Jump to content

யாழ்ப்பாண நகரத்தின் அடையாளங்களை மேம்படுத்தல்! ஐந்திறன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்… இது, யாருக்கோ… உள் குத்துப் போலை கிடக்குது. 🤣😂

அது… யார் எண்டு, கண்டு பிடிக்கிறது தான்… கஸ்ரமாயிருக்கு. 😂😂😂😂

அண்ணை, இண்டைக்கு குரோசியாவில அதிகம் குளிர் போல, இங்க வந்து பத்த வக்கிறியள் 🤣.

அது சரி எங்கட காணிய உயர்த்தி island ஆக்கிற பிளான் எப்படி போகுது?

இப்பவே பக்கத்து வீட்டு காணியளையும் வாங்கி, நல்லா பெருசாக்குங்கோ.  ஆனால் ஆகலும் பெருசாக்க வேண்டாம், பிறகு ஆஸ்பத்திரி அல்லது ஏர்போட் கட்ட எண்டு எடுத்து போடுவாங்கள்.

இன்னும் 30 வருசம்தான்…. போனா கிடையாது, பொழுதுபட்டால் கிட்டாது🤣.

நான் நெடுத்தீவில போய் நல்ல தண்ணியில்லா காடு கொஞ்சம் வாங்கி விடப்போறன். இன்னும் 30 வருசத்தில லாஸ் வேகாஸ்சுக்கு தண்ணி காட்டலாம்🤣.

Link to comment
Share on other sites

  • Replies 145
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்… இது, யாருக்கோ… உள் குத்துப் போலை கிடக்குது. 🤣😂

அது… யார் எண்டு, கண்டு பிடிக்கிறது தான்… கஸ்ரமாயிருக்கு. 😂😂😂😂

தண்ணிப் பிரச்சணை பெரும் பிரச்சணை தான் போலை கிடக்குது.

கச்சதீவு... பாலைதீவு, இரணதீவு மக்கள் வாழாமைக்கு காரணம் குடி தண்ணீர் இல்லை.

இப்பதானே கடல் நீரை குடிதண்ணீர் ஆக்கிற தொழில் நுட்பம் வந்துட்டுது..... முப்பது வருசத்தில இன்னும் திறமா வந்திடும்.... பிறகென்ன இப்ப காணிய வாங்கி விட்டா, சந்ததி வாழ்த்தும்.....

கிழவன்.....இலண்டனில இருந்து... விசயமே தெரியாத மாதிரி....எழுதி, எழுதி.... ஜடியா.... பிடிச்சு வாங்கி போட்டதெல்லே எண்டு....

😁 😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெரிய கிடாரம் வாங்கிறம். கீழ நல்ல விறகு, கொஞ்சம் மொக்கு, பன்னாடை சேர்த்து பத்த வைக்கிறம்- கடாரத்தின் மூடியில் படியும் நீராவியை நல்ல தண்ணி ஆக்குறம், ஹோஸ் பைப்பை அதில பூட்டி கச்சதீவுக்கு இழுக்கிறம்🤣.

கடல்நீரை நன்னீராக்குவது நல்ல திட்டம்தான் ஆனால் அதன் செலவு மிக அதிகம்.
யாழ்பாணத்தின் எத்தனை மடங்கு பெரிய பொருளாதாரம் சென்னை? அவர்களே இதை ஓரளவுக்கு மேல் செய்ய முடியவில்லை. 

அத்துடன் இதில் பல சூழலியல் பின் விளைவுகளும் உள்ளன. அதை சமன் செய்யும் பொறிமுறையும் அதிக செலவீனமானதே.

இப்படி நடைமுறை சாத்தியமில்லாத திட்டங்களை சும்மா கற்பனாவாதமாக கதைத்து நகைசுவை பண்ணாமல் - நடக்கிற மாரி ஏதும் கதைச்சால் நல்லம்.

உதாரணமாக வட கிழக்கில்  காற்றாலைகளை நிறுவலாம்.  சூரிய பலகைகளை நிறுவலாம். 

யூகேயை சுற்றி உள்ள கடல் படுக்கையை காற்றாலை குத்தகைக்கு விட்டு crown estate போன வருடம் கொள்ளை லாபம் பார்த்தது.

ஆனால் ஊரில் இதை அரசுதான் செய்ய முடியும்.

சூரிய பலகைகள் சின்ன அளவில் செய்யலாம். குறிப்பாக தீவு பகுதியில் கைவிடபட்ட தோட்ட இதர நிலங்களை ஒன்றாக்கி, புலம்பெயர் கூட்டு முதலீட்டில் - சூரிய பண்ணைகள் அமைக்கலாம். 

Selling back to the national grid இலங்கையில் சரிவராவிட்டாலும், நமது ஊர்களின் மின்சார தேவைகளையாவது பூர்த்தி செய்யலாம்.

இதில் உள்ள சாதக பாதகங்கள் பற்றி எனக்கு அறிவில்லை, நான் துறைசார் நிபுணரும் இல்லை. ஆனால் இப்போ லண்டனிலேயே வீட்டுக்கு பொருத்துகிறார்கள். குறித்த வருடத்தில் இட பணம் வந்து விடும் அதன் பின் வீட்டு மின்சாரம் (பராமரிப்பு செலவு போக) இலவசம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, தமிழ் சிறி said:

தேன், தினை, கொள்ளு, கம்பு, குரக்கன்… போன்றவற்றை… சாப்பிட்ட எமது முப்பாட்டி, கொள்ளுப் பாட்டி எல்லாரும்…

200, 300 வருசம் வாழ்ந்து இருப்பார்கள் தானே…

வெள்ளைக்காரனின்… கோதம்ப மாவை சாப்பிடத் தொடங்கின பிறகுதான்… அல்ப ஆயுசிலை சாக வேண்டி வந்திட்டுது. 

100% உண்மை தமிழ்சிறி, 

தேன், தினை, கொள்ளு, கம்பு, குரக்கன்…மட்டுமல்ல ஏதோ சாமை  வரகு கம்பு  எள்ளு(இது மட்டும் தெரியும்) மற்றும் நல்லெண்ணையில் தயாரித்த களிகள் ,சோளம்,ஒடியல் புட்டு   இதுதான் அவர்கள் உணைவாம்,

இதெல்லாம் அமுக்கிபோட்டுத்தான் அந்தகால பழசுகள் 85 வயசுக்கப்புறமும் தலைநிறைய முடியுடனும் நாலைஞ்சுபேரை தூக்கிபோட்டு அடிக்குற வலிமையுடனும், இன்றுள்ள பல நோய்களைபற்றி கேள்விபடாதவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

அதைவிட உடற்பயிற்சியென்று தனியாக செய்யவேண்டியதில்லை, வாகன பழக்கங்கள் குறைந்த அந்நாட்களில் எத்தனை நூறு கிலோ மீற்றருக்கும் நடையாம், கதிர்காமம் வற்றாபளைக்கெல்லாம் நடந்துகூட போவார்களாம், அப்புறம் துலாவில் தண்ணி இறைப்பு, நான் சிறுவயசில் ஒருமுறை அம்மாகூட பக்கத்து ஊருக்கு போனபோது துலாவில் தண்ணி அள்ளபோய் துலாவோட மேல போயிட்டன் ஜிம்முக்கு போறதவிட பலமான பயிற்சி.

, அதைவிட  பாரங்களை தூக்கிகொண்டு சுமப்பது என்று, அந்த உணவுகளையும் அமுக்கிபோட்டு இப்படி உடலைவருத்தி வேலையும் செய்ஞ்சா பொக்சிங் விளையாடுறவங்கள் ரேஞ்சிலதான் உடம்பு  இருக்கும்.

காலையில் தேத்தண்ணி கோப்பி எல்லாம் கிடையாதாம் காலை எழுந்ததும் பழஞ்சோறு தண்ணி சின்ன வெங்காயம்,கொத்தமல்லி தண்ணி , இஞ்சி சாறு என்று ஆகாரங்கள் மட்டும்தானாம்,பழஞ்சோறு தண்ணி கண்பார்வையை கூர்மையாக்கும், உடலை குளிர்மையாக வைத்திருக்கும்  என்று இன்றும் சொல்கிறார்கள், 

அதனால்தான் அந்தகால பழசுகள் மூக்குகண்ணாடி பாவிப்பது குறைவென்று நினைக்கிறேன், இப்போ 5 வயசிலேயே சோடாபுட்டி கண்ணாடி, 65 வயசுக்குள்ளயே உலகின் பாதி வருத்தங்களை சுமந்தபடி மேட்டர் ஓவர் என்று சொல்லிட்டு கிளம்பி லங்காசிறியில் மரண அறிவித்தல் பகுதியில் வரிசையாய் சிரித்துக்கொண்டு போஸ் கொடுக்கிறார்கள் போலும்.

அதோட சின்னவெங்காயமும் இஞ்சிசாறும் சேர்ந்தால்  தசை நார்களில் குளுக்கோசின் அளவு உறிஞ்சப்பட்டு சுகர் எகிறின ஆக்கள்  இன்சுலீன் பயன்படுத்தாமலே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் என்று கூறுகிறார்கள்,  இந்த விளக்கம் எல்லாம்  அவர்கள் அறிந்திருந்திருந்தார்களோ இல்லையோ  மருத்துவ குணம் கொண்ட வாழ்க்கைமுறை வாழ்ந்திருக்கிறார்கள் போலும்.

கிழவி சாகும்வரை பக்கத்தில இருந்து ஆதிகால கதைகளை துருவி துருவி கேட்டுக்கொண்டிருப்பேன், அது ஒரு அருமையான படம் பார்த்ததுபோலிருக்கும், அதைவிட அவ பயன்படுத்திய பல தமிழ் சொற்கள் அறவே வழக்கொழிந்து போய்விட்டது என்பது மேலதிக தகவல்.

1 hour ago, Nathamuni said:

கொப்பிழக்காமல் கருத்தாடுவோம்.....

 

அப்படி எதுவும் இல்லை நாதம்ஸ் , எந்த வெள்ளைக்காரர் காலம் என்று நீங்கள் கேட்ட கேள்வியை நான் தவறாக புரிந்து கொண்டு பதிலளித்திருக்கிறேன்  என்று எடுத்துகொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முப்பது வருசத்தில சிம்பிளா தண்ணிய மாத்தித் தாற ரெக்னோலஜி வந்திடும்.... இப்ப இருக்கிற விலை அதிகமான தொழில் நுட்பம் அப்ப இராது.

இலண்டணில இருந்து மெல்போனுக்கு நேரா பறக்குது விமானம். ஜந்து வருசத்துக்கு முன்னம், இரண்டுடொரு இடத்திலை இறங்கி பெற்றோல் போடனும்.

இன்னும் பத்து வருசத்தில டீசல் வாகனம் பிரித்தானியாவில் தடை. மின்வாகனம் பககம் முழு கவனம் வரப்போகுது.

ஜயோ பெற்றோல், டீசல், விலை கூட என்று அழுவதும், பத்து வருசத்துக்கு பிறகு என் பிள்ளை எப்படி உந்த விலையில டீசல் காருக்கு டீசல் வாங்க ஏலும் என்று கதறவதால் என்ன பயன்? 😁

 

11 minutes ago, valavan said:

அப்படி எதுவும் இல்லை நாதம்ஸ் , எந்த வெள்ளைக்காரர் காலம் என்று நீங்கள் கேட்ட கேள்வியை நான் தவறாக புரிந்து கொண்டு பதிலளித்திருக்கிறேன்  என்று எடுத்துகொள்கிறேன்.

சும்மா பகிடிக்குத் தான்.... 😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

முப்பது வருசத்தில சிம்பிளா தண்ணிய மாத்தித் தாற ரெக்னோலஜி வந்திடும்.... இப்ப இருக்கிற விலை அதிகமான தொழில் நுட்பம் அப்ப இராது

அப்படி சும்மா கண்ணை மூடி கொண்டு சொல்ல முடியாது. டெக்னோலொஜி சில சமயம் leaps and bounce இல் முன்னேறும், சில சமயம் அப்படியே இருக்கும். 

ஆகவே யாழ்பாணம் சிங்கபூராகும், தண்ணி பிரச்சனை தீர்ந்து விடும் என்று speculation அடிப்படையில், காசை போய் speculative investment செய்து உப்பு காட்டை வாங்குவது அவரவர் விருப்பம்.

ஆனால் ஒரு குடாநாட்டுக்கான பொருளாதாரத்தை இப்படி speculation அடிப்படையில் தீர்மானிக்க முடியாது.

இப்படி எழுதுபவர்கள், தாங்களே போய் ஒரு உப்புகாட்டை வாங்க மாட்டார்கள், சும்மா கற்பனாவாதம் மட்டும் கதைக்கலாம்.

22 minutes ago, valavan said:

100% உண்மை தமிழ்சிறி, 

தேன், தினை, கொள்ளு, கம்பு, குரக்கன்…மட்டுமல்ல ஏதோ சாமை  வரகு கம்பு  எள்ளு(இது மட்டும் தெரியும்) மற்றும் நல்லெண்ணையில் தயாரித்த களிகள் ,சோளம்,ஒடியல் புட்டு   இதுதான் அவர்கள் உணைவாம்,

இதெல்லாம் அமுக்கிபோட்டுத்தான் அந்தகால பழசுகள் 85 வயசுக்கப்புறமும் தலைநிறைய முடியுடனும் நாலைஞ்சுபேரை தூக்கிபோட்டு அடிக்குற வலிமையுடனும், இன்றுள்ள பல நோய்களைபற்றி கேள்விபடாதவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

அதைவிட உடற்பயிற்சியென்று தனியாக செய்யவேண்டியதில்லை, வாகன பழக்கங்கள் குறைந்த அந்நாட்களில் எத்தனை நூறு கிலோ மீற்றருக்கும் நடையாம், கதிர்காமம் வற்றாபளைக்கெல்லாம் நடந்துகூட போவார்களாம், அப்புறம் துலாவில் தண்ணி இறைப்பு, நான் சிறுவயசில் ஒருமுறை அம்மாகூட பக்கத்து ஊருக்கு போனபோது துலாவில் தண்ணி அள்ளபோய் துலாவோட மேல போயிட்டன் ஜிம்முக்கு போறதவிட பலமான பயிற்சி.

, அதைவிட  பாரங்களை தூக்கிகொண்டு சுமப்பது என்று, அந்த உணவுகளையும் அமுக்கிபோட்டு இப்படி உடலைவருத்தி வேலையும் செய்ஞ்சா பொக்சிங் விளையாடுறவங்கள் ரேஞ்சிலதான் உடம்பு  இருக்கும்.

காலையில் தேத்தண்ணி கோப்பி எல்லாம் கிடையாதாம் காலை எழுந்ததும் பழஞ்சோறு தண்ணி சின்ன வெங்காயம்,கொத்தமல்லி தண்ணி , இஞ்சி சாறு என்று ஆகாரங்கள் மட்டும்தானாம்,பழஞ்சோறு தண்ணி கண்பார்வையை கூர்மையாக்கும், உடலை குளிர்மையாக வைத்திருக்கும்  என்று இன்றும் சொல்கிறார்கள், 

அதனால்தான் அந்தகால பழசுகள் மூக்குகண்ணாடி பாவிப்பது குறைவென்று நினைக்கிறேன், இப்போ 5 வயசிலேயே சோடாபுட்டி கண்ணாடி, 65 வயசுக்குள்ளயே உலகின் பாதி வருத்தங்களை சுமந்தபடி மேட்டர் ஓவர் என்று சொல்லிட்டு கிளம்பி லங்காசிறியில் மரண அறிவித்தல் பகுதியில் வரிசையாய் சிரித்துக்கொண்டு போஸ் கொடுக்கிறார்கள் போலும்.

அதோட சின்னவெங்காயமும் இஞ்சிசாறும் சேர்ந்தால்  தசை நார்களில் குளுக்கோசின் அளவு உறிஞ்சப்பட்டு சுகர் எகிறின ஆக்கள்  இன்சுலீன் பயன்படுத்தாமலே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் என்று கூறுகிறார்கள்,  இந்த விளக்கம் எல்லாம்  அவர்கள் அறிந்திருந்திருந்தார்களோ இல்லையோ  மருத்துவ குணம் கொண்ட வாழ்க்கைமுறை வாழ்ந்திருக்கிறார்கள் போலும்.

கிழவி சாகும்வரை பக்கத்தில இருந்து ஆதிகால கதைகளை துருவி துருவி கேட்டுக்கொண்டிருப்பேன், அது ஒரு அருமையான படம் பார்த்ததுபோலிருக்கும், அதைவிட அவ பயன்படுத்திய பல தமிழ் சொற்கள் அறவே வழக்கொழிந்து போய்விட்டது என்பது மேலதிக தகவல்.

 

அருமையான பதிவு வல்லவன்.

என் வாழ்க்கையும், நபர்களையும் நினைவூட்டியது🙏🏾.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாண உல்லாச பயண துறை முதலீடுகள் பேய்த்தனமா அடி வாங்கி இருக்குது போல கிடக்குது.😟

1999ல் கொழும்பில் கொலிடே போனவர், கிறடிட் காட்டை பத்தாயிரம் பவுண்ஸ்க்கு அடித்து வாங்கி விட்ட வீடு, ஒரு இலட்சம் பவுண்ஸ்க்கு எட்டு வருசத்தில வித்தார்.

அதே காசில மேலும் வாங்கிப் போட்டு, கோடிக்கணக்கில பணம் பார்த்தார்.

இன்னும் பல வீடுகள் விக்க ரெடி.... வைரஸ் கெடுத்துக் போட்டுதாம்.

எங்க, எப்ப, எப்படி முதலிட வேணும் என்று தெரியாவிடில்.......  இப்படி புலம்பல்ல தானே முடியும். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

எல்லாவற்றுக்கும் முதல் அங்கு சாதியால் பிரிவதை எப்படி அணை போடலாம் என்பதை விவாதிப்பது நன்று.

கவலைக்குரிய விடயம் என்னவெனில் இந்த விடயங்கள் அதிகரித்துக்கொண்டு போவதுதான்.. 

நீங்கள் இணைத்த linkல் முதலாவது கட்டுரையில் சிறிய பகுதியை வாசித்து கொண்டிருக்கையில் நினைத்தேன் படித்த சமூகம் என்ற கர்வம் அவ்வளவுதான். இதனால் சாதிக்கப்போவது என்ன? 

 

On 6/9/2021 at 19:43, Kadancha said:

இலங்கைத் தீவில் இருந்த வேடுவர்கள் அறிந்திருந்ததை, அறியாமல் எழுதிய பறங்கியின் மமதை  கருது இது.

 

 

மரவள்ளி இலையை இப்படி சமைக்கலாம் என இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன்.. interesting 🤔 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உரையாடலில் ஒரு விடயம் பற்றி மட்டும் என் கருத்து: நான் இலங்கையில் சென்ற முக்கியமான நகரங்களிலெல்லாம் பிரதான மருத்துவமனை நகர மத்தியில் அல்லது மத்திக்கு மிக அண்மையில் இருப்பதைத் தான் கண்டிருக்கிறேன்! இது ஏனென்று யாராவது யோசித்திருக்கிறீர்களா? 

இலங்கையின் மருத்துவமனைப் பாவனையாளர்கள் பெரும்பாலும் வெளிநோயாளர்கள். பொதுப் போக்குவரத்தில் ஏறிப் போய்த் தான் அரச மருத்துவமனைக்குச் செல்வர். வெளிநாடுகளில் இருப்பது போல  சொந்தக்காரை ஓட்டிச் சென்று வாசலில் valet இடம் திறப்பைக் கொடுத்து விட்டு சக்கர நாற்காலியில் குந்தி மருத்துவ மனைக்குள் செல்லும் வழமை இலங்கையில் அரச மருத்துவ மனைகளில் கிடையாது. 

பிறகேன் நகரமத்தியிலிருந்து ஆஸ்பத்திரியை தூர மாற்ற வேண்டும்? ( அடுத்த 30 வருடத்தில் யாழில் தனியார் கார்களின்  தொகை கூடி விடுமா? அல்லது வீதியோடு சமாந்தரமாக ஆஸ்பத்திரி நோக்கி அமெரிக்கா போல light rail போகுமா?)

நான் அறிந்தவரை யாழ் நகரத்தில் 5G கோபுரத்தைக் கட்டவே மக்கள் பயந்து அகற்று என்று குரல் கொடுத்தார்களாம். இத்தகைய சமூகப் பின்னணிகளை முற்றாக மறந்து விட்டு கனவு இராச்சியம் அமைப்பது மன உற்சாகத்திற்கு நல்லதென்றால் செய்யலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

இந்த உரையாடலில் ஒரு விடயம் பற்றி மட்டும் என் கருத்து: நான் இலங்கையில் சென்ற முக்கியமான நகரங்களிலெல்லாம் பிரதான மருத்துவமனை நகர மத்தியில் அல்லது மத்திக்கு மிக அண்மையில் இருப்பதைத் தான் கண்டிருக்கிறேன்! இது ஏனென்று யாராவது யோசித்திருக்கிறீர்களா? 

இலங்கையில் மட்டுமல்ல Justin அண்ணா இங்கேயும் சில மருத்துவமனைகள் நகரின் மத்தியில்தான் உள்ளது ஏனெனில் போக்குவரத்து வசதிக்காக.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இலங்கையில் மட்டுமல்ல Justin அண்ணா இங்கேயும் சில மருத்துவமனைகள் நகரின் மத்தியில்தான் உள்ளது ஏனெனில் போக்குவரத்து வசதிக்காக.. 

மண்டைதீவு, மூன்று மைல் தொலைவில் தானே உள்ளது. முப்பது மைல் இல்லையே...

இலண்டணில், சில சிறிய வைத்திய சாலைகளை மூடியுள்ளனர். செலவைக் கட்டுப்படுத்த...

முப்பது வருடத்தில் உலகநாடுகள் எங்குமே, தமிழர் பரம்பி விடடனரே. பொருளாதார வளம் கூடும் போது, அங்கே முதலீடுகள் நடக்கும். சிங்களவரும் வேலை தேடி வந்து தமிழ் பேசுவதும் நடக்கும்.

நாம் பிறந்த போது வெள்ளையர் இல்லை. எமது தாத்தாமார், வெள்ளையர்  எங்க போறது.... சுதந்திரம் எப்ப வாறது என்று அங்கலாய்திருப்பர்.....

அதே போல, சிங்கள பிடியும் தளரும், ஒருநாள்.

மாற்றம் ஒன்றே மாறாதது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரிடமாவது தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகத்தின் திட்டவரைவு இருக்கா??

இருந்தால் இங்கே  பேசப்படும் பல  விடயங்களுக்கு விடை கிடைக்கும்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Nathamuni said:

மண்டைதீவு, மூன்று மைல் தொலைவில் தானே உள்ளது. முப்பது மைல் இல்லையே...

இலண்டணில், சில சிறிய வைத்திய சாலைகளை மூடியுள்ளனர். செலவைக் கட்டுப்படுத்த...

முப்பது வருடத்தில் உலகநாடுகள் எங்குமே, தமிழர் பரம்பி விடடனரே. பொருளாதார வளம் கூடும் போது, அங்கே முதலீடுகள் நடக்கும். சிங்களவரும் வேலை தேடி வந்து தமிழ் பேசுவதும் நடக்கும்.

நாம் பிறந்த போது வெள்ளையர் இல்லை. எமது தாத்தாமார், வெள்ளையர்  எங்க போறது.... சுதந்திரம் எப்ப வாறது என்று அங்கலாய்திருப்பர்.....

அதே போல, சிங்கள பிடியும் தளரும், ஒருநாள்.

மாற்றம் ஒன்றே மாறாதது.

நல்ல விடயம் நாதமுனி அண்ணா!!

ஆனால் எனக்குள் இருக்கும் கேள்வி இதுதான் .. வேரூன்றி வளர்ந்த ஒன்றை பிடுங்கி இன்னொரு இடத்தில் வைப்பதற்கும் …அதை பிடுங்காமல் மேலும் உரமூட்டி வளர்ப்பதற்கும் என்ன வித்தியாசம்? 

செலவழிக்கும் நேரத்தையும் பணத்தையும் வேறு துறைகளில் முதலீடு செய்யலாமே? 

யாழ்ப்பாண நகர் மத்தியில் இடவசதி குறைவு என்றால் வைத்திய சாலையை ஏன் மாற்றவேண்டும்.. மண்டைதீவில் புதிதாக ஒரு வணிக கட்டிட தொகுதியை கட்டி.. அதிகஅத்தியாவசியமில்லாத கடைகளை அங்கே அப்புறப்படுத்தினால் நகரில் இடநெருக்கடியோ போக்குவரத்து நெருக்கடியோ ஏற்படாது.. 

தண்ணீரையும் நன்னீரக்கிவிடலாமே ஏனெனில் வைத்தியசாலையை மாற்றி இலாபம் உழைக்கமுடியாது.. வியாபாரம் என்றால் முதலாளிகள் எப்படியும் தண்ணிக்கணக்கையும் விலைப்பட்டியலில் சேர்த்துவிடுவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நல்ல விடயம் நாதமுனி அண்ணா!!

ஆனால் எனக்குள் இருக்கும் கேள்வி இதுதான் .. வேரூன்றி வளர்ந்த ஒன்றை பிடுங்கி இன்னொரு இடத்தில் வைப்பதற்கும் …அதை பிடுங்காமல் மேலும் உரமூட்டி வளர்ப்பதற்கும் என்ன வித்தியாசம்? 

செலவழிக்கும் நேரத்தையும் பணத்தையும் வேறு துறைகளில் முதலீடு செய்யலாமே? 

யாழ்ப்பாண நகர் மத்தியில் இடவசதி குறைவு என்றால் வைத்திய சாலையை ஏன் மாற்றவேண்டும்.. மண்டைதீவில் புதிதாக ஒரு வணிக கட்டிட தொகுதியை கட்டி.. அத்தியாவசியமில்லாத கடைகளை அங்கே அப்புறப்படுத்தினால் நகரில் இடநெருக்கடியோ போக்குவரத்து நெருக்கடியோ ஏற்படாது.. 

தண்ணீரையும் நன்னீரக்கிவிடலாமே ஏனெனில் வைத்தியசாலையை மாற்றி இலாபம் உழைக்கமுடியாது.. வியாபாரம் என்றால் முதலாளிகள் எப்படியும் தண்ணிக்கணக்கையும் விலைப்பட்டியலில் சேர்த்துவிடுவார்கள்

இருக்கும் வைத்தியசாலை, நான் நிணைப்பது தவறில்லை எனில், பிரிட்டிஸ் காலத்தையது.

நோயாளிகளை வைத்துக்கொண்டு தரமுயர்த முடியாது.

நவீன வசதிகள் கொண்ட வைத்தியசாலை எதிர்காலத்தில் தேவை.

நான் சொல்வது, இருபது முப்பது வருட கனவு. இன்றைய நிலையில் பார்காதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நல்ல விடயம் நாதமுனி அண்ணா!!

ஆனால் எனக்குள் இருக்கும் கேள்வி இதுதான் .. வேரூன்றி வளர்ந்த ஒன்றை பிடுங்கி இன்னொரு இடத்தில் வைப்பதற்கும் …அதை பிடுங்காமல் மேலும் உரமூட்டி வளர்ப்பதற்கும் என்ன வித்தியாசம்? 

அதற்கு செலவழிக்கும் நேரத்தையும் பணத்தையும் வேறு துறைகளில் முதலீடு செய்யலாமே? 

யாழ்ப்பாண நகர் மத்தியில் இடவசதி குறைவு என்றால் வைத்திய சாலையை ஏன் மாற்றவேண்டும்.. மண்டைதீவில் புதிதாக ஒரு வணிக கட்டிட தொகுதியை கட்டி.. கடைகளை அங்கே அப்புறப்படுத்தினால் நகரில் இடநெருக்கடியோ போக்குவரத்து நெருக்கடியோ ஏற்படாது.. 

தண்ணீரையும் நன்னீரக்கிவிடலாமே

யாழ் வைத்தியசாலையை 

பலாலி விமானத்தளத்தை

பற்றியெல்லாம்  அடிக்கடி  பேசப்படுகிறது தான்

அப்படியென்றால் அவை சரியான  இடங்களில்  இல்லை  என்று  தானே அர்த்தம்???

கடல் நீரை நன்னீராக்குதலை பற்றியும் பேசப்படுகிறது

யானையை  கட்டி  தீனி  போட  எவரும்  தயாரில்லை  என்பதே  பட்டறிந்த பாடம்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

யாழ்பாண உல்லாச பயண துறை முதலீடுகள் பேய்த்தனமா அடி வாங்கி இருக்குது போல கிடக்குது.😟

1999ல் கொழும்பில் கொலிடே போனவர், கிறடிட் காட்டை பத்தாயிரம் பவுண்ஸ்க்கு அடித்து வாங்கி விட்ட வீடு, ஒரு இலட்சம் பவுண்ஸ்க்கு எட்டு வருசத்தில வித்தார்.

அதே காசில மேலும் வாங்கிப் போட்டு, கோடிக்கணக்கில பணம் பார்த்தார்.

இன்னும் பல வீடுகள் விக்க ரெடி.... வைரஸ் கெடுத்துக் போட்டுதாம்.

எங்க, எப்ப, எப்படி முதலிட வேணும் என்று தெரியாவிடில்.......  இப்படி புலம்பல்ல தானே முடியும். 😁

கருத்துக்கு கருத்து வைக்க முடியாவிட்டால் அடுத்து இதுதானே🤣.

🤣 நான் தமிழன் ஐயா.

11 plus பிள்ளைகளுக்கு படிக்க உதவி செய்தனான் என்றதும் அதை வைத்து நல்ல காசு பாக்கும் டியூசன் டீச்சராக என அங்கலாய்க்கும், எங்கேயும், எமது சாவிலும் லாபம் பார்த்த இனத்தவன் அல்ல🤣.

தொப்பி அளவுதானே?

நான் அது பற்றிய திரியிலேயே சொல்லியுள்ளேன் அது ஒரு ethical investment. அதன் 4து objective தான் லாபம். அதில் எனக்கு பல புத்தி கொள்முதல் இருந்தது. சிலருக்கு உதவ முடிந்த, ஒரு மரபுரிமையை பாதுகாத்த “மன லாபம்” இருக்கிறது.

நான் லண்டனில் இருந்து கூகிள் மேப்பில் மண்டைதீவுக்கு பாலம், கச்சைதீவுக்கு தண்ணீர்குழாய் பதிக்கும் fantasist அல்ல, முடிந்தளவு செயல் செய்தவன் என்ற சின்ன பெருமிதமும் இருக்கிறது😎.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

யாழ் வைத்தியசாலையை 

பலாலி விமானத்தளத்தை

பற்றியெல்லாம்  அடிக்கடி  பேசப்படுகிறது தான்

அப்படியென்றால் அவை சரியான  இடங்களில்  இல்லை  என்று  தானே அர்த்தம்???

கடல் நீரை நன்னீராக்குதலை பற்றியும் பேசப்படுகிறது

யானையை  கட்டி  தீனி  போட  எவரும்  தயாரில்லை  என்பதே  பட்டறிந்த பாடம்???

அடிக்கடி பேசப் படுகிறது என்றால் இப்போது இருக்கிற இடம் சரியில்லை என்ற அர்த்தம் கொள்வது தலைகீழ் அணுகுமுறையாகத் தெரிகிறது! 

சரி, அப்படியே வைத்துக் கொண்டாலும், எது சரியான இடம் என்று சுட்டிக் காட்டும் போது கொஞ்சம் யோசிக்க வேண்டுமல்லவா? 
உதாரணமாக: அடுத்த 30 ஆண்டுகளில் மண்டைதீவும் ஏனைய தீவுகளும் அப்படியே இருக்குமா அல்லது மாலைதீவுகள் போல கடலின் கீழே போகுமா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, விசுகு said:

யாரிடமாவது தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகத்தின் திட்டவரைவு இருக்கா??

இருந்தால் இங்கே  பேசப்படும் பல  விடயங்களுக்கு விடை கிடைக்கும்??

லண்டனில் ரெஜி வந்த புதிதில், ஒரு கூட்டத்தில் ஒரு நகல் காட்டினார். இப்போ பதிவு இருக்குமா? @நன்னிச் சோழன் தேடிப்பார்க்கவும். 

அதில் ஒரு குறிப்பிட்ட திட்டம் முறிகண்டியை மையமாவைத்து - அற்புதமான திட்டம். கட்டாயம் உங்களையும் அணுகி இருப்பார்கள் என நினகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

அடிக்கடி பேசப் படுகிறது என்றால் இப்போது இருக்கிற இடம் சரியில்லை என்ற அர்த்தம் கொள்வது தலைகீழ் அணுகுமுறையாகத் தெரிகிறது! 

சரி, அப்படியே வைத்துக் கொண்டாலும், எது சரியான இடம் என்று சுட்டிக் காட்டும் போது கொஞ்சம் யோசிக்க வேண்டுமல்லவா? 
உதாரணமாக: அடுத்த 30 ஆண்டுகளில் மண்டைதீவும் ஏனைய தீவுகளும் அப்படியே இருக்குமா அல்லது மாலைதீவுகள் போல கடலின் கீழே போகுமா?  

மண்டைதீவு அல்ல

ஏன்  யாழ்ப்பாணம்   மட்டுமல்ல

இலங்கையே கடலுக்குள்  தான்  போகப்போகிறது???

காலங்கள்  வேண்டுமானால்  கொஞ்சம் முன்னுக்கு  பின்  ஆகலாம்?

3 minutes ago, goshan_che said:

லண்டனில் ரெஜி வந்த புதிதில், ஒரு கூட்டத்தில் ஒரு நகல் காட்டினார். இப்போ பதிவு இருக்குமா? @நன்னிச் சோழன் தேடிப்பார்க்கவும். 

அதில் ஒரு குறிப்பிட்ட திட்டம் முறிகண்டியை மையமாவைத்து - அற்புதமான திட்டம். கட்டாயம் உங்களையும் அணுகி இருப்பார்கள் என நினகிறேன்.

என்னிடம் அந்த  புத்தகம் வீட்டில்  இருக்கும்

தேடி எடுக்கலாம்

என்ன பார்த்தால் மேலும் மேலும் கவலை  தான்  அதிகரிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தல்ல, மறுகருத்து  வைக்க....

புலம்பல்.....

இத்திரியில் வைக்கப்பட்ட கருத்தே நான் மேல்கோள் காட்டினேன் அன்றி, பழைய திரிக்கதையை அல்ல.

அப்புறம்.... தனிப்பட்ட தாக்குதல்..... இதுதானே வழமை.....

நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கவேண்டும்.... அவநம்பிக்கையுடன் அல்ல...

தணணீர் தேவை தான்..... அதனையே சொல்லி கனவை பொசுக்க வேண்டாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, விசுகு said:

யாழ் வைத்தியசாலையை 

பலாலி விமானத்தளத்தை

பற்றியெல்லாம்  அடிக்கடி  பேசப்படுகிறது தான்

அப்படியென்றால் அவை சரியான  இடங்களில்  இல்லை  என்று  தானே அர்த்தம்???

கடல் நீரை நன்னீராக்குதலை பற்றியும் பேசப்படுகிறது

யானையை  கட்டி  தீனி  போட  எவரும்  தயாரில்லை  என்பதே  பட்டறிந்த பாடம்???

இது பேசப்படுவது இப்படி சில கற்பனாவதிகளால்தான். 

பலாலி அமைவிடம் பற்றி முன்பே ஒரு கட்டுரை வந்தது, காற்றின் போக்கு, தர அமைப்பு, வெள்ள அபாயம் இப்படி பலதை கொண்டே மிகவும் தாழ் நில பரப்பான யாழில், மேட்டு நிலத்தில் இது அமைய பெற்றது.

அப்படி இருந்தும் அண்மையில் ஒரு புயலில் வெள்ளகாடாகியது. 

கூடவே காங்கேசன் துறை ரயில், பஸ் துறைமுகம் எல்லாம் சேர, வெளிநாட்டில் இருப்பது போல் ஒரு transport hub ஆக வரகூடிய அமைவும் உண்டு. தீவுகள், வடமராட்சி, தென்மராட்சி, நகரம் எங்கும் இருந்தும் வருவது இலகு, சமதூரம்.

இதை தூக்கி எதோ ஒரு தீவு பகுதியில் வைத்தால் - நில அமைவு பற்றி உங்களுக்கு நான் சொல்ல தேவையில்லை.

பிறகு, ரோடு, தண்ணீர், ரயில் எல்லாம் அதுக்கு தனியா இங்கே இருந்து போக வேண்டும்.

நாடு போற போக்கில் இந்த கதை எல்லாம் அடுத்த 30 ஆண்டில் சாத்தியமா?🤣.

ஆங்கிலத்தில் இப்படி கதைப்பர்களிடம் சொல்வார்கள். Let me know what you are using என்று. அப்படி ஏதும் மூலிகைகை அடித்து விட்டு பாலம் கட்டுகிறார்களோ தெரியவில்லை🤣.

17 minutes ago, விசுகு said:

என்னிடம் அந்த  புத்தகம் வீட்டில்  இருக்கும்

தேடி எடுக்கலாம்

என்ன பார்த்தால் மேலும் மேலும் கவலை  தான்  அதிகரிக்கும்

உண்மைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

மண்டைதீவு அல்ல

ஏன்  யாழ்ப்பாணம்   மட்டுமல்ல

இலங்கையே கடலுக்குள்  தான்  போகப்போகிறது???

காலங்கள்  வேண்டுமானால்  கொஞ்சம் முன்னுக்கு  பின்  ஆகலாம்?

மாலைதீவு கடலில் மூழ்கப்போகிறது..... அங்கே விமான நிலையம், கோட்டல்கள் அமைத்தவர்கள், என்ன மூலிகையை உபயோகித்திருப்பார்கள்? 🤪 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

மாலைதீவு கடலில் மூழ்கப்போகிறது..... அங்கே விமான நிலையம், கோட்டல்கள் அமைத்தவர்கள், என்ன உபயோகித்திருப்பார்கள்? 🤪

யாமறியோம்  பராபரனே??🤣

ஆனால் சிங்கப்பூரில் நின்றபோது

அதுவும் கடலுக்குள்  போகப்போவதால்

தாங்கள்  முந்திக்கொண்டு தற்பொழுதே

கடலுக்குள் வாழ முயலப்போவதாக சொன்னார்கள்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விசுகு said:

மண்டைதீவு அல்ல

ஏன்  யாழ்ப்பாணம்   மட்டுமல்ல

இலங்கையே கடலுக்குள்  தான்  போகப்போகிறது???

காலங்கள்  வேண்டுமானால்  கொஞ்சம் முன்னுக்கு  பின்  ஆகலாம்?

இது சரியான பார்வையாக தெரியவில்லை அண்ணை. மாலை தீவில் வேறு வழியில்லை. அவர்கள் இருக்கும் இடத்தில் கட்டினார்கள். அப்போ புவி வெப்பமாதல், கடல் நீர் உயர்தல் பற்றி அதிகம் யாரும் அறிந்திருக்கவில்லை.

எது எப்படியோ, இதெல்லாம் யதார்ததுக்கு எவ்வளவு புறம்பானவை என்பது உங்களுக்கும் கட்டாயம் தெரியும். 

இங்கே எழுதப்படும் சிலதை யாழ்பாணத்தில் இருந்து வாசிக்கும் யாரும் வாயால் சிரிக்க மாட்டார்கள்🤣.

7 minutes ago, விசுகு said:

யாமறியோம்  பராபரனே??🤣

ஆனால் சிங்கப்பூரில் நின்றபோது

அதுவும் கடலுக்குள்  போகப்போவதால்

தாங்கள்  முந்திக்கொண்டு தற்பொழுதே

கடலுக்குள் வாழ முயலப்போவதாக சொன்னார்கள்???

ஒட்டுமொத்த ஜகார்தாவையே போனியோ தீவுக்கு இடம்மாற்ற போகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா ஒரு ஆஸுபத்திரிக்கா இவ்வளவு சண்டை.

அண்ணைக்கு ஒரு ஆஸ்பத்திரி மண்டைதீவிலை

மிச்ச ஆட்களுக்கு யாழ் நகர் மத்தியிலே,

வேற ஆட்களுக்கு எங்கை வேணுமோ கட்டுங்க.

🤣🤣🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்றைய தினம் எனும் திரியில் கள உறுப்பினர்களுக்கும் முக்கியமாக @goshan_che அவர்களுக்கும் நிர்வாகத்தினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் இடம் பெற்ற கருத்தாடலில் கள உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு நிர்வாகம் தனது வருத்தத்தினைத் தெரிவிக்கின்றது.
    • இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.