Jump to content

பிரபல சிங்கள பாடகர் சுனில் பெரேரா காலமானார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல சிங்கள பாடகர் சுனில் பெரேரா காலமானார்!

September 6, 2021

Sunil.jpg?resize=960%2C640

 

பிரபல சிங்கள பாடகரும் இசைக்கலைஞருமான சுனில் பெரேரா காலமானார்.

68 வயதான இவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து அண்மையில் வீடு திரும்பியிருந்தார். இந்த நிலையில், நியூமோனியா நிலை காரணமாக நேற்று (05) மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (06.09.21) அதிகாலை உயிரிழந்துள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://globaltamilnews.net/2021/165585

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். 
அருமையான பைலா பாடல்களுக்கு சொந்தக்காரர். 

இவரிம் குருமிட்டோ பாலல் இப்பொழுதும் கேட்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுகமாகி வீடு திரும்பியுள்ளார் என்று செய்தி பார்த்தேன்.
அதற்கிடையில் இப்படியா.
ஆழ்ந்த இரங்கல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள். 

அருமையான, எனக்கு மிகவும் பிடித்த பாடகர். 

அரசியலை நையாண்டி செய்ய என்றும் பின்னிக்காதவர்.

ஆனால் இனப்பிரச்சினையில் இவரும் ஒரு மெளனச்சாட்சிதான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

கொத்தமல்லியின் மகிமையை கூறும் நகைச்சுவையான பாடலை சிங்களத்திலும், தமிழிலும் பாடியுள்ளார். 

குடிப்போம் கொத்தமல்லி எதுக்கு விஸ்கி பிராண்டி.

 

Link to comment
Share on other sites

இன்றும் சிங்களப் பாடல்களை கேட்டு ரசிப்பதற்கு முதல் காரணமாக அமைந்தவர். அவரின் குருமிட்டோ பாடலில் இருந்து தான் நான் சிங்களப் பாடல்களை ரசிக்க ஆரம்பித்து அது 'மெனிக்கே மகே ஹித்த' பாடல் வரைக்கும் தொடர்கின்றது.

அதிகாரத்துக்கு எதிராக எப்போதுமே துணிச்சலுடன் குரல் கொடுத்தவர். அவர் பாடல்களின் அடிப்படையே அன்றைய அரசியலின் மீதான, நாட்டின் போக்கு மீதான நையாண்டி தான் இருக்கும். 

27 minutes ago, goshan_che said:

 

ஆனால் இனப்பிரச்சினையில் இவரும் ஒரு மெளனச்சாட்சிதான்.

 

அப்படிச் ஒரே அடியாய் சொல்ல முடியாது. 2007 இன் பின், சிங்கள மக்கள் யுத்த வெற்றியின் போதை தலைக்கேறி உச்சத்தில் இருந்த காலத்தில் இவர் ஒரு ஐரோப்பிய நாடொன்றில் (லண்டன் அல்லது இத்தாலி என நினைக்கின்றேன்) இடம்பெற்ற அவரது இசை நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் மக்களுக்கு சுயாட்சி /சுய நிர்ணய உரிமையுடனான தீர்வு அவசியம் என்ற விதத்தில் ஒரு கருத்தைச் சொல்லப் போய் அவ் நாட்டில் வாழ்ந்த புலம்பெயர்ந்த சிங்கள மக்கள் கூட்டத்தால் கூச்சலுக்குள்ளாகி நிகழ்ச்சியை சற்று இடை நிறுத்த வேண்டி வந்தது. பின்னர் அவர் பயணத்தை முடித்த பின் இலங்கைக்கு வந்த பின் கடும்போக்காளர்களால் விமர்சிக்கப்பட்டவர்.

சென்று வா இசைக் கலைஞனே. சிங்கள பைலா பாடல்கள் இருக்கும் வரைக்கும் உன் பெயர் நிலைத்து இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நிழலி said:
1 hour ago, goshan_che said:

 

அப்படிச் ஒரே அடியாய் சொல்ல முடியாது. 2007 இன் பின், சிங்கள மக்கள் யுத்த வெற்றியின் போதை தலைக்கேறி உச்சத்தில் இருந்த காலத்தில் இவர் ஒரு ஐரோப்பிய நாடொன்றில் (லண்டன் அல்லது இத்தாலி என நினைக்கின்றேன்) இடம்பெற்ற அவரது இசை நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் மக்களுக்கு சுயாட்சி /சுய நிர்ணய உரிமையுடனான தீர்வு அவசியம் என்ற விதத்தில் ஒரு கருத்தைச் சொல்லப் போய் அவ் நாட்டில் வாழ்ந்த புலம்பெயர்ந்த சிங்கள மக்கள் கூட்டத்தால் கூச்சலுக்குள்ளாகி நிகழ்ச்சியை சற்று இடை நிறுத்த வேண்டி வந்தது. பின்னர் அவர் பயணத்தை முடித்த பின் இலங்கைக்கு வந்த பின் கடும்போக்காளர்களால் விமர்சிக்கப்பட்டவர்.

இதை நான் அறிந்திருக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்........! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.