Jump to content

முதலிடத்தைப் பிடித்தார் சாணக்கியன் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றத்தில் சிறப்பாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தரவரிசையினை மந்திரி.எல்கே என்ற இணையத்தளம் வெளியிட்டு வருகின்றது.

 

saanakkiyan2.jpg

 

இந்தநிலையில் தற்போது புதிய தரப்படுத்தல் பட்டியலினை குறித்த இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

 

புதிய தரப்படுத்தலில் இரா.சாணக்கியன் முதல் இடத்தினை பிடித்துள்ளதுடன், அமைச்சர் சரத் வீரசேகர இரண்டாவது இடத்தினையும், புத்திக பத்திரண மூன்றாவது இடத்தினையும் பிடித்துள்ளனர்.

முதலிடத்தைப் பிடித்தார் சாணக்கியன் ! | Virakesari.lk

Link to comment
Share on other sites

4 hours ago, பிழம்பு said:

புதிய தரப்படுத்தலில் இரா.சாணக்கியன் முதல் இடத்தினை பிடித்துள்ளதுடன்,

பெயருக்கும் பொருத்தமான ஒரு தமிழர். வாழ்த்துக்கள்.🙌

அந்த 'இரா' தான் வேறெதையோ நினைவூட்டிச் சங்கடப்படுத்துகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Paanch said:

பெயருக்கும் பொருத்தமான ஒரு தமிழர். வாழ்த்துக்கள்.🙌

அந்த 'இரா' தான் வேறெதையோ நினைவூட்டிச் சங்கடப்படுத்துகிறது.

இரா என்பது இரண்டு அர்த்தத்தைக் கொண்டது.   1.  அவரது பாட்டனார் தமிழரசுத்தலைவர் சி. மூ. இராசமாணிக்கம் பா.உ அவர்களையும் 2. சாணக்கியனின் தந்தை டாக்டர் இராசபுத்திரன் அவர்களையும் குறிக்கிறது.  இதில் சங்கடப்பட என்ன இருக்கிறது.

Link to comment
Share on other sites

1 minute ago, karu said:

இரா என்பது இரண்டு அர்த்தத்தைக் கொண்டது.   1.  அவரது பாட்டனார் தமிழரசுத்தலைவர் சி. மூ. இராசமாணிக்கம் பா.உ அவர்களையும் 2. சாணக்கியனின் தந்தை டாக்டர் இராசபுத்திரன் அவர்களையும் குறிக்கிறது.  இதில் சங்கடப்பட என்ன இருக்கிறது.

இராசபுத்திரன் சாணக்கியன் என்று வந்திருந்தால் சங்கடம் ஏதும் வந்திராது. அந்த 'இரா' சம்பந்தரையும்  ஞாபகப்படுத்தி விட்டதுதான் சங்கடம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Paanch said:

இராசபுத்திரன் சாணக்கியன் என்று வந்திருந்தால் சங்கடம் ஏதும் வந்திராது. அந்த 'இரா' சம்பந்தரையும்  ஞாபகப்படுத்தி விட்டதுதான் சங்கடம்.

அப்படிப் பார்த்தால் யாரும் தங்கள் பெயருக்குமுன் இனிசியலைப் போடமுடியாது.   இனிசியலில் இன்னும் எத்தனையோ பேர் இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

7 minutes ago, karu said:

அப்படிப் பார்த்தால் யாரும் தங்கள் பெயருக்குமுன் இனிசியலைப் போடமுடியாது.   இனிசியலில் இன்னும் எத்தனையோ பேர் இருப்பார்கள்.

உண்மைதான். ஆனாலும் நான் எனது உணர்வைத்தான் வெளிப்படுத்தினேன். பிறரைச் சங்கடப்படுத்த அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரா என்பதற்கு இன்னும் ஒரு அர்த்தமும் உண்டு. 

கதிரையில் இராதார் (இருக்காதார்).

பாராளுமன்றில் சாணக்கியன் அடிக்கடி கதிரையில் இருந்து எழுந்து பேசுவதால் அவர் இரா சாணக்கியன்.

சம்பந்தன் ஐயா கதிரையில் இருக்காமல், தூங்குவதால் அவரும் இரா சம்பந்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

இரா என்பதற்கு இன்னும் ஒரு அர்த்தமும் உண்டு. 

கதிரையில் இராதார் (இருக்காதார்).

பாராளுமன்றில் சாணக்கியன் அடிக்கடி கதிரையில் இருந்து எழுந்து பேசுவதால் அவர் இரா சாணக்கியன்.

சம்பந்தன் ஐயா கதிரையில் இருக்காமல், தூங்குவதால் அவரும் இரா சம்பந்தன்.

முன்பு எங்களூரிலிருந்து சென்ற ஒரு பாஉ ஒரு வார்த்தைக்குக் கூட வாயைத் திறக்கவில்லை.  ஒரு தடவை இருமினாராம் இன்னொரு தடவை தும்மினாராம் என்று கேள்வி.   அவர் சமீபத்தில் இறந்து விட்டார்.  இப்படிப் பலபேர் இருக்கிறார்கள். உங்களுக்குத் தெரியுமா உலகப்புகழ் பெற்ற இயற்பியல் விஞ்ஞானி சர் ஐசாக் நியூட்டனுக்குப் பிரபுக்கள் சபையில் கௌரவ உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.   அங்கு நடந்த விவாதங்கள் எதிலும் அவர் பங்குபற்றவில்லை.  ஒரே ஒரு தடவை சம்மரின்போது ”கடும் புழுக்கமாயிருக்கிறது அந்த யன்னலைத் திறந்து விடுங்கள்.” என்றாராம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.