Jump to content

யாழ்ப்பாண நகரத்தின் அடையாளங்களை மேம்படுத்தல்! ஐந்திறன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

எதை வைச்சு வெள்ளைக்காரன் இலங்கை முழுக்க  ரோட்டுக்கள் போட்டு பாலங்கள் எல்லாம் கட்டினான்?
வருமானத்தை வைச்சுதானே?

வெள்ளைக்காரன் காலத்தில் இலங்கையின் வளங்கொளிக்கும் பிரதேசங்களை கண்டுபிடித்து தேயிலை ரப்பர், கொக்கோ வாசனை திரவியங்கள், கனிமங்கள் தாதுபொருட்கள் என்று அனைத்தையும் இலங்கை மக்கள் அறியுமுன்னமே அவனே பயிரிட்டு அவனே அகழ்ந்தெடுத்து  இலங்கையருக்கு அறிமுகபடுத்தி அவனே அறுவடை செய்து அவனே கப்பல் கப்பலா ஏற்றுமதியும் செய்தான்,

அப்போ எல்லாம் தேத்தண்ணீ, பாண் என்பது எல்லாம் என்னவென்றே இலங்கையர்களுக்கு தெரிந்திருக்கவில்லையென்று வரலாறு கூறுகிறது.

ஏற்றுமதி வருமானமும் அவனுக்கு இறக்குமதி வருமானமும் அவனுக்கு, வரிகள் எல்லாம் அவனுக்கு , உலக சட்ட வரைமுறைகள் முன்னேறாமல் இருந்த அந்த காலத்தில் உள்ளூரில் சுயமாய் சம்பாதித்தவர்களுக்கும் ஆங்கிலேயன் வரி விதித்தான், மறுத்த மக்களை குறு நில மன்னர்களை கொலையும்  செய்தான், பின்பு கொள்ளையும் அடித்தான் என்பது வரலாறு.

செலவுகள் பெரிதாக இன்றி வருமானம் மட்டும் பல நூறு  மடங்கு பெற்றவன் தனது தேவைகருதி பலதும்  மக்கள் நலனுக்காக சிலதும் செய்தான் என்பதே காலம் காலமாய் நாமறிந்த ஒன்று.

On 4/9/2021 at 19:35, குமாரசாமி said:

எத்தினை நாளைக்குத்தான் புளொரிடா அழகை பாத்து கொட்டாவி விடுவியள்? சேம் வெதர் சேம் வெள்ளை மண் சேம் மரம் கொடியள்.....அரசு நினைத்தால் அல்லது முக்கிய பிரமுகர்கள் நினைத்தால் முடியாதது ஏதுமில்லை.

ஸ்பெயினை பாருங்கோ.....சுவீஸ்ச பாருங்கோ எல்லாம் சுற்றுலா பயணிகள் வசமெல்லோ? இதே முறையை ஏன் நாங்கள் புங்குடுதீவு,அனலைதீவு,மண்கும்பான் ஏரியாக்களுக்கு பயன்படுத்தக்கூடாது?

உங்களுக்கு உள்ளதை போலவே எனக்கும் சாவகச்சேரியை டோக்கியோ போல் ஆக்கவேண்டும், கொடிகாமத்தை சியோல் போல் ஆக்க வேண்டும், மண்கும்பானை மன்ஹாட்டன் ஆக்கவேண்டும் என்று ஆசைகள் பல உண்டு.

வடபகுதியின் தீவுகளை, வடமராட்சி கரையோரங்களை சுற்றுலாதலமாக ஆக்கவேண்டுமெனில் பனங்காணிகளை அழித்து நவீனமாக்கவேண்டும், 

மனிதகழிவுகள் இல்லாத பிரதேசமாக ஆக்கவேண்டும்.

கரையோரங்கள் ஆழபடுத்தப்பட்டு நவீன படகுதுறைகள் அமைக்கப்படவேண்டும், ஐந்து  நட்சத்திர ஹோட்டல்கள் கட்டியெழுப்ப வசதியாய் அந்த பகுதிக்கு 24 மணி நேரமும்  மின்சாரம் குடிநீர் இணைப்புக்கள் வழங்கப்பட வேண்டும்.

பலாலி விமான நிலையம் சர்வதேச தரத்துக்கு நவீன மய படுத்தபட வேண்டும், பல எண்ணிக்கையில் சர்வதேச தரத்து சிறுரக விமானங்கள், உலங்கு வானூர்திகள் கொள்வனவு செய்யபடவேண்டும்,வெள்ளைக்காரர்கள் வந்து போக வசதியாய் சாலைகள் அகலபடுத்தப்படவேண்டும்,  உல்லாச பயணிகளுக்கான தடையில்லா  பல லட்சம்  கலன்கள் நல்ல தண்ணீர்  உல்லாச பயணிகள் பிரதேசத்துக்கு வழங்கபடவேண்டும். உள்ளூர்  மக்களுக்கான நன்னீரே  எந்த வேளையும் சாக்கடை உவர்நீர் கலந்து  ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்தமாய் இல்லாமல் போகலாம் என்ற சூழலே நிலவுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன,

அதனால் கடல்நீரை உல்லாச பயணதுறை தேவை கருதி நன்னீராக்கவேண்டும்.

நிலத்துக்கு அடியினால் மனித கழிவுகள்  போய்வர வடிகாலமைப்பு செய்யவேண்டும், அம்பன் நாகர் கோவில் எல்லாம் வெளிநாட்டில் நாங்கள் சினோ வழிக்குறதுபோல, கடல் அலைகளூம் காற்றும் கரை ஒதுக்கும்  மணல் கும்பிகளை உல்லாச பயணிகள் தேவைகள் கருதி அடிக்கடி  புல்டோசர் வைச்சு ஒதுக்கி கொண்டே இருக்க வேண்டும்.

இவை எல்லாவற்றிற்கும் இலங்கை பணமதிப்பில் சில லட்சம் கோடிகள் ரூபாய் தேவைபடும்

அதை தருவது யார்? பெறுவது யார்?

இந்த  லட்சம் கோடிகளை  செலவு செய்து உல்லாச பயணதுறையை ஊக்குவிக்க முடியுமானால் அதே பணத்தை வைத்து உலக வரைபடத்தில் தொழில்துறைகளை உருவாக்கி நாமே சுயமாய் முன்னேறலாமே, அதை தடுப்பது யார்?

.ஒரு துறைமுக நகரம் அமைத்ததுக்கே நாட்டை அடைவு வைத்தது மட்டுமன்றி பொருளாதார அரசியல் ரீதியில் இலங்கை அரசே புட்டுகிச்சு.

ஸ்பெயினையும் சுவிசையும் அமெரிக்காவையும் நாங்கள் பார்க்கதான் முடியும் அவர்கள் அளவிற்கு நாம் உயரலாம் என்று உடனடியா நினைக்க கூடாது, அவர்கள் தாமும் வளர்ந்து  தங்கள் நாட்டுக்குள் நுழைந்த பல லட்சம் வெளிநாட்டவர்களையும் வாழ வைக்கும் அளவிற்கு அசுர பொருளாதார பலம் கொண்டவர்கள்.

3 கோடி மக்கள் சன தொகையை வைத்துக்கொண்டு இன்னமும் 130 கோடி மக்கள் தொகையை கொண்ட சீனாவிடமும் இந்தியாவிடமும் அரிசி உள்ளி மஞ்சள் பருப்பு வாங்கும் நாங்கள்  மேற்குலகத்தின் வளர்ச்சியை  நூற்றாண்டுகள் கடந்த பின்பும் எட்டி பார்க்க வாய்ப்பிருக்கிறதா?

நமது பிரதேசத்தவர்கள், இன்றும் பாணி பினாட்டும் புளுக்கொடியலும் கீரை பிடியும், சிரட்டையை சீவி அகப்பை தயாரித்தும்,   வித்து அரை வயிறை கழுவுகிறவர்கள்.

அவர்களையும் அவர்களை ஆழும் அரசையும்  போய் ஏன் சுவிஸ்போல ஸ்பெயின் போல ஆக முடியவில்லை என்று கேட்காதீர்கள்..

ஓவென்று அழுவார்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 145
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2021 at 00:35, குமாரசாமி said:

எதை வைச்சு வெள்ளைக்காரன் இலங்கை முழுக்க  ரோட்டுக்கள் போட்டு பாலங்கள் எல்லாம் கட்டினான்?
வருமானத்தை வைச்சுதானே?
நெடுந்தீவையும் மண்டைதீவையும் சுற்றுலா அபிவிருத்தி பிரதேசமாக்குங்கோ காசு வருமெல்லே?

எத்தினை நாளைக்குத்தான் புளொரிடா அழகை பாத்து கொட்டாவி விடுவியள்? சேம் வெதர் சேம் வெள்ளை மண் சேம் மரம் கொடியள்.....அரசு நினைத்தால் அல்லது முக்கிய பிரமுகர்கள் நினைத்தால் முடியாதது ஏதுமில்லை.

ஸ்பெயினை பாருங்கோ.....சுவீஸ்ச பாருங்கோ எல்லாம் சுற்றுலா பயணிகள் வசமெல்லோ? இதே முறையை ஏன் நாங்கள் புங்குடுதீவு,அனலைதீவு,மண்கும்பான் ஏரியாக்களுக்கு பயன்படுத்தக்கூடாது?

சூரிய வளமும் பால் போன்ற வெள்ளை மணல் வளமும் அருகே உப்பு நீர் கடல் வளமும் எல்லா நாடுகளுக்கும் அமைவதில்லை. ஆனால் எமது வட பிரதேசத்தில் சகலதும் அமைந்துள்ளது. அம்பன் நாகர்கோவில் பக்கம் போவீர்களாயின் புளோரிடாவை ஒத்த பிரதேசம் அங்கும் இருக்கும். இந்த சூழலை ஏன் நாங்கள் வியாபாரமாக்க முடியவில்லை என்பதை முதலில் சிந்தியுங்கள்.

நான் ஏதோ மில்லியன் கணக்கில டொலரை வைத்துக்கொண்டு, ஆசுப்பத்திர்யை மண்டைதீவுக்கு மாத்துங்கோ எண்ட மணிக்கு சொன்னது போல, மண்டை காய்சல இருக்கினம், யாழ் ஆஸ்பத்திரிய தள்ளிக்கொண்டு போனால், இப்ப பாவிக்கிற தண்ணிய குழாயில கொண்டோட முடியும் என்ற  சின்ன விடயமே புரியாத, குடம் தண்ணி விலை கேக்குற வித்துவான்கள்.😁

ஒரு தீவானிடம், தீவுப்பகுதி போயிருக்கிறீர்களா?  என்று கேள்வி வேற.🤗

மணிக்கு சொல்லும் போது, அவரது தேர்தல் குறித்த வழக்கு நீதிமன்றில். மேலும் அவர் எனது நண்பர் வேறு.

தீவுப்பகுதிக்கு பலாலியை நகர்த்துவது, ரணில் பிரதமராக, நோர்வே சமாதான காலத்தில் கூட்டமைப்பின் யாழ் எம்பி ஒருவரால் பிரேரிக்கப்பட்டு, கண்டு கொள்ளப்படவில்லை. இது பத்திரிகையில் வந்து, இங்கே திரியிலும் பேசினோம்.

பத்தியா, எழுந்தமானமாக எமுதாமல், நிதானமாக எழுதினால், தரமான கருத்துக்கள் வரும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2021 at 20:42, Nathamuni said:

சிங்களத்துக்கு 'விளப்பம்' இல்லையா அல்லது, கடன் வாங்கி ஓட்டினால் போதும் என்று நினைக்கிறதா?

உங்களோடு வாதாட வரவில்லை.

அனால்,  கொறன 2ம்  அலை தமிழகத்தில் தாக்கிய போது, மிகவும் பிரபல்யமான சிங்கல தொலைக்காட்சி  நாடகம் , தமிழ் நாட்டில் இருந்து  இருந்து சொறி சிங்களத்தை நோக்கி பெருமளவில் மக்கள் படை எடுப்பதாகவும், அதை சொறி சிங்கள நேவி அடித்து கலைப்பதாகவும்.    
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, valavan said:

வெள்ளைக்காரன் காலத்தில் இலங்கையின் வளங்கொளிக்கும் பிரதேசங்களை கண்டுபிடித்து தேயிலை ரப்பர், கொக்கோ வாசனை திரவியங்கள், கனிமங்கள் தாதுபொருட்கள் என்று அனைத்தையும் இலங்கை மக்கள் அறியுமுன்னமே அவனே பயிரிட்டு அவனே அகழ்ந்தெடுத்து  இலங்கையருக்கு அறிமுகபடுத்தி அவனே அறுவடை செய்து அவனே கப்பல் கப்பலா ஏற்றுமதியும் செய்தான்,

அப்போ எல்லாம் தேத்தண்ணீ, பாண் என்பது எல்லாம் என்னவென்றே இலங்கையர்களுக்கு தெரிந்திருக்கவில்லையென்று வரலாறு கூறுகிறது.

ஏற்றுமதி வருமானமும் அவனுக்கு இறக்குமதி வருமானமும் அவனுக்கு, வரிகள் எல்லாம் அவனுக்கு , உலக சட்ட வரைமுறைகள் முன்னேறாமல் இருந்த அந்த காலத்தில் உள்ளூரில் சுயமாய் சம்பாதித்தவர்களுக்கும் ஆங்கிலேயன் வரி விதித்தான், மறுத்த மக்களை குறு நில மன்னர்களை கொலையும்  செய்தான், பின்பு கொள்ளையும் அடித்தான் என்பது வரலாறு.

செலவுகள் பெரிதாக இன்றி வருமானம் மட்டும் பல நூறு  மடங்கு பெற்றவன் தனது தேவைகருதி பலதும்  மக்கள் நலனுக்காக சிலதும் செய்தான் என்பதே காலம் காலமாய் நாமறிந்த ஒன்று.

உங்களுக்கு உள்ளதை போலவே எனக்கும் சாவகச்சேரியை டோக்கியோ போல் ஆக்கவேண்டும், கொடிகாமத்தை சியோல் போல் ஆக்க வேண்டும், மண்கும்பானை மன்ஹாட்டன் ஆக்கவேண்டும் என்று ஆசைகள் பல உண்டு.

வடபகுதியின் தீவுகளை, வடமராட்சி கரையோரங்களை சுற்றுலாதலமாக ஆக்கவேண்டுமெனில் பனங்காணிகளை அழித்து நவீனமாக்கவேண்டும், 

மனிதகழிவுகள் இல்லாத பிரதேசமாக ஆக்கவேண்டும்.

கரையோரங்கள் ஆழபடுத்தப்பட்டு நவீன படகுதுறைகள் அமைக்கப்படவேண்டும், ஐந்து  நட்சத்திர ஹோட்டல்கள் கட்டியெழுப்ப வசதியாய் அந்த பகுதிக்கு 24 மணி நேரமும்  மின்சாரம் குடிநீர் இணைப்புக்கள் வழங்கப்பட வேண்டும்.

பலாலி விமான நிலையம் சர்வதேச தரத்துக்கு நவீன மய படுத்தபட வேண்டும், பல எண்ணிக்கையில் சர்வதேச தரத்து சிறுரக விமானங்கள், உலங்கு வானூர்திகள் கொள்வனவு செய்யபடவேண்டும்,வெள்ளைக்காரர்கள் வந்து போக வசதியாய் சாலைகள் அகலபடுத்தப்படவேண்டும்,  உல்லாச பயணிகளுக்கான தடையில்லா  பல லட்சம்  கலன்கள் நல்ல தண்ணீர்  உல்லாச பயணிகள் பிரதேசத்துக்கு வழங்கபடவேண்டும். உள்ளூர்  மக்களுக்கான நன்னீரே  எந்த வேளையும் சாக்கடை உவர்நீர் கலந்து  ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்தமாய் இல்லாமல் போகலாம் என்ற சூழலே நிலவுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன,

அதனால் கடல்நீரை உல்லாச பயணதுறை தேவை கருதி நன்னீராக்கவேண்டும்.

நிலத்துக்கு அடியினால் மனித கழிவுகள்  போய்வர வடிகாலமைப்பு செய்யவேண்டும், அம்பன் நாகர் கோவில் எல்லாம் வெளிநாட்டில் நாங்கள் சினோ வழிக்குறதுபோல, கடல் அலைகளூம் காற்றும் கரை ஒதுக்கும்  மணல் கும்பிகளை உல்லாச பயணிகள் தேவைகள் கருதி அடிக்கடி  புல்டோசர் வைச்சு ஒதுக்கி கொண்டே இருக்க வேண்டும்.

இவை எல்லாவற்றிற்கும் இலங்கை பணமதிப்பில் சில லட்சம் கோடிகள் ரூபாய் தேவைபடும்

அதை தருவது யார்? பெறுவது யார்?

இந்த  லட்சம் கோடிகளை  செலவு செய்து உல்லாச பயணதுறையை ஊக்குவிக்க முடியுமானால் அதே பணத்தை வைத்து உலக வரைபடத்தில் தொழில்துறைகளை உருவாக்கி நாமே சுயமாய் முன்னேறலாமே, அதை தடுப்பது யார்?

.ஒரு துறைமுக நகரம் அமைத்ததுக்கே நாட்டை அடைவு வைத்தது மட்டுமன்றி பொருளாதார அரசியல் ரீதியில் இலங்கை அரசே புட்டுகிச்சு.

ஸ்பெயினையும் சுவிசையும் அமெரிக்காவையும் நாங்கள் பார்க்கதான் முடியும் அவர்கள் அளவிற்கு நாம் உயரலாம் என்று உடனடியா நினைக்க கூடாது, அவர்கள் தாமும் வளர்ந்து  தங்கள் நாட்டுக்குள் நுழைந்த பல லட்சம் வெளிநாட்டவர்களையும் வாழ வைக்கும் அளவிற்கு அசுர பொருளாதார பலம் கொண்டவர்கள்.

3 கோடி மக்கள் சன தொகையை வைத்துக்கொண்டு இன்னமும் 130 கோடி மக்கள் தொகையை கொண்ட சீனாவிடமும் இந்தியாவிடமும் அரிசி உள்ளி மஞ்சள் பருப்பு வாங்கும் நாங்கள்  மேற்குலகத்தின் வளர்ச்சியை  நூற்றாண்டுகள் கடந்த பின்பும் எட்டி பார்க்க வாய்ப்பிருக்கிறதா?

நமது பிரதேசத்தவர்கள், இன்றும் பாணி பினாட்டும் புளுக்கொடியலும் கீரை பிடியும், சிரட்டையை சீவி அகப்பை தயாரித்தும்,   வித்து அரை வயிறை கழுவுகிறவர்கள்.

அவர்களையும் அவர்களை ஆழும் அரசையும்  போய் ஏன் சுவிஸ்போல ஸ்பெயின் போல ஆக முடியவில்லை என்று கேட்காதீர்கள்..

ஓவென்று அழுவார்கள்.

ஐ லைக் தட் மண்கும்பான் மான்ஹட்டன் ஐடியா வெரி மச்🤣.

இப்பவே கூகிள்ள சில பரப்பை வேண்டி விட்டால் மண்டைதீவு ஆஸ்பத்திரிக்கு வாற சனத்துக்கு 5ஸ்டார் தங்குமிடம் கட்டி காசை டிப்பர்ல அள்ளலாம் 🤣.

என்னது தீவா? கொழும்பு பக்கம் ஏது சார் தீவு?🤣.  ஓ… crow island ஆ🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“இதுல ஒரு டியூப்ப சொருகிவிட்டா, சைக்கிளுக்கு காத்தடிச்சாவது பிழைக்கலாம் - அதெல்லாம் இந்த ஊரில யாருக்கு தெரியுது ஐடியா இல்லாத பசங்க”🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, valavan said:

அப்போ எல்லாம், பாண் என்பது எல்லாம் என்னவென்றே இலங்கையர்களுக்கு தெரிந்திருக்கவில்லையென்று வரலாறு கூறுகிறது.

இலங்கைத் தீவில் இருந்த வேடுவர்கள் அறிந்திருந்ததை, அறியாமல் எழுதிய பறங்கியின் மமதை  கருது இது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இலங்கைத் தீவில் இருந்த வேடுவர்கள் அறிந்திருந்ததை, அறியாமல் எழுதிய பறங்கியின் மமதை  கருது இது.

 

 

இரெண்டு விடயம் கடஞ்சா,

1. இது இலங்கை சுற்றுலா துறையின் staged விடியோவாக இருக்கலாம் என நான் நினைகிறேன். மரவெள்ளி இலையை சமைக்கிறார். மரவெள்ளி ஐரோப்பியர் அறிமுக படுத்தியது என்றே நான் நினைகிறேன்.

2. அதே போல் ரொட்டியாக தினைமாவை தட்டி உண்பது எம்மிடையே இருந்திருக்கும் என்றாலும், கோதுமை மாவில் பேக் பண்ணி சாப்பிடும் - பாண் ஐரோப்பிய வருகைக்கு முன் இருக்கவில்லை என்றே நான் நினைகிறேன்.

இந்த பேக் பண்ணும் பாண் கூட மத்திய கிழக்கில் இருந்து ஐரோப்பா வந்தாக எங்கோ வாசித்தேன்.

மத்திய கிழக்கில், வட இந்தியாவில் வெதுப்பி (oven) பாவனை நெடுங்காலமாக இருந்திருக்க கூடும் (தந்தூரி அடுப்புகள்,   ஆப்கானிஸ்தானில் மண்ணாலான வெதுப்பிகள்).  
தென்னிந்தியாவில், இலங்கையில் clay oven பாவனை இருந்ததா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அதே போல் ரொட்டியாக தினைமாவை தட்டி உண்பது எம்மிடையே இருந்திருக்கும் என்றாலும், கோதுமை மாவில் பேக் பண்ணி சாப்பிடும் - பாண் ஐரோப்பிய வருகைக்கு முன் இருக்கவில்லை என்றே நான் நினைகிறேன்.

 எனது அப்பாவின் தாயார் 105 வயசுவரை உயிர் வாழ்ந்தார் , அவர் சொன்னார் வெள்ளைக்காரர் காலத்தில் கோதுமை மற்றும் பாணை அறிமுகபடுத்தியபோது யாரும் அதை வாங்கவில்லையாம், பள்ளிக்கூடங்களிலும், பொது இடங்கள் மற்றும் சந்திகளிலும் பெட்டியில் சின்ன சின்ன பாணா செய்து வைத்திருந்து பொதுமக்களுக்கு இலவசமா வழங்கி பழக்கத்தை ஏற்படுத்தினார்களாம்.

Bun  என்று சொல்லியே மக்களுக்கு அதை அறிமுகபடுத்தினார்களாம், அதுவே பின்னாளில் பாண் என்று மருவியதாக பழங்கதை சொன்னார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, valavan said:

 எனது அப்பாவின் தாயார் 105 வயசுவரை உயிர் வாழ்ந்தார் , அவர் சொன்னார் வெள்ளைக்காரர் காலத்தில் கோதுமை மற்றும் பாணை அறிமுகபடுத்தியபோது யாரும் அதை வாங்கவில்லையாம், பள்ளிக்கூடங்களிலும், பொது இடங்கள் மற்றும் சந்திகளிலும் பெட்டியில் சின்ன சின்ன பாணா செய்து வைத்திருந்து பொதுமக்களுக்கு இலவசமா வழங்கி பழக்கத்தை ஏற்படுத்தினார்களாம்.

Bun  என்று சொல்லியே மக்களுக்கு அதை அறிமுகபடுத்தினார்களாம், அதுவே பின்னாளில் பாண் என்று மருவியதாக பழங்கதை சொன்னார்.

எனது பூட்டி , அம்மம்மாவும் இப்படி சொல்ல கேள்வி பட்டுள்ளேன்.

தேனீரை வீதிகளில் வைத்து ஆரோக்கிய பானம் என இலவசமாக கொடுத்தார்களாம். கூடவே bun உம். 

இங்கிலாந்தில் கூட அசுத்தமான நீர், பியருக்கு மாற்று என்றே தேனீர் பிரபல்யமாக்க பட்டதாக, ஒரு ரேடியோ நிகழ்சியில் சொன்னார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

எனது அப்பாவின் தாயார் 105 வயசுவரை உயிர் வாழ்ந்தார் , அவர் சொன்னார் வெள்ளைக்காரர் காலத்தில் கோதுமை மற்றும் பாணை அறிமுகபடுத்தியபோது யாரும் அதை வாங்கவில்லையாம், பள்ளிக்கூடங்களிலும், பொது இடங்கள் மற்றும் சந்திகளிலும் பெட்டியில் சின்ன சின்ன பாணா செய்து வைத்திருந்து பொதுமக்களுக்கு இலவசமா வழங்கி பழக்கத்தை ஏற்படுத்தினார்களாம்.


இது இரண்டாம் கட்ட முயற்சி என்று நினைக்கிறன். (சவப்பெட்டி மா) என்பதை இருந்து வேறுபட்டது  என்று சொல்லி.

வந்த புதிதில், சவப்பெட்டி மா / பாடை ஒட்டி என்று என்ற விளக்கம் ஏற்பட்டு, இந்த மாவை ஒருவரும் அணுகவே அருவருத்தனர்.   எனது பாட்டி சொன்னது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, valavan said:

நமது பிரதேசத்தவர்கள், இன்றும் பாணி பினாட்டும் புளுக்கொடியலும் கீரை பிடியும், சிரட்டையை சீவி அகப்பை தயாரித்தும்,   வித்து அரை வயிறை கழுவுகிறவர்கள்.

அவர்களையும் அவர்களை ஆழும் அரசையும்  போய் ஏன் சுவிஸ்போல ஸ்பெயின் போல ஆக முடியவில்லை என்று கேட்காதீர்கள்..

ஓவென்று அழுவார்கள்.

இதென்ன கோதாரியாய் கிடக்கு...நான் ஏதோ சொல்லாப்போக குமுறல் வேறை விதமாய் போகுது.....😃

நான் சொல்ல வந்தது உதாரணத்தை காட்டி ஒரு வித நோக்கங்கள் மட்டுமே. வைச்சால் குடுமி இல்லையேல் மொட்டை எனும் கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை. எமது பூமியில் இருக்கும் வளத்தையும் காலநிலையையும் வைத்து சிந்திக்க வேண்டுமே தவிர சீனாக்காரன் போல் கொப்பி பண்ணும் நோக்கில் நான் எதுவுமே சொல்லவில்லையே?

ஒரு மனிதனுக்கு நோக்கங்கள் இருக்கவேண்டும். அது இருந்தால் தான் முன்னேற முடியும்.
நான் புலம்பெயர்ந்து வந்த புதிதில் என்னைப்பார்த்து ஒரு ஜேர்மன் அதிகாரி கேட்டார் நீங்களும் உங்கள் ஆட்களும் தனிநாடு கேட்கின்றீர்களே? அப்படி என்ன வளம் உங்களிடம் இருக்கு? உங்களால் பிற நாடுகளின் உதவியில்லாமல் தனித்து நிற்க முடியுமா? இதே கேள்வியை உங்களிடம் திருப்பி விடுகின்றேன். பதிலை சொல்லுங்கள்.

 கனவு காணுங்கள் அது என்று அப்துல் கலாம் மேடைக்கு மேடை சொல்வாராம்.அது உங்கள் போன்றோருக்கும் தெரிந்திருக்கும் என நினக்கின்றேன்.

எப்பவும் பினாட்டு ஓடியல் புட்டு  தான் எங்களிட்டை இருக்கு எண்டு  சொல்லுறவையிட்ட நான் சொல்லுறது என்னவெண்டால் சிங்கப்பூரிட்டை அதுவுமில்லை 🤣 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இதென்ன கோதாரியாய் கிடக்கு...நான் ஏதோ சொல்லாப்போக குமுறல் வேறை விதமாய் போகுது.....😃

நான் சொல்ல வந்தது உதாரணத்தை காட்டி ஒரு வித நோக்கங்கள் மட்டுமே. வைச்சால் குடுமி இல்லையேல் மொட்டை எனும் கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை. எமது பூமியில் இருக்கும் வளத்தையும் காலநிலையையும் வைத்து சிந்திக்க வேண்டுமே தவிர சீனாக்காரன் போல் கொப்பி பண்ணும் நோக்கில் நான் எதுவுமே சொல்லவில்லையே?

ஒரு மனிதனுக்கு நோக்கங்கள் இருக்கவேண்டும். அது இருந்தால் தான் முன்னேற முடியும்.
நான் புலம்பெயர்ந்து வந்த புதிதில் என்னைப்பார்த்து ஒரு ஜேர்மன் அதிகாரி கேட்டார் நீங்களும் உங்கள் ஆட்களும் தனிநாடு கேட்கின்றீர்களே? அப்படி என்ன வளம் உங்களிடம் இருக்கு? உங்களால் பிற நாடுகளின் உதவியில்லாமல் தனித்து நிற்க முடியுமா? இதே கேள்வியை உங்களிடம் திருப்பி விடுகின்றேன். பதிலை சொல்லுங்கள்.

 கனவு காணுங்கள் அது என்று அப்துல் கலாம் மேடைக்கு மேடை சொல்வாராம்.அது உங்கள் போன்றோருக்கும் தெரிந்திருக்கும் என நினக்கின்றேன்.

எப்பவும் பினாட்டு ஓடியல் புட்டு  தான் எங்களிட்டை இருக்கு எண்டு  சொல்லுறவையிட்ட நான் சொல்லுறது என்னவெண்டால் சிங்கப்பூரிட்டை அதுவுமில்லை 🤣 
 

இதை தானே ஆரம்பத்தில் இருந்து சொல்கிறேன். விதண்டாவாதம் தானே பேசுகிறார்கள்..... ஆக்கபூர்வமாக பேசாமல்...

நெடுந்தீவு; ஒரு ஜரோப்பிய வரலாறும், இயற்கை கடலோரங்களும் கொண்ட அழகிய தீவு. பாலைதீவு, அனலைதீவு, ஊர்காவற்துறை கடற்கோட்டை, யாழ் கோட்டை உல்லாசப் பயணிகளை கொண்டு வந்து கொட்டு்ம். மக்கள் வாழாத கச்சதீவை, இரணைதீவை காசீட்டும் தீவாக்கலாம்.

சிங்களவரும் நயினாதீவு, மாதகல் என்று வருவர். இப்போது இராணுவம் அமைக்கும் பெளத்த விகாரைகள், எரிச்சல் தந்தாலும், நாளை, அவர்களுக்கு கதிர்காமம் போல, நமக்கு வருமானம் தரும்.

இந்திய பயணிகளே ஆரம்பத்தில் போதும். இப்போது மாலைதீவு ஓடுகிறார்கள். அது நீரில் மூழ்கும்.

பசில் நெடுந்தீவை பார்த்து தானே போனார்..... உல்லாச பயண தீவாக்க சிறப்பானது என்றார். இனரீதியான பார்வை தடுத்திருக்கலாம்.

எனது கனவு, இருபது, முப்பது வருசத்துக்கானது.

அதை இன்றைய நிலையில் வைத்து விவாதிப்பதே அபத்தம்.

சிங்கப்பூரில் நீர்வளம் இல்லை.

இலண்டணில் அகதியாக வந்து, கற்று, அங்கு போன யாழ் இந்து மாணவர் தலைமையில் அமைந்த குழு, மலசல கூட கழிவு நீர் (கறுப்பு தண்ணீர்) அல்லது அவரது சொல்லாடலில், கக்கா தண்ணிய குடிநீராக்கும் செயலில் 1998ல் வெற்றி கண்டது.

மனமிருந்தால் மார்க்கம் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, valavan said:

 எனது அப்பாவின் தாயார் 105 வயசுவரை உயிர் வாழ்ந்தார் , அவர் சொன்னார் வெள்ளைக்காரர் காலத்தில் கோதுமை மற்றும் பாணை அறிமுகபடுத்தியபோது யாரும் அதை வாங்கவில்லையாம், பள்ளிக்கூடங்களிலும், பொது இடங்கள் மற்றும் சந்திகளிலும் பெட்டியில் சின்ன சின்ன பாணா செய்து வைத்திருந்து பொதுமக்களுக்கு இலவசமா வழங்கி பழக்கத்தை ஏற்படுத்தினார்களாம்.

Bun  என்று சொல்லியே மக்களுக்கு அதை அறிமுகபடுத்தினார்களாம், அதுவே பின்னாளில் பாண் என்று மருவியதாக பழங்கதை சொன்னார்.

எந்த வெள்ளைக்காரர் என்ற விடயம் முக்கியம்.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரிட்டிஸ் ?

எனக்கு புரிந்த வகையில் கோதுமை, பாண், பிரித்தானியார்களுக்கு முன்னம் வந்திருக்கவேண்டும்.

டச்சுக்காரரின், லவ் கேக், கிறிஸ்மஸ் கேக் இன்றும் பேமஸ்.

அநேகமாக, உங்கள் பாட்டி சொன்ன விடயம், பிரிட்டிஸ்காரர் காலத்தில் மிசனரி பாடசாலை கள், போட்டியாக இந்து பாடசாலைகள் என வந்த போது, இலவச Bun, Bread உணவுகள் கொடுத்து மாணவர்களை கவர்ந்தார்கள். இந்தக்காலமே பெண்கள் கல்வி கற்க வெளியே வந்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றுக்கும் முதல் அங்கு சாதியால் பிரிவதை எப்படி அணை போடலாம் என்பதை விவாதிப்பது நன்று.

ரட்ணஜீவன் ஹூல் உம் (சுமந்திரனின் வரலாற்றாசிரியர்), சில யாழ் பல்கலைக்கழக  விற்பனர்களும் சேர்ந்து, பாரம்பரியத்தை காப்பது என்ற பெயரில், 500 வருடத்துக்கு முன்பு இருந்த சாதிகளின் பெயர் கொண்ட வீதிகள் மீட்கப்படவேண்டும் வரவேண்டும் என்று இப்பொது வெளிக்கிட்டு இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

இதென்ன கோதாரியாய் கிடக்கு...நான் ஏதோ சொல்லாப்போக குமுறல் வேறை விதமாய் போகுது.....😃

நான் சொல்ல வந்தது உதாரணத்தை காட்டி ஒரு வித நோக்கங்கள் மட்டுமே. வைச்சால் குடுமி இல்லையேல் மொட்டை எனும் கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை. எமது பூமியில் இருக்கும் வளத்தையும் காலநிலையையும் வைத்து சிந்திக்க வேண்டுமே தவிர சீனாக்காரன் போல் கொப்பி பண்ணும் நோக்கில் நான் எதுவுமே சொல்லவில்லையே?

ஒரு மனிதனுக்கு நோக்கங்கள் இருக்கவேண்டும். அது இருந்தால் தான் முன்னேற முடியும்.
நான் புலம்பெயர்ந்து வந்த புதிதில் என்னைப்பார்த்து ஒரு ஜேர்மன் அதிகாரி கேட்டார் நீங்களும் உங்கள் ஆட்களும் தனிநாடு கேட்கின்றீர்களே? அப்படி என்ன வளம் உங்களிடம் இருக்கு? உங்களால் பிற நாடுகளின் உதவியில்லாமல் தனித்து நிற்க முடியுமா? இதே கேள்வியை உங்களிடம் திருப்பி விடுகின்றேன். பதிலை சொல்லுங்கள்.

 கனவு காணுங்கள் அது என்று அப்துல் கலாம் மேடைக்கு மேடை சொல்வாராம்.அது உங்கள் போன்றோருக்கும் தெரிந்திருக்கும் என நினக்கின்றேன்.

எப்பவும் பினாட்டு ஓடியல் புட்டு  தான் எங்களிட்டை இருக்கு எண்டு  சொல்லுறவையிட்ட நான் சொல்லுறது என்னவெண்டால் சிங்கப்பூரிட்டை அதுவுமில்லை 🤣 
 

அண்ணை,

உங்களை கனவு காண வேண்டாம் எண்டு சொல்லேல்ல, ஆனால் அது ஒரு நடைமுறை கனவாக இருக்க வேண்டும்.

Ambition (கனவு) ற்கும் fantasy (பகற்கனவு) க்கும் வித்தியாசம் உள்ளது.

இலங்கையில் தெற்கே இல்லாதா உல்லாச பயண வருவாயா? இலங்கை மட்டும் அல்ல, மாலைதீவு, தாய்லாந்து, பாலி எல்லா இடமும்தான் - இவை வாழ்க்கையின் தரத்தை பெரிதும் உயர்த்தும், ஒரு கணிசமான பொருளாதார வளர்ச்சியை தரும் ஆனால் இருக்கும் விமான நிலையத்தை தூக்கி இடம்மாற்ற, தண்ணியில்லா தீவுக்கு ஆஸ்பத்திரியை மாற்றி பெரும் செலவில் குழாய் மூலம் தண்ணி எடுத்து போகும் அளவுக்கு நாட்டை முன்னேற்றாது.

அப்படி முன்னேற துபாய், சிங்கபூர் போல நிலத்தின் பெறுமதி (தண்ணியில்லாத, தீவின் கூட) மிக அதிகமாகும் நிலை வரவேண்டும்.

தயவு செய்து எல்லாவற்றிற்கும் “வளமில்லாத சிங்கபூர்” என உதாரணம் காட்டாதீர்கள். சிங்கபூரில் 3 பெரும் வளங்கள் இருந்தன.

1. தீர்க்கமான தலைமைதுவம்

2. கடின உழைப்பு, கட்டுப்பாடு மிக்க மனிதவளம்

3. சிங்கபூர் நீரிணை, மலாக்கா நீரிணை சந்தியில், சர்வதேச கப்பல் போக்குவரத்து வீதியில் இருந்த அமைவிடம்

4. எல்லாவற்றிலும் முக்கியமாக சிங்கபூருக்கு இருந்த “சுய நிர்ணயம்”.

4 வது இல்லாமல் வேறு எது இருந்தும் பயனில்லை. ஏனென்றால் பெளத்த-சிங்கள இலங்கையிடம் 1, 2ம் இல்லை.

3 யாழ்பாணதுக்கு இல்லவே இல்லை.

1 தலைவரிடம் மட்டும் இருந்தது.

2 ஒரு காலத்தில் யாழில் இருந்தது. இப்போ இல்லை.

நான் மேலே சொன்ன 4 வளங்களும் இன்றைக்கு திடீரென இறை அருளால் கைகூடி, தலைவர் போல ஒரு அதிபர் வாய்த்தாலும் - மண்டைதீவுக்கு ஆஸ்பத்திரியை மாத்தவோ, பலாலியை தூக்கி ஊறாத்துறையில் இறக்கவோ, அது லாபம் தரும் செயலாக (economically viable) வர இன்னும் குறைந்தது 40 ஆண்டு எடுக்கும்.

அடுத்து Batam, Bintam உட்பட சிங்க்பூரின் அதே அமைவிடத்தோடு எதிர் கரையில் இந்தோனேசியாவின் பல தீவுகள் உள்ளன. உள்ளது ஓரளவு முன்னேறியது பதாம். அதை போய் பார்த்தால் - அது யாழ்பாணம் அளவுக்குத்தான் முன்னேறியுள்ளது. ஆகவே எல்லாராலும் சிங்கபூர் ஆக முடியாது. 

நான் வடகிழக்கில் உல்லாசதுறையில் முதலிட்ட அனுபவத்தையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

கனவு காணலாம், பகற்கனவு காணக்கூடாது. 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

எந்த வெள்ளைக்காரர் என்ற விடயம் முக்கியம்.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரிட்டிஸ் ?

பாட்டி தன்னோட காலத்து பாண் கதை சொன்னால் அது Automatic'கா ஆங்கிலேயர் காலம்தானே நாதம்ஸ்,

போத்துக்கேயர் ஒல்லாந்தர்கால 250,300  ஆண்டுகளுக்கு முன்னர் பாட்டி பிறந்திருக்கவே வாய்ப்பில்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, valavan said:

பாட்டி தன்னோட காலத்து பாண் கதை சொன்னால் அது Automatic'கா ஆங்கிலேயர் காலம்தானே நாதம்ஸ்,

போத்துக்கேயர் ஒல்லாந்தர்கால 250,300  ஆண்டுகளுக்கு முன்னர் பாட்டி பிறந்திருக்கவே வாய்ப்பில்லையே.

உங்க பாட்டிட பெயர் ஒளவையா🤣.

21 minutes ago, Kadancha said:

எல்லாவற்றுக்கும் முதல் அங்கு சாதியால் பிரிவதை எப்படி அணை போடலாம் என்பதை விவாதிப்பது நன்று.

ரட்ணஜீவன் ஹூல் உம் (சுமந்திரனின் வரலாற்றாசிரியர்), சில யாழ் பல்கலைக்கழக  விற்பனர்களும் சேர்ந்து, பாரம்பரியத்தை காப்பது என்ற பெயரில், 500 வருடத்துக்கு முன்பு இருந்த சாதிகளின் பெயர் கொண்ட வீதிகள் மீட்கப்படவேண்டும் வரவேண்டும் என்று இப்பொது வெளிக்கிட்டு இருக்கிறார்கள்.

லின்ங்ஸ் ஏதும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

லின்ங்ஸ் ஏதும்?

https://island.lk/place-names-say-who-we-are-nallur-triumphs-nellore/

https://www.colombotelegraph.com/ யிலும் வந்தது.

https://island.lk/the-tenacity-of-caste/

அனால், ரட்ணஜீவன் ஹூல் 2014 மட்டத்தில் இருந்து இந்த சாதியை தூக்கி  பிடித்து வருகிறார். ஆறுமுக நாவலரின், சாதி பார்ட்டியா பார்வையை நியாயப்படுத்தும் படைப்பும் வெளியிட்டு இருக்கிறார், பாரம்பரியம் காப்பது என்ற நோக்கில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kadancha said:

https://island.lk/place-names-say-who-we-are-nallur-triumphs-nellore/

https://www.colombotelegraph.com/ யிலும் வந்தது.

https://island.lk/the-tenacity-of-caste/

அனால், ரட்ணஜீவன் ஹூல் 2014 மட்டத்தில் இருந்து இந்த சாதியை தூக்கி  பிடித்து வருகிறார். ஆறுமுக நாவலரின், சாதி பார்ட்டியா பார்வையை நியாயப்படுத்தும் படைப்பும் வெளியிட்டு இருக்கிறார், பாரம்பரியம் காப்பது என்ற நோக்கில்.

நன்றி.

ஓம் முந்தியும் ஒருக்கா தான் பெரிய கத்தோலிக்க உயர் சாதிகாரன் எண்டு எழுதினவர்😡.

என்னத்தை படிச்சு…என்னத்தை கிழிச்சு…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசித்து விட்டு சொல்லவும், ரட்ணஜீவன் ஹூல் மற்றும் Jaffna university விற்பனர்கலின் எண்ணம் , ஆயுதப் போராட்டத்தின் மூலம், ஓரளவு தணிக்கப்பட்ட  சாதி வேறுபாடுகள், எங்கே எமது சமூகதத்தை கொண்டு போகும்   என்று.

இது, சுமந்திரனின் மறுபக்க (அதாவது சமூக ஒத்திசைவு மற்றும் ஒருங்கு தன்மை குலைத்தல் ) திட்டமோ  என்று, சுமந்திரனின் உள்ளூர் / மற்றும் சர்வதேச பேரங்ககளை தடை  இன்றி அறிமுகப்படுத்துதற்கும், கொண்டு செல்வதற்கும்  சந்தேகிக்க வேண்டி இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, valavan said:

பாட்டி தன்னோட காலத்து பாண் கதை சொன்னால் அது Automatic'கா ஆங்கிலேயர் காலம்தானே நாதம்ஸ்,

போத்துக்கேயர் ஒல்லாந்தர்கால 250,300  ஆண்டுகளுக்கு முன்னர் பாட்டி பிறந்திருக்கவே வாய்ப்பில்லையே.

தேன், தினை, கொள்ளு, கம்பு, குரக்கன்… போன்றவற்றை… சாப்பிட்ட எமது முப்பாட்டி, கொள்ளுப் பாட்டி எல்லாரும்…

200, 300 வருசம் வாழ்ந்து இருப்பார்கள் தானே…

வெள்ளைக்காரனின்… கோதம்ப மாவை சாப்பிடத் தொடங்கின பிறகுதான்… அல்ப ஆயுசிலை சாக வேண்டி வந்திட்டுது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

பாட்டி தன்னோட காலத்து பாண் கதை சொன்னால் அது Automatic'கா ஆங்கிலேயர் காலம்தானே நாதம்ஸ்,

போத்துக்கேயர் ஒல்லாந்தர்கால 250,300  ஆண்டுகளுக்கு முன்னர் பாட்டி பிறந்திருக்கவே வாய்ப்பில்லையே.

நல்ல நகைச்சுவை, வளவர்.....

எனது குறிப்பு உங்கள் பாட்டியின் வாழ்ந்த காலம் குறித்ததல்ல....

நீஙகள் சொன்ன கோதுமை, பாண் அறிமுகப்படுத்தினது குறித்தது.

(வெள்ளைக்காரர் காலத்தில் கோதுமை மற்றும் பாணை அறிமுகபடுத்தியபோது )

கொப்பிழக்காமல் கருத்தாடுவோம்.....

கொப்பிழக்க வைக்கவும், பார்த்து கைதட்டவும் அண்ணாச்சிகள் அலைமோதுவர்...... கவனம். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

நல்ல நகைச்சுவை, வளவர்.....

எனது குறிப்பு உங்கள் பாட்டியின் வாழ்ந்த காலம் குறித்ததல்ல....

நீஙகள் சொன்ன கோதுமை, பாண் அறிமுகப்படுத்தினது குறித்தது.

(வெள்ளைக்காரர் காலத்தில் கோதுமை மற்றும் பாணை அறிமுகபடுத்தியபோது )

கொப்பிழக்காமல் கருத்தாடுவோம்.....

கொப்பிழக்க வைக்கவும், பார்த்து கைதட்டவும் அண்ணாச்சிகள் அலைமோதுவர்...... கவனம். 😁

நாதம்ஸ்… இது, யாருக்கோ… உள் குத்துப் போலை கிடக்குது. 🤣😂

அது… யார் எண்டு, கண்டு பிடிக்கிறது தான்… கஸ்ரமாயிருக்கு. 😂😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

நாதம்ஸ்… இது, யாருக்கோ… உள் குத்துப் போலை கிடக்குது. 🤣😂

உள்குத்தெல்லாம் இல்லை.

சகலதையுமே, என்னத்தே கன்னையா ஸ்ரைலில பார்க்காமல், கனவு காணுங்கோ என்று சொல்கிறேன்.

தலைவர், கைத்துவக்கு வாங்க காசிலாமல் தவித்தார். கனவு.... பின்னாளில் வல்லரசொன்றுடன் மோத வைத்தது.

யாருமே, அவருக்கு பகல்கனவு காணாதே என்று சொல்லவில்லை.

மேலே சாமியார் சொன்ன, அப்துல் கலாம், உறக்கத்தில் வருவதில்லடா கனவு, உறக்கமில்லாமல் உழைக்க வைப்பதே கனவு என்றார்.

நான் யாரையும் குறை சொல்லவில்லை.

ஆனால், இருபது, முப்பது வருடத்தில் தாயகம் எப்படி இருக்கவேண்டும் என்று கனவாவது காண்போம். 👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.