Jump to content

நாடு பூராவும் அவசரகால நிலை பிரகடனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவசரகால நிலை நாடு பூராவும் பிரகடனப்படப்படுத்த பட்டிருக்கிறது. இது நேற்று நள்ளிரவிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Tamilmirror Online || நாடு பூராவும் அவசரகால நிலை பிரகடனம்

Link to comment
Share on other sites

உணவுப் பற்றாக்குறை காரணமாக அவசரகால நிலை என்று பிரெஞ்சுச் செய்தி ஒன்று சொல்கிறது.

https://www.lemonde.fr/international/article/2021/08/31/le-sri-lanka-qui-traverse-une-grave-crise-economique-declare-l-etat-d-urgence-alimentaire_6092852_3210.html

வங்கிகள் உணவு இறக்குமதிக்குப் பணம் கொடுக்க முடியாத நிலையில் உணவுப் பதுக்கல் விலையேற்றம் ஆகியவற்றிற்கெதிராக இருக்கும் உணவினைப் பகிர்ந்தளிக்கலாம்.

நான் நினைக்கிறேன், பெற்றோல் கொள்வனவுக்காக நடந்த பேச்சுவார்த்தையும் சரிவரவில்லை என்று. பெற்றோலியத் தட்டுப்பாடு நுகர்வுப் பொருட்கள் அத்தனையிலும் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாது அவசரகால விதிமுறையை பிரகடனப்படுத்த இயலாது - .சுமந்திரன்

(எம்.மனோசித்ரா)

அத்தியாவசிய உணவு விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள என்ற தோரணையில் தற்போது இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. 

இதனை கடுமையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 

 

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,

திங்கட்கிழமை நள்ளிரவிலிருந்து அவசரகால நிலைமை நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் உணவு விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த சட்டத்தின் கீழ் நாட்டுக்கு ஆபத்து காணப்பட்டால் , பாதுகாப்பிற்கு ஆபத்து காணப்பட்டால் அதனோடு சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்கே இந்த சட்டத்தை பாவிக்க முடியும்.

இதனால் தான் பொது மக்கள் பொது சுகாதார அவசரகால நிலைமைக்காக ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தியிருந்தோம்.என்றார்.

நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாது அவசரகால விதிமுறையை பிரகடனப்படுத்த இயலாது - .சுமந்திரன் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களை பட்டினி போட்டு சாக விடாவிட்டால் சரி.

ஊர்ப்பக்கம் நிலமை இறுகி செல்கின்றது.

வியாபாரிகள் பொருட்களை பதுக்குவது ஒருபுறம், திருட்டுதனமாக சனங்கள் ஒன்றுகூடுவது மறுபுறம், கொரனா தொற்று இவற்றுக்கு இடையால் என்று பல அலைகள் அடிக்கின்றன.

கடைசியில் உணவு பொருட்களை நாம் இங்கு இருந்துதான் பாசலில் அனுப்ப வேண்டி வரப்போகுதோ தெரியவில்லை.

வெளிநாட்டு உறவுகள் எல்லாரும் சேர்ந்து ஒரு தனி கப்பலை ஒழுங்கு செய்து அங்குள்ள எமது உறவுகளுக்கு பொருட்களை அனுப்பிவிடாலாம். இப்படியான ஒரு முயற்சி 2008/9 காலத்தில் முயற்சி செய்யப்பட்டது.

காலம் தாழ்த்தாமல் இப்போதே சம்மந்தப்பட்டவர்கள் மாற்று வழிகளை யோசிப்பது நல்லது கடைசி நேரம் வரை காத்து நிற்காமல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசின் இறைமைக்கு இழுக்கு என்று அப்பவும் வம்பு பண்ணும் போக்கத்த அரசு. 2009 காலத்தில் வந்த உணவை இறக்கவிடாமல் தடுத்து வைத்திருந்தது இன்னும் நினைவில் இருக்கு. இப்போ சிங்களவரும் அதே படகில் பயணிப்பதால் நிலை மாறலாம். தன்வாயாலேயே புலம்பெயர் தமிழரை இரஞ்சும் காலம் வெகு சீக்கிரம் வரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

மக்களை பட்டினி போட்டு சாக விடாவிட்டால் சரி.

ஊர்ப்பக்கம் நிலமை இறுகி செல்கின்றது.

வியாபாரிகள் பொருட்களை பதுக்குவது ஒருபுறம், திருட்டுதனமாக சனங்கள் ஒன்றுகூடுவது மறுபுறம், கொரனா தொற்று இவற்றுக்கு இடையால் என்று பல அலைகள் அடிக்கின்றன.

கடைசியில் உணவு பொருட்களை நாம் இங்கு இருந்துதான் பாசலில் அனுப்ப வேண்டி வரப்போகுதோ தெரியவில்லை.

வெளிநாட்டு உறவுகள் எல்லாரும் சேர்ந்து ஒரு தனி கப்பலை ஒழுங்கு செய்து அங்குள்ள எமது உறவுகளுக்கு பொருட்களை அனுப்பிவிடாலாம். இப்படியான ஒரு முயற்சி 2008/9 காலத்தில் முயற்சி செய்யப்பட்டது.

காலம் தாழ்த்தாமல் இப்போதே சம்மந்தப்பட்டவர்கள் மாற்று வழிகளை யோசிப்பது நல்லது கடைசி நேரம் வரை காத்து நிற்காமல்.

அரசு எங்களுக்கு அனுப்புவதை பறிச்சு அங்கால குடுத்தால் என்ன செய்வது? ஐ.நா போன்ற அமைப்புகள் பொறுப்பெடுத்து செய்வார்களா?

Link to comment
Share on other sites

இதுவே வேறு நாடாக இருந்திருந்தால் தோல்வியடைந்த குடும்ப அரசியலுக்கு எதிராகப் புரட்சி வெடித்திருக்கும். மக்கள் எதையும் பொறுப்பார்கள் ஆனால் உணவுப் பஞ்சம் வரும்போது பொறுமை காக்க முடியாது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலேயொழிய பொருளாதார மாற்றம் வரப்போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்குடும்பத்தின் கோரத்தாண்டவம் தெரிந்தபடியால் சனம் பயத்தில் பேசாமல் இருக்குது. குழம்பினால் இல்லாமல் ஆக்கப்படுவோம் என்பது சகலரும் அறிந்ததே. கொரோனாதான் இவர்களின்  கொட்டத்தை அடக்கவேண்டும். எனக்கென்னவோ மஹிந்தவின் ஆட்டம் முடியும் நேரம் நெருங்குகிறது என்றே தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பொருளாதார அவசரநிலை அமல் - எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு

  • ரஞ்சன் அருண்பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
30 நிமிடங்களுக்கு முன்னர்
இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இலங்கையில் சீனி, உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது.

இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை ,கடந்த சில காலமாகவே வெகுவாக அதிகரித்து வருகின்ற பின்னணியில், அவசரகால விதிமுறைகளை அறிவித்துள்ளது அரசு.

அதிகரித்து வரும் விலை உயர்வால் நாட்டு மக்கள் நாளாந்தம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

சீனி, பால்மா, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ச்சியாகவே தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில், விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பல மடங்காக அதிகரித்துள்ளன.

இவ்வாறான நிலையில், அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகளை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

 

இதன்படி, செட்பம்பர் 31 நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் அவசரகால விதிமுறைகளுக்கான வர்த்தமானி அறிவிப்பு செப்டம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் உத்தரவிற்கு அமைய, இந்த அவசரகால விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2வது சரத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அத்தியாவசிய உணவு விநியோகத்துடன், தொடர்புப்பட்ட அவரகால விதிமுறைகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை உறுதிப்படுத்தி, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

எந்தெந்த பொருட்களுக்கு உத்தரவாத விலை

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகப் பதுக்குதல், அதிக விலை அறவிடுவதன் மூலம் நுகர்வோரை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் சந்தை முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக, அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு அல்லது சுங்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட விலையை அடிப்படையாகக் கொண்டு நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகக் கொள்வனவு செய்து மக்களுக்கு நியாயமான விலைக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கும், அரச வங்கிகளின் மூலம் மொத்தமாகக் கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள கடன், கடன் பெற்றுக்கொண்டவர்களிடம் இருந்து அறவிடப்படக்கூடிய வகையில் இது நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

சாதாரண பொதுமக்களின் வாழ்க்கை நிலையை இயல்பு நிலையில் பேணுவதற்குத் தேவையான நெல், அரிசி, சீனி உள்ளிட்ட ஏனைய நுகர்வுப் பொருட்களை விநியோகிப்பதை ஒருங்கிணைப்புச் செய்வதற்காக, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகமாக, மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடரும் தட்டுப்பாடு

இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவி வருவதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக சீனி, அரிசி, பால்மா, சமையல் எரிவாயு உள்ளிட்ட பல பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்

வர்த்தக நிலையங்களில் மக்கள் தொடர்ச்சியாக நீண்ட வரிசைகளில் இருந்தவாறு கடந்த காலங்களில் பொருள் கொள்வனவுகளில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறான நிலையில், ஜுன் மாத முதல் வாரத்தில் 120 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட சீனி, தற்போது திடீரென 220 ரூபா வரை அதிகரிக்கப்பட்டதாக வர்த்தர்கள் தெரிவிக்கின்றனர்.

நகர் பகுதியில் 220 ரூபாவிற்கு சீனி விற்பனை செய்யப்பட்டாலும், பின்தங்கிய பிரதேசங்களில் 240 ரூபாவிற்கே சீனி விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன், 150 ரூபாவிற்கு ஜுன் மாதம் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பருப்பு, தற்போது 250 ரூபாவிற்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று, பால் மா, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் கடந்த ஓரிரு மாதங்களில் வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான சீனி மொத்த வியாபாரிகள், சீனிகளை பதுக்கியிருந்தமையும், கடந்த ஓரிரு தினங்களில் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த சில தினங்களில் மாத்திரம் சுமார் 10,000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான சீனி பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையிலேயே, ஜனாதிபதியினால் இந்த அவசர கால விதிமுறை சட்டம் அமல்படுத்தப்பட்டது.

எதிர்கட்சிகள் அழுத்தம்

இலங்கை
 
படக்குறிப்பு,

ரஞ்ஜித் மத்துமபண்டார, பொதுச் செயலாளர் - ஐக்கிய மக்கள் சக்தி

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள அவசரகால விதிமுறைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்துமபண்டாரவினால் இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகால விதிமுறை நிலைமையை நீக்கி, அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் செயற்பட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

இந்த அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டமையானது, குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மேலும் தவறாக சித்தரித்து, சர்வாதிகாரத்தை நோக்கி நாடு நகரும் என்ற உள்நோக்கம் காணப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கையினால், அரசாங்கம் வருமானத்தை இழந்துள்ளதுடன், வெளிநாட்டு கையிருப்புக்களும் குறைவடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனாலேயே, அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும், அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு

இலங்கை
 
படக்குறிப்பு,

எம்.ஏ. சுமந்திரன்

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தால் மாத்திரமே, இந்த சட்டத்தை பயன்படுத்த முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.

அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகத்திற்கான அவசரகால நிலைமை அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து, விசேட அறிவிப்பொன்றின் ஊடாக, சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் சுகாதார நிலைiமையை அடிப்படையாகக் கொண்ட, சட்டமொன்று நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் என தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இதன்படி, சுகாதார நிலைமையை அடிப்படையாகக் கொண்ட, சட்டம் உருவாக்குவதற்கான தனிநபர் பிரேரணையொன்றை தான் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவம் அவர் குறிப்பிடுகின்றார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இவ்வாறான நிலையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது என்ற போர்வையிலேயே, இந்த அவசர கால நிலைமையை அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த சட்டம் அறிவிக்கப்பட்டதன் ஊடாக, நாட்டில் இனி முழுமையாக ஜனாதிபதியின் ஆட்சியே நிலவும் என்பதே, இதிலுள்ள அபாயம் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதி, தான் விரும்பிய அவசரகால விதிமுறை சட்டங்களை வகுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அவசரகால நிலைமை அறிவிப்பின் ஊடாக, சட்டங்களை ஜனாதிபதி நிறைவேற்றும் அதிகாரமும் கிடைக்கும் என அவர் கூறுகின்றார்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை தாம் வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-58407988

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.