Jump to content

கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படுமென சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படுமென சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

'முத்தமிழறிஞர்' கலைஞர் அவர்களுக்கு 39 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது...

poli_image258.jpg

'சட்டமன்றப் பேரவை விதி எண் 110ன் கீழ் இந்த அரசின் முதல் அறிவிப்பினை உங்கள் அனுமதியுடன் இந்த அவைக்கு அறிவிக்க விரும்புகிறேன். 

விதி எண் 110 கீழ் அறிவிக்கும் முதல் அறிவிப்பே 'தமிழினத் தலைவர்', 'முத்தமிழறிஞர்', 'எண்பது ஆண்டுகாலம் இந்த தமிழ் சமுதாயத்திற்கு உழைத்த போராளி' கலைஞர் அவர்களது புகழுக்கு பெருமை சேர்க்கும் அறிவிப்பாக அமைந்துள்ளதை நினைத்து நான் மட்டுமல்ல இந்த அரசே பெருமைப்படுகிறது.

imaege_poli_25821.jpg

'இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி', 'கனவு மாநிலத்தையே உருவாக்கிய மகத்தான சிற்பி', 'அரை நூற்றாண்டு காலத்தின் நிரந்தர தலைப்பு செய்தியாக இருந்த முத்தமிழறிஞர்' கலைஞர் அவர்களுக்கு 39 கோடி ரூபாய் செலவில் நவீன விளக்கப்படங்களுடன் சென்னை காமராஜர் சாலை, அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் காணி பரப்பளவில் நினைவிடம் அமைக்கப்படும் என்பதை இந்த மாமன்றத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.

திமுக அரசு பதவியேற்றதும் சட்டப் பேரவை விதி எண் 110ன் கீழ் அறிவிக்கப்பட்டிருக்கும் முதல் அறிவிப்பு இது என்பதாலும், கலைஞரின் நினைவிடத்தின் மாதிரி தோற்றப் புகைப்படம் வெளியிடப்பட்டிருப்பதாலும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.virakesari.lk/article/112004

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசின் கஜானா காலியாக உள்ள நிலையில்,

இப்படியான வீண் செலவுகள் செய்யலாமா

இதனை… கருணாநிதியே விரும்ப மாட்டார். 😎😎😎😎😎😎😎😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தமிழ் சிறி said:

தமிழக அரசின் கஜானா காலியாக உள்ள நிலையில்,

இப்படியான வீண் செலவுகள் செய்யலாமா

இதனை… கருணாநிதியே விரும்ப மாட்டார். 😎😎😎😎😎😎😎😎

imaege_poli_25821.jpg

சிறித்தம்பி அந்த 3 லைன் என்னத்தை குறிக்கும்? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

தமிழக அரசின் கஜானா காலியாக உள்ள நிலையில்,

இப்படியான வீண் செலவுகள் செய்யலாமா

இதனை… கருணாநிதியே விரும்ப மாட்டார். 😎😎😎😎😎😎😎😎

அவர் தனக்கும் தனது குடும்பத்துக்கும் என்றால் மறுக்க மாட்டார்........!  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, குமாரசாமி said:

imaege_poli_25821.jpg

சிறித்தம்பி அந்த 3 லைன் என்னத்தை குறிக்கும்? :cool:

குமாரசாமி அண்ணை… அதற்கு பல காரணங்கள் உள்ளது.

1) முன் உள்ள பேனை தான்…. கருணாநிதி.

அவருக்குப் பின்…. ஸ்ராலின், உதயநிதி, இன்பநிதி…. என்று மன்னர் ஆட்சியை  குறிக்கின்றது.

2) மனைவி, துணைவி, காதலி என்று அவருடன்….  வாழ்ந்த அம்மணிகளை குறிக்கின்றது. என நினைக்கின்றேன்.

10 minutes ago, suvy said:

அவர் தனக்கும் தனது குடும்பத்துக்கும் என்றால் மறுக்க மாட்டார்........!  😎

முன்பு அப்படி இருந்திருக்கலாம். கடைசிக் காலத்தில்… தமிழரை காப்பாற்ற வந்த, “கட்டு மரம்” என்று சொல்லிய உத்தமர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) உடன்பிறப்புகளை விலக்கு.....!

2) ஊழலைப்  பெருக்கு.........!

3) உறவுகளை அணைத்துக் கொள் .......!   🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. கடமை (குடும்பத்துக்கு)

2. கண்ணியம் ( கிலோ என்னவிலை?)

3. கட்டுப்பாடு (இன உணர்வுக்கு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நந்தன் said:

அடுத்த சுனாமி எப்ப வரும் 

ம‌க்க‌ளுக்கு பாதிப்பு இல்லாம‌ சுனாமி வ‌ந்து மெரினாவை த‌ர‌ம‌ட்ட‌ம் ஆக்கினா ம‌கிழ்ச்சி யுவ‌ர் ஆன‌ர் ஹா ஹா 😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

தமிழினத் தலைவர்', 'முத்தமிழறிஞர்', 'எண்பது ஆண்டுகாலம் இந்த தமிழ் சமுதாயத்திற்கு உழைத்த போராளி' கலைஞர்

வேறு நாட்டவர்கள் கலைஞரை விமர்சிப்பதை விடுங்கள், அத்தனை புகழ்வாய்ந்த கலைஞரை சொந்த மாநில மக்கள் நிரந்தர முதல்வர் பதவியில் வைத்து அல்லவா அழகு பார்த்திருக்கவேண்டும், ஏன் செய்யவில்லை?

எம்ஜிஆர் ஆட்சியில் இருந்தவரை முதல்வர் நாற்காலி இருந்தபக்கமா கலைஞர் சும்மா போய் வரகூட தமிழக மக்கள் அனுமதிக்கவில்லை.

அண்ணா இறப்பின் பின்னர் பல போட்டியாளர்களின் நடுவில் கலைஞரை முதல்வர் பதவியில் அமர்த்தியதே எம்ஜிஆர்தான் எங்கிறது வரலாறு.

பின்பு அதே எம்ஜிஆர் மக்களின் அமோக ஆதரவுடன் கருணாநிதியின் முதல்வர்  நாற்காலியை பறிச்சுபோட்டு அங்கால ஓடிபோ என்று கலைச்சுவிட்டார் என்பதும் வரலாறு. 

பின்பு ஜெயலலிதா காலத்திலும் அதே நிலை, தமிழின தலைவர் என்று கருணாநிதி தனக்குதானே போஸ்டர் அடிச்சுவிட்டுக்கொண்டு திரிஞ்ச காலத்தில் சாதாரண நடிகையா இருந்த ஜெயலலிதா பின்னாளில் முதல்வரானதும் அவர்கிட்டையே பலமுறை படுதோல்வியடைந்தது இந்த 80 வருசமா தமிழ் சமுதாயத்துக்கு உழைத்த போராளியின் கட்சி.

ஜெயலலிதாவும் எம்ஜிஆர் உருவாக்கிய ஒரு கட்சியில் இருந்த ஒரே காரணத்தினால்தான்  திடீர் புரட்சி தலைவியாகி கருணாநிதிக்கு சவாலாயிருந்தார் என்பது வேறு விசயம்.

ஜெயலலிதா இறப்பின் பின்னர் பலமான ஒரு எதிர்கட்சி தமிழகத்தில் இல்லாமல்போன ஒரேயொரு காரணத்தால் திமுக அரியணையேறி ஸ்டாலின் முதல்வரானார், இல்லையென்றால் 80 ஆண்டுகாலமாக தமிழ் சமுதாயத்திற்கு உழைத்துபோனவர் உருவாக்கிவிட்டுபோன கட்சி நிரந்தர எதிர்கட்சியாகதான் இருந்திருக்கும்.

சொந்தமக்களே நேசிக்காத ஒருவருக்கு விழுந்து விழுந்து பட்டம் கொடுப்பதும் விலையுயர்ந்த நினைவு சின்னம் எழுப்புவதும் பொதுமக்கள் வரிபணத்தில் புட்போல் விளையாடும் செயல்.

தமிழருக்காக உழைத்தார் உழைத்தார் என்று அவரும் அவர் கட்சி சார்ந்த அல்லகைகளூம் அவரது வாரிசுகளும் அலறுவதை தவிர அந்த மாநில மக்களில் பெரும்பான்மையினர்  எவரும் சின்னதா ஒரு சத்தம்கூட போட காணோம்.

இந்த நிலையில் அன்னாருக்கு நினவு சின்னம் அவசியம்தானா?

அவமானசின்னம் வேண்டுமென்றால் எழுப்புங்கள் அம்சமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, valavan said:

தமிழருக்காக உழைத்தார் உழைத்தார்

இல்லாத திராவிடத்துக்காக உழைத்தார்.

உண்மையாக உழைத்திருந்தால் காமராஜர் மாதிரி வெறும் கையுடனல்லவா இறந்திருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் பதவியில் இல்லாத ஒருவர் இறந்தால்...
மெரீனாவில்...  புதைக்கக் கூடாது என்று,
"டிராஃபிக்  ராமசாமியும்", வேறு ஒருவரும் போட்ட வழக்கு நீதிமன்றத்தில், இருக்கும் போது...  

அதற்கு இடம் கொடுத்த.. அப்போதைய முதல்வர், பழனிச் சாமி செய்த வேலையால்,
இனி அந்த இடத்தில், அவருக்குப்  பின், அவரின் வாரிசுகளையும் கொண்டு வந்து புதைத்து,
மெரீனாவை.. சுடுகாடு ஆக்க, இந்தக் குடும்பம்  மும்முரமாக நிற்கும்.

ஜெயலலிதா இருந்திருந்தால், கருணாநிதிக்கு மெரினாவில் ஒரு துண்டு நிலமும் கிடைத்திராது.
ஜெயலலிதா...   கருணாநிதிக்கு, கொஞ்சம் முன்பு இறந்து விட்டாரே என்ற கவலை உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

ஜெயலலிதா இறப்பின் பின்னர் பலமான ஒரு எதிர்கட்சி தமிழகத்தில் இல்லாமல்போன ஒரேயொரு காரணத்தால் திமுக அரியணையேறி ஸ்டாலின் முதல்வரானார், இல்லையென்றால் 80 ஆண்டுகாலமாக தமிழ் சமுதாயத்திற்கு உழைத்துபோனவர் உருவாக்கிவிட்டுபோன கட்சி நிரந்தர எதிர்கட்சியாகதான் இருந்திருக்கும்.

வளவன்... கடந்த தேர்தலில் கூட,
எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் ... 
சசிகலா, தினகரனை.. சேர்த்து தேர்தலில் நின்றிருந்தால்,  
தி.மு.க. படு தோல்வி அடைந்திருக்கும்.

இவர்கள் செய்த தவறால்... இனி, 
உதயநிதியையும் முதலமைச்சராக  ஆக்கி விட்டுத்தான் ஓய்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

imaege_poli_25821.jpg

சிறித்தம்பி அந்த 3 லைன் என்னத்தை குறிக்கும்? :cool:

1=முதல் மனைவி 

2=இரண்டாம் மனைவி 

3=மூன்றாம் மனைவி   

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தமிழ் சிறி said:

இனி, 
உதயநிதியையும் முதலமைச்சராக  ஆக்கி விட்டுத்தான் ஓய்வார்கள்.

அதில் சந்தேகம் ஏது...

கருணாநிதி இறக்கும்வரை அரசியல் பக்கமே பெரிதாக தலை காட்டாமல் இருந்த உதயநிதி  அவர் இறந்த அடுத்தவாரமே அரசியலில் திமுக அரசியலில் முக்கிய புள்ளியாக இறக்கப்பட்டார் ,

திமுகவுக்காக பல லட்சம்  தொண்டர்கள் பல தசாப்தங்களாக  உயிர் உடல் பொருள் எல்லாம் ஈந்து சிறு வயசிலிருந்து முதுமை வந்து சாகும் வயசில் இன்று உள்ளவர்கள்கூட இன்றும் ஓட்டை  சைக்கிளிலும் அழுக்கு வேட்டியுடனும் நடந்து திரிந்தும் தலைவரே , கலைஞரே , தளபதியே என்று உருகி கொண்டு திரிகிறார்கள்.

கருணாநிதி இறப்புவரை சந்தானத்துடன் படம் நடிச்சுக்கொண்டு ஹம்மர் காரில் போய் வந்து கொண்டிருந்த உதயநிதி கருணாநிதி இறந்து இரண்டரை வருசத்தில் எம் எல் ஏ ஆகி சட்டசபையில் இருக்கிறார். அதற்கு முன்னரே ஒன்றுமேயில்லாத மதுரை தாதா அழகிரி மத்திய அமைச்சரானதும், இலக்கிய மேடைகளில் பேசி திரிஞ்ச கனிமொழி எம்பி ஆக்கப்படதும் வரலாறு.

அன்று ரிக்கெற் எடுக்க காசில்லாமல் திருட்டு ரயிலேறி மெட்ராஸ் வந்த கருணாநிதியின் குடும்பம் இப்போது  உலக கோடீஸ்வர குடும்பங்களில் ஒன்று,

நிதி சம்பந்தப்பட்ட குடும்பம் என்பதனால்தான்என்னமோ  உதயநிதி கலாநிதி, தயாநிதி, இன்னுமொரு தயாநிதி,அருள்நிதி,அறிவுநிதி என்று அனேக வாரிசுகளின் பெயரிலும் நிதி உண்டு.

மூன்று மனைவிகள்,கல்குலேட்டரில் தட்டி பார்த்தாலும் டக்கெண்டு கணக்கு பார்க்க முடியாதபடி  பல வாரிசுகள் அத்தனைபேரும் அரசியல் ,விமான கம்பனி, தொலைகாட்சி குழுமம், ஐபிஎல் அணி, திரைப்பட தயாரிப்பு நிறுவனம், ரியல் எஸ்டேட் என்று  இந்தியாவின் இன்றைய பண முதலைகள்.

கேட்டால் தமிழருக்காக 80 வருசம் உழைச்சாராம். உண்மைதான் என்ன உழைப்பு உழைச்சாரெண்டு.

ஆனால் ஒண்டு இத்தனை சுத்துமாத்து செய்திருக்கிறார் எண்டு தெரிஞ்சாலும் தமிழருக்காக தமிழுக்காக உயிரைவிடுவேன் என்று கருணாநிதி சொன்னால் தலைவா நீ எதுக்கு தலைவா எங்கள் உயிரை வேண்டுமென்றால் எடுத்துக்கோ என்று கதறி திரிந்தான் ஏழை அப்பாவி திமுக தொண்டன் இன்றும்   உதய நிதிக்காக கதறுகிறான், நாளை அவர்கள் வாரிசுகளுக்காகவும் கதறுவான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/8/2021 at 12:21, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை… அதற்கு பல காரணங்கள் உள்ளது.

1) முன் உள்ள பேனை தான்…. கருணாநிதி.

அவருக்குப் பின்…. ஸ்ராலின், உதயநிதி, இன்பநிதி…. என்று மன்னர் ஆட்சியை  குறிக்கின்றது.

2) மனைவி, துணைவி, காதலி என்று அவருடன்….  வாழ்ந்த அம்மணிகளை குறிக்கின்றது. என நினைக்கின்றேன்.

முன்பு அப்படி இருந்திருக்கலாம். கடைசிக் காலத்தில்… தமிழரை காப்பாற்ற வந்த, “கட்டு மரம்” என்று சொல்லிய உத்தமர்.

சிறித்தம்பி ! முதலில் சிலை வைக்க வேண்டியது இவருக்குத்தான்...

Bild

உலகையே கட்டியாண்ட ராச ராச சோழன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, valavan said:

திமுகவுக்காக பல லட்சம்  தொண்டர்கள் பல தசாப்தங்களாக  உயிர் உடல் பொருள் எல்லாம் ஈந்து சிறு வயசிலிருந்து முதுமை வந்து சாகும் வயசில் இன்று உள்ளவர்கள்கூட இன்றும் ஓட்டை  சைக்கிளிலும் அழுக்கு வேட்டியுடனும் நடந்து திரிந்தும் தலைவரே , கலைஞரே , தளபதியே என்று உருகி கொண்டு திரிகிறார்கள்.

அங்கு மட்டும்தானா இங்கு யாழிலும் உள்ளனர் பாஸ் .🤣

அப்ப  மெரினாவில் குறைந்தது இரண்டு ஏக்கர் ஆட்டையை போட போகிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பி ! முதலில் சிலை வைக்க வேண்டியது இவருக்குத்தான்...

Bild

உலகையே கட்டியாண்ட ராச ராச சோழன்.

குமாரசாமி அண்ணை, சரியாக சொன்னீர்கள்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ராஜ  ராஜ சோழன்... கட்டிய,  
தஞ்சை பெரிய  கோவில் சம்பந்தமான விழாக்களில் கூட..
தமிழக அரசியல்வாதிகள் கலந்து கொள்வதில்லை.
அப்படிப் போனால்.. பதவி பறி போய்விடும் என்ற பயம் உள்ளதாம்.

தமிழகத்🙏தை... மாறி, மாறி.. ஆண்டு கொண்டு இருக்கும்,
பகுத்தறிவு? திராவிட.. கட்சிகளுக்கு, ஏன் இந்தப் பயம் வந்தது என்று தெரியவில்லை.

தற்போதைய  தமிழக முதல்வர், ஸ்ராலின் அவர்கள்...
கொஞ்சம் வித்தியாசமாக செயல் படுகின்றார் போல் தெரிகின்றது.
அவரின் தந்தை... கருணாநிதி, கன்னியாகுமரியில்... 
திருவள்ளுவருக்கு சிலை வைத்தது போல்,

மெரினாவில்... உலகத் தமிழர்களின் மன்னன்..
ராஜ ராஜ சோழனுக்கு... கருங்கல்லால், கடலின் நடுவே...
உயர்ந்த ஒரு  சிலையை... வடிமைக்க வேண்டும் என்பதே,அனைவரின் ஆசை. 
அப்படிச்  செய்தால்... ஸ்ராலின் பெயரும், வரலாற்றில் பொறிக்கப் படும்.

இந்த வேண்டுகோளை... தமிழக முதல்வரின் நேரடியான பார்வைக்கு,
கொண்டு செல்ல... யாராவது, உதவி செய்யுங்களேன்.  🙏

இப்போ... ஆரம்பித்தால் தான், அடுத்த தேர்தலுக்கு முன்..
நாங்கள் விரும்பும், ராஜ  ராஜ சோழனின்... 
சிலையை, பார்க்க முடியும் என்பதால்... இந்த அவசர வேண்டுகோள்.  🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை, சரியாக சொன்னீர்கள்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ராஜ  ராஜ சோழன்... கட்டிய,  
தஞ்சை பெரிய  கோவில் சம்பந்தமான விழாக்களில் கூட..
தமிழக அரசியல்வாதிகள் கலந்து கொள்வதில்லை.
அப்படிப் போனால்.. பதவி பறி போய்விடும் என்ற பயம் உள்ளதா

சிறித்தம்பி! ஒரு விசயம் தெரியுமோ?:cool:
ராசராச சோழன்,பண்டாரவன்னியன் எண்ட பெயரை கேட்டாலே/கண்டாலே மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் வேப்பமிலை புகை அடிச்ச நுளம்புகள் மாதிரி எட்டத்திலை ஓடிடுவினம்.😜

இதிலை இருந்து என்ன தெரியுது????????????? 😎*_*😎*_*😎*_**_

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! ஒரு விசயம் தெரியுமோ?:cool:
ராசராச சோழன்,பண்டாரவன்னியன் எண்ட பெயரை கேட்டாலே/கண்டாலே மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் வேப்பமிலை புகை அடிச்ச நுளம்புகள் மாதிரி எட்டத்திலை ஓடிடுவினம்.😜

இதிலை இருந்து என்ன தெரியுது????????????? 😎*_*😎*_*😎*_**_

குமாரசாமி அண்ணை... 
அவர்கள்...கூலிக்கு... மாரடிக்கும், ஆட்கள் என்று நினைக்கின்றேன்.
அவர்கள்... தமிழ் இனத்தில் பிறந்து, தமிழ் பேசி... வாழ்ந்தாலும்,
தன், இன...  உணர்வு அற்ற, மர  மண்டைகள். 😶 😶 😶

(அதாவது... "சோறு... முக்கியம்" என நினைப்பவர்கள்.) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை... 
அவர்கள்...கூலிக்கு... மாரடிக்கும், ஆட்கள் என்று நினைக்கின்றேன்.
அவர்கள்... தமிழ் இனத்தில் பிறந்து, தமிழ் பேசி... வாழ்ந்தாலும்,
தன், இன...  உணர்வு அற்ற, மர  மண்டைகள். 😶 😶 😶

(அதாவது... "சோறு... முக்கியம்" என நினைப்பவர்கள்.) :)

சீமான் விடயத்தில் கும்மி அடிப்பவர்கள்   சிவகுமாரன் விடயத்தை கூட தெரிந்து கொள்ள மறுப்பவர்கள்.

கேடு கெட்ட தமிழர்கள் மற்றவர்களை திட்ட மட்டும் பிறந்தவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

சீமான் விடயத்தில் கும்மி அடிப்பவர்கள்   சிவகுமாரன் விடயத்தை கூட தெரிந்து கொள்ள மறுப்பவர்கள்.

கேடு கெட்ட தமிழர்கள் மற்றவர்களை திட்ட மட்டும் பிறந்தவர்கள்.

என்னத்தை... சொல்ல,  தமிழினத்தின் தலை விதி, இது.

தமிழகத்திலுள்ள... " கீழடி" ஆய்விலிருந்து,  
தமிழன்... 6000 ஆண்டுகளுக்கு முற் பட்ட, 
எழுதத் தெரிந்த, மனிதன் என்பது   அறியப் படுகின்றது. 

அப்படி இருந்தும்... காக்கை வன்னியனாலும், 
கருணா... என, பெயர் தொடங்கும்... ஆட்களால் ...  காட்டியம், கூட்டியும்.. 
நய வஞ்சக  சூழ்ச்சியால்... வீழ்த்தப் பட்ட,  இனம் தான்... தமிழ் இனம். 

நாலு... நரி, செய்த.. இனத் துரோக வேலையால்...
உலகத் தமிழனுக்கு... கிடைக்க, இருந்த,  "தமிழ் ஈழம்"... பின் தள்ளிப் போயுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

என்னத்தை... சொல்ல,  தமிழினத்தின் தலை விதி, இது.

தமிழகத்திலுள்ள... " கீழடி" ஆய்விலிருந்து,  
தமிழன்... 6000 ஆண்டுகளுக்கு முற் பட்ட, 
எழுதத் தெரிந்த, மனிதன் என்பது   அறியப் படுகின்றது. 

அப்படி இருந்தும்... காக்கை வன்னியனாலும், 
கருணா... என, பெயர் தொடங்கும்... ஆட்களால் ...  காட்டியம், கூட்டியும்.. 
நய வஞ்சக  சூழ்ச்சியால்... வீழ்த்தப் பட்ட,  இனம் தான்... தமிழ் இனம். 

நாலு... நரி, செய்த.. இனத் துரோக வேலையால்...
உலகத் தமிழனுக்கு... கிடைக்க, இருந்த,  "தமிழ் ஈழம்"... பின் தள்ளிப் போயுள்ளது.

சீமானை திட்டி விட்டு சம்பந்தனும் சுமந்திரனும் சரியில்லை என்கிறார்கள்.ரணிலும் சரியில்லை என்கிறார்கள்.....கோத்தாவும் பயம் என்கிறார்கள்

ஆனால் அண்ணன் டக்கிளசை பற்றி வாய் திறக்கவே மாட்டன் என்கிறார்கள்....அவ்வளவு விசுவாசம்..🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

சீமானை திட்டி விட்டு சம்பந்தனும் சுமந்திரனும் சரியில்லை என்கிறார்கள்.ரணிலும் சரியில்லை என்கிறார்கள்.....கோத்தாவும் பயம் என்கிறார்கள்

ஆனால் அண்ணன் டக்கிளசை பற்றி வாய் திறக்கவே மாட்டன் என்கிறார்கள்....அவ்வளவு விசுவாசம்..🤣

அட... நான், இந்தக் கோணத்தில்,  சிந்திக்கவில்லையே... 😂
டக்ளஸ் அங்கிள்.... இப்ப,  நல்லவரா?    கெட்டவரா....?   🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

அட... நான், இந்தக் கோணத்தில்,  சிந்திக்கவில்லையே... 😂
டக்ளஸ் அங்கிள்.... இப்ப,  நல்லவரா?    கெட்டவரா....?   🤣

உங்கட கதையை பாத்தால் டக்ளஸ் அண்ணர் முந்தி கெட்டவர் எண்ட மாதிரியெல்லோ கதை போகுது :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.