

தற்கொலைக்கும், மனநல குறைபாடுகளுக்கும் தொடர்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பே தன் வலைதளத்தில் குறிப்பிட்டு இருக்கிறது.

இந்தியாவில் தற்கொலை ஒரு முக்கிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது என மற்றொரு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது உலக சுகாதார அமைப்பு.

மனநலம் என்றால் என்ன?

மனநலப் பிரச்சனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

"ஒருவர் தன்னைக் குறித்து முழுமையாக புரிந்து வைத்திருப்பது,தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம் ஒரு சுமூகமான உறவில் இருப்பது, ஒருவர் செய்யும் காரியங்கள் தனக்கும் மற்றவர்களுக்கும் பயன் தரும் விதத்தில் இருப்பது," என மூன்று விஷயங்களில் சரியாக இருப்பவர்கள் நல்ல மனநலத்துடன் இருக்கிறார்கள் எனலாம். "

"ஆனால் எதார்த்தத்தில் இந்த மூன்றில் ஏதோ ஒரு விஷயத்தில் நாம் அனைவரும் கொஞ்சம் முன்பின் தான் இருக்கிறோம். ஆக நாம் அனைவருமே மன நல குறைபாடு உள்ளவர்கள் என பொருள் கொள்ள வேண்டாம். "

"காரணம் மனநலம் என்பது எல்லோரையும் ஒரே மாதிரியான அளவு கோளில் பொருத்திப் பார்க்கக் கூடிய விஷயமல்ல. மன நலம் சார்ந்த பிரச்னைகள் ஒரு நிலை தானே ஒழிய அது ஒரு நோயல்ல. மனநல பிரச்னைகள் அனைத்துமே மனநோய் கிடையாது. மனம் ஆரோக்கியமின்றி இருப்பது ஒரு தற்காலிக நிலை மட்டுமே" என்கிறார் சென்னையிலுள்ள மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்.

மன நலமின்மை

மனநலப் பிரச்சனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மனநலப் பிரச்னை

"மனநல குறைபாட்டுக்கும், மன நலமின்மைக்கும் ஒரு மெல்லிய வித்தியாசமிருக்கிறது.

கொரோனா காலத்தில் பலரும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டு வருகிறார்கள். ஊரடங்கு, பொருளாதார சூழல் தரும் பயம், வீட்டிலேயே அடைந்திருப்பது போன்ற பல காரணங்களால் பலரும் சில மனநல பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். இதை மன நலமின்மை எனலாம்.

யாரோடும் பேச முடியாமல் இருப்பது, நல்ல தூக்கம் இல்லாமல் தவிப்பது, அதிகம் கோபப்படுவது, அதிகம் பயப்படுவது போன்றவைகளை மனநல ஆரோக்கியமின்மை பட்டியலில் சேர்க்கலாம்.

இதே காலகட்டத்தில் சிலர் மன அழுத்தத்தினால் ஏற்படும் பிரச்சனைகளை கடந்து வர முடியாமல், அதிலேயே சிக்கி தவிக்கிறார்கள். இதை மன நல குறைபாடு எனலாம்.

ஒரு பற்றற்ற நிலையில் இருப்பது, இதற்கு முன் செய்த வேலைகளைச் செய்வதற்குக் கூட தடுமாறுவது, ஏன் வாழ வேண்டும் என்று தோன்றுவது, யார் மீதும் எதன் மீதும் நம்பிக்கையின்றி இருப்பது, எதையும் ஒரு எதிர்மறையான கண்ணோட்டத்திலேயே பார்ப்பது போன்றவைகளை மனநல குறைபாடு எனலாம்.

இரண்டுமே தற்காலிகமானவை தான் என்றாலும், மனநலமின்மையை சரி செய்வதை விட, மன நல குறைபாட்டை சரி செய்ய கொஞ்சம் அதிக காலம் ஆகலாம்." என்கிறார் சிவபாலன்.

அறிகுறிகள் என்ன

"பொதுவாக ஒரு நபரின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள், அவர் நல்ல மன நலத்தோடு இருக்கிறாரா இல்லையா என்பதை வெளிப்படுத்தும்.

நன்றாக பேசக் கூடியவர் திடீரென பேசுவது குறைகிறது என்றாலோ, பெரிதாக ஆடை அணிகலன்களில் கவனம் கொடுக்காத ஒருவர் திடீரென அதீதமாக அதில் கவனம் செலுத்தினாலோ, அதிகம் ஆன்மிகம் அல்லது தத்துவார்த்தமாகப் பேசத் தொடங்குவது, எதிர்மறையாகவே பேசுவது, எப்போதும் சோகம் தொய்ந்த ரீதியிலேயே பேசுவது, சுய அழகு பராமரிப்புகளில் கவனம் செலுத்தாமல் இருப்பது போன்றவைகள் அவருக்கு ஏதோ மன நலத்தில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்பதற்கான அறிகுறிகளாகக் கருதலாம்.

இப்படியாகத் தொடங்கும் சிறிய மன மாற்றங்கள் தான் எதிர்காலத்தில் தற்கொலையில் கொண்டு போய் சேர்க்கின்றன" என்கிறார் மருத்துவர் சிவபாலன்.

தடுப்பது எப்படி?

மனநலப் பிரச்சனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மனநலப் பிரச்னை

"மிக எளிமையான விஷயம் தான், அவர்களிடம் மாற்றம் ஏற்படும் ஆரம்ப கட்டத்திலேயே சுற்றி உள்ள நண்பர்கள், கணவன், மனைவி, குடும்பத்தினர், சக ஊழியர்கள் பேச வேண்டும். யாராவது மனது சரியில்லை என்று கூறினால் உதாசீனப்படுத்தாமல், அறிவுரை கூறி புறந்தள்ளாமல், அவர்களை புரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும். அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலை கொடுக்கும். அது அவரின் மன நிலையை மாற்ற அதிக வாய்ப்பு இருக்கிறது.

அதையும் மீறி அவர்கள் தொடர்ந்து மன உளைச்சலில் இருப்பதாக தெரிந்தால் மனநல மருத்துவரிடம் அழைத்து ஆலோசனை பெற வேண்டும்.

மனநலம் பாதிக்கப்படும் போது, பொதுவாக தன்னலன் மீது அக்கறையற்ற இருப்பர். ஆகையால் அவர்களின் நலனுக்காக அவர்களுக்காக நாம் முடிவெடுத்து அதற்கான தீர்வை பெற்றுத்தருவது அவசியம்.

பொதுவாக தற்கொலை செய்து கொண்டவர்களின் சுற்றத்தார், குடும்பத்தினரை அழைத்து, தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்ததா? எனக் கேட்டால், ஆம், அப்போதே தெரிந்தது, பேசலாம் என்று இருந்தோம்... போன்ற பதில்களை கேட்க முடியும். ஆனால் பேசி இருக்கமாட்டார்கள்.

பெரும்பாலும் மனித உள்ளுணர்வு இது போன்ற விஷயங்களில் தவறுவதில்லை. ஆனால் உள்ளுணர்வு வருபவர்கள் அதை பொருட்படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள் அல்லது மன நலப் பிரச்னைகளை எதிர்கொள்பவர் தவறாக நினைத்துவிடுவாரோ என ஒதுங்கிவிடுகிறார்கள்.

இப்படி மனநல பிரச்னைகளால் ஏற்படும் தற்கொலைகளில் சுமார் 95 சதவீத தற்கொலைகளை, சரியான நேரத்தில் இடைமறித்துப் பேசினாலோ, மனநல மருத்துவர்களிடம் கலந்தாலோசித்தாலோ தடுத்துவிடலாம் என்பது தான் மிகவும் வருத்தமான விஷயம்." என்கிறார் மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன். மனநலம் காப்போம், தற்கொலைகளைத் தவிர்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன நல குறைபாடு தனியே ஒருவர் மனது மட்டும் சம்மந்தப்பட்ட விடயம் இல்லை. புறக்காரணிகள் குறிப்பாக இரசாயனங்கள், மருந்து குளிகைகள் உடல் இரசாயன சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்போது மனநலம் பாதிக்கப்படலாம்.

இரசாயனங்களுடன் வேலை செய்யும் ஒருவரது உடலினுள் செல்லும் இரசாயன பொருட்கள் குறிப்பிட்ட சில காலத்தின் பின் மனநலம் பாதிக்கப்பட காரணி ஆகலாம்.

நாம் செய்யும் வேலைகளால் வரக்கூடிய பல்வேறு பாதிப்புக்கள் (ஒலி, ஒளி, அதிர்வு, கதிர்வீச்சு, வெப்பம், இரசாயனங்கள் தோல், வாய், கண், மூக்கினூடு ஊடுறுவல் போன்றன..) பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவை.

வாழ்வில் அபரிதமான பிடிப்பு ஏற்படும் வகையில் எமது ஒவ்வொரு வாழ் நாளையும் கழிக்கும் போக்கில் எம்மை தயார் செய்துகொண்டால் மனக்குழப்பங்கள் வந்தாலும் வாழ்க்கை மீது எமக்கு உள்ள இறுக்கமான பற்று காரணமாக குழப்பத்தில் இருந்து மீண்டு கொள்ளலாம்.

மனக்குழப்பங்கள் வரும்போது அவை ஒரு அளவை மீறி சென்றால் குடும்ப வைத்தியரை நாடுவது முக்கியம். மனக்குழப்பம் ஒரு வெட்கப்பட வேண்டிய மூடி மறைக்க வேண்டிய விசயம் இல்லை. உதவி நாடப்படல் வேண்டும்.

Link to comment
Share on other sites

மனநலப் பிரச்னை கொண்டோர் யாரிடம் செல்வது?

 

உடல் நலப் பிரச்னைகளுக்கு சிகிச்சை தர மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதேபோல் மனநலப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண நிபுணர்கள் இருக்கிறார்கள்

உங்களுக்கு பல்லில் வலி வந்தால் அதற்கான சிகிச்சைக்காக ஒரு பால் மருத்துவரிடம் செல்கிறீர்கள், மூட்டுகளில் வலி இருந்தால் ஓர் எலும்பு சிகிச்சை நிபுணரிடம் செல்கிறீர்கள் இப்படி எந்தமாதிரி உடல் நலக் குறைவு ஏற்படுகிறதோ அதற்குச் சிகிச்சை அளிக்கக்கூடிய பல்வேறு விதமான நிபுணர்கள் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். அதே சமயம் மனநலப் பிரச்னை வந்தால் மட்டும், அதற்கு யாரிடம் சென்று சிகிச்சை பெறுவது என்று பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. எங்கே செல்வது யாரிடம் பேசுவது என்று புரியாமல் திகைத்து நிற்கிறார்கள்.

இந்தக் கட்டுரையில், மனநலப் பிரச்னைகளைக் கண்டறிதல், சிகிச்சை வழங்குதல் ஆகியவற்றில் நிபுணத்துவம் வாய்ந்த சிலரைப்பற்றி நாம் தெரிந்துகொள்வோம். யாருக்காவது மனநலம் மற்றும் உளவியல் சார்ந்த பிரச்னை வரும்போது எவரிடம் செல்வது என்று புரிந்துகொள்வோம்.

மனநலம் சார்ந்த பிரச்னைகளைக் குணப்படுத்தக் கூடிய நிபுணர்களில் சிலர், உளவியலாளர்கள், மனநல நிபுணர்கள், ஆலோசகர்கள், மனநலச் சமூகப் பணியாளர்கள், மனநலச் செவிலியர்கள். இந்த வகையில் உள்ள ஒவ்வொருவரையும் பற்றியும் சுருக்கமாக இங்கே காண்போம். குறிப்பாக, இவர்கள் எதில் நிபுணத்துவம் வாய்ந்து காணப்படுகிறார்கள், இவர்களுடைய திறன் என்னென்ன போன்றவற்றை நாம் தெரிந்துகொள்வோம். இதன்மூலம், யாருக்காவது மனநலப் பிரச்னைகள் வந்தால், அவர்கள் யாரைத் தொடர்புக்கொள்வது நல்லது என நம்மால் ஆலோசனை வழங்க இயலும்.

மனநல மருத்துவர்

மனநலவியல் என்றால் என்ன?

மனநலவியல் என்பது உணர்ச்சிகள் மற்றும் அறிவாற்றல் போன்ற நடவடிக்கைகளைப் பாதிக்கக்கூடிய பல்வேறு பிரச்னைகளை மதிப்பிட்டு, கண்டறிந்து, குணப்படுத்தி, கையாலக்கூடிய மருத்துவப் பிரிவு ஆகும். இந்தப் பிரிவில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களை மனநல மருத்துவர்கள் என்பார்கள்.

மனநல மருத்துவர் என்பவர் யார்?

மனநல மருத்துவர்கள் என்போர், மற்ற மருத்துவர்களைப் போலவே உடற்கூறியலைப் பயின்றவர்கள், அதேபோல மனநலம் தொடர்பான சிகிச்சை அளிப்பதிலும் இவர்கள் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். இவர்கள் மருத்துவப் பயிற்சி பெற்றபோது மூளையின் செயல்பாடுகள், உடல் மற்றும் மூளையின் சிக்கலான உறவு ஆகியவற்றைப்பற்றி விரிவாகப் பயின்றுள்ளார்கள். ஆகவே ஒருவருக்கு உடல் சார்ந்த துயரம் ஏற்பட்டிருந்தாலும் சரி, மனம் சார்ந்த துயரம் ஏற்பட்டிருந்தாலும் சரி, அதற்குக் காரணம் உடல் பிரச்னையா அல்லது மனநலப் பிரச்னையா என்று இவர்களால் சிறப்பாகக் கண்டறிய இயலும்.

ஒருவருக்கு என்ன பிரச்னை வந்திருக்கிறது என்று மனநல மருத்துவர்கள் எப்படிக் கண்டறிகிறார்கள்?

மனநல மருத்துவர்கள் உடற்கூறியலையும் அறிந்திருப்பதால், அவர்களால் பலவிதமான மருத்துவ மற்றும் மனநல பரிசோதனைகளை நிகழ்த்த இயலுகிறது, அதன்மூலம் பாதிக்கப்பட்டவருடைய ஒட்டுமொத்த உடற்கூற்றை அறிந்துகொள்ள இயலுகிறது. இவற்றின் அடிப்படையில் அவர்கள் பாதிக்கப்பட்டவருக்கு என்ன பிரச்னை வந்திருக்கிறது என்பதைத் தீர்மானிக்கிறார்கள், உரிய சிகிச்சையைச் சிபாரிசு செய்கிறார்கள்.

மனநல மருத்துவர்கள் எந்தவிதமான சிகிச்சையை பயன்படுத்துகிறார்கள்?

மனநல மருத்துவர்கள் பலவிதமான சிகிச்சை முறைகளைப் பின்பற்றுகிறார்கள். உதாரணமாக, மருந்துகளின் மூலம் சிகிச்சை தருதல், மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை தருதல் போன்றவை. யாருக்கு எந்தச் சிகிச்சை தரவேண்டும் என்பது பாதிக்கப்பட்டவரின் நிலை மற்றும் அவருடைய நோயின் தீவிரத்தன்மையைப் பொறுத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவருக்கு மருந்துகளுடன் உளவியல் சிகிச்சையும் தேவைப்படுகிறது என்றால் அவரை ஒரு மருத்துவ உளவியலாளரிடம் செல்லுமாறு மனநல மருத்துவர் சிபாரிசு செய்யக்கூடும்.

மனநல மருத்துவர்கள் எங்கே பணியாற்றுகிறார்கள்?

மனநல மருத்துவர்கள் பல்வேறு களங்களில் பணியாற்றுகிறார்கள். உதாரணமாக, கிளினிக்குகள், பொது மற்றும் மனநல மருத்துவமனைகள், பல்கலைக் கழகங்களின் மருத்துவ மையங்கள், சமூக அமைப்புகள், முதன்மை நலப் பராமரிப்பு மையங்கள், நர்சிங் ஹோம்கள், மறுவாழ்வு மையங்கள், தொழில், அரசு, ராணுவ பிரிவுகள், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள், நல்வாழ்வு மையங்கள், மற்றும் பல இடங்கள்.

உளவியலாளர்

உளவியல் என்றால் என்ன?

உளவியல் என்பது மனித மனம் மற்றும் மனிதன் நடந்துகொள்ளும் விதத்தைப்பற்றி ஆராயும் பிரிவு ஆகும். மனிதனைச் செயல்படுத் தூண்டுகிற பலவிதமான சிந்தனைகள், உணர்வுகள், உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்ற அம்சங்கள் இந்தத் துறையில் ஆராயப்படுகின்றன. இதற்கென்று பல பரிசோதனைகளும் உள்ளன. பலதரப்பட்ட மனித செயல் பாடு சார்ந்த விஷயங்களைப் புரிந்துகொள்வதற்கும். தீர்ப்பதற்கும் இந்த உளவியல் பற்றிய அறிவு பயன்படுத்தப்படுகிறது. இதில் மன நலப் பிரச்னைகளுக்கான மதிப்பீடுகள் மற்றும் சிகிச்சை முறைகள் ஆகியவை உள்ளடங்கி இருக்கின்றன.

உளவியலாளர் என்பவர் யார்?

உளவியலாளர் என்பவர் உளவியல் துறையில் பட்டங்களைப் பெற்றவர், இவர் மனிதர்களுடைய செயல்பாடுகளைப்பற்றி, அவர்களுடைய நடவடிக்கைகளைப்பற்றி நான்கு அறிந்த நிபுணர் ஆவார். உளவியலாளர்கள் அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி மனிதர்களுடைய எண்ணங்கள், உணர்வுகள், புரிந்து கொள்ளுதல் மற்றும் செயல்பாடுகள் ஆகியவை எந்தெந்த காரணிகளால் பாதிக்கப்படுகின்றன என ஆராய்கிறார்கள். பொதுவாக உளவியலாளர்களிடம் வருகின்றவர்களுக்கு பல விதமான பிரச்னைகள், சவால்கள் இருக்கலாம். உதாரணமாக, சிலருக்கு உறவு சார்ந்த பிரச்னைகள், சிலருக்கு பெற்றோரிடம் பிரச்னைகள், சிலருக்கு வளர் இளம் பருவம் பற்றிய பிரச்னைகள், சிலருக்கு வாழ்க்கை முறை மாற்றங்களால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்னைகள், சிலருக்கு நாள்பட்ட நோய்கள்... இப்படிப் பல்வேறு பிரச்னைகளால் இவர்கள் உளவியலாளரிடம் வரும்போது, அவர்கள் சான்று அடிப்படையிலான ஊகங்களை வைத்துத் தலையீடுகளை உருவாக்கி, அதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கும் சவால்களை அவர்கள் சந்திக்கவும், சமாளிக்கவும் உதவுகிறார்கள். பதற்றம், மனச்சோர்வு, உண்ணுதல் குறைபாடு, அச்சக் குறைபாடு, அளவுக்கு அதிகமாக பொருட்களை பயன்படுத்துதல் போன்ற மனநலக் குறைபாடு உள்ளவர்கள் உளவியலாளர்களிடம் வருகிறார்கள். அவர்கள் தங்களுடைய மருத்துவத் திறன்களைப் பயன்படுத்தி இவர்களுக்கு உதவுகிறார்கள்.

உளவியலாளர்கள் தரும் சிகிச்சையின் அடிப்படை அறிவியலும், கட்டமைப்பும் ஒரே மாதிரி இருந்தாலும், அவர்கள் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்தும் விதம் பல வகைகளில் அமைகிறது.

  • மருத்துவ உளவியலாளர்கள்: இவர்கள் பாதிக்கப்பட்டவருடைய உள்ளம் சார்ந்த அழுத்தத்தை குறைக்க முயற்சி செய்கிறார்கள். அதன் மூலம் அவர்களின் உள்ளம் சார்ந்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறார்கள், முன்னிறுத்துகிறார்கள். அசாதாரணமான உளவியலைப்பற்றிப் படித்த உளவியலாளர்கள், பதற்றம், மனச்சோர்வு, போதைப் பொருட்களை அதிகமாகப் பயன்படுத்துதல், அவற்றிற்கு அடிமையாதல் போன்ற மனநலப் பிரச்னைகளைக் கொண்ட மக்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள், அவர்கள் குணம் பெற உதவுகிறார்கள்.    
  • ஆலோசகர்கள்: பொதுவாக ஓர் ஆலோசகரிடம் வருகிறவருக்கு எந்தவிதமான மனநோயும் இருப்பதாகக் காணப்பட்டிருக்காது, அதே சமயம் அவர்களிடம் மனநலம் சார்ந்த சில பிரச்னைகள் காணப்படலாம். அவற்றைப் பேசி புரிந்து கொள்வதற்காக இவர்கள் ஆலோசகரிடம் வருகிறார்கள். இப்படி வருகிறவர்களிடம் ஆலோசகர்கள் பேசி அவர்களிடம் சமநிலையிமையை உண்டாக்கியிருக்கிற பிரச்னை என்னவாக இருக்கும் என்று கண்டறிகிறார்கள், அதை குணப்படுத்துகிறார்கள். பொதுவாக மனநல ஆலோசகரிடம் வருகிறவருக்கு பலவிதமான பிரச்னைகள் இருக்கக்கூடும். உதாரணமாக, தங்களுடைய அன்புக்குரியவரின் மரணத்தைத் தாங்க இயலாதவராக இருக்கலாம், சிலர் இப்போதைய அல்லது முந்தைய உறவுகளில் இருக்கும் பிரச்னைகளைத் தாங்க முடியாமல் சிரமப்படலாம், சிலர் நடவடிக்கை சார்ந்த பிரச்னைகளின் மூலம் பாதிப்புகளைச் சந்திக்கலாம். இவர்கள் ஒவ்வொருவரிடமும் மனநல ஆலோசகர்கள் விரிவாகப் பேசுகிறார்கள், அதன் அடிப்படையில் அவர்கள் தங்கள் மனப்போக்கை மாற்றிக்கொள்வதற்கு, புகைப்பழக்கத்தை விடுவதற்கு, அவர்களுடைய வாழ்க்கையை வாழ்வதற்கு உதவுகிறார்கள்.
  • பள்ளியில் உள்ள உளவியலாளர்கள்: இவர் குழந்தைகள், வளர் இளம் பருவத்தினருடன் இணைந்து பணியாற்றுகிறார், அவர்களுடைய கற்றல் மற்றும் வளர்ச்சிக்குத் துணை புரிகிறார்.     பள்ளி உளவியலாளர்கள் கல்வி நிறுவனங்களுடன் இணைந்தும் பணியாற்றக் கூடும். அல்லது கல்வி சார்ந்த கொள்கைகளை உருவாக்குகின்ற நிர்வாக அமைப்புக்களுடனும் சேர்ந்து பணியாற்றக்கூடும்.
  • வழக்கு சார்ந்த உளவியலாளர்: இவர் சட்டச் செயல்முறைகள் சார்ந்த உளவியல் அம்சங்களை ஆராய்கிறார், உதாரணமாக, குற்றவியல் விசாரணைகளில் கோட்பாடுகளை அமல்படுத்துதல், குற்ற எண்ணத்துடன் செயல்படுகிற ஒருவருக்கு என்னவிதமான உளவியல் பிரச்னை இருக்கக்கூடும் என்பதைப் புரிந்துகொள்ளுதல், குற்றம் செய்தவர்களுக்குச் சிகிச்சை வழங்குதல் போன்றவை. வழக்கு சார்ந்த உளவியலாளரைக் ‘குற்றவியல் உளவியலாளர்’ ‘ சட்ட உளவியலாளர்’ அல்லது ‘கிரிமினாலஜிஸ்ட்’ என்றும் அழைப்பதுண்டு.
  • நரம்பியல்-உளவியலாளர்: இவர் மூளைக்கும் அதன் நரம்பியல்- உளவியல் செயல்பாடுகளான பார்வை, ஞாபக சக்தி மற்றும் நுகரும் சக்தி ஆகியவற்றுக்கும் உள்ள உறவைப்பற்றி ஆராய்கிறார். மூளைக்காயம் அல்லது பிற நரம்பியல் பிரச்னைகளான பக்கவாதம், டிமென்சியா, கட்டி மற்றும் மூளைச்சிதைவுப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் புனர்வாழ்வுக்கு இவர் உதவுகிறார்.
  • பணி சார்ந்த உளவியலாளர்: இவர் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடமிருந்து சிறந்த செயல்திறனைப் பெறுவதற்கும், ஊழியர்கள் தங்கள் பணியில் திருப்தி அடைவதற்கும் உதவுகிறார். இந்தத்துறையில் அனுபவம் பெற்ற உளவியலாளர்கள் நிறுவனங்களுக்கும் அவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பல வகைகளிலும் உதவுகிறார்கள்: ஊழியர்களை ஊக்கத்துடன் செயல்படச் செய்வதற்கான வியூகங்களை உருவாக்குதல், ஒவ்வொரு பணிக்கும் சிறந்த நபர்களைத் தேர்ந்தெடுத்தல், தனி நபர்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள உதவுதல், அவர்கள் தங்கள் பணி வாழ்க்கையைத் திட்டமிட உதவுதல், ஒரேமாதிரியான வேலையைச் செய்து சலிப்படைந்த ஒருவர் அதைச் சமாளிக்க உதவுதல் போன்றவை. ஒரு குறிப்பிட்ட பொறுப்புக்கு ஒரு குறிப்பிட்ட நபர் பொருந்துவாரா இல்லையா என்பதை மதிப்பிடுவதற்கான உளவியல் பரிசோதனைகளையும் பணி சார்ந்த உளவியலாளர்கள் வடிவமைக்கலாம், பயன்படுத்தலாம்.

உளவியல் மதிப்பீடு என்றால் என்ன?

உளவியல் மதிப்பீடு என்பது, ஒருவர் எப்படிச் சிந்திக்கிறார், எப்படி உணர்கிறார், எப்படி நடந்துகொள்கிறார், சில குறிப்பிட்ட தூண்டுதல்களுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுகிறார் என்பதைப்பற்றிய விவரங்களை ஓர் உளவியலாளர் கண்டறியும் வழிமுறை ஆகும். உளவியல் மதிப்பீடு என்பது பல முறைகளில் நடத்தப்படுகிறது. உதாரணமாக, சம்பந்தப்பட்டவருடன் உரையாடுதல், அவருடைய நடவடிக்கைகளைக் கவனித்தல், மதிப்பிடுதல், முறையான உளவியல் பரிசோதனைகளை நடத்துதல், பிற நிபுணர்களைத் தொடர்புகொண்டு தொடர்புடைய விவரங்களைப் பெறுதல் போன்றவை.

குறிப்பு: உளவியல் மதிப்பீடு என்பது ஒரு பரிசோதனையின் அடிப்படையில் நிகழ்த்தப்படுகிறது, பிறகு இந்தப் பரிசோதனையின் முடிவுகள் நிபுணரால் மதிப்பிடப்பட்டு, புரிந்துகொள்ளப்பட்டு வெளியிடப்படுகின்றன.

பல்வேறு மதிப்பீடு முறைகளில் சேகரிக்கப்பட்ட வெவ்வேறு விவரங்களை நிபுணர்கள் தொகுக்கிறார்கள், அதன் அடிப்படையில் ஒருவருடைய திறன்கள் மற்றும் நடவடிக்கைகளைப்பற்றிய ஒரு முழுமையான அறிக்கையை உருவாக்குகிறார்கள். இந்த விவரத்தின் அடிப்படையில் அவருக்கு எத்தகைய சிகிச்சை தேவை என்பது சிபாரிசு செய்யப்படுகிறது. உதாரணமாக, ஒரு குழந்தை அல்லது இளைஞருடைய உளவியல் மதிப்பீட்டை வைத்து அவருடைய கல்வி அல்லது பணி வாழ்க்கையைத் திட்டமிடலாம், மனநல பாதிப்பு கொண்ட ஒருவருடைய மதிப்பீட்டைக் கொண்டு அவருக்கு எத்தகைய சிகிச்சை தரவேண்டும் எனத் திட்டமிடலாம். மனநல மதிப்பீட்டில் சேகரிக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு, ஓர் உளவியல் அறிக்கையாக வெளியிடப்படுகின்றன.

உளவியல் பரிசோதனை என்றால் என்ன?

உளவியல் பரிசோதனை என்பது, ஒருவருடைய மனப்போக்கு மற்றும் புத்திசாலித்தனத் திறன்களைப் பரிசோதிப்பதற்காக நடத்தப்படுகிறது. இந்தப் பரிசோதனைகள் தரநிலைப்படுத்தப்பட்ட உளவியல் மற்றும் அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைகின்றன.

உளவியல் பரிசோதனையின் வடிவமைப்பு பலவிதமாக மாறுபடலாம். உதாரணமாக, சில பரிசோதனைகளில் பேனா, பென்சில் கொண்டு தாளில் ஏதாவது எழுத வேண்டியிருக்கலாம், கணினி சார்ந்த பரிசோதனைகளும் உள்ளன. சில பரிசோதனைகளில் புதிர்கள் தரப்பட்டு அவற்றை விடுவிக்குமாறு கேட்கப்படலாம், சில பரிசோதனைகளில், மதிப்பிடப்படுகிறவர் ஓவியங்களை வரையவேண்டியிருக்கலாம். கணக்குகளைப் போடவேண்டியிருக்கலாம், அவருக்குச் சொல்லப்பட்ட ஏதாவது ஒரு விவரத்தை நினைவுக்குக் கொண்டுவர வேண்டியிருக்கலாம். சில மனநல பரிசோதனைகளில் சம்பந்தப்பட்டவர் பிறருடன் எப்படி பழகுகிறார்,     எப்படி நடந்து கொள்கிறார் என்பவையும் அளவிடப்படலாம்.

இந்தப் பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில், ஒரு தனி நபருக்குள் இருக்கும் திறன்கள் மற்றும் அவருடைய சாத்தியங்களைப்பற்றிய தங்களுடைய கருத்துகளை உளவியலாளர்கள் வழங்குகிறார்கள். மதிப்பிடப்படும் நபருக்குத் தெரியாத விஷயங்களை ஊகித்து அறியும் உத்திகளும் உள்ளன. உதாரணமாக கருப்பொருள் அடிப்படையிலான தன்னை அறிதல் பரிசோதனை மற்றும் ரோர்ஸ்கார்ஷ் பரிசோதனை.

ஓர் உளவியல் பரிசோதனையில் எந்தெந்த அம்சங்கள் மதிப்பிடப்படுகின்றன?

ஓர் உளவியல் பரிசோதனையில், பலவிதமான தன்மைகள் மதிப்பிடப்படுகின்றன:

தகவமைப்புப் பதிவுமுறை மதிப்பீடுகள்: இந்த மதிப்பீடுகள் ஒருவருடைய சமூக மற்றும் இயல்பான திறன்களை மதிப்பிடுவதற்காக நடத்தப்படுகின்றன. உதாரணமாக ஒரு குழந்தை சமூகச் சூழல்களில் எப்படி நடந்துகொள்கிறது, பள்ளியில் அல்லது வீட்டில் பல்வேறு சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்கான வாழ்க்கைத் திறன்கள் அதற்கு உள்ளவனவா போன்றவற்றை மதிப்பிடுவதற்கு இந்தப் பரிசோதனை பயன்படும். பொதுவாக இந்தப் பரிசோதனை அறிவாற்றல் பரிசோதனையுடன் சேர்த்து நடத்தப்படுகிறது. குறிப்பாக, தினசரி நடவடிக்கைகளைச் செய்ய இயலாதவர்கள் அல்லது குறைவான அறிவாற்றல் பிரச்னை உள்ளதோ என்று சந்தேகிக்கப்படுகிறவர்களுக்கு இந்தப் பரிசோதனை நடத்தப்படுகிறது.

திறனறிதல் பரிசோதனை: இந்தப் பரிசோதனை, பல்வேறு செயல்பாடுகளை ஒருவரால் செய்ய இயலுகிறதா என்பதை மதிப்பிடுகிறது. உதாரணமாக, சிலர் இயக்கவியல் சார்ந்த செயல்பாடுகளில் மற்றவர்களைவிடச் சிறந்து விளங்குவார்கள், சிலர் மொழி மற்றும் புரிந்து கொள்ளுதல் திறன்களில் சிறந்து விளங்குவார்கள், சிலர் படைப்புணர்ச்சி சார்ந்த விஷயங்களில் சிறந்து விளங்குவார்கள். இப்படி வெவ்வேறு திறன்களில் ஒருவர் எவ்வளவு திறமைசாலி என்பதை அளவிடுவதில் இந்தப் பரிசோதனை கவனம் செலுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட வேலைக்கு ஒருவர் சரிப்படுவாரா என்பதைத் தீர்மானிப்பதற்கு இந்தப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இதன்மூலம், ஒருவருடைய திறன்கள் அடிப்படையில் அவருக்கு ஏற்ற வேலையைத் தீர்மானிப்பது எளிதாகிறது.

அறிவாற்றல் பரிசோதனைகள்: இந்தப் பரிசோதனைகள் ஒருவருடைய பிரச்னையை தீர்க்கும் திறன், தர்க்கரீதியில் சிந்திக்கும் திறன், மொழி வளம், புரிந்துகொள்ளும் திறன், ஞாபகத்திறன் போன்றவற்றை மதிப்பிடுகின்றன. இவற்றைப் புத்திசாலித்தன பரிசோதனைகள், IQ பரிசோதனைகள், பொதுத் திறன் பரிசோதனைகள் என்றும் அழைப்பார்கள், இவை பெரும்பாலும் கல்வித்துறையில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. மாணவர்கள் தங்களுடைய திறன்களை அடையாளம் கண்டு முழு சாத்தியங்களை எட்டுவது இந்தப் பரிசோதனைகள் மூலம் சாத்தியமாகிறது.

கல்வி / சாதனைப் பரிசோதனைகள்: இந்தப் பரிசோதனைகள் ஒரு குறிப்பிட்ட தலைப்பை ஒருவர் எந்த அளவுக்கு அறிந்து வைத்திருக்கிறார் என்பதை மதிப்பிடப் பயன்படுகின்றன. உதாரணமாக கணிதம், வாசிப்பு போன்ற திறன்களை ஒருவர் எந்த அளவுக்குப் பெற்றிருக்கிறார் என்பதை அறிதல், அவற்றைக் கற்பதில் அவருக்கு ஏதேனும் சிரமங்கள் உள்ளனவா என்று அடையாளம் காணுதல் போன்றவை. இந்த வகையிலான பரிசோதனைகள் பெரும்பாலும் கல்வித்துறையில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன, ஒரு குழந்தையின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு இவற்றை நிபுணர்கள் பயன்படுத்துகிறார்கள்.

வழக்கு சார்ந்த உளவியல் பரிசோதனைகள்: இந்தப் பரிசோதனைகள் பொதுவாக அறிவாற்றல், ஆளுமை, நரம்பியல்-உளவியல் ஆகிய மதிப்பீடுகளின் தொகுப்பாக அமைகின்றன. இதன்மூலம் ஒருவர் ஒரு குறிப்பிட்ட குற்றத்தைச் செய்தாரா இல்லையா என்பதை தீர்மானித்து உறுதிசெய்ய இயலும். ஆகவே இந்தப் பரிசோதனைகள் பெரும்பாலும் சட்டத்துறையில் செய்யப்படுகின்றன.

மனநல மதிப்பீடு: இந்தப் பரிசோதனை ஒருவருடைய மருத்துவ வரலாறு, குடும்ப வரலாறு, இப்போதைய மனநல நிலை ஆகியவற்றைப்பற்றிய விவரங்களைச் சேகரிக்கிறது, இதன்மூலம் அவருக்கு ஏதேனும் மனநலப் பிரச்னை இருக்கக்கூடுமா என்பதை அடையாளம் காண்கிறது. இதன்மூலம் பிரச்னையை அடையாளம் காணுதல், சிகிச்சை வழங்குதலுக்கு உதவுகிறது.

நரம்பியல்-உளவியல் பரிசோதனை: இந்தப் பரிசோதனை ஒருவருடைய மூளை எப்படி இயங்குகிறது என்பதை ஆராய்கிறது. அவருடைய மூளையில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அதை அடையாளம் காண்கிறது. உதாரணமாக, மூளைக்காயம் கொண்ட ஒருவர் அல்லது டிமென்சியா அபாயம் உள்ள ஒருவருடைய ஞாபகத்திறன் பரிசோதிக்கப்படலாம் அதன் அடிப்படையில் அவருடைய மூளையின் இயங்குதிறனில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பது தீர்மானிக்கப்படலாம்.

ஆளுமை மதிப்பீடு: இந்தப் பரிசோதனை ஒருவருடைய ஆளுமைப் பண்புகளில் கவனம் செலுத்துகிறது. இதைக்கொண்டு ஒருவர் அதிகம் அகவயத் தன்மை கொண்டவரா அல்லது புறவயத்தன்மை கொண்டவரா சுய உறுதிப்பாடு கொண்டவரா, அல்லது பிறருடன் பழகத் தயங்குபவரா என்பது போன்ற விஷயங்களைக் கண்டறியலாம். இதன்மூலம் அவர்கள் வெவ்வேறு வாழ்க்கைச் சூழல்களுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுவார்கள் அந்தச் சமயங்களில் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பதை மதிப்பிடலாம்.

ஆலோசகர்

ஆலோசனை வழங்குதல் என்றால் என்ன?

ஆலோசனை வழங்குதல் என்பது ஒரு சிறப்பான, செயல்முறைசார்ந்த உளவியல் ஆகும். இது பல்வேறு வாழ்க்கைச்சூழல்கள் காரணமாக ஏற்படும் உணர்வுநிலை, நடவடிக்கை சார்ந்த அல்லது சமூகம் சார்ந்த பிரச்னைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. உதாரணமாக ஒருவருக்குப் பணியிடத்தில் தொல்லைகள் இருக்கலாம், பள்ளி அல்லது கல்லூரியில் தொல்லைகள் இருக்கலாம், குடும்பத்தில் தொல்லைகள் இருக்கலாம், இவற்றின்மூலம் அவருக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகளை ஆலோசனைமூலம் சரிசெய்ய இயலும்.

ஆலோசனை வழங்குபவர் பல்வேறு கட்டமைப்பான செயல்முறைகளைப் பயன்படுத்துகிறார். இவை வழிகாட்டுகிற அல்லது வழிகாட்டாத வழிமுறைகளாக அமைகின்றன. இதன்மூலம் ஆலோசனை பெறுபவர் தர்க்கரீதியில் சிந்தித்து, சரியான தீர்மானங்களை அடைய உதவி வழங்கப்படுகிறது. ஓர் ஆலோசகரிடம் பாதிக்கப்பட்டவர் பேசுகிற அனைத்து விஷயங்களும் முற்றிலும் ரகசியமாக வைக்கப்படும்.

ஆலோசனை வழங்குவோர் பின்வரும் விஷயங்களில் கவனம் செலுத்துகிறார்கள்:

  • தீவிர மனநலப் பிரச்னைகளைவிட, இயல்பான அல்லது மிதமான பிரச்னைகளைத் தீர்ப்பதில்தான் ஆலோசகர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள். இந்தப் பிரச்னைகள் பொதுவாக வாழ்க்கை நிகழ்வுகளால் மனத்திற்கு அழுத்தம் உண்டாக்கும் காரணிகளால் ஏற்பட்டவையாக இருக்கும்.
  • இவர்கள் ஒருவருடைய சிந்தனை முறை, நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வார்கள். காரணம் இவைதான் அவர்களுடைய செயல்பாட்டிற்கு வழிவகுக்கின்றன.
  • இவர்கள் பழைய நிகழ்வுகளைவிட இப்போதைய நிகழ்வுகளுக்குதான் அதிக முக்கியத்துவம் தருவார்கள்.
  • ஒருவருக்குத் தேவைப்படுகிற படைப்புணர்ச்சி, தன்னை வெளிப்படுத்துதல், உறுதிப்பாடு போன்றவற்றை அவருக்குள் உண்டாக்குவதில் கவனம் செலுத்துவார்கள்.
  • இவர்கள் ஒருவருடைய உணர்வுப்பூர்வமான, அறிவார்ந்த சிந்தனையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவார்கள், வாழ்க்கைச் சூழலுக்கு நேர்விதமான எதிர்வினையாற்றவேண்டும் என்று வலியுறுத்துவார்கள்.

ஆலோசகர் என்பவர் யார்?

மனநல ஆலோசகர்கள் பலவிதமான பயிற்சிகளைப் பெற்றவர்களாக இருக்கலாம், சிலர் மனநல ஆலோசனைக்கென்றே முதுநிலைப் பட்டம் பெற்றிருக்கலாம். சிலர் தபால் முறையில் சில மாதப் பயிற்சிமட்டுமே பெற்றிருக்கலாம். ஆனால் இவர்கள் எல்லாருமே அடுத்தவர்கள் சொல்வதைக் கேட்கும் கலையில் நல்ல பயிற்சி பெற்றிருப்பார்கள், அவர்களுடைய பிரச்னைகளை அவர்களையே அலசச்செய்து, தர்க்கரீதியிலாகப் பொருந்தக்கூடிய ஒரு தீர்வைக் கண்டறிய உதவுவார்கள்.

மனநல ஆலோசகர்கள் பலவிதமான பிரச்னைகளைக் கையாள்கிறார்கள், ஓர் உளவியலாளர், மனநல மருத்துவர் மற்றும் உளவியல் சிகிச்சையாளர் சந்திக்கும் சிறிய, பெரிய, நடுத்தரமான பிரச்னைகள் அனைத்தையும் ஒரு மனநல ஆலோசகரும் சந்திக்கக்கூடும்.

அதேசமயம், ஆலோசனை பெறுகின்ற ஒரு நபரின் பிரச்னை இந்த ஆலோசனைமூலம் தீர்வதாகத் தெரியாதபோது, அந்த ஆலோசகரே பாதிக்கப்பட்டவரிடம் இதுபற்றித் தெரிவித்துவிடுவார். அவர் எத்தகைய மனநல நிபுணரைச் சந்தித்தால் அவரது பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கக்கூடும் என்பதையும் அவர் குறிப்பிடுவார். அதன்மூலம் அவருடைய பிரச்னை சரியாகக் கண்டறியப்படுவதையும், சிகிச்சை அல்லது மருந்துகள் வழங்கப்படுவதையும் உறுதிசெய்வார்.

மனநலச் சமூகப் பணியாளர்

மனநலச் சமூகப் பணியாளர்கள், பயிற்சி பெற்ற மனநல நிபுணர்கள் ஆவர். இவர்கள் ஒருவருடைய மனநலப் பிரச்னைகளோடு வரக்கூடிய வாழ்க்கை, சமூக பிரச்னைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிய உதவுவார்கள், அதன்மூலம் அவர் தன்னுடைய வாழ்க்கையை இயல்பாக வாழத் துணைபுரிவார்கள்.

மனநலச் சமூகப்பணியாளர்கள் பின்வரும் பணிகளில் கவனம் செலுத்துகிறார்கள்:

  • பாதிக்கப்பட்டவருடைய உணர்வுசார்ந்த, சமூக, பொருளாதார, மனநலத் தேவைகளை மதிப்பிடுதல்.
  • பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்ப உறுப்பினருக்கும் அந்தப் பிரச்னையைப்பற்றிச் சொல்லுதல், அதன்மூலம் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படுகிற சிகிச்சைத் திட்டத்தை அவர்கள் புரிந்துகொள்ள வழிசெய்தல்.
  • பாதிக்கப்பட்டவருடைய சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்துதல், அவர்களுக்குப் பயன்படக்கூடிய சமூக வளங்களை அடையாளம் காணுதல்.
  • தனிநபர், குழு, குடும்பச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தல்.
  • பாதிக்கப்பட்டவர், அவரது குடும்ப உறுப்பினர் மற்றும் நலப்பராமரிப்பு உறுப்பினர்களிடையே தகவல் தொடர்பை மேம்படுத்துதல்.
  • பாதிக்கப்பட்டவர் மீண்டும் சமூகத்துடன் ஒருங்கிணைவதற்கான ஒரு திட்டத்தைத் தயாரித்தல்.
  • சுருக்கமாகச் சொன்னால், மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள், சுமுகமாகக் குடும்ப, சமூக வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு இவர்கள் முக்கியப்பங்காற்றுகிறார்கள்.

மனநலச் செவிலியர்

மனநலச் செவிலியர்கள், மனநலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களை மதிப்பிடுகிற, அவர்களுக்கு வந்துள்ள பிரச்னைகளைக் கண்டறிகிற, அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கிற திறன் வாய்ந்தவர்கள். இதற்காக இவர்கள் தனிநபர்கள், குடும்பத்தினர், குழுக்கள் மற்றும் சமூகத்தினரோடு இணைந்து பங்காற்றுகிறார்கள், அவர்களுடைய மனநலத் தேவைகளை மதிப்பிட்டு அதற்கேற்பச் செயல்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மனநலப் பிரச்னைகளைப்பற்றிச் சொல்லித்தருகிறவர்களாகவும், ஆலோசகர்களாகவும், சிகிச்சை வழங்குகிறவர்களாகவும்கூட இவர்கள் பங்காற்றுகிறார்கள்.

https://tamil.whiteswanfoundation.org/mental-health-matters/understanding-mental-health/role-of-mental-health-experts

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.