Jump to content

ஆதிக்க சக்திகளினது நலனும் ஆப்கானிஸ்தான் விடுதலையும்-பா.உதயன் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிக்க சக்திகளினது நலனும் ஆப்கானிஸ்தான் விடுதலையும்-பா.உதயன் 

தலிபான்கள் ஆப்கானிஸ்தானையும் அந்த மக்களையும் விடுதலை செய்தார்கள் என்றால் ஏன் அந்த மக்கள் அவர்களை வரவேற்று வீதியில் இறங்கி கொண்டாடுவதற்கு பதிலாக அந்த மக்கள் தங்கள் நாட்டை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பல பெண் ஊடகவியலா ளர்கள், கலைஞர்கள், புத்தியீவிகள் பலர் அழுதபடியே தங்கள் இருத்தல் பற்றியும் அடிப்படை மதவாதிகளால் நடைமுறைக்கு கொண்டு வர இருக்கும் சரியா சட்டங்கள் பற்றியும் பயத்துடன் பேசுவதை ஊடகங்கள் ஊடக அறிகிறோம். அந்த மக்கள் வெறுக்கும் இந்த பஸ்தூன் தலிபான்களோடு எப்படி சமரசம் செய்து கொண்டிருக்கிறார்கள் சுய நலனோடு பல நாடுகள். 

இந்திய முன்னை நாள் நிதி அமைச்சரும் மூத்த அரசியல் வாதியுமாக இருந்து பல பயங்கரவாதத்தை பார்த்தவராகவும் இருந்த Yaswant Singa இந்திய Times என்ற தொலைக் காட்சிக்கு வழங்கிய பேட்டியிலே பின் வருமாறு கூறுகிறார் நோர்வேயின் அணுசரணையோடு நடந்து விடுதலைப் புலிகளுடனான பேச்சு வார்த்தையில் பார்வையாளராகக் கூட இந்தியா பங்கு கொள்ளாத போதும் வரலாற்றில் நடந்த பல துன்பகர நிகழ்வுகளை எல்லாம் மறந்து பெரும் பயங்கரவாத கொலைகள் கடத்தல்கள் மிகவும் பழமையும் தொன்மையும் பிரச்சித்தியும் வாய்ந்த பாமியான் பள்ளத்தாக்கில் அடையாளமாக  அமைந்திருந்த புத்தரின் சிலை உடைப்பு உட்பட காரணமானவர்களோடு டோகாவில் நடந்த அமெரிக்கா தாலிபான்களுக்கிடை யிலான சமாதான உடன்படிக்கை போச்சுவார்த்தையில் இந்தியா கலந்து கொண்டது எப்படி என்று கேட்க்கிறார். தமிழ் இனத்துக்கு எதிராக நடந்தேறிய இனப் படுகொலைகளை இவர்கள் ஏன் கண்டிக்கவில்லை. இருந்த போதும் இந்தியா எந்த முடிவையும் இப்போதைக்கு எடுக்காமல் (Strategic waiting ) மூலோபாய காத்திருப்பு போல் தலிபான்களின் மாற்றத்திற்காக காத்திருப்பது போல் தெரிகிறது. சீனா மட்டும் ஆரம்ப காலங்களில் தாலிபானை ஆதரிக்காது போதும் இன்று அதன் பல சுய நலன்கள் கருதி தலிபானின் ஆட்சியை அங்கீகரிக்கவுள்ளது.

அமெரிக்கா கொடுத்த அதி நவீன ஆயுதங்களோடு கூடிய ஆப்கானிய தேசிய இராணுவத்தை விட அரைவாசி அளவு கூட இல்லாத தாலிபான்களால் எப்படி எந்தவித எதிர் தாக்குதலும் இன்றி நடந்தே காபூலுக்குள் நுழைய முடிந்தது. இரண்டு பெரிய சக்தி மிக்க எதிரிகளான சீனாவையும் அமெரிக்காவையும் தனது நிகழ்ச்சி நிரலில் கொண்டு வந்து இருவரையும் தனது நண்பன் போல் ஆக்கிக் கொண்டு அருகில் பாகிஸ்தானோடும் உறவை வளர்த்து இந்தியாவை பெரும் சிக்கலுக்குள் மாட்டி விட்டு ஆட்சிக்கு வர இருக்கும் தாலிபான்களால் இன்னும் எத்தனை காலம் ஆப்கானிஸ்தானை தொடர்ந்து ஆள முடியும். மத அடிப்படை வாதிகளால் ஒரு சமூக மாற்றத்தை கொண்டு வர முடியுமா. இன்னும் எத்தனை ஆக்கிரமிப்பு படைகள் திரும்பவும் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைவார்கள். அமெரிக்க படைகளால் விட்டுச் செல்லப்பட்ட ஆயுதங்களும் மற்றும் ஆப்கானிஸ்தான் படைகளிடம் இருந்து தலிபான்களுக்கு கிடைத்த பெருமளவு ஆயுதங்களையும் எதிர் காலத்தில் யாருக்கு எதிராக திருப்பப் போகிறார்கள். சோவியத் அமெரிக்கா பனிப் போரோடு தொடங்கிய ஆப்கானிஸ்தானின் ஆடுகளமும் அவர்களால் உருவாக்கிய குழுக்களும் இன்னும் எத்தனை களங்களை காணவிருக்கிறது. எப்படியான ஆட்சியை ஆப்கானிஸ்தாலில் கொண்டு வர முயல்கிறார்கள் . 

பயங்கரவாதத்தோடு கூடிய ஆட்சியா அல்லது ஜனநாயகத்தோடு எல்லோரும் சம உரிமையோடு வாழும் ஆட்சியை எதிர் காலத்தில் ஒரு மாற்றங்களோடு தாலிபான்களால் ஆட்சி நடத்த முடியுமா. அல்லது இவர்களுக்கு எதிரான குழுக்களுக்கும் இவர்களுக்கும் இடையில் ஒரு மோதலை அதிகாரம் மிக்க நாடுகள் மீண்டும் ஏற்படுத்துவார்களா. இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரசியா அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இடையிலானா உறவுகளில் இனி எப்படியான மாற்றங்கள் எதிர் விளைவுகள் ஏற்படலாம். எனவே இந்தப் பெரிய பேரரசுக ளுக்கு இடையிலான அதிகார நலன் சார் ஆட்டம் 18 ம் நூறாண்டில் இருந்து தொடங்கிய Angelo Afghan யுத்தத்தில் இருந்து பெரிய காய் நகர்தல் விளையாட்டு (Great Game) எப்போ முடிவுக்கு வரும். மத தீவிரவாத்தையும் பயங்கரவாதத்தையும் தாண்டி ஆப்கான் மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைக்காக போராடி தங்கள் தேசத்தை தாங்களாகவே மீட்டெடுப்பார்களா. இவைகள் எல்லாம் மில்லியன் டொலருக்கான கேள்வியாகவே இன்று இருக்கின்றன. பயங்கரவாதத்தை கையில் எடுத்தும் இவ்வளவு இராஜதந்திர ரீதியாக காய் நகர்த்திய தாலிபான்களுக் தாங்கள் ஒரு மாற்றத்துக்கு வராது போனால் தொடந்து ஆட்சியை கொண்டு நடத்த முடியாது என்றும் உலக அங்கீகாரத்தை பெற முடியாது என்றும் தெரிந்திருக்கும் என்றும் எண்ணத் தோன்றுகிறது.

அமெரிக்கா சோவியத் யூனியனோடு  தொடங்கிய இந்த பூகோள ஆதிக்க நலன் சார் அரசியல் பனிப் போர் வரலாறு இன்று சீனா அமெரிக்க பாகிஸ்தான்  இந்தியா என்று பரந்து இன்னும் ஒரு ஒழுங்கோடு பயணிக்கவிருக்கிறது. எல்லாமே ஆதிக்க சக்திகளினதும் நலனிலும் அவர்களால் உண்டாக்கப் பட்ட உலக ஒழுங்கிலும் அதன் நிகழ்ச்சி நிரலிலும் எல்லாமே நடந்தேறுகின்றன.

பா.உதயன் ✍️
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, uthayakumar said:

ஆப்கான் மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைக்காக போராடி தங்கள் தேசத்தை தாங்களாகவே மீட்டெடுப்பார்களா. இவைகள் எல்லாம் மில்லியன் டொலருக்கான கேள்வியாகவே இன்று இருக்கின்றன

தரணியில் நடப்பது
தார்மீக போர் அல்ல‌
தர்மயுத்தமும் அல்ல‌
தக்கன தப்பி பிழைப்பதக்கான 
தறுதலை யுத்தம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, putthan said:

தரணியில் நடப்பது
தார்மீக போர் அல்ல‌
தர்மயுத்தமும் அல்ல‌
தக்கன தப்பி பிழைப்பதக்கான 
தறுதலை யுத்தம்

சரியாக சொன்னீர்கள் நன்றி புத்தன் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.