Jump to content

சிங்களம் தெரியாமல் ஏன் ஊடகத்திற்குள் இருக்கின்றீர்கள் என ஊடகவியலாளரிடம் பொலிஸார் விதண்டாவாதம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பிரதேசத்தில் பணியாற்றும் ஓர் சாதாரண தமிழ் ஊடகவியலாளர் பிரச்சனை இப்போது அரசியல் &  தென் பகுதி படிப்பு , வேலை என்று வந்து உள்ளது.

சிறீலங்காவில் அரசகரும மொழிகளில் ஒன்று தமிழ் என்பது பலருக்கு இங்கு மறந்துவிட்டது. 

Link to comment
Share on other sites

  • Replies 165
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, MEERA said:

தமிழ் பிரதேசத்தில் பணியாற்றும் ஓர் சாதாரண தமிழ் ஊடகவியலாளர் பிரச்சனை இப்போது அரசியல் &  தென் பகுதி படிப்பு , வேலை என்று வந்து உள்ளது.

சிறீலங்காவில் அரசகரும மொழிகளில் ஒன்று தமிழ் என்பது பலருக்கு இங்கு மறந்துவிட்டது. 

உண்மை மீரா. எமது அடிப்படை உரிமையினை அரசியலாக்கி தமது கருத்தினைத் திணிப்பதே சிலரின் நோக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

சந்தர்ப்பவாதியல்லாத கவரிமான்களுக்கு சிங்களத்தைப் படித்தால் மயிர் உதிர்ந்து விடும் என்பது உண்மை! 

தனிச்சிங்கள சட்டம் வந்த போதும் சிங்களத்தை படித்தவர்கள் தமிழர்கள்.

சிங்களவர்கள் அப்படியல்ல. தமிழ் படிக்கவே கூடாது என விகாரத்துடன் திரிந்தவர்கள். வடபகுதியில் வாழ்ந்த பேக்கரி சிங்களவர்களும் அவர்கள் பிள்ளைகளும் நல்ல உதாரணங்கள்.

5 hours ago, goshan_che said:

மலையகம் போல இல்லாவிடினும் கிழக்கிலும் கணிசமான தமிழர்கள் சிங்களம் கொச்சையாகவேனும் பேசுவார்கள். ஆனால் கிழக்கு வாழ் சிங்களவர்களுக்கு தமிழ் தெரியாது போடா🤣.  

ஒரு தமிழனுக்கு பக்கத்து வீடு சிங்களமாக இருந்தால் அவன் தட்டித்தட்டி (பொட்ட பொட்ட) சிங்களம் கதைப்பான். ஆனால் சிங்களம் எங்கள் அளவுக்கு இறங்கி வராது.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, MEERA said:

தமிழ் பிரதேசத்தில் பணியாற்றும் ஓர் சாதாரண தமிழ் ஊடகவியலாளர் பிரச்சனை இப்போது அரசியல் &  தென் பகுதி படிப்பு , வேலை என்று வந்து உள்ளது.

சிறீலங்காவில் அரசகரும மொழிகளில் ஒன்று தமிழ் என்பது பலருக்கு இங்கு மறந்துவிட்டது. 

 

26 minutes ago, ரஞ்சித் said:

உண்மை மீரா. எமது அடிப்படை உரிமையினை அரசியலாக்கி தமது கருத்தினைத் திணிப்பதே சிலரின் நோக்கம்.

"தமிழர் சிங்களம் படிப்பது நல்லதென சொல்வோர் ரஞ்சித் தியரியின் படி இரண்டே இரண்டு வகைக்குள் அடங்குவர்" என்பதற்கான பதிலே என் பதிவு.

இது போன்ற மொக்குத் தியரிகளை எதிர்த்து உதாரணங்களுடன் கருத்துச் சொல்வது திணிப்பல்ல, யாழ் களத்தில் இருப்போரின் உரிமை!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்ததைக் காட்டிலும் கொழும்பில் வாழ்ந்ததே அதிகம். கிட்டத்தட்ட 22 ஆண்டுகள். என்னால் தமிழ் பேசுவதுபோல், சிங்களமும் சரளமாகப் பேச முடியும். 

ஆனால், சிங்களவரைப் பொருத்தவரை நானும் தமிழனே, நானும் இன்னொரு புலிதான். என்னுடன் பல்கலையில் படித்தவர்களே என்னை இழுத்துக்கொண்டுபோய் மொறட்டுவை பொலீஸில் கொடுத்தார்கள். அபோதுதான் நான் எனது அடையாலத்தினை உண்மையாக உணர்ந்துகொண்டேன். நான் என்னதான் சிங்களம் பேசி, அவர்களுடன் என்னையும் ஒருவனாகக் காட்ட முனைந்தாலும் என்னை அவர்கள் தம்மில் ஒருவனாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.எனக்குத் தெரிந்த சிங்களம் என்னை காப்பாற்றவில்லை. எனக்கு சிங்களவர்களைப் போலவே அசல் உச்சரிப்புடன் சிங்களம் பேசமுடியும் என்று நான் காட்டிவந்த "விலாசம்" என்னைக் காப்பாற்றவில்லை. மொறட்டுவையில் வைத்து அடித்தபோது "நீ புலிகளின் புலநாய்வுத்துறையால் அனுப்பப்பட்டவன் தானே? அதுதானே சிங்களம் பேசுகிறாய்?" என்று கேட்டே அடித்தார்கள். எனக்குச் சிங்களம் தெரியுமென்பதால் பிரபாகரனையும் புலிகளையும், ஒட்டுமொத்தத் தாமிழர்களை படுமோசமாகச் சித்தரித்து சிங்களத்தில் என்னிடம் கூறி, "உனது நண்பர்களுக்குச் சொல்லடா" என்று கத்தினார்கள். 

சரி, என்னை விடுங்கள். 1983 இல் கொழும்பில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களை அவர்களுக்குத் தெரிந்த சிங்களம் காப்பாற்றியதா? எம்மை அழிக்கும்போது நாம் சிங்களம் அறிந்துவைத்திருந்தோமா என்று அவர்கள் பார்த்தார்களா? 

1995 இல் கொழும்பை அதற்குமுன்னர் பார்த்திராத யாழ்ப்பாணத்து, மட்டக்களப்பு மாணவர்கள் மொறட்டுவை பல்கலையில் வந்து இணைந்தார்கள். அவர்களுக்குச் சிங்களம் என்பது தெரியாத அந்நிய மொழி. ஆனால், தமது அன்றாட அலுவல்களை ஏதோ ஒரு விதத்தில் சமாளித்துக்கொண்டார்கள். இன்றுவரை அதுதான் நடக்கிறது. எனக்கு அதிகம் சிங்களம் தெரியும் என்பதால் நான் அவர்களைக் காட்டிலும் அதிக பயன்களைப்பெறவுமில்லை, அவர்களுக்கு சிங்களம் தெரியாததால் அதிகம் இழக்கவுமில்லை. இருவருமே ஒரே நேரத்தில் பல்கலையில் இருந்து வெளியே வந்தோம், வேலைகளை எடுத்தோம். அவர்களில் இன்னும் பலர் இன்னும் கொழும்பிலேயே வாழ்கிறார்கள். எம்மில் பலருக்கு சிங்களம் தெரியாததை விட ஆங்கிலம் தெரியாமல் இருந்ததுதான் பெரிய குறையாக இருந்தது. அதுவே எமது கல்வியில் பாரிய தாக்கத்தினைச் செலுத்தியது. தமிழ் மூலக் கல்வியில் உயர்தரம் வரை படித்துவிட்டு ஆங்கிலத்தில் பல்கலையில் படிக்கும்போது பல சவால்களை நாம் சந்திக்க நேரிட்டது. அந்தச் சவால்களுடன் ஒப்பிடும்போது சிங்களம் தெரியாது என்பது எவருக்குமே ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. 

பஸ்ஸில் டிக்கெட் எடுக்கவும், கடையில் சாமான்கள் வாங்கவுமே எனக்குச் சிங்கள மொழி பயன்பட்டது. சிங்களம் தெரியாதவர்கள் கூட என்னைப்போலவே பஸ்ஸில் பயணிக்கிறார்கள், கடையில் பொருட்களை வாங்குகிறார்கள். இருவருக்கும் வித்தியாசம் இல்லை.

சிட்னிக்கு வந்தபிறகு எனக்குச் சிங்களவர்களுடன் பேசவேண்டிய தேவை இருக்கவில்லை. 2003 இல் ஒருநாள் தமிழ்க் கடையில் பொருட்கள் வாங்கச் சென்றபோது எவரோ சிங்களம் பேசியதைக் கேட்ட நான், அவரைத் தேடிச் சென்று சிங்களத்தில் பேசினேன். நான் அப்படிச் செய்திருக்க வேண்டிய எந்தத் தேவையுமில்லை. நான் எனக்குச் சிங்களம் தெரியும் என்று எவருக்குமே காட்டவேண்டிய தேவையோ அல்லது அதனை உபயோகிக்க வேண்டிய தேவையோ இல்லை. இன்னும் சொல்லப்போனால் நான் இனிமேல் சிங்களம் பேசுவதில்லை எனும் வைராக்கியத்துடன் இருக்கிறேன். 

கொழும்பில் வசிக்கும் தமிழர்களுக்குச் சிங்களம் தெரிந்தால் சிலவேளை தமது வேலைகளைச் சுலபமாகச் செய்யக் கூடியதாக இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, எமது தாயகத்தில் அதற்கான தேவை ஒருபோதுமே இருக்கப்போவதில்லை. அப்படியொரு நிலை உருவாக்கப்படுகிறதென்றால், எம்மை தமது அடிமைகளாக வைத்திருக்கும் சிங்கள ஆக்கிரமிப்பு நோக்கத்திற்காகவே உருவாக்கப்படுகிறது என்பதை முற்றாக நம்புகிறேன்.

நாம் சிங்களம் பேச அவதிப்படுவதுபோல சிங்களவர்கள் தமிழ் பேச அவதிப்படுவதில்லை. 

என்னைப்பொறுத்தவரையில் சிங்களம் எம்மை ஆக்கிரமிக்கும் ஒரு இனத்தின் மொழி. அதனைக்கற்கவேண்டிய தேவையில்லை. அதனைக் கற்றதன் மூலம் நான் ஏனைய தமிழர்களைக் காட்டிலும் அதிகம் அடையவுமில்லை.  

எனது தாயகத்தில் எனது மொழியினை நான் பேச எனக்கு உரிமை இருக்கிறது. அதனை மறுப்பது அடிப்படை மனித உரிமை மீறல், எவர் எப்படித்தான் அதனை நியாயப்படுத்த முயற்சித்தாலும்கூட.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரவிராஜ் வாழ்ந்ததும், வேலை பார்த்ததும் கொழும்பில். அதனால் சிங்களம் அவருக்குச் சரளமாகப்பேசக்கூடியதாக இருந்தது. போதாக்குறைக்கு பாராளுமன்றத்திலும் சிங்களத்திலேயே பேசினார். சிங்களம் தெரிந்ததால் தப்பித்தாரா? இறுதியில் அவர் சிங்களத்தில் பேசிய விடயங்களுக்காகவே கொல்லப்பட்டார் என்பது வேறு விடயம்.

ஆனால், யாழ்ப்பாணத்தில் இருக்கும் தமிழர்கள் சிங்களம் படிக்க வேண்டும் என்று கோருவது எந்தவிதத்தில் நியாயம்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

தனிச்சிங்கள சட்டம் வந்த போதும் சிங்களத்தை படித்தவர்கள் தமிழர்கள்.

சிங்களவர்கள் அப்படியல்ல. தமிழ் படிக்கவே கூடாது என விகாரத்துடன் திரிந்தவர்கள். வடபகுதியில் வாழ்ந்த பேக்கரி சிங்களவர்களும் அவர்கள் பிள்ளைகளும் நல்ல உதாரணங்கள்.

ஒரு தமிழனுக்கு பக்கத்து வீடு சிங்களமாக இருந்தால் அவன் தட்டித்தட்டி (பொட்ட பொட்ட) சிங்களம் கதைப்பான். ஆனால் சிங்களம் எங்கள் அளவுக்கு இறங்கி வராது.😁

எமது காலத்தில் யாழில் சிங்களவர்கள் என்று யாரும் இருக்கவில்லை. ஓரிரு தமிழ்-சிங்கள குடும்பங்கங்கள் இருந்தன அவர்கள் தமிழிலே கதைத்தார்கள். வீட்டிலும். எனவே இவர்கள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது.

ஆனால் நான் உலகிலேயே கண்ட மிக மோசமான இனவாதிகள் என்றால் - திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்கள்தான்.  

Just now, ரஞ்சித் said:

ரவிராஜ் வாழ்ந்ததும், வேலை பார்த்ததும் கொழும்பில். அதனால் சிங்களம் அவருக்குச் சரளமாகப்பேசக்கூடியதாக இருந்தது. போதாக்குறைக்கு பாராளுமன்றத்திலும் சிங்களத்திலேயே பேசினார். சிங்களம் தெரிந்ததால் தப்பித்தாரா? இறுதியில் அவர் சிங்களத்தில் பேசிய விடயங்களுக்காகவே கொல்லப்பட்டார் என்பது வேறு விடயம்.

ஆனால், யாழ்ப்பாணத்தில் இருக்கும் தமிழர்கள் சிங்களம் படிக்க வேண்டும் என்று கோருவது எந்தவிதத்தில் நியாயம்? 

யாழ்பாணத்தில் சிங்களத்தில் கருமம் ஆற்ற வேண்டும் என நான் கருதவில்லை, ஆனால் ரவிராஜ் - 48க்கு பின்னர் வந்த சகல தமிழ் அரசியல்வாதிகளை விடவும் எமது பிரச்சனையை சிங்கள மக்களுக்கு எடுத்துப்போனார் அதனாலே பேரினவாதம் விளித்து அவரை அழித்தது என்பதை ஏற்பீர்கள் என நினைக்கிறேன்.

இந்த காரணதுக்காகவே (மட்டுமே) நாம் ஒரு துணை மொழியாக சிங்களதை கற்றல் ஆகாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரஞ்சித் said:

நான் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்ததைக் காட்டிலும் கொழும்பில் வாழ்ந்ததே அதிகம். கிட்டத்தட்ட 22 ஆண்டுகள். என்னால் தமிழ் பேசுவதுபோல், சிங்களமும் சரளமாகப் பேச முடியும். 

ஆனால், சிங்களவரைப் பொருத்தவரை நானும் தமிழனே, நானும் இன்னொரு புலிதான். என்னுடன் பல்கலையில் படித்தவர்களே என்னை இழுத்துக்கொண்டுபோய் மொறட்டுவை பொலீஸில் கொடுத்தார்கள். அபோதுதான் நான் எனது அடையாலத்தினை உண்மையாக உணர்ந்துகொண்டேன். நான் என்னதான் சிங்களம் பேசி, அவர்களுடன் என்னையும் ஒருவனாகக் காட்ட முனைந்தாலும் என்னை அவர்கள் தம்மில் ஒருவனாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.எனக்குத் தெரிந்த சிங்களம் என்னை காப்பாற்றவில்லை. எனக்கு சிங்களவர்களைப் போலவே அசல் உச்சரிப்புடன் சிங்களம் பேசமுடியும் என்று நான் காட்டிவந்த "விலாசம்" என்னைக் காப்பாற்றவில்லை. மொறட்டுவையில் வைத்து அடித்தபோது "நீ புலிகளின் புலநாய்வுத்துறையால் அனுப்பப்பட்டவன் தானே? அதுதானே சிங்களம் பேசுகிறாய்?" என்று கேட்டே அடித்தார்கள். எனக்குச் சிங்களம் தெரியுமென்பதால் பிரபாகரனையும் புலிகளையும், ஒட்டுமொத்தத் தாமிழர்களை படுமோசமாகச் சித்தரித்து சிங்களத்தில் என்னிடம் கூறி, "உனது நண்பர்களுக்குச் சொல்லடா" என்று கத்தினார்கள். 

சரி, என்னை விடுங்கள். 1983 இல் கொழும்பில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களை அவர்களுக்குத் தெரிந்த சிங்களம் காப்பாற்றியதா? எம்மை அழிக்கும்போது நாம் சிங்களம் அறிந்துவைத்திருந்தோமா என்று அவர்கள் பார்த்தார்களா? 

1995 இல் கொழும்பை அதற்குமுன்னர் பார்த்திராத யாழ்ப்பாணத்து, மட்டக்களப்பு மாணவர்கள் மொறட்டுவை பல்கலையில் வந்து இணைந்தார்கள். அவர்களுக்குச் சிங்களம் என்பது தெரியாத அந்நிய மொழி. ஆனால், தமது அன்றாட அலுவல்களை ஏதோ ஒரு விதத்தில் சமாளித்துக்கொண்டார்கள். இன்றுவரை அதுதான் நடக்கிறது. எனக்கு அதிகம் சிங்களம் தெரியும் என்பதால் நான் அவர்களைக் காட்டிலும் அதிக பயன்களைப்பெறவுமில்லை, அவர்களுக்கு சிங்களம் தெரியாததால் அதிகம் இழக்கவுமில்லை. இருவருமே ஒரே நேரத்தில் பல்கலையில் இருந்து வெளியே வந்தோம், வேலைகளை எடுத்தோம். அவர்களில் இன்னும் பலர் இன்னும் கொழும்பிலேயே வாழ்கிறார்கள். எம்மில் பலருக்கு சிங்களம் தெரியாததை விட ஆங்கிலம் தெரியாமல் இருந்ததுதான் பெரிய குறையாக இருந்தது. அதுவே எமது கல்வியில் பாரிய தாக்கத்தினைச் செலுத்தியது. தமிழ் மூலக் கல்வியில் உயர்தரம் வரை படித்துவிட்டு ஆங்கிலத்தில் பல்கலையில் படிக்கும்போது பல சவால்களை நாம் சந்திக்க நேரிட்டது. அந்தச் சவால்களுடன் ஒப்பிடும்போது சிங்களம் தெரியாது என்பது எவருக்குமே ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. 

பஸ்ஸில் டிக்கெட் எடுக்கவும், கடையில் சாமான்கள் வாங்கவுமே எனக்குச் சிங்கள மொழி பயன்பட்டது. சிங்களம் தெரியாதவர்கள் கூட என்னைப்போலவே பஸ்ஸில் பயணிக்கிறார்கள், கடையில் பொருட்களை வாங்குகிறார்கள். இருவருக்கும் வித்தியாசம் இல்லை.

சிட்னிக்கு வந்தபிறகு எனக்குச் சிங்களவர்களுடன் பேசவேண்டிய தேவை இருக்கவில்லை. 2003 இல் ஒருநாள் தமிழ்க் கடையில் பொருட்கள் வாங்கச் சென்றபோது எவரோ சிங்களம் பேசியதைக் கேட்ட நான், அவரைத் தேடிச் சென்று சிங்களத்தில் பேசினேன். நான் அப்படிச் செய்திருக்க வேண்டிய எந்தத் தேவையுமில்லை. நான் எனக்குச் சிங்களம் தெரியும் என்று எவருக்குமே காட்டவேண்டிய தேவையோ அல்லது அதனை உபயோகிக்க வேண்டிய தேவையோ இல்லை. இன்னும் சொல்லப்போனால் நான் இனிமேல் சிங்களம் பேசுவதில்லை எனும் வைராக்கியத்துடன் இருக்கிறேன். 

கொழும்பில் வசிக்கும் தமிழர்களுக்குச் சிங்களம் தெரிந்தால் சிலவேளை தமது வேலைகளைச் சுலபமாகச் செய்யக் கூடியதாக இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, எமது தாயகத்தில் அதற்கான தேவை ஒருபோதுமே இருக்கப்போவதில்லை. அப்படியொரு நிலை உருவாக்கப்படுகிறதென்றால், எம்மை தமது அடிமைகளாக வைத்திருக்கும் சிங்கள ஆக்கிரமிப்பு நோக்கத்திற்காகவே உருவாக்கப்படுகிறது என்பதை முற்றாக நம்புகிறேன்.

நாம் சிங்களம் பேச அவதிப்படுவதுபோல சிங்களவர்கள் தமிழ் பேச அவதிப்படுவதில்லை. 

என்னைப்பொறுத்தவரையில் சிங்களம் எம்மை ஆக்கிரமிக்கும் ஒரு இனத்தின் மொழி. அதனைக்கற்கவேண்டிய தேவையில்லை. அதனைக் கற்றதன் மூலம் நான் ஏனைய தமிழர்களைக் காட்டிலும் அதிகம் அடையவுமில்லை.  

எனது தாயகத்தில் எனது மொழியினை நான் பேச எனக்கு உரிமை இருக்கிறது. அதனை மறுப்பது அடிப்படை மனித உரிமை மீறல், எவர் எப்படித்தான் அதனை நியாயப்படுத்த முயற்சித்தாலும்கூட.  

உங்கள் அனுபவம், அதன் வழி வந்த முடிவு புரிந்து கொள்ளக் கூடியதே!

மொறட்டுவை, கொழும்பு பல்கலை, ஏன் - பேராதனையில் ஆற்றுக்கு அக்கரையில் இருந்த பொறியியல் பீடத் தமிழர்களுக்கே ஆற்றுக்கு இக்கரையில் வாழ்ந்த என்னைப் போன்றவர்களை விட கசப்பான அனுபவம் தான்!

ஆனால், இந்த தனி அனுபவங்களை வைத்துக் கொண்டு சிங்களம் கற்க விரும்பும் தமிழர்களை உங்கள் தியரிப் படி வகுக்க வேண்டிய அவசியமில்லை!

மேலே நீங்கள் சொல்லியிருப்பது போல எந்த மொழியைப் படிப்பது விடுவது என்று நீங்கள் தீர்மானிக்க உரிமையுண்டு! மற்றவன் உங்கள் மரியாதை பெறாத மொழியைப் படித்தால் அதற்கு ஏதோ அடிமைப் புத்தி அல்லது அப்பாவித் தனம் மட்டுமே காரணமாக இருக்கும் என்பது தான் மொக்குத் தியரி என்கிறேன்!

10 minutes ago, ரஞ்சித் said:

ரவிராஜ் வாழ்ந்ததும், வேலை பார்த்ததும் கொழும்பில். அதனால் சிங்களம் அவருக்குச் சரளமாகப்பேசக்கூடியதாக இருந்தது. போதாக்குறைக்கு பாராளுமன்றத்திலும் சிங்களத்திலேயே பேசினார். சிங்களம் தெரிந்ததால் தப்பித்தாரா? இறுதியில் அவர் சிங்களத்தில் பேசிய விடயங்களுக்காகவே கொல்லப்பட்டார் என்பது வேறு விடயம்.

ஆனால், யாழ்ப்பாணத்தில் இருக்கும் தமிழர்கள் சிங்களம் படிக்க வேண்டும் என்று கோருவது எந்தவிதத்தில் நியாயம்? 

படித்தால் நல்லது என்பது என் அபிப்பிராயம்! அதே போல அந்த பொலிஸ்காரர் தமிழ் படித்திருக்க வேண்டும் என்பது சட்டப் படி அமல் செய்யப் பட வேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

யாழ்பாணத்தில் சிங்களத்தில் கருமம் ஆற்ற வேண்டும் என நான் கருதவில்லை, ஆனால் ரவிராஜ் - 48க்கு பின்னர் வந்த சகல தமிழ் அரசியல்வாதிகளை விடவும் எமது பிரச்சனையை சிங்கள மக்களுக்கு எடுத்துப்போனார் அதனாலே பேரினவாதம் விளித்து அவரை அழித்தது என்பதை ஏற்பீர்கள் என நினைக்கிறேன்.

இந்த காரணதுக்காகவே (மட்டுமே) நாம் ஒரு துணை மொழியாக சிங்களதை கற்றல் ஆகாதா?

தமிழர் பக்க நியாயங்களை சிங்களவருக்குச் சொல்வதற்கு ரவிராஜ் போன்றவர்கள் முயன்றார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. அதேவேலை சிங்களவர்களுக்குள்ளேயே பலர், உதாரணத்திற்கு விக்கிரமாபாகு கருணாரத்ன, முன்னாள் வாசுதேவ நாணயக்கார (இப்போது அவர் ஒரு சுத்த இனவாதி) போன்றவர்கள் முயற்சித்தார்கள். ஆனால், பெரும்பான்மைச் சிங்கலவர்களின் மனங்களை மாற்ற முடிந்ததா?

இனவாதம் சிங்களவர்களின் அன்றாட வாழ்வியலில் ஒன்றாகக் கலந்திருக்கின்றது என்பது நீங்கள் அறியாதது அல்லவே? ரவிராஜுக்கும், சுமந்திரனுக்கும், சாணக்கியனுக்கும் தெரிந்த சிங்களத்தால் இன்றுவரை எத்தனை சிங்களவர்களை நாம் மனம் மாற்றியிருக்கிறோம்? இவர்கள் அனைவருமே புலிகள் என்று சிங்கலவர்கள் வெளிப்படையாகவே சொல்வதைத்தவிர, எம்மால் அவர்களில் எந்த மாற்றத்தினையாவது கொண்டுவர முடிந்ததா? தமிழர் உரிமைகள் என்று பேசினாலே அது பயங்கரவாதம், பிரிவினைவாதம், தமிழ் இனவாதம் என்கிற மனோநிலையில் வாழும் ஒரு சமூகத்தினை அவர்களின் மொழி பேசிப் புரியவைக்க முடியும் என்பதை நாம் நம்பவில்லை. ஏனென்றால், இதுவரை அப்படி முயன்றவர்கள் ஒன்றில் கொல்லப்பட்டார்கள் அல்லது புலியென்று முத்திரை குத்தப்பட்டார்கள்.

நமக்குத் தெரிந்த சிங்களத்தைக் கொண்டு நாம் பேச வேண்டும் என்று அவர்கள் விரும்புவது, "இலங்கை சிங்களவர்களுக்குச் சொந்தமான நாடு என்பதை ஏற்றுக்கொள்கிறோம். பெளத்தத்திற்கும் , சிங்கள மொழிக்கும் மற்றைய மதங்களுக்கும், மொழிகளுக்கும் இருக்கும் அந்தஸ்த்தினை விட அதிகம் கொடுக்கப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம், சிங்களவர்களின் நாட்டில் அவர்களுக்குச் சமமாக அந்தஸ்த்தினைக் கோராது, அவர்களைக் கோபபடுத்தாது, அவர்களாக விரும்பித் தரும் எந்தப் பிச்சையினையும் விரும்பி ஏற்றுக்கொள்கிறோம்" என்பதைத்தான்.

அதைத்தான் கருணாவும், பிள்ளையானும், டக்கிளஸும் செய்துகொன்டிருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

தனிச்சிங்கள சட்டம் வந்த போதும் சிங்களத்தை படித்தவர்கள் தமிழர்கள்.

சிங்களவர்கள் அப்படியல்ல. தமிழ் படிக்கவே கூடாது என விகாரத்துடன் திரிந்தவர்கள். வடபகுதியில் வாழ்ந்த பேக்கரி சிங்களவர்களும் அவர்கள் பிள்ளைகளும் நல்ல உதாரணங்கள்.

ஒரு தமிழனுக்கு பக்கத்து வீடு சிங்களமாக இருந்தால் அவன் தட்டித்தட்டி (பொட்ட பொட்ட) சிங்களம் கதைப்பான். ஆனால் சிங்களம் எங்கள் அளவுக்கு இறங்கி வராது.😁

இந்த பேக்கரி உரிமையாளர்களைத் தெரியாது - ஒரு வேளை 90 களில் வெளியேறி விட்டார்கள் போல! 

ஆனால் நான் அறிந்த மிகச் சில சிங்களவர்கள் தமிழ் தான் பேசினர் (சிங்கள மகாவித்தியாலயம் இல்லாமல் போய் விட்டது, எங்கே யாருடன் சிங்களம் பேசுவது யாழில்!). இவர்களில் சிலர் - பியதாச மாஸ்ரர் போன்றோர் - அரச ஊழியர்கள் சிங்களப் பரீட்சைக்குப் படிக்க உதவியிருக்கின்றனர். 

 2012 இல் வன்னி போன போது  தமிழில் சரளமாகப் பேசக்கூடிய சிங்களப் பெண் மிருக வைத்தியர்கள் பலர் அங்கே வேலை செய்தனர். எனவே காலத்தோடு சிறிய மாற்றங்கள் தேவைகள் கருதியாவது ஏற்பட்டிருக்கிறது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

படித்தால் நல்லது என்பது என் அபிப்பிராயம்! அதே போல அந்த பொலிஸ்காரர் தமிழ் படித்திருக்க வேண்டும் என்பது சட்டப் படி அமல் செய்யப் பட வேண்டும்!

ஏற்றுக்கொள்கிறேன். 

தமிழர் பகுதிகளில் தமிழ் மொழி அரசால் வேண்டுமென்றே தவிர்க்கப்படுவதையும், சிங்கள அதிகாரிகள் வேண்டுமென்றே சுற்றுநிருபங்கள் கடிதங்களை சிங்களத்தில் அனுப்புவதையும், ராணுவ, பொலீஸ் அதிகாரிகள் தனிச் சிங்களத்திலேயே தமிழருடன் தொடர்பாடுவதையும், அதை அரசு வேண்டுமென்றே அனுமதிப்பதையும்  நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அதற்கான காரணமும் உங்களுக்கு நன்கு தெரியும் என்பது எனக்குத் தெரியும்.இதனை தமிழர் பகுதிகளின் சேவையாற்றும் சிங்கள அதிகாரிகளின் வெறும் அசமந்தமாகப் பார்த்துவிட்டு என்னால் கடந்துபோக முடியவில்லை. 

மற்றும்படி, சிங்களம் தெரிந்தால் சம்பாஷணை இலகு ஆகிவிடுகிறது. அதைத்தவிர வேறு நண்மை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 
 

18 minutes ago, Justin said:

படித்தால் நல்லது என்பது என் அபிப்பிராயம்! அதே போல அந்த பொலிஸ்காரர் தமிழ் படித்திருக்க வேண்டும் என்பது சட்டப் படி அமல் செய்யப் பட வேண்டும்!

சிங்களம் கற்றல் என்பது தமிழர்களின் விருப்பத்துடன் சம்பந்தப்பட்டது என்கிற நிலை மாறி, அது கட்டாயமாக்கப்படுவதாகவே நான் நினைக்கிறேன். "நாம் சிங்களத்தில்தான் உங்களுடன் தொடர்புகொள்வோம், வேண்டுமென்றால் சிங்களம் படியுங்கள், அல்லது உங்களுக்கு எதுவுமே கிடைக்காது" என்கிற மனநிலைதான்.

1950 களின்  தனிச்சிங்களச் சட்டத்தின் தொடர்ச்சியாகவே இது எனக்குத் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரஞ்சித் said:

ஏற்றுக்கொள்கிறேன். 

தமிழர் பகுதிகளில் தமிழ் மொழி அரசால் வேண்டுமென்றே தவிர்க்கப்படுவதையும், சிங்கள அதிகாரிகள் வேண்டுமென்றே சுற்றுநிருபங்கள் கடிதங்களை சிங்களத்தில் அனுப்புவதையும், ராணுவ, பொலீஸ் அதிகாரிகள் தனிச் சிங்களத்திலேயே தமிழருடன் தொடர்பாடுவதையும், அதை அரசு வேண்டுமென்றே அனுமதிப்பதையும்  நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அதற்கான காரணமும் உங்களுக்கு நன்கு தெரியும் என்பது எனக்குத் தெரியும்.இதனை தமிழர் பகுதிகளின் சேவையாற்றும் சிங்கள அதிகாரிகளின் வெறும் அசமந்தமாகப் பார்த்துவிட்டு என்னால் கடந்துபோக முடியவில்லை. 

மற்றும்படி, சிங்களம் தெரிந்தால் சம்பாஷணை இலகு ஆகிவிடுகிறது. அதைத்தவிர வேறு நண்மை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 
 

முற்றிலும் ஏற்றுகொள்கிறேன். இப்போ வயோதிபகாலத்தில் இருக்கும் ஒரு பல்கலைகழக அதி உயர் பதவியில் இருந்தவர் சொன்னது. 

அவர் ஆங்கில மூலம் கற்றவர். பல்கலையில்  பதவியில் இருக்கும் போது திடீரென்று ( அப்போ சட்டமும் இப்போ போலில்லை) கடிதங்கள் யாவும் சிங்களத்தில் வர தொடங்கியதாம். வேறு வழியில்லாமல் தன் அலுவலகத்தில் வேலை பார்த்த ஒரு சிங்கள சிற்றூழியனை கொண்டு கடிதங்களை வாசிக்கும் நிலை ஏற்பட்டதாம்.

அவரை ஒரு நாளில் பெரும் படிப்பாளி என்ற நிலையில் இருந்து, எழுத படிக்க தெரியாதவன் நிலைக்கு ஆளாக்கிவிட்டிருந்தார்கள்.

போங்கடா நீங்களும் உங்க நாடும் என்று தூக்கி எறிந்து விட்டு லண்டன் வந்து விட்டாராம். 

எப்படியோ ஒரு ஆளுமை மிக்க திறைமைசாலி தமிழனை வெளியேற்றி விட்டார்கள் 🙁.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரஞ்சித் said:

ஏற்றுக்கொள்கிறேன். 

தமிழர் பகுதிகளில் தமிழ் மொழி அரசால் வேண்டுமென்றே தவிர்க்கப்படுவதையும், சிங்கள அதிகாரிகள் வேண்டுமென்றே சுற்றுநிருபங்கள் கடிதங்களை சிங்களத்தில் அனுப்புவதையும், ராணுவ, பொலீஸ் அதிகாரிகள் தனிச் சிங்களத்திலேயே தமிழருடன் தொடர்பாடுவதையும், அதை அரசு வேண்டுமென்றே அனுமதிப்பதையும்  நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அதற்கான காரணமும் உங்களுக்கு நன்கு தெரியும் என்பது எனக்குத் தெரியும்.இதனை தமிழர் பகுதிகளின் சேவையாற்றும் சிங்கள அதிகாரிகளின் வெறும் அசமந்தமாகப் பார்த்துவிட்டு என்னால் கடந்துபோக முடியவில்லை. 

மற்றும்படி, சிங்களம் தெரிந்தால் சம்பாஷணை இலகு ஆகிவிடுகிறது. அதைத்தவிர வேறு நண்மை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 
 

சிங்களம் கற்றல் என்பது தமிழர்களின் விருப்பத்துடன் சம்பந்தப்பட்டது என்கிற நிலை மாறி, அது கட்டாயமாக்கப்படுவதாகவே நான் நினைக்கிறேன். "நாம் சிங்களத்தில்தான் உங்களுடன் தொடர்புகொள்வோம், வேண்டுமென்றால் சிங்களம் படியுங்கள், அல்லது உங்களுக்கு எதுவுமே கிடைக்காது" என்கிற மனநிலைதான்.

1950 களின்  தனிச்சிங்களச் சட்டத்தின் தொடர்ச்சியாகவே இது எனக்குத் தெரிகிறது.

தாயகத்தில் தற்போது வேலை தேடப் போகிற தமிழ் இளைஞர்களுக்கு சம்பாசணையை விட முக்கியமான நன்மைகள் சிங்களத்தையும், ஆங்கிலத்தையும் படிப்பதால் இருக்கின்றன என்பதே நான் அறிந்தது.

இந்த மும்மொழி அல்லது இரு மொழிப் பரீட்சையத்தை எதிர்பார்ப்பது பல தனியார் நிறுவனங்கள். இதன் காரணம் மிகவும் தெளிவானது: நாட்டின் எப்பகுதியிலும் வேலை செய்யக் கூடிய தன்மை தான் தற்போது தேவை! இது இல்லையேல், யாழ் பல்கலைப் பட்டதாரிகள் போல அரச வேலைக்காக உண்ணாவிரதமிருக்க வேண்டியது தான்!

இதை, ஒரு அரசியல் கோஷமாக சிங்களவன் மாற்றலாம். முன்னேற வேண்டிய தமிழரான எங்களுக்கு அப்படி கோஷம் போடும் luxury கிடையாது என நினைக்கிறேன். இதை நீங்கள் அடிமைப் புத்தி எனலாம் - நான் நடைமுறைவாதம் (pragmatism) என்கிறேன். அவ்வளவு தான் வித்தியாசம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கேள்வியை.. சீனர்களை பார்த்துக் கேட்கலாமே. அங்கு மட்டும் சிங்களம் பணியும் குனியும்.

தமிழர்களிடத்தில் தான் இந்த வீராப்பு எல்லாம்.

தேவை என்றால்.. எல்லாரும் எல்லா மொழியும் படிக்கலாம். தேவை இல்லாதவன் எதுக்கு அதில மிணக்கடனும். அவனுக்கு தேவையான மொழியில் தொடர்பாடல் புலமை பெற்றாலே போதும்.

மேலும்.. தமிழர்கள் அதிகம் வாழும் வடக்குக் கிழக்கில்.. தமிழே தெரியாத சிங்களவன் தொழில் செய்ய முடியும் என்றால்.. தமிழர் தமிழர் பிரதேசத்தில் ஏன் தொழில் செய்ய முடியாது..??!

மொழி அமுலாக்கம் தேவையோடு இருக்க வேண்டுமே தவிர.. சிங்கள பெளத்த பேரினவாத ஆக்கிரமிப்போடு.. திமிரோடு.. இருக்கக் கூடாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் சிங்களம் படிப்பதால் உள்ள நன்மை: சிங்களத்துக்கு முட்டுக்கொடுக்க உதவுமே தவிர தமிழனுக்கு வேறொரு நன்மை ஏற்படாது என்பதற்கு அமரர்  ரவிராஜும், கதிர்காமரும் சாட்சி. பிரச்சனை காலத்தில் கொழும்பில் தங்கியிருந்த சிங்களம் தெரிந்த பல தமிழர் போலீஸ் நிலையங்களில் பதியப்படவேண்டும் என்று அலைக்கழிக்கப்பட்டார்கள், போலிஸ்டநிலையங்களில்  தடுத்து வைக்கப்பட்டார்கள். சிங்களத்துக்கு தேவையென்றால் சிங்களம் தெரியாவிட்டாலும் பயன்படுத்தும், தேவையில்லாவிட்டால் சிங்களம் தெரிந்திருந்தாலும் தூக்கியெறியும்.  ஒடுக்குழுக்கள் எல்லாம் சிங்களம் தெரிந்தா சிங்களத்தின் திட்டங்களையெல்லாம் செய்து முடித்தது? சிங்களம் படிக்க வேண்டுமா? இல்லையா? அதனால் நன்மை  உண்டா  என்பதை தீர்மானிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட மக்கள். நான் நன்மையடைந்தேன் ஆகவே நீயும் கற்றுக்கொள் என்று சொல்ல யாருக்கும் அதிகாரமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது வடகிழக்கில் உள்ள இளைஞர்கள் ஆங்கில மொழியியை உள்வாங்க தொடங்கி விட்டனர். இதற்கு சமூக வலைத்தளங்களும் ஓர் காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

தமிழன் சிங்களம் படிப்பதால் உள்ள நன்மை: சிங்களத்துக்கு முட்டுக்கொடுக்க உதவுமே தவிர தமிழனுக்கு வேறொரு நன்மை ஏற்படாது என்பதற்கு அமரர்  ரவிராஜும், கதிர்காமரும் சாட்சி. பிரச்சனை காலத்தில் கொழும்பில் தங்கியிருந்த சிங்களம் தெரிந்த பல தமிழர் போலீஸ் நிலையங்களில் பதியப்படவேண்டும் என்று அலைக்கழிக்கப்பட்டார்கள், போலிஸ்டநிலையங்களில்  தடுத்து வைக்கப்பட்டார்கள். சிங்களத்துக்கு தேவையென்றால் சிங்களம் தெரியாவிட்டாலும் பயன்படுத்தும், தேவையில்லாவிட்டால் சிங்களம் தெரிந்திருந்தாலும் தூக்கியெறியும்.  ஒடுக்குழுக்கள் எல்லாம் சிங்களம் தெரிந்தா சிங்களத்தின் திட்டங்களையெல்லாம் செய்து முடித்தது? சிங்களம் படிக்க வேண்டுமா? இல்லையா? அதனால் நன்மை  உண்டா  என்பதை தீர்மானிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட மக்கள். நான் நன்மையடைந்தேன் ஆகவே நீயும் கற்றுக்கொள் என்று சொல்ல யாருக்கும் அதிகாரமில்லை.

கதிர்காமரை சொல்லலாம். மாமனிதர் ரவிராஜ் இதற்குள் எப்படி அடங்குவார். 

அவரால் காப்பாற்றப்பட்டவர்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

போராட்டத்தினால் பல ஆயிரக்கணக்கான போராளிகளின் அரப்பணிப்பு தமிழ்பொதுமக்களின் பல ஆண்டுகால சொல்லணா துயரங்கள்  இழப்புக்களின் பின்னர் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வட கிழக்கில் ஒரு அரசியல் அலகை ஏற்றுக்கொண்டுருந்தால் இன்று இவ்வாறு புலம்ப வேண்டிய நிலை வந்திருக்காது. காற்றுள்ள போது தூற்றி கொண்டிருக்க வேண்டும். போராடிய கடந்த தலைமுறை விட்ட தவறை பாடமாக எடுத்து அடுத்த தலைமுறையாவது அறிவு பூர்வமாக சுயமாக சித்தித்து  உரிமைகளை பெறட்டும். இப்போதுள்ள தலைமுறையான நாம் எமக்குள் இவ்வாறு பத்தி பந்தியாக ஒப்பாரி வைப்பதற்கு தான் லாயக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்திட்டார் 

கிழிஞ்ச

தேய்ஞ்ச கசற்றோட???😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

வந்திட்டார் 

கிழிஞ்ச

தேய்ஞ்ச கசற்றோட???😡

போராட்டத்தினால் பல ஆயிரக்கணக்கான போராளிகளின் அரப்பணிப்பு தமிழ்பொதுமக்களின் பல ஆண்டுகால சொல்லணா துயரங்கள்  இழப்புக்களின் பின்னர் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வட கிழக்கில் ஒரு அரசியல் அலகை ஏற்றுக்கொண்டுருந்தால் இன்று இவ்வாறு புலம்ப வேண்டிய நிலை வந்திருக்காது. காற்றுள்ள போது தூற்றி கொண்டிருக்க வேண்டும். போராடிய கடந்த தலைமுறை விட்ட தவறை பாடமாக எடுத்து அடுத்த தலைமுறையாவது அறிவு பூர்வமாக சுயமாக சித்தித்து  உரிமைகளை பெறட்டும். இப்போதுள்ள தலைமுறையான நாம் எமக்குள் இவ்வாறு பத்தி பந்தியாக ஒப்பாரி வைப்பதற்கு தான் லாயக்கு”

 

 

அண்ணை என்னவொரு கண்டுபிடிப்பு…?😂

Link to comment
Share on other sites

14 minutes ago, விசுகு said:

வந்திட்டார் 

கிழிஞ்ச

தேய்ஞ்ச கசற்றோட???😡

தினசரி இங்க வந்து சிங்களத்தை திட்டி ஒப்பாரி வைத்து புலம்புவது மட்டும் கிழிஞ்ச தேய்ஞ்ச இத்துபோன கசற் இல்லையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புல்லுருவிகள் உள்ள இடத்திலேயே களை புடுங்கப்பட வேண்டும்….

Link to comment
Share on other sites

6 minutes ago, MEERA said:

அண்ணை என்னவொரு கண்டுபிடிப்பு…?😂

இது ஒன்றும. கண்டு பிடிப்பு இல்லை. சாதாரண பொது மக்கள் கூட புரிந்து கொள்ளக்கூடிய உண்மை. இந்த சிறிய விடயத்தைக் கூட புரிந்து செயற்படுத்த முடியாத முட்டாள்தனத்தால் தான் இங்கு எந்த பயனுமற்ற ஒப்பாரி நடக்கிறது.  எதிர்கால பிள்ளைகள் இந்த மூடத்தனங்களை செய்யக்கூடாது என்பதற்காகவே அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. 

3 minutes ago, MEERA said:

புல்லுருவிகள் உள்ள இடத்திலேயே களை புடுங்கப்பட வேண்டும்….

களை பிடுங்குதென்றல் என்ன? அடுத்தவர் பெற்ற பிள்ளைகளை போட்டு தள்ளும் ஈனச்செயல் தானே! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரதி said:

அந்த மக்கள் தங்களுக்கு அடிமையாய் இருக்க வேண்டும்  என்று விரும்புகிறார்கள்

ஆகவே இதுவரைக்கும் அந்த மக்கள் நீங்கள்  சொல்லும் 'தங்களுக்கு' என்பவர்களுக்கு அடிமையாகத் தானே இருந்தனர் என்பதை தானே சொல்கிறீர்கள்.

இந்த தங்களுக்கு' என்பவர்களை, புலம் பெயர்ந்த மக்கள், அதிலும் யாழ் காலத்தில் பதிப்பவர்களின் கருத்தோடு ஒத்து போகும் புலம் பெயர்ந்த மக்கள் என்று எடுத்துக் கொண்டால், நீங்கள் சொல்வது அப்படிப்பட்ட புலப்பெயர்ந்த மக்களுக்கு, அந்த (அங்குள்ள) மக்கள் இதுவரைக்கும் அடிமையாக இருந்தனர்.

சரி, பொதுவாக அடிமை, அரசன் உறவில், எவர் எவருக்கு  சேவகம் செய்வது, கேட்டபோதெல்லாம் பொருள்  கொடுப்பது, எந்த நேரமாயினும் கிஞ்சித்தும் தயக்கம் இன்றி கட்டாயம் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பது, கேட்பது, செய்யுமாறு ஆணை போடுவது.. 

நான் அறிந்த  வரையிலும், அடிமை தான் அரசனுக்கு சேவகம் செய்வது, பொருள்  கொடுப்பது, நேரகாலம்  இன்றி அரசன் தான் விரும்பியதை கேட்டது, அடிமையும் அரசனின் மனம் நோகாமல் செய்ய எத்தனிப்பது.

இப்படிப்பட்ட புலம்பெய மக்களே, 'தங்களுக்கு' என்பவர்களுக்கு (தனிப்பட்ட உறவு என்பதை தாண்டி கூட),  சேவகம் செய்வது, பொருள்  கொடுப்பது, நேரகாலம்  இன்றி அங்குள்ளவர்கள்  விரும்பியதை கேட்பது, 'தங்களுக்கு' என்பவர்களுக்கு  மனம் நோகாமல் புலம்பெயர்  மக்கள்  செய்ய எத்தனிப்பது.

எவர் அடிமை? எவர் அரசன்? இதுவரையிலாவது?  

Link to comment
Share on other sites

13 hours ago, Justin said:

இந்த பேக்கரி உரிமையாளர்களைத் தெரியாது - ஒரு வேளை 90 களில் வெளியேறி விட்டார்கள் போல! 

இந்த பேக்கரி உரிமையாளர்களும் அவர்களிடம் வேலை செய்த சிங்களவரும் நன்றாக தமிழ் பேசினர் என்பதே உண்மை. சிறு வயதில் அவர்களை எமது ஊர் அயலவர்கள் என்றே நினைத்தேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதற்கான சின்ன உதாரணம் Pearl  harbour பற்றியது. 100 தொடக்கம் 150 விமானங்களை ரேடாரில் கண்டதாக ஒரு உயர் அதிகாரியிடம் ஒருவர் கூறும்போது 10 தொடக்கம் 15 சோதனை  பறப்பில் ஈடுபட்ட விமானங்கள்தான் அவை என கூறி அதை அப்படியே விட்டுவிடும்படி கூறினார் என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவா உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் எல்லாம் அலசப்பட்ட விடயம் என்றால் அது உண்மையாகிவிடுமா? இதே போல்தான் ரஷ்யா உக்ரைன் விடயங்களிலும் RT இல் வந்த செய்திகள் என்றால் எல்லாம் பொய், அதே BBC , CNN என்றால் அதுவே வேத வாக்கு என்பது. முயலுக்கு 3 கால்தான் என்று அடம்பிடிப்பது உங்கள் பழக்கம். இல்லை 4 கால்தான் என்றால் உடனே ஆதாரம் காட்டுங்கள் என்பது.
    • இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன் 18 APR, 2024 | 10:58 AM   ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல்தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார். https://www.virakesari.lk/article/181353
    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்@குமாரசாமி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.