Jump to content

தமிழில் பிறரை எவ்வாறு Sir/Madam ஆகிய சொற்களை விட்டொழித்து விளிப்பது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழில் பிறரை எவ்வாறு sir/ madam ஆகிய சொற்களை விட்டொழித்து விளிப்பது?

பிறர் ஒருவரை அழைக்க தமிழில் பல சொற்கள் உள்ளன. ஆனால் தற்சமயம் 'ஐயா' என்னும் சொல்லினைத்தவிர ஏனைய அனைது சொற்களும் வழக்கிழந்து போய்விட்டன... அதற்குப் பதிலாத இந்தப் பொல்லாத இங்லிஸ் சொற்களான ஆணைக் குறிக்கப் பயன்படும் சேர் / சார் ( sir ) மற்றும் பெண்ணைக் குறிக்கப்பயன்படும் மேடம் / மாடம் ( madam ) ஆகிய சொற்கள் புழக்கத்திற்கு வந்து எம்மொழிச் சொற்களின் வழக்கழித்து விட்டன. இதனால் எம்மொழிச் சொற்கள் மெல்ல மெல்லப் புழக்கத்தில் இருந்து அருகிவருகின்றன.

இந்தப் பொல்லாத இங்லிஸ் சொற்களை பயன்படுத்தும் அனைவரும் அது ஏதோ இனிமையாகவும் பார்பதற்கு புதுமையாகவும் இருப்பதாக எண்ணிக்கொண்டே பயன்படுத்துகின்றனர்... எழுதும் பொழுதும் அப்படியே அதனை தமிழிலும் எழுதி விடுகின்றனர்... இது மிகுந்த கவலைக்குரிய விடயமாகும்... நமது கோராவிலும் இதுவே நடைபெறுகிறது.. ஆகவே அதற்கொரு முடிவு கட்டும் விதமாகவே இக்கட்டுரையானது வரையப்பட்டுள்ளது.

முதலில் இந்த இங்லிஸ் சொற்களை தமிழில் எழுதினால் என்ன பொருள் குறிக்கின்றது என்பதைப் காண்போம்:

ஒவ்வொரு சொல்லும் எவ்வளவு அருமையான பொருளைக் குறிக்கின்றது அல்லவா! இனிமேல் பயன்படுத்துவீர்கள் ?

நாம் இப்படி அடிமையானதிற்கு காரணம் மேலை நாட்டுக் கலாச்சாரம் என்று எண்ணுகிறேன்... அக்கலாச்சாரத்தில் நன்மையும் உண்டு ; தீமையும் உண்டு.. ஆகவே நன்மையினை உள்வாங்கி தீமையினை வெளியேற்றுவோம்.. எந்தவொரு விடயத்திலும் மெய்ப்பொருள் காண்பதே அறிவு! அவர்கள் மொழியில் உள்ளதை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்; எம்மொழியில் உள்ளதை நாம் பயன்படுத்துவோம்

சரி, இனி நம்மொழியில் எவ்வாறு பிறரை விளிப்பது என்பது பற்றி இனிப் பார்ப்போம்:

முதலில் எம்மை விட அதிகாரத்தில் உயர்ந்தோரையோ இல்லை வயதில் மூத்தோரையோ இல்லை சிறியவரையோ எவ்வாறு விளிப்பது என்று பார்ப்போம்...

→ அவர் ஆணாக இருந்தால் -

  1. ஐயா (sir) - இச்சொல்லானது பழங்காலத்தில் ஒருவரை மரியாதையாக விளிக்கும் சொல்லாக இருந்து தற்காலாம் வரை வழக்கில் இருக்கும் ஓர் சொல். ஆனால் இச்சொல்லின் அடிவாரத்திற்கும் ஓர் ஆட்டம் காட்டி விட்டனர் நம்மவர்கள். அதாகப்பட்டது என்னவெனில் இச்சொலானது வயதில் மூத்தவரை மட்டுமே குறிக்கின்றது என்று அநாமதேயர் கிளப்பிவிட அது அப்படியே பலரின் மூளையிலும் பரவி ஒட்டிக்கொண்டது; ஆகவே நம்மவர்கள் இச்சொலைப் பயன்படுத்துவதை மிகவும் தவிர்த்து வருகின்றனர்.

ஆனால் உண்மை அதுவன்று. இச்சொல்லானது ஒருவரை(ஆண்) மரியாதை நிமிர்த்தமாக அழைக்கும் வண்ணம் மட்டுமே அகராதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர எவரின் வயதையும் குறிக்கும் வண்ணமோ இது இடம்பெற வில்லை. இதோ உங்கள் கனிவான கவனத்திற்காக இதன் அகராதி விளக்கம் :

சரி உங்கள் அனைவருக்கும் ஐயா என்னும் சொல்தானே வயதில் சிக்கலை ஏற்படுத்துகிறது ... ஆகவே இதோ அச்சொல்லுக்கு மாற்றாக இச்சொல்லைப் பயன்படுத்துங்கள்-

  • ஐயன்

இச்சொல் எக்காலத்திலும் உங்களின் வயதினை கூட்டிக் காட்டாது என்பது சிறப்பான விடயமாகும்.

அவர் பெண்ணாக இருந்தால் -

  1. அம்மணி - இச்சொல்லானதும் ஐயாவினைபோலே வயதினைக் கூடக்காட்டுகிறதாம்... இதோ உங்கள் கனிவான கவனத்திற்காக இதன் அகராதி விளக்கம் :

எவ்வளளவு நல்ல சொற்களை ஒதுக்குகிறீர்கள்… சரி அப்படியெனில் இதற்கான மாற்றுச்சொல் என்ன?

  • இதோ அச்சொல்தான் 'ஐயை ' !

'ஐயை' என்னும் சொல்லானது நெடுங்காலமாக எம்மொழியில் பெண்களை மரியாதை நிமிர்த்தமாக அழைக்கப் பயன்படும் சொல். இச்சொல் எக்காலத்திலும் உங்களின் வயதினைக் கூட்டிக் காட்டாது என்பது சிறப்பான விடயமாகும். உங்களை எப்போதும் இளமையாகவே காட்டும்.

இதனைத் தவிர, ஒருவர்

  1. நமது உறவினராக இருந்தால் அவருக்கும் எமக்குமான உறவுமுறையினைக் கூறி அழைக்கலாம்.
  2. நமது தோழராக/ கூட்டாளியாக / காதலராக இருந்தால் அவரைப் பெயர் கூறி அழைக்கலாம் இல்லை எடா / எடி / எடேய் சேர்த்து அழைக்கலாம். [எடா / எடி / எடேய் இம்மூன்றும் மரியாதை அற்ற சொற்கள்]
  3. எந்தவொரு மேற்கண்ட சொற்களையும் பயன்படுத்தி அழைக்காத பொழுது அவரது பெயருக்குப் பின்னால் 'ஆர்' என்னும் விகுதியினை போட்டு மரியாதையாக அழைக்கலாம்

எ.கா. :-

  • சோழன் - சோழனார் ( ஆண்)
  • தென்றல் -தென்றலார் (பெண்)

4. இதுவும் வேண்டாமா அனைவரின் பெயருக்கும் முன் அடைமொழிச் சொற்கள் சேர்த்து அழையுங்கள்... எந்தச் சிக்கலும் இல்லை!

எ.கா:-

  • குமரன். சோழன்
  • திரு. தென்றல்

5. வயதாகிய ஒருவரை நாம் விளிக்க பெரியவர் என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம். இது இரு பாலருக்குமான பொதுச்சொல்லாகும் .

மேற்கண்ட நற்றமிழ்ச் சொற்களைக் கண்டீர்கள் அல்லவா,

எவ்வளவு அருமையாக இருந்தது! ; இருக்கிறது! ; இருக்கும்!. ஆகவே இங்லிஸினை விட்டொழித்து நற்றமிழ் மொழியினில்,

அனைவரையும் விளிப்போமாக !

இளமையாக இருப்போமாக !

 


  • பிற்சேர்க்கை 1:

புதிதாக ஒரு சொல் கண்டு பிடித்தேன்... நன்றி: இரவிசிவன் (Ravi Sivan)

சேட்டன் - இச்சொல்லுக்கு அகராதிகள் தரும் பொருள் - சேட்டன் Meaning in Tamilpulavar

ஆகவே இச்சொல்லை தற்போது இளைஞர்களிடம் குடிகொண்டுள்ள புரோ( bro ) என்னும் சொல்லுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம் என்பது என் கருத்து... இரண்டிற்குமே இச்சொல்லானது மிகச்சரியாக பொருந்தும்.. ஆகவே

புரோவை ஒழிப்போம் !....

சேட்டனை வாழவைப்போம்!….

 


  • பிற்சேர்க்கை 2: (27–3–2020)
  1. அம்மான் - ஒருவனை மரியாதையாக அழைப்பதற்கும் அதாவது நேரடி மாமா உறவு முறை இல்லாதவருக்கும் இது அழைக்கப்படும்.
  2. மோனை- தம்மை விட வயது குறைந்தவர்களை விழிப்பார்கள். தாத்தா, அம்மம்மா, மாமா, மாமி எனப் பலரும், இப்பவும் ‘மோனை' என்று அழைப்பார்கள். பெயர் சொல்லி அழைப்பதை விட, ‘மோனை' என்ற அந்த அழைப்பில் ஏதோ ஒரு நெருக்கம் இருப்பதான உணர்வு இருக்கும்.
  3. எணேய் - வயது கூடியவர்களை மரியாதையாக (பெரும்பாலும் ஒருவித சலிப்புடன்) அழைப்பது
  4. என்ரையப்பு, என்ரை செல்லையப்பு - தமது குழந்தைகளை கொஞ்சுவதற்கான சொல்லாகவும், வயதில் குறைந்தோரை பெரியோர் அழைக்கும் சொல்லாகவும் இந்த “அப்பு” எனும் சொல் வழக்கில் உள்ளது.
  5. பயல் - சிறுவனை அன்புடன் அழைக்கப்பயன்படும் சொல்/ மதிப்புரவற்ற முறையில் ஓர் ஆணைக்குறிக்கப்பயன்படும் சொல்.

 

  • பிற்சேர்க்கை 3: (29–5–2020)
  1. ஆச்சி - கண்ணியமுள்ள பெண்டிரைக் குறிக்குஞ் சொல் (term of respect used in addressing respectable women)
  2. அப்பு - சிறுவரையுங் கீழோரையும் அன்புகாட்டி அழைக்குஞ் சொல்.
  3. அம்மையார் - நடுத்தர வயதான (45+) பெண்களை விளிப்பதற்காப் பயன்படுத்தும் விளிச்சொல்.

 

உசாத்துணை:

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.