Jump to content

‘விரட்டி விரட்டி வெளுக்க தோணுது’: டான்ஸிங் ரோஸ் ரகளை (வீடியோ)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘விரட்டி விரட்டி வெளுக்க தோணுது’: டான்ஸிங் ரோஸ் ரகளை (வீடியோ)

image_a4cebb882a.jpg

சென்னை,

கொரோனா தொற்று பரவலை தடுக்க ரயில் நிலையங்களில் முககவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் முககவசம் அணியாமல் நடைமேடையில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ரயில் நிலையத்தில் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர், அந்த பெண்ணுக்கு அபராதம் விதித்தார்.

இதையடுத்து அந்த இளம்பெண் கையில் வைத்திருந்த முகக்கவசத்தை அணிந்து கொண்டு, அபராதம் செலுத்த மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், டிக்கெட் பரிசோதகர் தொடர்ந்து அபராதம் விதித்ததில் உறுதியாக இருந்தார்..

இதனால், அந்த இளம்பெண், டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப்படை பொலிஸாரும் அந்த பெண்ணை அபராதம் கட்டியே தீர வேண்டும் என தெரிவித்தனர்.

இதனால், திடீரென நடனம் ஆடிய அந்த இளம்பெண் பொலிஸாரை கேலி செய்து, வம்புக்கு இழுத்து சீண்டினார். ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’, ‘உன்ன விரட்டி விரட்டி வெளுக்க தோணுது’ என பாட்டு பாடிக்கொண்டும், ரயில் நிலையத்தில் குத்தாட்டம் போட்டும் அட்டகாசம் செய்தார்.

அந்த இளம்பெண்ணின் அட்டகாசத்தை அங்கிருந்த பயணிகள் அனைவரும் நின்று வேடிக்கை பார்த்தும், செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். மேலும், அந்த பெண்ணை அங்கிருந்த பயணிகள் சிலரும் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அந்த இளம்பெண் சமாதானம் ஆகவில்லை.

தொடர்ந்து நடைமேடையில் தனது பையை மாட்டிக்கொண்டு அங்கும் இங்குமாக நடனமாடிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணும் அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டு, அபராதம் செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து பொலிஸாசார் அந்த பெண்ணை எச்சரித்து அனுப்பி விட்டனர். அந்த பெண் செய்த ரகளையால்  சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது அந்த பெண் நடனமாடி பொலிஸாரை சீண்டிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  

https://www.tamilmirror.lk/இந்தியா/விரட்டி-விரட்டி-வெளுக்க-தோணுது-டான்ஸிங்-ரோஸ்-ரகளை-வீடியோ/366-279882

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தச்  செல்லத்தை, அப்படியே அள்ளி... 
கோடம்பாக்கத்துக்கு  கொண்டு போங்க.(டா)... சினிமாவுக்கு உதவும். 😂  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம், பொது இடத்தில் ஆடியபடியால் பொட்டை தப்பிட்டுது ........தனியிடத்தில் மாட்டியிருக்க வேணும் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடியிருக்கும்.........!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

தனியிடத்தில் மாட்டியிருக்க வேணும் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடியிருக்கும்.........!   😂

அப்படியே கற்பனை பண்ணிப் பார்க்க கோசான் நினைப்பில் வந்தார்🤭

Link to comment
Share on other sites

16 minutes ago, கிருபன் said:

அப்படியே கற்பனை பண்ணிப் பார்க்க கோசான் நினைப்பில் வந்தார்🤭

ஏன்? அந்தப் பெண்ணுக்கு அவரைப் பரிசாகக் கொடுக்கவா....?? கோசான்😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, கிருபன் said:

அப்படியே கற்பனை பண்ணிப் பார்க்க கோசான் நினைப்பில் வந்தார்🤭

 

28 minutes ago, Paanch said:

ஏன்? அந்தப் பெண்ணுக்கு அவரைப் பரிசாகக் கொடுக்கவா....?? கோசான்😋

🤣 உந்த குத்தாட்டம் எல்லாம் சுத்த வேஸ்ட், ஜெயலலிதா பாணியில் ஒரு வெளுவை வெளுக்க, டிக்கெட் பரிசோதகர் கனடாவுக்கு ஓடி இருப்பார்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, goshan_che said:

 

🤣 உந்த குத்தாட்டம் எல்லாம் சுத்த வேஸ்ட், ஜெயலலிதா பாணியில் ஒரு வெளுவை வெளுக்க, டிக்கெட் பரிசோதகர் கனடாவுக்கு ஓடி இருப்பார்🤣.

கனடா என்ன இளிச்சவாய் நாடா? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

கனடா என்ன இளிச்சவாய் நாடா? 😎

உயிர், உடல் உறுப்புகளுக்கு பாதுகாப்பு தேடி ஆக்கள் அங்கதானே வழமையா ஓடுறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரி யாரும் எங்கும் பொகட்டும்.இப்ப அந்தபட பெண் எங்கே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டுப் பொலிஸ் எண்ட படியால் இப்படியான கேசுகள் தப்பி இன்னொரு குத்தாட்டம் போட வாழ்கின்றன! இதுவே அமெரிக்க நகர பொலிசாக இருந்தால் "resisting an arresting officer" என்று குனிய வைச்சு கழுத்தின் மேல் குந்தியிருப்பான்! அது வேறு விதமான வீடியோவாக மில்லியன் தடவைகள் பார்க்கப் படும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதிய ஒரு கருத்தை நானே அழிக்கிறேன் ..😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான பொண்ணா இருப்பாங்க போலிருக்குது!!🙄

எதுக்கும் கழட்டினால் தான் பார்த்து சொல்லலாம்!👀 வடிவா வடிவில்லையா எண்டு!🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

தமிழ்நாட்டுப் பொலிஸ் எண்ட படியால் இப்படியான கேசுகள் தப்பி இன்னொரு குத்தாட்டம் போட வாழ்கின்றன! இதுவே அமெரிக்க நகர பொலிசாக இருந்தால் "resisting an arresting officer" என்று குனிய வைச்சு கழுத்தின் மேல் குந்தியிருப்பான்! அது வேறு விதமான வீடியோவாக மில்லியன் தடவைகள் பார்க்கப் படும்!

இந்தியன் பொலிசை பற்றி இவருக்கு பெரிசாய் தெரியாது போல கிடக்கு.....😜
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

இந்தியன் பொலிசை பற்றி இவருக்கு பெரிசாய் தெரியாது போல கிடக்கு.....😜
 

அது தான் மேலே சொல்லி விட்டார்களே? இதுவே வீடியோ இல்லாத தனியிடமாக இருந்தால் - மர்ம மரணம் தான்! 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

அது தான் மேலே சொல்லி விட்டார்களே? இதுவே வீடியோ இல்லாத தனியிடமாக இருந்தால் - மர்ம மரணம் தான்! 😂

அது சரி...... 😁
அமெரிக்கா எண்டால் சிறையில் இருந்தவர் தூக்கில் தொங்கி மரணம் எண்டு வந்திருக்குமோ?😎

Link to comment
Share on other sites

17 hours ago, குமாரசாமி said:

அது சரி...... 😁
அமெரிக்கா எண்டால் சிறையில் இருந்தவர் தூக்கில் தொங்கி மரணம் எண்டு வந்திருக்குமோ?😎

maxresdefault.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

maxresdefault.jpg

பாஞ் ஐயா பாய்ந்து விழுந்து அமெரிக்காவில் கொடூரம் என்று காட்ட வெளிக்கிட்ட விடயம் நடந்தது தான்! ஆனால் - மெக்சிகோவில் நடந்தது! 

இனி கவனமாக செய்தியை வாசியுங்கோ! பிறகு இணையுங்கோ!😂

Link to comment
Share on other sites

நான் செய்தியை இணைக்கவில்லையே படத்தைத்தானே இணைத்தேன்.🤔  

இந்தத் திரி ஒரு பகிடியைப் பதிந்து போட்டதாக எனக்குத் தெரிந்தது. பகிடியில் பலதும் பத்தும் வருமே ஐயா.!😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

பாஞ் ஐயா பாய்ந்து விழுந்து அமெரிக்காவில் கொடூரம் என்று காட்ட வெளிக்கிட்ட விடயம் நடந்தது தான்! ஆனால் - மெக்சிகோவில் நடந்தது! 

இனி கவனமாக செய்தியை வாசியுங்கோ! பிறகு இணையுங்கோ!😂

 என்ன வந்தனீங்கள் எனக்கு ஒரு கதை சொல்லாமல் போட்டியள்? 😂🤣😂🤣😎

Link to comment
Share on other sites

11 hours ago, குமாரசாமி said:

 என்ன வந்தனீங்கள் எனக்கு ஒரு கதை சொல்லாமல் போட்டியள்? 😂🤣😂🤣😎

பாவம், அவர் இப்பதான் வந்தவர் (Just -in) யோசிக்க விடுங்கோ சாமியார்.😌

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.