Jump to content

ஆண்களின் பாலியல் நடத்தையை தீர்மானிக்கும் முதல் ஆபாச படம் - நீங்கள் எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களின் பாலியல் நடத்தையை தீர்மானிக்கும் முதல் ஆபாச படம் - நீங்கள் எப்படி?

5 ஆகஸ்ட் 2017
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ஆபாச படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

''இளம் வயதிலே ஆபாசப் படம் பார்த்த ஆண்களுக்கு, நிஜ வாழ்க்கையில் பெண்களை நெருங்குவதில் அதிக பதற்றம் இருக்கிறது''

ஒரு ஆண் முதன் முதலாக ஆபாசப் படத்தை பார்க்கும் வயதிற்கும், வாழ்க்கையின் பிற்காலத்தில் ஏற்படும் சில பாலியல் நடத்தைகளுக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்காவின் நெப்ராஸ்கா பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவினர் கூறுகின்றனர்.

இளம் வயதிலேயே முதல் முறையாக ஆபாசப் படம் பார்க்கும் ஆண்கள், பிற்காலத்தில் பெண்கள் மீது அதிக ஆதிக்கம் செலுத்த விரும்புவார்கள் என்றும், மூத்த வயதில் முதல் முறையாக ஆபாசப் படம் பார்ப்பவர்கள், பல பெண்களுடன் பாலியல் தொடர்பு வைக்க விரும்புவார்கள் என்றும் இந்தக் கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது.

சராசரியாக 20 வயதுடைய 330 பட்டதாரிகளிடம் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் முதல் முறையாக ஆபாசப் படம் பார்த்த சராசரி வயது 13ஆக இருக்கிறது.

முதல் முறையாக ஆபாசப் படம் பார்க்கப்பட்ட மிக இளம் வயது வெறும் ஐந்து என்றும், மிக மூத்த வயது 26 என்றும் இந்தக் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

 

எதிலும் வெளியிடப்படாத இந்த கண்டுபிடிப்புகள், வாஷிங்டனில் ஒரு மாநாட்டில் தொகுத்து வழங்கப்பட்டது.

ப்ளேபாய் வாழ்க்கை

ஆபாச படம்

பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY

 
படக்குறிப்பு,

இளம் வயதிலேயே ஆபாசப் படம் பார்ப்பவர்கள், ஆண் ஆதிக்கம் கொண்ட கருத்துகளுக்கு பெரும்பாலும் உடன்படுகிறார்கள்

எப்போது முதல் முறையாக ஆபாசப் படம் பார்த்தீர்கள்? வேண்டுமென்றே பார்த்தீர்களா? தற்செயலாகப் பார்த்தீர்களா? அல்லது நிர்பந்தத்திலா? என்ற கேள்விகளை முன்னணி ஆராய்ச்சியாளர் அலிஸா பிஸ்ஸ்காம் மற்றும் அவரது குழுவினர் ஆண்களிடம் கேட்டுள்ளனர். இதில் பங்கேற்ற பெரும்பாலானவர்கள் நேர்பாலின உறவு கொண்ட வெள்ளை இன ஆண்கள்.

பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்த விரும்புபவர்கள் அல்லது ப்ளேபாய் வாழ்க்கை வாழ்பவர்கள் - இந்த இரண்டு நடத்தைப் பண்புகளில் ஒரு ஆண் எந்த வகையைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தக் கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களிடம் 46 கேள்விகள் கேட்கப்பட்டன.

இளம் வயதிலேயே ஆபாசப் படம் பார்ப்பவர்கள், ஆண் ஆதிக்கம் கொண்ட கருத்துகளுக்கு பெரும்பாலும் உடன்படுகிறார்கள் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

மூத்த வயதில் ஆபாசப் படம் பார்ப்பதற்கும், பாலியல் துணையை அடிக்கடி மாற்ற விரும்புவது போன்ற ப்ளேபாய் வாழ்க்கை முறைக்கும் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இளம் வயதிலே அடிக்கடி ஆபாசப் படம் பார்த்து பழகியவர்களால், நிஜ வாழ்க்கையில் பாலியல் நடவடிக்கைகளை அனுபவிக்க முடியாமல் போகலாம் என ஆராய்ச்சியாளர் க்ரிஸ்டீனா ரிச்சர்ட்சன் கூறுகிறார்.

``இளம் வயதிலே ஆபாசப் படம் பார்த்த ஆண்களுக்கு, நிஜ வாழ்க்கையில் பெண்களை நெருங்குவதில் அதிக பதற்றம் இருக்கிறது. பாலியல் அனுபவங்கள் அவர்கள் திட்டமிட்டபடி இருக்காது அல்லது ஆபாசப் படங்களில் அவர்கள் உணர்ந்தது போல நிஜ வாழ்க்கை இருக்காது`` எனவும் அவர் கூறியுள்ளார்.

மாறாக,``மூத்த வயதில் ஆபாசப் படங்களை பார்த்தவர்கள், நிஜ வாழ்வில் நன்றாக பாலியல் நடவடிக்கைகளை அனுபவிக்கின்றனர். அதனால், இவர்கள் பிளேபாய் வாழ்க்கையினை வாழ்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது`` என்றும் கூறுகிறார்.

எத்தனை ஆபாசப் படங்களை ஆண்கள் பார்த்திருக்கிறார்கள், என்ன விதமான ஆபாசப் படம், பார்த்தவர்களின் சமுக-பொருளாதார பின்னணி குறித்தெல்லாம் இந்த ஆய்வு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

பாலியல் திறன் குறைவு

ஆபாச படம் உணர்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

``ஆபாசப் படம், பல இளம் ஆண்களின் பாலியல் நடத்தைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தும்`` என்கிறார் பாலியல் சிகிச்சை நிபுணர் பீட்டர் ஸாடிங்டன்.

``இதனால், இளைஞர்களின் பாலியல் பாகுபாடு வளர்வதுடன், பாலியல் திறன் குறைந்தவர்களாகவும் இருப்பார்கள்`` என கூறுகிறார் பீட்டர்.

``ஆபாசப் படம் ஆண்களுக்கு ஆரோக்கியமான விஷயம் அல்ல`` என ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட்சன் கூறுகிறார்.

ஆண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்த ஆரோக்கியமான சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள இளம் ஆண்களுக்குச் சிறந்த முன்மாதிரி தேவைப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/global-40828098

தடித்த எழுத்தில் உள்ளதை கவனத்தில் கொள்ளவும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.