Jump to content

திராவிட அடையாளமே தமிழரின் பெருமை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட அடையாளமே தமிழரின் பெருமை!

spacer.png
 

ராஜன் குறை 

சென்ற வாரம் தமிழ் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் சங்க இலக்கியம் குறித்த நூல்கள், திராவிட களஞ்சியம் என்ற நூல் வரிசை ஆகியவை வெளியிடப்படும் என்று கூறியிருந்ததை தவறாகப் புரிந்துகொண்டு சங்க இலக்கியத்தை தமிழ் களஞ்சியம் என்று சொல்லாமல் திராவிட களஞ்சியம் என்று சொல்லலாமா என்று ஒரு சர்ச்சை இணைய வெளியிலும், பொதுக்களத்திலும் உருவாக்கப்பட்டது. அமைச்சகம் தெளிவுபடுத்திய பிறகு இது ஓய்ந்தது. ஆயினும் இடையில் இந்த சர்ச்சையில் பங்கேற்ற பலர் கூற்றுக்கள் வழக்கம்போல “திராவிடம்” என்ற சொல்லின்மீதான ஒவ்வாமையை வெளிப்படுத்துவதாக இருந்தன. முரசொலி பத்திரிகையும் இந்த திராவிட ஒவ்வாமை குறித்து ஒரு தலையங்கம் தீட்டியது. தமிழ், திராவிடம் ஆகிய சொற்களின் ஆழ்ந்த உட்பொருள் என்ன, எதனால் இந்த பிரச்சினை மீண்டும், மீண்டும் எழுகிறது என்பதை சிந்தித்துப் பார்ப்பது அவசியமானதாகும்.

ஆரியரும், திராவிடரும் 

பதினெட்டாம் நூற்றாண்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய ஆய்வாளர்கள் இந்தியாவின் பண்பாட்டுக்கு மூலாதாரம் ஆரிய இனத்தவர் என்று கருதினர். மத்திய ஆசிய புல்வெளிகளிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து வந்த இவர்கள் சமஸ்கிருத மொழியைப் பயன்படுத்தினார்கள். அவர்கள்தான் இந்தியாவில் இருந்த பூர்வகுடிகளுக்கு, அதாவது அவர்களுக்கும் முன்னால் இங்கே வசித்து வந்தவர்களுக்கு, மொழியையும், பண்பாட்டையும் பயிற்றுவித்தார்கள் என்றும் நினைத்தார்கள். இந்த ஆரியர்களில் ஒரு பகுதியினர் தெற்கே இந்தியாவுக்கு வர, மற்றொரு பகுதியினர் வடக்கே ஐரோப்பாவுக்குச் சென்றதாகவும் ஐரோப்பிய நாகரிகத்தின் தோற்றுவாயும் இவர்கள்தான் என்றும் கருதினார்கள். இதற்கெல்லாம் அடிப்படை மொழியியல் ஆய்வு சமஸ்கிருத மொழிக்கும், ஐரோப்பிய மொழிகளுக்கும் உள்ள ஒற்றுமைகளைக் கண்டு அந்த மொழிக் குடும்பத்தை இந்தோ - ஐரோப்பிய மொழிக்குடும்பம் என ஆய்வாளர்கள் அழைத்ததுதான் காரணம். மாக்ஸ்முல்லர் போன்றவர்கள் பேசும் மொழி அடிப்படையிலான வித்தியாசத்தை, இன (Race) வேறுபாடாக அடையாளம் காணக் கூடாது என்று கூறினாலும் “ஆரிய இனம்” (Aryan Race) என்ற கருத்து இந்தியாவிலும், ஐரோப்பாவிலும் வலுவடைந்தது.

spacer.png

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் பல சிந்தனையாளர்கள், கலைஞர்களுக்குப் பல்வேறு காரணங்களால் மத்திய கிழக்கிலிருந்து வந்த யூதர்களின், கத்தோலிக்க மதத்தின் செல்வாக்கு ஒவ்வாததாக இருந்தது. அதனால் அவர்களுக்கு “ஆரியர்களே நமது மூதாதையர்கள்” என்ற கோட்பாடு மிகவும் பிடித்திருந்தது. இந்த ஐரோப்பிய ஆரிய மாயை ஹிட்லரின் ஆரிய இனவாதம், நாசிஸம், யூத இனப்படுகொலை வரை சென்றது. ஆனால் ஹிட்லர் போன்ற ஐரோப்பிய இனவாதிகள் இந்திய ஆரியர்களை “தூய” ரத்தமாகக் கருதவில்லை. இனக்கலப்பால் இந்திய ஆரியர்கள் தூய்மையிழந்துவிட்டதாகவே கருதினார்கள்.

இந்தியாவில் ஆரிய அடையாளம் முழுக்கவும் சமஸ்கிருத மொழி சார்ந்ததாகவே இருந்தது. வேத காலத்திலேயே ஆரியர்களும், உள்ளூர்காரர்களும் கலந்துவிட்டதாகவே ரோமிலா தாப்பர் உள்ளிட்ட பல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆரிய என்ற வார்த்தை மரியாதைக்குரியவர் என்ற பொருளில் வழங்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள். ஆனால் நடைமுறையில் சமஸ்கிருத மொழியைப் பயிலும், பயன்படுத்தும் பார்ப்பனர்கள் தங்களை ஆரியர்கள் என்றே கருதிக்கொண்டார்கள்; பிறரும் கருதினார்கள். அதன் காரணமாக சமஸ்கிருத கலப்பு அதிகம் கொண்ட வட இந்திய மொழிகளைப் பேசுபவர்களும் ஓரளவு ஆரியர்களே என்ற எண்ணமும் இருந்தது. உதாரணமாக சுவாமி விவேகானந்தர் தனது அமெரிக்கச் சொற்பொழிவு ஒன்றில் வட இந்தியர்களின் இனம் வேறு, தென்னிந்தியர்கள் இனம் வேறு என்று கூறுகிறார்.

இந்திய பண்பாட்டின் மூலாதாரம் ஆரியர்களும், சமஸ்கிருதமும்தான் என்ற சிந்தனை இரண்டு காரணங்களால் உடைபட்டது. ஒன்று தென்னிந்தியாவில் வசித்த ஆங்கிலேய, ஐரோப்பிய சிந்தனையாளர்கள் தமிழை மையமாகக் கொண்டு தென்னிந்திய மொழிகளின் வேர்ச்சொற்கள் இந்தோ - ஐரோப்பிய மொழியிலிருந்து வேறுபட்டவை என்று நிறுவினார்கள். இதன் மூலம் திராவிட மொழிக்குடும்பம் என்பது சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்ட தோற்றுவாயைக் கொண்டது என்று பெறப்பட்டது. இரண்டாவது மொஹஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் நடந்த தொல்லியல் ஆய்வுகள். இந்த இடங்களில் கிடைத்த நகர நாகரிகத்தின் சான்றுகள் ஆரியர் வருகைக்கு முன்னால் நாகரிகம் செழித்திருந்ததை சுட்டிக்காட்டின. இந்த சிந்துவெளி நாகரிகம் ஆதி திராவிட நாகரிகமே என்பது குறித்த ஆய்வுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. ஆர்.பாலகிருஷ்ணன் எழுதியுள்ள 'Journey of a Civilization: Indus to Vaigai' என்ற நூல் அவ்விதத்தில் முக்கியமானது.

சமஸ்கிருதம் பயன்படுத்துபவர்கள் ஆரியர்கள் என்றால், தமிழை தொன்மையான மூத்த மொழியாகக் கொண்ட மொழிகளைப் பேசுபவர்கள் திராவிடர்கள் என்ற கருத்து உருவானது. தமிழம் என்ற சொல்லே திராவிடம் (Tamila-Damila-Dramila-Dravida) என்று பிற மொழிகளில் மருவியதாகவும் மொழியிலாளர் ஜி.ஏ.கிரியர்சன் 1906ஆம் ஆண்டு வெளியான அவரது 'Linguistic Survey of India' (Vol.4) நூலில் குறிப்பிடுகிறார். தேவநேயப் பாவாணரும் இந்த கருத்தை கூறியிருப்பதை அனைவரும் அறிவர். எனவே ஆரியம், சமஸ்கிருதம் போல இருவேறு மூலம் கொண்ட சொற்கள்கூட அல்ல தமிழும், திராவிடமும். காலப்போக்கில் “சமஸ்கிருதம் - தமிழ்” மொழி வேறுபாடாகவும், “ஆரியம்-திராவிடம்” என்பது பண்பாட்டு வேறுபாடாகவும் உருவாயின.

ஆரிய திராவிட வேறுபாடு என்பது பண்பாட்டு வேறுபாடே

மொழி வேறுபாட்டை மொழியின் பேரால் குறிப்பிடலாம். ஆரியர், திராவிடர் என்பது இன வேறுபாடு என்பதும் அறிவியலுக்குப் பொருத்தமானது இல்லை; ஏனெனில் இனக்கலப்பு ஏற்பட்டதை அனைத்து அறிஞர்களும், அண்ணா உட்பட ஏற்றுக்கொள்கிறார்கள். அதனால் ஆரிய-திராவிட வேறுபாடு என்னவென்றால் பண்பாட்டு வேறுபாடுதான்.

ஆரியம் என்பது பார்ப்பனர்களின் உயர்பிறப்பையும், சமஸ்கிருத தர்ம சாஸ்திரங்களையும், புராண, இதிகாசங்களையும் அடிப்படையாகக் கொண்டது. திராவிட பண்பாடு இவற்றை ஏற்காதது; இவற்றிலும் கூட மையமானது “பார்ப்பனர்+சமஸ்கிருதம் = ஆரியம்” என்ற சமன்பாடுதான். அண்ணாவின் ஆரிய மாயை நூல் இந்த முக்கியமான அம்சத்தைத் தெளிவாக எடுத்துரைக்கிறது. 1941ஆம் ஆண்டு ஒரு வழக்கில் தர்ம சாஸ்திரங்களை மேற்கோள் காட்டி ஒரு பார்ப்பனரல்லாத பெண்ணை பார்ப்பனர் மணந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது (Justice Pandrang Row. and Justice Somayya, Swayampakula Subbarammaya & Ors Vs Swayampakula Venkatasubbamma, Indian Law reports Madras Series (Madras High Court 1941). அதைச் சுட்டிக்காட்டும் அண்ணா, இனக்கலப்பு ஏற்பட்டதென்றால் ஏன் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதோரை திருமணம் செய்வது செல்லாது எனக் கூறப்படுகிறது என்று கேட்கிறார்.

நான்கு வர்ணங்களாக மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் பிரித்ததும், பின்னர் சத்திரிய, வைசிய வர்ணங்கள் சூத்திரர்களுடன் கலந்துவிட்டன என்று கூறி பார்ப்பனர், சூத்திரர் என்ற இரு பிரிவுகளே நிலவுகின்றன என்றதும் எல்லாமே சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட சாத்திரங்கள்தான். இவைதான் ஆரிய பண்பாட்டின் அடிப்படையாக உள்ளன. எனவே சாதி ஒழிப்பில், சமூக நீதியில் அக்கறை கொண்டோர் ஆரிய பண்பாட்டுக்கு மாற்றாக திராவிட பண்பாட்டை தங்களுடையதாக வரிப்பது அவசியம். இதுவே இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் திராவிட அடையாளம் ஓர் அரசியல் அடையாளமாக மாறியதன் அடிப்படை. அந்த திராவிடப் பண்பாட்டின் தவிர்க்க முடியாத அடித்தளம் தமிழ் மொழி.

spacer.png

தமிழ் மொழி அடையாளமே போதாதா?

திராவிட இயக்கம் “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற பாரதிதாசன் வார்த்தைகளை உயிர் மூச்சாகக் கொண்டது. கீழப்பழுவூர் சின்னசாமி உள்ளிட்ட பலர் தமிழுக்காக உயிரை ஈந்தனர். ஆனாலும் தமிழர் என்ற அடையாளத்துடன் ஏன் திராவிடர் என்ற அடையாளத்தையும் அவசியம் சேர்க்க வேண்டியுள்ளது என்பதே நாம் தெளிவுபட வேண்டிய கூறாகும். அறிஞர் அண்ணா ஆரிய மாயை நூலில் இதைத் தெளிவாக விளக்குகிறார். தமிழ் மொழியில் பல்வேறு நூல்களில் ஆரிய சிந்தனை நுழைந்துள்ளதை, அவை தமிழ் இலக்கியத்தின் அங்கமாக இருப்பதை எடுத்துக்காட்டுகிறார். பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வச்சணந்தி மாலை என்ற இலக்கண நூலில் எப்படி பா வகைகள் வர்ண பாகுபாட்டுடன் பிணைக்கப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். வெண்பா என்பது பார்ப்பனர்களைக் குறித்து எழுதுவதற்கு உகந்தது என்றெல்லாம் கூறுகிறது அந்த நூல். ஏன், ராமாவதாரம் என்ற கம்பராமாயணம் தமிழின் தன்னிகரற்ற காப்பியம் அல்லவா? அதனை திராவிடப் பண்பாடு விமர்சனமில்லாமல் ஏற்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. பெரிய புராணத்தில் பக்தர்களின் கண்மூடித்தனமான வன்செயல்களை நீதி தேவன் மயக்கம் நாடகத்தில் எடுத்துரைக்கிறார் அண்ணா. இவ்வாறாக தமிழ் மொழியினுள் ஆரிய பண்பாட்டின் சிந்தனை கணிசமாக கலந்துவிட்டதால்தான் தமிழின் தொன்மையான அடித்தளமான திராவிடப் பண்பாட்டை மீட்க திராவிட அடையாளம் தமிழுக்குத் தேவைப்படுகிறது. எனவே “திராவிடத் தமிழர்” என்று சேர்த்துச் சொல்வதே ஆரியக்கலப்பற்ற திராவிட தமிழ் பண்பாட்டினை வலியுறுத்துவதாக இருக்கும் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். பெரியாரும், அண்ணாவும் திராவிடர் என்ற வார்த்தையை அரசியலின் அச்சாணியாகக் கொண்டது அதனால்தான் என்பது வெளிப்படையானது. எனவே தமிழின் தவிர்க்கமுடியாத பண்பாட்டு அடித்தளம்தான் திராவிடம்.

தமிழக அரசா? தமிழ் தேசமா? 

இருபதாம் நூற்றாண்டின் போக்கில் இந்திய விடுதலை இயக்கத்தின் பகுதியாக தமிழகமும் விளங்கியது. தமிழின் மறுமலர்ச்சியும் காலனீய எதிர்ப்பினால் உரம் பெற்றது. இந்தியா விடுதலை பெற்றபோது பல்வேறு மொழி பேசும் மக்கள் தொகுதிகளின் உரிமைகள் குறித்த கேள்வி நிச்சயம் அனைவர் மனதிலும் இருந்தது. இந்திய அரசியல் நிர்ணய சட்டம் அதற்கு விடையாகப் பல்வேறு அரசுகளின் ஒன்றிய அரசாங்கமாகவே இந்தியாவின் ஆட்சி மையத்தை வரையறுத்தது. அதாவது ஒற்றை தேசிய அரசு, மாநில அரசாங்கங்கள் என்று கூறவில்லை. மாநில அரசுகள், ஒன்றிய அரசாங்கம் என்றுதான் கூறப்பட்டுள்ளது. அந்த ஒன்றியத்தின் அடித்தளம் இந்திய தேசம் என்ற கருத்தாகும்.

மாநிலங்களின் உரிமைகளைப் பேசுபவர்கள் சிலர், அந்த மாநிலத்தின் மக்கள் தொகுதியை தேசிய இனம் என்று பேசுவதே முக்கியம் எனக் கருதுவது வழக்கம். இது இந்திய தேசியத்தை மறுதலிப்பதால் பிரிவினைவாத போக்காகக் காணப்படும். காலனீய எதிர்ப்பு தேசியம் என்பது வரலாற்றின் தவிர்க்க முடியாத கட்டம் எனலாம். ஆனால் அதன்பிறகு தொடர்ந்து தேசங்கள் பிரிந்து தேசிய அரசுகள் தோன்றுவதை உலக முதலீட்டிய வலைப்பின்னல் ஆதரிப்பதில்லை. மேலும் பிரமாண்டமாக வளர்ந்துவிட்ட போக்குவரத்து மற்றும் ஊடக வலைப்பின்னலால் முதலீட்டிய செயல்முறையும் சரி, இறையாண்மையின் உள்ளடக்க வடிவமும் சரி முற்றிலும் மாறிவிட்டன. இருபத்தோராம் நூற்றாண்டில் கள்ள மார்க்கெட் ஆயுத வியாபாரிகள் வேண்டுமானால் தேசிய இனப்போராட்டங்களை ஆதரிப்பார்களே தவிர, புதிய தேசிய அரசுகள் உருவாவது சாத்தியமும் இல்லை. அதற்கு வரலாற்று உள்ளடக்கமும் இல்லை என்பதை ஜென்ஸ் பார்டெல்சன் என்ற அறிஞர் அழகாக ஆய்ந்து விளக்கியுள்ளார்.

எனவே மக்களின் உரிமைகளை சுயாட்சி உரிமைகளாக கோருவதுதான் பொருத்தமே தவிர, இறையாண்மை பெற்ற தேசத்தை கனவு காண்பது பொருத்தமில்லை. இந்த விதத்தில் அண்ணா ஓர் அரசியல் தீர்க்கதரிசியாக இருந்ததால்தான் திராவிட கூட்டாட்சி என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் எனலாம். ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் அமெரிக்க அரசியலாளர் வெண்டல் வில்க்கி முன்மொழிந்த உலகக் கூட்டாட்சியை அண்ணா ஒத்திசைவுடன் குறிப்பிடுகிறார். ஒரு மக்கள் தொகுதி தங்கள் உரிமைகளைப் பெற சுயாட்சி-கூட்டாட்சி வடிவம்தான் தேவையே தவிர, இறையாண்மையுள்ள தேசிய அரசுதான் தேவை என்பது மாயை. இருபத்தோராம் நூற்றாண்டில் மேலும் நீர்த்துப்போன மாயை.

தேசியத்தின் பக்க விளைவுகள் 

தேசியம் ஒரு புறம் சாத்தியமற்ற, உள்ளடக்கமற்ற இறையாண்மையை நோக்கி தூண்டுமென்றால் மற்றொருபுறம் யாரை உள்ளடக்குவது, யாரை வெளியேற்றுவது என்ற கேள்வியை எழுப்பும். தமிழ் தேசியம் பேசும் பலர் அண்டை மாநிலங்கள் மீது விரோதபாவம் கொள்வதும், பிற மாநிலத்திலிருந்து பணிபுரிய தமிழகம் வந்துள்ளவர்களை வெறுப்பதையும் காணலாம். இவர்கள் தமிழர்கள் இந்தியா முழுவதும் சென்று பொருளீட்டி வருவதை கவனிப்பதுமில்லை; புரிந்துகொள்வதுமில்லை. இன்றைய முதலீட்டிய உலகில் இவ்வாறான உழைக்கும் மக்கள் புலம் பெயர்தல் என்பது தவிர்க்க முடியாத ஓர் உலகளாவிய நிகழ்வாகும்.

தமிழ் தேசியம் பேசுபவர்கள் தமிழர் நலன்களுக்கும், அண்டை மாநிலங்களான பிற திராவிட மொழி பேசும் மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் நலன்களுக்கும் பெரியதொரு முரண்பாடு இருப்பதாகக் கற்பிப்பது விபரீதமான போக்காகும். நதி நீர் பிரச்சினை போன்ற சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அது ஒரு மாநிலத்துக்குள்ளும், ஏன் ஒவ்வொரு ஊரிலும்கூட உருவாகக் கூடியதுதான். அந்த பிரச்சினைகளை விரோதபாவமாக்குவது என்பது ஆரோக்கியமான போக்கல்ல.

தமிழர் உரிமைகள், தமிழர் நலன் என்பது நமது அரசியலின் அடிப்படை குறிக்கோள். அது திராவிட பண்பாடு என்ற அடித்தளத்தில் கட்டி எழுப்பப்படும்போதுதான் சமூகநீதி என்ற சிறந்த வரலாற்று உள்ளடக்கத்துடன், சுயாட்சி மற்றும் கூட்டாட்சி என்ற அரசியல் மாண்பினையும் கொண்டதாக இருக்கும். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற மகத்தான வாக்கியத்துக்கு சொந்தக்காரர்கள் நாம். அதற்கு அடுத்த வரியும் முக்கியம். அது: “தீதும் நன்றும் பிறர் தர வாரா.”

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி

https://minnambalam.com/politics/2021/09/06/6/Tamilians-Pride-is-Dravidiyan-identity

 

 

 

Link to comment
Share on other sites

  • Replies 132
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இல்லாத ஒன்றை உருவாக்க எவ்வளவு சிரமப்படுகினம்! திராவிடத் தமிழராம். திராவிடம் என்பதே தென்பகுதி பிராமணரை குறித்த சொல். கார்டுவெல்லிற்கு முன் தமிழ்நாட்டில் திராவிடர் என்ற சொற்பிரயோகமே இல்லையாமே?
தமிழ் மொழி வரலாறு என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்வது, அதை திராவிடத்திற்குள் 150-200 ஆண்டுகளிற்குள் சுருக்குவது ஏன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் திராவிடர் கிடையாது என்று சொன்னால் இங்குள்ள ஒரு சிலருக்கு கோபம் ஏன்  வருகின்றது எனும் மர்மம் புரியவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு ஆவணி 21 தானே?

இப்பவே ஏன் @கிருபன் சொக்கபனை நடுறார்🤣.

#கொழுந்து விட்டு ஏரியட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பெருமாள் said:

நாங்கள் திராவிடர் கிடையாது என்று சொன்னால் இங்குள்ள ஒரு சிலருக்கு கோபம் ஏன்  வருகின்றது எனும் மர்மம் புரியவில்லை .

யாழ்கள திராவிடர் யாரண்ணே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இல்லாத ஒன்றை உருவாக்க எவ்வளவு சிரமப்படுகினம்! திராவிடத் தமிழராம். திராவிடம் என்பதே தென்பகுதி பிராமணரை குறித்த சொல். கார்டுவெல்லிற்கு முன் தமிழ்நாட்டில் திராவிடர் என்ற சொற்பிரயோகமே இல்லையாமே?
தமிழ் மொழி வரலாறு என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்வது, அதை திராவிடத்திற்குள் 150-200 ஆண்டுகளிற்குள் சுருக்குவது ஏன்?

இதை பற்றி இங்கே பல தடவை அலசப்பட்டதாயினும், திராவிடம் எனும் சொல் மனு நீதியில் (10.22) இருப்பதற்கான ஆதாரத்தை இணைத்து இருந்தேன். 
 

https://archive.org/details/ManuSmriti_201601/page/n221/mode/2up?q=dravida

அத்துடன் அம்பேத்காரின் திராவிட விளக்கத்தையும் இங்கு இணைத்த நினைவு இருக்கிறது. 

https://www.forwardpress.in/2017/09/dr-ambedkar-on-asuras/

.....

"What is important here is that ‘Dravida’ is not an original word. It is the Sanskritized form of the word ‘Tamil’. The original word ‘Tamil’, when imported into Sanskrit, became ‘Damilla’ and later on Damilla became Dravida. The word ‘Dravida’ is the name of the language of the people and does not denote the race of the people."

இங்கே முதலில் நான் சொன்னதும், தமிழ் என்பதே,  திராவிடம் என்று மருவி, PROTO DRAVIDIAN என்று, ஆரம்ப  மொழி வடிவத்தை மொழியியல், வரலாற்று மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி குறிக்கிறது என்று. ஏனெனில், PROTO DRAVIDIAN முதலாவது உரிய மொழி வடிவம் எடுத்தது தமிழ் என்பது max planck (mpg.de) இன் ஆய்வு முடிவு.  

கார்டுவெல் இன் பின்னரே திராவிடம் வந்ததாக இருந்த பொதுவான விளக்கம் சரியா என்பதில் எனது தனிப்பட்ட ஆய்வு முடிவுகள் இவை. 
   
வாதாட நேரம் இல்லை. ஆனால் கவனமாக இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இண்டைக்கு ஆவணி 21 தானே?

இப்பவே ஏன் @கிருபன் சொக்கபனை நடுறார்🤣.

#கொழுந்து விட்டு ஏரியட்டும்

இன்று வந்த கட்டுரை!

எவராவது கட்டுரையை வாசித்து கருத்து வைத்தீர்களா?🧐

 

2 hours ago, கிருபன் said:

தமிழ் தேசியம் பேசுபவர்கள் தமிழர் நலன்களுக்கும், அண்டை மாநிலங்களான பிற திராவிட மொழி பேசும் மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் நலன்களுக்கும் பெரியதொரு முரண்பாடு இருப்பதாகக் கற்பிப்பது விபரீதமான போக்காகும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பூவை, பூ என்றும் சொல்லாம், மலர் என்றும் சொல்லலாம், புய்ப்பம் என்றும் சொல்லலாம் - நீங்கள் சொல்ற மாரியும் சொல்லலாம்.

3 minutes ago, கிருபன் said:

எவராவது கட்டுரையை வாசித்து கருத்து வைத்தீர்களா?🧐

எங்க வந்து என்ன கேள்வி? நாங்கள் எப்ப உந்த ஊத்தை வேலையள் செய்தனாங்கள், இப்ப செய்ய🤣.

கட்டுரையை வாசித்தேன் ஜி. முரசொலி தலையங்கத்தையும் வாசித்தேன்.  எல்லாம் இதே யாழில் பக்கம் பக்கமா எழுதி, கிழிச்சு தொங்க போட்ட மட்டர்தானே? அதான் எரிஞ்சா விடுப்பு பாக்கிற ஐடியால நிக்கிறன் 🤣.

ஆனால் யாராவது வந்து எதையாவது எழுத நாமும் அக்கினில இறங்கும்படி ஆகும். வழமையா நடப்பதுதானே🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

இன்று வந்த கட்டுரை!

எவராவது கட்டுரையை வாசித்து கருத்து வைத்தீர்களா?🧐

தமிழ் தேசியம் பேசுபவர்கள் தமிழர் நலன்களுக்கும், அண்டை மாநிலங்களான பிற திராவிட மொழி பேசும் மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் நலன்களுக்கும் பெரியதொரு முரண்பாடு இருப்பதாகக் கற்பிப்பது விபரீதமான போக்காகும்.

 

தமிழர்களின் நலன்களும் வளங்களும் அண்டை மாநிலத்தவரால் பாதிப்புக்குள்ளாகவில்லை என்கிறீர்களா? தமிழக ஆட்சியாளர்களின் அகோர ஊழலும் மக்களையும் மண்ணின் வளங்களைப் பற்றிய அக்கறையின்மையுமாகும். இது தீக்கோழி தலைய மறைச்ச கதையா எல்லோ இருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

 

பூவை, பூ என்றும் சொல்லாம், மலர் என்றும் சொல்லலாம், புய்ப்பம் என்றும் சொல்லலாம் - நீங்கள் சொல்ற மாரியும் சொல்லலாம்.

பூவுடன் சேர்ந்த நாரும் நறுமணம் பெறும்  என்பார்கள்

அதேபோல் தான் தமிழருடன்  சேர்ந்தால்  மட்டுமே

மற்றைய மொழிகள் திராவிடம்  என  மணக்கலாம்

தமிழின்றி  திராவிடம்  இல்லை

அதனால் தான் தமிழர் மட்டுமே திராவிடத்தில்  இறுதிவரை தொங்கியபடி???

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

தமிழர்களின் நலன்களும் வளங்களும் அண்டை மாநிலத்தவரால் பாதிப்புக்குள்ளாகவில்லை என்கிறீர்களா? தமிழக ஆட்சியாளர்களின் அகோர ஊழலும் மக்களையும் மண்ணின் வளங்களைப் பற்றிய அக்கறையின்மையுமாகும். இது தீக்கோழி தலைய மறைச்ச கதையா எல்லோ இருக்கு!

 

👇🏾👇🏾👇🏾

3 hours ago, கிருபன் said:

பிற மாநிலத்தவர் மீது விரோதபாவம் கொள்பவர்கள் (தடித்த எழுத்தில் உள்ளதை செருகியவர் - கிருபன்) தமிழர்கள் இந்தியா முழுவதும் சென்று பொருளீட்டி வருவதை கவனிப்பதுமில்லை; புரிந்துகொள்வதுமில்லை. இன்றைய முதலீட்டிய உலகில் இவ்வாறான உழைக்கும் மக்கள் புலம் பெயர்தல் என்பது தவிர்க்க முடியாத ஓர் உலகளாவிய நிகழ்வாகும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

பூவுடன் சேர்ந்த நாரும் நறுமணம் பெறும்  என்பார்கள்

அதேபோல் தான் தமிழருடன்  சேர்ந்தால்  மட்டுமே

மற்றைய மொழிகள் திராவிடம்  என  மணக்கலாம்

தமிழின்றி  திராவிடம்  இல்லை

அதனால் தான் தமிழர் மட்டுமே திராவிடத்தில்  இறுதிவரை தொங்கியபடி???

 

ஒரு தாய். நாலு பிள்ளகள்.

பிள்ளைகள் எல்லாம் தனி குடித்தனம்.

எந்த பிள்ளையின் குடும்பத்திலும் தாய் ஒரு அங்கத்தவர் இல்லை. ஆனால் இன்றும் தாயின் குடும்பத்தில் எல்லா பிள்ளைகளும் அங்கத்தவர்.

என்ன தமிழ் தாய் கிழவி என்றும் கன்னி அல்லவா? ஆகவே பிள்ளைகளுக்கு சமனா அவவும் வாழுறா. இதை பார்த்து பிள்ளையளுக்கு போட்டி.

சமஸ்கிரத, அரைமையிக், லத்தீன் கிழவிகள் எல்லாம் போய் சேர்ந்து விட்டதால், பிள்ளையள் ஒரு படத்தை வைச்சு கும்பிடுகுதுகள் 🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

 

👇🏾👇🏾👇🏾

பிற மாநிலத்தவர் மீது விரோதபாவம் கொள்பவர்கள் (தடித்த எழுத்தில் உள்ளதை செருகியவர் - கிருபன்) தமிழர்கள் இந்தியா முழுவதும் சென்று பொருளீட்டி வருவதை கவனிப்பதுமில்லை; புரிந்துகொள்வதுமில்லை. இன்றைய முதலீட்டிய உலகில் இவ்வாறான உழைக்கும் மக்கள் புலம் பெயர்தல் என்பது தவிர்க்க முடியாத ஓர் உலகளாவிய நிகழ்வாகும்.

பொருளீட்டுவது பிரச்சனை இல்லை. வளக்கொள்ளை, நதிநீர்ப்பங்கீட்டில் உரிய பங்கை 3 அயல் மாநிலங்களுமே தரமறுக்கும் போது அவர்கள் திராவிடர்கள் என்று பூச்சுத்தலாமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

ஒரு தாய். நாலு பிள்ளகள்.

பிள்ளைகள் எல்லாம் தனி குடித்தனம்.

எந்த பிள்ளையின் குடும்பத்திலும் தாய் ஒரு அங்கத்தவர் இல்லை. ஆனால் இன்றும் தாயின் குடும்பத்தில் எல்லா பிள்ளைகளும் அங்கத்தவர்.

என்ன தமிழ் தாய் கிழவி என்றும் கன்னி அல்லவா? ஆகவே பிள்ளைகளுக்கு சமனா அவவும் வாழுறா. இதை பார்த்து பிள்ளையளுக்கு போட்டி.

சமஸ்கிரத, அரைமையிக், லத்தீன் கிழவிகள் எல்லாம் போய் சேர்ந்து விட்டதால், பிள்ளையள் ஒரு படத்தை வைச்சு கும்பிடுகுதுகள் 🤣.

இதை முற்று  முழுதாக ஆமோதிக்கின்றேன் ஐயா🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளர் சுபவீ,வீரமணி வகையறா!தமிழ்த் தேசியம் என்ற ஒன்று இருக்கவே கூடாது என்ற தோரணையில் வாதாடுகிறார். ஆந்திராவில்.கேரளாவில்.கர்நாடகவில் தமிழர்களுக்கு எதராக இழைக்கப்படும் அநீதிகளை மறைத்து தமிழ்த்தேசியம் பேசுவது குற்றம் என்கிறார். தமிழர்கள் தனிநாடு கோருவது ஏற்க முடியாதது நடைமுறைச்சாத்தியமற்றது என்று உளறுகிறார். இதே காலகட்டத்தில்தான் அதுவும் இந்த கொரோனா பேரழிவுக்குள்ளும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக்கைப்பற்றிய நிகழ்வும் நடந்திருக்கிறது.ஆகவே எதுவும் நடைமுறைச்சாத்தியமற்றது என்ற உளவியல் போரை அவர் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. வைகோ தமிழ்த் தேசியம் மிகவும் ஆபத்தானது என்று குறிப்பி;ட்து போன்ற கருத்தே இதுவும்.தமிழ் என்ற போர்வையில் திராடவிடத்தை வளர்பதே இவர்களின் குறிக்கோள்.கருணாநிதிக்கு பெரும் செலவில் மணிமண்டபம் கட்டுபவர்கள் ராஜராஜ சோழனுக்கு ஏன் கட்டவில்லை. 50 வருட தழராவிட ஆட்சியாளர்களின் திட்டமிட்ட சதி இது. தமிழ்த்தேசிம் வேகமாக எழுச்சி பெறுவதால் அதனை அடக்க கருணாநிதியே செய்யத் துணியாத காரியத்தை ஸ்டாலின் செய்ய நினைக்கிறார். அதுதான் தமிழ் நூல்களை திராவிடக் களங்சியம் என்று பெயர் மாற்றுவது .இது தமிழ்த்தேசியம் மேலும் வீறுகொண்டு எழுவதற்கே வழிவகுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நந்தன் said:

யாழ்கள திராவிடர் யாரண்ணே

இரண்டு வகையானவர் நோ சீரியஸ் நாங்க எப்பவும் பகிடிதான் தலைவர் 🤣

1.தமிழகத்தை தமிழன் ஆளனும் என்ற விருப்பத்தை கூறினாலே உடனே பெருமாளுக்கு இனவெறி கூடிப்போச்சு என்று கவலைப்படுபவர்கள் 🤣(விசர் நாய்க்கடி ஊசி போல் இதுக்கும் இருந்தால் நல்லது என்று நினைப்பினம் ஆக்கும்  )🤣

2.தமிழகத்தில் உள்ள அரசியலில் கருத்துக்கள் வெறுமையாகும் போது அவர்கள் நாடு அவர்கள் இடம் எங்களுக்கு என்ன வேலை என்று இலவச ஆலோசனை தருவினம் . ஆனால் தாங்கள்  மட்டும்  திராவிட எதிர் அரசியல்வாதியை வீட்டில்  கறியிலை உப்பு கூடிய ஆத்திரத்தை  இறக்க இங்கு  அந்த அரசியல்வாதியை போட்டு பிரட்டி எடுப்பவர்கள்🤣 

தமிழகத்தை தவிர அருகில் உள்ள மாநிலங்களில் திராவிடம் எனும் பெயரில் வேற்று மாநிலத்தவர் ஆட்சி அதிகாரத்தில் உள்ளனரா ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பெருமாள் said:

இரண்டு வகையானவர் நோ சீரியஸ் நாங்க எப்பவும் பகிடிதான் தலைவர் 🤣

1.தமிழகத்தை தமிழன் ஆளனும் என்ற விருப்பத்தை கூறினாலே உடனே பெருமாளுக்கு இனவெறி கூடிப்போச்சு என்று கவலைப்படுபவர்கள் 🤣(விசர் நாய்க்கடி ஊசி போல் இதுக்கும் இருந்தால் நல்லது என்று நினைப்பினம் ஆக்கும்  )🤣

2.தமிழகத்தில் உள்ள அரசியலில் கருத்துக்கள் வெறுமையாகும் போது அவர்கள் நாடு அவர்கள் இடம் எங்களுக்கு என்ன வேலை என்று இலவச ஆலோசனை தருவினம் . ஆனால் தாங்கள்  மட்டும்  திராவிட எதிர் அரசியல்வாதியை வீட்டில்  கறியிலை உப்பு கூடிய ஆத்திரத்தை  இறக்க இங்கு  அந்த அரசியல்வாதியை போட்டு பிரட்டி எடுப்பவர்கள்🤣 

தமிழகத்தை தவிர அருகில் உள்ள மாநிலங்களில் திராவிடம் எனும் பெயரில் வேற்று மாநிலத்தவர் ஆட்சி அதிகாரத்தில் உள்ளனரா ?

இதுக்கு நீங்க அவர் பெயரையே சொல்லி இருக்கலாம்?!?😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அருமையான கடலுணவு கறி இண்டைக்கு 🤣 (என்ன கறி என்பதை சொன்னால் பிரளயம் வரும்).

அளவான உப்பு, காரம் எல்லாம் 🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

நல்ல அருமையான கடலுணவு கறி இண்டைக்கு 🤣 (என்ன கறி என்பதை சொன்னால் பிரளயம் வரும்).

அளவான உப்பு, காரம் எல்லாம் 🤣

 

ஆமை தானே?

உப்பு காரம் கொஞ்சம் தூக்கலாக இருந்தால் சிறப்பு 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

ஆமை தானே?

உப்பு காரம் கொஞ்சம் தூக்கலாக இருந்தால் சிறப்பு 😀

🤣 சீச்சீ… 90 களின் இறுதியிலேயே புலிகள் ஆமை பிடிப்பது, உண்பதை தடை செய்து விட்டார்கள். அதன் பிறகுதான் இலங்கை அரசே செய்தது என நினைக்கிறேன் (இதுக்கான ஆதாரத்தை தேடுகிறேன், எல்லாம் அழிந்ததோடு இதுவும் போய்விட்டது போலும் 🙁).

தவிரவும் ஒரு தரம் ஆமையை கோடாலியால் கொத்துவதை பார்த்துவிட்டேன் - இனி சாப்பிட முடியாது. 

இண்டைக்கு வீட்டில இறால். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தமிழன்.  ஆந்திராவிடம் எனும் வர்த்தகத்தை எனக்கு கண்ணிலையும் காட்டக்கூடாது.

Bild

தனது பெரியாரிச பருப்பு ஈழத்தமிழரிடம் அவியாது என்பதை பெரியார் அன்றே உணர்ந்திருந்தார்.

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றி கிருபன். நல்லதொரு கட்டுரை. 

கடஞ்சாவுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடத்தால் வீழ்ந்தோம்|Dravidathal veelnthom|தமிழரா Vs திராவிடரா- 14|Tamilara Dravidara - 14

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையில் என்ன இருக்குது என்று யாராவது சுருக்கமாய் சொல்லுங்கோ .
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "பேராசை"     "பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும்.  ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன்.   நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நிறைய உடையவன். அதில் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. அது உன்னை முன்னேற்றும். ஆனால் அந்த ஆசை என்றும் நிறைவேறவில்லை. நான் ஒரு கூலி தொழிலாளியின் மகன். ஆகவே வீட்டில் படிக்க, சொல்லித்தர பெரிதாக வசதி இல்லை. பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருந்தேன். நல்ல உடுப்பும் என்னிடம் இல்லை. வகுப்பு ஆசிரியர் என் தோற்றத்தை, நடை உடை பாவனையை பார்த்து என்னை பின் வாங்கில் அமர்த்தியது மட்டும் அல்ல,  என் கரடு முரடு தோற்றம் இவன் உருப்பட மாட்டான் என்றும் அவரை தீர்மானிக்க வைத்து விட்டது. ஆசை ஆர்வம் என்னிடம் நிறைய இருந்தும், நான் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப் பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர் என்னில் கவனம் செலுத்துவதே இல்லை!   காலம் போக நான் பத்தாம் வகுப்பு தேசிய பரீட்சையில், படுதோல்வி அடைந்து, பாடசாலையால் அகற்றப் பட்டேன். என் ஆசை எல்லாம் சுக்கு நூறாகியது! எப்படியும் நான் என் வகுப்பு ஆசிரியரை விட, பாடசாலை முதல்வரை விட, என்னுடன் படித்து, சிறந்த சித்தி பெற்று, இப்ப மருத்துவம், பொறியியல் துறைக்கு புக உயர் வகுப்பு படிப்பவர்களை விட, ஏன் இந்த நாட்டையே ஆளும் ஒருவனாக வரக்கூடாது என்ற ஒரு பெரும் ஆசை என்னைக் கவ்விக் கொண்டது. அதற்கு படிப்பு தேவை இல்லை என்பதை நான் அறிவேன்!. அதுவே என்னை ஊக்கம் கொடுத்தது!! பேராசையாக, பெரும் வியாதியாக என் உள்ளத்தில் மலர்ந்தது!!!    "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"    இப்படித்தான் என்னை அப்பொழுது பலர் நினைத்தார்கள். என் பேராசை உள்ளத்தில் புகைத்துக்கொண்டு இருப்பதையோ, எப்படியாவது அந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறியையோ அவர்கள் அறியார்கள், பாவம் அவர்கள் !!   நான் மெல்ல மெல்ல கூலிவேலையில் இருந்து சிறு முதலாளியாக மாறினேன். வியாபாரத்தில் நான் எந்த கருணையும் காட்டுவதில்லை. எனக்கு அடியாட்கள் சேரத் தொடங்கினர். என் பேராசையை, வெறியை  வெளிப்படையாக  காட்டாமல் இருக்க  ஆண்டவன் சேவை ஒன்றை, என் வியாபாரத்துடன் ஆரம்பித்தேன். நான் இப்ப தரும தலைவன்! எனக்கே ஆச்சரியம் இப்ப !!    "வருடம்    உருண்டு    போக வருமாணம் உயர்ந்து    ஓங்க கருணை   கடலில்     மூழ்க மிருக - மனித அவதாரம்  நான்"   "தருணம்   சரியாய்      வர இருவர்   இரண்டாயிரம் ஆக ஒருவர்   முன்         மொழிய   தரும - தெய்வ அவதாரம்   நான்"     என் பழைய வாத்தியார் இப்ப என்னை வணங்குகிறார். பாடசாலை முதல்வர் கால் தொட்டு விசாரிக்கிறார். காலம் மாறுது ! கோலம் மாறுது, இது தான் வாழ்க்கை!! ஆனால் பேராசை திட்டம் போட்டுக் கொன்டே இருக்கிறது ! இப்ப நான் பெரும் முதலாளி, பெரும் சாமி, கூட்டம் இரண்டு இடமும் குறைவில்லை. வேடிக்கை என்ன வென்றால், எந்த பாடசாலையில் இருந்து நான் துரத்தப் பட்டேனோ, அதன் ஐம்பதாவது ஆண்டு விழாக்கு நானே தலைமை தாங்குகிறேன்! வெட்கம், அப்படி ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, அடித்து துரத்தியவனுக்கு கம்பளி வரவேற்பு!   "ஊருக்கு    கடவுள்     நான் பாருக்கு    வழிகாட்டி  நான் பேருக்கு    புகழ்       நான் பெருமதிப்பு கொலையாளி  நான்"   "குருவிற்கு  குரு       நான் குருடருக்கு கண்      நான் திருடருக்கு பங்காளி   நான் கருவிழியார் மன்மதன்  நான்"    என் பேராசை இத்துடன் நின்ற பாடில்லை, பாவம் புண்ணியம் , இது எல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் பதவி வேண்டும் , அதை எப்படியும் அடைய வேண்டும். இது ஒன்றே இப்ப என் பேராசை!     "குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு குடை பிடித்து பதவி உயர்ந்து குபேரன் வாழ்வை கனவு கண்டேன்!"   கள்ள வழிகளில் கனவு நியமாவதும், பின் அது கண்டு பிடித்ததும் உடைவது ஒன்றும் புதினம் இல்லை, ஆனால் நான் அப்பொழுது யோசிக்கவில்லை. தேர்தலில் தில்லு முல்லு செய்து வென்று மந்திரியும் ஆகிவிட்டேன் !  என்னை மணம் முடிக்க அழகிகள் கூட்டம்  போட்டி போட தொடங்கி விட்டது. எங்கோ ஒரு மூலையில் கடைசி வாங்கில் இருந்தவன், எங்கோ ஒரு மாளிகையில், மஞ்சத்துக்கு போய் விட்டான்! இதைத் தான் விந்தை என்பதோ!!  ஆனால் ஒன்றை நான் மறந்து விட்டேன். அது தான் பேராசை பெரும் நஷ்டம்!!       "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி  ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!"   மக்கள் கூட்டம்  அரசுக்கு எதிராக எழுந்துவிட்டது.  கொள்ளையர்களே, ஏமாற்றி பிழைத்தவர்களே, அடித்த கொள்ளையை தந்து விட்டு சிறைக்கு போ ! எங்கும் ஒரே ஆர்ப்பாட்ட  ஒலி!  ஓடுவதற்கு இடம் தேடினேன், யாரும் தருவதாக இல்லை . எல்லாம் வெறிச் சோடி போய்விட்டது!    "நீர்க்கோல வாழ்வை நச்சி நான்  நீதியற்ற வழியில் நித்தம் சென்று நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து நீங்காத வாழ்வென கனவு கண்டேனே !"   பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, 'நல்லது, கெட்டது' எது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற் கொண்டு, இன்று ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன். நான் இப்ப, இன்னும் என்னுடன் சேர்ந்து இருக்கும் அடியாட்கள் , பக்தர்கள் ஒரு சிலருடன் நாட்டை  விட்டு வெளியே களவாக, பணத்துடன் செல்வத்துடன் போய்க் கொண்டு இருக்கிறேன். மனைவி கூட என்னுடன் வர மறுத்துவிட்டார்.  பிடிபட்டால் நானே இல்லை!  உங்களுக்கு நான் கூறும் இறுதி வாக்கியம் இது தான்:   "ஒரு பரம ஏழைக்கும் ஒரு மிகப்பெரிய பணக்காரனுக்கும் இடையே உள்ள தொடர் ஓட்டத்துக்கு பெயர்தான் “பேராசை”!   இதற்கு பெயர் வைத்தது யார் என்று கேட்டால், அந்த பணக்காரனே தான்! அது மட்டும் அல்ல, பிறர் எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். ஆனால், அந்த பட்டத்தை [“பேராசை”] அவர்கள், முன்னுக்கு வர முயற்சிக்கும் ஏழைகளுக்கு, முகம் தெரியாதவர்களுக்கு, சாமானியர்களுக்கு, உழைப்பாளர்களுக்கு சூட்டிச் சூட்டி, அவர்களை வரவிடாமல் தடுத்து மகிழ்கிறார்கள்! உண்மையில் இவர்களே, நானே பேராசை பிடித்தவன்!!   நன்றி    அன்புடன்   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. பிழைத்துக் கொண்டேன்," என்கிறார். “Knife’’ (நைஃப்) என்னும் தனது புதிய புத்தகத்தை, தனக்கு நடந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ருஷ்டி கூறினார். ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் அவர் விரிவுரை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 27 விநாடிகள் நீடித்த அந்த தாக்குதலில், தன்னை தாக்க வந்த நபர், எப்படி படிக்கட்டுகளில் ஏறி வந்து, தன் கழுத்து, வயிறு உட்பட உடல் முழுவதும் 12 முறை கத்தியால் குத்தினார் என்பதை ருஷ்டி நினைவு கூர்ந்தார். "என்னால் என்னைத் தாக்குபவருக்கு எதிராகச் சண்டையிட முடியவில்லை, தப்பித்து ஓடவும் முடியவில்லை," என்று அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் விவரித்தார். கத்தியால் தாக்கப்பட்டதும் அவர் தரையில் விழுந்தார். பெருமளவு ரத்தம் அவரைச் சுற்றி வெள்ளமாக ஓடியது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்தார்.   'ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்' படக்குறிப்பு,ஆலன் யென்டோப், லேடி ருஷ்டி மற்றும் சல்மான் ருஷ்டி. ஆலனும் சல்மானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். இந்தியாவில் பிறந்த 76 வயதாகும் பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பகிரப்பட்டது. சல்மான் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்னும் புத்தகத்தால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். "ஏதாவது ஒருநாள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மேடையில் குதித்து என்னை தாக்கக் கூடும். இவ்வாறு என் மனதில் தோன்றாமல் இருந்திருந்தால் அது அபத்தமாக இருந்திருக்கும்," என்று தன் பயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.   'கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சல்மான் தாக்கப்பட்டதையடுத்து, கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது. முதன்முறையாக, ருஷ்டி தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தன் எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். நியூ ஜெர்சியில் வசிக்கும் 26 வயதுடைய ஹாடி மாதர் என்பவர் மீது சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு மாதர் அளித்த பேட்டியில், சல்மானின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்ததாகக் குறிப்பிட்டு, "இது போன்ற நேர்மையற்ற நபர்களை நான் வெறுக்கிறேன்" என்று கூறியுள்ளார். சல்மான் ருஷ்டி 2022இல் தனக்கு நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் பற்றியும் அந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டார். இதையொட்டி அலன் யென்டோப் உடன் ஒரு நேர்காணலில் விரிவாகப் பேசினார். நைஃப் புத்தகத்தில், சல்மான் ருஷ்டி தன்னை தாக்கியவருடன் ஒரு கற்பனையான உரையாடலை நடத்துவது போன்றும், ருஷ்டிக்கு அந்த நபர் பதிலளிப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது. "அமெரிக்காவில், பலர் நேர்மையானவர் போன்று நடிக்கிறார்கள், அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு பொய் சொல்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது ஒரு காரணமாக இருக்குமா?" என்று அந்த நபர் கேட்பது போன்று புனையப்பட்டுள்ளது. ருஷ்டி இதுவரை தாக்குதல் நடத்திய மாதர் என்ற நபரைச் சந்தித்ததில்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. ருஷ்டியின் புத்தகத்தை மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து விசாரணை சற்று தாமதமானது. இந்த வழக்கு அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   'தி சாத்தானிக் வெர்சஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் தடைசெய்யப்பட்டது. சல்மான் ருஷ்டி 1981இல் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்னும் புத்தகத்தின் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புத்தகம் பிரிட்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. ஆனால் அவரின் நான்காவது புத்தகம், 'தி சாத்தானிக் வெர்சஸ்', இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் சித்தரிப்பு மற்றும் மதத்தைப் பற்றிய அதன் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது. இரானின் அப்போதைய தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி 1989இல் ஃபத்வா (மத ஆணை) ஒன்றை வெளியிட்டு ருஷ்டியின் படுகொலைக்கு அழைப்பு விடுத்து, புத்தக ஆசிரியரின் தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்த ஃபத்வா ரத்து செய்யப்படவே இல்லை. இதன் விளைவாக, ருஷ்டி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ருஷ்டிக்கு வந்த எண்ணற்ற கொலை மிரட்டல்களின் காரணமாக ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தனர். நாத்திகவாதிகளாக மதத்தைப் பின்பற்றாத இஸ்லாமியர்களுக்கு மகனாகப் பிறந்த சல்மான் ருஷ்டி, கருத்து சுதந்திரத்திற்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். தற்போது அது "மிகவும் கடினமாகிவிட்டது" என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். "இளைஞர்கள் உட்படப் பலர், கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்," என்பதை வருத்தத்துடன் குறிப்பிடும் ருஷ்டி "கருத்து சுதந்திரத்தின் முழு அம்சம் என்னவென்றால், நீங்கள் உடன்படவில்லை என்றாலும் அந்தக் கருத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, தனது தனிப்பட்ட உடமைகளைப் பற்றி எண்ணியது 'முட்டாள்தனமாக' பார்ப்பதாகவும் தனது ரால்ப் லாரன் உடை பாழாகிவிட்டதை எண்ணி அந்த நேரத்தில் வருத்தப்பட்டதாகவும் ருஷ்டி கூறினார். மேலும், தனது வீட்டுச் சாவியும் கிரெடிட் கார்டுகளும் தனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்றும் அவர் கவலைப்பட்டாராம். "நிச்சயமாக, இது நகைப்புக்குரியதுதான். ஆனால் அந்தக் கோர நிகழ்வை பின்னோக்கிப் பார்த்தால், அது என்னிடம் சொல்வது என்னவென்றால், எனக்குள் இறக்கக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. எனக்கு கீழே விழுந்த அந்த வீட்டுச் சாவி வேண்டும், எனக்கு அந்த கிரெடிட் கார்டுகள் தேவைப்படும் என்று எனது உடமைகளைப் பற்றிய எண்ணங்களும் ஓடியது. இவை நான் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு. 'நீங்கள் வாழப் போகிறீர்கள். வாழுங்கள், வாழுங்கள்...' என்று சொல்வதாகவே நான் பார்த்தேன்’’ என்றார். தாக்குதலுக்கு ஓராண்டு முன்பு, ருஷ்டி தனது ஐந்தாவது மனைவியான அமெரிக்க கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸை மணந்தார். லேடி ருஷ்டி பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டதும், கத்திக் கூச்சலிட்டதாகக் குறிப்பிடுகிறார். "அது என் வாழ்க்கையின் மோசமான நாள்" என்றும் கூறினார். லேடி ருஷ்டி, சல்மான் ருஷ்டியின் கண் இமைகளை மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்த்து தைத்தபோது தாம் அருகில் இருந்ததை விவரிக்கிறார். "நான் அவருடைய கண்களை அதிகம் நேசிக்கிறேன். அன்று அவர் இரண்டு கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்னர் எங்கள் உலகம் மாறியது. இப்போது நான் அவருடைய ஒற்றைக் கண்ணை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்கிறார் லேடி ருஷ்டி. ருஷ்டி தனது நைஃப் புத்தகத்தை 'குறைந்தபட்ச காதல் கதை' என்றாலும், ஒரு திகில் கதையின் புத்தகம் என்றே குறிப்பிடுகிறார். "இந்த மோதலில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று வன்முறை, மதவெறி. மற்றொன்று அன்பின் சக்தி. நிச்சயமாக, அன்பின் சக்தி என் மனைவி எலிசாவின் உருவில் கிடைத்தது. நடந்த சம்பவங்கள் இறுதியில் வெறுப்பின் சக்திகளைவிட அன்பின் சக்தி வலிமையானது என்பதை நிரூபித்தன. இந்த நிகழ்வைப் பற்றி நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்," என்கிறார் தீர்க்கமாக. மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிடும் ருஷ்டி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளில் நான் திருப்தி அடையாவிட்டால் நிகழ்வில் பங்கு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றிப் பேசுகையில் அவர் "ஒரு அழகான பிடிவாதமான நபர்" என்று குறிப்பிட்டு, "எனக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c51nxzjdrdxo
    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.