Jump to content

வங்கிக் கொள்ளை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மும்பையில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையின் போது கொள்ளையா்கள் துப்பாக்கியுடன், அனைவரையும் மிரட்டினா்."இந்தப் பணம் #அரசுக்கு_சொந்தமானது, ஆனால் உங்கள் உயிர், உங்களுக்குச் சொந்தமானது. அதனால், யாரும் எங்களை எதிர்க்க வேண்டாம்..!அனைவரும் அசையாமல் கீழே படுங்கள்" என்று மிரட்டியவுடன், படுத்துவிட்டார்கள்.மனதை மாற்றும் முறை என்பது இதுதான் .
 
"This is called 'Mind Changing Concept' Changing the conventional way of thinking."
 
அங்கே ஒரு பெண், கொள்ளையர்களின் கவனத்தைத் திருப்ப அநாகரிகமாக நடந்தாள். அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன், "இங்கு நடக்க போவது கொள்ளை.. பாலியல் வல்லுறவு அல்ல.." என்று மிரட்டி, அவளை அமர வைத்தான்.இதைத்தான், செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம்
"
Being Professional & Focus only on what you are trained"
 
கொள்ளையடித்து விட்டு வீட்டிற்கு வந்தவுடன், கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான். "வாருங்கள்.. சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்.." என்று.மற்றொருவன் சொன்னான், "பொறு, அவசரம் வேண்டாம். பணம் நிறைய இருக்கிறது. நேரம் அதிகம் செலவாகும். நாம் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று அரசே நாளைய செய்திகளில் சொல்லி விடும்.
இதைத்தான், படிப்பை விட அனுபவம் சிறந்தது என்போம்..!
 
"This is called 'Experience' Nowadays, experience is more important than paper qualifications..!"
 
கொள்ளை நடந்தபோதே, வங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது, அவருடைய உயர் அதிகாரி தடுத்து அவரிடம் கூறினார்."வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி எடுத்து பங்கு பிரித்துக் கொள்வோம். மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றார்.
"காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" என்பது இது தான்.
 
"This is called Swim along with the tide.... Converting an unfavourable situation to yours."
 
இதை கேட்ட மற்றொரு அதிகாரி " வருடம் ஒரு கொள்ளை, இவ்வாறு நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..??!!" என்றார்.இதுதான் சுயநலமான உலகம்..!
 
"This is called Killing boredom World. Personal happiness is much more important than your job."
 
மறுநாள் செய்திகளில், வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கப்பட்டது. அமைச்சர் போட்ட உத்தரவு அப்படி. ஏனென்றால் அவர் பங்கு 50 கோடி..
கொள்ளையா்கள் மிரண்டு போனார்கள். பணம் எண்ணும் மிஷின் வாங்கி வந்து, பணத்தை எண்ணத் தொடங்கினர் .எவ்வளவு எண்ணியும், அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல் ,போக முடியவில்லை.
 
கொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து, "நாம் உயிரைப் பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம். ஆனால் இந்த வங்கி அதிகாரிகளும், அமைச்சரும் சிரமம் இல்லாமல், 80 கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழுது_ இதற்குத் தான் படித்திருக்க வேண்டும்.."என்றான்.
 
"True. Knowledge is nowadays very important than money in this world."
 
நம்_நாடு இப்படிப்பட்ட திருடர்களாலும், அமைச்சர்களாலும் தான் ஆளப்படுகிறது..!#பாவம்_மக்கள்..!
 
-படித்ததில் பிடித்தது-
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது படித்ததில் பிடித்தது மட்டுமல்ல பிடித்து சிப்பிலி ஆட்டுது ...........நன்றி சகோதரி.......!   👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.