Jump to content

சிங்களம் தெரியாமல் ஏன் ஊடகத்திற்குள் இருக்கின்றீர்கள் என ஊடகவியலாளரிடம் பொலிஸார் விதண்டாவாதம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Just now, satan said:

ஒருதடவை நான் அதை சுட்டிக்காட்டியபோது, யானறியேன் என்று தப்பித்துக்கொண்டதாக நினைத்தார். அப்பவே இவர் ஒரு சந்தர்ப்பவாதி எனபுரிந்து கொண்டேன். 

சொல்லவே வேண்டாம். 

ஜூட் என்கிற பெயரில் இவர் 2009 இற்கு முன்னர் எழுதிய கருத்துக்களையும், 2009 மே மாதத்திற்குப் பின்னர் எழுதிய கருத்துக்களையும் முடிந்தால் படித்துப்பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 165
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப முடிவாய் என்ன சிங்களம் படிக்கிறதா இல்லையா😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரஞ்சித் said:

சிங்களம் தெரிந்து வைத்திருப்பது நல்லதுதானே என்று சொல்பவர்கள் இரு வகையினர்.

முதலாமவர்கள் , இந்தச் சிங்களம் தெரிதலின் சூட்சுமத்தினை உள்நோக்கத்தினை அறியாதவர்கள், ஏமாளிகள்.

இரண்டாமவர்கள், நடப்பது என்னவென்று தெரிந்தே, அதனை ஆதரிக்கும் விலைபோனவர்கள் அல்லது இதன்மூலம் அரசியல் ரீதியிலான லாபம் அடைபவர்கள்.

நான் இரண்டாம் வகை என்று "ரஞ்சித் தியரி" மூலம் இன்று அறிந்து கொண்டேன்!🤣

பேராதனையில் வாழப் போகிறேன் என்று தெரிந்ததும், வவுனியாவில் இருந்த ஒரு சிங்கள ஆசிரியரிடம் பேச, வாசிக்க எழுதப் பழகிக் கொண்டேன் (பேராதனையூடாகச் செல்லும் சில பஸ்களில் சிங்களத்தில் மட்டும் தான் பெயர்பலகை இருக்கும் என யாரோ சொன்னதை நம்பியதால் தான் இந்த முயற்சி!). 

நான் அறிந்த சிங்களம், பாதுகாப்புக் கெடுபிடிகள் நிறைந்த பெரஹராக் காலத்தில் கூட கண்டியின் மத்திய பகுதிக்கு ஒரு விக்கினமும் இல்லாமல் சென்று சுற்றி வர உதவியது. சிங்களம் தெரியாமல் கண்டிப் பொலிஸ் நிலையத்தில் ஒரு நாள் முழுவதும் தடுத்து வைக்கப் பட்ட பல பொறியியல் பீட மாணவர்களை விட எனக்கு நன்மை தான்!

பின்னர் ஆங்கிலமோ தமிழோ தெரியாத மாட்டுக் காரர்கள், ஆட்டுக் காரர்களுடன் பேசி எனது தொழிலை நேர்த்தியாகச் செய்யவும் நான் அறிந்த சிங்களம் உதவியது!

எனவே, சந்தர்ப்பவாதியான எனக்கு சிங்களம் படித்ததால் நன்மை!

சந்தர்ப்பவாதியல்லாத கவரிமான்களுக்கு சிங்களத்தைப் படித்தால் மயிர் உதிர்ந்து விடும் என்பது உண்மை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
9 hours ago, ரஞ்சித் said:

சிங்களம் தெரிந்து வைத்திருப்பது நல்லதுதானே என்று சொல்பவர்கள் இரு வகையினர்.

முதலாமவர்கள் , இந்தச் சிங்களம் தெரிதலின் சூட்சுமத்தினை உள்நோக்கத்தினை அறியாதவர்கள், ஏமாளிகள்.

இரண்டாமவர்கள், நடப்பது என்னவென்று தெரிந்தே, அதனை ஆதரிக்கும் விலைபோனவர்கள் அல்லது இதன்மூலம் அரசியல் ரீதியிலான லாபம் அடைபவர்கள்.

முதலில் இந்தச் சிங்கள் தெரிந்தால் நல்லதுதானே என்கிற நிலை ஏன் உருவாகியது? யாரால் உருவாக்கப்பட்டது? எதற்காக உருவாக்கினார்கள்? இதற்கும் 1950 இன் தனிச் சிங்களச் சட்டத்திற்கும் என்ன தொடர்பு? இவை எவற்றுக்கும் உங்களிடம் பதில் இல்லையென்றால் நீங்கள் முதலாமவர்கள், முட்டாள்கள்.

அப்படியில்லை, இவை எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை, ஆனால் அதனை நன்கு விளங்கிக்கொண்டே ஆதரிக்கிறோம் என்பவர்கள், இரண்டாமவர்கள். விலைபோனவர்கள், சந்தர்ப்பவாதிகள்.

தமிழர் பெரும்பான்மையினராக வாழும் பிரதேசத்தில் சிங்களம் தெரியவேண்டிய தேவை என்ன? தமிழர்களைப் போரில் தோற்கடித்துவிட்டோம், எமது ஆக்கிரமிப்பிற்குள் வாழும் அடிமைகள் எமது மொழியைக் கற்பதே எமது தேவை என்று எம்மை ஆக்கிரமித்து நிற்கும் சிங்களத்தின் அடையாளங்களான ராணுவமும் காவல்த்துறையும் சொல்கின்றன. இதனால் நமக்குக் கிடைக்கப்போகின்ற நலன்கள் என்ன? ஏன் இது ஒரு வித ஆக்கிரமிப்பு மனப்பான்மை என்று இங்கே குத்திமுறிபவர்களுக்குத் தெரியவில்லை? எமது தாயகத்தில் எமது மொழியைக் கதைக்கும் உரிமையினை மறுக்கும் இந்த ஆக்கிரமிப்பு மனப்பாங்கு இவர்களுக்கு எப்படி ஒரு நல்ல விடயமாகத் தெரிகிறது?

இற்றைக்கு 40 - 50 வருடங்களுக்கு முன்னர் சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் பிறப்பால் தமிழர்களாகவிருந்து, சிங்கள இனவாதிகளினால் திட்டமிட்டு தமிழ்க் கல்வியும், தமிழ்ப் பாடசாலைகளும், தமிழ்மொழிப் பயன்பாடும் மறுக்கப்பட்ட ஒரு சமூகம் இன்று முழு சிங்களவர்களாக மாறியிருப்பது இந்த சிங்களச் செம்புதூக்கிகளுக்கோ அல்லது மகிந்தவின் கைகளை நக்கிப் பிழைக்கும் சிலரின் அடிவருடிகளுக்கோ நிச்சயமாகத் தெரியாமல் இருக்காது. ஆனால், இதனை அவர்கள் மிகவும் நாசுக்காக, சூட்சுமத்துடன் செய்கிறார்கள். 

தமிழில் சிங்களத்தைப் புகுத்தி, சிறிது சிறிதாக தமிழினத்தின் தனித்தன்மையினை குலைத்து, கலப்பினமாக அவர்களை மாற்றி, இறுதியில் தமிழர் எனும் இனத்தினை முற்றாக தனக்குள் உள்வாங்கும் கைங்கரியத்தைச் சிங்களம் செய்துவருவது இவர்களுக்குத் தெரியும்.. ஆனால், அப்படி நடக்கவில்லை என்பதைக் காட்டவே இவர்கள் இறக்கப்பட்டிருக்கிறார்கள். 

1990 களிலிருந்து  இலிருந்து தமிழ்ப் பெண்களை தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து நிற்கும் ராணுவமும் காவல்த்துறையினரும் மணப்பது பொதுவாக நடந்துவருகிறது. இப்போது தமிழர் தாயகத்தில் இயங்கும் பல்கலைக் கழகங்களில் வேண்டுமென்றே சிங்களத்தால் அனுமதிக்கப்படும் சிங்கள மாணவர்களை காதலித்து மணக்கும் ஒரு போக்கு இளைய தமிழ்ப் பெண்களிடையே பரவி வருகிறது. சில வாரங்களுக்கு முன்னர் அவ்வாறான சிங்கள மாணவனை காதலித்து மணந்த தமிழிச்சி ஒருவரின் பேட்டியினை கேட்டபோது, சிங்களம் இவர்களை எவ்வாறு மூளைச்சலவைசெய்து தமிழினத்திற்கெதிராகப் பாவிக்கிறது என்பது தெளிவாகியது.

இதில் வேடிக்கை என்னவென்றால், "சிங்களம் தெரிந்தால்த்தான் அவன் என்ன பேசுகிறான் என்பது தெரியும்" என்று வேறு பசப்பல்கள். தமிழரின் மொழி தெரிந்தபடியினால்த்தான், தமிழன்பற்றிச் சிங்களவனுக்குக் காட்டிக்கொடுத்து அழித்தீர்க்கள். இப்போது சிங்களம் கற்று யாருடன் சேர்ந்து யாரை அழிக்கப்போகிறீர்கள்? உங்களின் காட்டிக்கொடுப்புக்களுக்கும், துரோகங்களுக்கும் ஒரு அளவேயில்லையா?

ஜேர்மனியிலும் , ஜப்பானிலும் இருக்கும் தமிழர்கள் தமிழா பேசுகிறார்கள் என்று கேட்கும் மூடர்களுக்குப் புரியவில்லை அது எமது நாடு இல்லையென்பதும், நாம் அங்கே தஞ்சம் பிழைக்கப் போனவர்கள் என்பதும், அப்படியிருந்தபோதும்கூட, எமது மொழியினைக் கலாசாரத்தை நாம் பின்பற்ற அவன் ஒருபோதும் தடைவிதிக்கவில்லை. ஆனால், யாழ்ழ்ப்பாணமோ மட்டக்களப்போ இருப்பது ஜேர்மனியிலோ அல்லது ஜப்பானிலோ இல்லை. அது எமது தாயகத்தின் இரு முக்கிய நகரங்கள், அங்கு வசிப்பதற்கு நாம் தமிழைத் தவிர வேறு மொழியொன்றினைக் கற்கவேண்டிய தேவையில்லை. 

இதற்குள் புலம்பெயர் தமிழர்கள் உசுப்பேற்றுகிரார்களாம்.ஏன், நீங்கள் தொப்பியை மாற்றி மாற்றி அணிந்துகொண்டு சிங்களத்துக்குக் காவடி தூக்கி தமிழரை அழிக்கலாம், ஆனால் நாங்கள் எமது சொந்தங்களின் நலன்பற்றி அக்கறைப்படுவது உங்களுக்குக் கஷ்ட்டமாக இருக்கிறது? ஆக, தாயகத்திலுள்ளவர்களுக்குச் சார்பாக வெளியில் இருந்து எவரும் பேசக் கூடாது? எமது மொழியினைப் பேசிப்பேசியே எம்மைக் கருவறுத்த ஒரு சமூகம் புலம்பெயர் தமிழர்மேல் பழியினைப் போட்டுவிட்டு தாங்கள் சிங்களத்துடன் சேர்ந்து தமிழ் பேசியே எம்மை அழித்த கைஙரியத்தினை இங்கே மறைத்துக்கொண்டு உலாவருகிறார்கள் !

சிங்களப் பிரதேசத்தில் வாழப் போவதால் சிங்களம் கற்றுச் செல்பவர்கள் இதற்குள் அடங்கார் என நினைக்கின்றேன். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

ஆங்கிலத்தை விட சிங்களம் பழமை வாய்ந்த மொழி பாருங்கோ. 

உண்மையில் ஆங்கில மொழி எங்கு தோற்றம் பெற்றது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்திற்கு வாழ்க்கைப்பட்டு போனவர்கள் சிங்களம் படியுங்கள் தமிழுக்கு வாழ்க்கைப்பட்டு வந்தவர்கள் தமிழ் படியுங்கள்….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெவ்வேறு மொழி பேசும் நிலங்களை இணைத்து ஒரு நாடாக்குவது பூகோள அடிப்படையிலான தேவை அல்லது தேர்வாக இருக்கலாம். அரசியல் அடிப்படையில் அது ஒரு புரிந்துணர்வு, ஒப்பந்தம் அவ்வளவே. அவ்வாறு அமைந்த/அமைத்த ஒரு நாட்டில் ஒவ்வொரு மொழி, அதன் அடிப்படையிலான பண்பாட்டு அடையாளங்களைக் காத்து நிற்பது அங்குள்ள அரசின் தலையாய கடமை. இவ்விதி இலங்கை, இந்தியா, ஸ்விட்சர்லாந்து எனப் பல நாடுகளுக்கும் பொருந்தும். 

            பொது மொழியென ஒன்று வேண்டுமென்றால், அது அந்தந்த நாட்டைப் பொறுத்துத் தீர்மானிக்கப்பட வேண்டும். உதாரணமாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு அவற்றின் அடிமை வரலாறு ஒரு  இணைப்பு மொழியான ஆங்கிலத்தைத் தந்துள்ளது. அந்த அடிமை வரலாறுதானே பல்வேறு தேசிய இனங்களின் இணைப்பையும் தந்தது ! அந்த இணைப்பு மொழியைக்கூட ஒரே நிலப்பரப்பிற்குள் வாழும் பாமரர் அனைவரும் அறிய வேண்டிய அவசியமில்லை.           

         ஒரு நிலப்பரப்பில் இருந்து வயிற்றுப் பிழைப்புக்காக இன்னொரு இடம் சென்று கூலி வேலை செய்யும் பாமரன் கூட குறுகிய காலத்தில் அங்குள்ள மொழியைப் பேசக் கற்றுக் கொள்கிறான். இதுதான் உலகெங்கும் நடைமுறை. எனவே வசதிக்காகத்தானே எனும் வாதம் கூட  ஏற்புடையதாக இல்லை. 

          மொழி வெறும் தகவல் பரிமாற்ற ஊடகமல்ல. இந்த நாட்டிலுள்ள ஒரு மொழியை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது கூட்டாட்சிக் கொள்கைக்கு எதிரானது. அது மொழி, இன, பண்பாட்டு அழிப்பிற்கான மறைமுக முயற்சி. ஒற்றுமை உன்னதமானது; ஒருமுகத்தன்மை பாசிசமானது. Unity is noble; Uniformity is fascist.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

பேராதனையில் வாழப் போகிறேன் என்று தெரிந்ததும், வவுனியாவில் இருந்த ஒரு சிங்கள ஆசிரியரிடம் பேச, வாசிக்க எழுதப் பழகிக் கொண்டேன் (பேராதனையூடாகச் செல்லும் சில பஸ்களில் சிங்களத்தில் மட்டும் தான் பெயர்பலகை இருக்கும் என யாரோ சொன்னதை நம்பியதால் தான் இந்த முயற்சி!)

ஜஸ்ரின்,

மேலேநான் குவாட் பண்ணியதைத் தான் இந்தத் திரியில் எல்லாரும் சொல்கிறார்கள். யாழ்ப்பாணத்துக்கு வேலைக்கு வந்தால்நீங்கள் செய்தது போல தமிழ் படிச்சல்லோ வந்திருக்க வேணும் சொந்தப்பக்கமே பந்தைப்போடுறியளே

Link to comment
Share on other sites

9 hours ago, satan said:

ஒருதடவை நான் அதை சுட்டிக்காட்டியபோது, யானறியேன் என்று தப்பித்துக்கொண்டதாக நினைத்தார். அப்பவே இவர் ஒரு சந்தர்ப்பவாதி எனபுரிந்து கொண்டேன். 

சொல்லவே வேண்டாம். 

நீங்கள் சந்தர்ப்பங்களை தவறவிட்ட அசந்தர்ப்பவாதி என்ற கவலை இருப்பது நியாயம்தான். 🥲

9 hours ago, ரஞ்சித் said:

ஜூட் என்கிற பெயரில் இவர் 2009 இற்கு முன்னர் எழுதிய கருத்துக்களையும், 2009 மே மாதத்திற்குப் பின்னர் எழுதிய கருத்துக்களையும் முடிந்தால் படித்துப்பாருங்கள்.

2009 மேயில் அப்படியான மாற்றம் நிகழ என்ன காரணமாக இருந்திருக்க கூடும்?🙃 

என்ன நடந்தாலும் நாம் மாறமாட்டோம், எமது தவறுகளையும் திருத்தமாட்டோம், இப்படியே இருந்து நாமும் அழிந்து மற்றவர்களையும் அழித்துவிடுவோம் என்று நீங்கள் பிடிவாதம் பிடிப்பதன் காரணம் என்ன?

Link to comment
Share on other sites

58 minutes ago, பெருமாள் said:

உண்மையில் ஆங்கில மொழி எங்கு தோற்றம் பெற்றது ?

 

 

பழங்கால ஆங்கிலம் (400 -1100)தொகு

முதன்மைக் கட்டுரை: பழங்கால ஆங்கிலம்

கிபி 5 ம் நூற்றாண்டளவில் பிரிட்டனை மூன்று யேர்மன் குழுக்கள் (ஆங்கில்சு, சாக்சன், யூட்) இன்றைய யேர்மன் / டென்மார்க் நிலப்பரப்பில் இருந்து ஆக்கிரமித்தன. இந்தக் குழுக்கள் தம்மிடையே புரிந்துகொள்ளக்கூடிய ஒத்த மொழிகளைப் பேசின. அப்போது அங்கு பேசப்பட்டு வந்த கெல்டிக் மொழிக் குழுக்கள் வடக்கேயும் மேற்கேயும் தள்ளப்பட்டன. "ஆங்கிலோ இனத்தவர்கள் “ஆங்லோ-லாந்து” எனும் பகுதியில் இருந்தே வந்தனர். இவர்கள் பேசிய மொழி "இங்கிலிசுக்" எனும் யேர்மனிய மொழிக் குடும்பத்து மொழியாகும். இப்பெயர்களே இன்று மருவி இங்கிலாந்து - இங்கிலிசு என்றானது."[3] இக்காலத்திப் பேசப்பட்ட ஆங்கிலம் பழம் ஆங்கிலம் எனப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சில ஆக்கங்கள் மட்டுமே இப்போது கிடைக்கின்றன.[4] தற்கால ஆங்கிலத்தின் பெரிதும் புழங்கும் 50 விழுக்காடு சொற்களுக்கு பழ ஆங்கில வேர்கள் உண்டு.
 

https://ta.m.wikipedia.org/wiki/ஆங்கில_மொழியின்_வரலாறு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எனக்கு நியாய, அநியாயம் யார் பக்கம் என தெரியவில்லை ஆனால் என் அனுபவத்தை சொல்கிறேன்.

நான் ஒரு குறித்த வயதில் இருந்து வடகிழக்குக்கு அப்பால் படித்தவன். அதுவும் நான் கற்ற, வாழ்ந்த, விளையாடிய, பழகிய சூழல் என்னை கிட்டதட்ட ஒரு சிங்களவரை போல் சிங்களம் பேச வைத்தது.

ஆனால் எத்தனை இலவச வாய்ப்புகள் வந்த போதும் ஒரு போதும் சிங்களத்தை முறைப்படி கற்பதில்லை, எழுத வாசிக்க படிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன்.

ஏனென்றால் சிங்களம் என்ன நோக்கில் “இதை கற்பதை தவிர வேறு வழி இல்லை” என்று எம்மில் புகுத்த படுகிறது என்பதை நான் தெளிவாக தெரிந்து வைத்திருந்தேன்.

இந்த காரணம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. 

தவிரவும் என் வயதொத்தோர் உயிரை கொடுக்கும் போது, தெற்கில் முடிந்தளவு என்னாலால அரசியலை முன்னெடுத்த காலம் அது - ஆகவே இந்த மறுப்பை, என்னாலான ஒரு அடையாள புரட்சி எனவும் எடுத்து கொள்ளலாம். 

ஆனால் - தொடர்ந்தும் இலங்கையில் வாழ்ந்திருந்தால் இந்த வைராக்கியம் நிலைத்திருக்குமா? சொல்ல முடியாது.

அடுத்து நாம் இன்னொன்றையும் கருத வேண்டும்.

தமிழரை விட, இனவாதத்தால் (2009)ம் ஆண்டுக்கு பின் கூட முஸ்லிம்கள் ஒப்பீட்டளவில் குறைவாக பாதிக்கபட்டமைக்கு அவர்களில் பலருக்கு சிங்களம் பேச தெரிந்துருப்பதும் ஒரு காரணம் என நான் நினைக்கிறேன்.

ஆகவே போருக்கு பின்னான நலிவுற்ற நிலையில், இலங்கையில் எவ்வளவு தமிழர்கள் சிங்களத்தை கற்று, எம் நிலையை சாதாரண சிங்கள மக்களிடம் எடுத்து செல்கிறோமோ, அந்தளவுக்கு எமது பக்க நியாயம் பற்றி அவர்கள் அறிய வாய்பாக அமையும் என நான் நினைக்கிறேன்.

தமிழ் பகுதிகளில் அரச கருமங்கள் தமிழில் நடக்க வேண்டும் என்பது எமது நியாயமான கோரிக்கை, இப்போ இலங்கை சட்டமும் அப்படித்தான் கூறுகிறது. ஆனால் அந்த கோரிக்கையின் நியாயத்தை இப்படி தமிழர் மட்டும் வாசிக்கும் உதயனில் எழுதி, யாழில் தமிழர் இடையே விவாதிப்பதிலும் பார்க்க, இதை சிங்கள ஊடக பரப்பில், சிங்களத்தில் விவாதித்தால் அதிக நன்மை கிடைக்க கூடும்.

இனி ஆயுதத்துக்கான காலம் இல்லை, அறிவுக்கான காலம் என்று தனியே வாய்சவாடல் விட்டு மட்டும் பயனில்லை, அவர்கள் மொழியையே எமக்கான ஆயுதமாக்கும் விவேகமும் வேண்டும்.

அதற்காக தமிழை கைவிட வேண்டியதில்லை. எமது மொழிக்கான உரிமையை நிலைநாட்டியபடி, போராடியபடி, அவர்கள் மொழியை கற்று அதன்மூலம் எமது மொழி உரிமையை மேலும் திடப்படுத்தலாம்.

இதை 2009 இன் பின் மாறியுள்ள சூழலுக்கான உத்தியாகவே நான் கருதுகிறேன். 

இரஞ்சித் கூறிய 2 வகையினர் 2009 முன் சரியாக இருந்திருக்கலாம்.

இப்போ?

ஆனால் நான் சிங்களம் படிக்க மறுத்ததை நினைத்து பார்க்க, ஒரு பக்கம் சிறு பிள்ளைதனமான மடவேலை (வீட்டில் ஏனையோர் படித்தார்கள்) போல இருந்தாலும், அந்த சூழலில் அதுதான் சரியான தேர்வு என்றும் தோன்றுகிறது.

 

 

பிகு

சிங்களம் எழுத படிக்க தெரியாமைக்கு நான் வருந்துவது - ஆங்கில, தமிழ் இணைய தளங்களில் எம் பக்க நியாயத்தை எடுத்து சொல்வது (சொல்லியது) போல் சிங்கள இணையங்களில் எழுத முடியாமல் இருப்பதை இட்டுத்தான்.

சில பத்து வருடங்களுக்கு முன் இப்படி நடக்கும் என தெரிந்திருந்தால் கட்டாயம் சிங்களம் எழுத படித்திருபேன்.

Link to comment
Share on other sites

ஒப்பீட்டு ரீதியில் மக்கள் தொகையில் சிங்களம் தெரிந்த தமிழரின் சதவீத்த்தை விட தமிழ் தெரிந்த சிங்களவரின் சதவீதம் அதிகம் என்பது எனது கணிப்பு.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

ஒப்பீட்டு ரீதியில் மக்கள் தொகையில் சிங்களம் தெரிந்த தமிழரின் சதவீத்த்தை விட தமிழ் தெரிந்த சிங்களவரின் சதவீதம் அதிகம் என்பது எனது கணிப்பு.  

எப்படி கணித்தீர்கள் என்று சொல்ல முடியுமா? 

Link to comment
Share on other sites

46 minutes ago, tulpen said:

ஒப்பீட்டு ரீதியில் மக்கள் தொகையில் சிங்களம் தெரிந்த தமிழரின் சதவீத்த்தை விட தமிழ் தெரிந்த சிங்களவரின் சதவீதம் அதிகம் என்பது எனது கணிப்பு.  

தவறான கணிப்பு.

மலையக தமிழ் மக்களில் அனேகமாக எல்லாராலும் சிங்களம் கதைக்க முடியும், ஆனால் அங்குள்ள சிங்கள மக்களால் முடியாது. அதே போன்று கொழும்பு வாழ் தமிழர்களில் பெரும்பாலானோர்க்கு சிங்களம் முடியும், ஆனால் கொழும்பு சிங்களவர்களில் கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை, பாமன்கடை போன்ற பகுதிகளில் உள்ள சிங்களவர்களுக்கே ஓரளவு முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

தவறான கணிப்பு.

மலையக தமிழ் மக்களில் அனேகமாக எல்லாராலும் சிங்களம் கதைக்க முடியும், ஆனால் அங்குள்ள சிங்கள மக்களால் முடியாது. அதே போன்று கொழும்பு வாழ் தமிழர்களில் பெரும்பாலானோர்க்கு சிங்களம் முடியும், ஆனால் கொழும்பு சிங்களவர்களில் கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை, பாமன்கடை போன்ற பகுதிகளில் உள்ள சிங்களவர்களுக்கே ஓரளவு முடியும்.

மலையகம் போல இல்லாவிடினும் கிழக்கிலும் கணிசமான தமிழர்கள் சிங்களம் கொச்சையாகவேனும் பேசுவார்கள். ஆனால் கிழக்கு வாழ் சிங்களவர்களுக்கு தமிழ் தெரியாது போடா🤣.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலரது கருத்தை பார்க்க இன்னமும் அந்த மக்கள் தங்களுக்கு அடிமையாய் இருக்க வேண்டும்  என்று விரும்புகிறார்கள்

Link to comment
Share on other sites

1 hour ago, நிழலி said:

தவறான கணிப்பு.

மலையக தமிழ் மக்களில் அனேகமாக எல்லாராலும் சிங்களம் கதைக்க முடியும், ஆனால் அங்குள்ள சிங்கள மக்களால் முடியாது. அதே போன்று கொழும்பு வாழ் தமிழர்களில் பெரும்பாலானோர்க்கு சிங்களம் முடியும், ஆனால் கொழும்பு சிங்களவர்களில் கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை, பாமன்கடை போன்ற பகுதிகளில் உள்ள சிங்களவர்களுக்கே ஓரளவு முடியும்.

கிழக்கு மக்களையும் மலையக மக்களையும் கணக்கிலெடுக்காத்தால் என்து கணிப்பு தவறாக இருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

தவறான கணிப்பு.

மலையக தமிழ் மக்களில் அனேகமாக எல்லாராலும் சிங்களம் கதைக்க முடியும், ஆனால் அங்குள்ள சிங்கள மக்களால் முடியாது. அதே போன்று கொழும்பு வாழ் தமிழர்களில் பெரும்பாலானோர்க்கு சிங்களம் முடியும், ஆனால் கொழும்பு சிங்களவர்களில் கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை, பாமன்கடை போன்ற பகுதிகளில் உள்ள சிங்களவர்களுக்கே ஓரளவு முடியும்.

அதற்கு முக்கிய காரணம் தமிழர்கள் தான் வாழ்வாதாரம் தேடி சிங்கள பகுதிகளுக்கு சென்றார்கள்.(ஒப்பீட்டளவில்) ஆனால் இன்று நிலைமை வேறு??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

கிழக்கு மக்களையும் மலையக மக்களையும் கணக்கிலெடுக்காத்தால் என்து கணிப்பு தவறாக இருக்கலாம். 

கணிப்பு தவறென்பதை ஒத்துகொள்ளும் மனசு இருக்கே…அதுதான் கடவுள் 👍🏿.

நீங்கள் உங்களை அறியாமலே யாழ் மையவாடிக்குள்…சேய்… மையவாதத்துக்குள் சிக்கி கொண்டீர்கள்🤣.

யாழை விட்டு முதன் முதலில் வெளியேறிய போது எனக்கு தெரிந்த சிங்கள வார்த்தைகள் பள்ளோ, பஹே, நஹே மட்டுமே.  

என்னை சுற்றி இருந்த வயசாளிகள் படித்தவர்கள் நிலையும் கிட்டதட்ட அவ்வளவே.

இப்போ என்ன நிலை என தெரியவில்லை.

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

அதற்கு முக்கிய காரணம் தமிழர்கள் தான் வாழ்வாதாரம் தேடி சிங்கள பகுதிகளுக்கு சென்றார்கள்.(ஒப்பீட்டளவில்) ஆனால் இன்று நிலைமை வேறு??

இன்று நிலைமை வேறு??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாதவூரான் said:

ஜஸ்ரின்,

மேலேநான் குவாட் பண்ணியதைத் தான் இந்தத் திரியில் எல்லாரும் சொல்கிறார்கள். யாழ்ப்பாணத்துக்கு வேலைக்கு வந்தால்நீங்கள் செய்தது போல தமிழ் படிச்சல்லோ வந்திருக்க வேணும் சொந்தப்பக்கமே பந்தைப்போடுறியளே

நான் பந்து போட்ட பக்கத்தைக் கண்ட கண்ணுக்கு நான் எந்தக் கருத்துக்குக் குறிப்பிட்டுப் பதில் எழுதியிருக்கிறேன் என்று பார்க்கத் தெரியவில்லையே? இதைத் தான் tunnel vision என்பதோ?😂 

மற்றபடி: இலங்கையில் இருக்கும் சிங்களவர் தமிழையும், தமிழர் சிங்களத்தையும் கற்றிருக்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம்! உண்மையில் இது பாடத்திட்டத்தில் கட்டாயமாக்கப் பட்டாலும் நல்லதென நினைக்கிறேன். இரண்டே இரண்டு மொழிகள் - இதற்குள் ஒன்றைக் கற்றால் ஒன்று அழிவடைந்து விடுமென்பதெல்லாம் பயப் பூச்சாண்டி காட்டும் பொய் வேலை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இதில் எனக்கு நியாய, அநியாயம் யார் பக்கம் என தெரியவில்லை ஆனால் என் அனுபவத்தை சொல்கிறேன்.

நான் ஒரு குறித்த வயதில் இருந்து வடகிழக்குக்கு அப்பால் படித்தவன். அதுவும் நான் கற்ற, வாழ்ந்த, விளையாடிய, பழகிய சூழல் என்னை கிட்டதட்ட ஒரு சிங்களவரை போல் சிங்களம் பேச வைத்தது.

ஆனால் எத்தனை இலவச வாய்ப்புகள் வந்த போதும் ஒரு போதும் சிங்களத்தை முறைப்படி கற்பதில்லை, எழுத வாசிக்க படிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன்.

ஏனென்றால் சிங்களம் என்ன நோக்கில் “இதை கற்பதை தவிர வேறு வழி இல்லை” என்று எம்மில் புகுத்த படுகிறது என்பதை நான் தெளிவாக தெரிந்து வைத்திருந்தேன்.

இந்த காரணம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. 

தவிரவும் என் வயதொத்தோர் உயிரை கொடுக்கும் போது, தெற்கில் முடிந்தளவு என்னாலால அரசியலை முன்னெடுத்த காலம் அது - ஆகவே இந்த மறுப்பை, என்னாலான ஒரு அடையாள புரட்சி எனவும் எடுத்து கொள்ளலாம். 

ஆனால் - தொடர்ந்தும் இலங்கையில் வாழ்ந்திருந்தால் இந்த வைராக்கியம் நிலைத்திருக்குமா? சொல்ல முடியாது.

அடுத்து நாம் இன்னொன்றையும் கருத வேண்டும்.

தமிழரை விட, இனவாதத்தால் (2009)ம் ஆண்டுக்கு பின் கூட முஸ்லிம்கள் ஒப்பீட்டளவில் குறைவாக பாதிக்கபட்டமைக்கு அவர்களில் பலருக்கு சிங்களம் பேச தெரிந்துருப்பதும் ஒரு காரணம் என நான் நினைக்கிறேன்.

ஆகவே போருக்கு பின்னான நலிவுற்ற நிலையில், இலங்கையில் எவ்வளவு தமிழர்கள் சிங்களத்தை கற்று, எம் நிலையை சாதாரண சிங்கள மக்களிடம் எடுத்து செல்கிறோமோ, அந்தளவுக்கு எமது பக்க நியாயம் பற்றி அவர்கள் அறிய வாய்பாக அமையும் என நான் நினைக்கிறேன்.

தமிழ் பகுதிகளில் அரச கருமங்கள் தமிழில் நடக்க வேண்டும் என்பது எமது நியாயமான கோரிக்கை, இப்போ இலங்கை சட்டமும் அப்படித்தான் கூறுகிறது. ஆனால் அந்த கோரிக்கையின் நியாயத்தை இப்படி தமிழர் மட்டும் வாசிக்கும் உதயனில் எழுதி, யாழில் தமிழர் இடையே விவாதிப்பதிலும் பார்க்க, இதை சிங்கள ஊடக பரப்பில், சிங்களத்தில் விவாதித்தால் அதிக நன்மை கிடைக்க கூடும்.

இனி ஆயுதத்துக்கான காலம் இல்லை, அறிவுக்கான காலம் என்று தனியே வாய்சவாடல் விட்டு மட்டும் பயனில்லை, அவர்கள் மொழியையே எமக்கான ஆயுதமாக்கும் விவேகமும் வேண்டும்.

அதற்காக தமிழை கைவிட வேண்டியதில்லை. எமது மொழிக்கான உரிமையை நிலைநாட்டியபடி, போராடியபடி, அவர்கள் மொழியை கற்று அதன்மூலம் எமது மொழி உரிமையை மேலும் திடப்படுத்தலாம்.

இதை 2009 இன் பின் மாறியுள்ள சூழலுக்கான உத்தியாகவே நான் கருதுகிறேன். 

இரஞ்சித் கூறிய 2 வகையினர் 2009 முன் சரியாக இருந்திருக்கலாம்.

இப்போ?

ஆனால் நான் சிங்களம் படிக்க மறுத்ததை நினைத்து பார்க்க, ஒரு பக்கம் சிறு பிள்ளைதனமான மடவேலை (வீட்டில் ஏனையோர் படித்தார்கள்) போல இருந்தாலும், அந்த சூழலில் அதுதான் சரியான தேர்வு என்றும் தோன்றுகிறது.

 

 

பிகு

சிங்களம் எழுத படிக்க தெரியாமைக்கு நான் வருந்துவது - ஆங்கில, தமிழ் இணைய தளங்களில் எம் பக்க நியாயத்தை எடுத்து சொல்வது (சொல்லியது) போல் சிங்கள இணையங்களில் எழுத முடியாமல் இருப்பதை இட்டுத்தான்.

சில பத்து வருடங்களுக்கு முன் இப்படி நடக்கும் என தெரிந்திருந்தால் கட்டாயம் சிங்களம் எழுத படித்திருபேன்.

ஏன் இவ்வளவு எழுதி மெனக்கெடுவான்? ஷோர்ற் அன்ட் ஸ்வீற்: அமரர் ரவிராஜ் ஏன் தமிழ் அரசியல் வாதிகளிடையே தனித்துவமாக இருந்தார்? அதனாலேயே சிங்களப் புலனாய்வாளர்களால் கொல்லப் பட்டார்? இன்று ஏன் சாணக்கியன் அதே போல சிறப்பானவராக  கருதப்படுகிறார்?

இதற்கு விடை தேடினாலே, இந்தப் பிடிவாதமான மொழி ஒறுப்பு பிற்போக்கானது என்று புரிந்து விடும்! மொழிகளைப் பொறுத்த வரையில் more the merrier என்பதே நிஜம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

ஏன் இவ்வளவு எழுதி மெனக்கெடுவான்? ஷோர்ற் அன்ட் ஸ்வீற்: அமரர் ரவிராஜ் ஏன் தமிழ் அரசியல் வாதிகளிடையே தனித்துவமாக இருந்தார்? அதனாலேயே சிங்களப் புலனாய்வாளர்களால் கொல்லப் பட்டார்? இன்று ஏன் சாணக்கியன் அதே போல சிறப்பானவராக  கருதப்படுகிறார்?

இதற்கு விடை தேடினாலே, இந்தப் பிடிவாதமான மொழி ஒறுப்பு பிற்போக்கானது என்று புரிந்து விடும்! மொழிகளைப் பொறுத்த வரையில் more the merrier என்பதே நிஜம்!

சிறப்பான இரு உதாரணங்கள்👏🏾.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

ஒப்பீட்டு ரீதியில் மக்கள் தொகையில் சிங்களம் தெரிந்த தமிழரின் சதவீத்த்தை விட தமிழ் தெரிந்த சிங்களவரின் சதவீதம் அதிகம் என்பது எனது கணிப்பு.  

நான் இலங்கையில் நின்ற காலங்களில் எங்கள் குழுவிற்கு ஏற்பட்ட அனுபவத்தில் இதே முடிவுக்கு தான் வந்தோம்.

5 hours ago, goshan_che said:

தமிழ் பகுதிகளில் அரச கருமங்கள் தமிழில் நடக்க வேண்டும் என்பது எமது நியாயமான கோரிக்கை, இப்போ இலங்கை சட்டமும் அப்படித்தான் கூறுகிறது. ஆனால் அந்த கோரிக்கையின் நியாயத்தை இப்படி தமிழர் மட்டும் வாசிக்கும் உதயனில் எழுதி, யாழில் தமிழர் இடையே விவாதிப்பதிலும் பார்க்க, இதை சிங்கள ஊடக பரப்பில், சிங்களத்தில் விவாதித்தால் அதிக நன்மை கிடைக்க கூடும்.

இனி ஆயுதத்துக்கான காலம் இல்லை, அறிவுக்கான காலம் என்று தனியே வாய்சவாடல் விட்டு மட்டும் பயனில்லை, அவர்கள் மொழியையே எமக்கான ஆயுதமாக்கும் விவேகமும் வேண்டும்.

அதற்காக தமிழை கைவிட வேண்டியதில்லை. எமது மொழிக்கான உரிமையை நிலைநாட்டியபடி, போராடியபடி, அவர்கள் மொழியை கற்று அதன்மூலம் எமது மொழி உரிமையை மேலும் திடப்படுத்தலாம்.

பொன்னான அறிவுரை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

உங்களுக்கு வரும் அதே இடத்தில் இருந்துதான் எனக்கும் காசு வருகின்றது. 😄

எனக்கு கட்டுக்கட்டாய் வருது. உங்களுக்கு வெறும் சில்லறை தானே...😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.