Jump to content

திருமண வாழ்த்து!


Recommended Posts

ug0d0688pomz9.gif

அன்புடன் அனிதா

இணையத்தில் யாழ்மீட்டி

ரீங்காரம் செய்து - உங்கள்

இதயத்தை பகிர்ந்துகொண்ட

எம்வீட்டு குருவிகளே!

எப்போது ஒன்று சேர்வோம்?

எப்படி ஒன்று சேர்வோம்?

இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள்

இனிமேல் உமக்கு இல்லை!

உணர்வுகளால் நேற்றுவரை

உரையாடிய காதல்ஜோடி

இன்றிலிருந்து என்றென்றும்

உடலாலும் இணைகிறது!

உள்ளத்தில் நீர் சுமந்த

உண்மையான அன்பிற்காய்

திருவிழா செய்கின்றோம்!

திருமணமாம் உமக்கின்று!

இதயத்தின் உரசல்களில்

உருவான ஒளித் தீப்பிழம்பு

விண்வெளியில் பயணித்து

கண்மணிகள் கதைசொல்லும்!

இணையத்தில் சுழியோடி

முத்தான காதல் செய்த

மணி ரசிகை ஓருயிராய்

வாழ்க பல்லாண்டு!

அன்புடன் கலைஞன்

முகமூடிக் கருத்தாடல்..

அகம் தொட்ட நிகழ்வு!

இணைபிரியாப் பிணைவு!

இது கருத்தொத்த இணைவு!

கால்ரனில்(?) பொறியியல்!

மனதெல்லாம் தமிழ் இயல்!

படைப்பாளி 'மணி' காண

மனதிற்குள் ஒரு மின்னல்!

உடலிற்கு லண்டனில் முகவரி!

ஆன்மா யாழ் கள விவாதி!

அம்மணி அலைவரிசை அறிவிக்க

இம்மணி மனதிற்குள் குளிர்காற்று!

பரீட்சையின் முடிவிற்கு மாதங்கள் செல்லும்!

கல்யாணத் தேதி அதன்பின்தான் கூடும்!

பல்லாயிரம் மைல்கள் உடல்களைப் பிரிக்க

யாழ் களம் மனங்களை வருடியே கொடுக்கும்!

வீட்டார் அறிந்தாரா இல்லை யாழ் களம் தான் முந்தியதா?

காதல் துளிர்த்ததனை முதலிலே யாரறிந்தார்?

பெண்வீட்டார் ஒருபக்கம்! ஆண்வீட்டார் மறுபக்கம்!

மணவறையின் நடைமுறையில் யாழ் வீட்டார் புதுப் பழக்கம்!

வாழ்த்துக்கள் உறவுகளே!

வாழ்த்துக்கள் உங்களிற்கு!

வாழ்த்துக்கள் உறவுகளே!

வாழ்த்துக்கள் எங்களது!

அன்புடன் இன்னுமொருவன்

கண்டதும் காதல்!

காவியக் காதல்!

ஒரு தலைக் காதல்!

ஓ.. இந்த வரிசையில்

புதிதாக கருத்தினில்

காதல்கொண்டு இணைந்திட்ட

மாணிக்கவாசகன் இரசிகை...

இந்த முகங்களுள் மறைந்துள்ள

இதயங்கள் இன்றுபோல்

என்றென்றும் இணைந்து

வளமுடன் வாழ்ந்திட

வாழ்த்துகின்றோம் நாங்கள்!

அன்புடன் சாணக்கியன் மற்றும் குடும்பத்தினர்

உள்ளம் இணைந்த இல்லம்

என்றும் இனிக்கும் வெல்லம்!

காதல் கரங்கள் சேர்ந்தால் - வாழ்வே

வசந்தம் வீசும் தென்றல்!

வானும் நிலவும் போல!

இணைந்து வாழ வேண்டும்!

காலச்சுழற்சி கொள்ளும் நிலவு

வானுள் கரைந்தும் வளரும்!

இன்பம் மட்டும் கூட்டி!

இதய இராகம் மீட்டி! எந்த

நிலையின் போதும் மாறா

அன்பை மட்டும் ஊட்டி!

வாழ வேண்டும் நீங்கள்

வாழ்த்துகின்றோம் நாங்கள்!

தமிழும் சுவையும் போல!

கவியும் இசையும் போல!

யாழ்மீட்டும் இசையின் ஊடே

வாழ்த்துகின்றேன் வாழ்க!

சொர்க்கம் மண்ணில் கொண்டு

சொந்தங்களே நீவீர் வாழ்க!

பெற்றோர் உற்றோர் சுற்றம்

போற்றும் வண்ணம் வாழ்க!

இங்கிருந்து கொண்டே தங்கை

வாழ்த்துகின்றேன் வாழ்க!

இரசனை கொண்ட இரசிகை!

கைப்பிடித்த மணியும் என்றும்..

இணைந்தே வாழ்க! இல்லறத்தை

இ(ணைந்)னிதே வெல்க!!!

அன்புடன் தமிழ்தங்கை

மணிவாசகன் ரசிக்க ரசிகையோ?

மணி வாசிக்க ரசிக்க ரசிகையோ?

ரசிகமணியிணைந்தே மானுடம் ரசிக்க

மணி மணியான எழுத்தில்

ரசிகையும் ரசிக்க கவிதை எழுத

ரகசியம் பேசி கூடி கூழாவி

கூற்றுதைத்த கொற்றவன் ஆசியுடன்

குழந்தை செல்வத்துடன்

குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!

அன்புடன் சிவராசா

எத்தனை இன்பம் இந்த நிமிடத்திலே!

கொட்டும் மழையும் பூவாய் பொழிய

அத்தனை தேவர்களும் ஒருங்கே வாழ்த்த

உங்கள் திருமண வாழ்க்கை

மகிழ்வாய் அமைய வாழ்த்துகிறோம்!

அன்புடன் கர்ணன் மற்றும் கள உறவுகள்

ஆன்றோர் வாழ்த்துரைக்க

ஆயிரமாய் பூச்சொரிய

மங்கை திருமகளாய்

மணவறையில் காத்திருக்க

நாதசுர மேளங்கள்

நல்லதொரு வாழ்த்திசைக்க

நங்கை திருக்கழுத்தில்

நம்பி அவன் நாண்பூட்ட

கட்டியவன் கட்டழகை

கடைக்கண்கள் அளவெடுக்க

மெட்டியவன் பூட்டிவிட

மெல்லியலாள் முகம் சிவக்க

இவள் பாதியிவன் பாதி

என்றிணைந்திட்ட மணவாழ்வில்

இல்லறத்தின் இலக்கணமாய்

இரு மனமும் வாழியவே!

திருமணத்தின் இன்பங்கள்

திகட்டாது தொடர்ந்து வர

ஓருயிராய் ஆருயிராய்

மணமக்கள் வாழியவே!

அன்புடன் வெற்றிவேல்

வாழ்த்துக்கள் சொல்ல

வார்த்தைகள் தேடி

வாசல்வரை வந்துநின்றேன்!

நீங்கள்

காதல் பேசி

கவிகள் பேசி

வார்த்தைகள் யாவற்றையும்

வசமாக்கி விட்டீரோ?

வார்த்தைப்

பஞ்சத்திலே நான்!

நீவீரோ மஞ்சத்திலே!

வாழ்த்துக்கள் உங்களுக்கு!

வாழ்க பல்லாண்டு!

நிலாவின் கைப்பற்றி

நிறைவிழா காணும்

மணிவாசகனிற்கு வாழ்த்துக்கள்!

தமிழன்னை மடியில்

தவழ்ந்த மைந்தனை

தன்மடி தாங்கும்

ரசிகைக்கும் வாழ்த்துக்கள்!

வாழ்க்கை என்பது

வளைவுகள் நிரம்பிய

கரடுமுரடான வசந்தப்பாதை!

இன்பமும் துன்பமும்

இனிதே நிறைந்தது!

பாசிப்பாறைமேல்

வழுக்கியோடும் நீர்த்துளிபோல்

இன்பத்திலேயும்

துன்பத்திலேயும்

இணைந்தே வாழ்க!

தென்றலின் சாமரவீச்சில்

திங்களின் ஒளி ஒத்தடத்தில்

மங்கள நாண் பூண்டு

மகிழ்வுடன் வாழ்க!

ஊடலோடு உறவாடிடுக!

உணர்வினை மதித்து

உரிமைக்கு இடமளித்து

ஜயந்தெளிந்து

அன்போடு வாழ்க!

அகிலம் போற்ற

இதயம் கவர்ந்து

இனிதாய் வாழ்ந்திடுக!

மனம்போல மாங்கல்யம்

மன்றத்தில்(யாழ்) வாழ்த்துக்கள்!

மழைபோல் பொழிய

மலர்மாலை சூடி

மகிழ்வோடு வாழ்க!

ஓடிவரும் நதியும்

ஓய்ந்துவிடக்கூடும்!

அன்பென்னும் பந்தம்

அழியாதது நிலையானது!

மாங்கல்ய பந்தம்

மாலையிட்ட உறவு

மகத்தானது - அது

மகிழ்வோடு துணையானது!

அழகான வாழ்க்கை!

அன்பான உலகம்!

அறிவோடும் அன்போடும்

ஆண்டாண்டு வாழ்ந்திடுக!

என்றும் அன்புடன் வாழ்த்தும்

இணையத்தால் இணைந்த

பரணீதரன் - ரஜனி தம்பதிகள்

Link to comment
Share on other sites

கவிதைகள் நன்றாக இருக்கிறது. தம்பதிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இன்று திருமண பந்தத்தில் இணையும் என் அக்காவுக்கும் அத்தானுக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று திருமணப்பந்தத்தில் இணையும் மணி ரசிகை தமபதிகளுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் மனம் கனிந்த

இனிய வாழத்துக்கள்.இன்று போல் என்றும் வாழ்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் இணைந்து

இதயத்தால் இணையும்

மணவாளன் மணிக்கும்

மணவாட்டி ரசிகைக்கும்

புத்தனின் நல்வாழ்த்துகள்

புனிதமான திருமண பந்தத்தால்

புது படைப்புகள் பல

புதுமையுடனே தந்துடுவீர்........

நல்வாழ்த்துகள் மணிவாசகன் மற்றும் ரசிகை அவர்களுக்கு........

Link to comment
Share on other sites

வாழ்த்துகள் இருவருக்கும் யார் யார் திருமனத்துக்கு சென்றீர்கள் என்பதையும் இங்கு பதியுங்கள்

Link to comment
Share on other sites

களத்தில் கருத்துக்கள் சமைத்து காதலெனும் தீ மூட்டி இன்று திருமணமாய் பரிமாறும் என் அருமைத்தங்கை இரசிகைக்கும் அன்பு மைத்துணர் மணிக்கும் என் குடும்பசார்பான மனமார்ந்த வாழ்த்துக்கள்.

"இன்றுபோல் நீங்களிருவரும் கருத்தொருமித்து என்றும் நல்வாழ்வு வாழுங்கள்"

Link to comment
Share on other sites

77242173yi7.jpg

எல்லோருக்கும் திரு மணச்சாப்பாடுள்ளது... சண்டை செய்யாது சாப்பிடவும்... <_<

புரியாணிbiryaniry2.jpg

பலகாரம்

300pxbonda2hq6.jpg

சாப்பிட்டு முடிந்ததும் மறக்காமல் மொய் எழுதவேணும் : :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்குக் கவிதை எழுத வராது பிள்ளைகள். இருந்தாலும் என்ர வாழ்த்துக்களை மீண்டும் மணிவாசகன் ரசிகைக்கு யாழ் குடும்பத்தின் சார்பா வாழ்த்துறதில் பெருமகிழ்வடைகிறேன்.

Link to comment
Share on other sites

இது மணிவாசகன்-ரசிகைக்கு (நியப்பெயர் இதுதானா)

நீங்கள் எதிர்பார்த்த பொன்நாளும் இதுதானா<_<

இணையத்தில் இணைந்து

இனிக்க இனிக்க

கவிதை பேசி

அரட்டை அடித்து

காதலில் வெடித்து

இதயத்தில் பூத்து

இருமனமும் ஒருமனமாகி

திருமணத்தில்

இணையும் நாளில்

இல்வாழ்க்கை தொடர

வாயைடி வாழையாக

வாழ்ந்து

வையமும் முழுதும்

உலாத்தி

மீண்டும் இணையத்தில்

உலாவரத்தான்...

உள்மனம் கனிந்து

வாழ்த்துகின்றேன்.

வாழ்க வளமுடன்

அன்புடன்

தமிழ்வானம்

பி.குறிப்பு: மோகன் அண்ணா புறோக்கர் காசு வாங்கியாச்சோ...?

இப்ப விட்டால் இவையளைப் பிடிக்கேலாது பாருங்கோ....:lol:

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள

Link to comment
Share on other sites

எல்லோருக்கும் திரு மணச்சாப்பாடுள்ளது... சண்டை செய்யாது சாப்பிடவும்... <_<

புரியாணிbiryaniry2.jpg

பலகாரம்

300pxbonda2hq6.jpg

சாப்பிட்டு முடிந்ததும் மறக்காமல் மொய் எழுதவேணும் : :P

கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்

இந்த கௌரவ பிரசாதம் இதுவே எனக்கு போதும்.

இந்த பாட்டையே மொய்யாக வைத்துக்கொள்ளுங்கள்

:D:D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

11.07.2007 இன்று யாழ் களம் கண்ட புதிய இணைவு நாள்- நந்நாள்!

இல்லறத்தின் அடிப்படையான

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது. ( 5:5)

எனும் அறவொழுக்கத்துடன் வாழும் நற்குடும்பமாகத் தடம் பதித்திட

இனிய நல் வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

என்ன நண்பா !

பிரியாணி எல்லாம் போடுறீங்கள். நாங்கள் அது போடுறேல்லை தெரியுமில்லை.

இந்துக்களின் திருமணத்தன்று வாழையிலையில் மரக்கறிகளுடன் அறுசுவை உணவு வழங்கப்படும். ம் போயிருந்தால் ஓரு வெட்டு வெட்டியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

மணி மற்றும் இரசிகைக்கு எனது திருமண வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

இல்லறத்தில் இணையும் இதயங்களை

இன்சொல்கொண்டு போற்றுமே இணையம்

வள்ளுவன் வாசுகி இல்லறம்போல் - நம்

வானவில் ஜம்மு ஐக்கியம் போல்

தூயவன் வாசகன் சாடல் போல் அல்லால்

ரசிகை மணிவாசகன் இல்லறம் இனித்திட

வாழ்த்துகிறேன் நான் டங்குவார்.. :P

திருமண நல்வாழ்த்துக்கள்...!

Link to comment
Share on other sites

மணி அத்தானுக்கும் ரசி அக்காவுக்கும் திருமண வாழ்த்துக்கள்!!!!!1

Link to comment
Share on other sites

மணிக்கும் இரசிகைக்கும் எனது திருமண வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் வாசகன் சாடல் போல் அல்லால்

ஏனப்பு!

நம்மளைப் போட்டுத் தாக்க வேற இடம் கிடைக்கவில்லையா? :angry: <_< வாசகன் நமக்கிடையே உள்ளது முற்பிறப்பில ஏற்பட்ட சின்னப் பிரச்சனை. அது இப்போ தீர்ந்து போச்சு.

:3d_039:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லற வாழ்வில் இணையும் அன்பு அக்கா ரசிகை, மற்றும் மணி அண்ணா ஃஅத்தான் ஆகியோருக்கும் அன்புத்தம்பியின் இதயத்திலிருந்து இனிய வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றேன்..!

இல்லறம் எனும் நல்லறத்தில் இணைந்திருக்கும் உங்களை வாழ்த்துகின்றேன் வணங்குகின்றேன்

எதிர்பார்ப்புககள்

காத்திருப்புக்கள்

தவிப்புக்கள்

எல்லாவற்றுக்கும் -ஆம்

எல்லாவற்றுக்கும் விடுதலை...

பெற்றவர்கள் மகிழ்ந்திருக்க

சுற்றத்தார் சூழ்ந்திருக்க

மற்றவர்கள் மனதுக்குள் வாழ்தி நிற்க

நீங்கள் வாழ்ந்திடுங்கள்..!

இன்பம் இணைந்திருக்க

இனிமை செழித்திருக்க

இல்லறம் அமைத்து

நீங்கள் வாழ்ந்திடுங்கள்

சொந்தங்கள் கூடி வாழ்த்தட்டும்

பந்தங்கள் வாழ்த்தி நிற்கட்டும்

சிறியோன் தான் பரவாயில்லை...

நானும் வாழ்த்துகின்றேன்..

நீங்கள் வாழ்திடுங்கள்

யாழ் சேர்த்த உறவோ இல்லை

யாழ் அமைந்த கூட்டோ

எதுவாக இருந்தால் என்ன

நீங்கள் வாழ்ந்திடுங்கள்

வார்த்தைகளுக்கு தட்டுப்பாடு

உங்களை வாழ்த்த மட்டும்

உள்ள வார்த்தைகள் கொண்டு

உறவுகள் கவி படைத்ததால்

உணர்வாலே இணைந்து வாழ்த்தி

உறவுகளே நன்றி...

உரிமையோடு வாழ்த்தும்

அன்புத் தம்பி...

நிதர்சன்

Link to comment
Share on other sites

ஏனப்பு!

நம்மளைப் போட்டுத் தாக்க வேற இடம் கிடைக்கவில்லையா? :angry: <_< வாசகன் நமக்கிடையே உள்ளது முற்பிறப்பில ஏற்பட்ட சின்னப் பிரச்சனை. அது இப்போ தீர்ந்து போச்சு.

:3d_039:

தூயவன்.., சும்மா ஒரு வம்புக்கு எழுதியது.. :D சமாதானம்..!!

பிரச்சினை தீர்ந்து போச்சா? அப்ப மெத்த சந்தோசம்.. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தொருமித்து காதல் செய்து!

நன் மக்கட் செல்வமும் பெற்று!

இனிதான இல்லறத்தில் இனைந்து!

இனிதே வாழ எம் நல்வாழ்த்துக்கள். <_<:D

Link to comment
Share on other sites

இன்று புதிய படியில் கால் பதிக்கும் தம்பதியினருக்கு எனது இதயங்கனிந்த திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.