Jump to content

ஆப்கானிஸ்தானில் இருந்து முழுவதும் விலகிய அமெரிக்கா - 20 ஆண்டு போர், 25 முக்கிய தகவல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானில் இருந்து முழுவதும் விலகிய அமெரிக்கா - 20 ஆண்டு போர், 25 முக்கிய தகவல்கள்

2001 முதல் சுமார் 2400 அமெரிக்க படையினர் ஆஃப்கன் மண்ணில் உயிரிழந்துள்ளனர். (கோப்புப்படம்)

பட மூலாதாரம், REUTERS

 
படக்குறிப்பு, 2001 முதல் சுமார் 2400 அமெரிக்க படையினர் ஆஃப்கன் மண்ணில் உயிரிழந்துள்ளனர். (கோப்புப்படம்)

அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக விலகியுள்ளன. ஆகஸ்டு 31க்குள் வெளியேற்ற நடவடிக்கைளை முடிக்க வேண்டும் என்று அமெரிக்கா வைத்திருந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது.

சுமார் 3000 பேர் கொல்லப்பட்ட, செப்டம்பர் 11 தாக்குதல் என்று பரவலாக அறியப்படும் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் 2001ஆம் ஆண்டு நடந்த பிறகு அப்போது ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து கொண்டிருந்த தாலிபன்கள், தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதாக அமெரிக்கா அந்த நாட்டின் மீது படையெடுத்தது.

1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தான் தாலிபன் ஆட்சியின்கீழ் இருந்தது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க படைகள் விலகிய நிலையில் தற்போது மீண்டும் தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்.

பல்லாயிரம் உயிரிழப்புகளையும் பல லட்சம் கோடி செலவையும் ஏற்படுத்திய இந்தப் போர் குறித்த 25 முக்கிய தகவல்கள்.

1.ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் சுமார் ஒரு லட்சத்து 23 ஆயிரம் பொதுமக்களை அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி உள்ளதாக அமெரிக்காவின் வெளியேற்ற நடவடிக்கைகளுக்கு தலைமை வகிக்கும் ஜெனரல் ஃபிராங்க் மெக்கன்சி தெரிவித்துள்ளார். இவர்களில் 6 ஆயிரம் பேர் மட்டுமே அமெரிக்க குடிமக்கள்.

2.இவர்கள் மட்டுமல்லாமல் அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளாலும் பல்லாயிரம் பேர் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆனால் அந்த நாடுகளுக்கு ஆக பணியாற்றி ஆப்கானியர்கள் அனைவருக்கும் அங்கிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

3.ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய கடைசி அமெரிக்க ராணுவ வீரரின் பெயர் கிறிஸ் டோனஹ்யூ. இவர் அமெரிக்காவின் 82வது ஏர்போர்ன் படைப்பிரிவின் காமாண்டிங் ஜெனரல் பதவியில் உள்ளார். அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான சி-17 சரக்கு விமானம் ஒன்றின் மூலம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி அவர் ஆப்கனில் இருந்து கிளம்பினார்.

Twitter பதிவின் முடிவு, 1

4.அமெரிக்க வரலாற்றிலேயே சண்டையில் ஈடுபடாமல் மிகப்பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட வெளியேற்றும் நடவடிக்கைகளில் இதுதான் மிகப் பெரியது என்று ஜெனரல் ஃபிராங்க் மெக்கன்சி தெரிவித்துள்ளார். 

5.அமெரிக்காவின் கடைசி விமானங்கள் ஆப்கானில் இருந்து வெளியேறிய பின்பு காபூலில் உள்ள ஹமீது கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் கொண்டாடும் வகையிலான துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் நகர தெருக்களிலும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

6.அமெரிக்க படைகள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் காபூலில் இருந்து வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தானுடன் வெளியுறவு தொடர்பை மட்டுமே இனி அமெரிக்கா கொண்டிருக்கும். 

7.ஆனால் அந்த அலுவலகம் ஆப்கானிஸ்தான் மண்ணில் இருக்காது கத்தாரில் உள்ள தோகாவில் ஆப்கானிஸ்தான் உடனான வெளியுறவு தொடர்பாடல்களை மேற்கொள்ளும் அலுவலகம் அமெரிக்காவிலிருந்து நிர்மாணிக்கப்படும் என்று அந்நாட்டின் வெளியுறவு செயலர் ஆண்டனி ப்லிங்கன் தெரிவித்துள்ளார்.

8.ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படை எடுத்த பின்பு இதுவரை அமெரிக்காவுக்கு நான்கு பேர் அதிபராக இருந்துள்ளனர். 

9.இந்த நான்கு அதிபர்களில் ஜார்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் டொனால்டு டிரம்ப் ஆகியோர் குடியரசு கட்சியை சேர்ந்தவர்கள். பாரக் ஒபாமா மற்றும் ஜோ பைடன் ஆகியோர் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள். ஜோ பைடன் பாரக் ஒபாமாவின் பதவிக்காலத்தில் துணை அதிபராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

10.செப்டம்பர் 9/11 தாக்குதலுக்குப் பிறகு அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் டபிள்யூ புஷ் 2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு தமது படைகளை அனுப்பினார்.

ஜார்ஜ் டபிள்யூ புஷ்

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, ஜார்ஜ் டபிள்யூ புஷ்

11.அவருக்கு பிறகு அதிபராக வந்த பராக் ஒபாமா இரண்டு முறை அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது ஆட்சிக்காலத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதற்கான ஒப்புதல்கள் வழங்கப்பட்டன. இவரது ஆட்சியில் அதிகபட்சமாக சுமார் 1,40,000 அமெரிக்க படையினர் ஆப்கானிஸ்தானில் இருந்தனர். ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டபோது அதிபர் பதவியில் இருந்தவரும் ஒபாமாதான்.

12.ஒபாமாவுக்கு பிறகு ஒருமுறை மட்டுமே அமெரிக்க அதிபராக பதவி வகித்த டொனால்டு டிரம்ப் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கர்கள் அனைவரும் திரும்பி வருவதற்கு வழிவகை செய்யப்படும் என்று கூறியதுடன் தாலிபன்கள் உடன் பேச்சுவார்த்தை மூலம் ஒப்பந்தம் ஒன்றையும் ஏற்படுத்தினார்.

13.டிரம்ப் பதவி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தற்போது அவருக்கு பிறகு அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் பதவி காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிபராக பதவியேற்ற பின்னர் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் திரும்ப பெறப்படும் என்றும் அமெரிக்கர்கள் தங்கள் தாய் நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் கூறியிருந்தார் பைடன். 

14.செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலுக்கு தலைமை வகித்த ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டு மற்றும் அவரது அல் -கய்தா தீவிரவாத அமைப்பு வலிமை குன்றச் செய்யப்பட்டுள்ளது ஆகியவற்றின் மூலம் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்த நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அதிபர் பைடன் கூறியிருந்தார். 

15.வேறு ஒரு நாட்டின் உள்நாட்டுப் போரில் இனிமேல் அமெரிக்க துருப்புகளை பங்கேற்க வைக்க மாட்டோம் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஒசாமா பின் லேடன்

பட மூலாதாரம், REUTERS

 
படக்குறிப்பு, ஒசாமா பின் லேடன்

16.2011ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி பாகிஸ்தானின் அபோத்தாபாத்தில் ஒசாமா பின் லேடன் அமெரிக்காவின் திடீர் ராணுவ நடவடிக்கை ஒன்றில் கொல்லப்பட்டார். தங்கள் மண்ணில் அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அப்போது கண்டனம் தெரிவித்தது.

17.இந்த ஆண்டு இரட்டை கோபுர தாக்குதலில் இருபதாவது ஆண்டை நிறைவு செய்யும் செப்டம்பர் 11ம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேற்றப்படும் என்று ஜோ பைடன் அறிவித்த பிறகு தாலிபன்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளையும் கைப்பற்ற தங்களது முயற்சிகளை மும்முரம் ஆக்கினார்.

18.அமெரிக்க ராணுவத்தினரால் பயிற்சி அளிக்கப்பட்ட ஆஃப்கன் ராணுவத்தினர் சுமார் 3 லட்சம் பேரில் கையில் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல இடங்களில் ராணுவத்தின் எதிர்ப்பே இல்லாமல் தாலிபன்கள் நகரங்களை கைப்பற்றினர்.

19.ஆப்கானிஸ்தானில் உள்ள ராணுவத்தினரின் எண்ணிக்கை 3 லட்சம் என்று அமெரிக்க தரப்பில் கூறப்பட்டாலும் அந்த எண்ணிக்கை இன்னும் குறைவு என்று சில கணக்கீடுகள் காட்டுகின்றன.

20.2001 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் சுமார் 822 பில்லியன் அமெரிக்க டாலரை ஆப்கானிஸ்தான் போருக்காக அமெரிக்க அரசு செலவிட்டுள்ளதாக அலுவல்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. (இந்திய மதிப்பில் இது சுமார் 60 லட்சம் கோடி ரூபாய்.) ஆப்கானிஸ்தான் தொடர்பான நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா பாகிஸ்தானில் செய்த செலவுகள் இதில் அடங்காது.

செப்டம்பர் 9/11 தாக்குதலின் 20ஆம் ஆண்டுக்கு சில நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது.

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, செப்டம்பர் 9/11 தாக்குதலின் 20ஆம் ஆண்டுக்கு சில நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது.

21.அமெரிக்காவின் கூட்டணி நாடுகளான பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகியவை முறையே 30 பில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 19 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகியவற்றை செலவழித்துள்ளன என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்த இரண்டு நாடுகளின் ராணுவத்தினர்தான் ஆப்கானிஸ்தானில் பெருமளவு இருந்தனர். ஆப்கானிஸ்தானில் இருந்து 2014ஆம் ஆண்டே அமெரிக்காவுக்கு ஆதரவான நேட்டோ படைகள் வெளியேறியிருந்தன.

22.ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியின் கீழ் மனித உரிமைகள் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் உள்ளிட்டவை குறித்த தெளிவற்ற சூழ்நிலையே தற்போது விளங்குகிறது. 

23.ஆப்கானிஸ்தான் பொருளாதாரமும் மிகவும் வலுவற்ற நிலையில் தற்போது உள்ளது தாலிபான்களின் புதிய ஆட்சி அதை எவ்வாறு சீர்செய்யும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

24.தாலிபன்கள் ஆகஸ்டு மத்தியில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியபின் உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியம் ஆகியன அந்த நாட்டுக்கான நிதி மற்றும் கடன்களை உடனடியாக நிறுத்தி வைத்தன.

25.அமெரிக்கா படையெடுத்த 20 ஆண்டுகள் அதற்கு முந்தைய 20 ஆண்டுகள் என ஆப்கானிஸ்தான் தொடர்ந்து 40 ஆண்டுகளாக ஒரு போர் நிலையிலேயே உள்ளது. அங்குள்ள 3.8 கோடி ஆப்கானியர்கள் வாழ்க்கையிலும் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது. ஆனால் அந்த சகாப்தம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது இனிமேல்தான் தெரியும். 

அமெரிக்காவின் போர் முடிந்துவிட்டது. ஆனால் ஆப்கன் மக்களின் போர் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

 

https://www.bbc.com/tamil/global-58390304

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/8/2021 at 17:26, கிருபன் said:

2.இவர்கள் மட்டுமல்லாமல் அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளாலும் பல்லாயிரம் பேர் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆனால் அந்த நாடுகளுக்கு ஆக பணியாற்றி ஆப்கானியர்கள் அனைவருக்கும் அங்கிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

எல்லோராலும் வெளியேறமுடியவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும்.. ஆனால் குழந்தைகள் பெற்றோர்கள் கூட வராமல் தனியாக கொண்டுவரப்பட்டுள்ளார்களே.. இது இன்னமும் கொடுமையானது. 

“ Children rescued from Kabul airport have been brought 'unaccompanied' to Australia

By political reporter Jake Evans

Posted Wed 1 Sep 2021 at 7:05amWednesday 1 Sep 2021 at 7:05am, updated Wed 1 Sep 2021 at 7:35am” 

https://www.google.com.au/amp/s/amp.abc.net.au/article/100425956

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.