Jump to content

ஒலகத்துல நடக்காததையா கே.டி.ராகவன் செஞ்சாரு?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

வந்தாரு…ஒரு ஒண்ரை நிமிசம், படம் நல்லா போகுதா, படம் எடுக்க வந்ததுக்கு நன்றி அப்டீன்னாரு. கிளம்பிட்டாரு. 

அண்ணே ஒரு போட்டோ எடுக்கவான்னு…கேட்டேன்.

இவன் ரொம்ப நல்லவண்டா…எடுத்துக்கட்டும்னு அவர் பாடிகாட்ஸ்கிட்ட சொன்னாரு.

இதுதான் பொன்ராசு நடந்தது. 

இங்குதான் நீங்கள் மூக்கடிபட்டு போகின்றீர்கள்.
 

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

இங்குதான் நீங்கள் மூக்கடிபட்டு போகின்றீர்கள்.
 

அப்படி நினைப்பது உங்களுக்கு மன் அமைதியை தரும் என்றால் நான் அதை ஏன் குலைப்பான்😎.

பிகு

சீமான் - தலைவர் சந்திப்பு பற்றி நான் முன்னரும் அதிகம் எழுதுதியதில்லை.

அதை விடுத்து, சீமானை பற்றி கதைக்க எனக்கு பல விசயங்கள் இருப்பதால்.

மேலும் இந்த நிகழ்வு பற்றி எதிரும் புதிருமாக அந்த நேரம் வன்னியில் இருந்தோரே கூறுவதால் - இதில் நான் மினக்கெடுவதில்லை.

மேலே எழுதியது நகைசுவையாக எழுதியது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

அப்படி நினைப்பது உங்களுக்கு மன் அமைதியை தரும் என்றால் நான் அதை ஏன் குலைப்பான்😎.

பிகு

சீமான் - தலைவர் சந்திப்பு பற்றி நான் முன்னரும் அதிகம் எழுதுதியதில்லை.

அதை விடுத்து, சீமானை பற்றி கதைக்க எனக்கு பல விசயங்கள் இருப்பதால்.

மேலும் இந்த நிகழ்வு பற்றி எதிரும் புதிருமாக அந்த நேரம் வன்னியில் இருந்தோரே கூறுவதால் - இதில் நான் மினக்கெடுவதில்லை.

மேலே எழுதியது நகைசுவையாக எழுதியது

தலைவர் தன்னை சந்திக்க வந்தவர்களிடம் ஒரு நிமிடம் மட்டும் ஒதுக்கியிருப்பார் என நீங்கள் கருதி எழுதியது தலைவரையே அவமதிக்கும் செயல்.

 தலைவர்  எதிரிகளை கூட உபசரித்து அனுப்பிய வரலாறுகள் தான் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

தலைவர் தன்னை சந்திக்க வந்தவர்களிடம் ஒரு நிமிடம் மட்டும் ஒதுக்கியிருப்பார் என நீங்கள் கருதி எழுதியது தலைவரையே அவமதிக்கும் செயல்.

 தலைவர்  எதிரிகளை கூட உபசரித்து அனுப்பிய வரலாறுகள் தான் உண்டு.

அவரின் உபசரிப்பு உலக பிரசித்தமானது.

ஆனால் அவர்களின் உபசரிப்பு வேறு, தலைவருடன் நேரம் செலவிடுவது என்பது வேறு.

அவர் எல்லாருடனும் மணிகணக்கில் உரையாடும் நிலையில் இருக்கவில்லை.

எனக்கு தெரிந்தவர்கள் சிலர் கூட அவர்கள் உபசரிப்பில் வன்னியில் வாரக் கணக்கில் இருந்து வேலை செய்து, ஓரிரு நிமிடங்கள் அவருடன் பேச கிடைத்தவர்கள் உள்ளார்கள். 

இதை யாரும் குறையாக கருதவில்லை.

ஏனென்றால் எல்லாருக்குமே அவரின் ஒவ்வொரு நிமிடத்தின் பெறுமதியும் தெரிந்திருந்தது.

ஆகவே இதில் அவமரியாதை ஏதும் இல்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தலைப்புக்கு சம்பந்தமில்லாதது, ஆனால் - 

சீமான் தலைவரை சந்திக்க போனாரா? அல்லது படம் எடுக்க போன இடத்தில் சான்சாச சந்தித்தாரா என்பதே விவாதத்துக்குரிய விசயம்.

தலைவர் ஒருவரை சந்திப்பது, எவ்வளவு நேரம் அவருடன் செலவிடுவது என்பதெல்லாம் போராட்டத்துக்கு அந்த நபர்கள் செய்த செயல்களின் கனதியில் தங்கியுள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, valavan said:

எமக்கு ஒருவரை பிடிக்கும் என்பதற்காக அவர் செய்வது எல்லாவற்றையும் நாம் நியாயபடுத்தகூடாது, அது சீமான் ஆனாலும் சரி ராகவன் ஆனாலும் சரி. அதுவெறும் பச்சோந்திதன  அரசியல் மற்றும், ஆதரவு என்றாகிவிடும்.

மிக நியாயமான கருத்து. நியாயமான கேள்விகள் 👍
இப்போ பிஜேபி பிரமுகருக்காக குரல் கொடுத்த சீமான் சிலநாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் தனது Rollsroyce  காருக்கு வரி கட்டாமல் இருப்பதற்கு கேட்டதற்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

சீமான் அந்நியன் வாய்சில் : சாதியை வைத்துத்தான் நீ தமிழனா இல்லையா என அடையாளம் காண்போம்.

இந்த கருத்து தவறென்று நினைக்கிறேன். தீவிர தமிழ்த்தேசியர்கள் சிலரும் பாரிசாலனும் தான் இதை பேசுகின்றனர். சாதி/குடிப்பெயர் (தமிழ்நாட்டில் ஏலவே உள்ளது. இட ஒதுக்கீட்டிற்கு சாதிச்சான்றிதழ் தேவை) மூலமாகவே தாய்மொழியை அடையாளம் காணமட்டும் பாவிக்க வலியுறுத்துகிறார்கள். மொழிவழி இட ஒதுக்கீட்டிற்கு தாய்மொழியை மறைப்பவர்களால் பாதிப்பு ஏற்படும்.

Link to comment
Share on other sites

On 31/8/2021 at 01:56, தமிழ் சிறி said:

 

கே.டி.ராகவனின் காணொளி குறித்த...  சீமானின் கருத்தும், அதன் பின் நடந்த அரசியலும். 

 

அது வேற வாய் இது நாற வாய்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

தலைவர் தன்னை சந்திக்க வந்தவர்களிடம் ஒரு நிமிடம் மட்டும் ஒதுக்கியிருப்பார் என நீங்கள் கருதி எழுதியது தலைவரையே அவமதிக்கும் செயல்.

 தலைவர்  எதிரிகளை கூட உபசரித்து அனுப்பிய வரலாறுகள் தான் உண்டு.

எம் இன‌த்தை அழித்த‌ காங்கிர‌ஸ்
எம் பெண் போராளிக‌ளை உடுப்பில்லாம‌ காணொளி எடுத்து வெளியிடும் போது , இந்த‌ காங்கிர‌ஸ் சில்ல‌ரைக‌ள் அதை பார்த்து ர‌சித்த‌வ‌ர்க‌ள்.............ராக‌வ‌ன் விடைய‌த்தில் பெரிய‌ அர‌சிய‌ல் சூழ்ச்சி ந‌ட‌க்குது தாத்தா............காங்கிர‌ஸ் பெண் ஓவ‌ரா குரைக்கும் போதே தெரியுது இது பக்கா அர‌சிய‌ல் என்று.............இவை உண்மையும் நேர்மையுமாய் பெண்க‌ளுக்கு ந‌ட‌க்கு அநீட்கிக்கு குர‌ல் கொடுப்ப‌வ‌ர்க‌ளாய் இருந்தா த‌மிழ் நாட்டில் ந‌ட‌ந்த‌ ப‌ல‌ அசிங்க‌மான‌ செய‌ல்க‌ளுக்கு எல்லாம் இவை பொங்கி எழுந்து இருக்க‌ வேணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, valavan said:

அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கேடி ராகவன் விசயத்தில் மேலே சொன்னதோடு நிறுத்திக்கொண்டால் சீமானை குறிவைத்து எவரும் எதுவும் பேசியிருக்க வாய்ப்பேயில்லை.

அதைவிடுத்து ....

இப்படி எல்லாம் பேசியிருந்தால் சீமான் கேடி ராகவனுக்கு வக்காலத்து வாங்குகிறார் என யார்தான் நினைக்கமாட்டார்கள்? 

கேடி ராகவன் பற்றிய கேள்விக்கு நாட்ல எவ்வளவு பிரச்சனையிருக்கு அதைபோய் பாருங்க என்று சொல்லி அந்த கேள்வியை தவிர்த்திருந்தால் இனமான போராளி என்று தன்னாலும் தனது ஆதரவாளர்களாலும் அடையாளபடுத்தும் சீமானுக்கு அழகூட்டியிருக்கும்.

உலகத்தில் பலகோடிபேர் இதை செய்து கொண்டிருக்கிறார்கள்தான், தனிப்பட்டவர்கள் இப்படி நடந்துகொண்டால் சபையேற்றி எவனும் இதுபற்றிகேட்கபோவதில்லை.

ஆனால் மக்கள் பிரதிநிதியென்று தம்மை சொல்லி கொள்பவர்கள் தனியொழுக்கமின்றி தனியறையில் இருந்து செயற்பட்டால்கூட அது சர்வதேச அளவில் சர்ச்சைக்குரியதாகும், அதற்கு பில்கிளிண்டன்டலிருந்து கேடி ராகவன்வரை விதிவிலக்கல்ல, 

நான் சீமான் கட்சியின் ஆதரவாளன் இல்லை, அதேநேரம் சீமான் செய்யும் அரசியலை வேண்டாம் என்று சொல்பவனும் இல்லை. ஆனால் ராகவன் சார்ந்த கட்சிக்காரர்களே அவர் செயலை நியாயபடுத்தாத ஒரு நிலையில் சக அரசியல்வாதி செய்த தவறை எப்படியெல்லாம் நியாயபடுத்துகிறார் சீமான், சமூகத்தைகூட கேடுகெட்ட சமூகம் என்கிறார், எய்தவனை விடு அம்பை கைது செய் என்று முழங்குகிறார், இது எந்தவகை இனமான அரசியல்? 

சட்டசபையில் ஆபாச படம் பார்க்கவில்லையா என்று கேட்கிறார், அவர்கள் பார்த்தது தப்பு என்று சொல்லபடவில்லையா? சபை ஒழுங்குவிதிமுறைபடி அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கபடவில்லையா?  அப்போ யாராவது சட்டசபை கமெராமேன் மேலதான் தப்பு என்று கொதித்தார்களா?

தனி அறையானாலும் சட்டசபை ஆனாலும் ஒழுக்கம் தவறும் மக்கள் பிரதிநிதிகள் விமர்சனத்திற்குள்ளாவார்கள்.

நீங்கள் கேட்டதையே திருப்பி உங்களை பலர் கேட்பார்கள், நாட்டில் எவ்வளவோ பிரச்சனையிருக்க ராகவனை படம் பிடித்தவனை கைது செய்,கேடுகெட்ட சமூகம் என்று எதற்கு இந்த பிரச்சனையை தலையில் தூக்கி வைக்கிறீர்கள்?

எமக்கு ஒருவரை பிடிக்கும் என்பதற்காக அவர் செய்வது எல்லாவற்றையும் நாம் நியாயபடுத்தகூடாது, அது சீமான் ஆனாலும் சரி ராகவன் ஆனாலும் சரி. அதுவெறும் பச்சோந்திதன  அரசியல் மற்றும், ஆதரவு என்றாகிவிடும்.

த‌மிழ‌க‌த்தில் மிஞ்சி போனால் ராக‌வ‌னின் காணொளி செய்தியை மிஞ்சி போனால் இர‌ண்டு கிழ‌மை க‌தைப்பின‌ம் அத‌ற்க்கு பிற‌க்கு இதுவும் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளை போல் க‌ட‌ந்து போகும்

எதெல்லாம் தேர்த‌ல் நேர‌ம் அற‌வே  எதிர்ரொலிக்காது கொஞ்ச‌ நாளுக்கு சும்மா குரைச்சு போட்டு குப்பிற‌ ப‌டுக்க‌ ச‌ரி  😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

இந்த கருத்து தவறென்று நினைக்கிறேன். தீவிர தமிழ்த்தேசியர்கள் சிலரும் பாரிசாலனும் தான் இதை பேசுகின்றனர். சாதி/குடிப்பெயர் (தமிழ்நாட்டில் ஏலவே உள்ளது. இட ஒதுக்கீட்டிற்கு சாதிச்சான்றிதழ் தேவை) மூலமாகவே தாய்மொழியை அடையாளம் காணமட்டும் பாவிக்க வலியுறுத்துகிறார்கள். மொழிவழி இட ஒதுக்கீட்டிற்கு தாய்மொழியை மறைப்பவர்களால் பாதிப்பு ஏற்படும்.

பாரிக்கும் சீமானுக்கு இடையான வித்தியாசம் “மீசை வச்சா, மீசை எடுத்தா” உள்ள வித்தியாசம் என்பதை முன்னர் சில திரிகளில் எழுதியுள்ளேன்.

கொழும்பு போகவேண்டிய திரி, ஏற்கனவே ஹபரணை ரோடில் இறங்கிவிட்டது போல் தெரிவதால் இத்தோடு முடிக்கிறேன். 

இன்னொரு திரி வராமலா போகும்🤪.

2 hours ago, zuma said:

 

அது வேற வாய் இது நாற வாய்

 

 

🤦

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

பாரிக்கும் சீமானுக்கு இடையான வித்தியாசம் “மீசை வச்சா, மீசை எடுத்தா” உள்ள வித்தியாசம் என்பதை முன்னர் சில திரிகளில் எழுதியுள்ளேன்.

கொழும்பு போகவேண்டிய திரி, ஏற்கனவே ஹபரணை ரோடில் இறங்கிவிட்டது போல் தெரிவதால் இத்தோடு முடிக்கிறேன். 

இன்னொரு திரி வராமலா போகும்🤪.

🤦

கோ ஆசானே இந்த வித்தியாசம் புரியுது😜. தீவிர/தூய தமிழ்த்தேசியர்களை சீமான் கட்சிக்காறரே குடிதேஷ் கோமாளிகள் என்று கேலி செய்கிறார்கள்.

மொழிவாரிப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த குடிப்பெயரை அறிதல் அவசியம். அதைப்பிடிச்சு தொங்கிக் கொண்டிருக்க வேண்டாம். திராவிடம் தமிழ்நாட்டில் சாதியை ஒளித்தது போல என்று தோன்றத்தானே செய்யும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

கோ ஆசானே இந்த வித்தியாசம் புரியுது😜. தீவிர/தூய தமிழ்த்தேசியர்களை சீமான் கட்சிக்காறரே குடிதேஷ் கோமாளிகள் என்று கேலி செய்கிறார்கள்.

மொழிவாரிப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த குடிப்பெயரை அறிதல் அவசியம். அதைப்பிடிச்சு தொங்கிக் கொண்டிருக்க வேண்டாம். திராவிடம் தமிழ்நாட்டில் சாதியை ஒளித்தது போல என்று தோன்றத்தானே செய்யும்.

சாதி சான்றிதழ் என்பது ஒரு necessary evil என்பதை நானும் ஏற்று கொள்கிறேன்.

கொரோனாவை போல், சாதியையும் ஒழிக்க (eradicate) முடியாது ஆனால் சாதியால் தாழ்த்தபட்டவர்களை இட ஒதுக்கீடு மூலம் கைதூக்கி விடலாம். தமிழ்நாட்டில் இருக்கும் இட ஒதுக்கீடு நடைமுறைகளை  ஏனைய மாநிலங்களோடு ஒப்பிட்டால் - திராவிட சித்தாந்தம் இந்த பரப்பில் என்ன சாதித்தது என்பது புரியும். இதை நெருங்கி வரகூடியவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுமே.

சரி இனி விடயத்துக்கு வருவோம்.

தமிழ்நாட்டில் யார் தமிழர்? என்பதற்கு இரெண்டு வரைமுறைதான் இருக்க முடியும்.

1. மொழிவாரி பிரிவினையின் போது தமிழ்நாட்டில் நிரந்தரமாக வாழ்ந்தோரும் அவர்தம் சந்ததிகளும்.

2. Ethnicity (சரியான தமிழ் பதம் தெரியவில்லை, இனத்தூய்மை?) அடிப்படையில் தமிழர் என அடையாளம் காணப்படுவோர்.

இரெண்டாம் பகுப்பை சாதியை தவிர வேறு ஒன்றை வைத்து தீர்மானிக்க முடியாது.

அதாவது தமிழ்நாட்டில் ethnic-Tamil யார் என்பதை தீர்மானிக்கும் ஒரே வழி யார் என்ன சாதி என பார்த்து, இன்ன இன்ன சாதியினர் தமிழர் என சொல்வது மட்டுமே.

அதிலும் கலப்பு திருமணம், சாதி மறுப்பு திருமணம் செய்தோர், அவர்தம் சந்ததிகள் தமிழரா? என்பது இன்னொரு சிக்கல்.

 நடிகர் விஜை - ஒரு மலையாளிக்கும், தமிழருக்கும் பிறந்த பிள்ளை. சீமானே அவரை தமிழர் என்கிறார், ஆனால் அவர் பாதி மலையாளி. 

ஆகவே, யாரை தமிழர் என எப்படி அடையாளம் காண்பீர்கள்?

என்பது மிக நியாயமான கேள்வி.

இந்த கேள்விக்கு, தமிழன் என்று சொன்னால் யாருக்கு கோவம் வருகிறதோ அவன் தமிழன் இல்லை என்பது மேடை பேச்சுக்கு நல்லா இருக்கும் ஆனால் சரியான பதில் அல்ல.

இந்த அடிப்படை கேள்விக்கு பதில் சொல்லாமல் நாதக நழுவுகிறது. 

ஆனால் பாரிசாலன் நேர்மையாக, தமிழ் சாதியில் பிறந்தவர் மட்டுமே தமிழர் என்கிறார்.

இதுதான் மீசை எடுத்தல், வைத்தல் வித்தியாசம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.