Jump to content

பாரம்பரியத் திருமணத் தடைகளை புதுமையாக உடைக்கும் இந்திய-அமெரிக்க ஒரு பாலின தம்பதிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாரம்பரிய முறையில் திருமணம் செய்ய வழியில்லாததால், அமெரிக்காவில் உள்ள ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்களது திருமணத்தை நடத்துவதற்கு புதிய வழிகளைக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவிக்கிறார் சவிதா படேல்.

சமீர் சமுத்ரா மற்றும் அமதி கோகலே ஆகிய இருவரும் ஹிந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பினர். ஆனால் அவர்களுக்கு எதிர்பாராத தடங்கல் ஏற்பட்டது. என்ன தெரியுமா? புரோகிதர் கிடைக்கவில்லை.

"நாங்கள் ஹிந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பினோம். ஆனால் புரோகிதர்கள் பலர் முடியாது என்று கூறிவிட்டார்கள். நான் ஓரினச் சேர்க்கையாளர் என்பதால் திருமணத்தை நடத்தி வைப்பதற்கு பல மடங்கு பணம் தரவேண்டும் என்று புரோகிதர்களில் ஒருவர் கேட்டபோது மிகவும் வேதனையாக இருந்தது" என்கிறார் சமீர். இவர் அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் வசித்து வருகிறார்.

"வேண்டா வெறுப்பாக வரும் ஒரு புரோகிதர்" மூலம் தங்களது திருமணத்தை நடத்த விரும்பாத இந்த இணை வேறு வழிகளைத் தேடியது.

"எங்கள் நண்பர்களில் ஒருவர் புரோகிதராகச் செயல்படுவதற்கான அடிப்படை அம்சங்களைக் கற்றுக் கொண்டார். ஒரு பாலின திருமணத்திற்கு தேவைப்படும் வகையிலான ஹிந்து சடங்குகளை நாங்கள் தேர்வு செய்து கொண்டோம்" என்று சமீர் கூறினார்.

 

அமெரிக்காவில் வசிக்கும் பல இந்தியத் தம்பதிகள் பாலிவுட் பாணியில் மிகவும் ஆடம்பரமான, அதே நேரத்தில் ஹிந்து பாரம்பரிய முறையிலான திருமணத்தை நடத்த வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். உண்மையில் இது ஒரு பாலினத் திருமணத்தை விட மிகவும் எளிதானது. அமெரிக்காவில் ஒருபால் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இருந்த போதிலும் இந்தியர்கள் மத்தியில் தயக்கம் இருக்கிறது.

அமெரிக்காவில் ஒருபாலினத் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்ட பிறகு 3 லட்சத்துக்கும் அதிகமான ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணத்தில் புனிதச் சடங்குகளைச் செய்பவர்கள் தங்களை ஒதுக்கி வைப்பதாக இந்திய-அமெரிக்கர்கள் கூறுகிறார்கள்.

அமெரிக்காவில் கோயில்கள் ஒரே பாலின திருமணங்களை நடத்த மறுக்கின்றன. புரோகிதர்கள் தங்களது தொலைபேசி அழைப்புகளிலேயே மறுப்பைக் கூறிவிடுகிறார்கள். அல்லது இந்த நிகழ்வுகளுக்கு வரும் வகையில் தங்களது நிகழ்ச்சிநிரலை மாற்றியமைக்க விரும்புவதில்லை. வேறு சிலர் திருமண நாளன்று வராமல் தவிர்த்துவிடுகிறார்கள்.

இத்தகைய அனுபவங்கள் இந்திய-அமெரிக்க ஓரினச் சேர்க்கையாளர்களை வேறு வகையில் சிந்திக்கத் தூண்டியது. தங்களது நண்பர்கள், நலம் விரும்பிகள் மூலமாக தனித்துவமான சடங்குகளை உருவாக்க அவர்கள் முயன்றார்கள்.

இதற்கு உதாரணம் சப்னா பாண்ட்யா என்ற பெண் புரோகிதர். ஹிந்து மதத்தில் பெண் புரோகிதர் என்ற வழக்கமே கிடையாது. இவர் புரோகிதரானதற்குப் பின்னணியில் ஒரு கதை இருக்கிறது.

சப்னா

பட மூலாதாரம்,SAPNA PANDYA

 
படக்குறிப்பு,

சப்னாவும் (வலது) சேஹெரும் தாங்களே பாரம்புரிய முறையிலான சடங்குகளுடன் திருமணம் செய்து கொண்டனர்.

சப்னா பாரம்பரிய முறைப்படி திருணம் செய்யவிரும்பியபோது, அவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த அவரது இஸ்லாமிய மனைவி சேஹெரும் தடைகளை எதிர்கொண்டார்கள். அதுவே சப்னா பாண்ட்யாவை புரோகிதராக்கிவிட்டது.

"நான் கோயிலுக்குச் சென்று ஒரு புரோகிதரைத் தேடிக் கண்டுபிடிக்க விரும்பவில்லை. அதேபோல எனது மனைவியும் மசூதிக்குச் சென்று ஒரு இமாமிடம் கோரிக்கை வைக்கத் தயக்கம் காட்டினார். அதனால் எங்களது திருமண விழாவை நாங்களே வடிவமைத்துக் கொண்டோம்" என்கிறார் சப்னா.

திருமணத்தைக் குறிக்கும் வகையிலான ஹிந்து மந்திரங்களையும், குரானில் இருந்து வசனங்களையும் அவர்கள் தேர்ந்தெடுத்தனர்.

சிறுபான்மை மக்களுக்காகக் குரல் கொடுக்கும் லாப நோக்கற்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார் சப்னா. இப்போது பெரும்பாலும் LGBTQ திருமணங்களை தலைமையேற்று நடத்துவது முக்கிய வேலையாகிவிட்டது.

அவரைப் போன்று இன்னும் பல புரோகிதர்கள் இருக்கிறார்கள். தங்களது வழக்கமான வேலைகளுக்கு நடுவே பெண்கள் மீதான வெறுப்பு, ஆணாதிக்கம் ஆகிவற்றை ஒழிக்க உறுதி கொண்டிருக்கிறார்கள். ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேதான் திருமணம் சாத்தியம் என்று நம்பும் பாரம்பரிய புரோகிதர்களுக்கு இது ஒரு சவாலாகி இருக்கிறது.

சமண மதத்தைச் சேர்ந்த அபிஷேக் சங்கவி வரி ஆலோசகராகப் பணியாற்றுகிறார். கூடவே புரோகிதராகவும் செயல்படுகிறார். 2019-ஆம் ஆண்டு இவர் நடத்தி வைத்த வைபவ் ஜெயின் மற்றும் பராக் ஷா ஆண்பால் திருமணம் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஊக்கமளித்தது.

"அந்த இரு நல்ல இளைஞர்களும் சமண மத முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். கருணைதான் சமணத்தின் அடித்தளம். எல்லா மதங்களும் அன்பையே கற்பிக்கின்றன" என்கிறார் சங்கவி.

சுகவக் தாஸ் இதை ஒப்புக் கொள்கிறார். கிறிஸ்தவ மதத்தில் இருந்து ஹிந்து மதத்துக்கு மாறிய இவர், சமஸ்கிருதத்தில் பிஎச்.டி. பட்டம் பெற்றவர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள லட்சுமி நாரயண் கோயிலில் தலைமைப் பூசாரியாக இருக்கும் இவர் ஆயிரக்கணக்கான திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார்.

"[ஹிந்து மத நூல்களில் ஓரினச் சேர்க்கையாளர்கள்] திருமணம் செய்யக் கூடாது என்று எங்கும் சொல்லப்பட்டிருப்பதாகத் எனக்குத் தெரியவில்லை," என்று அவர் கூறுகிறார்.

அண்மையில் தான் நடத்தி வைத்த ஓரினச் சேர்க்கை திருமணத்தை அவர் நினைவுகூர்ந்தார். "எங்களது பாரம்பரியத்தில் இடம் கொடுத்ததற்காக நன்றி" என்று அந்த மணமகனின் வயதான பெற்றோர் கண்ணீர் மல்கக் கூறியதாக அவர் தெரிவித்தார்.

"நாம் அனைவரும் இந்த உலகில் ஆன்மாக்கள். சிலருக்கு ஆண் உடலும், சிலருக்கு பெண் உடலும் வாய்க்கின்றன. ஆனாலும் நாம் அனைவரும் சமமான ஆன்மாக்கள்தான்"

மோனிகா மார்கெஸ் - நிக்கி பரூவா ஆகியோரின் பெண்பால் திருமணத்தையும் தாஸ் நடத்தி வைத்திருக்கிறார்.

"மோனிகாவும் நானும் எங்கள் பாரம்பரியத்தின் அடிப்படையை உணர்ந்தர்கள். சிறு வயதில் இருந்தே பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கனவு கண்டிருந்தோம்" என்கிறார் இந்திய-அமெரிக்க சமூகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோரும் எழுத்தாளருமான நிக்கி பரூவா.

மோனிகா

பட மூலாதாரம்,NIKKI BARUA

 
படக்குறிப்பு,

மோனிகா(இடது) மற்றும் நிக்கியின் திருமணம் முற்போக்கு புரோகிதரால் நடத்தி வைக்கப்பட்டது.

அவருடைய திருமண இணை மெக்சிகன்-அமெரிக்க சமூகத்தைச் சேர்ந்தவர். புரோகிதரைக் கண்டுபிடிப்பதில் அவர்களுக்கும் சிக்கல் இருந்திருக்கிறது. கடைசியில் தாஸ் மூலமாக தங்களது கனவு நிறைவேறியதாகக் கூறுகிறார் பரூவா.

"அவர் ஒருபோதும் எங்களைச் சங்கடமான உணர வைக்கவில்லை. அது ஓர் இயற்கை அனுபவமாகவும் அழகாகவும் இருந்தது" என்று அவர் கூறினார்.

"அனைவரும் எங்களைச் சேர்ந்தவர்கள் என்பது போல் அது உணரவைத்தது."

தாஸ் மற்றும் சப்னா போன்ற முற்போக்கு புரோகிதர்களுக்கு இப்போது அமெரிக்கா முழுவதும் தேவை அதிகரித்துள்ளது. திருமணத்தை நடத்திவைக்க சரியான நபர் கிடைக்காமல் தவிக்கும் தம்பதிகளுக்காக வேறு நகரங்களுக்குக்கூட அவர்கள் பறந்து செல்கிறார்கள்.

சான் பிரான்சிஸ்கோவுக்கு அனைவரையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவப்பட்ட நகரம் என்ற வரலாறு இருந்தபோதிலும், அங்கும் ஒரு பாலினத் திருமணங்களை நடத்தி வைக்கும் புரோகிதர்களுக்கு தட்டுப்பாடு உள்ளது. அங்குள்ள பல ஹிந்துக் கோயில்கள் ஒரு பாலினத் திருமணங்களை அனுமதிப்பதில்லை. இதுபற்றி அறிந்தபோது மாதுரி அஞ்சியும் ப்ரீத்தி நாராயணனும் கவலையடைந்தார்கள்.

"இறுதியாக தெற்காசிய LGBTQ குழு வழியாக புரோகிதர் ராஜா பட்டரை நாங்கள் கண்டுபிடித்தோம். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தைச் சேர்ந்த அவரும் ஓரினச் சேர்க்கையாளர்." என்று கூறினார் ப்ரீத்தி

"நாங்கள் சடங்குகளில் வேடிக்கையான பகுதிகளை வைத்துக் கொண்டு சலிப்பான பகுதிகளை அகற்றிவிட்டோம். நாங்கள் இருவரும் பெண்கள் என்பதால், ஆணுக்கும் பெண்ணுக்கும் திருணம் செய்யும் சடங்குகள் இருப்பதில் அர்த்தமில்லை என்று தோன்றியது"

இத்தகைய புதுமையான விழாக்கள் LGBTQ சமூகத்தால் மட்டுமல்ல, விழாக்களில் உள்ள தவறான மனப்பாங்கு மற்றும் ஆணாதிக்கத்தை அகற்றுவதற்கு விரும்பும் இருபாலின தம்பதிகளாலும் வரவேற்கப்படுகின்றன.

மாதுரி

பட மூலாதாரம்,PRITI NARAYANAN

 
படக்குறிப்பு,

பல ஹிந்துக் கோயில்கள் ஒரு பாலினத் திருமணங்களை அனுமதிப்பதில்லை என்று அறிந்தபோது மாதுரி அஞ்சியும்(இடது) ப்ரீத்தி நாராயணனும் கவலையடைந்தார்கள்

"நான் முழு மனதோடு ஓர் இருபால் சேர்க்கையாளராக (Bisexual) இருக்க முடியும் என்ற எனது கண்டுபிடிப்பு, மதங்களைக் கடந்த மற்றும் புதுமையான திருமணங்களை நடத்த எனக்கு உதவியது, "என்று கூறுகிறார் தஹில் சர்மா. இவர் முற்போக்கு ஹிந்துக்கள் கூட்டமைப்பான சாதனாவின் உறுப்பினர்.

"திருமணம் தொடர்பான அணுகுமுறையில் அது தொடர்பான தொழில்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டன" என்கிறார் திருமணவிழா ஏற்பாட்டாளரான பூர்வி ஷா.

புரோகிதர்கள், ஏற்பாட்டாளர்கள், மருதாணி கலைஞர்கள், உணவு தயாரிப்பவர்கள் என அவரிடத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்கிறார் அவர்.

"இப்போது இந்தத் துறையில் ஈடுபட்டிருக்கும் பெரும்பாலானவர்கள் முடியாது என்பதைக் காட்டிலும் ஆம் என்றே கூறுகின்றனர். ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்களது திருணத்துக்காக என்னை அணுகினால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்" என்கிறார் பூர்வி ஷா.

"ஆயினும் இன்னும் பல மனங்கள் இன்னும் மாற வேண்டியிருக்கிறது" என்கிறார் தெற்கு கலிபோர்னியாவில் அதிகம் தேடப்படும் மருதாணிக் கலைஞரான நேஹா அஸ்ஸார். மதங்களைக் கடந்த அல்லது புதுமையான திருமணங்களுக்காகவே பிரத்யேகமாக தனது கலையில் மாற்றத்தைக் கொண்டு வந்ததற்காக பெயர் பெற்றவர் நேஹா.

உதாரணத்துக்கு, மணமகளின் மருதாணி வடிவத்துக்குள் மணமகனின் பெயரை மறைத்துவைக்கும் பாரம்பரியத்தை நேஹா மாற்றியமைத்தார்.

"இரண்டு மணப்பெண்களின் பெயர்களை மருதாணிக்குள் ஒளிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்"

சவிதா படேல், சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட ஒரு சுயாதீன பத்திரிகையாளர். புவிசார் அரசியல், தொழில்நுட்பம், பொது சுகாதாரம் மற்றும் புலம்பெயர் இந்தியச் சமூகம் பற்றி எழுதுபவர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.