Jump to content

தமிழர்களின் பெயரில் விடுதலைப் புலிகளின் செயலால் வெட்கி தலை குனிகிறேன்! சுமந்திரன் பகிரங்கம்


Recommended Posts

14 minutes ago, nunavilan said:

முள்ளிவாய்க்காலில் நடந்தவை இனப்படுகொலை என சுமந்திரனால் ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை?? 

 

10 hours ago, பெருமாள் said:

இனப்படுகொலையை சரியான ஆதாரங்களோடு நிரூபிக்க வேண்டும் என பல தடவைகள் நான் சொல்லியிருக்கிறேன். அதையும் திரிபுபடுத்தி இனப்படுகொலை நடக்கவில்லையென நான் சொல்வதாக தெரிவிக்கிறார்கள்.

அப்படியல்ல இனப்படுகொலை நடந்தது. ஆனால் அது நிரூபிப்பதற்கு மிகவும் கடினமான சர்வதேச குற்றம்.

இனப்படுகொலை நடந்ததென சொல்லி சர்வதேசத்தை ஏற்றுக் கொள்ள வைக்க முனைகின்ற நாங்கள் இனசுத்திகரிப்பு நடந்தது என்பதை மறுத்தால் சர்வதேசம் ஒருபோதும் எங்களை ஏற்றுக் கொள்ளாது.

இனசுத்திகரிப்பு நடந்தது என்பது வெளிப்படையாக தெரிகின்ற ஒரு விடயம். நான் இன்னொரு உதாரணத்தையும் கூறுகிறேன்.

2007ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த போது திடீரென ஒரு நாள் அதிகாலையில் கொழும்பில் விடுதிகளில் தங்கியிருக்கின்ற தமிழர்களை வெளியேற்றுமாறு ஒரு பணிப்புரையை வழங்கி பேருந்துகளிலே எல்லாரும் ஏற்றப்பட்டு வடக்கிற்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

அன்றைக்கே நாங்கள் உடனடியாக ஒரு வழக்கு தாக்கல் செய்து அன்று காலையிலேயே பத்து மணிக்கு அதை தடுத்து நிறுத்துகின்ற ஒரு உத்தரவை நான் பெற்றிருந்தேன். வவுனியாவிற்கு பேருந்துகள் போய் சேருவதற்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டு திரும்பவும் அவர்கள் கொண்டு வரப்பட்டார்கள்.

அது குறித்து சர்வதேசத்திலே மிக மோசமான விமர்சனங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக எழுந்த காரணத்தினாலே அப்போது பிரதமராக இருந்த ரட்ண சிறி விக்ரமநாயக்க நாடாளுமன்றத்திலே மன்னிப்பு கோரினார்.

இலங்கையிலேயே ஒரு பிரதம மந்திரி மக்களிடம் மன்னிப்பு கோரியது அது ஒரு தடவை. ஏன் அவ்வாறு மன்னிப்பு கோரினார் என்றால் அது ஒரு இனசுத்திகரிப்பிற்கான நடவடிக்கை என்று நாங்கள் நீதிமன்றத்திலே சொல்லியிருந்தோம்.

உலக நாடுகள் அதனை ஏற்றிருந்தன. அங்கே நடந்தது என்ன? கொழும்பிலே வாழ்ந்த அத்தனை தமிழர்களையும் வெளியேற்றவில்லை. குறித்த சிறிய எண்ணிக்கையான விடுதிகளிலே இருந்தவர்களை வெளியேற்றியதையே இனசுத்திகரிப்பு என்று சர்வதேசம் சொல்லியிருக்கிறது.

அது தான் இனசுத்திகரிப்பிற்கான வரைவிலக்கணமாக இருந்தது. ஆனால் இலங்கையிலே வடக்கிலே நடந்தது முற்றுமுழுதாக, பரம்பரையாக வாழ்ந்துவந்த ஒருவரையும் விடாமல் அனைத்து முஸ்லிம்களையும் வெளியேற்றியது இனசுத்திகரிப்பு.

அது இல்லையென்று சொன்னால் ஒன்று சட்டம் தெரியாதவராக இருக்க வேண்டும். அதற்கு பிறகு என்னை சட்டத்தரணியென்று அழைக்க முடியாது. சர்வதேச குற்றங்களிலே இன்னொரு மோசமான குற்றம் இனசுத்திகரிப்பு.

ஆகவே அந்த குற்றம் தமிழ் மக்களின் பெயரினாலே நடத்தப்பட்டது. இதனாலேயே நான் வெட்கித்தலை குனிகிறேன் என பல தடவைகள் சொல்லியிருக்கிறேன். அதையே திரும்பவும் சொல்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

https://tamilwin.com/article/sumanthiran-interview-1630327520

 

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

சுமந்திரனுக்கு தன் வேலை பகுப்பு என்ன என்பதில் ஆரம்பம் முதலே தடுமாற்றம்.

நீங்கள் நீதிபதி அல்ல சுமந்திரன்.

நாம் தேர்வு செய்து அனுப்பிய எம்பி. அதாவது நம் தரப்பு வக்கீல்.

எமது வக்கீலாக நீங்கள் எங்கள் தரப்பு நியாத்தை மட்டும்தான் கதைக்க வேண்டும்.

முஸ்லீம்கள், சிங்களவர் தரப்பு நியாயத்தை அவர்கள் தரப்பு வக்கீல்கள் போதிய அளவு கதைப்பார்கள்.

இல்லை நான் எல்லா தரப்பு நியாயத்தையும் கதைப்பேன் என்றால் - நீங்கள் தமிழர் தரப்பின் வக்கீல்/பிரதிநிதி என்ற பதவிநிலைய (எம்பி) துறந்து விட்டு, ஒரு சட்ட வல்லுனராக கருத்து சொல்லுங்கள்.

 

கோசான்… மிகச் சரியாக சொன்னீர்கள். 👍🏼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சுமந்திரனின் கருத்தைப் பார்க்கும்போது எனக்கு குணா கவியழகன் அவர்கள் சொன்னது ஞாபகம் வருகிறது.

இதைக் கேளுங்கோ... தொடர்ந்து...

  • கவனி: வஞ்சகர்களுக்கு நான் மரியாதை கொடுப்பதில்லை. (கருணா கூட்டம், டக்லஸ் போன்றோர், கூத்தமைப்பின் கைப்புள்ளைகள்) இது என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடு.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்கப்பா ...
போதாக்குறைக்கு தனியே வேற பேச வெளிக்கிறங்கியிருக்கிறார், விரலை மட்டும் சூப்பிக்கொண்டு திரும்பி வந்தால் தமிழர்கள் கழட்டும் கழட்டுவையில் அடுத்த M.P கனவும் ஆப்பு அதுதான்  புலிகளை பற்றி எதையாவது எடுத்து விட்டு எஜமானர்களுக்கு  நூல்விட்டு பார்க்கிறார், மனக்குளிர்ந்து ஒரு குச்சி மிட்டாயையாவது கையில் சொருகி விடமாட்டார்களா அதை வைத்து தனது காலத்தை அரசியலில்  ஓட்டிவிடமுடியாதா என்ற அங்கலாய்ப்புத்தான், என்ன டிகிரி எடுத்தவனே நாட்டை விட்டு ஓடுறான்,Phd படிவச்சவன் எங்கே இருக்கப்போறான் ...? 
 ஐயா எடுத்து விடப்போறது  Phd  படிச்சவனுக்கே விளங்க கஷ்ட்டம், பாவம் சாமானிய மக்கள் கொரோனவுடன் சேர்ந்து மூளைக்காய்ச்சலும் வரப்போகுது   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

முள்ளிவாய்க்காலில் நடந்தவை இனப்படுகொலை என சுமந்திரனால் ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை?? 
முஸ்லிம்களை புலிகள் விரட்டியது இனச்சுத்திகரிப்பு என ஏன் எண்ணையை ஊற்றுகிறார். இரட்னாயக்கா மன்னிப்பு கேட்டது போல புலிகளும் மன்னிப்பு கேட்டார்கள் தானே. இவரால் கோத்தபாய செய்தது இனச்சுத்திகரிப்பு என இப்போ சொல்ல துணிவு உள்ளதா??

தெய்வமே, திரும்பவும் முதல்ல இருந்தா?🤦‍♀️ ஒரிஜினல் பதிவை வாசிக்கவே மாட்டிங்களா?

சுமந்திரன் நிரூபிக்கக் கஷ்டம் என்று மட்டும் தானே சொல்கிறார்? சரி அவர் திறமையற்ற வழக்கறிஞர் என்று ஒதுக்கி விடலாம், ஒரு பக்கம் இருக்கட்டும்!

தற்போது எத்தனை வழக்கறிஞர்கள் தமிழ் அரசியல் வாதிகளாக இருக்கின்றனர்? ஒரு ஜட்ஜ் கூட இருக்கிறாரே எங்களிடம்? அவர்களை வைத்து ஒரு இனப்படுகொலை வழக்கை ஆரம்பிக்க வேண்டியது தானே? ஏன் செய்கிறார்களில்லை? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் இக்கட்டுநிலையில் எல்லாம் சிங்கள, தமிழ் துவேசத்தை தூண்டி தப்பித்து கொண்டவை. இப்போ அது ஆட்டங்கண்டதால, முஸ்லீம், தமிழ் குரோதம் வளர்க்க சிங்களத்தின் முகவர் தயாராகிறார். கடந்து சென்றால் வாலை சுருட்டிக்கொண்டு, தலையை தொங்கபோட்டுக்கொண்டு,  திரும்பிப் போகவேண்டியதுதான். கொரோனா காலத்தில் மக்களை ஆறுதல்படுத்த வேண்டிய நேரத்தில், பழைய குப்பையை ஏன் கிளறுகிறார்? நாங்கள் கல்லெறிய வேண்டாமே!

இப்போ இவர் றிஷாத்துக்காக களமிறங்க போகிறார் என்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சம்பந்தப்பட்டவர்களால் மன்னிப்பு கேட்டு முடித்து வைக்கப்பட்ட சம்பவத்திற்கு உங்களைப்போன்றோர் எண்ணை ஊற்றி எரிய வைப்பதன் நோக்கம் புரிகின்றது.

 

இந்த உரையாடலை ஆரம்பித்து வைத்தவர் பெருமாள். இந்த செய்தியை பிரசுரம் செய்தது தமிழ்வின்.

மேலே இணைக்கப்பட செய்திக்கு நானும் எனது கருத்தை கூறி உள்ளேன். அவ்வளவே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

ட்ரம்ப் செய்த எந்தச் செயலையும் கள்ள மௌனம் மூலம் ஆதரிக்கும் குடியரசுக் கட்சி கள்ள அரசியல் வாதிகளுக்கும் சுமந்திரனுக்கும் என்ன வேறு பாடு? 

அண்ணை ஒரு சின்ன கேள்வி 
இந்த வேறுபாட்டை உருவாக்கி நாங்க எதை கண்டோம், இனி எதை காணப்போகிறோம் ,
ஆனால் நாங்கள்  அநியாயத்திற்கு மக்கு இனவாதி பண்டாக்களுடன் அரசியல் செய்ய இன்டர்நெஷனல் ரேஞ்சுக்கு ஆட்களை தயார்படுத்துவதாலோ என்னவோ மண்கவ்வல்கள் பலமாக இருந்து கொண்டேயிருக்கிறது,
இலங்கையின் சிங்கள  அரசியல் மூலதனம் இனவாதம் அதற்கு கல்வித்தகைமையும் தேவையில்லை தொழில்தகைமையும் தேவையில்லை, அடிப்படை நாகரிகமும் தேவையில்லை, முண்டிக்கொண்டு சிறுபான்மையை முழு தூசனத்தில் பாராளுமன்றத்தில் ஏசத்தெரிந்தால் போதும், இதற்கெதற்கு   அமெரிக்கன் குடியரசு அல்லது அதற்கு மேற்பட்ட தரம் கொண்ட அரசியல்வாதி நமக்கு தேவை, அதாவது சிம்பிளா வாழைமரத்திற்கு பாத்தி கிண்டும் வேலைக்கு  எதற்கு ஹார்வர்ட் யுனி டிகிரி என்கிறேன்     

Link to comment
Share on other sites

2 hours ago, Justin said:

தெய்வமே, திரும்பவும் முதல்ல இருந்தா?🤦‍♀️ ஒரிஜினல் பதிவை வாசிக்கவே மாட்டிங்களா?

சுமந்திரன் நிரூபிக்கக் கஷ்டம் என்று மட்டும் தானே சொல்கிறார்? சரி அவர் திறமையற்ற வழக்கறிஞர் என்று ஒதுக்கி விடலாம், ஒரு பக்கம் இருக்கட்டும்!

தற்போது எத்தனை வழக்கறிஞர்கள் தமிழ் அரசியல் வாதிகளாக இருக்கின்றனர்? ஒரு ஜட்ஜ் கூட இருக்கிறாரே எங்களிடம்? அவர்களை வைத்து ஒரு இனப்படுகொலை வழக்கை ஆரம்பிக்க வேண்டியது தானே? ஏன் செய்கிறார்களில்லை? 

நீதிபதி விக்நேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் இனப்படுகொலை நடந்ததென்று உண்மையாகவே நம்பியிருந்தால் என்றோ அவர்கள் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பார்கள். அவர்கள் இனப்படுகொலை நடந்ததென்று சொல்வது புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் பணத்தை சுரண்டுவதற்காக மட்டுமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் என்பது இன அழிப்பின் உச்சம். அது உண்மை. வரலாறு.

இதை எல்லாம் சுமந்திரனும் ஒப்புக்கொள்கிறார். ஆனால் இதை இப்ப நிரூபிக்க முடியாது. காலம் எடுக்கும் என்றார். இந்த நிலைப்பாட்டை நானும் ஆதரித்தேன்.

இப்ப கேள்வி என்னவென்றால் இதுவரை இதை நிரூபிக்க 12 வருடங்களாக சுமந்திரன் என்ன நடவடிக்கை எடுத்தார்? 12 வருடங்களுக்கு அவர் தமிழ் மக்கள் பிரதிநிதியாக இருந்த பின்னரும் அதாவது  முள்ளிவாய்க்காலுக்கான சாட்சியங்களும் ஆதாரங்களும் இருந்தும் அவர் அதை சேகரிக்கவில்லை எனில் இப்ப நிரூபிக்க முடியாது என்ற இவரின் கூற்று சாட்சிகள் ஆதாரங்கள் அழியும் வரை பொறுத்திருத்தலாகி விடும்.

அப்படியானால் சுமந்திரன் எதற்காக எவருக்காக காத்திருக்கிறார்??? யாருடைய பிரதிநிதியாக இருக்கிறார்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அப்படியானால் சுமந்திரன் எதற்காக எவருக்காக காத்திருக்கிறார்??? யாருடைய பிரதிநிதியாக இருக்கிறார்???

விசுகண்ணை 
இன்னுமா உங்களுக்கு தெரியாது ...? உங்களுக்கு வரவர நக்கல் கூடிப்போச்சுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

உண்மை, ஆனால் ஒரு திருத்தம் - சுமந்திரன் எங்கள் தீவிர தேசியர்களுக்கு உரிய அரசியல் வாதியல்ல என்று வர வேண்டும்!

 ஆனால் அவர் சொல்வதில் உள்ள நியாயங்கள், உண்மைகள் சுட்டாலும் , புரிந்து கொண்டு நகரும் மக்களே பெரும்பான்மையான தமிழர்கள் என்பது என் கணிப்பு!

ஒரு அரசியல்வாதி தன் வாக்காளர்கள் கேட்க விரும்புவதை மட்டும் பேசி, சில இடங்களில் கள்ள மௌனம் காத்து தேர்தலில் வென்று பென்சன் வாங்கி விட்டுப் போவதால் யாருக்கு என்ன பயன்? அவருக்கென்று இருக்கும் moral compass ஐயும் பயன்படுத்த வேண்டும்! இல்லையேல், ட்ரம்ப் செய்த எந்தச் செயலையும் கள்ள மௌனம் மூலம் ஆதரிக்கும் குடியரசுக் கட்சி கள்ள அரசியல் வாதிகளுக்கும் சுமந்திரனுக்கும் என்ன வேறு பாடு? 

இப்படி சுமந்திரன் பேசுவதை  விரும்பா விட்டால் வாக்களர்கள் அவரைத் தேர்வு செய்யாமல் விடலாம் - இப்படி அவரே கடந்த தேர்தல் நேரத்தில் சொல்லியிருந்தார்! 

அதை நிர்வாகத்திடம் தான் கேட்க வேணும்😂
 

சுமந்திரன் தீவிர தமிழ்தேசியம் பேசுவோரின் பிரதிநிதி இல்லைத்தான். ஆனால் அவரின் இப்படியான செயல்பாடுகள் அவருக்கு வாக்களித்த மிதவாத தமிழ் தேசிய வாக்காளரை கூட கடுப்பாக்கும் என்றே நான் நினைக்கிறேன்.

அரசியல்வாதிக்கு moral compass முக்கியம்தான் மறுக்கவில்லை. ஆனால் அதையே 100% செய்யவும் கூடாது. நெளிவு சுளிவும் வேண்டும்.

எப்போதும் 100% அறவழி தான் நடப்பேன், அறப்போத்ஃனைகள்தான் செய்வேன் என்றால் - அப்படியானவர் அரசியலுக்கு பொருத்தமானவர் என நான் நினைக்கவில்லை.

புலிகளே தவறு என்று ஒத்து கொண்ட விடயம் இது. நாங்கள் இருவருமே இதை பற்றி போதியளவு எழுதி விட்டோம் யாழில்.

ஆனால் இதை எடுத்து, அதை இனப்படுகொலையுடன் ஒப்பிட்டு கதைப்பது, takes the focus away.

“இது புலிகள் கூட தவறு என ஒத்துகொண்ட விடயம். மன்னிப்பும் கேட்டாயிற்று. இனி நாம் நடக்க வேண்டியதை பார்ப்போம். முஸ்லிம் ஓரளவுக்கு யாழ் திரும்பி விட்டார்கள். முன்பு இங்கே வாழ்ந்து, இன்னும் திரும்பாமல் இருப்பவர்கள் திரும்ப வர வேண்டிய உதவிகளை அரசு செய்யவேண்டும் ”.

“ஆனால் தமிழர்கள் இழந்த நில, உடமை இழப்புகள் பல இன்னும் அப்படியே இருக்கிறன. உரிமை இழப்பும் அப்படியே”. வீரமுனை தொட்டு, சத்துருகொண்டான் வரை நாமும் தமிழ்-முஸ்லிம் முறுகலால் பாதிக்கபட்டோம்”. அதற்கான மன்னிப்பும் கோரப்படவில்லை.

“எல்லாரும் பாதிக்கப்பட்டிருப்பதால், கடந்தகாலத்தை போஸ்ட்மார்ட்டம் செய்யாமல்- இழப்புகளை நிவர்த்தி செய்து ஒன்றிணைந்து முன்னேறுவது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்”.

சுமந்திரன் இப்படி சொல்லி இருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.

கஜேந்திரனுக்கு, விக்கிக்கு ஒரு அடி போடுவதாக நினைத்து சுமந்திரன் தேவையில்லாமல் வாயை விட்டுள்ளார் என்பதே என் கருத்து.

8 hours ago, Justin said:

ஆனால் அவர் சொல்வதில் உள்ள நியாயங்கள், உண்மைகள் சுட்டாலும் , புரிந்து கொண்டு நகரும் மக்களே பெரும்பான்மையான தமிழர்கள் என்பது என் கணிப்பு!

மிக சரியான கணிப்பு. இந்த விடயத்தில் மக்களின் கருத்து உங்களை, என்னை ஒத்ததாகவே இருக்கிறது. அதனால்தான் சுமந்திரனும் இப்படி சொல்லிவிட்டும் வெல்கிறார்.

ஆனால் சில விடயங்களில்…பழைய ரெக்கோர்ட் மாரி ஒரே இடத்தில் நிற்கிறார். 

Link to comment
Share on other sites

சுமந்திரன் சொல்கிறாரோ இல்லையோ ஒரு மக்கள் கூட்டத்தை ஒரு பிரதேசத்தில் இருந்து ஒரு நாளில் பலவந்தமாக வெளியேற்றிய முட்டாள் தனமான நடவடிக்கைகள் போன்ற  செயல்களே தமிழீழ விடுதலை போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாக எதிரி பிரச்சாரம் செய்யவும் அதில் எதிரி  வெற்றியடையவும் வழிவகுத்தது. அதை செய்த புலிகளே  அது தவறு தான் என்று ஒத்து கொள்ளவேண்டிய நிர்பந்தம்  ஏற்பட்டது. இனரீதியில் ஒடுக்கப்படோம் என்று விடுதலை வேண்டிப் போராடிக் கொண்டு வேறு ஒரு இனம் மீது ஒடுக்குமுறை புரிந்தது ஏன் என்பது போன்ற  கேள்விகளுக்கு புலிகள் இருக்கும் போதே அவர்களாலேயே  பதில் கூறமுடியாமல் தடுமாறினார்கள். இறுதியில் மன்னிபு கேட்டாரகள். 

ஆகவே இது போன்எற கேள்விகள் ஊடக சந்திப்புகளில் கேட்கப்படும் போது எவராலும் பொது வெளியில் அதற்கு  நியாயம் கற்பிக்க முடியாது. “காட்டி கொடுத்தார்கள் அதனால் வெளியேற்றினோம்” என்ற பதிலை தெரு மதகுகளில் இருந்து வம்பு பேசுபவர்கள்  வேண்டுமானால் கூறிவிட்டு போகலாம். 

ஆனால் தமிழர் சார்பில் யார் பேசுனாலும் அது சுமந்திரனல்ல  சுமந்திரனின் அரசியலை மூர்க்கமாக எதிர்பவர்களால் கூட அதை நியாயப்படுத்த முடியாது. இதுவே ஜதார்ததம். இன்று  தனிநபர் வக்கிரத்துடன் ரவுடித்தனம் பண்ணுவதே தமிழ் தேசியம் என்ற அளவுக்கு தமிழ் தேசியத்தை சிறுமைப்படுத்தியவர்கள் இந்த புலம் பெயர் போலிகளே. 

5 minutes ago, goshan_che said:

சுமந்திரன் தீவிர தமிழ்தேசியம் பேசுவோரின் பிரதிநிதி இல்லைத்தான். ஆனால் அவரின் இப்படியான செயல்பாடுகள் அவருக்கு வாக்களித்த மிதவாத தமிழ் தேசிய வாக்காளரை கூட கடுப்பாக்கும் என்றே நான் நினைக்கிறேன்.

அரசியல்வாதிக்கு moral compass முக்கியம்தான் மறுக்கவில்லை. ஆனால் அதையே 100% செய்யவும் கூடாது. நெளிவு சுளிவும் வேண்டும்.

எப்போதும் 100% அறவழி தான் நடப்பேன், அறப்போத்ஃனைகள்தான் செய்வேன் என்றால் - அப்படியானவர் அரசியலுக்கு பொருத்தமானவர் என நான் நினைக்கவில்லை.

புலிகளே தவறு என்று ஒத்து கொண்ட விடயம் இது. நாங்கள் இருவருமே இதை பற்றி போதியளவு எழுதி விட்டோம் யாழில்.

ஆனால் இதை எடுத்து, அதை இனப்படுகொலையுடன் ஒப்பிட்டு கதைப்பது, takes the focus away.

“இது புலிகள் கூட தவறு என ஒத்துகொண்ட விடயம். மன்னிப்பும் கேட்டாயிற்று. இனி நாம் நடக்க வேண்டியதை பார்ப்போம். முஸ்லிம் ஓரளவுக்கு யாழ் திரும்பி விட்டார்கள். முன்பு இங்கே வாழ்ந்து, இன்னும் திரும்பாமல் இருப்பவர்கள் திரும்ப வர வேண்டிய உதவிகளை அரசு செய்யவேண்டும் ”.

“ஆனால் தமிழர்கள் இழந்த நில, உடமை இழப்புகள் பல இன்னும் அப்படியே இருக்கிறன. உரிமை இழப்பும் அப்படியே”. வீரமுனை தொட்டு, சத்துருகொண்டான் வரை நாமும் தமிழ்-முஸ்லிம் முறுகலால் பாதிக்கபட்டோம்”. அதற்கான மன்னிப்பும் கோரப்படவில்லை.

“எல்லாரும் பாதிக்கப்பட்டிருப்பதால், கடந்தகாலத்தை போஸ்ட்மார்ட்டம் செய்யாமல்- இழப்புகளை நிவர்த்தி செய்து ஒன்றிணைந்து முன்னேறுவது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்”.

சுமந்திரன் இப்படி சொல்லி இருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.

கஜேந்திரனுக்கு, விக்கிக்கு ஒரு அடி போடுவதாக நினைத்து சுமந்திரன் தேவையில்லாமல் வாயை விட்டுள்ளார் என்பதே என் கருத்து.

மிக சரியான கணிப்பு. இந்த விடயத்தில் மக்களின் கருத்து உங்களை, என்னை ஒத்ததாகவே இருக்கிறது. அதனால்தான் சுமந்திரனும் இப்படி சொல்லிவிட்டும் வெல்கிறார்.

ஆனால் சில விடயங்களில்…பழைய ரெக்கோர்ட் மாரி ஒரே இடத்தில் நிற்கிறார். 

உங்கள் கருத்துகளின் தர்க்க நியாயங்கள் சிறப்பாக உள்ளது. நன்றி கோசான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

உங்கள் கருத்துகளின் தர்க்க நியாயங்கள் சிறப்பாக உள்ளது. நன்றி கோசான். 

நன்றி துல்ப்ஸ்🙏🏾.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் பிழைகளை ஒரு கனிசமான எண்ணிக்கையில் தமிழ்மக்கள் விவாதிக்க ஆரம்பித்ததே 2000ம் களின் பின்னர்தான்(மாற்று அமைப்புகளில் சம்பந்தமுடைய புலிகளை எதிர்க்க அரசியல் ரீதியான நோக்கமுடன் செயற்பட்டவர்களை கருத்தில் எடுக்கவில்லை).. ஆனால் 94 களிலேயே முஸ்லிம்களை வெளியேற்றிய விடயத்தில் தம்மை சுயவிமர்சனம் செய்த்திருக்கிறார்கள் புலிகள்.. தமது தவறை உணர்ந்து தலைவர் பிரபாகரன் மன்னிப்புகேட்டிருக்கிறார்.. பாராட்டப்படவேண்டிய விடயம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

அதனால்தான் சுமந்திரனும் இப்படி சொல்லிவிட்டும் வெல்கிறார்.

அண்ணை சும்  வெல்கிறார் ஆனால் கூத்தமைப்பு படிப்படியாக தோற்று பிரதிநிதித்துவம் இழந்துகொண்டே செல்கிறது, எதிர்வரும் காலங்களிலும் வெல்வார் ஏன் கூத்தமைப்பு ஒட்டுமொத்தமாக தமிழர் பிரநிதித்துவம் இழந்து தெருக்கோடியில் நின்றாலும் வெல்வார் ...அல்லது வெல்லவைக்க படுவார் ...ஈழத்தமிழர்களிற்கு இனித் தலைவர்கள் தரப்படுவார்களேயொழிய உருவாவதெல்லாம் நடக்காது அது தேசியத்தலைவருடன் முடிந்துவிட்டது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் உரிமை மீறல்களை நிஞாயப் படுத்த தமிழருக்குள்ளேயே தலைமைகள் இருந்தாற்தானே அது ஏற்றுக்கொள்ளப்படும். அதுக்காகவாவது வெல்லவைக்கப்படுவார். சம்பந்தனின் சாணக்கியம் இப்படியொருவரை உள்வாங்கியது. தான் போனாலும் இந்தக்கரையான் தமிழரை உருப்படாமல்  அரித்து கொண்டியிருக்கும் எனும் சந்தோசம் அவருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை சும்  வெல்கிறார் ஆனால் கூத்தமைப்பு படிப்படியாக தோற்று பிரதிநிதித்துவம் இழந்துகொண்டே செல்கிறது, எதிர்வரும் காலங்களிலும் வெல்வார் ஏன் கூத்தமைப்பு ஒட்டுமொத்தமாக தமிழர் பிரநிதித்துவம் இழந்து தெருக்கோடியில் நின்றாலும் வெல்வார் ...அல்லது வெல்லவைக்க படுவார் ...ஈழத்தமிழர்களிற்கு இனித் தலைவர்கள் தரப்படுவார்களேயொழிய உருவாவதெல்லாம் நடக்காது அது தேசியத்தலைவருடன் முடிந்துவிட்டது  

போன தேர்தலிலேயே… சுமந்திரன் வெல்லவில்லை. வெல்ல வைக்கப் பட்ட ஆசாமி.

யாழ். மத்திய கல்லூரியில்,  வாக்கு எண்ணும்… போது, நடந்த கூத்துகள்… உலகப் பிரசித்தி பெற்றவை. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை சும்  வெல்கிறார் ஆனால் கூத்தமைப்பு படிப்படியாக தோற்று பிரதிநிதித்துவம் இழந்துகொண்டே செல்கிறது, எதிர்வரும் காலங்களிலும் வெல்வார் ஏன் கூத்தமைப்பு ஒட்டுமொத்தமாக தமிழர் பிரநிதித்துவம் இழந்து தெருக்கோடியில் நின்றாலும் வெல்வார் ...அல்லது வெல்லவைக்க படுவார் ...ஈழத்தமிழர்களிற்கு இனித் தலைவர்கள் தரப்படுவார்களேயொழிய உருவாவதெல்லாம் நடக்காது அது தேசியத்தலைவருடன் முடிந்துவிட்டது  

சரியாகச் சொன்னீர்கள் ஐயனே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கற்பகதரு said:

ஈழத்தமிழர்கள் என்றுமே பயங்கரவாதிகள்தான். சிங்களவரின் நிலத்தை தமது என்று நிறுவ முயல்வது முதல் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்தது வரை எல்லாமே பயங்கரவாதம் என்று எல்லா உலகநாடுகளும் உரத்து சொல்லிவிட்டன. அதனால்தான் ஈழம் பயங்கரவாதிகளின் நாடாகிவிடும் என்பதால் அப்படியே உலகநாடுகள் எல்லாம் சேர்ந்து பொசுக்கென்று அமத்தி அழித்து விட்டார்கள்.

அவையள் என்னவெண்டாலும் சொல்லட்டும் அண்ணை, நீங்கள் என்ன சொல்ல வாறியள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  விடயத்துக்கு  சுமந்திரன்  ஏன் வருடாந்தம். மன்னிப்புக்  கேட்கிறார்?  இவரது மன்னிப்பு முஸ்லிம் மக்கள் எற்றுக்கொண்டுயுள்ளார்களா ?  அல்லது  அவர்களின் தலைவர்கள் எற்றுக்கொண்டுயுள்ளார்களா. ?இவரது மன்னிப்பால் தமிழ்  மக்களுக்கு அல்லது முஸ்லிம்களுக்கு எதாவது நன்மை உண்டா  ?தனி நபர் சுமந்திரன்  எத்தனை  கோடி முறையும்  மன்னிப்புக் கோர முடியும் ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதியாய்...தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக. ஒருபோதும்  மன்னிப்பு கோரக்கூடாது 

Link to comment
Share on other sites

21 hours ago, கற்பகதரு said:

ஈழத்தமிழர்கள் என்றுமே பயங்கரவாதிகள்தான். சிங்களவரின் நிலத்தை தமது என்று நிறுவ முயல்வது முதல் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்தது வரை எல்லாமே பயங்கரவாதம் என்று எல்லா உலகநாடுகளும் உரத்து சொல்லிவிட்டன. அதனால்தான் ஈழம் பயங்கரவாதிகளின் நாடாகிவிடும் என்பதால் அப்படியே உலகநாடுகள் எல்லாம் சேர்ந்து பொசுக்கென்று அமத்தி அழித்து விட்டார்கள்.

 

2 hours ago, ஏராளன் said:

அவையள் என்னவெண்டாலும் சொல்லட்டும் அண்ணை, நீங்கள் என்ன சொல்ல வாறியள்?

உலகநாடுகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை சாமானியன் எனக்கு கொடுக்கிறீங்கள் பாருங்கோ, அங்கதான் அழிவே ஆரம்பமானது. விஜிதரனும், விமலேஸ்வரனும், சிறி சபாரத்தினமும், ஆனந்தராஜாவும் உலகநாடுகளின் அங்கிகாரத்திலும் பார்க்க முக்கியமானவர்களாக போனதால் … இன்று இருந்த இடமே தெரியாமல் போனவர்கள் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கற்பகதரு said:

 

உலகநாடுகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை சாமானியன் எனக்கு கொடுக்கிறீங்கள் பாருங்கோ, அங்கதான் அழிவே ஆரம்பமானது. விஜிதரனும், விமலேஸ்வரனும், சிறி சபாரத்தினமும், ஆனந்தராஜாவும் உலகநாடுகளின் அங்கிகாரத்திலும் பார்க்க முக்கியமானவர்களாக போனதால் … இன்று இருந்த இடமே தெரியாமல் போனவர்கள் யார்?

உலக நாடுகள்  வாயை  மூடிக்கொண்டு இருக்கிறது  நீங்கள்  இங்கே கருத்து தெரிவித்து கொண்டுயிருக்கிறீர்கள் எனவே உங்ககிட்ட கேட்ட கேள்வி சரியானது மீண்டும்  நான்  கேக்கிறேன். உங்கள்  கருத்து என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

ஒரு  விடயத்துக்கு  சுமந்திரன்  ஏன் வருடாந்தம். மன்னிப்புக்  கேட்கிறார்?  இவரது மன்னிப்பு முஸ்லிம் மக்கள் எற்றுக்கொண்டுயுள்ளார்களா ?  அல்லது  அவர்களின் தலைவர்கள் எற்றுக்கொண்டுயுள்ளார்களா. ?இவரது மன்னிப்பால் தமிழ்  மக்களுக்கு அல்லது முஸ்லிம்களுக்கு எதாவது நன்மை உண்டா  ?தனி நபர் சுமந்திரன்  எத்தனை  கோடி முறையும்  மன்னிப்புக் கோர முடியும் ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதியாய்...தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக. ஒருபோதும்  மன்னிப்பு கோரக்கூடாது 

மிக சரியான கருத்தும் கேள்வியும்.....👍👍👍👍👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.