Jump to content

நியுசிலாந்தில் வணிகவளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் இலங்கையை சேர்ந்தவர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந்தில் வணிகவளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் இலங்கையை சேர்ந்தவர்-

 
நியுசிலாந்தில் வணிக வளாகத்தில் தாக்குதலை கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவேளை சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கையை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நியுசிலாந்தில் பத்துவருடத்திற்கு மேல் வசித்துவந்த இலங்கையர் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
lynmall-300x169.jpg
நியுசிலாந்தில் ஆக்லாந்தில் வணிவளாகமொன்றில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு பலரை காயப்படுத்தியவரை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர்.
லைன்மோலில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
new-ze-in-300x169.jpg
கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து பெரும் பதற்றநிலை காணப்பட்டது என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கத்திக்குத்து காயத்துடன் ஒருவர் நிலத்தில் விழுந்து கிடைப்பதை நேரில் பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.
new-ze-in2-300x169.jpg
வணிகவளாகத்திலிருந்து பொதுமக்கள் தப்பிவெளியே ஒடுவதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
வணிகவளாகத்திற்குள் நுழைந்த நபர் பலரை காயப்படு;த்தினார் பொலிஸார் அவரை கண்டுபிடித்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதில் அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆறுபேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மூவரின் நிலைமை ஆபத்தானதாக காணப்படுகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

https://thinakkural.lk/article/134990

 

Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையைச் சேர்ந்த ஐஸிஸ் பயங்கரவாதி நியுசிலாந்தில் அப்பாவிகள் மீது தாக்குதல்

The exterior of Lynnmall in New Lynn on November 13, 2014 in Auckland, New Zealand.

இலங்கையினைச் சேர்ந்த முஸ்லீம் அடிப்படைவாதப் பயங்கரவாதியொருவன் நியுசிலாந்தில் இன்று நடத்திய தாக்குதலில் இதுவரையில் 9 பேர் படுகாயமடைந்ததாக அந்நாட்டு பொலீஸார் தெரிவிக்கின்றனர்.

கத்திகளைக்கொண்டு அவன் நடத்திய தாக்குதலில் பொருட்களைக் கொள்வனவு செய்யவந்த அப்பாவிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 

அருகிலிருந்த பொலீஸாரை மக்கள் உஷார்படுத்தியடைதையடுத்து இந்தப் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.

இவன் பொலீஸாரினால் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், பொலீஸாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு இத்தாக்குதலினை நடத்தியிருக்கிறான். 

கொரோணா கால கஷ்ட்டங்களில் மக்களும் நாடும் மூள்கியிருக்க, இத்தருணத்தினைத் தனது பயங்கவாதத் தாக்குதலுக்கு இவன் தேர்ந்தெடுத்திருப்பது, இந்த அடிப்படைவாதிகளின் குரூரத்தையே காட்டுகிறது.

https://www.bbc.com/news/world-asia-58405213

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந்துப் பிரதமர் ஜெஸிந்தா ஆர்டின் இத்தாக்குதல் பற்றிக் கூறுகையில் , "பொலீஸாரினால் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வந்த இலங்கையைச் சேர்ந்த ஐஸிஸ் அடிப்படைவாதி ஒருவனால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் இது" என்று கூறினார். 

இப்பயங்கரவாதியின் பெயரினை வெளியிட மறுத்த அதிகாரிகள், இவன் ஐஸிஸ் அடிப்படைவாதப் பயங்கரவாதிகளைத் தீவிரமாக ஆதரித்து வந்ததாகவும், அவர்களது பிரச்சார உத்திகளால் கவரப்பட்டு பயங்கரவாத தாக்குதலினை நடத்தியதாகவும் கூறுகிறார்கள்.

பிரதமரின் கருத்துப்படி, இத்தாக்குதல் தொடங்கி ஒரு நிமிட நேரத்திலேயே இவன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான். 

"இன்று நடத்தப்பட்டிருப்பது மிகவும் அநியாயமான ஒரு நடவடிக்கை. மக்களை வெறுக்கும் ஒரு செயல், நிச்சயம் தவறானது" என்று பிரதமர் மேலும் கூறினார்.

2011 இல் நியுசிலாந்திற்கு வந்துசேர்ந்த இந்த அடிப்படைவாதி 2016 ஆம் ஆண்டிலிருந்து தேசிய பாதுகாப்பிற்கு அச்சுருத்தலான மாறியதுடன், அன்றிலிருந்து இவன் தொடர்ச்சியாக பொலீஸாரினால் கண்காணிக்கப்பட்டு வந்ததாகப் பிரதம்ர் மேலும் தெரிவித்தார்.

இவன் தொடர்ச்சியாக பொலீஸாரின் கடுமையான கண்காணிப்பின் கீழ் வாழ்ந்துவந்தாலும், இந்தத் தாக்குதல் எப்படிச் சாத்தியமானது என்று பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர். இவனால் 9 பேர் கடுமையாகத் தாக்கப்பட்டுக் காயப்படும்வரை ஏன் பொலீஸார் இவனைத் தடுத்து நிறுத்த முயலவில்லை என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

"ஒருவனை நீங்கள் 24 மணித்தியாலமும் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருக்கிறீர்கள் என்றால், அவனை கைதுசெய்து அருகிலிருந்து கண்காணித்தால் ஒழிய அவனின் அனைத்து நடவடிக்கைகளையும் எம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், எமது கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக இருந்தபடியினால்த்தான் எம்மால் 9 பேருடன் அவனது தாக்குதலினை முறியடிக்க முடிந்தது" என்று பொலீஸ் கமிஷனர் அன்ட்ரு கொஸ்ட்டர் கூறினார்.

"மக்கள் எல்லாப்புறமும் சிதறி ஓடிக்கொண்டிருந்தார்கள். எங்கும் கூக்குரலும், அவல ஓலங்களும். ஒரு வயோதிபர் கத்திக் குத்துக் காயத்துடன் தரையில் போராடிக்கொன்டிருந்ததைப் பார்த்தேன்' என்று ஒரு பெண் கூறினார்.

லின் மோல் எனப்படும் பல்பொருள அங்காடியொன்றிலிருந்து மக்கள் சிதறியோடும் ஒளிப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த அங்காடியை நோக்கிக் குறைந்தது 6 நோயாளர் காவு வாகனங்களும், வைத்திய உதவியாளர் வாகனங்களும் சென்றதாக  மக்கள் கூறுகின்றனர்.

காயமடைந்தவர்களில் 6 பேரை வைத்தியசாலைக் கொண்டுசென்றிருப்பதாகவும், அவர்களுள் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இன்னும் இருவர் கடுமையாகக் காயமடைந்தாலும், உயிர் ஆபத்து இன்றி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமைதி மார்க்க பேர்வழிகள் ஆரம்பிச்சுட்டானுவ ,பாவம் பிரதமர்  முக்காடு போட்டு முஸ்லிம்களுடன் குந்தியிருந்தும் இரக்கம் காட்டாமல் அவனுங்க வேலையை காட்டிவிட்டானுவ  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்.... என்ன விசயமெண்டா.....

நேற்று திண்னையில் சொன்னேன்...... ரிசாட் .... குடும்பமே உள்ள.... யாருக்கு போன் பண்ணி இருப்பார்.... ஒன்று தூள் கோஸ்டி அல்லது ஜிகாதி கோஸ்டி.....

சாளரத்தினூடு வீசிய போனை எடுத்து ஆராய வேண்டும்.

ஜிகாதி எண்ணம் வந்தால்.... மனம்... மூர்க்கமாகும், வக்கிரமாகும்..... வழமைக்கு மீளாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வந்த ஒருவரை பிடித்து நாடு கடத்தாமல், கடைசிவரை அவரை பத்திரமா பாதுகாத்து நியூசிலாந்து மக்களுக்குகத்திகுத்து வாங்கி கொடுத்திருக்கு காவல்துறை.

அகதியாக தஞ்சமடைந்த அவர்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் இல்லாத தமிழர்கள் உட்பட்ட பிற இனங்களை குழந்தைகள் குடும்பம் என்றும் பார்க்காமல் கதற கதற பிடித்து நாடு கடத்தும் அரசுகள், மத அடிப்படை இஸ்லாமிய பயங்கரவாதிகளை மிகவும் மென்மையாக கையாள்கிறது.

ஒருவேளை அவர்களுக்கு செய்த பாவம் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நியூசிலாந்து மக்களை சூழ்கிறதோ என்னமோ.

காயமடைந்த அப்பாவி நியூசிலாந்து மக்கள் குணமடைய பிரார்த்தனைகள்.

அப்படியே இன்னும் சில லட்சம் சிரியா மற்றும் ஐஎஸ் ஆதரவாளர்களை பாவம் பார்த்து பிளேன் பிளேனா கொண்டுவந்து உங்கள் நாட்டில் இறக்குங்கள் நல்லாயிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்க கனடாவிலையும் ஒராள் பிளேன் பிளேனா இறக்கிறார். நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டுக்குள்ள வச்சாலும் நக்குத்தண்ணி நக்குத்தண்ணிதான் என்று முன்னோர்கள் சொன்னது வீணாகவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரதாக்குதல் நடத்தியவரை பொலிஸ் முதலே கைதசெய்ய விரும்பினாலும் பிரதமர்  அனுமதித்திருப்பாரோ  தெரியவில்லை.:rolleyes:
இறந்த பயங்கரவாதியின் இறுதி கிரிகையில் யசிந்தா ஆர்டென் புர்க்காவுடன் கலந்து கொள்ளமாட்டார் என்று நம்புவோம்.

Link to comment
Share on other sites

கண்காணிக்கப் பட்டவரே தாக்குதல் நடாத்த முடியுமெனில் நியூசிலாந்தின் பாதுகாப்பை என்னவென்று சொல்வது.  ஜெசிந்தா  மடம் கொரோனாவுக்கு கொடுத்த பாதுகாப்பு பயங்கரவாத்துக்கு கொடுக்கவில்லை. மசூதி தாக்குதலோடு பாடம் படித்து இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன இலங்கையர்??

அவர் ஒரு முசுலிம்

அவர்களுக்கென்று ஒரு பண்பு நாடு கொள்கை? உண்டு.

Link to comment
Share on other sites

3 hours ago, வாலி said:

இங்க கனடாவிலையும் ஒராள் பிளேன் பிளேனா இறக்கிறார். நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டுக்குள்ள வச்சாலும் நக்குத்தண்ணி நக்குத்தண்ணிதான் என்று முன்னோர்கள் சொன்னது வீணாகவில்லை.

நாட்டின் பாதுகாப்பு,பொருளாதாரம் போன்ற எல்லாவற்றையும் விட வாக்கு வங்கி முக்கியம் ருடோவுக்கும் லிபரலுக்கும். தாம் வகை தொகையாக குடியேறவும் ஒன்றுக்கும் 10 பிள்ளைகளை பெத்து அரச செலவில் வளர்க்கவும் இஸ்லாமியர்களில் 90 வீதமானோர் லிபரலுக்குத்தான் வாக்கு போடுவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

இவர்தான் ஆளாம்.....டிவிட்டர்ல வந்தது..... மூலம் இணைக்கேலாது. ஏனெண்டால் பின்னோட்டங்கள் அவ்வளவும் செந்தமிழ்

இலங்கையை சேர்ந்த ISIS தீவிரவாதி (A/L 2008 Batch) ( பச்சை சங்கி) நியூசிலாந்தில் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட 60 வினாடிகளுக்குள் சுட்டுகொல்லபட்டன். 5 வருடமாக பொலிஸ் ரேடாரில் இருந்த தாலிபான் isis தீவிரவாதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

அதென்ன இலங்கையர்??

அவர் ஒரு முசுலிம்

அவர்களுக்கென்று ஒரு பண்பு நாடு கொள்கை? உண்டு.

தமிழ்  பேசும் முஸ்லீம் என்று போட்டால் சந்தோசமா அண்ணேய் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ரதி said:

தமிழ்  பேசும் முஸ்லீம் என்று போட்டால் சந்தோசமா அண்ணேய் 

அவர்கள் அதை ஒத்துக்கொள்ளவதில்லை 

ஆனால் உலகத்துக்கு சிங்களம் அப்படி தான் காட்டும்.

பிரித்தானியாவில் தடையை நீடிக்க சொன்ன காரணங்களை பார்த்தால் இது புரியும்??

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

அதென்ன இலங்கையர்??

அவர் ஒரு முசுலிம்

அவர்களுக்கென்று ஒரு பண்பு நாடு கொள்கை? உண்டு.

இதை ஒரு யாழ்ப்பாண தமிழன் குடும்ப பிரச்சனை காரணமாக செய்திருந்தால் .....

தலையங்கம் வேறு மாதிரி வந்திருக்கும் ...."யாழ்ப்பாண தமிழன்  கொலையாளி"
பக்கம்பக்கமாக எழுதியிருப்பார்கள் முன்னாள் புரட்சிவாதிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

இதை ஒரு யாழ்ப்பாண தமிழன் குடும்ப பிரச்சனை காரணமாக செய்திருந்தால் .....

தலையங்கம் வேறு மாதிரி வந்திருக்கும் ...."யாழ்ப்பாண தமிழன்  கொலையாளி"
பக்கம்பக்கமாக எழுதியிருப்பார்கள் முன்னாள் புரட்சிவாதிகள்

முஸ்லீமும்  சிங்களவனும் வெளிநாடுகளில் குற்றம் செய்தால் இலங்கையர் அதே வடகிழக்கு தமிழன் மலையக தமிழன் செய்தால் இலங்கைத்தமிழன் என்ற சொற்பதம் உபயோகிப்பினம் .இதைச்செய்வது சிங்களவன் அல்ல செத்த வீட்டு செய்தி சொல்லும் இணையம் தமிழ் பிபிசி போன்றவை .

3 hours ago, ரதி said:

தமிழ்  பேசும் முஸ்லீம் என்று போட்டால் சந்தோசமா அண்ணேய் 
 

இந்த உலகத்திலே சொந்த தாய் மொழி மீது வன்மமும் குரோதமும் கொண்ட தமிழ் மொழி பேசும் முஸ்லீம் என்று போட்டு கொள்ளுங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அவர்கள் அதை ஒத்துக்கொள்ளவதில்லை 

ஆனால் உலகத்துக்கு சிங்களம் அப்படி தான் காட்டும்.

பிரித்தானியாவில் தடையை நீடிக்க சொன்ன காரணங்களை பார்த்தால் இது புரியும்??

 

1 hour ago, putthan said:

இதை ஒரு யாழ்ப்பாண தமிழன் குடும்ப பிரச்சனை காரணமாக செய்திருந்தால் .....

தலையங்கம் வேறு மாதிரி வந்திருக்கும் ...."யாழ்ப்பாண தமிழன்  கொலையாளி"
பக்கம்பக்கமாக எழுதியிருப்பார்கள் முன்னாள் புரட்சிவாதிகள்

 உலகளவில் இன்றும் ஈழத்தமிழர் என்றால் கொலையாளிகள் என்றுதான் முத்திரை குத்தி வைத்திருக்கின்றார்கள். இது எனக்கு நடந்த சொந்த அனுபவம். சென்ற புதன்கிழமை 20 பேர் கூடிய ஒரு கலந்துரையாடலுக்கு சென்றிருந்தேன்.

ஜேர்மனியர்கள் பெரும்பான்மையான ஒன்று கூடல் அது.
அங்கே இனவெறி சம்பந்தமாக ஒரு உரையாடலும் இடம்பெற்றது..அங்கேதான் மேற்கூறிய கொலையாளிகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடினார்கள். நான் முடிந்தவரை எம்மை பற்றி விளங்கப்படுத்தினேன். இருந்தாலும் அந்த திரையை கிழிப்பது கடினமாகவே இருந்தது. புலம்பெயர் தமிழர்களாகிய நாம் கிணற்று தவளையாகி விட்டோமோ என்றொரு விசனமும் என் மனதுக்குள் எழுந்தது.

 எமக்குள் 10 வருடங்களுக்கு முன்னர் இருந்த உற்சாகம் இல்லாமல் போய் விட்டதை உணர்கின்றேன். எதிரிகள் எமது தொய்வை நன்றாகவே பயன்படுத்தி விட்டார்கள். எதிரிகள் என நான்
 சொல்ல வந்தது 10 வீதம் சிங்கள இனவாதிகள். 90 வீதம் நமது தமிழர்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பெருமாள் said:

இந்த உலகத்திலே சொந்த தாய் மொழி மீது வன்மமும் குரோதமும் கொண்ட தமிழ் மொழி பேசும் முஸ்லீம் என்று போட்டு கொள்ளுங்கள் .

ஏண்ட உம்மாட வாப்பா அவங்கட உம்மாட மொழி அரபி இல்லியா?👀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

தமிழ்  பேசும் முஸ்லீம் என்று போட்டால் சந்தோசமா அண்ணேய் 

 இன்று சிலோன் முஸ்லீம் யாரவது நான் தமிழன் என்று சொல்ல கேள்விப்பட்டுருக்கின்றீர்களா?
ஈழத்தமிழர் பிரச்சனை சம்பந்தமாக ஏதாவது கூட்டம் நடக்குது எண்டால் மட்டும்  தங்களுக்கும் ஒரு அலகு, சுழகு வேணுமெண்டு தொப்பியோட குந்திடுவாங்க....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்குள் 10 வருடங்களுக்கு முன்னர் இருந்த உற்சாகம் இல்லாமல் போய் விட்டதை உணர்கின்றேன். எதிரிகள் எமது தொய்வை நன்றாகவே பயன்படுத்தி விட்டார்கள். எதிரிகள் என நான்
 சொல்ல வந்தது 10 வீதம் சிங்கள இனவாதிகள். 90 வீதம் நமது தமிழர்கள்

கனடாவில் இது 100/100 வீத உண்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

நாட்டின் பாதுகாப்பு,பொருளாதாரம் போன்ற எல்லாவற்றையும் விட வாக்கு வங்கி முக்கியம் ருடோவுக்கும் லிபரலுக்கும். தாம் வகை தொகையாக குடியேறவும் ஒன்றுக்கும் 10 பிள்ளைகளை பெத்து அரச செலவில் வளர்க்கவும் இஸ்லாமியர்களில் 90 வீதமானோர் லிபரலுக்குத்தான் வாக்கு போடுவர். 

கனடா தமிழர்களும் குடும்பத்துக்கு பத்து பிள்ளைகளை பெற்று சந்ததியை விருத்தி செய்யலாமே? யார் மறித்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:


 சொல்ல வந்தது 10 வீதம் சிங்கள இனவாதிகள். 90 வீதம் நமது தமிழர்கள்.

 

அதிலும் முன்னாள் புரட்சிவாகள் அதி தீவீரம் .....சீனாக்காரன் சிறிலங்காவை லவ் பண்ணுவதிலும் பார்க்க இவையளின் லவ் தாங்க முடியவில்லை ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

கனடா தமிழர்களும் குடும்பத்துக்கு பத்து பிள்ளைகளை பெற்று சந்ததியை விருத்தி செய்யலாமே? யார் மறித்தது?

உங்கள் கருத்து திரிக்கு சம்பந்தமில்லாத கருத்து .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடியை சேர்ந்தவரே ஐ.எஸ்.ஐ.எஸ். இனால் ஈர்க்கப்பட்டு நியூசிலாந்தில் தாக்குதலை மேற்கொண்டவர்!

நியூசிலாந்தில் ஐ. எஸ். ஐ.எஸ் இனால் ஈர்க்கப்பட்டு கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் தொடர்பான திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

எம்.சம்சுதீன் அதில் அல் அஸ்கார் கவுறடி வீதி,காத்தான்குடி – 01, சேர்ந்தவரே இவ்வாறு தாக்குதலைமேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1989 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 7 வயதில் வெளிநாடு சென்றுள்ளார்.
4 சகோதரங்களை கொண்ட குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாக பிறந்துள்ளார். என்பது தெரியவந்துள்ளது.

ஒரு பெண் சகோதரியும் தந்தையாரும் கனடாவில் வசிக்கும் நிலையில், ஏனைய இரண்டு சகோதரர்களும் கட்டார், சவுதியில்  வசிக்கின்றனர்.குறித்த நபர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன தொடர்புடையவர் என்று நியூசிலாந்து அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


https://www.meenagam.com/காத்தான்குடியை-சேர்ந்தவ/

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.