Jump to content

தமிழில் பிறரை எவ்வாறு Sir/Madam ஆகிய சொற்களை விட்டொழித்து விளிப்பது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழில் பிறரை எவ்வாறு sir/ madam ஆகிய சொற்களை விட்டொழித்து விளிப்பது?

பிறர் ஒருவரை அழைக்க தமிழில் பல சொற்கள் உள்ளன. ஆனால் தற்சமயம் 'ஐயா' என்னும் சொல்லினைத்தவிர ஏனைய அனைது சொற்களும் வழக்கிழந்து போய்விட்டன... அதற்குப் பதிலாத இந்தப் பொல்லாத இங்லிஸ் சொற்களான ஆணைக் குறிக்கப் பயன்படும் சேர் / சார் ( sir ) மற்றும் பெண்ணைக் குறிக்கப்பயன்படும் மேடம் / மாடம் ( madam ) ஆகிய சொற்கள் புழக்கத்திற்கு வந்து எம்மொழிச் சொற்களின் வழக்கழித்து விட்டன. இதனால் எம்மொழிச் சொற்கள் மெல்ல மெல்லப் புழக்கத்தில் இருந்து அருகிவருகின்றன.

இந்தப் பொல்லாத இங்லிஸ் சொற்களை பயன்படுத்தும் அனைவரும் அது ஏதோ இனிமையாகவும் பார்பதற்கு புதுமையாகவும் இருப்பதாக எண்ணிக்கொண்டே பயன்படுத்துகின்றனர்... எழுதும் பொழுதும் அப்படியே அதனை தமிழிலும் எழுதி விடுகின்றனர்... இது மிகுந்த கவலைக்குரிய விடயமாகும்... நமது கோராவிலும் இதுவே நடைபெறுகிறது.. ஆகவே அதற்கொரு முடிவு கட்டும் விதமாகவே இக்கட்டுரையானது வரையப்பட்டுள்ளது.

முதலில் இந்த இங்லிஸ் சொற்களை தமிழில் எழுதினால் என்ன பொருள் குறிக்கின்றது என்பதைப் காண்போம்:

ஒவ்வொரு சொல்லும் எவ்வளவு அருமையான பொருளைக் குறிக்கின்றது அல்லவா! இனிமேல் பயன்படுத்துவீர்கள் ?

நாம் இப்படி அடிமையானதிற்கு காரணம் மேலை நாட்டுக் கலாச்சாரம் என்று எண்ணுகிறேன்... அக்கலாச்சாரத்தில் நன்மையும் உண்டு ; தீமையும் உண்டு.. ஆகவே நன்மையினை உள்வாங்கி தீமையினை வெளியேற்றுவோம்.. எந்தவொரு விடயத்திலும் மெய்ப்பொருள் காண்பதே அறிவு! அவர்கள் மொழியில் உள்ளதை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்; எம்மொழியில் உள்ளதை நாம் பயன்படுத்துவோம்

சரி, இனி நம்மொழியில் எவ்வாறு பிறரை விளிப்பது என்பது பற்றி இனிப் பார்ப்போம்:

முதலில் எம்மை விட அதிகாரத்தில் உயர்ந்தோரையோ இல்லை வயதில் மூத்தோரையோ இல்லை சிறியவரையோ எவ்வாறு விளிப்பது என்று பார்ப்போம்...

→ அவர் ஆணாக இருந்தால் -

  1. ஐயா (sir) - இச்சொல்லானது பழங்காலத்தில் ஒருவரை மரியாதையாக விளிக்கும் சொல்லாக இருந்து தற்காலாம் வரை வழக்கில் இருக்கும் ஓர் சொல். ஆனால் இச்சொல்லின் அடிவாரத்திற்கும் ஓர் ஆட்டம் காட்டி விட்டனர் நம்மவர்கள். அதாகப்பட்டது என்னவெனில் இச்சொலானது வயதில் மூத்தவரை மட்டுமே குறிக்கின்றது என்று அநாமதேயர் கிளப்பிவிட அது அப்படியே பலரின் மூளையிலும் பரவி ஒட்டிக்கொண்டது; ஆகவே நம்மவர்கள் இச்சொலைப் பயன்படுத்துவதை மிகவும் தவிர்த்து வருகின்றனர்.

ஆனால் உண்மை அதுவன்று. இச்சொல்லானது ஒருவரை(ஆண்) மரியாதை நிமிர்த்தமாக அழைக்கும் வண்ணம் மட்டுமே அகராதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர எவரின் வயதையும் குறிக்கும் வண்ணமோ இது இடம்பெற வில்லை. இதோ உங்கள் கனிவான கவனத்திற்காக இதன் அகராதி விளக்கம் :

சரி உங்கள் அனைவருக்கும் ஐயா என்னும் சொல்தானே வயதில் சிக்கலை ஏற்படுத்துகிறது ... ஆகவே இதோ அச்சொல்லுக்கு மாற்றாக இச்சொல்லைப் பயன்படுத்துங்கள்-

  • ஐயன்

இச்சொல் எக்காலத்திலும் உங்களின் வயதினை கூட்டிக் காட்டாது என்பது சிறப்பான விடயமாகும்.

அவர் பெண்ணாக இருந்தால் -

  1. அம்மணி - இச்சொல்லானதும் ஐயாவினைபோலே வயதினைக் கூடக்காட்டுகிறதாம்... இதோ உங்கள் கனிவான கவனத்திற்காக இதன் அகராதி விளக்கம் :

எவ்வளளவு நல்ல சொற்களை ஒதுக்குகிறீர்கள்… சரி அப்படியெனில் இதற்கான மாற்றுச்சொல் என்ன?

  • இதோ அச்சொல்தான் 'ஐயை ' !

'ஐயை' என்னும் சொல்லானது நெடுங்காலமாக எம்மொழியில் பெண்களை மரியாதை நிமிர்த்தமாக அழைக்கப் பயன்படும் சொல். இச்சொல் எக்காலத்திலும் உங்களின் வயதினைக் கூட்டிக் காட்டாது என்பது சிறப்பான விடயமாகும். உங்களை எப்போதும் இளமையாகவே காட்டும்.

இதனைத் தவிர, ஒருவர்

  1. நமது உறவினராக இருந்தால் அவருக்கும் எமக்குமான உறவுமுறையினைக் கூறி அழைக்கலாம்.
  2. நமது தோழராக/ கூட்டாளியாக / காதலராக இருந்தால் அவரைப் பெயர் கூறி அழைக்கலாம் இல்லை எடா / எடி / எடேய் சேர்த்து அழைக்கலாம். [எடா / எடி / எடேய் இம்மூன்றும் மரியாதை அற்ற சொற்கள்]
  3. எந்தவொரு மேற்கண்ட சொற்களையும் பயன்படுத்தி அழைக்காத பொழுது அவரது பெயருக்குப் பின்னால் 'ஆர்' என்னும் விகுதியினை போட்டு மரியாதையாக அழைக்கலாம்

எ.கா. :-

  • சோழன் - சோழனார் ( ஆண்)
  • தென்றல் -தென்றலார் (பெண்)

4. இதுவும் வேண்டாமா அனைவரின் பெயருக்கும் முன் அடைமொழிச் சொற்கள் சேர்த்து அழையுங்கள்... எந்தச் சிக்கலும் இல்லை!

எ.கா:-

  • குமரன். சோழன்
  • திரு. தென்றல்

5. வயதாகிய ஒருவரை நாம் விளிக்க பெரியவர் என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம். இது இரு பாலருக்குமான பொதுச்சொல்லாகும் .

மேற்கண்ட நற்றமிழ்ச் சொற்களைக் கண்டீர்கள் அல்லவா,

எவ்வளவு அருமையாக இருந்தது! ; இருக்கிறது! ; இருக்கும்!. ஆகவே இங்லிஸினை விட்டொழித்து நற்றமிழ் மொழியினில்,

அனைவரையும் விளிப்போமாக !

இளமையாக இருப்போமாக !

 


  • பிற்சேர்க்கை 1:

புதிதாக ஒரு சொல் கண்டு பிடித்தேன்... நன்றி: இரவிசிவன் (Ravi Sivan)

சேட்டன் - இச்சொல்லுக்கு அகராதிகள் தரும் பொருள் - சேட்டன் Meaning in Tamilpulavar

ஆகவே இச்சொல்லை தற்போது இளைஞர்களிடம் குடிகொண்டுள்ள புரோ( bro ) என்னும் சொல்லுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம் என்பது என் கருத்து... இரண்டிற்குமே இச்சொல்லானது மிகச்சரியாக பொருந்தும்.. ஆகவே

புரோவை ஒழிப்போம் !....

சேட்டனை வாழவைப்போம்!….

 


  • பிற்சேர்க்கை 2: (27–3–2020)
  1. அம்மான் - ஒருவனை மரியாதையாக அழைப்பதற்கும் அதாவது நேரடி மாமா உறவு முறை இல்லாதவருக்கும் இது அழைக்கப்படும்.
  2. மோனை- தம்மை விட வயது குறைந்தவர்களை விழிப்பார்கள். தாத்தா, அம்மம்மா, மாமா, மாமி எனப் பலரும், இப்பவும் ‘மோனை' என்று அழைப்பார்கள். பெயர் சொல்லி அழைப்பதை விட, ‘மோனை' என்ற அந்த அழைப்பில் ஏதோ ஒரு நெருக்கம் இருப்பதான உணர்வு இருக்கும்.
  3. எணேய் - வயது கூடியவர்களை மரியாதையாக (பெரும்பாலும் ஒருவித சலிப்புடன்) அழைப்பது
  4. என்ரையப்பு, என்ரை செல்லையப்பு - தமது குழந்தைகளை கொஞ்சுவதற்கான சொல்லாகவும், வயதில் குறைந்தோரை பெரியோர் அழைக்கும் சொல்லாகவும் இந்த “அப்பு” எனும் சொல் வழக்கில் உள்ளது.
  5. பயல் - சிறுவனை அன்புடன் அழைக்கப்பயன்படும் சொல்/ மதிப்புரவற்ற முறையில் ஓர் ஆணைக்குறிக்கப்பயன்படும் சொல்.

 

  • பிற்சேர்க்கை 3: (29–5–2020)
  1. ஆச்சி - கண்ணியமுள்ள பெண்டிரைக் குறிக்குஞ் சொல் (term of respect used in addressing respectable women)
  2. அப்பு - சிறுவரையுங் கீழோரையும் அன்புகாட்டி அழைக்குஞ் சொல்.
  3. அம்மையார் - நடுத்தர வயதான (45+) பெண்களை விளிப்பதற்காப் பயன்படுத்தும் விளிச்சொல்.

 

உசாத்துணை:

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.