Jump to content

ஒலகத்துல நடக்காததையா கே.டி.ராகவன் செஞ்சாரு?


Recommended Posts

  • Replies 62
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கே. ரி. ராகவன்  கலியாணம் கட்டியவர்,
அவர்... "கர சேவை"  செய்ததை, சீமான் ஆதரிக்கிறாரா....  :grin: 😂 🤣 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

கே. ரி. ராகவன்  கலியாணம் கட்டியவர்,
அவர்... "கர சேவை"  செய்ததை, சீமான் ஆதரிக்கிறாரா....  :grin: 😂 🤣 

கே.டி ராகவன் சொந்தமா வைச்சிருக்கிற காரின் கியரை மாத்தினா மத்தவங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேக்கிறார் போல,  கியர் மாத்துறது தப்பில்ல, அதை ஏன் மத்தவங்களுக்கு காட்டணும் என்பதே பிரச்சனையென்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

கே. ரி. ராகவன்  கலியாணம் கட்டியவர்,
அவர்... "கர சேவை"  செய்ததை, சீமான் ஆதரிக்கிறாரா....  :grin: 😂 🤣 

🤣 உப்பிடியே லைனில நில்லுங்கோ…. சுட சுட பந்தி பந்தியா பதில் எழுதி கொண்டு வாறன்🤣…..

பிகு

மீம்ஸ் உலகம் அதிருது🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

 

அண்ண‌ன் சீமான் என்ன‌ சொன்னார் என்று இந்த‌க் காணொளியில் பாருங்கோ............நாட்டில் எவ‌ள‌வோ பிர‌ச்ச‌னைக‌ள் இருக்கு , அதை எல்லாம் த‌விர்த்து விட்டு இதை பேச‌லாமா என்று கூறி உள்ளார்..........

200 ரூபாய் திராவிட‌ கூட்ட‌ங்க‌ள் இப்ப‌வே வெட்டி ஒட்டு வேலையில் இற‌ங்கிட்டின‌ம் , 

அதையும் இந்த‌ திரியில் இணையுங்கோ உங்க‌ளில் க‌லைத்த‌ ம‌ன‌துக்கு ம‌கிழ்வை த‌ரும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கே.டி.ராகவன் வீடியோ முதல் கொடநாடு கொலை வரை - சீமான் சொன்னது என்ன?

2 மணி நேரங்களுக்கு முன்னர்
சீமான்

பட மூலாதாரம்,SEEMAN

 
படக்குறிப்பு,

சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர் - நாம் தமிழர் கட்சி

`கே.டி.ராகவனின் வீடியோவை வெளியிட்ட நபரைக் கைது செய்திருக்க வேண்டும்' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். மேலும், `நாட்டில் பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது, `எனது வீடியோவை பார்த்து ரசியுங்கள்' என ராகவன் சொன்னாரா?' எனவும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாயோன் பெருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சீமான் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ``கே.டி.ராகவனின் அனுமதியில்லாமல் தனிப்பட்ட இடங்களில் அவரை வீடியோ எடுப்பது என்பது சமூக அவலம். உலகில் நடக்காத ஒன்றைச் செய்ததாகக் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். சட்டசபையில் ஆபாச காட்சிகளைப் பார்த்துள்ளனர். அவர் தனது தனிப்பட்ட அறையில் செய்த காட்சிகளை வெளியில் விடுவதன் மூலம், கேடுகெட்ட சமூகமாக மாறிவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.

யார் யாருடன் பேசுகிறார்கள் என்பதை பதிவு செய்து வெளியிடுவதன் மூலம் என்ன சாதிக்கப் போகிறார்கள்? இந்த காணொளியை வெளியிட்ட நபரைக் கைது செய்திருக்க வேண்டும். உலகின் யாரும் செய்யாத ஒன்றையா அவர் செய்துவிட்டார். சட்டமன்றத்திலேயே ஆபாசப் படம் பார்த்துள்ள சம்பவங்களும் வெளிவந்துள்ளன" என்றார்.

 

தொடர்ந்து பேசும்போது, ``நாட்டில் பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம் 6 லட்சம் கோடி ரூபாய்க்கு தனியாருக்கு குத்தகை விடப்போவதாக அறிவித்துள்ளனர். 100 லட்சம் கோடிக்கு சொத்து இருக்கும்போது 6 லட்சம் கோடிக்கு விட வேண்டிய அவசியம் என்ன?

உச்ச நீதிமன்ற நீதியரசர் ரமணா பேசும்போது, `எந்த விவாதமுமின்றி சட்டங்களை இயற்றிக் கொண்டே போகின்றனர்' என்கிறார். அதுதான் நாம் பேச வேண்டிய பிரச்னை. திருச்சி சிவா பேசும்போதும், `20 ஆண்டுகளாக பார்க்கிறேன். எந்த விவாதமும் இல்லாமல் 36 சட்டங்களை இயற்றியுள்ளனர்' என்கிறார். இது சர்வாதிகாரம் இல்லை, கொடுங்கோன்மை. இதையெல்லாம் பற்றிப் பேசாமல் என்னுடைய வீடியோவை பார்த்து ரசியுங்கள் என ராகவன் சொன்னாரா?" எனக் கொதித்தார்.

மேலும், ``லாபத்தில் இயங்கும் எல்.ஐ.சியை தனியாருக்கு கொடுக்க உள்ளனர். தனியார் சிறப்பாக நடத்தும் என்றால் அரசு எதற்கு? அரசைவிட தனியார் நிறுவனங்கள் அனைத்தையும் சிறப்பாக செய்யும் என்றால் இவர்களின் பணி என்ன? கமுதியில் நான்காயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அதானி குழுமத்துடன் அரசு ஒப்பந்தம் போட்டது. அங்கு வாயில் காவலர் வேலைகூட அம்மக்களுக்குக் கொடுக்கப்படவில்லை. மின்துறையில் ஒரு லட்சம் கோடி இழப்பு உள்ளது. ஆனால், இவர்கள் ஒரு யூனிட் மின்சாரத்தை 7 ரூபாய்க்கு எடுத்துக் கொள்வதாக அதானியிடம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர்" என்றார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

சட்டசபையில் ஓ.பி.எஸ் பாடிய பாடல் குறித்து சீமானிடம் கேட்டபோது, ``அதற்கு நான் என்ன சொல்ல முடியும். அவர் தனது நிலைமையை கவிதையாக விளக்குகிறார். அவ்வளவுதான்" என்றார். அடுத்ததாக, குடிசை மாற்று வாரிய வீடுகளின் தரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, ``குடிசை மாற்று வாரிய வீடுகள் தொட்டாலே உதிர்கின்றன என்றால் ஏன் தொட வேண்டும். குடிசையில் படுத்தால் உயிரோடு எழுந்திருப்போம் என்பது நிச்சயம் இல்லை. இந்த வீடுகளில் எல்லாம் ஏழாவது மாடியில் படுத்திருப்பவனின் நிலையை நினைத்தால் கவலையாக இருக்கிறது.

மேம்பாலம் கட்டிக் கொண்டு வரும்போதே இடிந்து விழுகிறது. கேட்டால், `மணலில் சிக்கல் உள்ளது' என்கிறார்கள். இவர்கள் அடித்த கொள்ளை அப்படி. 5 லட்சம் கோடி கடன் என்கிறார்கள். இவர்களின் வீடுகளில் எத்தனை லட்சம் கோடிகள் உள்ளன. ஆள்பவர்கள், ஆண்டு கொண்டிருப்பவர்கள் எல்லாம் வைத்துள்ள கோடிகளை எடுத்தால் நமது மொத்த கடனை அடைத்துவிட்டு வரியில்லாத ஆட்சியை நடத்தலாம்" என்றார்.

தொடர்ந்து, கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் தொடர்பு குறித்து கேள்வியெழுப்பியபோது, `` விசாரணை நடக்கும்போது இதைப் பற்றியெல்லாம் நாம் பேச முடியாது. முடிவு வரட்டும். பிறகு பேசுவோம்" என்றார். அடுத்து, தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்துப் பேசிய சீமான், ``பள்ளிகள் திறப்பதை அச்சத்தோடு கவனிக்கிறேன். கேரளாவில் தொற்று எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. இரவு 10 மணி முதல் 6 மணி வரையில் ஊரடங்கு என்கிறார்கள். பத்து மணிக்குத்தான் அனைவரும் இயல்பாக தூங்கப் போய் விடுவார்களே. பிறகு எதற்கு ஊரடங்கு?

கொரோனா தொற்று பரவிக் கொண்டிருக்கிறது. திரையரங்குகள், கல்விக் கூடங்கள் ஆகியவற்றைத் திறந்தால் என்ன ஆகும் எனத் தெரியவில்லை. கேரளாவில் ஓணம் பண்டிகையால் தொற்று அதிகரித்தது. நாம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் கொரோனா தடுப்புப் பணியில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது" என்றார் சீமான்.

காங்கிரஸ் எம்.பி விமர்சனம்

இந்த நிலையில், பாஜகவின் கே.டி. ராகவன் செயல்பாடு தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள கருத்தை விமர்சித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

கே.டி. ராகவன் செயலை நியாயப்படுத்திப் பேசுவதன் மூலம் பாஜகவின் பி அணி தான் என்பதை சீமான் உறுதிப்படுத்தியிருக்கிறார் என்று ஜோதிமணி கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/india-58381775

எல்லோருமே தலையங்கத்தை தான் வாசிக்கிறார்கள், உள்ளடக்கத்தை வாசிப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

கே.டி ராகவன் சொந்தமா வைச்சிருக்கிற காரின் கியரை மாத்தினா மத்தவங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேக்கிறார் போல,  கியர் மாத்துறது தப்பில்ல, அதை ஏன் மத்தவங்களுக்கு காட்டணும் என்பதே பிரச்சனையென்று நினைக்கிறேன்.

மற்றவங்களுக்கு ராகவன் காட்டவில்லையே யுவர் ஆனர்?😂 இன்னொருவர் அவர் அனுமதியோடு எடுத்ததை அனுமதி வாங்காமலே பரப்பி விட்டார்! 

ஒலி/ஒளிப்பதிவு செய்யும் உரிமையில், தமிழ்நாடு one-party state ஆ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு எதிரில் இருப்பவரின் விம்பம் தனது  திரையில் தெரியும்போது தனது விம்பமும் அங்கு தெரியும் என்பது தெரிந்திருக்க வேண்டும் ......ஆனால் காமம் கமராவை மறைத்து விட்டது ........!   😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

30-08-2021 மாயோன் பெருவிழா - சீமான் செய்தியாளர் சந்திப்பு | சென்னை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

அவருக்கு எதிரில் இருப்பவரின் விம்பம் தனது  திரையில் தெரியும்போது தனது விம்பமும் அங்கு தெரியும் என்பது தெரிந்திருக்க வேண்டும் ......ஆனால் காமம் கமராவை மறைத்து விட்டது ........!   😄

மகனே இராகவா,

காம்பறைக்குள் இருந்தே செய்தாலும்,

காமரா வழியாக, 

கர்மா துரத்தும் என்பதை

என்னைபார்த்தும் நீ அறியவில்லையேடா செல்லமே.

- நித்தி-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

KTRக்காக குரல் கொடுக்க என்னுடன் இந்த உலகில் இன்னொரு சீவனும் இருக்கு என்று நினைக்கையில் பெருமையா இருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வீடியோ பார்க்கவில்லை.. பார்த்தவர்கள் சொல்லவும் ராகவன் அந்தபொண்ணை பலாத்காரமா சுயைன்பம் செய்ய சொன்னாரா அல்லது ரெண்டு பேரும் பேசி சம்மதத்துடன் நடக்குதா? ரெண்டுபேருக்கும் என்சாய் எண்டால் எதுக்கு நமக்கு பொறாமை? வீடியோவில் பலாத்காரம் பண்ணி இருக்காவிட்டால் சீமான் சொன்னது சரிதானே.. எதுக்கு அடுத்தவன் பேர்சனல்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நான் வீடியோ பார்க்கவில்லை.. பார்த்தவர்கள் சொல்லவும் ராகவன் அந்தபொண்ணை பலாத்காரமா சுயைன்பம் செய்ய சொன்னாரா அல்லது ரெண்டு பேரும் பேசி சம்மதத்துடன் நடக்குதா? ரெண்டுபேருக்கும் என்சாய் எண்டால் எதுக்கு நமக்கு பொறாமை? வீடியோவில் பலாத்காரம் பண்ணி இருக்காவிட்டால் சீமான் சொன்னது சரிதானே.. எதுக்கு அடுத்தவன் பேர்சனல்?

புலவரே,

அந்த வீடியோ வெறும் ஊமை படம். ஒரு பெண்ணும் ராகவனும் ஏதோ பேசுறாங்கள்.

அவர் கொஞ்சம் ஐட்டம் சாங்கில் நடிகை சுழிப்பது போல் சொண்டை சுழிக்கிறார், பிறகு தன் உறுப்பை காட்டுகிறார். பூசை அறையில் இருந்த படி.

அந்த பெண் யார் என்றே தெரியவில்லை.

அவர் பாஜகவில் பதவி கேட்டு போன் போட்ட கட்சி பெண் என்பதும் அவருக்கு இராகவன் பாலியல் தொல்லை கொடுதார் என்பதும் குற்றசாட்டு.

இராகவன் வீடியோவே போலி என்கிறார். இது வழமையா எல்லாரும் சொல்வதுதானே (ஆடியோ மிமிகிரி).

ஆனால் இது மூன்று வகையாக இருக்கலாம்.

1. குற்றம் கூறபடுவது போல் இராகவன் பாலியல் தொல்லை கொடுதார்

2 பெண்ணும் அவரும் விரும்பி செய்தார்கள்

3. பெண் இவரை சிக்க வைக்க ஏற்பாடு செய்த honey trap இது.

வீடியோவின் ஆடியோ, மேலதிக ஆதாரம் இன்றி யாராலும் மூன்றில் எது என கூற முடியாது.

இதில், சீமான், ஜோதிமணி இருவருமே என்ன நடந்தது என தெரியாமல் கருத்து சொல்கிறார்கள்.

ஆனால் மதனை பிடித்து விசாரிக்க வேண்டும் என்று சீமான் சொன்னது சரிதான். அந்த பெண்ணையும் கூட விசாரிக்கலாம்.

இருவரும் மனமொத்து செய்தார்கள் என்றால் அதை அப்படியே விட்டு விடலாம்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் பாலியல் சுரண்டலில் ஈடுபடுவது என்பது சீரியசான விசயம். இதை தனிநபர் விடயம் என ஒரேயடியாக கடந்து போக முடியாது.

நாளைக்கு இதுவே எங்கள் குடும்பத்தில் ஒருத்திக்கும் வேலையிடத்திலோ, கல்லூரியிலோ நடக்கலாம்.  

ஆனால் தீரவிசாரிக்காமல் தனியான பாலியல் நடவடிக்கைகளை பகிரங்கபடுத்துவதும் கூடாதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வீடியோவில் KTR காட்டு காட்டு என்று கூறுகின்றார் அந்தப் பெண்ணும் காட்டுகின்றார். இது இருவரும் இணைந்து செய்ததுதான். அப்பெண் உண்மையானவளாக இருந்தால் போலீசுக்குப் போயிருக்கவேண்டும்

இது ஒரு honeypot ஏற்பாடுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் சொல்வது சரிதான்.

எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க எதுக்கு இருவரின் தனிப்பட்ட இரகசிய விடயங்கள் பற்றி கேள்வி கேட்கணும்??

ராகவன் மட்டும் அல்ல ஒவ்வொருவரது தனிப்பட்ட விடயங்களை நோண்ட தொடங்கினால் அது மற்றவர்களுக்கு அசிங்கம் தான். அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

அந்த வீடியோவில் KTR காட்டு காட்டு என்று கூறுகின்றார் அந்தப் பெண்ணும் காட்டுகின்றார். இது இருவரும் இணைந்து செய்ததுதான். அப்பெண் உண்மையானவளாக இருந்தால் போலீசுக்குப் போயிருக்கவேண்டும்

இது ஒரு honeypot ஏற்பாடுதான்

ஆடியோ வந்து விட்டதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதன் டைரீஸ் இல் வந்த வீடியோவில் ஆடியோ இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, விசுகு said:

சீமான் சொல்வது சரிதான்.

எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க எதுக்கு இருவரின் தனிப்பட்ட இரகசிய விடயங்கள் பற்றி கேள்வி கேட்கணும்??

ராகவன் மட்டும் அல்ல ஒவ்வொருவரது தனிப்பட்ட விடயங்களை நோண்ட தொடங்கினால் அது மற்றவர்களுக்கு அசிங்கம் தான். அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல.

உண்மைதான் - இது வெறும் கற்பனைதான் -  ஆனால் நீங்கள் நலன்புரி சங்கம் மூலம் உதவி கேட்டு வரும் ஒருவரிடம் இப்படி நடந்தால் - அதை கட்டாயம் ஆராய வேணும் என்பதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள் என நினைகிறேன்.

It all depends on the context.

ஒரு பேராசிரியர் விரும்பியே கூட ஒரு பல்கலைகழக மாணவியிடம் இப்படி நடக்கலாமா?

வேலையில் மேலதிகாரி?

அதே போலதான் கட்சியின் முக்கிய பொறுப்பும்.

குறிப்பாக தமிழ்நாட்டு பாஜக இல் பாலியல் லஞ்சம் கொடி கட்டி பறக்கிறது என்று ஏலவே குற்றசாட்டு இருக்கும் போது, இதை சீமான் சொல்வது போல் தனியார் விடயம் என்று எடுத்த உடன் சொல்ல முடியாது.

அதே போல் ஜோதி மணி சொல்வது போல் இதை பாலியல் அளுத்தம் எனவும் எடுத்த உடன் சொல்ல முடியாது.

 

8 minutes ago, வாலி said:

மதன் டைரீஸ் இல் வந்த வீடியோவில் ஆடியோ இருந்தது.

ஓகே பார்கிறேன். நன்றி

12 minutes ago, வாலி said:

மதன் டைரீஸ் இல் வந்த வீடியோவில் ஆடியோ இருந்தது.

அதிலும் அந்த ஒரிரு வரிகள் மட்டும்தான் கேட்கிறது மீதி எல்லாம் muted ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விலை மாதுவாக இருந்தாலும் அவர் அனுமதி இல்லாமல் தொடக்கூடாது இது சட்டமும் தத்துவமும் கூட....

நான் என்ரைய காட்டுறன் நீ உன்ரைய காட்டுவியோ எண்டு போட்டி வைச்சு பாலியல் விளையாட்டு செய்யிற உலகம் ஆகப்பெரிசு.பாலியல் விசயத்திலை யாருமே நூறுவீதம் சரியானவர்கள் இல்லை. சரியானவர்கள் என்பதை விட சாதாரண வாழ்கையாளர் என்றே சொல்லலாம்.
ரெலிபோன் செக்ஸ் எனக்கும் அந்த அனுபவம் இருக்கு. அது என் தனிப்பட்ட பிரச்சனை. அதை ஒரு சில வியாபரிகள் விளம்பரப்படுத்தினால் சட்டங்கள் மூலம் தண்டிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

விலை மாதுவாக இருந்தாலும் அவர் அனுமதி இல்லாமல் தொடக்கூடாது இது சட்டமும் தத்துவமும் கூட....

நான் என்ரைய காட்டுறன் நீ உன்ரைய காட்டுவியோ எண்டு போட்டி வைச்சு பாலியல் விளையாட்டு செய்யிற உலகம் ஆகப்பெரிசு.பாலியல் விசயத்திலை யாருமே நூறுவீதம் சரியானவர்கள் இல்லை. சரியானவர்கள் என்பதை விட சாதாரண வாழ்கையாளர் என்றே சொல்லலாம்.
ரெலிபோன் செக்ஸ் எனக்கும் அந்த அனுபவம் இருக்கு. அது என் தனிப்பட்ட பிரச்சனை. அதை ஒரு சில வியாபரிகள் விளம்பரப்படுத்தினால் சட்டங்கள் மூலம் தண்டிக்கலாம்.

இவர் மதன் இன்னொருவரை ப்ளக்மெயில் செய்யும் நோக்குடன் திட்டமிட்டு ஆள் செட்டப்பண்ணி ஸ்ட்ரிங் ஆப்பரேஷன் செய்துள்ளார்.. காவல் துறை அல்லாமல் ஒரு தனி மனிதன் ஸ்ட்ரிங் ஆப்பரேஷனில் ஈடுபட இந்திய சட்டத்தில் இடம் உள்ளதா என்று தெரியவில்லை.. சுவீடன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் இதற்கு தடை உள்ளது என்று இணையம் சொல்லுது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இவர் மதன் இன்னொருவரை ப்ளக்மெயில் செய்யும் நோக்குடன் திட்டமிட்டு ஆள் செட்டப்பண்ணி ஸ்ட்ரிங் ஆப்பரேஷன் செய்துள்ளார்.. காவல் துறை அல்லாமல் ஒரு தனி மனிதன் ஸ்ட்ரிங் ஆப்பரேஷனில் ஈடுபட இந்திய சட்டத்தில் இடம் உள்ளதா என்று தெரியவில்லை.. சுவீடன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் இதற்கு தடை உள்ளது..

இந்திய சட்டம் பற்றி ஆராயவில்லை. ஆனால் பொதுவாக,

இதை பிளக்மெயில் என்று சொல்ல முடியாது காரணம் இதை வைத்து, இன்னதை செய் அல்லது தா என மதன் இராகவனை மிரட்டவில்லை. 

அடுத்த கேள்வி இது entrapment ஆ? அல்லது sting operation ஆ? என்பது.

Sting operations சட்டபூர்வமானது. ஒரு குற்றத்துகுரிய அமைவுகளை வைத்து விட்டு, ஒருவர் குற்றம் செய்கிறாரா என பார்ப்பது. தெகெல்கா, பாகிஸ்தான் கிரிகெட் வீரர்கள், சிறுவர்களை ஹோட்டலில் போய் சந்திப்போர் என பலர் மாட்டுவது இந்த வகையில். யூகேயில் சன் பேப்பர் அடிகடி எவரையாவது மாட்டிவிடும்.

Entrapment என்பது அப்பாவியான ஒருவரை, தூண்டி ஒரு குற்றத்தை செய்ய வைப்பது. இது சட்ட விரோதம். சும்மா இருக்கும் என்னை வந்து, வாங்க்கோ கஞ்சா விற்போம் நல்ல காசு வரும் என கூறி கூட்டிப்போய் மாட்டி விடுவது.

இராகவனுக்கு என்ன நடந்தது என்பது தெளிவாக தெரியவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

சீமான் சொல்வது சரிதான்.

எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க எதுக்கு இருவரின் தனிப்பட்ட இரகசிய விடயங்கள் பற்றி கேள்வி கேட்கணும்??

ராகவன் மட்டும் அல்ல ஒவ்வொருவரது தனிப்பட்ட விடயங்களை நோண்ட தொடங்கினால் அது மற்றவர்களுக்கு அசிங்கம் தான். அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல.

அந்த பெண்ணுக்கும், கேடிக்கும் நீண்ட கால தொடர்பு இருந்திருக்கிறது. பரஸ்பர நம்பிக்கை இல்லாவிடில் கேடி அவ்வளவு தூரம் வீடியோ காலில் போயிருக்க முடியாது. அப்படி ஒரு அரசியல் முட்டாள் தனம் செய்வார் என்று நினைக்கவில்லை.

முன்பின் அறிமுகமில்லா பெண், அந்தளவு தூரம் போகார். கேடியும் எல்லை தண்டியிரார். அடிக்கடி கெஸ்ட் ஹவுசில் சந்திக்கிறோம், வீடியோ காலிலும் கொஞ்சிக் குலாவுகிறோம் என்று, தனக்கும், கேடிக்கும் உள்ள உறவு குறித்து பெருமையாக அல்லது பீலாவுக்காக யாருக்கோ அடித்து விட்டுள்ளார் பெண்.

அது விபரம் காதுக்கு போனதும் மதன், அண்ணாமலை திட்டம் போட்டு உள்ளனர்.

போலீஸ் புத்தி அண்ணாமலை, தன், தலைமைப்பதவிக்கு  எதிரியாக வரக்கூடிய கேடிக்கு, ஆப்படிக்க யோசித்து, பணத்தினை கொடுத்து, அந்த பெண்ணை மடக்கி, மதனையும் இழுத்து, கேடி கதையை முடித்து விட்டார்.

கேடியை பொறுத்த வரையில், பணத்துக்காக, அந்த பெண் செய்தது, பச்சைத் துரோகம், அயோக்கியத்தனம்.

எமக்கு பொதுவெளியில் கிடைக்கும் விபரங்களை விட, ஒரு கட்சி தலைவரான சீமானுக்கு பல விடயம் போலீஸ் மற்றும்  அதிகாரிகளிடம் இருந்தே வரும். அதனை பெற்று, ஆராய்ந்தே பொது வெளியில் பேசுவர்.

Link to comment
Share on other sites

ஏதோ, ராகவன் அவர்கள்  மனைவியுடன் படுக்கை அறையில்  இருந்ததை எவனோ ஒருவன் திருட்டுத்தனமாக ஜன்னல் வழியே வீடியோ எடுத்து  வெளியிட்டால்  எப்படி கொந்தளிப்பாரே,  அப்படி கொந்தளிக்கிறார்  அண்ணாச்சி சீமான் .
இங்கு குற்றசாட்டே  கட்சியை சார்ந்த பெண் ஒருவரை, தமது செல்வாக்கை பயன்படுத்தி இச்சைக்கு உள்ளாக்கினார் என்பது தான்.அது கூட யாரும் வெளியிலிருந்து வீடியோ எடுத்ததல்ல.அவரின் செல்ஃபோன் மூலம் வீடியோ உரையாடல் நடத்திய காட்சி தான் கசிந்திருக்கிறது.

தவிர, இந்துக்கள் புனிதம் என கருதும் பூஜையறையை அதற்கு பயன்படுத்தியது அவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.அப்படி இருக்கையில், யாரும் செய்யாததையா செய்தார் என்று இவர் கேட்பதன் பொருள் என்ன?.அரசியலில் இருப்பவர்கள் அனைவருமே தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி இது போன்று கட்சி பிரமுகர்களிடம் அத்துமீறுவார்கள் அதெல்லாம் சகஜம், அதை  கண்டுகொள்ள கூடாது என்று சொல்ல வருகிறாரா சீமான் அவர்கள்?

சம்மந்தப்பட்ட ராகவனே, இப்படி எதுவும் நடக்கவில்லை என தட்டிக் கழிக்க தான் பார்க்கிறார்.
அப்படியிருக்கையில், இப்படியொரு முரட்டு முட்டு கொடுக்கும் அளவுக்கு சீமானை நிர்பந்திப்பது எது?. இதெல்லாம் தப்பு என சொல்லி விட்டால், "நீ என்ன பெரிய யோக்கியமா?" என்று விஜயலட்சுமி வந்து கேட்டு விடுவார் என்ற பயத்தினால?.

பிஜேபி இன் தமிழ்நாட்டு கிளையில் பிராமணருக்கு, பிராமணர் அல்லாதவருக்கும் இடையில் நடைபெறும் அதிகார பேட்டியே  இக்காணொளி வெளியானதுக்கு காரணமாகும். பிராமணர் அல்லாதவர் தலைவர் ஆனாலும், பிராமணர்களே தற்போது அதிகாரம் மிக்கவர்களாய் இருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராகவனும் இந்த வீடியோவை பதிவு செய்து வைத்திருந்தால்,பார்த்து ஒரு முடிவுக்கு வரலாம்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெண் ஏற்கெனவே ராகவனுடன் சமரசம் செய்து வாழ்ந்திருக்க வேண்டும். இந்தக் 'கை'பேசி உறவும் அவர்களுக்குள் இன்று புதிதாக நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. திடீரென்று அப்பெண்ணிடம் இந்த முயற்சியில் இறங்க ராகவன் வெள்ளந்தியும் இல்லை, கிறுக்கனும் இல்லை. அப்பெண் செய்தது பச்சைத் துரோகம், இச்சைத் துரோகம் எல்லாம்தான். பில் கிளின்டனுடன் உறவு வைத்துக் கொண்டு பின்னர் பணம் சம்பாதிக்கும் கீழ்த்தரமான எண்ணத்துடன விந்து படிந்த தனது உள்ளாடையை வருடக்கணக்கில் பத்திரப்படுத்தி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மோனிகா லெவின்ஸ்கியின் கயமை போன்றது. நிற்க.

       எங்கள் நிறுவனத்தில் அதிகார வர்க்கத்தின் கைக்கூலியாக எப்போதும் மக்களுக்கு இன்னல் விளைவித்த ஒருவர், குற்றம் செய்ய வாய்ப்பேயில்லாத ஒரு விடயத்தில் மாட்டி வைக்கப்பட்டு காவல் துறையின் விசாரணை வளையத்துள் வந்து அல்லல் பட்டார். அவர் மீது எவரும் இரக்கம் கொள்ளவில்லை. குற்றமே வாழ்வாகக் கொண்டவன் குற்றமேயில்லாத விடயத்தில் மாட்டியது இயற்கை நீதி என்று கொள்ளப்பட்டது (உண்மையில் இறைவனின் நீதி என்றனர் மக்கள்). இவ்வாறு ஏற்றுக் கொண்டால், அப்பாவிகளும் மாட்டப்படலாமே என்று ஊகத்தின் அடிப்படையில் கேள்வி எழலாம். நடைமுறையில் அம்மாதிரியான தருணத்தில் சமூகமே எழுந்து நின்று அப்பாவியைக் காத்து நின்ற உதாரணமும் உண்டு. 

      தமிழ் அடையாளங்களை நிராகரிப்பது முதல் அனைத்து விடயங்களிலும் தமிழ்ச் சமூகத்திற்கு எதிராகவே செயல்படும் பார்ப்பன பாசிசத்தின் உண்மை முகம் ராகவன். நாம் குற்றம் என்றே எண்ணாத ஒரு விடயத்தில் ராகவன் மாட்டிக் கொண்டது இயற்கை நீதி; அவர் போன்றோர் இருப்பதாக நடிக்கும் இறைவனின் நீதி என்று எனக்குள் உறையும் பாமரன் குதூகலிக்கிறான். அதிகார பலம் கொண்டோரை வேறு எப்படித்தான்  'அடிப்பது' எனும் 'கை'யறு நிலை. சீமான் அவர்கள் பேசியதைப் போல் ராகவனையெல்லாம் நியாயப்படுத்த மனம் ஒப்பவில்லை. கிளின்டனுக்கு  இரங்கும் மனம் ராகவனுக்கு இரங்கவில்லை. இப்படி ஏடாகூடமாக நான் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது என்று அப்போது யோசித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.