Jump to content

தமிழர்களின் பெயரில் விடுதலைப் புலிகளின் செயலால் வெட்கி தலை குனிகிறேன்! சுமந்திரன் பகிரங்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் மக்களை வடக்கிலே இருந்து வெளியேற்றியது இனசுத்திகரிப்பு என்றே நான் கருதுகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இனசுத்திகரிப்பையிட்டு வெட்கி தலை குனிகிறேன் என்று சொன்னது ஏன், அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம் மக்களை வடக்கிலே இருந்து வெளியேற்றியது இனசுத்திகரிப்பு என்றே நான் கருதுகிறேன். நான் இப்படி சொன்னதற்கான காரணம் அது இனசுத்திகரிப்பு. விசேடமாக தமிழ் மக்கள் மீது நடந்தது இனப்படுகொலை என்று நாங்கள் சொல்கிறோம்.

இனப்படுகொலையை சரியான ஆதாரங்களோடு நிரூபிக்க வேண்டும் என பல தடவைகள் நான் சொல்லியிருக்கிறேன். அதையும் திரிபுபடுத்தி இனப்படுகொலை நடக்கவில்லையென நான் சொல்வதாக தெரிவிக்கிறார்கள்.

அப்படியல்ல இனப்படுகொலை நடந்தது. ஆனால் அது நிரூபிப்பதற்கு மிகவும் கடினமான சர்வதேச குற்றம்.

இனப்படுகொலை நடந்ததென சொல்லி சர்வதேசத்தை ஏற்றுக் கொள்ள வைக்க முனைகின்ற நாங்கள் இனசுத்திகரிப்பு நடந்தது என்பதை மறுத்தால் சர்வதேசம் ஒருபோதும் எங்களை ஏற்றுக் கொள்ளாது.

இனசுத்திகரிப்பு நடந்தது என்பது வெளிப்படையாக தெரிகின்ற ஒரு விடயம். நான் இன்னொரு உதாரணத்தையும் கூறுகிறேன்.

2007ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த போது திடீரென ஒரு நாள் அதிகாலையில் கொழும்பில் விடுதிகளில் தங்கியிருக்கின்ற தமிழர்களை வெளியேற்றுமாறு ஒரு பணிப்புரையை வழங்கி பேருந்துகளிலே எல்லாரும் ஏற்றப்பட்டு வடக்கிற்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

அன்றைக்கே நாங்கள் உடனடியாக ஒரு வழக்கு தாக்கல் செய்து அன்று காலையிலேயே பத்து மணிக்கு அதை தடுத்து நிறுத்துகின்ற ஒரு உத்தரவை நான் பெற்றிருந்தேன். வவுனியாவிற்கு பேருந்துகள் போய் சேருவதற்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டு திரும்பவும் அவர்கள் கொண்டு வரப்பட்டார்கள்.

அது குறித்து சர்வதேசத்திலே மிக மோசமான விமர்சனங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக எழுந்த காரணத்தினாலே அப்போது பிரதமராக இருந்த ரட்ண சிறி விக்ரமநாயக்க நாடாளுமன்றத்திலே மன்னிப்பு கோரினார்.

இலங்கையிலேயே ஒரு பிரதம மந்திரி மக்களிடம் மன்னிப்பு கோரியது அது ஒரு தடவை. ஏன் அவ்வாறு மன்னிப்பு கோரினார் என்றால் அது ஒரு இனசுத்திகரிப்பிற்கான நடவடிக்கை என்று நாங்கள் நீதிமன்றத்திலே சொல்லியிருந்தோம்.

உலக நாடுகள் அதனை ஏற்றிருந்தன. அங்கே நடந்தது என்ன? கொழும்பிலே வாழ்ந்த அத்தனை தமிழர்களையும் வெளியேற்றவில்லை. குறித்த சிறிய எண்ணிக்கையான விடுதிகளிலே இருந்தவர்களை வெளியேற்றியதையே இனசுத்திகரிப்பு என்று சர்வதேசம் சொல்லியிருக்கிறது.

அது தான் இனசுத்திகரிப்பிற்கான வரைவிலக்கணமாக இருந்தது. ஆனால் இலங்கையிலே வடக்கிலே நடந்தது முற்றுமுழுதாக, பரம்பரையாக வாழ்ந்துவந்த ஒருவரையும் விடாமல் அனைத்து முஸ்லிம்களையும் வெளியேற்றியது இனசுத்திகரிப்பு.

அது இல்லையென்று சொன்னால் ஒன்று சட்டம் தெரியாதவராக இருக்க வேண்டும். அதற்கு பிறகு என்னை சட்டத்தரணியென்று அழைக்க முடியாது. சர்வதேச குற்றங்களிலே இன்னொரு மோசமான குற்றம் இனசுத்திகரிப்பு.

ஆகவே அந்த குற்றம் தமிழ் மக்களின் பெயரினாலே நடத்தப்பட்டது. இதனாலேயே நான் வெட்கித்தலை குனிகிறேன் என பல தடவைகள் சொல்லியிருக்கிறேன். அதையே திரும்பவும் சொல்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

https://tamilwin.com/article/sumanthiran-interview-1630327520

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இவர் என்ன செய்ய சொல்லுரார்? அதுதான் சமாதானகாலத்தில் முஸ்லீம்காங்கிரஸ் தலைவரை வன்னிக்கு அழைத்து  விடுதலைப்புலிகளே அதற்கு மன்னிப்பும் கேட்டுவிட்டனரே…. முஸ்லீம்களை மீள்குடியமர்த்த தேவையான அனைத்தையும் செய்வதாக தலைவர் உறுதியும் அளித்திருந்தார்… பிறகு சண்டை வந்து புலிகளும் அழிந்துபோயினர்.. அதனால அந்த முயற்சி நடைபெறவில்லை.. வெளிநாட்டுக்கு வந்த சில நம்ம ஆட்கள் வெள்ளைக்காரருக்கு நடிப்பதுபோல புலிகளை தாங்கள் மட்டும் குத்தகைக்கு எடுத்தமாரி ஓவர் தமிழ்தேசிய அக்டிங் கோஸ்ட்டிகள் எழுதுவதற்கு எல்லாம் நாம் என்ன செய்ய..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சம்பவம் நடந்த காலப் பகுதியில் சுமந்திரன் எங்கு இருந்தார்.. அரசியலிலா.. இல்லை தூக்கத்திலா..??!

ஏனெனில்.. கிழக்கில் இருந்து தமிழ் மக்கள் குறிப்பாக மூதூர்..நிலாவெளி.. கிண்ணியா.. உட்பட திருமலை மாவட்டத்தில் இருந்து தமிழ் மக்கள் முஸ்லிம் ஊர்காவல் படையாலும்.. சொறீலங்கா இராணுவத்தாலும் அடித்து விரட்டப்பட்ட போது.. அந்த மக்களை வடக்கே அகதிகளாக ஏற்றுக் கொண்டது.

பிரேமதாச அரசின் தமிழ் - முஸ்லீம் மக்களைப் பிரித்தாலும் தந்திரத்தின் கீழ் வடக்கிலும் கிழக்கு போல் ஒரு சூழலை உருவாக்கும் செயற்திட்டம் இருந்ததும்.. மசூதிகளில் இருந்து ஆயுதங்களும் மீட்கப்பட்ட நிலையில்.. முஸ்லீம் மக்களின் பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு.. பிரேமதாச அரசின் சூழ்ச்சி வலைக்குள் சிக்காமல் இருக்கவும்.. முஸ்லிம்களை வடக்கில் இருந்து சம்பந்தப்பட்ட இனங்களின் பாதுகாப்பின் நிமித்தம்.. பாதுகாப்பான சூழல் திரும்பியதும்.. முஸ்லிம்கள் மீளத் திரும்பி வரலாம் என்ற அடிப்படையில் தான் பாதுகாப்பு வெளியேற்றம் செய்யப்பட்டார்கள்.

இது எந்த வகையிலும் இனச்சுத்திகரிப்பாகாது. இனச்சுத்திகரிப்பென்பது..  ஒரு இனக்கூட்டம் மக்களை நிரந்தரமாக இடம்பெயர வைப்பது தான்..! முஸ்லிம்கள் வடக்கு வெளியேற்றமென்பது.. பாதுகாப்பான மீள் அமர்வுக்குரிய வெளியேற்றமானதாகவே இருந்தது.

ஆனால் அஷ்ரப் கொம்பனி.. இதனை தமது அரசியல் ஆதாயத்திற்காக சிங்களவர்களோடு சேர்ந்து நின்று கொண்டு திரித்ததை.. இவர் இப்பவும் காவித் திரிகிறார்.

அப்படி என்றால்.. சந்திரிக்கா அம்மையார் காலத்தில்.. அனுரத்த ரத்வத்தையால்.. முஸ்லிம்கள் மாவனல்லையில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டதை இனச்சுத்திகரிப்பு என்பாரா..??!

தமிழ் மக்கள் 1983 இல் கொழும்பிலும் தெற்கிலும் இருந்து இன ரீதியாக படுகொலை செய்யப்பட்டும்..துரத்தி அடிக்கப்பட்டதும்.. இனப்படுகொலையும் இனச்சுத்திகரிப்பும் என்று சொல்வாரா.. ஏன் அதைச் சொல்ல மட்டும்.. பெரிய ஆதாரம் தேடுகிறார்..???!

தமிழ் மக்கள் மீது என்று திட்டமிட்டு செய்யப்பட்ட இராணுவ அட்டூழியங்களும்.. படுகொலைகளும்..  திட்டமிட்ட இனப்படுகொலை தான். இதனை எத்தனையோ உலக உதாரணங்கள் உலகிற்கு இனங்காட்டி உள்ள நிலையில்.. இவர்.. இனச்சுத்திகரிப்பு.. என்று திரிபு வசனம்.. பேசி.. சொந்த இனம் கடந்த 70 ஆண்டுகளாக சந்தித்த,, சந்தித்த வரும்... இனப்படுகொலைக்கு ஆதாரம் தேடிக்கிட்டு இருப்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.

சிங்களவர்களோட வாழக் கிடைத்தது ஒரு பாக்கியம் என்று சொல்லும் ஆளுக்கு எப்படி சொந்த இனப்படுகொலை கண்ணுக்குத் தெரியும்.  பாதுகாப்பான.. மீள்வருகை உறுதிப்படுத்தப்பட்ட வெளியேற்றத்தை தன் இஸ்டத்துக்கு.. இனச்சுத்திகரிப்பு என்று கொண்டு திரிகிறார். எதனை எதற்கு சமப்படுத்த முனைகிறார் இவர்..???! 

Link to comment
Share on other sites

எங்களில் (தமிழர்) கவனித்துப் பார்த்தால் அநேகமான படித்தவர்கள் வேறு இனத்தவருக்கு என்றால் நியாயத்தைக் கதைப்பதும் இதுவே தம்மினத்துக்கு நடந்ததால் அதற்கு பல காரணங்களையும் சொல்வார்கள். இதுவும் ஒரு அடிமைத்தனத்தின் வெளிப்பாடு என்றே சொல்லலாம் ஓர் பயம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு தன் வேலை பகுப்பு என்ன என்பதில் ஆரம்பம் முதலே தடுமாற்றம்.

நீங்கள் நீதிபதி அல்ல சுமந்திரன்.

நாம் தேர்வு செய்து அனுப்பிய எம்பி. அதாவது நம் தரப்பு வக்கீல்.

எமது வக்கீலாக நீங்கள் எங்கள் தரப்பு நியாத்தை மட்டும்தான் கதைக்க வேண்டும்.

முஸ்லீம்கள், சிங்களவர் தரப்பு நியாயத்தை அவர்கள் தரப்பு வக்கீல்கள் போதிய அளவு கதைப்பார்கள்.

இல்லை நான் எல்லா தரப்பு நியாயத்தையும் கதைப்பேன் என்றால் - நீங்கள் தமிழர் தரப்பின் வக்கீல்/பிரதிநிதி என்ற பதவிநிலைய (எம்பி) துறந்து விட்டு, ஒரு சட்ட வல்லுனராக கருத்து சொல்லுங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையைத்தான் கூறி உள்ளார். இதை இடைக்கிடை நினைவுபடுத்த வேண்டியது தேவையான விடயமும் கூட.

உண்மையைத்தான் கூறி உள்ளார். இதை இடைக்கிடை நினைவுபடுத்த வேண்டியது தேவையான விடயமும் கூட.

2 minutes ago, goshan_che said:

சுமந்திரனுக்கு தன் வேலை பகுப்பு என்ன என்பதில் ஆரம்பம் முதலே தடுமாற்றம்.

நீங்கள் நீதிபதி அல்ல சுமந்திரன்.

நாம் தேர்வு செய்து அனுப்பிய எம்பி. அதாவது நம் தரப்பு வக்கீல்.

எமது வக்கீலாக நீங்கள் எங்கள் தரப்பு நியாத்தை மட்டும்தான் கதைக்க வேண்டும்.

முஸ்லீம்கள், சிங்களவர் தரப்பு நியாயத்தை அவர்கள் தரப்பு வக்கீல்கள் போதிய அளவு கதைப்பார்கள்.

இல்லை நான் எல்லா தரப்பு நியாயத்தையும் கதைப்பேன் என்றால் - நீங்கள் தமிழர் தரப்பின் வக்கீல்/பிரதிநிதி என்ற பதவிநிலைய (எம்பி) துறந்து விட்டு, ஒரு சட்ட வல்லுனராக கருத்து சொல்லுங்கள்.

 

 

நம் தரப்பு என்றால் யார் தரப்பு? தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பா? இதற்கு நாடு கடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமார் உள்ளார் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையைக் கூற ஒரு தரப்பு அரசியல் வாதியாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை! இது அவருடைய நீதியுணர்வு சார்ந்த கருத்து - அவ்வளவு தான்! உடன்பட வேண்டுமென்றில்லை!

ஆனால், முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக "பௌத்திரமாகப் போயிற்று திரும்பி வாங்கோ!" என்று அனுப்பி வைத்ததாக ஜோக் வேறு அடிக்கிறார்கள்!😂

 2007 இல் கோத்தாவும் இப்படித் தான் "கொழும்பில் தமிழருக்கு பாதுகாப்பில்லை" என்று பவுத்திரமாக வடக்கிற்கு அனுப்பி வைக்க முயன்றிருப்பார் போல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

உண்மையைக் கூற ஒரு தரப்பு அரசியல் வாதியாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை! இது அவருடைய நீதியுணர்வு சார்ந்த கருத்து - அவ்வளவு தான்! உடன்பட வேண்டுமென்றில்லை!

ஆனால், முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக "பௌத்திரமாகப் போயிற்று திரும்பி வாங்கோ!" என்று அனுப்பி வைத்ததாக ஜோக் வேறு அடிக்கிறார்கள்!😂

 2007 இல் கோத்தாவும் இப்படித் தான் "கொழும்பில் தமிழருக்கு பாதுகாப்பில்லை" என்று பவுத்திரமாக வடக்கிற்கு அனுப்பி வைக்க முயன்றிருப்பார் போல!

என்னை தார் பேணியுடன் வருவது என்று  தாங்குதல் நடத்தி உள்ளீர்கள் வேறு திரியில்  உங்களை வெள்ளையடிப்பு பேணி இங்கு வந்திடடார்  என்று சொன்னால் நிர்வாகம் விடுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

இந்தச் சம்பவம் நடந்த காலப் பகுதியில் சுமந்திரன் எங்கு இருந்தார்.. அரசியலிலா.. இல்லை தூக்கத்திலா..??!

ஏனெனில்.. கிழக்கில் இருந்து தமிழ் மக்கள் குறிப்பாக மூதூர்..நிலாவெளி.. கிண்ணியா.. உட்பட திருமலை மாவட்டத்தில் இருந்து தமிழ் மக்கள் முஸ்லிம் ஊர்காவல் படையாலும்.. சொறீலங்கா இராணுவத்தாலும் அடித்து விரட்டப்பட்ட போது.. அந்த மக்களை வடக்கே அகதிகளாக ஏற்றுக் கொண்டது.

பிரேமதாச அரசின் தமிழ் - முஸ்லீம் மக்களைப் பிரித்தாலும் தந்திரத்தின் கீழ் வடக்கிலும் கிழக்கு போல் ஒரு சூழலை உருவாக்கும் செயற்திட்டம் இருந்ததும்.. மசூதிகளில் இருந்து ஆயுதங்களும் மீட்கப்பட்ட நிலையில்.. முஸ்லீம் மக்களின் பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு.. பிரேமதாச அரசின் சூழ்ச்சி வலைக்குள் சிக்காமல் இருக்கவும்.. முஸ்லிம்களை வடக்கில் இருந்து சம்பந்தப்பட்ட இனங்களின் பாதுகாப்பின் நிமித்தம்.. பாதுகாப்பான சூழல் திரும்பியதும்.. முஸ்லிம்கள் மீளத் திரும்பி வரலாம் என்ற அடிப்படையில் தான் பாதுகாப்பு வெளியேற்றம் செய்யப்பட்டார்கள்.

இது எந்த வகையிலும் இனச்சுத்திகரிப்பாகாது. இனச்சுத்திகரிப்பென்பது..  ஒரு இனக்கூட்டம் மக்களை நிரந்தரமாக இடம்பெயர வைப்பது தான்..! முஸ்லிம்கள் வடக்கு வெளியேற்றமென்பது.. பாதுகாப்பான மீள் அமர்வுக்குரிய வெளியேற்றமானதாகவே இருந்தது.

ஆனால் அஷ்ரப் கொம்பனி.. இதனை தமது அரசியல் ஆதாயத்திற்காக சிங்களவர்களோடு சேர்ந்து நின்று கொண்டு திரித்ததை.. இவர் இப்பவும் காவித் திரிகிறார்.

அப்படி என்றால்.. சந்திரிக்கா அம்மையார் காலத்தில்.. அனுரத்த ரத்வத்தையால்.. முஸ்லிம்கள் மாவனல்லையில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டதை இனச்சுத்திகரிப்பு என்பாரா..??!

 பாதுகாப்பான.. மீள்வருகை உறுதிப்படுத்தப்பட்ட வெளியேற்றத்தை தன் இஸ்டத்துக்கு.. இனச்சுத்திகரிப்பு என்று கொண்டு திரிகிறார். 

 

இந்தா வந்துட்டானுக நான் சொன்ன ஓவர் அக்டிங் கோஸ்டி… இவனுங்களாலதான் இந்தமாரி விசர்க்கதையளாலதான் இயக்கத்துக்கு கெட்டபெயர்.. இயக்கத்தை மட்டம்தட்ட இதுகளை எடுத்துபோட்டு எழுத,பேச சுமந்திரன், புலிஎதிர்ப்பு இலக்கியவாதிகள் மாதிரி பல கோஷ்ட்டி வெளீல வெயிட் பண்ணிட்டு இருக்கு

(இதை நான் நெடுக்கைதனிமனித தாக்க எழுதவில்லை.. வெளிய சமூகத்தில் இருக்கும் அந்த கோஸ்டியின் விம்பமாக கருதி எழுதுகிறேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்தா வந்துட்டானுக நான் சொன்ன ஓவர் அக்டிங் கோஸ்டி… இவனுங்களாலதான் இயக்கத்துக்கு கெட்டபெயர்..

தனிப்பட்ட தாக்குதல் வேண்டாமே என்ன பிழையாக நெடுக்கு எழுதி விட்டார் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

முஸ்லிம் மக்களை வடக்கிலே இருந்து வெளியேற்றியது இனசுத்திகரிப்பு என்றே நான் கருதுகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மிஸ்டர் சுமந்திரனை சிலோன் தொடக்கம் சிறிலங்கா ஈறாக முள்ளிவாய்க்கால் அழிவுகள் வரை உள்ள வரலாறுகளை படித்துவிட்டு அறிக்கை விடச்சொல்லுங்கள்.
காட்டிக்கொடுப்போர் வெளியேற்றத்திற்கும் இன சுத்திகரிப்பிற்கும் வித்தியாசம் தெரியாதவராக இருக்கின்றார்.

சிங்களத்திற்கு வெள்ளை அடிப்பவர்கள் இந்த படத்தை கவனிக்கவும்.
சிங்களச்சிறிலங்காவின் இனவாத வரலாறுகளில் இதுவும் ஒன்று.

 

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

தனிப்பட்ட தாக்குதல் வேண்டாமே என்ன பிழையாக நெடுக்கு எழுதி விட்டார் ?

பின்ன என்ன அண்ணை புலிகளே மன்னிப்பு கேட்ட ஒரு விடயத்துக்கு மொக்குதனமா முட்டுகுடுத்தா..?

ஆனா இதை நான் அவரை நினைத்து எழுதவில்லை.. வெளிய முகநூலில் நிறையபேர் இப்படி இருக்கினம்.. அவைய மனசில வச்சு எழுதினது..

Link to comment
Share on other sites

ஈழத்தமிழர்கள் என்றுமே பயங்கரவாதிகள்தான். சிங்களவரின் நிலத்தை தமது என்று நிறுவ முயல்வது முதல் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்தது வரை எல்லாமே பயங்கரவாதம் என்று எல்லா உலகநாடுகளும் உரத்து சொல்லிவிட்டன. அதனால்தான் ஈழம் பயங்கரவாதிகளின் நாடாகிவிடும் என்பதால் அப்படியே உலகநாடுகள் எல்லாம் சேர்ந்து பொசுக்கென்று அமத்தி அழித்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்தா வந்துட்டானுக நான் சொன்ன ஓவர் அக்டிங் கோஸ்டி… இவனுங்களாலதான் இயக்கத்துக்கு கெட்டபெயர்..

(இதை நான் நெடுக்கைதனிமனித தாக்க எழுதவில்லை.. வெளிய சமூகத்தில் இருக்கும் அந்த கோஸ்டியின் விம்பமக கருதி எழுதுகிறேன்)

வரலாற்றை அறிய விரும்பினால்.. சம்பந்தப்பட்டவர்களே பதிந்திருப்பதைப் படியுங்கள்.

உங்களின் விருப்பு வெறுப்புக்கு.. அல்லது தேவைக்கு ஏற்ப சம்பவங்களை நாங்கள் எழுத முடியாது. 

https://tamileelamarchive.com/wp-content/uploads/2020/01/V_P_18.pdf

5 minutes ago, கற்பகதரு said:

ஈழத்தமிழர்கள் என்றுமே பயங்கரவாதிகள்தான். சிங்களவரின் நிலத்தை தமது என்று நிறுவ முயல்வது முதல் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்தது வரை எல்லாமே பயங்கரவாதம் என்று எல்லா உலகநாடுகளும் உரத்து சொல்லிவிட்டன. அதனால்தான் ஈழம் பயங்கரவாதிகளின் நாடாகிவிடும் என்பதால் அப்படியே உலகநாடுகள் எல்லாம் சேர்ந்து பொசுக்கென்று அமத்தி அழித்து விட்டார்கள்.

ஆமாம் ஆமாம். தலிபானும் ஆப்கானிஸ்தானும்.. மட்டும்.. சுத்தம். 

நீங்கள் எல்லாம்.. எழுதி என்ன பயன். வெட்டிக்கருத்துக்கள். அவனவன் தன் தேவைக்கு செய்வதை.. எல்லாம்.. இப்போ சீனாவை இறக்கிவிட்டது தான் கண்ட மிச்சம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

உண்மையைத்தான் கூறி உள்ளார். இதை இடைக்கிடை நினைவுபடுத்த வேண்டியது தேவையான விடயமும் கூட.

உண்மையைத்தான் கூறி உள்ளார். இதை இடைக்கிடை நினைவுபடுத்த வேண்டியது தேவையான விடயமும் கூட.

 

நம் தரப்பு என்றால் யார் தரப்பு? தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பா? இதற்கு நாடு கடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமார் உள்ளார் இல்லையா?

 

15 minutes ago, Justin said:

உண்மையைக் கூற ஒரு தரப்பு அரசியல் வாதியாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை! இது அவருடைய நீதியுணர்வு சார்ந்த கருத்து - அவ்வளவு தான்! உடன்பட வேண்டுமென்றில்லை!

ஆனால், முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக "பௌத்திரமாகப் போயிற்று திரும்பி வாங்கோ!" என்று அனுப்பி வைத்ததாக ஜோக் வேறு அடிக்கிறார்கள்!😂

 2007 இல் கோத்தாவும் இப்படித் தான் "கொழும்பில் தமிழருக்கு பாதுகாப்பில்லை" என்று பவுத்திரமாக வடக்கிற்கு அனுப்பி வைக்க முயன்றிருப்பார் போல!

நான் முன்பும் ஒருதரம் எழுதியுள்ளேன். சுமந்திரன் ஒரு நல்ல வக்கீலா என்பதில்  எனக்கு டவுட் உண்டு, ஆனால் அவர் ஒரு கெட்டிகார அரசியல்வாதி இல்லை. 

எதையும் பேசுவதற்கு இடம், பொருள், ஏவல் உண்டு.

அமெரிக்கா செய்த மனித உரிமை மீறல்கள் பற்றி எந்த அமெரிக்க ஜனாதிபதியாவது, மனம் திறந்து on the record ஆக உண்மையை பேசுவார்களா? இல்லை. 

இதுதான் அரசியல். ஒரு அரசியல்வாதிக்கு இந்த பண்பு அவசியம். சுமந்திரன் ஒரு loose cannon. 

அவர் பெட்டி வாங்கினார், சிங்கள ஏஜெண்ட் இவை எல்லாம் பொய்யாகவே இருக்கட்டும், ஆனால் ஒரு அரசியல்வாதியாக he is not fit for purpose. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கற்பகதரு said:

ஈழத்தமிழர்கள் என்றுமே பயங்கரவாதிகள்தான். சிங்களவரின் நிலத்தை தமது என்று நிறுவ முயல்வது முதல் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்தது வரை எல்லாமே பயங்கரவாதம் என்று எல்லா உலகநாடுகளும் உரத்து சொல்லிவிட்டன. அதனால்தான் ஈழம் பயங்கரவாதிகளின் நாடாகிவிடும் என்பதால் அப்படியே உலகநாடுகள் எல்லாம் சேர்ந்து பொசுக்கென்று அமத்தி அழித்து விட்டார்கள்.

 நீங்கள் சொல்லும் ஈழத்தமிழன் பயங்கரவாதியாக எந்த நாட்டில் குண்டு வைத்து பொதுமக்களை சாகடித்தான்? உலகையே அதிரவைத்த பலஸ்தீனர் கூட இன்று பயங்கரவாதிகள் இல்லையாம். ஆனால் இஞ்சை ஒண்டு கூட்டிக்குடுக்குது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, nedukkalapoovan said:

வரலாற்றை அறிய விரும்பினால்.. சம்பந்தப்பட்டவர்களே பதிந்திருப்பதைப் படியுங்கள்.

உங்களின் விருப்பு வெறுப்புக்கு.. அல்லது தேவைக்கு ஏற்ப சம்பவங்களை நாங்கள் எழுத முடியாது. 

https://tamileelamarchive.com/wp-content/uploads/2020/01/V_P_18.pdf

 

சம்பந்தப்பட்டவர்கள்தான் பின்னர் சர்வதேச ஊடகவியளாளர் மாநாட்டில் மன்னிப்பும் கேட்டிருந்தனர்.. முயலுக்கு மூண்டுகால் எண்டு நிறுவ உங்கட வசதிக்கு புதுச மறச்சுட்டு பழச தூக்கிவராதைங்கோ.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, nedukkalapoovan said:

வரலாற்றை அறிய விரும்பினால்.. சம்பந்தப்பட்டவர்களே பதிந்திருப்பதைப் படியுங்கள்.

உங்களின் விருப்பு வெறுப்புக்கு.. அல்லது தேவைக்கு ஏற்ப சம்பவங்களை நாங்கள் எழுத முடியாது. 

https://tamileelamarchive.com/wp-content/uploads/2020/01/V_P_18.pdf

 

சம்பந்தப்பட்டவர்கள்தான் பின்னர் சர்வதேச ஊடகவியளாளர் மாநாட்டில் மன்னிப்பும் கேட்டிருந்தனர்.. முஸ்லிம் மக்களை வெளியேற்றியதையிட்டுத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வருந்துவதாக ஏற்கனவே 1994ஆம் ஆண்டு பி.பி.சி நிறுவனத்திற்கு வழங்கிய செவ்வியில் தலைவர் அவர்கள் தெரிவித்திருந்தார். இதன் பின்னர் 2002ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இச்சம்பவத்திற்குத் தலைவர் அவர்கள் மன்னிப்புக் கோரியதோடு வடக்கில் மீளவும் முஸ்லிம்கள் குடியேறுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் அறிவித்திருந்தார்.

முயலுக்கு மூண்டுகால் எண்டு நிறுவ உங்கட வசதிக்கு புதுச மறச்சுட்டு பழச தூக்கிவராதைங்கோ.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் ஊர்காவல் படையினர் தமிழருக்கு செய்த அநியாயங்களை சொல்வதன் மூலம் எமது தவறுகளை சரிப்படுத்திவிட முடியாது.. அவர்கள் செய்தது அது பெரும் கொடுமை..

 

//“கல்முனையில் இராணுவப் பயங்கரவாதத்திலிருந்து தப்பி ஓடிக் கொண்டிருந்த 14 வயதுத் தமிழ் யுவதி ஒருத்தி சிங்களப் படைகளிடம் சிக்கிப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டாள். பின்னர் இவள் முஸ்லிம் ஊர்காவற் படையிடம் கொடுக்கப்பட்டாள். ஒரு கல்லை நட்டு, நிர்வாணமாக அதை மூன்று முறை சுற்றும்படி பணிக்கப்பட்டாள். அவ்விதமே சுற்றி வந்ததும், ‘இஸ்லாமிய மார்க்கத்தில் விபச்சாரிக்குரிய தண்டனை இதுதான்’ எனக் கூறிக்கொண்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட அந்தத் தமிழ் யுவதியைக் கல்லால் எறிந்து கொன்றார்கள். மட்டக்களப்புப் பிராந்திய அரசியல் பொறுப்பாளர் கரிகாலனின் கூற்றுப்படி என்றுமில்லாதவாறு இன்று தென்தமிழீழத்தில் தமிழ் இனப்படுகொலை நடைபெறுகின்றது. இம்முறை சிங்களப் பேரினவாதிகளுடன் முஸ்லிம் வெறியர்களும் இணைந்து விட்டார்கள்…”//

 

//“கடந்த ஆனி மாதம் 11ஆம் திகதி (11.06.1990) தொடங்கிய தமிழீழ – சிறீலங்காப் போரைத் தொடர்ந்து அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலைப் பகுதிகளில் ஆயுதம் தாங்கிய முஸ்லிம் கும்பல்களினால் தமிழ் மக்கள் கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். மிருகத்தனமான முறையில் தமிழ்ப் பெண்கள் முஸ்லிம் காடையர்களினால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகின்றனர். சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்ற பேதமில்லாது காட்டுமிராண்டித்தனமாக வெட்டியும், குத்தியும் கொல்லப்படுகின்றார்கள். கொல்லப்படும் தமிழர்களின் தலைகள் கொய்யப்பட்டுச் சாக்கினுள் கட்டிக் கடலினுள் வீசப்படுகின்றன. படுகொலை செய்யப்படும் இளைஞர்களினதும், இளம் பெண்களினதும் சடலங்கள் சோடி சோடியாகக் கட்டி, ஆற்றில் எறிந்து மிலேச்சத்தனமாக இரசனைகளை முஸ்லிம் காடையர்கள் வெளிப்படுத்துகின்றனர். பாண்டிருப்பு கல்முனை, வீரமுனை, சொறிகல்முனை, இவைபோன்று அம்பாறை மாவட்டத்திலிருக்கும் பல தமிழர் கிராமங்கள் பூண்டோடு அழிக்கப்பட்டு அங்கே முஸ்லிம் குடியேற்றங்களை உருவாக்கி மண்ணை அபகரிக்கும் திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.”//

 

மறக்கவோ மன்னிக்கவோ முடியாத கொடுஞ்செயல்கள் இந்த கயவர்கள் எம் இனத்திற்கு செய்தது.. அதுவும் தென் தமிழ் ஈழம் இவர்களால் அடைந்த துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல.. யாழ்ப்பாணத்தில் இருந்திருந்தால் கொலைசெய்வதில் ஈபிடீபியை சைட் எடுத்திருப்பார்கள் முஸ்லிம் ஊர்காவட்படை காடையர்கள்..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியர்கள் தமது வாழ்விடங்களை விட்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டது பற்றி அந்த சம்பவம் நடைபெற்ற காலத்தில் வெளிநாடுகளில் வாழ்ந்தவர்கள், இந்த பூமியிலேயே  பிறக்காதவர்கள், குழந்தைகள், சிறுவர் பராயத்தில் நின்றவர்கள், மற்றும் கூகிழ் துணையுடன் ஒரு தரப்பு வாதத்தை மட்டும் வாசித்துவிட்டு கருத்திடுபவர்கள் நடந்த விடயங்களை நேர்மையுடன் கூறுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

மேற்கண்ட காலத்தில் அமைப்பில் இயங்கிய இஸ்லாமியர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பொறுப்பாளர்களினால் பாதுகாப்பு காரணங்களை கூறி வெளியேற்றப்பட்டார்கள்.

இஸ்லாமியர்களின் அசையும், அசையா சொத்துக்கள் அனைத்தும் விடுதலைப்புலிகளினால் கைவசப்படுத்தப்பட்டன. அள்ளப்பட்ட தங்க நகைகள் உட்பட இவற்றின் மொத்த பெறுமதி எத்தனை கோடிகள் எவருக்குமே தெரியாது.

மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட உடமைகளுடன் இரவோடு இரவாக உடுத்த உடுப்புக்களுடனும் அநாதைகளாக வெளியேற்றப்பட்ட இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரும் கடும் உடல் பரிசோதனைகளுக்கு விடுதலைப்புலிகள் அமைப்பு போராளிகளினால் உட்படுத்தப்பட்டார்கள். மார்பு கச்சையினுள், உள் ஆடைகளினுள் மறைத்து வைத்த இஸ்லாமிய பெண்களின் தங்க ஆபரணங்களை அவர்கள் கதறி அழவும் பெண் போராளிகள் பலவந்தமாக பறித்து எடுத்துக்கொண்டார்கள்.

யாழ்ப்பாணத்தில் அந்த நேரம் நடைபெற்ற இந்த சம்பவம் மனச்சாட்சி உள்ள எந்த ஒரு தமிழனையும் உலுக்கி எடுத்து இருக்கும்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அழிவுக்கு பாதை சமைத்தவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல. அமைப்பை காட்டி கொடுத்ததும், சின்னாபின்னம் செய்ததும் பிரதானமாக அமைப்பினுள் உள்ளே செயற்பட்டவர்களும், தலைவர் பிரபாகரனின் நம்பிக்கை பாத்திரமானவர்களும், உறவினர்களும், மற்றும் தம்மை அமைப்பின் விசுவாசிகளாக காட்டிக்கொண்டவர்களுமே என்பது பலர் அறிந்த உண்மை. இஸ்லாமியர்கள் தமது தோல்விக்கு காரணம் என்பது நகைப்புக்கு உரியது.

இவ்வளவும் நடந்தும்..

அந்த நேரம் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட எனது ஒரு இஸ்லாமிய நண்பருடன் இன்றும் நல்ல தொடர்பு உள்ளது. அவர் இப்போதும் பெருந்தன்மையுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மீது அபிமானமே வைத்து உள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

யாழ்ப்பாணத்தில் அந்த நேரம் நடைபெற்ற இந்த சம்பவம் மனச்சாட்சி உள்ள எந்த ஒரு தமிழனையும் உலுக்கி எடுத்து இருக்கும்.

சம்பந்தப்பட்டவர்களால் மன்னிப்பு கேட்டு முடித்து வைக்கப்பட்ட சம்பவத்திற்கு உங்களைப்போன்றோர் எண்ணை ஊற்றி எரிய வைப்பதன் நோக்கம் புரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கன் எம்பஸீஸ் சந்திப்பு சும்முக்கு வேலைசெயுது..பொட்டி பெருசா வரணும் என்றால்...இப்படித்தான் அத்திவாரம் போடவேணும்...தமிழ் சனம் செத்த்தது இன அழிப்பு இல்லை....சோனிகளை வெளியேற்றினது இன அழிப்பு....தவராசாவி வழ்க்கு எல்லாம் அவையிடமிருந்து வரவேணும்...அப்ப இந்தமுறை அய்.நாவில் சுமந்து கொண்டுபோற   வெடிதான் ஆப்புப் போலை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

யாழ்ப்பாணத்தில் அந்த நேரம் நடைபெற்ற இந்த சம்பவம் மனச்சாட்சி உள்ள எந்த ஒரு தமிழனையும் உலுக்கி எடுத்து இருக்கும்.

கிழக்கில் தமிழை பேசி கொண்டு தமிழருடன் அயலவராய் வாழ்ந்துகொண்டு முஸ்லீம் ஊர்காவல்படை என்ற பெயரில் அஷ்ரப் எனும் மனித தன்மையே அற்ற கொடூரனின் ஆசீர்வாததுடன் சிங்கள படைகளுடன் இணைந்து அம்பாறை-மட்டக்களப்பு பகுதிகளில்  தமிழர்களை கொத்து கொத்தாய் முஸ்லிம்காடையர்கள் படுகொலை செய்தபோது,தமிழர் விவசாய நிலங்களிலிருந்து  வாழ்விடங்களிலிருந்து   விரட்டி அவர்கள் பகுதிகளை முஸ்லீம்கள் சிங்களவருடன் சேர்ந்து அபகரித்தபோது அங்குள்ள மனசாட்சியுள்ள முஸ்லீம்கள் யாரையாவது அது உலுக்கியிருக்கிறதா அண்ண?

யாழில் தமிழர்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டு சிங்கள விமானபடைக்கு தகவல் சொல்லி விமானகுண்டுவீச்சில் பல தமிழர்கள் கொல்லப்பட காரணமாயிருந்தவர்களில் பலர் முஸ்லீம்கள், கையும் மெய்யுமாய் வேறு பிடிபட்டார்கள், அது தவறென்று உங்கள் மனதை உலுக்கியதுண்டா?

அப்படி உலுக்கி முஸ்லீம் பயங்கரவாதிகள்  தமிழர்களுக்கு பண்ணுவது தவறென்று சொன்னதுண்டா பெரியவரே? மனசாட்சி என்ற ஒன்று இருந்தால்தானே உலுக்க.’

இதுவெல்லாம் யாழ்நகரிலிருந்து முஸ்லீம்கள் புலிகளால் வெளியேற்றபடமுன்னர், தமிழர் பகுதிகளில் மனசாட்சியே இல்லாத முஸ்லீம்கள் தமிழருக்கு பண்ணிய அநியாயங்கள். பொறுத்து பொறுத்து பார்த்த புலிகள் மேற்கொண்ட ஒரு தற்கால நடவடிக்கையே முஸ்லீம்கள் வெளியேற்றம்.

ஆனால் புலிகள் முஸ்லிம் காடையர்கள்போல் தங்கள் நிலத்தில் வாழ்ந்த முஸ்லீம்களை படுகொலை செய்யவில்லை தற்காலிகமாக இடம்பெயரதான் சொன்னார்கள்.

தமிழருக்கு நீங்கள் பண்ணிய படுபாதகங்கள் சரியன்றால் இதுவும் சரி,  தவறென்றால் அதுவும் தவறு. ஆனால் நீங்கள் பண்ணிய தவறுகளை உள்ளூரிலும் சரி, உலக அளவிலும் சரி ஏற்றுக்கொண்டதாய் சரித்திரமேயில்லை, ஆனால் நீங்கள் கொடூரமான செயல்களை எமது இனத்துக்கு புரிந்திருந்தும் முஸ்லீம்களை வெளியேற்றியது தவறுதான் என்று புலிகள் ஒரு கட்டத்தில் ஒத்துக்கொண்டார்கள், ஏனெனில் புலிகள் நாகரிக இனத்திலிருந்து உருவான ஒரு போராட்ட இயக்கம்.

நம்மை பயங்கரவாதிகள் என்று பிறர் அழைத்தால் நாம் எம்மைவிட கொடிய பயங்கரவாதிகளுக்கெதிராக போர் புரிந்தோம் அதனால் அவர்களை அந்த வழியிலேயே எதிர்கொண்டோம், உலக அரசுகள் அரசுகளுக்கே ஆதரவு வழங்கும் என்ற கொள்கையின் அடிப்படையில் அரச பயங்கரவாதத்தை உலகம் கண்டுகொள்ளவில்லை,

ஆனால் அரசு செய்வது பயங்கரவாதம் என்று உலகநாடுகள் அனைத்துக்குமே தெரியும் அதனால்தால் பல லட்சக்கணக்கில் உலகமெங்கும் எம்மை அகதியாய் ஏற்றுக்கொண்டார்கள், சிங்களவனையும் முஸ்லீம்களையும்  ஒப்பீட்டளவில் எம்மைப்போல் லட்சக்கணக்கில் அகதியாய் அங்கீகரிக்கவில்லை.

அதிலிருந்தே தெரியவில்லையா உலகத்துக்கு  உங்கள் மனசாட்சியின் லட்சணம் எப்போதோ தெரிந்துவிட்டது என்று?

 

2 hours ago, கற்பகதரு said:

ஈழத்தமிழர்கள் என்றுமே பயங்கரவாதிகள்தான். சிங்களவரின் நிலத்தை தமது என்று நிறுவ முயல்வது முதல்

சிங்கள நிலத்தை அபகரிக்க முயன்றவர்களுடன் எதற்கு தாய்லாந்து ஜெனீவா நோர்வே வரை சென்று சிங்கள அரசுகள் பேசியது ஐயா? பயங்கரவாதிகளுடன் எதற்கு சர்வதேச மத்தியஸ்தம் வன்னி கொழும்பு யாழ்வரை சென்று பேச்சு எல்லாம் சிங்களம் நாடியது பெரியவரே?

சரி இவ்வளவுபேசுகிறீர்களே, நீங்கள் தமிழரா முஸ்லீமா? ஏனெனில் தமிழராக இருந்தால் நீங்களும் நீங்கள் சொன்ன பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்ந்துவிடுவீர்களே அந்த கவலையில் கேட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

 

நான் முன்பும் ஒருதரம் எழுதியுள்ளேன். சுமந்திரன் ஒரு நல்ல வக்கீலா என்பதில்  எனக்கு டவுட் உண்டு, ஆனால் அவர் ஒரு கெட்டிகார அரசியல்வாதி இல்லை. 

எதையும் பேசுவதற்கு இடம், பொருள், ஏவல் உண்டு.

அமெரிக்கா செய்த மனித உரிமை மீறல்கள் பற்றி எந்த அமெரிக்க ஜனாதிபதியாவது, மனம் திறந்து on the record ஆக உண்மையை பேசுவார்களா? இல்லை. 

இதுதான் அரசியல். ஒரு அரசியல்வாதிக்கு இந்த பண்பு அவசியம். சுமந்திரன் ஒரு loose cannon. 

அவர் பெட்டி வாங்கினார், சிங்கள ஏஜெண்ட் இவை எல்லாம் பொய்யாகவே இருக்கட்டும், ஆனால் ஒரு அரசியல்வாதியாக he is not fit for purpose. 

 

உண்மை, ஆனால் ஒரு திருத்தம் - சுமந்திரன் எங்கள் தீவிர தேசியர்களுக்கு உரிய அரசியல் வாதியல்ல என்று வர வேண்டும்!

 ஆனால் அவர் சொல்வதில் உள்ள நியாயங்கள், உண்மைகள் சுட்டாலும் , புரிந்து கொண்டு நகரும் மக்களே பெரும்பான்மையான தமிழர்கள் என்பது என் கணிப்பு!

ஒரு அரசியல்வாதி தன் வாக்காளர்கள் கேட்க விரும்புவதை மட்டும் பேசி, சில இடங்களில் கள்ள மௌனம் காத்து தேர்தலில் வென்று பென்சன் வாங்கி விட்டுப் போவதால் யாருக்கு என்ன பயன்? அவருக்கென்று இருக்கும் moral compass ஐயும் பயன்படுத்த வேண்டும்! இல்லையேல், ட்ரம்ப் செய்த எந்தச் செயலையும் கள்ள மௌனம் மூலம் ஆதரிக்கும் குடியரசுக் கட்சி கள்ள அரசியல் வாதிகளுக்கும் சுமந்திரனுக்கும் என்ன வேறு பாடு? 

இப்படி சுமந்திரன் பேசுவதை  விரும்பா விட்டால் வாக்களர்கள் அவரைத் தேர்வு செய்யாமல் விடலாம் - இப்படி அவரே கடந்த தேர்தல் நேரத்தில் சொல்லியிருந்தார்! 

3 hours ago, பெருமாள் said:

என்னை தார் பேணியுடன் வருவது என்று  தாங்குதல் நடத்தி உள்ளீர்கள் வேறு திரியில்  உங்களை வெள்ளையடிப்பு பேணி இங்கு வந்திடடார்  என்று சொன்னால் நிர்வாகம் விடுமா ?

அதை நிர்வாகத்திடம் தான் கேட்க வேணும்😂
 

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்காலில் நடந்தவை இனப்படுகொலை என சுமந்திரனால் ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை?? 
முஸ்லிம்களை புலிகள் விரட்டியது இனச்சுத்திகரிப்பு என ஏன் எண்ணையை ஊற்றுகிறார். இரட்னாயக்கா மன்னிப்பு கேட்டது போல புலிகளும் மன்னிப்பு கேட்டார்கள் தானே. இவரால் கோத்தபாய செய்தது இனச்சுத்திகரிப்பு என இப்போ சொல்ல துணிவு உள்ளதா??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவாகவே, ரத்த அழுத்தம் தீவிர உடல்நல பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், இதனை முறையாக பரிசோதிக்காவிட்டால் பல இணை நோய்கள் ஏற்படும் என மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) சமீபத்தில் இந்தியாவில் ரத்த அழுத்த பாதிப்பின் நிலைமை குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியர்கள் அதனை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாததை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அந்த ஆய்வறிக்கை சர்வதேச பொது சுகாதார ஆய்விதழில் வெளியாகியிருந்தது. அதன்படி, இந்தியாவில் 18 முதல் 54 வயதுக்குட்பட்ட 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, பத்தில் மூன்று பேர் அதை பரிசோதிப்பதில்லை. தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்ச சராசரியாக 76% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். வட இந்திய மாநிலங்களில் சராசரியாக 70% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். ரத்த அழுத்தத்தை தொடர் இடைவெளியில் முறையாக கண்காணிக்காவிட்டால், இதய நோய்கள் உட்பட பல தீவிர நோய்கள் ஏற்பட்டு, இறப்புக்குக் கூட காரணமாகிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். அதுவே, முறையாக கண்காணித்து வாழ்வியல் மாற்றங்களின் மூலம் அதனை கட்டுக்குள் வைத்தால் பிரச்னை இல்லை என்ற ஆறுதல் செய்தியையும் அவர்கள் கூறுகின்றனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. “முன்பு 50-60 வயதில்தான் ரத்த அழுத்தம் வரும். இப்போது சிறுவயதிலேயே வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கூட உயர் ரத்த அழுத்தம் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். இளம் வயதினரிடையே மன அழுத்தம், தூக்கமின்மை, உப்பு, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை எடுப்பது இதற்கு காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயைவிட உயர் ரத்த அழுத்தம் அதிகமானவர்களை பாதிக்கிறது” என்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர். மேலும், “பெரும்பாலானோர் இதற்கு மருத்துவ சிகிச்சையே எடுப்பது கிடையாது. ஒருமுறை பரிசோதித்துவிட்டு ‘நார்மலாக' இருக்கிறது என மருந்துகளை எடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். தொடர் பரிசோதனைகளில் ரத்த அழுத்தம் குறைந்தால்தான் மருந்துகளின் அளவை குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்பது விளிம்புநிலை மக்களுக்குத் தெரிவதில்லை. நடுத்தர மக்கள் மாத்திரைகள் எடுத்தாலும், தொடர்ந்து பரிசோதித்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை” என்கிறார் அவர். ரத்த அழுத்தம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.   படக்குறிப்பு,சிறுவயதினருக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதாக கூறுகிறார் மருத்துவர் எஸ். சந்திரசேகர். ரத்த அழுத்தம் எந்த அளவை எட்டினால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும்? ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. இதில் 120 என்பது சிஸ்டோல் அளவு, இதய அறைகள் சுருங்கும்போது மாறுபட்ட கட்டம். 80 என்பது டயஸ்டோல், அதாவது இதயத்தின் அறைகள் ரத்தத்தால் நிரப்பப்படும் போது இதய சுழற்சியின் தளர்வான கட்டமாகும். இந்த அளவு 140/90 வரை அதிகரித்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்ன வகையான உணவுகள், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறாமல், மருந்துகளை நிறுத்தவோ, கூட்டவோ, குறைக்கவோ கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை வீட்டிலேயே பரிசோதிப்பது எப்படி? மருத்துவர்கள் முன்பெல்லாம் பாதரசத்துடன் கூடிய ஸ்பிக்மோமேனோ மீட்டர் எனப்படும் ரத்த அழுத்தமானியை பயன்படுத்தினார்கள். இப்போது மின்னணு ரத்த அழுத்தக் கருவி வந்துவிட்டது. ரூ.2,500-3,000-ல் நல்ல கருவிகளை வீட்டிலேயே வாங்கி வைத்துக்கொள்ளலாம். அந்த கருவியை கையில் எங்கு, எப்படி பொருத்த வேண்டும் என, செவிலியர் அல்லது மருத்துவத் துறையை சேர்ந்த ஒருவரிடம் நேரிலேயே சென்று செய்துபார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன் டீ, காபி அருந்தியிருக்கக் கூடாது. பொதுவாகவே மது, புகைப்பிடிப்பது நல்லதல்ல. குறிப்பாக, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் நிச்சயம் அவற்றை செய்திருக்கக் கூடாது. ரிலாக்ஸாக இருக்க வேண்டும். பின்பக்கம் சாய்ந்துகொள்ளக்கூடிய நாற்காலியில், நிச்சயம் கால்களை தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும். கால்களை மடக்கி வைத்துக்கொண்டோ, கால்மேல் கால் போட்டுக்கொண்டோ அமர்ந்திருக்கக் கூடாது. ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் ஓரிரு முறை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வலது கை, இடது கை என மாற்றி பரிசோதித்து, அதன் சராசரியைக் கூட எடுத்துப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. எந்த நேரத்தில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா? ரத்த அழுத்தத்தை காலையில்தான் பரிசோதிக்க வேண்டும் என்பதில்லை. மதியம் அல்லது இரவிலும் பரிசோதிக்கலாம். உறங்குவதற்கு முன்பு கூட எடுக்கலாம். உறங்கும்போது ரத்த அழுத்தம் 15-20% குறையும். அந்த நேரத்தில் நம் உடல் சற்று ரிலாக்ஸாகும். ஆனால், இப்போது பெரும்பாலானோர் தூங்குவதற்கே இரண்டு-மூன்று மணியாகிவிடுகிறது. அதனால், அந்த சமயத்திலும் ரத்த அழுத்தம் தாழ்வு நிலைக்கு செல்லாமல் உயர்வாகவே இருக்கிறது. இதனை மருத்துவ மொழியில் இரவு நேர உயர் ரத்த அழுத்தம் (Nocturnal hypertension) என்கிறோம். அதனால்தான் பலருக்கும் காலையில் பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் என்பது 24 மணிநேரமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதே நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அதனால்தான் இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை நாம் பார்க்கிறோம். மனச்சோர்வு, மன அழுத்தம் இருந்தாலும் ரத்த அழுத்தம் அதிகமாகும். வலிநிவாரண மாத்திரைகள் எடுப்பதுகூட சில சமயங்களில் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது. ரத்த அழுத்தத்தை தினசரி பரிசோதிக்க வேண்டுமா? தினசரி பரிசோதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏதாவது அறிகுறிகள், தொந்தரவு இருந்தால் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து இருந்தால் கண்பார்வை பாதிக்கப்படும். இதய சுவர்கள், ரத்தக்குழாய்கள் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் பாதித்து பக்கவாதம் ஏற்படலாம். காலுக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் பாதித்து பெரிஃபெரல் ஆர்ட்டரி நோய் எனப்படும் புற தமனி நோய் ஏற்படலாம். அனைத்து உறுப்புகளும் ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் அதிகமாகும்போது இதய ரத்தக் குழாய்களின் சுற்றளவு குறைகிறது. இதய சுவர்கள் தடித்து வீங்கிவிடும். சுருங்கி விரிவது குறைந்துவிடும். எனவே, உயர் ரத்த அழுத்தம் நிறைய வழிகளில் இதயத்தைப் பாதிக்கும். இதய துடிப்புகள்கூட இதனால் அதிகமாகிவிடும். உயர் ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் என்னென்ன? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அறிகுறியே இருக்காது. ‘எனக்குதான் அறிகுறியே இல்லையே, நான் எதற்கு மாத்திரை எடுக்க வேண்டும்’ என்றுதான் பலரும் கேட்பார்கள். நாளடைவில்தான் அறிகுறிகள் தோன்றும். பதற்றம், தலைவலி, தலைசுற்றல், உடல் சோர்வு, தூக்கமின்மை, சிறிய விஷயத்திற்கு பயம், கால்களில் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"உயர் ரத்த அழுத்தத்தால் கண் பார்வை பிரச்னை கூட ஏற்படலாம்" உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் எப்படி தடுக்கலாம்? உடல் எடையை ஒழுங்குக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, ஜாக்கிங், நீச்சல், ஸ்ட்ரெச்சிங் போன்றவற்றை செய்யலாம். எடை பயிற்சி போன்றவற்றை மருத்துவ ஆலோசனையுடன் செய்யலாம். ‘மெடிட்டரேனியன் டயட்’ எனப்படும் அதிகளவில் காய்கறிகள், பழங்களுடன் சிறிது புரதம், அதைவிட குறைவாக கார்போஹைட்ரேட் எடுக்கலாம். உடல் எடை 10% குறைகிறது என்றாலே இரண்டு இலக்கத்தில் நிச்சயம் ரத்த அழுத்தம் குறையும். சரியான உடல் எடையில் இருப்பவர்களுக்கும் அப்படி குறையும் என்பதில்லை. நடைபயிற்சி எல்லோராலும் செய்ய முடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. மூட்டு வியாதி, மூட்டு வலி இருப்பவர்கள், கை, கால்களை நீட்டி மடக்கி பயிற்சி (Stretching) செய்யலாம். தோட்ட வேலை, வீட்டு வேலைகளையே உடற்பயிற்சியாக செய்யலாம். ஒரேமாதிரியான உடற்பயிற்சிகளையே தினமும் செய்யாமல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யலாம். ஒருவாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். குறைந்தது 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். இதைத்தான் அமெரிக்க இதய சங்கம் கூறும் வழிமுறை. இவ்வளவு செய்தும் கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றாலோ அல்லது இணை நோய்கள் இருந்தாலோ நிச்சயம் மருத்துவ ஆலோசனைகளை பெறுவது அவசியம். உயர் ரத்த அழுத்தத்திற்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் எடுக்க வேண்டுமா? இதனை முற்றிலும் குணப்படுத்த முடியுமா? பெரும்பாலானோருக்கு இதற்கு காலம் முழுவதும் மாத்திரை எடுக்க வேண்டும்தான். ஆனால், இதற்கான நிரந்தர தீர்வுக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வாழ்வியல் முறைகளை மாற்றினாலே கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உப்பு குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறை ரத்த அழுத்தம் என்பது என்ன? அதன் அறிகுறிகள் என்ன? குறை ரத்த அழுத்தம் என்பது நோய் கிடையாது. பெண்களுக்கு பொதுவாகவே 90/60 தான் ரத்த அழுத்தம் இருக்கும். அவர்களின் உடலமைப்புக்கு அப்படி இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாத்திரை எடுத்து நார்மலாகிவிட்டது என்றால் சிலருக்கு தலைசுற்றல் இருக்கும். உடல்சோர்வு இருக்கும். அதனால் அவர்களுக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்படும். அவர்கள் அதற்கு மாத்திரைகள் எடுக்கலாம். நீர்ச்சத்துக் குறைபாட்டாலும் இது வரலாம். என்ன சாப்பிடலாம்? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் என்னென்ன சாப்பிடலாம், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த உணவியல் நிபுணர் புவனேஸ்வரி கூறினார். “உப்பு அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். தினசரி உப்பின் அளவை குறைக்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய், உப்பு அதிகம் உள்ள நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும். தினசரி எடுத்துக்கொள்வதில் பாதி அளவையே எடுக்க வேண்டும். உலக சுகாதார மையத்தின்படி தினசரி ஆறு கிராம் உப்பு போதும். இந்திய உணவுகளில் 10-12 கிராம் உப்பு இருக்கிறது. அதனால் அதில் பாதி எடுக்க வேண்டும். அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். மேலும், அசைவ உணவுகளில் அதிக உப்பு, எண்ணெய், மசாலா சேர்க்கிறோம். கொழுப்பு அதிகமான ஆட்டிறைச்சி உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைவான கோழி இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். அவற்றையும் என்ன அளவு எடுக்க வேண்டும் என்றும் இருக்கிறது” என தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c51nd7ekv99o
    • 15 APR, 2024 | 03:58 PM ஆர்.ராம் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சி முகங்கொடுத்துள்ள வழக்குகள் தொடர்பிலும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளால் முன்மொழியப்பட்டுள்ள பொதுவேட்பாளர் விடயம் சம்பந்தமாகவும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு மீதான விசரணை எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக வழக்கு விடயங்களை கையாள்வது தொடர்பில் ஏகோபித்த நிலைப்பாட்டை எடுப்பதற்கு முனைவதாக கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இதேநேரம், கட்சியின் சிரேஷ்ட தலைவர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன் மற்றும் வட மாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் இதுவரை தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பில் எதிர்மறையாக கருத்து வெளியிட்டுள்ளனர். அதேநேரம், சிவஞானம் சிறீதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுவேட்பாளர் விடயத்தினை சாதகமாக பரிசீலிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். எவ்வாறாயினும், கட்சியின் தலைவரோ செயலாளரோ இதுதொடர்பில் எவ்விதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை. இவ்வாறான பின்னணியிலேயே கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும், எதிர்வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று மட்டக்களப்பில் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் அம்மாவட்டத்தினைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்பதில் சந்தேகமான நிலைமை ஏற்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181135
    • தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது : வட மாகாண போக்குவரத்து குழுமம் தெரிவிப்பு Published By: DIGITAL DESK 7    16 APR, 2024 | 10:14 AM யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நெடுந்தூர பயணிகள் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து தனியார் பேருந்துகளுடன் இணைந்த சேவையை வழங்க முடியாது என இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண குழுமத்தின் தலைவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் புதிதாக கட்டப்பட்ட நெடுந்தூர பயணிகள் பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் இணைந்த நேர அட்டவணையில் பயணிக்க முடியும் ஆனால் இணைந்த சேவையை குறித்த தரிப்பிடத்தில் இருந்து வழங்க முடியாது . நேற்றைய தினம் திங்கட்கிழமை வட மாகாண ஆளுநர் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஆகியோர் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சங்கம் ஆகியவற்றுடன் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இருவரும் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் தொழிற்சங்கங்கள் இணைந்த சேவைக்கு சம்மதிக்க மறுக்கின்றன. அதற்கான காரணங்களும் வலுவாக இருக்கிறது உதாரணமாக வவுனியா பேருந்து தரிப்பிடத்தில் பெரும்பாலான வெளி மாவட்டத்துக்கான சேவையை வழங்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் உள்ளே செல்லாது வெளியில் நின்றே பயணிகளை ஏற்றுகின்றன. இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகள் நடத்துனர்கள் தனியார் பேருந்து சாரதி நடத்துனர்களால் தாக்கப்பட்ட சம்பவங்கள் பல தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து சேவையில் ஈடுபடும் போது பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க கூடும் என தொழில் சங்கங்கள் எண்ணுகின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கான பேருந்து தரிப்பிடத்தில் இருந்து எமது பேருந்துகள் தனித்துவமான சேவைகளை வழங்கி வரும் நிலையில் அதனை நாம் குழப்புவதற்கு விரும்பவில்லை. வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தனியாருடன் இணைந்த நேர அட்டவணையில் பயணிப்பதற்கு எமது விருப்பத்தை தெரிவித்துக் கொள்வதோடு இணைந்த சேவையை புதிய பேருந்து தரிப்பிடத்தில் மேற்கொள்வதற்கு சங்கங்கள் விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181189
    • மகிழ்சசியான சுற்றுலா மனித வாழ்விற்கு இன்றியமையாதது. தொடருங்கள்.  கடற்கரையோரம் காலாற நடப்பதற்காக கால்களை தயார் செய்தார் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் எதை நினைத்தீர்கள். 
    • கடைசி இடத்தில் ஆர்சிபி; தவறு நடந்தது எங்கே? கேப்டன் கூறுவது என்ன? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வீடியோ கேம்ஸிஸ் கிரிக்கெட் பார்த்த, விளையாடிய உணர்வு ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தின்போது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும். 38 சிக்ஸர்கள், 43 பவுண்டரிகள், ஒரே போட்டியில் 549 ரன்கள், 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய சோகம், அதிகபட்ச ஸ்கோர் என நேற்றைய ஐபிஎல் டி20 ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பட்டியலிடலாம். ஆட்டத்தைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு கழுத்துவலி கூட வந்திருக்கலாம். ஏனென்றால், கிட்டத்தட்ட 40 ஓவர்களில் 9 ஓவர்களில் வெறும் சிக்ஸர், பவுண்டரிகளாகவே அடிக்கப்பட்டது. மிகச்சிறிய மைதானமான சின்னசாமி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் எப்படி வீசினாலும் பேட்டை நோக்கித்தான் வந்தது என்பதால் பேட்டர்கள் கருணையற்றவர்களாக மாறினர். யாருக்கு எப்படி பந்துவீசுவது எனத் தெரியாமல் ஆர்சிபி பந்துவீச்சாளர்களும், சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களும் திணறி நின்றதைக் காண முடிந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. 288 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியது. நிகர ரன்ரேட்டிலும் பெரிய ஸ்கோர் அடித்தும் பெரிய முன்னேற்றமில்லாமல் 0.502 ஆக இருக்கிறது. டி20 போட்டிகளில் 250ரன்களுக்கு மேல் அதிகமுறை அடித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் அணி நேற்று பெற்றது. ஆர்சிபி அணியைப் பொருத்தவரை இவ்வளவு பெரிய ஸ்கோரை அடித்தும் தோல்வி அடைந்த முதல் அணியாக மாறிவிட்டது. 7 போட்டிகளில் ஒரு வெற்றி, 6 தோல்விகள் என 2 புள்ளிகளுடன் ஆர்சிபி அணி கடைசி இடத்தில் நீடிக்கிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய ஹைதராபாத் வீரர்கள் சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய ஸ்கோரை அமைத்துக் கொடுத்தவர்களில் முக்கியமான பேட்டர் டிராவிஸ் ஹெட் 102 (41பந்துகள், 8சிக்ஸர், 9பவுண்டரி). ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்த ஹெட், நேற்றைய ஆட்டத்தில் முதல் சதத்தைப் பதிவு செய்து ஆட்டநாயகன் விருது வென்றார். 39 பந்துகளில் சதம் அடித்து, அதிவேக சதம் அடித்த 4வது பேட்டர் என்ற பெயரை ஹெட் பதிவு செய்தார். சன்ரைசர்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த முதல் பேட்டர் என்ற பெயரை ஹெட் பெற்றார். இதற்கு முன் வார்னர் 43 பந்துகளில் சதம் அடித்திருந்தார். மற்றொரு பேட்டர் ஹென்ரிச் கிளாசன் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சீசன் முழுவதும் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்னமாக திகழ்ந்துவரும் கிளாசன் 31 பந்துகளில் 67 ரன்கள்(7சிக்ஸர், 2 பவுண்டரி) அடித்து ஆட்டமிழந்தார். இது தவிர மார்க்ரம் 32(17பந்துகள், 2சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்), அப்துல் சமது37(10 பந்துகள் 3 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள்) என ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த 4 பேட்டர்கள் அடித்த ஸ்கோர்தான் மற்றவகையில் பெரிதாக எந்த பேட்டரும் ஸ்கோர் செய்யவில்லை.   பட மூலாதாரம்,SPORTZPICS சன்ரைசர்ஸ் கேப்டன் கூறியது என்ன? சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “ நானும் பேட்டராக இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கிறது. மும்பைக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் பெரிய ஸ்கோர் அடித்துள்ளோம். போட்டி பேட்டர்கள் ராஜ்ஜியமாகமாறி வருகிறது. இந்த ஆடுகளத்தை படிக்க நானும் முயற்சித்தேன். எங்கள் ஆட்டம் மகிழ்ச்சியாக இருக்கிறது. 4 வெற்றிகள் பெற்றுள்ளோம். பேட்டர்களுக்கு முழுசுதந்திரம் அளித்துள்ளோம். அதனால்தான் பெரிய ஸ்கோர் வருகிறது” எனத் தெரிவித்தார் ஆர்சிபி கொடுத்த பதிலடி ஆர்சிபி அணியிலும் கேப்டன் டூப்பிளசிஸ் 28 பந்துகளில் 62 ரன்கள்(4சிக்ஸர், 7பவுண்டரி), விராட் கோலி 42 (2சிக்ஸர், 6பவுண்டரி), தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 85(7சிக்ஸர், 5 பவுண்டரி) என விளாசினர். இதில் ஆர்சி அணியில் நடுவரிசை பேட்டர்கள் ரஜத் பட்டிதார், வில் ஜேக்ஸ், சவுகான் ஆகிய மூவவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்காமல் தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தால், ஆர்சிபி அணி ஒருவேளை வென்றிருக்கலாம். சன்ரைசர்ஸ் அடித்த ஸ்கோருக்கு தாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்று ரீதியில்தான் கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகழ்த்தப்பட்ட சாதனைகள் இந்த ஆட்டத்தில் சில சுவையான சம்பவங்கள் நடந்துள்ளன. ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோரான 287 ரன்களை சன்ரைசர்ஸ் அணி பதிவு செய்தது. இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இந்த சீசனில் 277 ரன்கள் சேர்த்ததுதான் சாதனையாக இருந்தது, தன்னுடைய சாதனையை அந்த அணியை முறியடித்தது. ஆடவர் டி20 போட்டியில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஓட்டுமொத்தமாக நேற்றைய ஆட்டத்தில் 549 ரன்கள் சேர்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன் ஹைதராபாத்தில் இந்த சீசனில் நடந்த மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக 523 ரன்கள் சேர்க்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தநிலையில் அந்த சாதனை முறியடிக்கப்பட்டது. ஆர்சிபி அணிக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 22 சிக்ஸர்களை விளாசி, ஒரு இன்னிங்ஸில் ஒரு அணிக்கு எதிராக அடிக்கப்பட்டஅதிகபட்ச சிக்ஸர்களைப் பதிவு செய்தது. இதற்கு முன் 2013-இல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி 21 சிக்ஸர்களை அடித்த நிலையில் அதை சன்ரைசர்ஸ் முறியடித்துவிட்டது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து 38 சிக்ஸர்களை விளாசின. டி20 போட்டியில் அதிக பட்சமாக 262 ரன்கள் சேர்த்தும் தோல்வி அடைந்த முதல் அணி என்ற பெயரை ஆர்சிபி பெற்றது. இதற்குமுன் 2023ம் ஆண்டில் செஞ்சூரியனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 258 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் சேர்த்தும் தோல்வி அடைந்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. ஆர்சிபி அணியில் பந்துவீச்சாளர்கள் டாப்ளி(68), யாஷ் தயார்(51), லாக்கி பெர்குஷன்(52), விஜயகுமார்(64) என 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். ஒரு போட்டியில் 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது இதுதான் முதல்முறை. சன்ரைசர்ஸ் அணியில் நேற்று மட்டும் 4 பேட்டர்கள் ஒரு சதம் பார்ட்னர்ஷிப்பும் உள்பட, 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஐபிஎல் வரலாற்றில் இது 2வது முறையாக நடக்கிறது. இதற்கு முன் 2008-இல் ஆர்சிபிக்கு எதிராக கொல்கத்தா அணியின் 4 பேட்டர்கள் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.   பட மூலாதாரம்,SPORTZPICS ஆர்சிபி இதயத்தை உடைத்த ஹெட் ஆர்சிபி அணி நேற்றைய ஆட்டத்தில் முறையான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா என இரு இடதுகை பேட்டர்கள் களத்துக்கு வந்ததும் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான ஜேக்ஸை பந்துவீசச் செய்து சோதிதித்துப் பார்த்தது. முதல் இரு ஓவர்கள் மட்டும் பொறுமை காத்த ஹெட், அபிஷேக் அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரி, சிக்ஸர்களாக அடிக்கத் தொடங்கினர். எந்தப் பந்துவீச்சாளர் பந்துவீசினாலும் ஹெட், அபிஷேக் பேட்டிலிருந்து பவுண்டரி, சிக்ஸர்களாக பறந்தன. ஆர்சிபிக்காக முதல்முறையாக களமிறங்கிய பெர்குஷன் 5-ஆவது ஓவரில் ஹெட் சிக்ஸர்களாக விளாசி 18 ரன்களையும், யாஷ் தயால் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என 20 ரன்களையும் சேர்த்தார். 20 பந்துகளில் ஹெட் அரைசதம் அடித்தார். பவர்ப்ளே ஓவரில் சன்ரைசர்ஸ் 76 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளேயில் சன்சைர்ஸ் சேர்த்த 3வது அதிகபட்ச ரன்களாகும். இதற்குமுன் மும்பை அணிக்கு எதிராக 81 ரன்கள், சிஎஸ்கேவுக்கு எதிராக 77ரன்களும் சேர்த்திருந்தது. 7.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களை தொட்டது. அபிஷேக் சர்மா 34 ரன்களில் டாப்ளே பந்துவீச்சில் பெர்குஷனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஹெட், அபிஷேக் 108 ரன்கள் என வலுவான அடித்தளம் அமைத்தனர். கிளாசன் சிக்ஸர் மழை 2-ஆவது விக்கெட்டுக்கு கிளாசன் களமிறங்கி ஹெட்டுடன் சேர்ந்தார். முதல் 5 பந்துகளில் 3 ரன்கள் சேர்த்து மெதுவாகத் தொடங்கிய கிளாசன், அதன்பின் வாண வேடிக்கை நிகழ்த்தினார். டி20 போட்டிகளில் ஆபத்தான பேட்டராக கருதப்படும் கிளாசன், ஆர்சிபி பந்துவீச்சாளர்களை நேற்று வதம் செய்தார். பெர்குஷன், யாஷ் தயால் ஓவரில் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் கிளாசன் பேட்டிலிருந்து பறந்தன. மறுபுறம் டிராவிஸ் ஹெட்டும் சிக்ஸர், பவுண்டரி மழை பொழிந்து, 39 பந்துகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். டிராவிஸ் ஹெட் 102 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 57 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதிரடியாக ஆடிய கிளாசன் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். 14.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 200 ரன்களைத் தொட்டது. கிளாசன் 67 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீ்ச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த கிளாசன், ஹெட் ஆகிய இரு பேட்டர்களும் ஆட்டமிழந்து சென்றபின் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். கடைசி நேரத்தில் களமிறங்கிய அப்துல் சமது, மார்க்ரம் இருவரும் சூப்பர் கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினர். கடைசி இரு ஓவர்களில் மட்டும் இருவரும் 46 ரன்களைக் குவித்தனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசி வரை போராடியது பெருமை ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “இது முறையான டி20 ஆடுகளம். இன்று சேர்த்த ரன்களை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. அதுவே சாதனையாக மாறிவிட்டது. இந்த ஆடுகளத்தில் 270 ரன்கள்கூட சேஸிங் செய்யக்கூடியதுதான். இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவது கடினம். பாவம் பந்துவீச்சாளர்கள் பல நுணுக்கங்களை பயன்படுத்தி வீசியும் பயன் இல்லை. பேட்டர்கள் பக்கமே ஆட்டம் தொடர்ந்து போவது கடினம்தான். வித்தியாசமாக சந்திக்க வேண்டும். எங்கள் பேட்டிங்கில் சில தவறுகள் உள்ளன. அதை சரிசெய்வோம். பவர்ப்ளேக்குப்பின் நாங்கள் தவறுகளைத் திருத்த வேண்டியுள்ளது. ஆனால் கடைசிவரை எங்கள் வீரர்கள் போராடியது பெருமையாக இருந்தது. பந்துவீச்சைப் பொருத்தவரை பந்துவீச்சாளர்கள் எப்போதும் மனதை உற்சாக வைத்திருக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு நம்பிக்கை அளித்த தினேஷ் கார்த்திக் ஆர்சிபியும் பதிலடி கொடுக்க முயன்று, விக்கெட்டுகளை இழந்திருந்த தருணத்தில் தினேஷ் கார்த்திக் களமிறங்கி, அரங்கில் இருந்த ரசிகர்களுக்கு தனது பேட்டால் விருந்தளித்தார். லாம்ரோருடன் சேர்ந்து 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டிகே, சன்ரைசர்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தார். உனத்கட், மர்கண்டே வீசிய 13 மற்றும் 14வது ஓவர்களில் மட்டும் தினேஷ் கார்த்திக், லாம்ரோர் சேர்ந்து 46 ரன்கள் சேர்த்தனர். டிகே அடித்த ஷாட்களால் ரன்ரேட்டும் வேகமாக உயர்ந்தது, ரசிகர்களுக்கும் ஆர்சிபி வென்றுவிடும் என்ற நம்பிக்கை வந்தது. 23 பந்துகளில் டிகே அரைசதம் அடித்தார். லாம்ரோர் 19 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் போல்டாகினார். அடுத்துவந்த ராவத்துடன் சேர்ந்து தினேஷ் கார்த்திக் வெளுத்துவாங்கினார். அனுஜ் ராவத்துடன் சேர்ந்து 7-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தினேஷ் கார்த்திக் 83 ரன்னில் நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்தவரை ஆர்சிபி ரசிகர்களுக்கு வெற்றி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தனர். ஆனால் அவர் வெளியேறியபின், ரசிகர்களும் கலையத் தொடங்கினர். தினேஷ் கார்த்திக் கடைசிவரை போராடியும், ஆர்சிபி 25 ரன்களில் தோற்றது. https://www.bbc.com/tamil/articles/cj5l2j16y69o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.