Jump to content

சிங்களம் தெரியாமல் ஏன் ஊடகத்திற்குள் இருக்கின்றீர்கள் என ஊடகவியலாளரிடம் பொலிஸார் விதண்டாவாதம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரிடம் பொலிஸார் ஊரடங்கு வழி அனுமதிப்பத்திரத்தினை காண்பிக்குமாறும் சிங்களம் தெரியாமல் ஊடகத்திற்குள் ஏன் இருக்கின்றீர்கள் என்று கேட்ட சம்பவம் ஒன்று இன்றைய தினம் (03) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த ஊடகவியலாளர் இன்றைய தினம், (03) காரைநகர் பகுதியில் செய்தி சேகரிப்பதற்காக சென்று கொண்டிருந்தார்.

 
 

இதன்போது பொன்னாலை சந்தியில் வைத்து பொலிஸாரும் கடற்படையினரும் அவரை வழிமறித்து “தற்போது ஊரடங்கு அமுலில் உள்ளது. இந்த நிலையில் எங்கே செல்கின்றீர்கள்” என சிங்களத்தில் கேட்டனர்.

அதற்கு அந்த ஊடவியலாளர் தான் ஊடகவியலாளர் எனக்கூறி தனது ஊடக அடையாளத்தினை உறுதிப்படுத்தினார்.

ஊடகவியலாளராக இருந்தாலும் ஊரடங்கு வழி அனுமதிப்பத்திரம் தேவை என்று அவருடன் விதண்டாவாதத்தில் ஈடுபட்டார்.

அந்த ஊடகவியலாளர் தனக்கு முழுமையாக சிங்களம் தெரியாது என்றும் நீங்கள் பேசுவது விளங்கவில்லை எனவும் தெரிவித்தார்.

அதற்கு அந்தப் பொலிஸார் ஊடகத்திற்குள் இருந்து கொண்டு சிங்களம் தெரியாமல் ஏன் இருக்கின்றீர்கள் எனக்கேட்டு சிறிது நேரம் விதண்டாவாதம் செய்துவிட்டு பின்னர் அவரை செய்தி சேகரிக்க செல்வதற்கு அனுமதித்தார்.

ஒரு தமிழர் பகுதிக்குள் தமிழே தெரியாத பொலிஸார் ஒருவர் தனியாக கடமையில் இருந்து தமிழ்பேசுபவர்களுடன் சரியான தொடர்பாடலைப் பேண முடியாமலும் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தினை பறிப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

சிங்களம் தெரியாமல் ஏன் ஊடகத்திற்குள் இருக்கின்றீர்கள் என ஊடகவியலாளரிடம் பொலிஸார் விதண்டாவாதம்! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

Link to comment
Share on other sites

  • Replies 165
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வசிப்பவர்கள் சிங்கள மொழியில் புலமை பெறுவது பல பயன்களை அவர்களுக்கு கொடுக்கும். ஊடகவியலாளர்களுக்கு சிங்கள மொழியில் பரீட்சயம் காணப்படுவது அவர்கள் வேலையை இலகுபடுத்தும். சோம்பேறித்தனத்தில் நாட்டின் பிரதான மொழியை கற்று கொள்ளாவிட்டால் அதற்கு யார் பொறுப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

இலங்கையில் வசிப்பவர்கள் சிங்கள மொழியில் புலமை பெறுவது பல பயன்களை அவர்களுக்கு கொடுக்கும். ஊடகவியலாளர்களுக்கு சிங்கள மொழியில் பரீட்சயம் காணப்படுவது அவர்கள் வேலையை இலகுபடுத்தும். சோம்பேறித்தனத்தில் நாட்டின் பிரதான மொழியை கற்று கொள்ளாவிட்டால் அதற்கு யார் பொறுப்பு.

தமிழர் பகுதிகளில் தமிழ் நிர்வாகம் மற்றும் தொடர்பாடல் பிரதான மொழி.  ஒரு உள்ளூர் செய்தியாளர் உள்ளூரில் பணியாற்றுவதற்கு பிரதான சிங்கள மொழி எதற்கு அவசியம்?

ஒரு சிங்கள ஊடகவியலாளர் சிங்கள பகுதியில் செய்தி சேகரிக்கவேண்டுமென்றால் அவருக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டியது அவசியமா?

முற்றுமுழுதாக தமிழர் வாழும் ஒரு மாகாணத்தில் நிர்வாக கடமையாற்றும் காவல்துறை அறிந்து வைத்திருக்க வேண்டியது  சிங்களத்தையா தமிழையா?

உலகில் எங்காவது முழுக்க முழுக்க ஒரு மொழி பேசும் மக்கள் வாழும் பிரதேசத்தில் கடமையாற்றும் பொலிசார் அந்த மொழியை தெரியாது காவல்துறை நிர்வாகம் செய்வது உண்டா? அங்கு வாழும் மக்களுக்கு தமது மொழி தெரியவில்லை என்று விதண்டாவாதம் செய்தது உண்டா?

நியாயத்தை கதைப்போம் என்று பெயர் வைத்துக்கொண்டு ஒரே அநியாயமா கதைக்கிறீர்களே சித்தப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

இலங்கையில் வசிப்பவர்கள் சிங்கள மொழியில் புலமை பெறுவது பல பயன்களை அவர்களுக்கு கொடுக்கும். ஊடகவியலாளர்களுக்கு சிங்கள மொழியில் பரீட்சயம் காணப்படுவது அவர்கள் வேலையை இலகுபடுத்தும். சோம்பேறித்தனத்தில் நாட்டின் பிரதான மொழியை கற்று கொள்ளாவிட்டால் அதற்கு யார் பொறுப்பு.

ஒரு மொழிக்குரிய அடிப்படை தகுதிகளே இல்லாமல் அவசர அவசரமாக காலசக்ரத்தில் பிரசவிக்கப்ட்ட குறைமாத சிசு போன்றது சிங்கள மொழி எங்களுக்கு அப்படியான மொழி தமிழர்களுக்கு தேவையில்லை என்றுதான் இங்கு வந்தோம்  சிங்களம் தேவையென்று வகுப்பு எடுக்கும் நீங்கள்  ஊரில் இருந்து இந்த கருத்தை சொன்னால் அதற்கொரு பெறுமதி இருக்கும் !

இன்னுமொன்று சிங்கள பகுதிகளுக்குள் இருக்கும் போலீசார் அப்படி கூறியிருந்தால் கூட ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம் அது கூட இலங்கை அரசியல் சட்டத்தின் படி பார்த்தால் பிழை என்ற விடயமாவது தெரியுமா ?

தமிழர் பகுதியில் கடமையாற்றும் போலீசார் முதலில் தமிழ் கற்க முடியாமல் என்ன இழவுக்கு வடக்குக்கும் கிழக்கிளையும் வேலை செய்கினமாம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எனக்கு சின்னனில் சொல்லப்பட்டது அந்த மொழியை கதைக்கிறோமோ அல்லது இல்லையோ என்பது இரண்டாவது விடயம் ...மொழி தெரிந்திருந்தால் அவர்கள் எம்மை பற்றி என்ன கதைக்கிறார்கள் என்று எம்மால் அறிந்து கொள்ள முடியும் .

 

6 minutes ago, பெருமாள் said:

ஒரு மொழிக்குரிய அடிப்படை தகுதிகளே இல்லாமல் அவசர அவசரமாக காலசக்ரத்தில் பிரசவிக்கப்ட்ட குறைமாத சிசு போன்றது சிங்கள மொழி எங்களுக்கு அப்படியான மொழி தமிழர்களுக்கு தேவையில்லை என்றுதான் இங்கு வந்தோம்  சிங்களம் தேவையென்று வகுப்பு எடுக்கும் நீங்கள்  ஊரில் இருந்து இந்த கருத்தை சொன்னால் அதற்கொரு பெறுமதி இருக்கும் !

இன்னுமொன்று சிங்கள பகுதிகளுக்குள் இருக்கும் போலீசார் அப்படி கூறியிருந்தால் கூட ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம் அது கூட இலங்கை அரசியல் சட்டத்தின் படி பார்த்தால் பிழை என்ற விடயமாவது தெரியுமா ?

தமிழர் பகுதியில் கடமையாற்றும் போலீசார் முதலில் தமிழ் கற்க முடியாமல் என்ன இழவுக்கு வடக்குக்கும் கிழக்கிளையும் வேலை செய்கினமாம் ?

பெருமாள் ,உங்களுக்கு சிங்களம் தேவையில்லை என்று நீங்கள் வந்திருக்கலாம் ...ஆனால் அங்கிருப்பவர்கள் முன்னேற ,தொழிலுக்கு என்று சிங்களம் அவசியம்...அதே மாதிரி சிங்கள போலீசாருக்கும் தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்   
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஆனால் அங்கிருப்பவர்கள் முன்னேற ,தொழிலுக்கு என்று சிங்களம் அவசியம்...அதே மாதிரி சிங்கள போலீசாருக்கும் தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்   

 

அப்படியாக எனக்கு தெரியவில்லை.

உங்கள் உற்ற உறவினர் என்று நீங்கள் சொல்லும் கருணா, சிங்களம் தெரிந்தா இவ்வளவு, Forbes இல் பேயெர் அடிபடும் அளவிடற்கு  முன்னேற்றம்? 

ஒரு உதாரணத்தை கொண்டு அளவெடுக்க முடியாது தான். 

ஆனால், கருணாவின் முன்னேற்றம் , சிங்களம்  தேவை அல்லது இல்லை என்ற போக்கில் செல்வ்வாக்கு செலுத்துவது தவிர்க்க முடியாதது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இலங்கையில் வசிப்பவர்கள் சிங்கள மொழியில் புலமை பெறுவது பல பயன்களை அவர்களுக்கு கொடுக்கும். ஊடகவியலாளர்களுக்கு சிங்கள மொழியில் பரீட்சயம் காணப்படுவது அவர்கள் வேலையை இலகுபடுத்தும். சோம்பேறித்தனத்தில் நாட்டின் பிரதான மொழியை கற்று கொள்ளாவிட்டால் அதற்கு யார் பொறுப்பு.

நான் ஜேர்மனியில் இருக்கின்றேன். அதனால் எனக்கு ஜேர்மன் மொழி தெரிந்திருக்க வேண்டும்.
அந்த சிங்கள பொலிசு தமிழ்பகுதியில் வேலை செய்கிறான். அவனுக்கு தமிழ் தெரியவேணும் எண்டு நீங்கள் யோசிக்காதது உங்களுக்கு எங்கையோ இருந்து காசு வருகுது எண்டு அர்த்தம்...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்குள்ள தமிழர்கள் சிங்களம் படித்து மொழியை அறிந்துவிட்டால் பிறகு தங்கள் சொல் கேட்கமாட்டார்கள், உருப்பட தொடங்கி விடுவார்கள் என்று வெளிநாட்டில் உள்ள பெருந்தகைகளுக்கு பயம் போலும். தமிழ் மட்டுமே தெரியும் என்றால் சுத்துவது இலகுதானே. 😁😁

2 hours ago, குமாரசாமி said:

நான் ஜேர்மனியில் இருக்கின்றேன். அதனால் எனக்கு ஜேர்மன் மொழி தெரிந்திருக்க வேண்டும்.
அந்த சிங்கள பொலிசு தமிழ்பகுதியில் வேலை செய்கிறான். அவனுக்கு தமிழ் தெரியவேணும் எண்டு நீங்கள் யோசிக்காதது உங்களுக்கு எங்கையோ இருந்து காசு வருகுது எண்டு அர்த்தம்...😎

உங்களுக்கு வரும் அதே இடத்தில் இருந்துதான் எனக்கும் காசு வருகின்றது. 😄

5 hours ago, பெருமாள் said:

ஒரு மொழிக்குரிய அடிப்படை தகுதிகளே இல்லாமல் அவசர அவசரமாக காலசக்ரத்தில் பிரசவிக்கப்ட்ட குறைமாத சிசு போன்றது சிங்கள மொழி எங்களுக்கு அப்படியான மொழி தமிழர்களுக்கு தேவையில்லை என்றுதான் இங்கு வந்தோம்  சிங்களம் தேவையென்று வகுப்பு எடுக்கும் நீங்கள்  ஊரில் இருந்து இந்த கருத்தை சொன்னால் அதற்கொரு பெறுமதி இருக்கும் !

இன்னுமொன்று சிங்கள பகுதிகளுக்குள் இருக்கும் போலீசார் அப்படி கூறியிருந்தால் கூட ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம் அது கூட இலங்கை அரசியல் சட்டத்தின் படி பார்த்தால் பிழை என்ற விடயமாவது தெரியுமா ?

தமிழர் பகுதியில் கடமையாற்றும் போலீசார் முதலில் தமிழ் கற்க முடியாமல் என்ன இழவுக்கு வடக்குக்கும் கிழக்கிளையும் வேலை செய்கினமாம் ?

 

ஆங்கிலத்தை விட சிங்களம் பழமை வாய்ந்த மொழி பாருங்கோ. 

அங்குள்ள அப்பாவிகள் உருப்படுவதற்கு நல்ல கருத்துக்களை வெளிநாட்டில் இருந்து கூறுவது ஒன்றும் தவறு இல்லை. தாயகத்தில் உள்ள மக்கள் சிங்களம் கற்ககூடாது என்று கூறுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி உள்ளது என முதலில் சொல்லுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, valavan said:

தமிழர் பகுதிகளில் தமிழ் நிர்வாகம் மற்றும் தொடர்பாடல் பிரதான மொழி.  ஒரு உள்ளூர் செய்தியாளர் உள்ளூரில் பணியாற்றுவதற்கு பிரதான சிங்கள மொழி எதற்கு அவசியம்?

ஒரு சிங்கள ஊடகவியலாளர் சிங்கள பகுதியில் செய்தி சேகரிக்கவேண்டுமென்றால் அவருக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டியது அவசியமா?

முற்றுமுழுதாக தமிழர் வாழும் ஒரு மாகாணத்தில் நிர்வாக கடமையாற்றும் காவல்துறை அறிந்து வைத்திருக்க வேண்டியது  சிங்களத்தையா தமிழையா?

உலகில் எங்காவது முழுக்க முழுக்க ஒரு மொழி பேசும் மக்கள் வாழும் பிரதேசத்தில் கடமையாற்றும் பொலிசார் அந்த மொழியை தெரியாது காவல்துறை நிர்வாகம் செய்வது உண்டா? அங்கு வாழும் மக்களுக்கு தமது மொழி தெரியவில்லை என்று விதண்டாவாதம் செய்தது உண்டா?

நியாயத்தை கதைப்போம் என்று பெயர் வைத்துக்கொண்டு ஒரே அநியாயமா கதைக்கிறீர்களே சித்தப்பு.

யதார்த்தம் தெரியாமல் விதண்டாவாதம் செய்கின்றீர்கள். வன்னி நிலப்பரப்பில் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிருவாகத்தில் செயற்படும் நிதர்சனம் செய்தியாளர் இல்லை இவர். அந்தகாலம் எல்லாம் கடந்துபோய் 13 வருடங்கள் ஆயிற்று. 

4 hours ago, Kadancha said:

 

அப்படியாக எனக்கு தெரியவில்லை.

உங்கள் உற்ற உறவினர் என்று நீங்கள் சொல்லும் கருணா, சிங்களம் தெரிந்தா இவ்வளவு, Forbes இல் பேயெர் அடிபடும் அளவிடற்கு  முன்னேற்றம்? 

ஒரு உதாரணத்தை கொண்டு அளவெடுக்க முடியாது தான். 

ஆனால், கருணாவின் முன்னேற்றம் , சிங்களம்  தேவை அல்லது இல்லை என்ற போக்கில் செல்வ்வாக்கு செலுத்துவது தவிர்க்க முடியாதது.  

கருணா அவர்களுக்கு சிங்களம் தெரியாது என்று யார் உங்களுக்கு சொன்னது? பல ஊடங்களினூடும் அவர் சிங்களம் அறிந்தவர் என்பதை இன்னுமா காணவில்லை?

11 hours ago, பிழம்பு said:

செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரிடம் பொலிஸார் ஊரடங்கு வழி அனுமதிப்பத்திரத்தினை காண்பிக்குமாறும் சிங்களம் தெரியாமல் ஊடகத்திற்குள் ஏன் இருக்கின்றீர்கள் என்று கேட்ட சம்பவம் ஒன்று இன்றைய தினம் (03) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த ஊடகவியலாளர் இன்றைய தினம், (03) காரைநகர் பகுதியில் செய்தி சேகரிப்பதற்காக சென்று கொண்டிருந்தார்.

 
 

இதன்போது பொன்னாலை சந்தியில் வைத்து பொலிஸாரும் கடற்படையினரும் அவரை வழிமறித்து “தற்போது ஊரடங்கு அமுலில் உள்ளது. இந்த நிலையில் எங்கே செல்கின்றீர்கள்” என சிங்களத்தில் கேட்டனர்.

அதற்கு அந்த ஊடவியலாளர் தான் ஊடகவியலாளர் எனக்கூறி தனது ஊடக அடையாளத்தினை உறுதிப்படுத்தினார்.

ஊடகவியலாளராக இருந்தாலும் ஊரடங்கு வழி அனுமதிப்பத்திரம் தேவை என்று அவருடன் விதண்டாவாதத்தில் ஈடுபட்டார்.

அந்த ஊடகவியலாளர் தனக்கு முழுமையாக சிங்களம் தெரியாது என்றும் நீங்கள் பேசுவது விளங்கவில்லை எனவும் தெரிவித்தார்.

அதற்கு அந்தப் பொலிஸார் ஊடகத்திற்குள் இருந்து கொண்டு சிங்களம் தெரியாமல் ஏன் இருக்கின்றீர்கள் எனக்கேட்டு சிறிது நேரம் விதண்டாவாதம் செய்துவிட்டு பின்னர் அவரை செய்தி சேகரிக்க செல்வதற்கு அனுமதித்தார்.

ஒரு தமிழர் பகுதிக்குள் தமிழே தெரியாத பொலிஸார் ஒருவர் தனியாக கடமையில் இருந்து தமிழ்பேசுபவர்களுடன் சரியான தொடர்பாடலைப் பேண முடியாமலும் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தினை பறிப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

சிங்களம் தெரியாமல் ஏன் ஊடகத்திற்குள் இருக்கின்றீர்கள் என ஊடகவியலாளரிடம் பொலிஸார் விதண்டாவாதம்! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

உதயன் குமுறுவதை பார்த்தால் இந்த செய்தியை கொடுத்தவர் பாதிக்கப்பட்ட அதே ஊடகவியலாளரோ என்று சந்தேகம் தோன்றுகின்றது. உங்கள் முதலாளி திருவாளர் சரவணபவனிடம் கேளுங்கள் அவருக்கு சிங்களம் தெரியுமோ தெரியாதோ என்று. கற்று தருவார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிஞாயம் தெரிந்தவர்களுடன் வாதாடலாம், தெரியாதவரோடு வாதாடுவது நமக்குத்தான் கேவலம். சிங்களத்தை திணிப்பதற்கும்,  தெரிந்துகொள்வதற்கும் வித்தியாசம் தெரியாமல் நிஞாயப் படுத்த முனைகிறார்கள்.தமிழன் தன் பிரதேசத்தில் சிங்களம் தெரியாமல் இருப்பது தவறா? ஊடகவியலாளர் சிங்களவரிடமா செய்தி சேகரிக்கச் சென்றார்?  செய்தியாளர் சிங்களவரா அல்லது செய்தி சேகரிக்கச் சென்ற பிரதேசம் சிங்களப்பிரதேசமா? எதற்கு இங்கு சிங்களம் தேவைப்படுகிறது? தமிழருக்கு சேவை செய்ய வந்தவர்  தமிழ் தெரியாமல் மற்றவரை குறை கூறுவது தவறா? ஒரு தவறான வாதத்துக்கு வக்காலத்து வாங்குபவர்களின் தனி வாழ்க்கையும் அப்படிபட்டதே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் காவல்துறையை அழித்து, தமிழருக்கு சேவைசெய்ய வந்த படை அவர்கள் மொழியை அறிந்திருக்க வேண்டியது கட்டாயம். அதைவிட்டு  விட்டு தன் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று வாதாடுவது அடக்குமுறை என்றுகூட தெரியாதவர்கள் நிஞாயவாதியாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வாழ்ந்தவர்களுக்கு, வாழ்பவர்களுக்கு தெரியும் சிங்கள மொழி தெரிந்தால் வேலைகளை எவ்வளவு இலகுவாக செய்யலாம் என்று அந்த மொழி தெரியாமல் இருப்பதை விட.

அதேசமயம், சிங்கள மொழி தெரியாவிட்டால் எத்தனை பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கவேண்டி வரும் என்பதும் தெரியும்.

அரசாங்கம் நியாமாக செயற்படுகின்றதா, படைகள் நியாயமாக செயற்படுகின்றனவா என்பது வேறு பிரச்சனை.

ஆனால், ஒரு பொதுமகன் தமிழ் மட்டுமே தெரிந்தவர் சிங்களம் தெரியாதவர் என்றால் சிங்கள மொழியை கற்றுக்கொண்டால் இலங்கையில் வாழும் வரை அவருக்கு பல நன்மைகள் உள்ளன.

இல்லை இல்லை சிங்களம் கற்கக்கூடாது என்ன நடந்தாலும் தமிழிலேயே உரையாடுவோம் என நீங்கள் விடாப்பிடியாய் நின்றால், உங்கள் மீது பரிதாபப்படவே முடியும்.

இதற்கு மேல் முட்டையில் மயிரை புடுங்குபவர்கள் தொடர்ந்து புடுங்கலாம். 😉

வணக்கம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

கருணா அவர்களுக்கு சிங்களம் தெரியாது என்று யார் உங்களுக்கு சொன்னது? பல ஊடங்களினூடும் அவர் சிங்களம் அறிந்தவர் என்பதை இன்னுமா காணவில்லை?

எனது கேள்வியை நீங்கள் புரியவில்லை. கருணாவுக்கு சிங்களம் தெரியுமா அல்லது தெரியாத என்பது எனது கேள்வி அல்ல.

சிங்களம் தெரிந்தா (அதாவது தெரிந்த படியால் தான்), இவ்வளவு முன்னேற்றம் அடைய முடிந்ததா? என்பதே எனது கேள்வி. 

மறு வளமாக, கருணா சிங்களம் அறியாமல், இப்போதுள்ள முன்னேற்றத்தில் பாதியை கூட அடைந்து இருக்க முடியாதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்புக்கு பொருத்தமில்லாத கருத்தோடு ஆடுவதால் சொல்கிறேன், சிங்களம் தெரிந்து சிங்களத்துக்கு முட்டுக்கொடுத்த கதிர்காமர், முத்தையா முரளிதரன் போன்றவர்கள் தகுதியிருந்தும் பலனை அடையவில்லையே. சிங்களம் தெரிந்த பலர் கொழும்பிலிருந்து விரட்டப்பட்டனரே. இங்கு யாரும் சிங்களம் கற்போம், கற்கமாட்டோம் என்று வாதாடவில்லை. ஒரு ஊடகவியலாளனுக்கு தேவைற்ற தடை ஏற்படுத்திய ஒரு காவற்துறையின் பொறுப்பற்ற செயலை பகிர்கிறோம்.  சிங்களம் படிப்பதைப்பற்றி வகுப்பெடுக்கிறார்கள். படிப்பவர்கள் தாராளமாக படிக்கலாம். அது அவரவர் விருப்பம். மற்றவரை படிக்கவேண்டுமென்று வற்புறுத்துவதும், அராஜகத்தை நிஞாயப்படுத்துவதும் தவிர்க்கப்படவேண்டும். ஊடகவியலாளருக்கு சிங்களம்  தெரியவில்லை, அவருக்கு அவசியமும் ஏற்படவில்லை, இந்த அதிகாரி தனது தேவைக்காக அவரை தடுப்பது ஒரு அதிகாரிக்கு அப்பாற்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kadancha said:

எனது கேள்வியை நீங்கள் புரியவில்லை. கருணாவுக்கு சிங்களம் தெரியுமா அல்லது தெரியாத என்பது எனது கேள்வி அல்ல.

சிங்களம் தெரிந்தா (அதாவது தெரிந்த படியால் தான்), இவ்வளவு முன்னேற்றம் அடைய முடிந்ததா? என்பதே எனது கேள்வி. 

மறு வளமாக, கருணா சிங்களம் அறியாமல், இப்போதுள்ள முன்னேற்றத்தில் பாதியை கூட அடைந்து இருக்க முடியாதா? 

ஒருதடவை தூஷண பிக்கரோடு உரையாடும்போது வி. முரளிதரனுக்கு மொழிபெயர்ப்பாளர் உதவி செய்துள்ளார். சிலர் அதை நகையாடி இவன் எப்பிடி மகிந்தாவோடு கதைக்கிறான் என்று பகிர்ந்திருந்தார்கள். அவர்களின் பாசறைக்குள் இருக்கும்போது அவர்கள் கதைக்கும்போது சிலதை படித்திருக்கலாம். யாழ்ப்பாணம் வேலைக்கு வந்த அரச உத்தியோகத்தர் போலீசுக்கு சிங்களம் தேவைப்படும்போது: ஆமியும், மஹிந்தவும் இவரோடு தமிழிலேயே கதைச்சிருப்பினம்? இவரோடு என்ன அரசியல் ஆலோசனையே செய்தவை? அவர்கள் இட்டதை இவர்  தலையால செய்து முடிச்சவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

ஆங்கிலத்தை விட சிங்களம் பழமை வாய்ந்த மொழி பாருங்கோ. 

அங்குள்ள அப்பாவிகள் உருப்படுவதற்கு நல்ல கருத்துக்களை வெளிநாட்டில் இருந்து கூறுவது ஒன்றும் தவறு இல்லை. தாயகத்தில் உள்ள மக்கள் சிங்களம் கற்ககூடாது என்று கூறுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி உள்ளது என முதலில் சொல்லுங்கோ.

ஒரு அறிவாளியுடன் தர்க்கம் செய்யலாம் உங்களுடன் என்னால் முடியவில்லை நன்றி வணக்கம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

கருணா அவர்களுக்கு சிங்களம் தெரியாது என்று யார் உங்களுக்கு சொன்னது? பல ஊடங்களினூடும் அவர் சிங்களம் அறிந்தவர் என்பதை இன்னுமா காணவில்லை?

இதை இன்னொரு கோணத்திலும் ஆராயுங்கள்.

கருணா  புலிகலில் முக்கிய பங்கு இல்லாமல், சிங்களம் தெரிந்து இருந்தால், முன்னேறி இருப்பாரா?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் தெரிந்து வைத்திருப்பது நல்லதுதானே என்று சொல்பவர்கள் இரு வகையினர்.

முதலாமவர்கள் , இந்தச் சிங்களம் தெரிதலின் சூட்சுமத்தினை உள்நோக்கத்தினை அறியாதவர்கள், ஏமாளிகள்.

இரண்டாமவர்கள், நடப்பது என்னவென்று தெரிந்தே, அதனை ஆதரிக்கும் விலைபோனவர்கள் அல்லது இதன்மூலம் அரசியல் ரீதியிலான லாபம் அடைபவர்கள்.

முதலில் இந்தச் சிங்கள் தெரிந்தால் நல்லதுதானே என்கிற நிலை ஏன் உருவாகியது? யாரால் உருவாக்கப்பட்டது? எதற்காக உருவாக்கினார்கள்? இதற்கும் 1950 இன் தனிச் சிங்களச் சட்டத்திற்கும் என்ன தொடர்பு? இவை எவற்றுக்கும் உங்களிடம் பதில் இல்லையென்றால் நீங்கள் முதலாமவர்கள், முட்டாள்கள்.

அப்படியில்லை, இவை எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை, ஆனால் அதனை நன்கு விளங்கிக்கொண்டே ஆதரிக்கிறோம் என்பவர்கள், இரண்டாமவர்கள். விலைபோனவர்கள், சந்தர்ப்பவாதிகள்.

தமிழர் பெரும்பான்மையினராக வாழும் பிரதேசத்தில் சிங்களம் தெரியவேண்டிய தேவை என்ன? தமிழர்களைப் போரில் தோற்கடித்துவிட்டோம், எமது ஆக்கிரமிப்பிற்குள் வாழும் அடிமைகள் எமது மொழியைக் கற்பதே எமது தேவை என்று எம்மை ஆக்கிரமித்து நிற்கும் சிங்களத்தின் அடையாளங்களான ராணுவமும் காவல்த்துறையும் சொல்கின்றன. இதனால் நமக்குக் கிடைக்கப்போகின்ற நலன்கள் என்ன? ஏன் இது ஒரு வித ஆக்கிரமிப்பு மனப்பான்மை என்று இங்கே குத்திமுறிபவர்களுக்குத் தெரியவில்லை? எமது தாயகத்தில் எமது மொழியைக் கதைக்கும் உரிமையினை மறுக்கும் இந்த ஆக்கிரமிப்பு மனப்பாங்கு இவர்களுக்கு எப்படி ஒரு நல்ல விடயமாகத் தெரிகிறது?

இற்றைக்கு 40 - 50 வருடங்களுக்கு முன்னர் சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் பிறப்பால் தமிழர்களாகவிருந்து, சிங்கள இனவாதிகளினால் திட்டமிட்டு தமிழ்க் கல்வியும், தமிழ்ப் பாடசாலைகளும், தமிழ்மொழிப் பயன்பாடும் மறுக்கப்பட்ட ஒரு சமூகம் இன்று முழு சிங்களவர்களாக மாறியிருப்பது இந்த சிங்களச் செம்புதூக்கிகளுக்கோ அல்லது மகிந்தவின் கைகளை நக்கிப் பிழைக்கும் சிலரின் அடிவருடிகளுக்கோ நிச்சயமாகத் தெரியாமல் இருக்காது. ஆனால், இதனை அவர்கள் மிகவும் நாசுக்காக, சூட்சுமத்துடன் செய்கிறார்கள். 

தமிழில் சிங்களத்தைப் புகுத்தி, சிறிது சிறிதாக தமிழினத்தின் தனித்தன்மையினை குலைத்து, கலப்பினமாக அவர்களை மாற்றி, இறுதியில் தமிழர் எனும் இனத்தினை முற்றாக தனக்குள் உள்வாங்கும் கைங்கரியத்தைச் சிங்களம் செய்துவருவது இவர்களுக்குத் தெரியும்.. ஆனால், அப்படி நடக்கவில்லை என்பதைக் காட்டவே இவர்கள் இறக்கப்பட்டிருக்கிறார்கள். 

1990 களிலிருந்து  இலிருந்து தமிழ்ப் பெண்களை தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து நிற்கும் ராணுவமும் காவல்த்துறையினரும் மணப்பது பொதுவாக நடந்துவருகிறது. இப்போது தமிழர் தாயகத்தில் இயங்கும் பல்கலைக் கழகங்களில் வேண்டுமென்றே சிங்களத்தால் அனுமதிக்கப்படும் சிங்கள மாணவர்களை காதலித்து மணக்கும் ஒரு போக்கு இளைய தமிழ்ப் பெண்களிடையே பரவி வருகிறது. சில வாரங்களுக்கு முன்னர் அவ்வாறான சிங்கள மாணவனை காதலித்து மணந்த தமிழிச்சி ஒருவரின் பேட்டியினை கேட்டபோது, சிங்களம் இவர்களை எவ்வாறு மூளைச்சலவைசெய்து தமிழினத்திற்கெதிராகப் பாவிக்கிறது என்பது தெளிவாகியது.

இதில் வேடிக்கை என்னவென்றால், "சிங்களம் தெரிந்தால்த்தான் அவன் என்ன பேசுகிறான் என்பது தெரியும்" என்று வேறு பசப்பல்கள். தமிழரின் மொழி தெரிந்தபடியினால்த்தான், தமிழன்பற்றிச் சிங்களவனுக்குக் காட்டிக்கொடுத்து அழித்தீர்க்கள். இப்போது சிங்களம் கற்று யாருடன் சேர்ந்து யாரை அழிக்கப்போகிறீர்கள்? உங்களின் காட்டிக்கொடுப்புக்களுக்கும், துரோகங்களுக்கும் ஒரு அளவேயில்லையா?

ஜேர்மனியிலும் , ஜப்பானிலும் இருக்கும் தமிழர்கள் தமிழா பேசுகிறார்கள் என்று கேட்கும் மூடர்களுக்குப் புரியவில்லை அது எமது நாடு இல்லையென்பதும், நாம் அங்கே தஞ்சம் பிழைக்கப் போனவர்கள் என்பதும், அப்படியிருந்தபோதும்கூட, எமது மொழியினைக் கலாசாரத்தை நாம் பின்பற்ற அவன் ஒருபோதும் தடைவிதிக்கவில்லை. ஆனால், யாழ்ழ்ப்பாணமோ மட்டக்களப்போ இருப்பது ஜேர்மனியிலோ அல்லது ஜப்பானிலோ இல்லை. அது எமது தாயகத்தின் இரு முக்கிய நகரங்கள், அங்கு வசிப்பதற்கு நாம் தமிழைத் தவிர வேறு மொழியொன்றினைக் கற்கவேண்டிய தேவையில்லை. 

இதற்குள் புலம்பெயர் தமிழர்கள் உசுப்பேற்றுகிரார்களாம்.ஏன், நீங்கள் தொப்பியை மாற்றி மாற்றி அணிந்துகொண்டு சிங்களத்துக்குக் காவடி தூக்கி தமிழரை அழிக்கலாம், ஆனால் நாங்கள் எமது சொந்தங்களின் நலன்பற்றி அக்கறைப்படுவது உங்களுக்குக் கஷ்ட்டமாக இருக்கிறது? ஆக, தாயகத்திலுள்ளவர்களுக்குச் சார்பாக வெளியில் இருந்து எவரும் பேசக் கூடாது? எமது மொழியினைப் பேசிப்பேசியே எம்மைக் கருவறுத்த ஒரு சமூகம் புலம்பெயர் தமிழர்மேல் பழியினைப் போட்டுவிட்டு தாங்கள் சிங்களத்துடன் சேர்ந்து தமிழ் பேசியே எம்மை அழித்த கைஙரியத்தினை இங்கே மறைத்துக்கொண்டு உலாவருகிறார்கள் !

Link to comment
Share on other sites

4 minutes ago, ரஞ்சித் said:

அறியாதவர்கள், ஏமாளிகள்.

விலைபோனவர்கள்

முட்டாள்கள்.

விலைபோனவர்கள், சந்தர்ப்பவாதிகள்.


மூடர்களுக்குப் புரியவில்லை

பரிதாபமாக இருக்கிறது, குடும்பம் பிள்ளை குட்டிகள் இருக்கிறதா? முத்தமுதல் நல்ல மனநல மருத்துவரை பார்த்தால் குடும்பம் பிளைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கற்பகதரு said:

பரிதாபமாக இருக்கிறது, குடும்பம் பிள்ளை குட்டிகள் இருக்கிறதா? முத்தமுதல் நல்ல மனநல மருத்துவரை பார்த்தால் குடும்பம் பிளைக்கும்.

கசக்குதில்ல, உண்மை எப்போதும் அப்படித்தானிருக்கும்.  பிரட்டிப்போட்டு தப்பிச்சுடுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கற்பகதரு said:

பரிதாபமாக இருக்கிறது, குடும்பம் பிள்ளை குட்டிகள் இருக்கிறதா? முத்தமுதல் நல்ல மனநல மருத்துவரை பார்த்தால் குடும்பம் பிளைக்கும்.

எனக்கு மனநலம் பார்ப்பதைவிடுத்து, உங்களின் நேரத்திற்கு நேரம் சுருதி மாற்றிப் பேசும் நோய்க்கு வைத்தியம் பாருங்கள், அறளைபெயர்ந்துவிட்டால், ஒரு ஓரமாக போய் இருங்கள்.உங்களின் வண்டவாளங்களை நாம் பார்த்துத்தானே வருகிறோம்? எதற்கு வேஷம் போடுகிறீர்கள்? 

30 minutes ago, கற்பகதரு said:

பரிதாபமாக இருக்கிறது, குடும்பம் பிள்ளை குட்டிகள் இருக்கிறதா? முத்தமுதல் நல்ல மனநல மருத்துவரை பார்த்தால் குடும்பம் பிளைக்கும்.

2009 இல் தமிழர்கள் தமிழ் மொழியினை மறந்து, பெளத்தத்தினைத் தழுவுவதைத்தவிர அவர்களுக்கு வேறு கதியில்லை என்று இதே தளத்தில் எழுதுதியவர் அல்லவா நீங்கள்? ஆகவே நான் எழுதுவது கசக்கத்தான் செய்யும். தமிழர்கள் சிங்கள இனத்தில் உள்வாங்கப்படுவதே அவர்களுக்கு உள்ள ஒரே தெரிவு என்று எழுதியவர்தானே நீங்கள்?!

Link to comment
Share on other sites

அநியாயத்தையும் ஆணித்தரமாகக் கதைக்கக்கூடிய சுதந்திரம் கொண்ட ஒரு களம் யாழ்களம்.🙌  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கற்பகதரு said:

பரிதாபமாக இருக்கிறது, குடும்பம் பிள்ளை குட்டிகள் இருக்கிறதா? முத்தமுதல் நல்ல மனநல மருத்துவரை பார்த்தால் குடும்பம் பிளைக்கும்.

2009 வரை புலிகளைக் கடுமையாக ஆதரித்துக்கொண்டு இருந்துவிட்டு, 2009 போரின்  பின்னர் நிதானம் இழந்து, கழிவிரக்கத்தால் அரண்டுபோய், சிங்களவராக மாறுவோம் என்று உபதேசம் செய்து, இன்று மற்றையவர்களை எள்ளி நகையாடும் நீங்கள் இதுபற்றிப் பேசக் கூடாது.

35 minutes ago, கற்பகதரு said:

பரிதாபமாக இருக்கிறது, குடும்பம் பிள்ளை குட்டிகள் இருக்கிறதா? முத்தமுதல் நல்ல மனநல மருத்துவரை பார்த்தால் குடும்பம் பிளைக்கும்.

ஓ, அப்போது நீங்கள் அந்த அறிவற்ற, ஏமாளிகள் கூட்டம் என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள்? அதுதான் சுட்டுவிட்டது !!! இப்போது புரிகிறது,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரஞ்சித் said:

எனக்கு மனநலம் பார்ப்பதைவிடுத்து, உங்களின் நேரத்திற்கு நேரம் சுருதி மாற்றிப் பேசும் நோய்க்கு வைத்தியம் பாருங்கள், அறளைபெயர்ந்துவிட்டால், ஒரு ஓரமாக போய் இருங்கள்.உங்களின் வண்டவாளங்களை நாம் பார்த்துத்தானே வருகிறோம்? எதற்கு வேஷம் போடுகிறீர்கள்? 

2009 இல் தமிழர்கள் தமிழ் மொழியினை மறந்து, பெளத்தத்தினைத் தழுவுவதைத்தவிர அவர்களுக்கு வேறு கதியில்லை என்று இதே தளத்தில் எழுதுதியவர் அல்லவா நீங்கள்? ஆகவே நான் எழுதுவது கசக்கத்தான் செய்யும். தமிழர்கள் சிங்கள இனத்தில் உள்வாங்கப்படுவதே அவர்களுக்கு உள்ள ஒரே தெரிவு என்று எழுதியவர்தானே நீங்கள்?!

ஒருதடவை நான் அதை சுட்டிக்காட்டியபோது, யானறியேன் என்று தப்பித்துக்கொண்டதாக நினைத்தார். அப்பவே இவர் ஒரு சந்தர்ப்பவாதி எனபுரிந்து கொண்டேன். 

சொல்லவே வேண்டாம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.