Jump to content

ஒலகத்துல நடக்காததையா கே.டி.ராகவன் செஞ்சாரு?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

வந்தாரு…ஒரு ஒண்ரை நிமிசம், படம் நல்லா போகுதா, படம் எடுக்க வந்ததுக்கு நன்றி அப்டீன்னாரு. கிளம்பிட்டாரு. 

அண்ணே ஒரு போட்டோ எடுக்கவான்னு…கேட்டேன்.

இவன் ரொம்ப நல்லவண்டா…எடுத்துக்கட்டும்னு அவர் பாடிகாட்ஸ்கிட்ட சொன்னாரு.

இதுதான் பொன்ராசு நடந்தது. 

இங்குதான் நீங்கள் மூக்கடிபட்டு போகின்றீர்கள்.
 

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

இங்குதான் நீங்கள் மூக்கடிபட்டு போகின்றீர்கள்.
 

அப்படி நினைப்பது உங்களுக்கு மன் அமைதியை தரும் என்றால் நான் அதை ஏன் குலைப்பான்😎.

பிகு

சீமான் - தலைவர் சந்திப்பு பற்றி நான் முன்னரும் அதிகம் எழுதுதியதில்லை.

அதை விடுத்து, சீமானை பற்றி கதைக்க எனக்கு பல விசயங்கள் இருப்பதால்.

மேலும் இந்த நிகழ்வு பற்றி எதிரும் புதிருமாக அந்த நேரம் வன்னியில் இருந்தோரே கூறுவதால் - இதில் நான் மினக்கெடுவதில்லை.

மேலே எழுதியது நகைசுவையாக எழுதியது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

அப்படி நினைப்பது உங்களுக்கு மன் அமைதியை தரும் என்றால் நான் அதை ஏன் குலைப்பான்😎.

பிகு

சீமான் - தலைவர் சந்திப்பு பற்றி நான் முன்னரும் அதிகம் எழுதுதியதில்லை.

அதை விடுத்து, சீமானை பற்றி கதைக்க எனக்கு பல விசயங்கள் இருப்பதால்.

மேலும் இந்த நிகழ்வு பற்றி எதிரும் புதிருமாக அந்த நேரம் வன்னியில் இருந்தோரே கூறுவதால் - இதில் நான் மினக்கெடுவதில்லை.

மேலே எழுதியது நகைசுவையாக எழுதியது

தலைவர் தன்னை சந்திக்க வந்தவர்களிடம் ஒரு நிமிடம் மட்டும் ஒதுக்கியிருப்பார் என நீங்கள் கருதி எழுதியது தலைவரையே அவமதிக்கும் செயல்.

 தலைவர்  எதிரிகளை கூட உபசரித்து அனுப்பிய வரலாறுகள் தான் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

தலைவர் தன்னை சந்திக்க வந்தவர்களிடம் ஒரு நிமிடம் மட்டும் ஒதுக்கியிருப்பார் என நீங்கள் கருதி எழுதியது தலைவரையே அவமதிக்கும் செயல்.

 தலைவர்  எதிரிகளை கூட உபசரித்து அனுப்பிய வரலாறுகள் தான் உண்டு.

அவரின் உபசரிப்பு உலக பிரசித்தமானது.

ஆனால் அவர்களின் உபசரிப்பு வேறு, தலைவருடன் நேரம் செலவிடுவது என்பது வேறு.

அவர் எல்லாருடனும் மணிகணக்கில் உரையாடும் நிலையில் இருக்கவில்லை.

எனக்கு தெரிந்தவர்கள் சிலர் கூட அவர்கள் உபசரிப்பில் வன்னியில் வாரக் கணக்கில் இருந்து வேலை செய்து, ஓரிரு நிமிடங்கள் அவருடன் பேச கிடைத்தவர்கள் உள்ளார்கள். 

இதை யாரும் குறையாக கருதவில்லை.

ஏனென்றால் எல்லாருக்குமே அவரின் ஒவ்வொரு நிமிடத்தின் பெறுமதியும் தெரிந்திருந்தது.

ஆகவே இதில் அவமரியாதை ஏதும் இல்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தலைப்புக்கு சம்பந்தமில்லாதது, ஆனால் - 

சீமான் தலைவரை சந்திக்க போனாரா? அல்லது படம் எடுக்க போன இடத்தில் சான்சாச சந்தித்தாரா என்பதே விவாதத்துக்குரிய விசயம்.

தலைவர் ஒருவரை சந்திப்பது, எவ்வளவு நேரம் அவருடன் செலவிடுவது என்பதெல்லாம் போராட்டத்துக்கு அந்த நபர்கள் செய்த செயல்களின் கனதியில் தங்கியுள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, valavan said:

எமக்கு ஒருவரை பிடிக்கும் என்பதற்காக அவர் செய்வது எல்லாவற்றையும் நாம் நியாயபடுத்தகூடாது, அது சீமான் ஆனாலும் சரி ராகவன் ஆனாலும் சரி. அதுவெறும் பச்சோந்திதன  அரசியல் மற்றும், ஆதரவு என்றாகிவிடும்.

மிக நியாயமான கருத்து. நியாயமான கேள்விகள் 👍
இப்போ பிஜேபி பிரமுகருக்காக குரல் கொடுத்த சீமான் சிலநாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் தனது Rollsroyce  காருக்கு வரி கட்டாமல் இருப்பதற்கு கேட்டதற்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

சீமான் அந்நியன் வாய்சில் : சாதியை வைத்துத்தான் நீ தமிழனா இல்லையா என அடையாளம் காண்போம்.

இந்த கருத்து தவறென்று நினைக்கிறேன். தீவிர தமிழ்த்தேசியர்கள் சிலரும் பாரிசாலனும் தான் இதை பேசுகின்றனர். சாதி/குடிப்பெயர் (தமிழ்நாட்டில் ஏலவே உள்ளது. இட ஒதுக்கீட்டிற்கு சாதிச்சான்றிதழ் தேவை) மூலமாகவே தாய்மொழியை அடையாளம் காணமட்டும் பாவிக்க வலியுறுத்துகிறார்கள். மொழிவழி இட ஒதுக்கீட்டிற்கு தாய்மொழியை மறைப்பவர்களால் பாதிப்பு ஏற்படும்.

Link to comment
Share on other sites

On 31/8/2021 at 01:56, தமிழ் சிறி said:

 

கே.டி.ராகவனின் காணொளி குறித்த...  சீமானின் கருத்தும், அதன் பின் நடந்த அரசியலும். 

 

அது வேற வாய் இது நாற வாய்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

தலைவர் தன்னை சந்திக்க வந்தவர்களிடம் ஒரு நிமிடம் மட்டும் ஒதுக்கியிருப்பார் என நீங்கள் கருதி எழுதியது தலைவரையே அவமதிக்கும் செயல்.

 தலைவர்  எதிரிகளை கூட உபசரித்து அனுப்பிய வரலாறுகள் தான் உண்டு.

எம் இன‌த்தை அழித்த‌ காங்கிர‌ஸ்
எம் பெண் போராளிக‌ளை உடுப்பில்லாம‌ காணொளி எடுத்து வெளியிடும் போது , இந்த‌ காங்கிர‌ஸ் சில்ல‌ரைக‌ள் அதை பார்த்து ர‌சித்த‌வ‌ர்க‌ள்.............ராக‌வ‌ன் விடைய‌த்தில் பெரிய‌ அர‌சிய‌ல் சூழ்ச்சி ந‌ட‌க்குது தாத்தா............காங்கிர‌ஸ் பெண் ஓவ‌ரா குரைக்கும் போதே தெரியுது இது பக்கா அர‌சிய‌ல் என்று.............இவை உண்மையும் நேர்மையுமாய் பெண்க‌ளுக்கு ந‌ட‌க்கு அநீட்கிக்கு குர‌ல் கொடுப்ப‌வ‌ர்க‌ளாய் இருந்தா த‌மிழ் நாட்டில் ந‌ட‌ந்த‌ ப‌ல‌ அசிங்க‌மான‌ செய‌ல்க‌ளுக்கு எல்லாம் இவை பொங்கி எழுந்து இருக்க‌ வேணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, valavan said:

அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கேடி ராகவன் விசயத்தில் மேலே சொன்னதோடு நிறுத்திக்கொண்டால் சீமானை குறிவைத்து எவரும் எதுவும் பேசியிருக்க வாய்ப்பேயில்லை.

அதைவிடுத்து ....

இப்படி எல்லாம் பேசியிருந்தால் சீமான் கேடி ராகவனுக்கு வக்காலத்து வாங்குகிறார் என யார்தான் நினைக்கமாட்டார்கள்? 

கேடி ராகவன் பற்றிய கேள்விக்கு நாட்ல எவ்வளவு பிரச்சனையிருக்கு அதைபோய் பாருங்க என்று சொல்லி அந்த கேள்வியை தவிர்த்திருந்தால் இனமான போராளி என்று தன்னாலும் தனது ஆதரவாளர்களாலும் அடையாளபடுத்தும் சீமானுக்கு அழகூட்டியிருக்கும்.

உலகத்தில் பலகோடிபேர் இதை செய்து கொண்டிருக்கிறார்கள்தான், தனிப்பட்டவர்கள் இப்படி நடந்துகொண்டால் சபையேற்றி எவனும் இதுபற்றிகேட்கபோவதில்லை.

ஆனால் மக்கள் பிரதிநிதியென்று தம்மை சொல்லி கொள்பவர்கள் தனியொழுக்கமின்றி தனியறையில் இருந்து செயற்பட்டால்கூட அது சர்வதேச அளவில் சர்ச்சைக்குரியதாகும், அதற்கு பில்கிளிண்டன்டலிருந்து கேடி ராகவன்வரை விதிவிலக்கல்ல, 

நான் சீமான் கட்சியின் ஆதரவாளன் இல்லை, அதேநேரம் சீமான் செய்யும் அரசியலை வேண்டாம் என்று சொல்பவனும் இல்லை. ஆனால் ராகவன் சார்ந்த கட்சிக்காரர்களே அவர் செயலை நியாயபடுத்தாத ஒரு நிலையில் சக அரசியல்வாதி செய்த தவறை எப்படியெல்லாம் நியாயபடுத்துகிறார் சீமான், சமூகத்தைகூட கேடுகெட்ட சமூகம் என்கிறார், எய்தவனை விடு அம்பை கைது செய் என்று முழங்குகிறார், இது எந்தவகை இனமான அரசியல்? 

சட்டசபையில் ஆபாச படம் பார்க்கவில்லையா என்று கேட்கிறார், அவர்கள் பார்த்தது தப்பு என்று சொல்லபடவில்லையா? சபை ஒழுங்குவிதிமுறைபடி அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கபடவில்லையா?  அப்போ யாராவது சட்டசபை கமெராமேன் மேலதான் தப்பு என்று கொதித்தார்களா?

தனி அறையானாலும் சட்டசபை ஆனாலும் ஒழுக்கம் தவறும் மக்கள் பிரதிநிதிகள் விமர்சனத்திற்குள்ளாவார்கள்.

நீங்கள் கேட்டதையே திருப்பி உங்களை பலர் கேட்பார்கள், நாட்டில் எவ்வளவோ பிரச்சனையிருக்க ராகவனை படம் பிடித்தவனை கைது செய்,கேடுகெட்ட சமூகம் என்று எதற்கு இந்த பிரச்சனையை தலையில் தூக்கி வைக்கிறீர்கள்?

எமக்கு ஒருவரை பிடிக்கும் என்பதற்காக அவர் செய்வது எல்லாவற்றையும் நாம் நியாயபடுத்தகூடாது, அது சீமான் ஆனாலும் சரி ராகவன் ஆனாலும் சரி. அதுவெறும் பச்சோந்திதன  அரசியல் மற்றும், ஆதரவு என்றாகிவிடும்.

த‌மிழ‌க‌த்தில் மிஞ்சி போனால் ராக‌வ‌னின் காணொளி செய்தியை மிஞ்சி போனால் இர‌ண்டு கிழ‌மை க‌தைப்பின‌ம் அத‌ற்க்கு பிற‌க்கு இதுவும் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளை போல் க‌ட‌ந்து போகும்

எதெல்லாம் தேர்த‌ல் நேர‌ம் அற‌வே  எதிர்ரொலிக்காது கொஞ்ச‌ நாளுக்கு சும்மா குரைச்சு போட்டு குப்பிற‌ ப‌டுக்க‌ ச‌ரி  😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

இந்த கருத்து தவறென்று நினைக்கிறேன். தீவிர தமிழ்த்தேசியர்கள் சிலரும் பாரிசாலனும் தான் இதை பேசுகின்றனர். சாதி/குடிப்பெயர் (தமிழ்நாட்டில் ஏலவே உள்ளது. இட ஒதுக்கீட்டிற்கு சாதிச்சான்றிதழ் தேவை) மூலமாகவே தாய்மொழியை அடையாளம் காணமட்டும் பாவிக்க வலியுறுத்துகிறார்கள். மொழிவழி இட ஒதுக்கீட்டிற்கு தாய்மொழியை மறைப்பவர்களால் பாதிப்பு ஏற்படும்.

பாரிக்கும் சீமானுக்கு இடையான வித்தியாசம் “மீசை வச்சா, மீசை எடுத்தா” உள்ள வித்தியாசம் என்பதை முன்னர் சில திரிகளில் எழுதியுள்ளேன்.

கொழும்பு போகவேண்டிய திரி, ஏற்கனவே ஹபரணை ரோடில் இறங்கிவிட்டது போல் தெரிவதால் இத்தோடு முடிக்கிறேன். 

இன்னொரு திரி வராமலா போகும்🤪.

2 hours ago, zuma said:

 

அது வேற வாய் இது நாற வாய்

 

 

🤦

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

பாரிக்கும் சீமானுக்கு இடையான வித்தியாசம் “மீசை வச்சா, மீசை எடுத்தா” உள்ள வித்தியாசம் என்பதை முன்னர் சில திரிகளில் எழுதியுள்ளேன்.

கொழும்பு போகவேண்டிய திரி, ஏற்கனவே ஹபரணை ரோடில் இறங்கிவிட்டது போல் தெரிவதால் இத்தோடு முடிக்கிறேன். 

இன்னொரு திரி வராமலா போகும்🤪.

🤦

கோ ஆசானே இந்த வித்தியாசம் புரியுது😜. தீவிர/தூய தமிழ்த்தேசியர்களை சீமான் கட்சிக்காறரே குடிதேஷ் கோமாளிகள் என்று கேலி செய்கிறார்கள்.

மொழிவாரிப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த குடிப்பெயரை அறிதல் அவசியம். அதைப்பிடிச்சு தொங்கிக் கொண்டிருக்க வேண்டாம். திராவிடம் தமிழ்நாட்டில் சாதியை ஒளித்தது போல என்று தோன்றத்தானே செய்யும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

கோ ஆசானே இந்த வித்தியாசம் புரியுது😜. தீவிர/தூய தமிழ்த்தேசியர்களை சீமான் கட்சிக்காறரே குடிதேஷ் கோமாளிகள் என்று கேலி செய்கிறார்கள்.

மொழிவாரிப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த குடிப்பெயரை அறிதல் அவசியம். அதைப்பிடிச்சு தொங்கிக் கொண்டிருக்க வேண்டாம். திராவிடம் தமிழ்நாட்டில் சாதியை ஒளித்தது போல என்று தோன்றத்தானே செய்யும்.

சாதி சான்றிதழ் என்பது ஒரு necessary evil என்பதை நானும் ஏற்று கொள்கிறேன்.

கொரோனாவை போல், சாதியையும் ஒழிக்க (eradicate) முடியாது ஆனால் சாதியால் தாழ்த்தபட்டவர்களை இட ஒதுக்கீடு மூலம் கைதூக்கி விடலாம். தமிழ்நாட்டில் இருக்கும் இட ஒதுக்கீடு நடைமுறைகளை  ஏனைய மாநிலங்களோடு ஒப்பிட்டால் - திராவிட சித்தாந்தம் இந்த பரப்பில் என்ன சாதித்தது என்பது புரியும். இதை நெருங்கி வரகூடியவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுமே.

சரி இனி விடயத்துக்கு வருவோம்.

தமிழ்நாட்டில் யார் தமிழர்? என்பதற்கு இரெண்டு வரைமுறைதான் இருக்க முடியும்.

1. மொழிவாரி பிரிவினையின் போது தமிழ்நாட்டில் நிரந்தரமாக வாழ்ந்தோரும் அவர்தம் சந்ததிகளும்.

2. Ethnicity (சரியான தமிழ் பதம் தெரியவில்லை, இனத்தூய்மை?) அடிப்படையில் தமிழர் என அடையாளம் காணப்படுவோர்.

இரெண்டாம் பகுப்பை சாதியை தவிர வேறு ஒன்றை வைத்து தீர்மானிக்க முடியாது.

அதாவது தமிழ்நாட்டில் ethnic-Tamil யார் என்பதை தீர்மானிக்கும் ஒரே வழி யார் என்ன சாதி என பார்த்து, இன்ன இன்ன சாதியினர் தமிழர் என சொல்வது மட்டுமே.

அதிலும் கலப்பு திருமணம், சாதி மறுப்பு திருமணம் செய்தோர், அவர்தம் சந்ததிகள் தமிழரா? என்பது இன்னொரு சிக்கல்.

 நடிகர் விஜை - ஒரு மலையாளிக்கும், தமிழருக்கும் பிறந்த பிள்ளை. சீமானே அவரை தமிழர் என்கிறார், ஆனால் அவர் பாதி மலையாளி. 

ஆகவே, யாரை தமிழர் என எப்படி அடையாளம் காண்பீர்கள்?

என்பது மிக நியாயமான கேள்வி.

இந்த கேள்விக்கு, தமிழன் என்று சொன்னால் யாருக்கு கோவம் வருகிறதோ அவன் தமிழன் இல்லை என்பது மேடை பேச்சுக்கு நல்லா இருக்கும் ஆனால் சரியான பதில் அல்ல.

இந்த அடிப்படை கேள்விக்கு பதில் சொல்லாமல் நாதக நழுவுகிறது. 

ஆனால் பாரிசாலன் நேர்மையாக, தமிழ் சாதியில் பிறந்தவர் மட்டுமே தமிழர் என்கிறார்.

இதுதான் மீசை எடுத்தல், வைத்தல் வித்தியாசம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
    • மீண்டும் மீண்டும் இந்த 5% வந்து கிலியைக் கிளப்புகிறதே😂?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.