Jump to content

துவளமெல்லாம் தீந்தமிழின் இனிமை பரவ வேண்டும்


Recommended Posts

விடிகின்ற விடியலிலே விரைவு வேண்டும் நமது
வீதியிலே சுதந்திரமாய் தலை நிமிர்த்தித் திரிய வேண்டும்
பறி போகின்ற நிலத்தினையும் காக்க வேண்டும் இப்
பாரினிலே தமிழன் புகழ் ஓங்க வேண்டும் 

இழுக்கல்ல போராட்டம் தெளிதல் வேண்டும்
இகல்வெல்ல ஒன்றிணைந்தே முயல வேண்டும்
விழுகின்ற தலைமுறையும் வாழ வேண்டும்
விடியலிலே புதுதேசம் மலர வேண்டும் 

சொந்தத்தில் அறிவுடைமை வளர வேண்டும்
சோம்பலுற்ற அடிமை நிலை மாற்ற வேண்டும்
சொந்தங்கள் தமிழ்மக்கள் எனும் எண்ணம் வேண்டும்
சோர்வின்றி இனங்காக்க துடிக்க வேண்டும் 

வந்தேறிக் கூட்டங்கள் ஓட வேண்டும்
வக்கற்ற ஆட்சியினை மாற்ற வேண்டும்
குத்தகங்கள் செய்வோரை களைதல் வேண்டும்
கூத்தாடிக் கூட்டங்கள் மாய வேண்டும். 

அறிவிழந்த மனிதரென்றே எம்மை எண்ணி நிற்கும்
அகந்தை பிடித்தோர் வழி காட்டி நிற்கும்
தறிகெட்டோரின் தகைமை கெட்ட ஆட்சியினிலே
தம்மக்கள்  தம்நிலமென்ற எண்ண மின்றி நம்கழுத்தை 
முறிக்கின்ற மூடர் தனை ஒழிக்க வேண்டும் 

மாற்றத்தை செய்ய நன்றே
முயல வேண்டும்
மாண்பு மிகு ஆட்சி தனை
அமைக்க வேண்டும்
திக்கெட்டும் நம் தமிழர் புகழ் திகழ வேண்டும்
துவளமெங்கும்
திகட்டாத தீந்தமிழ் இனிமை திகட்டிப் பரவ வேண்டும்!

-தமிழ்நிலா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ்நிலா said:

விடிகின்ற விடியலிலே விரைவு வேண்டும் நமது
வீதியிலே சுதந்திரமாய் தலை நிமிர்த்தித் திரிய வேண்டும்
பறி போகின்ற நிலத்தினையும் காக்க வேண்டும் இப்
பாரினிலே தமிழன் புகழ் ஓங்க வேண்டும் 

இழுக்கல்ல போராட்டம் தெளிதல் வேண்டும்
இகல்வெல்ல ஒன்றிணைந்தே முயல வேண்டும்
விழுகின்ற தலைமுறையும் வாழ வேண்டும்
விடியலிலே புதுதேசம் மலர வேண்டும் 

சொந்தத்தில் அறிவுடைமை வளர வேண்டும்
சோம்பலுற்ற அடிமை நிலை மாற்ற வேண்டும்
சொந்தங்கள் தமிழ்மக்கள் எனும் எண்ணம் வேண்டும்
சோர்வின்றி இனங்காக்க துடிக்க வேண்டும் 

வந்தேறிக் கூட்டங்கள் ஓட வேண்டும்
வக்கற்ற ஆட்சியினை மாற்ற வேண்டும்
குத்தகங்கள் செய்வோரை களைதல் வேண்டும்
கூத்தாடிக் கூட்டங்கள் மாய வேண்டும். 

அறிவிழந்த மனிதரென்றே எம்மை எண்ணி நிற்கும்
அகந்தை பிடித்தோர் வழி காட்டி நிற்கும்
தறிகெட்டோரின் தகைமை கெட்ட ஆட்சியினிலே
தம்மக்கள்  தம்நிலமென்ற எண்ண மின்றி நம்கழுத்தை 
முறிக்கின்ற மூடர் தனை ஒழிக்க வேண்டும் 

மாற்றத்தை செய்ய நன்றே
முயல வேண்டும்
மாண்பு மிகு ஆட்சி தனை
அமைக்க வேண்டும்
திக்கெட்டும் நம் தமிழர் புகழ் திகழ வேண்டும்
துவளமெங்கும்
திகட்டாத தீந்தமிழ் இனிமை திகட்டிப் பரவ வேண்டும்!

-தமிழ்நிலா.

ஈழத்தமிழர் புண்ணியத்தில் பரவிவிட்டது....

Link to comment
Share on other sites

4 hours ago, Nathamuni said:

ஈழத்தமிழர் புண்ணியத்தில் பரவிவிட்டது....

உண்மை தான்...மிக்க நன்றிகள் சகோதரன்🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டும் வேண்டும் என்று வரும் கவிதையில் 

வேண்டியவை யாவும் நிகழ்காலத்தில் கிட்டாதாயினும் 

எதிர்காலத்தில் கிட்டிட வேண்டும்.........!  👍

 

பகிர்வுக்கு நன்றி சகோதரி.......!

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

வேண்டும் வேண்டும் என்று வரும் கவிதையில் 

வேண்டியவை யாவும் நிகழ்காலத்தில் கிட்டாதாயினும் 

எதிர்காலத்தில் கிட்டிட வேண்டும்.........!  👍

 

பகிர்வுக்கு நன்றி சகோதரி.......!

மிக்க நன்றிகள் சகோதரன்🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2021 at 22:39, தமிழ்நிலா said:

விடிகின்ற விடியலிலே விரைவு வேண்டும் நமது
வீதியிலே சுதந்திரமாய் தலை நிமிர்த்தித் திரிய வேண்டும்
பறி போகின்ற நிலத்தினையும் காக்க வேண்டும் இப்
பாரினிலே தமிழன் புகழ் ஓங்க வேண்டும் 

இழுக்கல்ல போராட்டம் தெளிதல் வேண்டும்
இகல்வெல்ல ஒன்றிணைந்தே முயல வேண்டும்
விழுகின்ற தலைமுறையும் வாழ வேண்டும்
விடியலிலே புதுதேசம் மலர வேண்டும் 

சொந்தத்தில் அறிவுடைமை வளர வேண்டும்
சோம்பலுற்ற அடிமை நிலை மாற்ற வேண்டும்
சொந்தங்கள் தமிழ்மக்கள் எனும் எண்ணம் வேண்டும்
சோர்வின்றி இனங்காக்க துடிக்க வேண்டும் 

வந்தேறிக் கூட்டங்கள் ஓட வேண்டும்
வக்கற்ற ஆட்சியினை மாற்ற வேண்டும்
குத்தகங்கள் செய்வோரை களைதல் வேண்டும்
கூத்தாடிக் கூட்டங்கள் மாய வேண்டும். 

அறிவிழந்த மனிதரென்றே எம்மை எண்ணி நிற்கும்
அகந்தை பிடித்தோர் வழி காட்டி நிற்கும்
தறிகெட்டோரின் தகைமை கெட்ட ஆட்சியினிலே
தம்மக்கள்  தம்நிலமென்ற எண்ண மின்றி நம்கழுத்தை 
முறிக்கின்ற மூடர் தனை ஒழிக்க வேண்டும் 

மாற்றத்தை செய்ய நன்றே
முயல வேண்டும்
மாண்பு மிகு ஆட்சி தனை
அமைக்க வேண்டும்
திக்கெட்டும் நம் தமிழர் புகழ் திகழ வேண்டும்
துவளமெங்கும்
திகட்டாத தீந்தமிழ் இனிமை திகட்டிப் பரவ வேண்டும்!

-தமிழ்நிலா.

பகிர்வதற்கு நன்றிகள்..💐

Link to comment
Share on other sites

27 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிர்வதற்கு நன்றிகள்..💐

மிக்க நன்றிகள் அண்ணா🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றத்தை செய்ய நன்றே
முயல வேண்டும்
மாண்பு மிகு ஆட்சி தனை
அமைக்க வேண்டும்

 

நம் தாய் நாட்டிற்ற்கு இது நிகழ வேண்டும். மக்கள் மனம் மகிழ வேண்டும். 

Link to comment
Share on other sites

20 hours ago, நிலாமதி said:

மாற்றத்தை செய்ய நன்றே
முயல வேண்டும்
மாண்பு மிகு ஆட்சி தனை
அமைக்க வேண்டும்

 

நம் தாய் நாட்டிற்ற்கு இது நிகழ வேண்டும். மக்கள் மனம் மகிழ வேண்டும். 

உண்மை தான்...மிக்க நன்றிகள் அக்கா🙏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.