Jump to content

ஒலகத்துல நடக்காததையா கே.டி.ராகவன் செஞ்சாரு?


Recommended Posts

  • Replies 62
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கே. ரி. ராகவன்  கலியாணம் கட்டியவர்,
அவர்... "கர சேவை"  செய்ததை, சீமான் ஆதரிக்கிறாரா....  :grin: 😂 🤣 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

கே. ரி. ராகவன்  கலியாணம் கட்டியவர்,
அவர்... "கர சேவை"  செய்ததை, சீமான் ஆதரிக்கிறாரா....  :grin: 😂 🤣 

கே.டி ராகவன் சொந்தமா வைச்சிருக்கிற காரின் கியரை மாத்தினா மத்தவங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேக்கிறார் போல,  கியர் மாத்துறது தப்பில்ல, அதை ஏன் மத்தவங்களுக்கு காட்டணும் என்பதே பிரச்சனையென்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

கே. ரி. ராகவன்  கலியாணம் கட்டியவர்,
அவர்... "கர சேவை"  செய்ததை, சீமான் ஆதரிக்கிறாரா....  :grin: 😂 🤣 

🤣 உப்பிடியே லைனில நில்லுங்கோ…. சுட சுட பந்தி பந்தியா பதில் எழுதி கொண்டு வாறன்🤣…..

பிகு

மீம்ஸ் உலகம் அதிருது🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

 

அண்ண‌ன் சீமான் என்ன‌ சொன்னார் என்று இந்த‌க் காணொளியில் பாருங்கோ............நாட்டில் எவ‌ள‌வோ பிர‌ச்ச‌னைக‌ள் இருக்கு , அதை எல்லாம் த‌விர்த்து விட்டு இதை பேச‌லாமா என்று கூறி உள்ளார்..........

200 ரூபாய் திராவிட‌ கூட்ட‌ங்க‌ள் இப்ப‌வே வெட்டி ஒட்டு வேலையில் இற‌ங்கிட்டின‌ம் , 

அதையும் இந்த‌ திரியில் இணையுங்கோ உங்க‌ளில் க‌லைத்த‌ ம‌ன‌துக்கு ம‌கிழ்வை த‌ரும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கே.டி.ராகவன் வீடியோ முதல் கொடநாடு கொலை வரை - சீமான் சொன்னது என்ன?

2 மணி நேரங்களுக்கு முன்னர்
சீமான்

பட மூலாதாரம்,SEEMAN

 
படக்குறிப்பு,

சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர் - நாம் தமிழர் கட்சி

`கே.டி.ராகவனின் வீடியோவை வெளியிட்ட நபரைக் கைது செய்திருக்க வேண்டும்' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். மேலும், `நாட்டில் பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது, `எனது வீடியோவை பார்த்து ரசியுங்கள்' என ராகவன் சொன்னாரா?' எனவும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாயோன் பெருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சீமான் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ``கே.டி.ராகவனின் அனுமதியில்லாமல் தனிப்பட்ட இடங்களில் அவரை வீடியோ எடுப்பது என்பது சமூக அவலம். உலகில் நடக்காத ஒன்றைச் செய்ததாகக் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். சட்டசபையில் ஆபாச காட்சிகளைப் பார்த்துள்ளனர். அவர் தனது தனிப்பட்ட அறையில் செய்த காட்சிகளை வெளியில் விடுவதன் மூலம், கேடுகெட்ட சமூகமாக மாறிவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.

யார் யாருடன் பேசுகிறார்கள் என்பதை பதிவு செய்து வெளியிடுவதன் மூலம் என்ன சாதிக்கப் போகிறார்கள்? இந்த காணொளியை வெளியிட்ட நபரைக் கைது செய்திருக்க வேண்டும். உலகின் யாரும் செய்யாத ஒன்றையா அவர் செய்துவிட்டார். சட்டமன்றத்திலேயே ஆபாசப் படம் பார்த்துள்ள சம்பவங்களும் வெளிவந்துள்ளன" என்றார்.

 

தொடர்ந்து பேசும்போது, ``நாட்டில் பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம் 6 லட்சம் கோடி ரூபாய்க்கு தனியாருக்கு குத்தகை விடப்போவதாக அறிவித்துள்ளனர். 100 லட்சம் கோடிக்கு சொத்து இருக்கும்போது 6 லட்சம் கோடிக்கு விட வேண்டிய அவசியம் என்ன?

உச்ச நீதிமன்ற நீதியரசர் ரமணா பேசும்போது, `எந்த விவாதமுமின்றி சட்டங்களை இயற்றிக் கொண்டே போகின்றனர்' என்கிறார். அதுதான் நாம் பேச வேண்டிய பிரச்னை. திருச்சி சிவா பேசும்போதும், `20 ஆண்டுகளாக பார்க்கிறேன். எந்த விவாதமும் இல்லாமல் 36 சட்டங்களை இயற்றியுள்ளனர்' என்கிறார். இது சர்வாதிகாரம் இல்லை, கொடுங்கோன்மை. இதையெல்லாம் பற்றிப் பேசாமல் என்னுடைய வீடியோவை பார்த்து ரசியுங்கள் என ராகவன் சொன்னாரா?" எனக் கொதித்தார்.

மேலும், ``லாபத்தில் இயங்கும் எல்.ஐ.சியை தனியாருக்கு கொடுக்க உள்ளனர். தனியார் சிறப்பாக நடத்தும் என்றால் அரசு எதற்கு? அரசைவிட தனியார் நிறுவனங்கள் அனைத்தையும் சிறப்பாக செய்யும் என்றால் இவர்களின் பணி என்ன? கமுதியில் நான்காயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அதானி குழுமத்துடன் அரசு ஒப்பந்தம் போட்டது. அங்கு வாயில் காவலர் வேலைகூட அம்மக்களுக்குக் கொடுக்கப்படவில்லை. மின்துறையில் ஒரு லட்சம் கோடி இழப்பு உள்ளது. ஆனால், இவர்கள் ஒரு யூனிட் மின்சாரத்தை 7 ரூபாய்க்கு எடுத்துக் கொள்வதாக அதானியிடம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர்" என்றார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

சட்டசபையில் ஓ.பி.எஸ் பாடிய பாடல் குறித்து சீமானிடம் கேட்டபோது, ``அதற்கு நான் என்ன சொல்ல முடியும். அவர் தனது நிலைமையை கவிதையாக விளக்குகிறார். அவ்வளவுதான்" என்றார். அடுத்ததாக, குடிசை மாற்று வாரிய வீடுகளின் தரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, ``குடிசை மாற்று வாரிய வீடுகள் தொட்டாலே உதிர்கின்றன என்றால் ஏன் தொட வேண்டும். குடிசையில் படுத்தால் உயிரோடு எழுந்திருப்போம் என்பது நிச்சயம் இல்லை. இந்த வீடுகளில் எல்லாம் ஏழாவது மாடியில் படுத்திருப்பவனின் நிலையை நினைத்தால் கவலையாக இருக்கிறது.

மேம்பாலம் கட்டிக் கொண்டு வரும்போதே இடிந்து விழுகிறது. கேட்டால், `மணலில் சிக்கல் உள்ளது' என்கிறார்கள். இவர்கள் அடித்த கொள்ளை அப்படி. 5 லட்சம் கோடி கடன் என்கிறார்கள். இவர்களின் வீடுகளில் எத்தனை லட்சம் கோடிகள் உள்ளன. ஆள்பவர்கள், ஆண்டு கொண்டிருப்பவர்கள் எல்லாம் வைத்துள்ள கோடிகளை எடுத்தால் நமது மொத்த கடனை அடைத்துவிட்டு வரியில்லாத ஆட்சியை நடத்தலாம்" என்றார்.

தொடர்ந்து, கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் தொடர்பு குறித்து கேள்வியெழுப்பியபோது, `` விசாரணை நடக்கும்போது இதைப் பற்றியெல்லாம் நாம் பேச முடியாது. முடிவு வரட்டும். பிறகு பேசுவோம்" என்றார். அடுத்து, தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்துப் பேசிய சீமான், ``பள்ளிகள் திறப்பதை அச்சத்தோடு கவனிக்கிறேன். கேரளாவில் தொற்று எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. இரவு 10 மணி முதல் 6 மணி வரையில் ஊரடங்கு என்கிறார்கள். பத்து மணிக்குத்தான் அனைவரும் இயல்பாக தூங்கப் போய் விடுவார்களே. பிறகு எதற்கு ஊரடங்கு?

கொரோனா தொற்று பரவிக் கொண்டிருக்கிறது. திரையரங்குகள், கல்விக் கூடங்கள் ஆகியவற்றைத் திறந்தால் என்ன ஆகும் எனத் தெரியவில்லை. கேரளாவில் ஓணம் பண்டிகையால் தொற்று அதிகரித்தது. நாம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் கொரோனா தடுப்புப் பணியில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது" என்றார் சீமான்.

காங்கிரஸ் எம்.பி விமர்சனம்

இந்த நிலையில், பாஜகவின் கே.டி. ராகவன் செயல்பாடு தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள கருத்தை விமர்சித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

கே.டி. ராகவன் செயலை நியாயப்படுத்திப் பேசுவதன் மூலம் பாஜகவின் பி அணி தான் என்பதை சீமான் உறுதிப்படுத்தியிருக்கிறார் என்று ஜோதிமணி கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/india-58381775

எல்லோருமே தலையங்கத்தை தான் வாசிக்கிறார்கள், உள்ளடக்கத்தை வாசிப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

கே.டி ராகவன் சொந்தமா வைச்சிருக்கிற காரின் கியரை மாத்தினா மத்தவங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேக்கிறார் போல,  கியர் மாத்துறது தப்பில்ல, அதை ஏன் மத்தவங்களுக்கு காட்டணும் என்பதே பிரச்சனையென்று நினைக்கிறேன்.

மற்றவங்களுக்கு ராகவன் காட்டவில்லையே யுவர் ஆனர்?😂 இன்னொருவர் அவர் அனுமதியோடு எடுத்ததை அனுமதி வாங்காமலே பரப்பி விட்டார்! 

ஒலி/ஒளிப்பதிவு செய்யும் உரிமையில், தமிழ்நாடு one-party state ஆ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு எதிரில் இருப்பவரின் விம்பம் தனது  திரையில் தெரியும்போது தனது விம்பமும் அங்கு தெரியும் என்பது தெரிந்திருக்க வேண்டும் ......ஆனால் காமம் கமராவை மறைத்து விட்டது ........!   😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

30-08-2021 மாயோன் பெருவிழா - சீமான் செய்தியாளர் சந்திப்பு | சென்னை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

அவருக்கு எதிரில் இருப்பவரின் விம்பம் தனது  திரையில் தெரியும்போது தனது விம்பமும் அங்கு தெரியும் என்பது தெரிந்திருக்க வேண்டும் ......ஆனால் காமம் கமராவை மறைத்து விட்டது ........!   😄

மகனே இராகவா,

காம்பறைக்குள் இருந்தே செய்தாலும்,

காமரா வழியாக, 

கர்மா துரத்தும் என்பதை

என்னைபார்த்தும் நீ அறியவில்லையேடா செல்லமே.

- நித்தி-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

KTRக்காக குரல் கொடுக்க என்னுடன் இந்த உலகில் இன்னொரு சீவனும் இருக்கு என்று நினைக்கையில் பெருமையா இருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வீடியோ பார்க்கவில்லை.. பார்த்தவர்கள் சொல்லவும் ராகவன் அந்தபொண்ணை பலாத்காரமா சுயைன்பம் செய்ய சொன்னாரா அல்லது ரெண்டு பேரும் பேசி சம்மதத்துடன் நடக்குதா? ரெண்டுபேருக்கும் என்சாய் எண்டால் எதுக்கு நமக்கு பொறாமை? வீடியோவில் பலாத்காரம் பண்ணி இருக்காவிட்டால் சீமான் சொன்னது சரிதானே.. எதுக்கு அடுத்தவன் பேர்சனல்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நான் வீடியோ பார்க்கவில்லை.. பார்த்தவர்கள் சொல்லவும் ராகவன் அந்தபொண்ணை பலாத்காரமா சுயைன்பம் செய்ய சொன்னாரா அல்லது ரெண்டு பேரும் பேசி சம்மதத்துடன் நடக்குதா? ரெண்டுபேருக்கும் என்சாய் எண்டால் எதுக்கு நமக்கு பொறாமை? வீடியோவில் பலாத்காரம் பண்ணி இருக்காவிட்டால் சீமான் சொன்னது சரிதானே.. எதுக்கு அடுத்தவன் பேர்சனல்?

புலவரே,

அந்த வீடியோ வெறும் ஊமை படம். ஒரு பெண்ணும் ராகவனும் ஏதோ பேசுறாங்கள்.

அவர் கொஞ்சம் ஐட்டம் சாங்கில் நடிகை சுழிப்பது போல் சொண்டை சுழிக்கிறார், பிறகு தன் உறுப்பை காட்டுகிறார். பூசை அறையில் இருந்த படி.

அந்த பெண் யார் என்றே தெரியவில்லை.

அவர் பாஜகவில் பதவி கேட்டு போன் போட்ட கட்சி பெண் என்பதும் அவருக்கு இராகவன் பாலியல் தொல்லை கொடுதார் என்பதும் குற்றசாட்டு.

இராகவன் வீடியோவே போலி என்கிறார். இது வழமையா எல்லாரும் சொல்வதுதானே (ஆடியோ மிமிகிரி).

ஆனால் இது மூன்று வகையாக இருக்கலாம்.

1. குற்றம் கூறபடுவது போல் இராகவன் பாலியல் தொல்லை கொடுதார்

2 பெண்ணும் அவரும் விரும்பி செய்தார்கள்

3. பெண் இவரை சிக்க வைக்க ஏற்பாடு செய்த honey trap இது.

வீடியோவின் ஆடியோ, மேலதிக ஆதாரம் இன்றி யாராலும் மூன்றில் எது என கூற முடியாது.

இதில், சீமான், ஜோதிமணி இருவருமே என்ன நடந்தது என தெரியாமல் கருத்து சொல்கிறார்கள்.

ஆனால் மதனை பிடித்து விசாரிக்க வேண்டும் என்று சீமான் சொன்னது சரிதான். அந்த பெண்ணையும் கூட விசாரிக்கலாம்.

இருவரும் மனமொத்து செய்தார்கள் என்றால் அதை அப்படியே விட்டு விடலாம்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் பாலியல் சுரண்டலில் ஈடுபடுவது என்பது சீரியசான விசயம். இதை தனிநபர் விடயம் என ஒரேயடியாக கடந்து போக முடியாது.

நாளைக்கு இதுவே எங்கள் குடும்பத்தில் ஒருத்திக்கும் வேலையிடத்திலோ, கல்லூரியிலோ நடக்கலாம்.  

ஆனால் தீரவிசாரிக்காமல் தனியான பாலியல் நடவடிக்கைகளை பகிரங்கபடுத்துவதும் கூடாதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வீடியோவில் KTR காட்டு காட்டு என்று கூறுகின்றார் அந்தப் பெண்ணும் காட்டுகின்றார். இது இருவரும் இணைந்து செய்ததுதான். அப்பெண் உண்மையானவளாக இருந்தால் போலீசுக்குப் போயிருக்கவேண்டும்

இது ஒரு honeypot ஏற்பாடுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் சொல்வது சரிதான்.

எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க எதுக்கு இருவரின் தனிப்பட்ட இரகசிய விடயங்கள் பற்றி கேள்வி கேட்கணும்??

ராகவன் மட்டும் அல்ல ஒவ்வொருவரது தனிப்பட்ட விடயங்களை நோண்ட தொடங்கினால் அது மற்றவர்களுக்கு அசிங்கம் தான். அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

அந்த வீடியோவில் KTR காட்டு காட்டு என்று கூறுகின்றார் அந்தப் பெண்ணும் காட்டுகின்றார். இது இருவரும் இணைந்து செய்ததுதான். அப்பெண் உண்மையானவளாக இருந்தால் போலீசுக்குப் போயிருக்கவேண்டும்

இது ஒரு honeypot ஏற்பாடுதான்

ஆடியோ வந்து விட்டதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதன் டைரீஸ் இல் வந்த வீடியோவில் ஆடியோ இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, விசுகு said:

சீமான் சொல்வது சரிதான்.

எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க எதுக்கு இருவரின் தனிப்பட்ட இரகசிய விடயங்கள் பற்றி கேள்வி கேட்கணும்??

ராகவன் மட்டும் அல்ல ஒவ்வொருவரது தனிப்பட்ட விடயங்களை நோண்ட தொடங்கினால் அது மற்றவர்களுக்கு அசிங்கம் தான். அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல.

உண்மைதான் - இது வெறும் கற்பனைதான் -  ஆனால் நீங்கள் நலன்புரி சங்கம் மூலம் உதவி கேட்டு வரும் ஒருவரிடம் இப்படி நடந்தால் - அதை கட்டாயம் ஆராய வேணும் என்பதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள் என நினைகிறேன்.

It all depends on the context.

ஒரு பேராசிரியர் விரும்பியே கூட ஒரு பல்கலைகழக மாணவியிடம் இப்படி நடக்கலாமா?

வேலையில் மேலதிகாரி?

அதே போலதான் கட்சியின் முக்கிய பொறுப்பும்.

குறிப்பாக தமிழ்நாட்டு பாஜக இல் பாலியல் லஞ்சம் கொடி கட்டி பறக்கிறது என்று ஏலவே குற்றசாட்டு இருக்கும் போது, இதை சீமான் சொல்வது போல் தனியார் விடயம் என்று எடுத்த உடன் சொல்ல முடியாது.

அதே போல் ஜோதி மணி சொல்வது போல் இதை பாலியல் அளுத்தம் எனவும் எடுத்த உடன் சொல்ல முடியாது.

 

8 minutes ago, வாலி said:

மதன் டைரீஸ் இல் வந்த வீடியோவில் ஆடியோ இருந்தது.

ஓகே பார்கிறேன். நன்றி

12 minutes ago, வாலி said:

மதன் டைரீஸ் இல் வந்த வீடியோவில் ஆடியோ இருந்தது.

அதிலும் அந்த ஒரிரு வரிகள் மட்டும்தான் கேட்கிறது மீதி எல்லாம் muted ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விலை மாதுவாக இருந்தாலும் அவர் அனுமதி இல்லாமல் தொடக்கூடாது இது சட்டமும் தத்துவமும் கூட....

நான் என்ரைய காட்டுறன் நீ உன்ரைய காட்டுவியோ எண்டு போட்டி வைச்சு பாலியல் விளையாட்டு செய்யிற உலகம் ஆகப்பெரிசு.பாலியல் விசயத்திலை யாருமே நூறுவீதம் சரியானவர்கள் இல்லை. சரியானவர்கள் என்பதை விட சாதாரண வாழ்கையாளர் என்றே சொல்லலாம்.
ரெலிபோன் செக்ஸ் எனக்கும் அந்த அனுபவம் இருக்கு. அது என் தனிப்பட்ட பிரச்சனை. அதை ஒரு சில வியாபரிகள் விளம்பரப்படுத்தினால் சட்டங்கள் மூலம் தண்டிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

விலை மாதுவாக இருந்தாலும் அவர் அனுமதி இல்லாமல் தொடக்கூடாது இது சட்டமும் தத்துவமும் கூட....

நான் என்ரைய காட்டுறன் நீ உன்ரைய காட்டுவியோ எண்டு போட்டி வைச்சு பாலியல் விளையாட்டு செய்யிற உலகம் ஆகப்பெரிசு.பாலியல் விசயத்திலை யாருமே நூறுவீதம் சரியானவர்கள் இல்லை. சரியானவர்கள் என்பதை விட சாதாரண வாழ்கையாளர் என்றே சொல்லலாம்.
ரெலிபோன் செக்ஸ் எனக்கும் அந்த அனுபவம் இருக்கு. அது என் தனிப்பட்ட பிரச்சனை. அதை ஒரு சில வியாபரிகள் விளம்பரப்படுத்தினால் சட்டங்கள் மூலம் தண்டிக்கலாம்.

இவர் மதன் இன்னொருவரை ப்ளக்மெயில் செய்யும் நோக்குடன் திட்டமிட்டு ஆள் செட்டப்பண்ணி ஸ்ட்ரிங் ஆப்பரேஷன் செய்துள்ளார்.. காவல் துறை அல்லாமல் ஒரு தனி மனிதன் ஸ்ட்ரிங் ஆப்பரேஷனில் ஈடுபட இந்திய சட்டத்தில் இடம் உள்ளதா என்று தெரியவில்லை.. சுவீடன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் இதற்கு தடை உள்ளது என்று இணையம் சொல்லுது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இவர் மதன் இன்னொருவரை ப்ளக்மெயில் செய்யும் நோக்குடன் திட்டமிட்டு ஆள் செட்டப்பண்ணி ஸ்ட்ரிங் ஆப்பரேஷன் செய்துள்ளார்.. காவல் துறை அல்லாமல் ஒரு தனி மனிதன் ஸ்ட்ரிங் ஆப்பரேஷனில் ஈடுபட இந்திய சட்டத்தில் இடம் உள்ளதா என்று தெரியவில்லை.. சுவீடன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் இதற்கு தடை உள்ளது..

இந்திய சட்டம் பற்றி ஆராயவில்லை. ஆனால் பொதுவாக,

இதை பிளக்மெயில் என்று சொல்ல முடியாது காரணம் இதை வைத்து, இன்னதை செய் அல்லது தா என மதன் இராகவனை மிரட்டவில்லை. 

அடுத்த கேள்வி இது entrapment ஆ? அல்லது sting operation ஆ? என்பது.

Sting operations சட்டபூர்வமானது. ஒரு குற்றத்துகுரிய அமைவுகளை வைத்து விட்டு, ஒருவர் குற்றம் செய்கிறாரா என பார்ப்பது. தெகெல்கா, பாகிஸ்தான் கிரிகெட் வீரர்கள், சிறுவர்களை ஹோட்டலில் போய் சந்திப்போர் என பலர் மாட்டுவது இந்த வகையில். யூகேயில் சன் பேப்பர் அடிகடி எவரையாவது மாட்டிவிடும்.

Entrapment என்பது அப்பாவியான ஒருவரை, தூண்டி ஒரு குற்றத்தை செய்ய வைப்பது. இது சட்ட விரோதம். சும்மா இருக்கும் என்னை வந்து, வாங்க்கோ கஞ்சா விற்போம் நல்ல காசு வரும் என கூறி கூட்டிப்போய் மாட்டி விடுவது.

இராகவனுக்கு என்ன நடந்தது என்பது தெளிவாக தெரியவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

சீமான் சொல்வது சரிதான்.

எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க எதுக்கு இருவரின் தனிப்பட்ட இரகசிய விடயங்கள் பற்றி கேள்வி கேட்கணும்??

ராகவன் மட்டும் அல்ல ஒவ்வொருவரது தனிப்பட்ட விடயங்களை நோண்ட தொடங்கினால் அது மற்றவர்களுக்கு அசிங்கம் தான். அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல.

அந்த பெண்ணுக்கும், கேடிக்கும் நீண்ட கால தொடர்பு இருந்திருக்கிறது. பரஸ்பர நம்பிக்கை இல்லாவிடில் கேடி அவ்வளவு தூரம் வீடியோ காலில் போயிருக்க முடியாது. அப்படி ஒரு அரசியல் முட்டாள் தனம் செய்வார் என்று நினைக்கவில்லை.

முன்பின் அறிமுகமில்லா பெண், அந்தளவு தூரம் போகார். கேடியும் எல்லை தண்டியிரார். அடிக்கடி கெஸ்ட் ஹவுசில் சந்திக்கிறோம், வீடியோ காலிலும் கொஞ்சிக் குலாவுகிறோம் என்று, தனக்கும், கேடிக்கும் உள்ள உறவு குறித்து பெருமையாக அல்லது பீலாவுக்காக யாருக்கோ அடித்து விட்டுள்ளார் பெண்.

அது விபரம் காதுக்கு போனதும் மதன், அண்ணாமலை திட்டம் போட்டு உள்ளனர்.

போலீஸ் புத்தி அண்ணாமலை, தன், தலைமைப்பதவிக்கு  எதிரியாக வரக்கூடிய கேடிக்கு, ஆப்படிக்க யோசித்து, பணத்தினை கொடுத்து, அந்த பெண்ணை மடக்கி, மதனையும் இழுத்து, கேடி கதையை முடித்து விட்டார்.

கேடியை பொறுத்த வரையில், பணத்துக்காக, அந்த பெண் செய்தது, பச்சைத் துரோகம், அயோக்கியத்தனம்.

எமக்கு பொதுவெளியில் கிடைக்கும் விபரங்களை விட, ஒரு கட்சி தலைவரான சீமானுக்கு பல விடயம் போலீஸ் மற்றும்  அதிகாரிகளிடம் இருந்தே வரும். அதனை பெற்று, ஆராய்ந்தே பொது வெளியில் பேசுவர்.

Link to comment
Share on other sites

ஏதோ, ராகவன் அவர்கள்  மனைவியுடன் படுக்கை அறையில்  இருந்ததை எவனோ ஒருவன் திருட்டுத்தனமாக ஜன்னல் வழியே வீடியோ எடுத்து  வெளியிட்டால்  எப்படி கொந்தளிப்பாரே,  அப்படி கொந்தளிக்கிறார்  அண்ணாச்சி சீமான் .
இங்கு குற்றசாட்டே  கட்சியை சார்ந்த பெண் ஒருவரை, தமது செல்வாக்கை பயன்படுத்தி இச்சைக்கு உள்ளாக்கினார் என்பது தான்.அது கூட யாரும் வெளியிலிருந்து வீடியோ எடுத்ததல்ல.அவரின் செல்ஃபோன் மூலம் வீடியோ உரையாடல் நடத்திய காட்சி தான் கசிந்திருக்கிறது.

தவிர, இந்துக்கள் புனிதம் என கருதும் பூஜையறையை அதற்கு பயன்படுத்தியது அவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.அப்படி இருக்கையில், யாரும் செய்யாததையா செய்தார் என்று இவர் கேட்பதன் பொருள் என்ன?.அரசியலில் இருப்பவர்கள் அனைவருமே தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி இது போன்று கட்சி பிரமுகர்களிடம் அத்துமீறுவார்கள் அதெல்லாம் சகஜம், அதை  கண்டுகொள்ள கூடாது என்று சொல்ல வருகிறாரா சீமான் அவர்கள்?

சம்மந்தப்பட்ட ராகவனே, இப்படி எதுவும் நடக்கவில்லை என தட்டிக் கழிக்க தான் பார்க்கிறார்.
அப்படியிருக்கையில், இப்படியொரு முரட்டு முட்டு கொடுக்கும் அளவுக்கு சீமானை நிர்பந்திப்பது எது?. இதெல்லாம் தப்பு என சொல்லி விட்டால், "நீ என்ன பெரிய யோக்கியமா?" என்று விஜயலட்சுமி வந்து கேட்டு விடுவார் என்ற பயத்தினால?.

பிஜேபி இன் தமிழ்நாட்டு கிளையில் பிராமணருக்கு, பிராமணர் அல்லாதவருக்கும் இடையில் நடைபெறும் அதிகார பேட்டியே  இக்காணொளி வெளியானதுக்கு காரணமாகும். பிராமணர் அல்லாதவர் தலைவர் ஆனாலும், பிராமணர்களே தற்போது அதிகாரம் மிக்கவர்களாய் இருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராகவனும் இந்த வீடியோவை பதிவு செய்து வைத்திருந்தால்,பார்த்து ஒரு முடிவுக்கு வரலாம்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெண் ஏற்கெனவே ராகவனுடன் சமரசம் செய்து வாழ்ந்திருக்க வேண்டும். இந்தக் 'கை'பேசி உறவும் அவர்களுக்குள் இன்று புதிதாக நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. திடீரென்று அப்பெண்ணிடம் இந்த முயற்சியில் இறங்க ராகவன் வெள்ளந்தியும் இல்லை, கிறுக்கனும் இல்லை. அப்பெண் செய்தது பச்சைத் துரோகம், இச்சைத் துரோகம் எல்லாம்தான். பில் கிளின்டனுடன் உறவு வைத்துக் கொண்டு பின்னர் பணம் சம்பாதிக்கும் கீழ்த்தரமான எண்ணத்துடன விந்து படிந்த தனது உள்ளாடையை வருடக்கணக்கில் பத்திரப்படுத்தி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மோனிகா லெவின்ஸ்கியின் கயமை போன்றது. நிற்க.

       எங்கள் நிறுவனத்தில் அதிகார வர்க்கத்தின் கைக்கூலியாக எப்போதும் மக்களுக்கு இன்னல் விளைவித்த ஒருவர், குற்றம் செய்ய வாய்ப்பேயில்லாத ஒரு விடயத்தில் மாட்டி வைக்கப்பட்டு காவல் துறையின் விசாரணை வளையத்துள் வந்து அல்லல் பட்டார். அவர் மீது எவரும் இரக்கம் கொள்ளவில்லை. குற்றமே வாழ்வாகக் கொண்டவன் குற்றமேயில்லாத விடயத்தில் மாட்டியது இயற்கை நீதி என்று கொள்ளப்பட்டது (உண்மையில் இறைவனின் நீதி என்றனர் மக்கள்). இவ்வாறு ஏற்றுக் கொண்டால், அப்பாவிகளும் மாட்டப்படலாமே என்று ஊகத்தின் அடிப்படையில் கேள்வி எழலாம். நடைமுறையில் அம்மாதிரியான தருணத்தில் சமூகமே எழுந்து நின்று அப்பாவியைக் காத்து நின்ற உதாரணமும் உண்டு. 

      தமிழ் அடையாளங்களை நிராகரிப்பது முதல் அனைத்து விடயங்களிலும் தமிழ்ச் சமூகத்திற்கு எதிராகவே செயல்படும் பார்ப்பன பாசிசத்தின் உண்மை முகம் ராகவன். நாம் குற்றம் என்றே எண்ணாத ஒரு விடயத்தில் ராகவன் மாட்டிக் கொண்டது இயற்கை நீதி; அவர் போன்றோர் இருப்பதாக நடிக்கும் இறைவனின் நீதி என்று எனக்குள் உறையும் பாமரன் குதூகலிக்கிறான். அதிகார பலம் கொண்டோரை வேறு எப்படித்தான்  'அடிப்பது' எனும் 'கை'யறு நிலை. சீமான் அவர்கள் பேசியதைப் போல் ராகவனையெல்லாம் நியாயப்படுத்த மனம் ஒப்பவில்லை. கிளின்டனுக்கு  இரங்கும் மனம் ராகவனுக்கு இரங்கவில்லை. இப்படி ஏடாகூடமாக நான் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது என்று அப்போது யோசித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • BJPயின் வாக்கு வங்கி, பாமக வுடன் சேர்ந்து  18% ஆக வளர்ந்து வருவது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. அதிமுகவின் வாக்கு வங்கி இப்பிடி குறைந்து கொண்டு போவதும் நல்லதல்ல. சீமான் வேறு யாருடனும் கூட்டு சேராமல் வாக்கு வங்கியை வளர்க்கமுடியாது, ஏதாவது ஒரு பதவியில் இருந்து கொண்டு, மக்களிடம் நிரூபிக்காவிட்டால், இப்பிடியே 5 தொடக்கம் 8 சதவீதம் வரையில், அவரின் தீவிர ஆதரவாளர்களின் அளவின் வரைக்கும் வாக்கு வங்கி இருக்கும். 
    • பிடிச்ச பொலிஸ்காரர் நிஷான் துரையப்பாவாம்! மெய்யே?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.