Jump to content

தமிழர்களின் பெயரில் விடுதலைப் புலிகளின் செயலால் வெட்கி தலை குனிகிறேன்! சுமந்திரன் பகிரங்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் மக்களை வடக்கிலே இருந்து வெளியேற்றியது இனசுத்திகரிப்பு என்றே நான் கருதுகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இனசுத்திகரிப்பையிட்டு வெட்கி தலை குனிகிறேன் என்று சொன்னது ஏன், அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம் மக்களை வடக்கிலே இருந்து வெளியேற்றியது இனசுத்திகரிப்பு என்றே நான் கருதுகிறேன். நான் இப்படி சொன்னதற்கான காரணம் அது இனசுத்திகரிப்பு. விசேடமாக தமிழ் மக்கள் மீது நடந்தது இனப்படுகொலை என்று நாங்கள் சொல்கிறோம்.

இனப்படுகொலையை சரியான ஆதாரங்களோடு நிரூபிக்க வேண்டும் என பல தடவைகள் நான் சொல்லியிருக்கிறேன். அதையும் திரிபுபடுத்தி இனப்படுகொலை நடக்கவில்லையென நான் சொல்வதாக தெரிவிக்கிறார்கள்.

அப்படியல்ல இனப்படுகொலை நடந்தது. ஆனால் அது நிரூபிப்பதற்கு மிகவும் கடினமான சர்வதேச குற்றம்.

இனப்படுகொலை நடந்ததென சொல்லி சர்வதேசத்தை ஏற்றுக் கொள்ள வைக்க முனைகின்ற நாங்கள் இனசுத்திகரிப்பு நடந்தது என்பதை மறுத்தால் சர்வதேசம் ஒருபோதும் எங்களை ஏற்றுக் கொள்ளாது.

இனசுத்திகரிப்பு நடந்தது என்பது வெளிப்படையாக தெரிகின்ற ஒரு விடயம். நான் இன்னொரு உதாரணத்தையும் கூறுகிறேன்.

2007ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த போது திடீரென ஒரு நாள் அதிகாலையில் கொழும்பில் விடுதிகளில் தங்கியிருக்கின்ற தமிழர்களை வெளியேற்றுமாறு ஒரு பணிப்புரையை வழங்கி பேருந்துகளிலே எல்லாரும் ஏற்றப்பட்டு வடக்கிற்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

அன்றைக்கே நாங்கள் உடனடியாக ஒரு வழக்கு தாக்கல் செய்து அன்று காலையிலேயே பத்து மணிக்கு அதை தடுத்து நிறுத்துகின்ற ஒரு உத்தரவை நான் பெற்றிருந்தேன். வவுனியாவிற்கு பேருந்துகள் போய் சேருவதற்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டு திரும்பவும் அவர்கள் கொண்டு வரப்பட்டார்கள்.

அது குறித்து சர்வதேசத்திலே மிக மோசமான விமர்சனங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக எழுந்த காரணத்தினாலே அப்போது பிரதமராக இருந்த ரட்ண சிறி விக்ரமநாயக்க நாடாளுமன்றத்திலே மன்னிப்பு கோரினார்.

இலங்கையிலேயே ஒரு பிரதம மந்திரி மக்களிடம் மன்னிப்பு கோரியது அது ஒரு தடவை. ஏன் அவ்வாறு மன்னிப்பு கோரினார் என்றால் அது ஒரு இனசுத்திகரிப்பிற்கான நடவடிக்கை என்று நாங்கள் நீதிமன்றத்திலே சொல்லியிருந்தோம்.

உலக நாடுகள் அதனை ஏற்றிருந்தன. அங்கே நடந்தது என்ன? கொழும்பிலே வாழ்ந்த அத்தனை தமிழர்களையும் வெளியேற்றவில்லை. குறித்த சிறிய எண்ணிக்கையான விடுதிகளிலே இருந்தவர்களை வெளியேற்றியதையே இனசுத்திகரிப்பு என்று சர்வதேசம் சொல்லியிருக்கிறது.

அது தான் இனசுத்திகரிப்பிற்கான வரைவிலக்கணமாக இருந்தது. ஆனால் இலங்கையிலே வடக்கிலே நடந்தது முற்றுமுழுதாக, பரம்பரையாக வாழ்ந்துவந்த ஒருவரையும் விடாமல் அனைத்து முஸ்லிம்களையும் வெளியேற்றியது இனசுத்திகரிப்பு.

அது இல்லையென்று சொன்னால் ஒன்று சட்டம் தெரியாதவராக இருக்க வேண்டும். அதற்கு பிறகு என்னை சட்டத்தரணியென்று அழைக்க முடியாது. சர்வதேச குற்றங்களிலே இன்னொரு மோசமான குற்றம் இனசுத்திகரிப்பு.

ஆகவே அந்த குற்றம் தமிழ் மக்களின் பெயரினாலே நடத்தப்பட்டது. இதனாலேயே நான் வெட்கித்தலை குனிகிறேன் என பல தடவைகள் சொல்லியிருக்கிறேன். அதையே திரும்பவும் சொல்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

https://tamilwin.com/article/sumanthiran-interview-1630327520

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இவர் என்ன செய்ய சொல்லுரார்? அதுதான் சமாதானகாலத்தில் முஸ்லீம்காங்கிரஸ் தலைவரை வன்னிக்கு அழைத்து  விடுதலைப்புலிகளே அதற்கு மன்னிப்பும் கேட்டுவிட்டனரே…. முஸ்லீம்களை மீள்குடியமர்த்த தேவையான அனைத்தையும் செய்வதாக தலைவர் உறுதியும் அளித்திருந்தார்… பிறகு சண்டை வந்து புலிகளும் அழிந்துபோயினர்.. அதனால அந்த முயற்சி நடைபெறவில்லை.. வெளிநாட்டுக்கு வந்த சில நம்ம ஆட்கள் வெள்ளைக்காரருக்கு நடிப்பதுபோல புலிகளை தாங்கள் மட்டும் குத்தகைக்கு எடுத்தமாரி ஓவர் தமிழ்தேசிய அக்டிங் கோஸ்ட்டிகள் எழுதுவதற்கு எல்லாம் நாம் என்ன செய்ய..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சம்பவம் நடந்த காலப் பகுதியில் சுமந்திரன் எங்கு இருந்தார்.. அரசியலிலா.. இல்லை தூக்கத்திலா..??!

ஏனெனில்.. கிழக்கில் இருந்து தமிழ் மக்கள் குறிப்பாக மூதூர்..நிலாவெளி.. கிண்ணியா.. உட்பட திருமலை மாவட்டத்தில் இருந்து தமிழ் மக்கள் முஸ்லிம் ஊர்காவல் படையாலும்.. சொறீலங்கா இராணுவத்தாலும் அடித்து விரட்டப்பட்ட போது.. அந்த மக்களை வடக்கே அகதிகளாக ஏற்றுக் கொண்டது.

பிரேமதாச அரசின் தமிழ் - முஸ்லீம் மக்களைப் பிரித்தாலும் தந்திரத்தின் கீழ் வடக்கிலும் கிழக்கு போல் ஒரு சூழலை உருவாக்கும் செயற்திட்டம் இருந்ததும்.. மசூதிகளில் இருந்து ஆயுதங்களும் மீட்கப்பட்ட நிலையில்.. முஸ்லீம் மக்களின் பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு.. பிரேமதாச அரசின் சூழ்ச்சி வலைக்குள் சிக்காமல் இருக்கவும்.. முஸ்லிம்களை வடக்கில் இருந்து சம்பந்தப்பட்ட இனங்களின் பாதுகாப்பின் நிமித்தம்.. பாதுகாப்பான சூழல் திரும்பியதும்.. முஸ்லிம்கள் மீளத் திரும்பி வரலாம் என்ற அடிப்படையில் தான் பாதுகாப்பு வெளியேற்றம் செய்யப்பட்டார்கள்.

இது எந்த வகையிலும் இனச்சுத்திகரிப்பாகாது. இனச்சுத்திகரிப்பென்பது..  ஒரு இனக்கூட்டம் மக்களை நிரந்தரமாக இடம்பெயர வைப்பது தான்..! முஸ்லிம்கள் வடக்கு வெளியேற்றமென்பது.. பாதுகாப்பான மீள் அமர்வுக்குரிய வெளியேற்றமானதாகவே இருந்தது.

ஆனால் அஷ்ரப் கொம்பனி.. இதனை தமது அரசியல் ஆதாயத்திற்காக சிங்களவர்களோடு சேர்ந்து நின்று கொண்டு திரித்ததை.. இவர் இப்பவும் காவித் திரிகிறார்.

அப்படி என்றால்.. சந்திரிக்கா அம்மையார் காலத்தில்.. அனுரத்த ரத்வத்தையால்.. முஸ்லிம்கள் மாவனல்லையில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டதை இனச்சுத்திகரிப்பு என்பாரா..??!

தமிழ் மக்கள் 1983 இல் கொழும்பிலும் தெற்கிலும் இருந்து இன ரீதியாக படுகொலை செய்யப்பட்டும்..துரத்தி அடிக்கப்பட்டதும்.. இனப்படுகொலையும் இனச்சுத்திகரிப்பும் என்று சொல்வாரா.. ஏன் அதைச் சொல்ல மட்டும்.. பெரிய ஆதாரம் தேடுகிறார்..???!

தமிழ் மக்கள் மீது என்று திட்டமிட்டு செய்யப்பட்ட இராணுவ அட்டூழியங்களும்.. படுகொலைகளும்..  திட்டமிட்ட இனப்படுகொலை தான். இதனை எத்தனையோ உலக உதாரணங்கள் உலகிற்கு இனங்காட்டி உள்ள நிலையில்.. இவர்.. இனச்சுத்திகரிப்பு.. என்று திரிபு வசனம்.. பேசி.. சொந்த இனம் கடந்த 70 ஆண்டுகளாக சந்தித்த,, சந்தித்த வரும்... இனப்படுகொலைக்கு ஆதாரம் தேடிக்கிட்டு இருப்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.

சிங்களவர்களோட வாழக் கிடைத்தது ஒரு பாக்கியம் என்று சொல்லும் ஆளுக்கு எப்படி சொந்த இனப்படுகொலை கண்ணுக்குத் தெரியும்.  பாதுகாப்பான.. மீள்வருகை உறுதிப்படுத்தப்பட்ட வெளியேற்றத்தை தன் இஸ்டத்துக்கு.. இனச்சுத்திகரிப்பு என்று கொண்டு திரிகிறார். எதனை எதற்கு சமப்படுத்த முனைகிறார் இவர்..???! 

Link to comment
Share on other sites

எங்களில் (தமிழர்) கவனித்துப் பார்த்தால் அநேகமான படித்தவர்கள் வேறு இனத்தவருக்கு என்றால் நியாயத்தைக் கதைப்பதும் இதுவே தம்மினத்துக்கு நடந்ததால் அதற்கு பல காரணங்களையும் சொல்வார்கள். இதுவும் ஒரு அடிமைத்தனத்தின் வெளிப்பாடு என்றே சொல்லலாம் ஓர் பயம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு தன் வேலை பகுப்பு என்ன என்பதில் ஆரம்பம் முதலே தடுமாற்றம்.

நீங்கள் நீதிபதி அல்ல சுமந்திரன்.

நாம் தேர்வு செய்து அனுப்பிய எம்பி. அதாவது நம் தரப்பு வக்கீல்.

எமது வக்கீலாக நீங்கள் எங்கள் தரப்பு நியாத்தை மட்டும்தான் கதைக்க வேண்டும்.

முஸ்லீம்கள், சிங்களவர் தரப்பு நியாயத்தை அவர்கள் தரப்பு வக்கீல்கள் போதிய அளவு கதைப்பார்கள்.

இல்லை நான் எல்லா தரப்பு நியாயத்தையும் கதைப்பேன் என்றால் - நீங்கள் தமிழர் தரப்பின் வக்கீல்/பிரதிநிதி என்ற பதவிநிலைய (எம்பி) துறந்து விட்டு, ஒரு சட்ட வல்லுனராக கருத்து சொல்லுங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையைத்தான் கூறி உள்ளார். இதை இடைக்கிடை நினைவுபடுத்த வேண்டியது தேவையான விடயமும் கூட.

உண்மையைத்தான் கூறி உள்ளார். இதை இடைக்கிடை நினைவுபடுத்த வேண்டியது தேவையான விடயமும் கூட.

2 minutes ago, goshan_che said:

சுமந்திரனுக்கு தன் வேலை பகுப்பு என்ன என்பதில் ஆரம்பம் முதலே தடுமாற்றம்.

நீங்கள் நீதிபதி அல்ல சுமந்திரன்.

நாம் தேர்வு செய்து அனுப்பிய எம்பி. அதாவது நம் தரப்பு வக்கீல்.

எமது வக்கீலாக நீங்கள் எங்கள் தரப்பு நியாத்தை மட்டும்தான் கதைக்க வேண்டும்.

முஸ்லீம்கள், சிங்களவர் தரப்பு நியாயத்தை அவர்கள் தரப்பு வக்கீல்கள் போதிய அளவு கதைப்பார்கள்.

இல்லை நான் எல்லா தரப்பு நியாயத்தையும் கதைப்பேன் என்றால் - நீங்கள் தமிழர் தரப்பின் வக்கீல்/பிரதிநிதி என்ற பதவிநிலைய (எம்பி) துறந்து விட்டு, ஒரு சட்ட வல்லுனராக கருத்து சொல்லுங்கள்.

 

 

நம் தரப்பு என்றால் யார் தரப்பு? தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பா? இதற்கு நாடு கடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமார் உள்ளார் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையைக் கூற ஒரு தரப்பு அரசியல் வாதியாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை! இது அவருடைய நீதியுணர்வு சார்ந்த கருத்து - அவ்வளவு தான்! உடன்பட வேண்டுமென்றில்லை!

ஆனால், முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக "பௌத்திரமாகப் போயிற்று திரும்பி வாங்கோ!" என்று அனுப்பி வைத்ததாக ஜோக் வேறு அடிக்கிறார்கள்!😂

 2007 இல் கோத்தாவும் இப்படித் தான் "கொழும்பில் தமிழருக்கு பாதுகாப்பில்லை" என்று பவுத்திரமாக வடக்கிற்கு அனுப்பி வைக்க முயன்றிருப்பார் போல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

உண்மையைக் கூற ஒரு தரப்பு அரசியல் வாதியாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை! இது அவருடைய நீதியுணர்வு சார்ந்த கருத்து - அவ்வளவு தான்! உடன்பட வேண்டுமென்றில்லை!

ஆனால், முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக "பௌத்திரமாகப் போயிற்று திரும்பி வாங்கோ!" என்று அனுப்பி வைத்ததாக ஜோக் வேறு அடிக்கிறார்கள்!😂

 2007 இல் கோத்தாவும் இப்படித் தான் "கொழும்பில் தமிழருக்கு பாதுகாப்பில்லை" என்று பவுத்திரமாக வடக்கிற்கு அனுப்பி வைக்க முயன்றிருப்பார் போல!

என்னை தார் பேணியுடன் வருவது என்று  தாங்குதல் நடத்தி உள்ளீர்கள் வேறு திரியில்  உங்களை வெள்ளையடிப்பு பேணி இங்கு வந்திடடார்  என்று சொன்னால் நிர்வாகம் விடுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

இந்தச் சம்பவம் நடந்த காலப் பகுதியில் சுமந்திரன் எங்கு இருந்தார்.. அரசியலிலா.. இல்லை தூக்கத்திலா..??!

ஏனெனில்.. கிழக்கில் இருந்து தமிழ் மக்கள் குறிப்பாக மூதூர்..நிலாவெளி.. கிண்ணியா.. உட்பட திருமலை மாவட்டத்தில் இருந்து தமிழ் மக்கள் முஸ்லிம் ஊர்காவல் படையாலும்.. சொறீலங்கா இராணுவத்தாலும் அடித்து விரட்டப்பட்ட போது.. அந்த மக்களை வடக்கே அகதிகளாக ஏற்றுக் கொண்டது.

பிரேமதாச அரசின் தமிழ் - முஸ்லீம் மக்களைப் பிரித்தாலும் தந்திரத்தின் கீழ் வடக்கிலும் கிழக்கு போல் ஒரு சூழலை உருவாக்கும் செயற்திட்டம் இருந்ததும்.. மசூதிகளில் இருந்து ஆயுதங்களும் மீட்கப்பட்ட நிலையில்.. முஸ்லீம் மக்களின் பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு.. பிரேமதாச அரசின் சூழ்ச்சி வலைக்குள் சிக்காமல் இருக்கவும்.. முஸ்லிம்களை வடக்கில் இருந்து சம்பந்தப்பட்ட இனங்களின் பாதுகாப்பின் நிமித்தம்.. பாதுகாப்பான சூழல் திரும்பியதும்.. முஸ்லிம்கள் மீளத் திரும்பி வரலாம் என்ற அடிப்படையில் தான் பாதுகாப்பு வெளியேற்றம் செய்யப்பட்டார்கள்.

இது எந்த வகையிலும் இனச்சுத்திகரிப்பாகாது. இனச்சுத்திகரிப்பென்பது..  ஒரு இனக்கூட்டம் மக்களை நிரந்தரமாக இடம்பெயர வைப்பது தான்..! முஸ்லிம்கள் வடக்கு வெளியேற்றமென்பது.. பாதுகாப்பான மீள் அமர்வுக்குரிய வெளியேற்றமானதாகவே இருந்தது.

ஆனால் அஷ்ரப் கொம்பனி.. இதனை தமது அரசியல் ஆதாயத்திற்காக சிங்களவர்களோடு சேர்ந்து நின்று கொண்டு திரித்ததை.. இவர் இப்பவும் காவித் திரிகிறார்.

அப்படி என்றால்.. சந்திரிக்கா அம்மையார் காலத்தில்.. அனுரத்த ரத்வத்தையால்.. முஸ்லிம்கள் மாவனல்லையில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டதை இனச்சுத்திகரிப்பு என்பாரா..??!

 பாதுகாப்பான.. மீள்வருகை உறுதிப்படுத்தப்பட்ட வெளியேற்றத்தை தன் இஸ்டத்துக்கு.. இனச்சுத்திகரிப்பு என்று கொண்டு திரிகிறார். 

 

இந்தா வந்துட்டானுக நான் சொன்ன ஓவர் அக்டிங் கோஸ்டி… இவனுங்களாலதான் இந்தமாரி விசர்க்கதையளாலதான் இயக்கத்துக்கு கெட்டபெயர்.. இயக்கத்தை மட்டம்தட்ட இதுகளை எடுத்துபோட்டு எழுத,பேச சுமந்திரன், புலிஎதிர்ப்பு இலக்கியவாதிகள் மாதிரி பல கோஷ்ட்டி வெளீல வெயிட் பண்ணிட்டு இருக்கு

(இதை நான் நெடுக்கைதனிமனித தாக்க எழுதவில்லை.. வெளிய சமூகத்தில் இருக்கும் அந்த கோஸ்டியின் விம்பமாக கருதி எழுதுகிறேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்தா வந்துட்டானுக நான் சொன்ன ஓவர் அக்டிங் கோஸ்டி… இவனுங்களாலதான் இயக்கத்துக்கு கெட்டபெயர்..

தனிப்பட்ட தாக்குதல் வேண்டாமே என்ன பிழையாக நெடுக்கு எழுதி விட்டார் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

முஸ்லிம் மக்களை வடக்கிலே இருந்து வெளியேற்றியது இனசுத்திகரிப்பு என்றே நான் கருதுகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மிஸ்டர் சுமந்திரனை சிலோன் தொடக்கம் சிறிலங்கா ஈறாக முள்ளிவாய்க்கால் அழிவுகள் வரை உள்ள வரலாறுகளை படித்துவிட்டு அறிக்கை விடச்சொல்லுங்கள்.
காட்டிக்கொடுப்போர் வெளியேற்றத்திற்கும் இன சுத்திகரிப்பிற்கும் வித்தியாசம் தெரியாதவராக இருக்கின்றார்.

சிங்களத்திற்கு வெள்ளை அடிப்பவர்கள் இந்த படத்தை கவனிக்கவும்.
சிங்களச்சிறிலங்காவின் இனவாத வரலாறுகளில் இதுவும் ஒன்று.

 

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

தனிப்பட்ட தாக்குதல் வேண்டாமே என்ன பிழையாக நெடுக்கு எழுதி விட்டார் ?

பின்ன என்ன அண்ணை புலிகளே மன்னிப்பு கேட்ட ஒரு விடயத்துக்கு மொக்குதனமா முட்டுகுடுத்தா..?

ஆனா இதை நான் அவரை நினைத்து எழுதவில்லை.. வெளிய முகநூலில் நிறையபேர் இப்படி இருக்கினம்.. அவைய மனசில வச்சு எழுதினது..

Link to comment
Share on other sites

ஈழத்தமிழர்கள் என்றுமே பயங்கரவாதிகள்தான். சிங்களவரின் நிலத்தை தமது என்று நிறுவ முயல்வது முதல் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்தது வரை எல்லாமே பயங்கரவாதம் என்று எல்லா உலகநாடுகளும் உரத்து சொல்லிவிட்டன. அதனால்தான் ஈழம் பயங்கரவாதிகளின் நாடாகிவிடும் என்பதால் அப்படியே உலகநாடுகள் எல்லாம் சேர்ந்து பொசுக்கென்று அமத்தி அழித்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்தா வந்துட்டானுக நான் சொன்ன ஓவர் அக்டிங் கோஸ்டி… இவனுங்களாலதான் இயக்கத்துக்கு கெட்டபெயர்..

(இதை நான் நெடுக்கைதனிமனித தாக்க எழுதவில்லை.. வெளிய சமூகத்தில் இருக்கும் அந்த கோஸ்டியின் விம்பமக கருதி எழுதுகிறேன்)

வரலாற்றை அறிய விரும்பினால்.. சம்பந்தப்பட்டவர்களே பதிந்திருப்பதைப் படியுங்கள்.

உங்களின் விருப்பு வெறுப்புக்கு.. அல்லது தேவைக்கு ஏற்ப சம்பவங்களை நாங்கள் எழுத முடியாது. 

https://tamileelamarchive.com/wp-content/uploads/2020/01/V_P_18.pdf

5 minutes ago, கற்பகதரு said:

ஈழத்தமிழர்கள் என்றுமே பயங்கரவாதிகள்தான். சிங்களவரின் நிலத்தை தமது என்று நிறுவ முயல்வது முதல் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்தது வரை எல்லாமே பயங்கரவாதம் என்று எல்லா உலகநாடுகளும் உரத்து சொல்லிவிட்டன. அதனால்தான் ஈழம் பயங்கரவாதிகளின் நாடாகிவிடும் என்பதால் அப்படியே உலகநாடுகள் எல்லாம் சேர்ந்து பொசுக்கென்று அமத்தி அழித்து விட்டார்கள்.

ஆமாம் ஆமாம். தலிபானும் ஆப்கானிஸ்தானும்.. மட்டும்.. சுத்தம். 

நீங்கள் எல்லாம்.. எழுதி என்ன பயன். வெட்டிக்கருத்துக்கள். அவனவன் தன் தேவைக்கு செய்வதை.. எல்லாம்.. இப்போ சீனாவை இறக்கிவிட்டது தான் கண்ட மிச்சம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

உண்மையைத்தான் கூறி உள்ளார். இதை இடைக்கிடை நினைவுபடுத்த வேண்டியது தேவையான விடயமும் கூட.

உண்மையைத்தான் கூறி உள்ளார். இதை இடைக்கிடை நினைவுபடுத்த வேண்டியது தேவையான விடயமும் கூட.

 

நம் தரப்பு என்றால் யார் தரப்பு? தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பா? இதற்கு நாடு கடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமார் உள்ளார் இல்லையா?

 

15 minutes ago, Justin said:

உண்மையைக் கூற ஒரு தரப்பு அரசியல் வாதியாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை! இது அவருடைய நீதியுணர்வு சார்ந்த கருத்து - அவ்வளவு தான்! உடன்பட வேண்டுமென்றில்லை!

ஆனால், முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக "பௌத்திரமாகப் போயிற்று திரும்பி வாங்கோ!" என்று அனுப்பி வைத்ததாக ஜோக் வேறு அடிக்கிறார்கள்!😂

 2007 இல் கோத்தாவும் இப்படித் தான் "கொழும்பில் தமிழருக்கு பாதுகாப்பில்லை" என்று பவுத்திரமாக வடக்கிற்கு அனுப்பி வைக்க முயன்றிருப்பார் போல!

நான் முன்பும் ஒருதரம் எழுதியுள்ளேன். சுமந்திரன் ஒரு நல்ல வக்கீலா என்பதில்  எனக்கு டவுட் உண்டு, ஆனால் அவர் ஒரு கெட்டிகார அரசியல்வாதி இல்லை. 

எதையும் பேசுவதற்கு இடம், பொருள், ஏவல் உண்டு.

அமெரிக்கா செய்த மனித உரிமை மீறல்கள் பற்றி எந்த அமெரிக்க ஜனாதிபதியாவது, மனம் திறந்து on the record ஆக உண்மையை பேசுவார்களா? இல்லை. 

இதுதான் அரசியல். ஒரு அரசியல்வாதிக்கு இந்த பண்பு அவசியம். சுமந்திரன் ஒரு loose cannon. 

அவர் பெட்டி வாங்கினார், சிங்கள ஏஜெண்ட் இவை எல்லாம் பொய்யாகவே இருக்கட்டும், ஆனால் ஒரு அரசியல்வாதியாக he is not fit for purpose. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கற்பகதரு said:

ஈழத்தமிழர்கள் என்றுமே பயங்கரவாதிகள்தான். சிங்களவரின் நிலத்தை தமது என்று நிறுவ முயல்வது முதல் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்தது வரை எல்லாமே பயங்கரவாதம் என்று எல்லா உலகநாடுகளும் உரத்து சொல்லிவிட்டன. அதனால்தான் ஈழம் பயங்கரவாதிகளின் நாடாகிவிடும் என்பதால் அப்படியே உலகநாடுகள் எல்லாம் சேர்ந்து பொசுக்கென்று அமத்தி அழித்து விட்டார்கள்.

 நீங்கள் சொல்லும் ஈழத்தமிழன் பயங்கரவாதியாக எந்த நாட்டில் குண்டு வைத்து பொதுமக்களை சாகடித்தான்? உலகையே அதிரவைத்த பலஸ்தீனர் கூட இன்று பயங்கரவாதிகள் இல்லையாம். ஆனால் இஞ்சை ஒண்டு கூட்டிக்குடுக்குது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, nedukkalapoovan said:

வரலாற்றை அறிய விரும்பினால்.. சம்பந்தப்பட்டவர்களே பதிந்திருப்பதைப் படியுங்கள்.

உங்களின் விருப்பு வெறுப்புக்கு.. அல்லது தேவைக்கு ஏற்ப சம்பவங்களை நாங்கள் எழுத முடியாது. 

https://tamileelamarchive.com/wp-content/uploads/2020/01/V_P_18.pdf

 

சம்பந்தப்பட்டவர்கள்தான் பின்னர் சர்வதேச ஊடகவியளாளர் மாநாட்டில் மன்னிப்பும் கேட்டிருந்தனர்.. முயலுக்கு மூண்டுகால் எண்டு நிறுவ உங்கட வசதிக்கு புதுச மறச்சுட்டு பழச தூக்கிவராதைங்கோ.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, nedukkalapoovan said:

வரலாற்றை அறிய விரும்பினால்.. சம்பந்தப்பட்டவர்களே பதிந்திருப்பதைப் படியுங்கள்.

உங்களின் விருப்பு வெறுப்புக்கு.. அல்லது தேவைக்கு ஏற்ப சம்பவங்களை நாங்கள் எழுத முடியாது. 

https://tamileelamarchive.com/wp-content/uploads/2020/01/V_P_18.pdf

 

சம்பந்தப்பட்டவர்கள்தான் பின்னர் சர்வதேச ஊடகவியளாளர் மாநாட்டில் மன்னிப்பும் கேட்டிருந்தனர்.. முஸ்லிம் மக்களை வெளியேற்றியதையிட்டுத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வருந்துவதாக ஏற்கனவே 1994ஆம் ஆண்டு பி.பி.சி நிறுவனத்திற்கு வழங்கிய செவ்வியில் தலைவர் அவர்கள் தெரிவித்திருந்தார். இதன் பின்னர் 2002ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இச்சம்பவத்திற்குத் தலைவர் அவர்கள் மன்னிப்புக் கோரியதோடு வடக்கில் மீளவும் முஸ்லிம்கள் குடியேறுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் அறிவித்திருந்தார்.

முயலுக்கு மூண்டுகால் எண்டு நிறுவ உங்கட வசதிக்கு புதுச மறச்சுட்டு பழச தூக்கிவராதைங்கோ.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் ஊர்காவல் படையினர் தமிழருக்கு செய்த அநியாயங்களை சொல்வதன் மூலம் எமது தவறுகளை சரிப்படுத்திவிட முடியாது.. அவர்கள் செய்தது அது பெரும் கொடுமை..

 

//“கல்முனையில் இராணுவப் பயங்கரவாதத்திலிருந்து தப்பி ஓடிக் கொண்டிருந்த 14 வயதுத் தமிழ் யுவதி ஒருத்தி சிங்களப் படைகளிடம் சிக்கிப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டாள். பின்னர் இவள் முஸ்லிம் ஊர்காவற் படையிடம் கொடுக்கப்பட்டாள். ஒரு கல்லை நட்டு, நிர்வாணமாக அதை மூன்று முறை சுற்றும்படி பணிக்கப்பட்டாள். அவ்விதமே சுற்றி வந்ததும், ‘இஸ்லாமிய மார்க்கத்தில் விபச்சாரிக்குரிய தண்டனை இதுதான்’ எனக் கூறிக்கொண்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட அந்தத் தமிழ் யுவதியைக் கல்லால் எறிந்து கொன்றார்கள். மட்டக்களப்புப் பிராந்திய அரசியல் பொறுப்பாளர் கரிகாலனின் கூற்றுப்படி என்றுமில்லாதவாறு இன்று தென்தமிழீழத்தில் தமிழ் இனப்படுகொலை நடைபெறுகின்றது. இம்முறை சிங்களப் பேரினவாதிகளுடன் முஸ்லிம் வெறியர்களும் இணைந்து விட்டார்கள்…”//

 

//“கடந்த ஆனி மாதம் 11ஆம் திகதி (11.06.1990) தொடங்கிய தமிழீழ – சிறீலங்காப் போரைத் தொடர்ந்து அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலைப் பகுதிகளில் ஆயுதம் தாங்கிய முஸ்லிம் கும்பல்களினால் தமிழ் மக்கள் கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். மிருகத்தனமான முறையில் தமிழ்ப் பெண்கள் முஸ்லிம் காடையர்களினால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகின்றனர். சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்ற பேதமில்லாது காட்டுமிராண்டித்தனமாக வெட்டியும், குத்தியும் கொல்லப்படுகின்றார்கள். கொல்லப்படும் தமிழர்களின் தலைகள் கொய்யப்பட்டுச் சாக்கினுள் கட்டிக் கடலினுள் வீசப்படுகின்றன. படுகொலை செய்யப்படும் இளைஞர்களினதும், இளம் பெண்களினதும் சடலங்கள் சோடி சோடியாகக் கட்டி, ஆற்றில் எறிந்து மிலேச்சத்தனமாக இரசனைகளை முஸ்லிம் காடையர்கள் வெளிப்படுத்துகின்றனர். பாண்டிருப்பு கல்முனை, வீரமுனை, சொறிகல்முனை, இவைபோன்று அம்பாறை மாவட்டத்திலிருக்கும் பல தமிழர் கிராமங்கள் பூண்டோடு அழிக்கப்பட்டு அங்கே முஸ்லிம் குடியேற்றங்களை உருவாக்கி மண்ணை அபகரிக்கும் திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.”//

 

மறக்கவோ மன்னிக்கவோ முடியாத கொடுஞ்செயல்கள் இந்த கயவர்கள் எம் இனத்திற்கு செய்தது.. அதுவும் தென் தமிழ் ஈழம் இவர்களால் அடைந்த துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல.. யாழ்ப்பாணத்தில் இருந்திருந்தால் கொலைசெய்வதில் ஈபிடீபியை சைட் எடுத்திருப்பார்கள் முஸ்லிம் ஊர்காவட்படை காடையர்கள்..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியர்கள் தமது வாழ்விடங்களை விட்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டது பற்றி அந்த சம்பவம் நடைபெற்ற காலத்தில் வெளிநாடுகளில் வாழ்ந்தவர்கள், இந்த பூமியிலேயே  பிறக்காதவர்கள், குழந்தைகள், சிறுவர் பராயத்தில் நின்றவர்கள், மற்றும் கூகிழ் துணையுடன் ஒரு தரப்பு வாதத்தை மட்டும் வாசித்துவிட்டு கருத்திடுபவர்கள் நடந்த விடயங்களை நேர்மையுடன் கூறுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

மேற்கண்ட காலத்தில் அமைப்பில் இயங்கிய இஸ்லாமியர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பொறுப்பாளர்களினால் பாதுகாப்பு காரணங்களை கூறி வெளியேற்றப்பட்டார்கள்.

இஸ்லாமியர்களின் அசையும், அசையா சொத்துக்கள் அனைத்தும் விடுதலைப்புலிகளினால் கைவசப்படுத்தப்பட்டன. அள்ளப்பட்ட தங்க நகைகள் உட்பட இவற்றின் மொத்த பெறுமதி எத்தனை கோடிகள் எவருக்குமே தெரியாது.

மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட உடமைகளுடன் இரவோடு இரவாக உடுத்த உடுப்புக்களுடனும் அநாதைகளாக வெளியேற்றப்பட்ட இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரும் கடும் உடல் பரிசோதனைகளுக்கு விடுதலைப்புலிகள் அமைப்பு போராளிகளினால் உட்படுத்தப்பட்டார்கள். மார்பு கச்சையினுள், உள் ஆடைகளினுள் மறைத்து வைத்த இஸ்லாமிய பெண்களின் தங்க ஆபரணங்களை அவர்கள் கதறி அழவும் பெண் போராளிகள் பலவந்தமாக பறித்து எடுத்துக்கொண்டார்கள்.

யாழ்ப்பாணத்தில் அந்த நேரம் நடைபெற்ற இந்த சம்பவம் மனச்சாட்சி உள்ள எந்த ஒரு தமிழனையும் உலுக்கி எடுத்து இருக்கும்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அழிவுக்கு பாதை சமைத்தவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல. அமைப்பை காட்டி கொடுத்ததும், சின்னாபின்னம் செய்ததும் பிரதானமாக அமைப்பினுள் உள்ளே செயற்பட்டவர்களும், தலைவர் பிரபாகரனின் நம்பிக்கை பாத்திரமானவர்களும், உறவினர்களும், மற்றும் தம்மை அமைப்பின் விசுவாசிகளாக காட்டிக்கொண்டவர்களுமே என்பது பலர் அறிந்த உண்மை. இஸ்லாமியர்கள் தமது தோல்விக்கு காரணம் என்பது நகைப்புக்கு உரியது.

இவ்வளவும் நடந்தும்..

அந்த நேரம் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட எனது ஒரு இஸ்லாமிய நண்பருடன் இன்றும் நல்ல தொடர்பு உள்ளது. அவர் இப்போதும் பெருந்தன்மையுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மீது அபிமானமே வைத்து உள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

யாழ்ப்பாணத்தில் அந்த நேரம் நடைபெற்ற இந்த சம்பவம் மனச்சாட்சி உள்ள எந்த ஒரு தமிழனையும் உலுக்கி எடுத்து இருக்கும்.

சம்பந்தப்பட்டவர்களால் மன்னிப்பு கேட்டு முடித்து வைக்கப்பட்ட சம்பவத்திற்கு உங்களைப்போன்றோர் எண்ணை ஊற்றி எரிய வைப்பதன் நோக்கம் புரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கன் எம்பஸீஸ் சந்திப்பு சும்முக்கு வேலைசெயுது..பொட்டி பெருசா வரணும் என்றால்...இப்படித்தான் அத்திவாரம் போடவேணும்...தமிழ் சனம் செத்த்தது இன அழிப்பு இல்லை....சோனிகளை வெளியேற்றினது இன அழிப்பு....தவராசாவி வழ்க்கு எல்லாம் அவையிடமிருந்து வரவேணும்...அப்ப இந்தமுறை அய்.நாவில் சுமந்து கொண்டுபோற   வெடிதான் ஆப்புப் போலை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

யாழ்ப்பாணத்தில் அந்த நேரம் நடைபெற்ற இந்த சம்பவம் மனச்சாட்சி உள்ள எந்த ஒரு தமிழனையும் உலுக்கி எடுத்து இருக்கும்.

கிழக்கில் தமிழை பேசி கொண்டு தமிழருடன் அயலவராய் வாழ்ந்துகொண்டு முஸ்லீம் ஊர்காவல்படை என்ற பெயரில் அஷ்ரப் எனும் மனித தன்மையே அற்ற கொடூரனின் ஆசீர்வாததுடன் சிங்கள படைகளுடன் இணைந்து அம்பாறை-மட்டக்களப்பு பகுதிகளில்  தமிழர்களை கொத்து கொத்தாய் முஸ்லிம்காடையர்கள் படுகொலை செய்தபோது,தமிழர் விவசாய நிலங்களிலிருந்து  வாழ்விடங்களிலிருந்து   விரட்டி அவர்கள் பகுதிகளை முஸ்லீம்கள் சிங்களவருடன் சேர்ந்து அபகரித்தபோது அங்குள்ள மனசாட்சியுள்ள முஸ்லீம்கள் யாரையாவது அது உலுக்கியிருக்கிறதா அண்ண?

யாழில் தமிழர்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டு சிங்கள விமானபடைக்கு தகவல் சொல்லி விமானகுண்டுவீச்சில் பல தமிழர்கள் கொல்லப்பட காரணமாயிருந்தவர்களில் பலர் முஸ்லீம்கள், கையும் மெய்யுமாய் வேறு பிடிபட்டார்கள், அது தவறென்று உங்கள் மனதை உலுக்கியதுண்டா?

அப்படி உலுக்கி முஸ்லீம் பயங்கரவாதிகள்  தமிழர்களுக்கு பண்ணுவது தவறென்று சொன்னதுண்டா பெரியவரே? மனசாட்சி என்ற ஒன்று இருந்தால்தானே உலுக்க.’

இதுவெல்லாம் யாழ்நகரிலிருந்து முஸ்லீம்கள் புலிகளால் வெளியேற்றபடமுன்னர், தமிழர் பகுதிகளில் மனசாட்சியே இல்லாத முஸ்லீம்கள் தமிழருக்கு பண்ணிய அநியாயங்கள். பொறுத்து பொறுத்து பார்த்த புலிகள் மேற்கொண்ட ஒரு தற்கால நடவடிக்கையே முஸ்லீம்கள் வெளியேற்றம்.

ஆனால் புலிகள் முஸ்லிம் காடையர்கள்போல் தங்கள் நிலத்தில் வாழ்ந்த முஸ்லீம்களை படுகொலை செய்யவில்லை தற்காலிகமாக இடம்பெயரதான் சொன்னார்கள்.

தமிழருக்கு நீங்கள் பண்ணிய படுபாதகங்கள் சரியன்றால் இதுவும் சரி,  தவறென்றால் அதுவும் தவறு. ஆனால் நீங்கள் பண்ணிய தவறுகளை உள்ளூரிலும் சரி, உலக அளவிலும் சரி ஏற்றுக்கொண்டதாய் சரித்திரமேயில்லை, ஆனால் நீங்கள் கொடூரமான செயல்களை எமது இனத்துக்கு புரிந்திருந்தும் முஸ்லீம்களை வெளியேற்றியது தவறுதான் என்று புலிகள் ஒரு கட்டத்தில் ஒத்துக்கொண்டார்கள், ஏனெனில் புலிகள் நாகரிக இனத்திலிருந்து உருவான ஒரு போராட்ட இயக்கம்.

நம்மை பயங்கரவாதிகள் என்று பிறர் அழைத்தால் நாம் எம்மைவிட கொடிய பயங்கரவாதிகளுக்கெதிராக போர் புரிந்தோம் அதனால் அவர்களை அந்த வழியிலேயே எதிர்கொண்டோம், உலக அரசுகள் அரசுகளுக்கே ஆதரவு வழங்கும் என்ற கொள்கையின் அடிப்படையில் அரச பயங்கரவாதத்தை உலகம் கண்டுகொள்ளவில்லை,

ஆனால் அரசு செய்வது பயங்கரவாதம் என்று உலகநாடுகள் அனைத்துக்குமே தெரியும் அதனால்தால் பல லட்சக்கணக்கில் உலகமெங்கும் எம்மை அகதியாய் ஏற்றுக்கொண்டார்கள், சிங்களவனையும் முஸ்லீம்களையும்  ஒப்பீட்டளவில் எம்மைப்போல் லட்சக்கணக்கில் அகதியாய் அங்கீகரிக்கவில்லை.

அதிலிருந்தே தெரியவில்லையா உலகத்துக்கு  உங்கள் மனசாட்சியின் லட்சணம் எப்போதோ தெரிந்துவிட்டது என்று?

 

2 hours ago, கற்பகதரு said:

ஈழத்தமிழர்கள் என்றுமே பயங்கரவாதிகள்தான். சிங்களவரின் நிலத்தை தமது என்று நிறுவ முயல்வது முதல்

சிங்கள நிலத்தை அபகரிக்க முயன்றவர்களுடன் எதற்கு தாய்லாந்து ஜெனீவா நோர்வே வரை சென்று சிங்கள அரசுகள் பேசியது ஐயா? பயங்கரவாதிகளுடன் எதற்கு சர்வதேச மத்தியஸ்தம் வன்னி கொழும்பு யாழ்வரை சென்று பேச்சு எல்லாம் சிங்களம் நாடியது பெரியவரே?

சரி இவ்வளவுபேசுகிறீர்களே, நீங்கள் தமிழரா முஸ்லீமா? ஏனெனில் தமிழராக இருந்தால் நீங்களும் நீங்கள் சொன்ன பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்ந்துவிடுவீர்களே அந்த கவலையில் கேட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

 

நான் முன்பும் ஒருதரம் எழுதியுள்ளேன். சுமந்திரன் ஒரு நல்ல வக்கீலா என்பதில்  எனக்கு டவுட் உண்டு, ஆனால் அவர் ஒரு கெட்டிகார அரசியல்வாதி இல்லை. 

எதையும் பேசுவதற்கு இடம், பொருள், ஏவல் உண்டு.

அமெரிக்கா செய்த மனித உரிமை மீறல்கள் பற்றி எந்த அமெரிக்க ஜனாதிபதியாவது, மனம் திறந்து on the record ஆக உண்மையை பேசுவார்களா? இல்லை. 

இதுதான் அரசியல். ஒரு அரசியல்வாதிக்கு இந்த பண்பு அவசியம். சுமந்திரன் ஒரு loose cannon. 

அவர் பெட்டி வாங்கினார், சிங்கள ஏஜெண்ட் இவை எல்லாம் பொய்யாகவே இருக்கட்டும், ஆனால் ஒரு அரசியல்வாதியாக he is not fit for purpose. 

 

உண்மை, ஆனால் ஒரு திருத்தம் - சுமந்திரன் எங்கள் தீவிர தேசியர்களுக்கு உரிய அரசியல் வாதியல்ல என்று வர வேண்டும்!

 ஆனால் அவர் சொல்வதில் உள்ள நியாயங்கள், உண்மைகள் சுட்டாலும் , புரிந்து கொண்டு நகரும் மக்களே பெரும்பான்மையான தமிழர்கள் என்பது என் கணிப்பு!

ஒரு அரசியல்வாதி தன் வாக்காளர்கள் கேட்க விரும்புவதை மட்டும் பேசி, சில இடங்களில் கள்ள மௌனம் காத்து தேர்தலில் வென்று பென்சன் வாங்கி விட்டுப் போவதால் யாருக்கு என்ன பயன்? அவருக்கென்று இருக்கும் moral compass ஐயும் பயன்படுத்த வேண்டும்! இல்லையேல், ட்ரம்ப் செய்த எந்தச் செயலையும் கள்ள மௌனம் மூலம் ஆதரிக்கும் குடியரசுக் கட்சி கள்ள அரசியல் வாதிகளுக்கும் சுமந்திரனுக்கும் என்ன வேறு பாடு? 

இப்படி சுமந்திரன் பேசுவதை  விரும்பா விட்டால் வாக்களர்கள் அவரைத் தேர்வு செய்யாமல் விடலாம் - இப்படி அவரே கடந்த தேர்தல் நேரத்தில் சொல்லியிருந்தார்! 

3 hours ago, பெருமாள் said:

என்னை தார் பேணியுடன் வருவது என்று  தாங்குதல் நடத்தி உள்ளீர்கள் வேறு திரியில்  உங்களை வெள்ளையடிப்பு பேணி இங்கு வந்திடடார்  என்று சொன்னால் நிர்வாகம் விடுமா ?

அதை நிர்வாகத்திடம் தான் கேட்க வேணும்😂
 

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்காலில் நடந்தவை இனப்படுகொலை என சுமந்திரனால் ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை?? 
முஸ்லிம்களை புலிகள் விரட்டியது இனச்சுத்திகரிப்பு என ஏன் எண்ணையை ஊற்றுகிறார். இரட்னாயக்கா மன்னிப்பு கேட்டது போல புலிகளும் மன்னிப்பு கேட்டார்கள் தானே. இவரால் கோத்தபாய செய்தது இனச்சுத்திகரிப்பு என இப்போ சொல்ல துணிவு உள்ளதா??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.