Jump to content

ஊருக்கு போய் வந்த தம்பர்..!பாகம்.2


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

large.201808070152271902_Malaysian-flight-sudden-passenger-cancellation_SECVPF.gif.jpeg.f50e48cc7d8fa8baafca77ecc17534e2.jpeg

 

ஊருக்கு போய் வந்த தம்பர்..! (பாகம்2)

*****************************

பெரு மூச்சுவிட்ட தம்பர்

பின் தொடர்ந்தார்..

வெளிநாடுகளில் ஒருத்தரும்

இல்லாத குடும்பங்களும்

வேலை,வீட்டுத்தோட்டம்

படிப்பென்று பண்போடுதான்

சிக்கனமாய் 

வாழுதுகள் பாருங்கோ

 

இங்கிருந்து சிலர் 

ஊருலாப்பென்று

ஊருக்கு போய் எதோ

சந்திர மண்டலத்துக்கு 

போய் வந்த

மாதிரி வெளிநாட்டைப்பற்றி

விளாசித்தள்ளுவார்களாம்.

பாருங்கோ.

 

வந்து நிற்கிற கொஞ்ச

நாட்களுக்குள்ள 

கிடாய் அடிச்சு

கோழி அடிச்சு  

மதுப்போத்தல்ல 

விழுந்தடிச்சு

பக்கத்து வீடுகளுக்கு

பகட்டுக் காட்டி

 

காசையெடுத்து வீசி

கஸ்டப்பட்டதுகள் 

வாங்கும் அன்றாட 

பொருட்களுக்கெல்லாம்

விலையை ஏத்தியும்

விரக்தியை ஏத்தியும்

விலாசம் காட்டிறதால

வெளிநாட்டுக்காரர் 

என்றாலே

வெறுப்பாக்கிடக்கிதாம்

பாருங்கோ.

 

அதுகும் திருமணம் பேசி

போன மாப்பிளையெண்டால்

சொல்லி வேலையில்லையாம்

 

அங்க நான் நிற்கையில

அடியுங்கடா போண் என்று

ஐந்தாறிட்ட 

சொல்லி விட்டு போய்

அவங்களும்  அடிக்க இவரோ

வெளிநாட்டில பெரிய

அதிகாரிபோல

 கால் நிலத்தில படாதாம் 

பாருங்கோ..

 

சிலர்..

தண்ணிப்போத்தல 

கட்டிக்கொண்டு

எதோ ஒரு பாலவனத்துக்கு

வந்தமாதிரியே பாசாங்கு 

பண்ணிறதப்பாத்தா 

அதுகளுக்கு

பத்திக்கொண்டுதான் 

வருமாம் பாருங்கோ

 

இப்படி இப்படி 

சொந்த காசைக் 

கொண்டுபோய் 

சோக்குப்பண்ணிறது 

குறைவு பாருங்கோ

 

வங்கியில லோண் எடுத்ததும் 

வட்டிக்கு வாங்கியதுமாய் 

கொண்டு போய் 

பெருமை காட்டுறதாலத்தான்

வெளிநாட்டில மரத்தில 

புடுங்குறாங்க என

சிலர் நினைப்பதுவும்

தப்பில்லைப் பாருங்கோ

 

என்.. 

நண்பன் சுப்பரும்

இருந்த இடத்தவிட்டு 

எழும்பேலாமக்கிடக்காம்

என்று அறிந்து பாப்பமென்று 

போன்னான் பாருங்கோ

 

அவனப்பாத்த நல்லாத்தான் 

இருக்கிறான்

அறிஞ்சதைக்கேட்டா 

அவன் சொல்றான்

இது வெளிநாட்டு உறவின்ர 

காணி அதுதான்

இருந்தா எழும்ப முடியாது.

 

இந்த வருத்தம் எனக்கு 

மட்டுமல்ல

நிறையப்பேருக்கு இருக்கு.

மச்சான் என்று

அவன் சிரிக்கிறான் 

பாருங்கோ.என

தம்பர்

ஏதோ சொல்ல வந்தார்..

 தொடரும்..

அன்புடன் -பசுவூர்க்கோபி-

எனது யாழ் அன்பு இதயங்களுக்குளுக்கு "ஊருக்கு போய்வந்த தம்பர்" முதல் பாகத்தையும்

கீழே தந்துள்ளேன்.படித்துவிட்டு கவிதைபற்றிய உங்கள் கருத்தை தாருங்கள்.நன்றிகள்.  

 

https://www.youtube.com/user/PasuvoorkGobi 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு போய் பந்தா காட்டும் நம்மவர்க்கு நன்றாக உறைக்க சொன்னீர்கள் .அடுக்கு வரிகள் மிகவும் அழகு .பாராட்டுக்கள். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கோபி…!

கவிதை கொஞ்சம் சீரியஸாகப் போகுது போல கிடக்குது…!

வெளி நாட்டு உறவினர் வீட்டில் இருந்தால் எழும்பாமல் இருக்கிறது தான் இப்போதைய யதார்த்தம். படம் காட்டிறது எமது இனத்தின் நிற முகூர்த்தில் பின்னிப் பிணைஞ்சு போய் இருக்குது போல..!

தொடருங்கள்…!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான பந்தா பேர் வழிகளால் தான் மற்றவர்களுக்கும் கெட்ட பெயர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

இப்படியான பந்தா பேர் வழிகளால் தான் மற்றவர்களுக்கும் கெட்ட பெயர்.

நாங்கள் யாரையும் அப்படி நினைக்க மாட்டம்  

 

13 hours ago, பசுவூர்க்கோபி said:

என்.. 

நண்பன் சுப்பரும்

முந்தய காலத்தில் சுப்பண்ணை என ஒரு நண்பர் இருந்தார் அவர் நினைவும் வந்து போகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகப் போகிறார் தம்பர் ......தொடருங்கள் கோபி ......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

இப்படியான பந்தா பேர் வழிகளால் தான் மற்றவர்களுக்கும் கெட்ட பெயர்.

பந்தா பேர்வழிகள் எல்லா நாட்டு சனத்திலையும் இருக்கு 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிலாமதி said:

ஊருக்கு போய் பந்தா காட்டும் நம்மவர்க்கு நன்றாக உறைக்க சொன்னீர்கள் .அடுக்கு வரிகள் மிகவும் அழகு .பாராட்டுக்கள். 
 

நன்றிகள்  அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றிகள்.. தொடருங்கள் தோழர் ..💐

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.