Jump to content

நியுசிலாந்தில் வணிகவளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் இலங்கையை சேர்ந்தவர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந்தில் வணிகவளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் இலங்கையை சேர்ந்தவர்-

 
நியுசிலாந்தில் வணிக வளாகத்தில் தாக்குதலை கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவேளை சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கையை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நியுசிலாந்தில் பத்துவருடத்திற்கு மேல் வசித்துவந்த இலங்கையர் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
lynmall-300x169.jpg
நியுசிலாந்தில் ஆக்லாந்தில் வணிவளாகமொன்றில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு பலரை காயப்படுத்தியவரை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர்.
லைன்மோலில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
new-ze-in-300x169.jpg
கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து பெரும் பதற்றநிலை காணப்பட்டது என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கத்திக்குத்து காயத்துடன் ஒருவர் நிலத்தில் விழுந்து கிடைப்பதை நேரில் பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.
new-ze-in2-300x169.jpg
வணிகவளாகத்திலிருந்து பொதுமக்கள் தப்பிவெளியே ஒடுவதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
வணிகவளாகத்திற்குள் நுழைந்த நபர் பலரை காயப்படு;த்தினார் பொலிஸார் அவரை கண்டுபிடித்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதில் அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆறுபேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மூவரின் நிலைமை ஆபத்தானதாக காணப்படுகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

https://thinakkural.lk/article/134990

 

Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையைச் சேர்ந்த ஐஸிஸ் பயங்கரவாதி நியுசிலாந்தில் அப்பாவிகள் மீது தாக்குதல்

The exterior of Lynnmall in New Lynn on November 13, 2014 in Auckland, New Zealand.

இலங்கையினைச் சேர்ந்த முஸ்லீம் அடிப்படைவாதப் பயங்கரவாதியொருவன் நியுசிலாந்தில் இன்று நடத்திய தாக்குதலில் இதுவரையில் 9 பேர் படுகாயமடைந்ததாக அந்நாட்டு பொலீஸார் தெரிவிக்கின்றனர்.

கத்திகளைக்கொண்டு அவன் நடத்திய தாக்குதலில் பொருட்களைக் கொள்வனவு செய்யவந்த அப்பாவிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 

அருகிலிருந்த பொலீஸாரை மக்கள் உஷார்படுத்தியடைதையடுத்து இந்தப் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.

இவன் பொலீஸாரினால் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், பொலீஸாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு இத்தாக்குதலினை நடத்தியிருக்கிறான். 

கொரோணா கால கஷ்ட்டங்களில் மக்களும் நாடும் மூள்கியிருக்க, இத்தருணத்தினைத் தனது பயங்கவாதத் தாக்குதலுக்கு இவன் தேர்ந்தெடுத்திருப்பது, இந்த அடிப்படைவாதிகளின் குரூரத்தையே காட்டுகிறது.

https://www.bbc.com/news/world-asia-58405213

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந்துப் பிரதமர் ஜெஸிந்தா ஆர்டின் இத்தாக்குதல் பற்றிக் கூறுகையில் , "பொலீஸாரினால் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வந்த இலங்கையைச் சேர்ந்த ஐஸிஸ் அடிப்படைவாதி ஒருவனால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் இது" என்று கூறினார். 

இப்பயங்கரவாதியின் பெயரினை வெளியிட மறுத்த அதிகாரிகள், இவன் ஐஸிஸ் அடிப்படைவாதப் பயங்கரவாதிகளைத் தீவிரமாக ஆதரித்து வந்ததாகவும், அவர்களது பிரச்சார உத்திகளால் கவரப்பட்டு பயங்கரவாத தாக்குதலினை நடத்தியதாகவும் கூறுகிறார்கள்.

பிரதமரின் கருத்துப்படி, இத்தாக்குதல் தொடங்கி ஒரு நிமிட நேரத்திலேயே இவன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான். 

"இன்று நடத்தப்பட்டிருப்பது மிகவும் அநியாயமான ஒரு நடவடிக்கை. மக்களை வெறுக்கும் ஒரு செயல், நிச்சயம் தவறானது" என்று பிரதமர் மேலும் கூறினார்.

2011 இல் நியுசிலாந்திற்கு வந்துசேர்ந்த இந்த அடிப்படைவாதி 2016 ஆம் ஆண்டிலிருந்து தேசிய பாதுகாப்பிற்கு அச்சுருத்தலான மாறியதுடன், அன்றிலிருந்து இவன் தொடர்ச்சியாக பொலீஸாரினால் கண்காணிக்கப்பட்டு வந்ததாகப் பிரதம்ர் மேலும் தெரிவித்தார்.

இவன் தொடர்ச்சியாக பொலீஸாரின் கடுமையான கண்காணிப்பின் கீழ் வாழ்ந்துவந்தாலும், இந்தத் தாக்குதல் எப்படிச் சாத்தியமானது என்று பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர். இவனால் 9 பேர் கடுமையாகத் தாக்கப்பட்டுக் காயப்படும்வரை ஏன் பொலீஸார் இவனைத் தடுத்து நிறுத்த முயலவில்லை என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

"ஒருவனை நீங்கள் 24 மணித்தியாலமும் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருக்கிறீர்கள் என்றால், அவனை கைதுசெய்து அருகிலிருந்து கண்காணித்தால் ஒழிய அவனின் அனைத்து நடவடிக்கைகளையும் எம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், எமது கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக இருந்தபடியினால்த்தான் எம்மால் 9 பேருடன் அவனது தாக்குதலினை முறியடிக்க முடிந்தது" என்று பொலீஸ் கமிஷனர் அன்ட்ரு கொஸ்ட்டர் கூறினார்.

"மக்கள் எல்லாப்புறமும் சிதறி ஓடிக்கொண்டிருந்தார்கள். எங்கும் கூக்குரலும், அவல ஓலங்களும். ஒரு வயோதிபர் கத்திக் குத்துக் காயத்துடன் தரையில் போராடிக்கொன்டிருந்ததைப் பார்த்தேன்' என்று ஒரு பெண் கூறினார்.

லின் மோல் எனப்படும் பல்பொருள அங்காடியொன்றிலிருந்து மக்கள் சிதறியோடும் ஒளிப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த அங்காடியை நோக்கிக் குறைந்தது 6 நோயாளர் காவு வாகனங்களும், வைத்திய உதவியாளர் வாகனங்களும் சென்றதாக  மக்கள் கூறுகின்றனர்.

காயமடைந்தவர்களில் 6 பேரை வைத்தியசாலைக் கொண்டுசென்றிருப்பதாகவும், அவர்களுள் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இன்னும் இருவர் கடுமையாகக் காயமடைந்தாலும், உயிர் ஆபத்து இன்றி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமைதி மார்க்க பேர்வழிகள் ஆரம்பிச்சுட்டானுவ ,பாவம் பிரதமர்  முக்காடு போட்டு முஸ்லிம்களுடன் குந்தியிருந்தும் இரக்கம் காட்டாமல் அவனுங்க வேலையை காட்டிவிட்டானுவ  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்.... என்ன விசயமெண்டா.....

நேற்று திண்னையில் சொன்னேன்...... ரிசாட் .... குடும்பமே உள்ள.... யாருக்கு போன் பண்ணி இருப்பார்.... ஒன்று தூள் கோஸ்டி அல்லது ஜிகாதி கோஸ்டி.....

சாளரத்தினூடு வீசிய போனை எடுத்து ஆராய வேண்டும்.

ஜிகாதி எண்ணம் வந்தால்.... மனம்... மூர்க்கமாகும், வக்கிரமாகும்..... வழமைக்கு மீளாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வந்த ஒருவரை பிடித்து நாடு கடத்தாமல், கடைசிவரை அவரை பத்திரமா பாதுகாத்து நியூசிலாந்து மக்களுக்குகத்திகுத்து வாங்கி கொடுத்திருக்கு காவல்துறை.

அகதியாக தஞ்சமடைந்த அவர்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் இல்லாத தமிழர்கள் உட்பட்ட பிற இனங்களை குழந்தைகள் குடும்பம் என்றும் பார்க்காமல் கதற கதற பிடித்து நாடு கடத்தும் அரசுகள், மத அடிப்படை இஸ்லாமிய பயங்கரவாதிகளை மிகவும் மென்மையாக கையாள்கிறது.

ஒருவேளை அவர்களுக்கு செய்த பாவம் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நியூசிலாந்து மக்களை சூழ்கிறதோ என்னமோ.

காயமடைந்த அப்பாவி நியூசிலாந்து மக்கள் குணமடைய பிரார்த்தனைகள்.

அப்படியே இன்னும் சில லட்சம் சிரியா மற்றும் ஐஎஸ் ஆதரவாளர்களை பாவம் பார்த்து பிளேன் பிளேனா கொண்டுவந்து உங்கள் நாட்டில் இறக்குங்கள் நல்லாயிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்க கனடாவிலையும் ஒராள் பிளேன் பிளேனா இறக்கிறார். நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டுக்குள்ள வச்சாலும் நக்குத்தண்ணி நக்குத்தண்ணிதான் என்று முன்னோர்கள் சொன்னது வீணாகவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரதாக்குதல் நடத்தியவரை பொலிஸ் முதலே கைதசெய்ய விரும்பினாலும் பிரதமர்  அனுமதித்திருப்பாரோ  தெரியவில்லை.:rolleyes:
இறந்த பயங்கரவாதியின் இறுதி கிரிகையில் யசிந்தா ஆர்டென் புர்க்காவுடன் கலந்து கொள்ளமாட்டார் என்று நம்புவோம்.

Link to comment
Share on other sites

கண்காணிக்கப் பட்டவரே தாக்குதல் நடாத்த முடியுமெனில் நியூசிலாந்தின் பாதுகாப்பை என்னவென்று சொல்வது.  ஜெசிந்தா  மடம் கொரோனாவுக்கு கொடுத்த பாதுகாப்பு பயங்கரவாத்துக்கு கொடுக்கவில்லை. மசூதி தாக்குதலோடு பாடம் படித்து இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன இலங்கையர்??

அவர் ஒரு முசுலிம்

அவர்களுக்கென்று ஒரு பண்பு நாடு கொள்கை? உண்டு.

Link to comment
Share on other sites

3 hours ago, வாலி said:

இங்க கனடாவிலையும் ஒராள் பிளேன் பிளேனா இறக்கிறார். நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டுக்குள்ள வச்சாலும் நக்குத்தண்ணி நக்குத்தண்ணிதான் என்று முன்னோர்கள் சொன்னது வீணாகவில்லை.

நாட்டின் பாதுகாப்பு,பொருளாதாரம் போன்ற எல்லாவற்றையும் விட வாக்கு வங்கி முக்கியம் ருடோவுக்கும் லிபரலுக்கும். தாம் வகை தொகையாக குடியேறவும் ஒன்றுக்கும் 10 பிள்ளைகளை பெத்து அரச செலவில் வளர்க்கவும் இஸ்லாமியர்களில் 90 வீதமானோர் லிபரலுக்குத்தான் வாக்கு போடுவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

இவர்தான் ஆளாம்.....டிவிட்டர்ல வந்தது..... மூலம் இணைக்கேலாது. ஏனெண்டால் பின்னோட்டங்கள் அவ்வளவும் செந்தமிழ்

இலங்கையை சேர்ந்த ISIS தீவிரவாதி (A/L 2008 Batch) ( பச்சை சங்கி) நியூசிலாந்தில் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட 60 வினாடிகளுக்குள் சுட்டுகொல்லபட்டன். 5 வருடமாக பொலிஸ் ரேடாரில் இருந்த தாலிபான் isis தீவிரவாதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

அதென்ன இலங்கையர்??

அவர் ஒரு முசுலிம்

அவர்களுக்கென்று ஒரு பண்பு நாடு கொள்கை? உண்டு.

தமிழ்  பேசும் முஸ்லீம் என்று போட்டால் சந்தோசமா அண்ணேய் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ரதி said:

தமிழ்  பேசும் முஸ்லீம் என்று போட்டால் சந்தோசமா அண்ணேய் 

அவர்கள் அதை ஒத்துக்கொள்ளவதில்லை 

ஆனால் உலகத்துக்கு சிங்களம் அப்படி தான் காட்டும்.

பிரித்தானியாவில் தடையை நீடிக்க சொன்ன காரணங்களை பார்த்தால் இது புரியும்??

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

அதென்ன இலங்கையர்??

அவர் ஒரு முசுலிம்

அவர்களுக்கென்று ஒரு பண்பு நாடு கொள்கை? உண்டு.

இதை ஒரு யாழ்ப்பாண தமிழன் குடும்ப பிரச்சனை காரணமாக செய்திருந்தால் .....

தலையங்கம் வேறு மாதிரி வந்திருக்கும் ...."யாழ்ப்பாண தமிழன்  கொலையாளி"
பக்கம்பக்கமாக எழுதியிருப்பார்கள் முன்னாள் புரட்சிவாதிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

இதை ஒரு யாழ்ப்பாண தமிழன் குடும்ப பிரச்சனை காரணமாக செய்திருந்தால் .....

தலையங்கம் வேறு மாதிரி வந்திருக்கும் ...."யாழ்ப்பாண தமிழன்  கொலையாளி"
பக்கம்பக்கமாக எழுதியிருப்பார்கள் முன்னாள் புரட்சிவாதிகள்

முஸ்லீமும்  சிங்களவனும் வெளிநாடுகளில் குற்றம் செய்தால் இலங்கையர் அதே வடகிழக்கு தமிழன் மலையக தமிழன் செய்தால் இலங்கைத்தமிழன் என்ற சொற்பதம் உபயோகிப்பினம் .இதைச்செய்வது சிங்களவன் அல்ல செத்த வீட்டு செய்தி சொல்லும் இணையம் தமிழ் பிபிசி போன்றவை .

3 hours ago, ரதி said:

தமிழ்  பேசும் முஸ்லீம் என்று போட்டால் சந்தோசமா அண்ணேய் 
 

இந்த உலகத்திலே சொந்த தாய் மொழி மீது வன்மமும் குரோதமும் கொண்ட தமிழ் மொழி பேசும் முஸ்லீம் என்று போட்டு கொள்ளுங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அவர்கள் அதை ஒத்துக்கொள்ளவதில்லை 

ஆனால் உலகத்துக்கு சிங்களம் அப்படி தான் காட்டும்.

பிரித்தானியாவில் தடையை நீடிக்க சொன்ன காரணங்களை பார்த்தால் இது புரியும்??

 

1 hour ago, putthan said:

இதை ஒரு யாழ்ப்பாண தமிழன் குடும்ப பிரச்சனை காரணமாக செய்திருந்தால் .....

தலையங்கம் வேறு மாதிரி வந்திருக்கும் ...."யாழ்ப்பாண தமிழன்  கொலையாளி"
பக்கம்பக்கமாக எழுதியிருப்பார்கள் முன்னாள் புரட்சிவாதிகள்

 உலகளவில் இன்றும் ஈழத்தமிழர் என்றால் கொலையாளிகள் என்றுதான் முத்திரை குத்தி வைத்திருக்கின்றார்கள். இது எனக்கு நடந்த சொந்த அனுபவம். சென்ற புதன்கிழமை 20 பேர் கூடிய ஒரு கலந்துரையாடலுக்கு சென்றிருந்தேன்.

ஜேர்மனியர்கள் பெரும்பான்மையான ஒன்று கூடல் அது.
அங்கே இனவெறி சம்பந்தமாக ஒரு உரையாடலும் இடம்பெற்றது..அங்கேதான் மேற்கூறிய கொலையாளிகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடினார்கள். நான் முடிந்தவரை எம்மை பற்றி விளங்கப்படுத்தினேன். இருந்தாலும் அந்த திரையை கிழிப்பது கடினமாகவே இருந்தது. புலம்பெயர் தமிழர்களாகிய நாம் கிணற்று தவளையாகி விட்டோமோ என்றொரு விசனமும் என் மனதுக்குள் எழுந்தது.

 எமக்குள் 10 வருடங்களுக்கு முன்னர் இருந்த உற்சாகம் இல்லாமல் போய் விட்டதை உணர்கின்றேன். எதிரிகள் எமது தொய்வை நன்றாகவே பயன்படுத்தி விட்டார்கள். எதிரிகள் என நான்
 சொல்ல வந்தது 10 வீதம் சிங்கள இனவாதிகள். 90 வீதம் நமது தமிழர்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பெருமாள் said:

இந்த உலகத்திலே சொந்த தாய் மொழி மீது வன்மமும் குரோதமும் கொண்ட தமிழ் மொழி பேசும் முஸ்லீம் என்று போட்டு கொள்ளுங்கள் .

ஏண்ட உம்மாட வாப்பா அவங்கட உம்மாட மொழி அரபி இல்லியா?👀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

தமிழ்  பேசும் முஸ்லீம் என்று போட்டால் சந்தோசமா அண்ணேய் 

 இன்று சிலோன் முஸ்லீம் யாரவது நான் தமிழன் என்று சொல்ல கேள்விப்பட்டுருக்கின்றீர்களா?
ஈழத்தமிழர் பிரச்சனை சம்பந்தமாக ஏதாவது கூட்டம் நடக்குது எண்டால் மட்டும்  தங்களுக்கும் ஒரு அலகு, சுழகு வேணுமெண்டு தொப்பியோட குந்திடுவாங்க....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்குள் 10 வருடங்களுக்கு முன்னர் இருந்த உற்சாகம் இல்லாமல் போய் விட்டதை உணர்கின்றேன். எதிரிகள் எமது தொய்வை நன்றாகவே பயன்படுத்தி விட்டார்கள். எதிரிகள் என நான்
 சொல்ல வந்தது 10 வீதம் சிங்கள இனவாதிகள். 90 வீதம் நமது தமிழர்கள்

கனடாவில் இது 100/100 வீத உண்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

நாட்டின் பாதுகாப்பு,பொருளாதாரம் போன்ற எல்லாவற்றையும் விட வாக்கு வங்கி முக்கியம் ருடோவுக்கும் லிபரலுக்கும். தாம் வகை தொகையாக குடியேறவும் ஒன்றுக்கும் 10 பிள்ளைகளை பெத்து அரச செலவில் வளர்க்கவும் இஸ்லாமியர்களில் 90 வீதமானோர் லிபரலுக்குத்தான் வாக்கு போடுவர். 

கனடா தமிழர்களும் குடும்பத்துக்கு பத்து பிள்ளைகளை பெற்று சந்ததியை விருத்தி செய்யலாமே? யார் மறித்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:


 சொல்ல வந்தது 10 வீதம் சிங்கள இனவாதிகள். 90 வீதம் நமது தமிழர்கள்.

 

அதிலும் முன்னாள் புரட்சிவாகள் அதி தீவீரம் .....சீனாக்காரன் சிறிலங்காவை லவ் பண்ணுவதிலும் பார்க்க இவையளின் லவ் தாங்க முடியவில்லை ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

கனடா தமிழர்களும் குடும்பத்துக்கு பத்து பிள்ளைகளை பெற்று சந்ததியை விருத்தி செய்யலாமே? யார் மறித்தது?

உங்கள் கருத்து திரிக்கு சம்பந்தமில்லாத கருத்து .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடியை சேர்ந்தவரே ஐ.எஸ்.ஐ.எஸ். இனால் ஈர்க்கப்பட்டு நியூசிலாந்தில் தாக்குதலை மேற்கொண்டவர்!

நியூசிலாந்தில் ஐ. எஸ். ஐ.எஸ் இனால் ஈர்க்கப்பட்டு கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் தொடர்பான திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

எம்.சம்சுதீன் அதில் அல் அஸ்கார் கவுறடி வீதி,காத்தான்குடி – 01, சேர்ந்தவரே இவ்வாறு தாக்குதலைமேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1989 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 7 வயதில் வெளிநாடு சென்றுள்ளார்.
4 சகோதரங்களை கொண்ட குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாக பிறந்துள்ளார். என்பது தெரியவந்துள்ளது.

ஒரு பெண் சகோதரியும் தந்தையாரும் கனடாவில் வசிக்கும் நிலையில், ஏனைய இரண்டு சகோதரர்களும் கட்டார், சவுதியில்  வசிக்கின்றனர்.குறித்த நபர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன தொடர்புடையவர் என்று நியூசிலாந்து அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


https://www.meenagam.com/காத்தான்குடியை-சேர்ந்தவ/

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.