Jump to content

சீமான்: "திராவிடம் என்றால் ஏன் எரிகிறது? உங்கள் செயலை பெரியாரே விரும்ப மாட்டார்"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்: "திராவிடம் என்றால் ஏன் எரிகிறது? உங்கள் செயலை பெரியாரே விரும்ப மாட்டார்"

23 நிமிடங்களுக்கு முன்னர்
சீமான் திராவிடம்
 
படக்குறிப்பு,

சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர் - நாம் தமிழர் கட்சி

திராவிடம் என்றால் தனக்கு ஏன் எரிகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பேசிய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சங்க இலக்கியங்களை சந்திப்பிரித்து எளிமைப் பதிப்புகளாகவும், திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூலையும் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தமிழ் பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் கூட்டு வெளியிடாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இந்த அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்த நிலையில், அவரை விமர்சித்து சமூக ஊடகங்களில் பலரும் கருத்துகளை பகிர்ந்தனர்.

இந்த நிலையில், வ.உ.சி. பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி அவரது சிலைக்கு மாலை அணிவித்து விட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம் திராவிடம் தொடர்பான அவரது எதிர் நிலைப்பாடு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு விரிவாக பதில் அளித்தார் சீமான். அதன் விவரம்:

தமிழக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி உறுதியாக போட்டியிடுவோம். அது தொடர்பாக தொடர்ந்து நிர்வாகிகளுடன் விவாதித்தோம். கடந்த முறை எங்களுக்கு மக்கள் 12 சதவீத வாக்குகளை வழங்கினார்கள். இம்முறை அதை விட அதிகமான வாக்குகள் வரும் என நம்புகிறோம்.

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதை பொருட்களை விற்க தடை விதித்திருக்கிறது தமிழக அரசு அதை வரவேற்கிறோம். அதுபோல, டாஸ்மாக் மதுபான கடைகளையும் இந்த அரசு மூடுமா? தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது திமுக. ஆனால், ஏதோ இப்போதுதான் அந்த கட்சி தமிழ்நாட்டில் முதல் முறையாக ஆட்சிக்கு வருவது போல, தமிழ் படித்தவர்களுக்கு ஆட்சியில் முன்னுரிமை என்ற அறிவிப்பை வெளியிடுகிறது.

இதை கேட்கும்போது "ஆஹா" என இருக்கலாம். ஆனால், இத்தனை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது நீங்கள் என்ன செய்தீர்கள்?

எங்களுடைய அண்ணன் தமிழீழ வைப்பகம் என்ற பெயரில் வங்கி நடத்தினார். அதை போலவே நாங்களும் தமிழர் வைப்பகம் என்ற சேமிப்பகத்தை நடத்தி, மிகக் குறைந்த வட்டிக்கு தொழில் முனைவோருக்கும் வேளாண் குடிமகளுக்கும் கடன் கொடுத்து உதவுவதாக கூறியிருக்கிறோம்.

ஆனால், 18 ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த ஒரு கட்சி, மாநிலத்தில் கால் நூற்றாண்டாக ஆட்சியில் இருந்த கட்சி, மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, ஏதோ புதிதாக ஆட்சிக்கு வந்து ஒரு திட்டத்தை அறிவிப்பது போல, தமிழ்நாடு ஸ்டேட் வங்கி ஆரம்பிப்போம் என்று ஓர் அறிவிப்பை வெளியிடுகிறார்கள்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

மறைந்த கருணாநிதியின் நினைவிடத்துக்கு ரூ. 39 கோடி நிதி செலவிட்டு சமாதி கட்டுவோம் என அரசு அறிவிக்கிறது. அது யாருடைய பணம்? ஆனால், ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் ஈழத் தமிழர்களுக்கு வீடு கட்டித் தருவோம், ஆறு கோடி ரூபாயில் தமிழ்நாட்டில் உள்ள தென்னை மரங்களை பராமரிப்போம் என்கிறீர்கள்.

கள்ளுக்கடைகள், கேரளாவில் உள்ளன, ஆந்திராவில் உள்ளன, புதுச்சேரியில் கூட உள்ளன. ஆனால், ஏன் தமிழ்நாட்டில் அப்படி திறப்பதில்லை? அப்படி செய்தால் டாஸ்மாக் வியாபாரம் முடங்கி விடும். அது நடந்தால் மதுபான ஆலைகள் படுத்து விடும். அதுதான் இவர்களுக்குப் பிரச்னை.

நாங்கள் ஏன் திராவிடத்தை எதிர்க்கிறோம்?

பெரியார்

பட மூலாதாரம்,DHILEEPAN RAMAKRISHNAN

பெரியாருக்கு ரூ. 100 கோடிக்கும் மேலாக சிலை வைப்போம் என்று கூறுகிறார்கள். பெரியாரிடம் எதை கேட்டாலும் அதற்கு அவர் பணம் வாங்கும் வழக்கத்தை கொண்டவர். திருமணத்துக்கு அவர் வருவதானாலும் காசு வாங்குவார். மேடையில் அவர் பேசும்போது ஒரு முறை யாரோ ஒருவர் செருப்பை எடுத்து வீசுகிறார். அதை எடுத்து வைத்துக் கொண்டு, மற்றொரு செருப்பை என்ன செய்யப்போகிறார், அதையும் எடுத்து வீசு என்று கூறி அதையும் வாங்கி வைத்துக் கொள்கிறார்.

மற்றொரு முறை தன் மீது வீசப்பட்ட செருப்புகளை எல்லாம் அடுக்கி வைத்து ஜோடி அரையணா விலை என்று கூறி அவற்றை விற்று அந்த செருப்புகளை காசாக்கி பணம் சேமித்தார். அப்படி எல்லாம் பணம் சேர்த்து பல பள்ளிகள், கல்லூரிகளை ஆரம்பிக்க உதவிச் சென்றார்.

இங்கே பேருந்து கட்டணமில்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கிறீர்கள். அதற்கு என்ன காரணம்? அவர்கள் வறுமையில் இருக்கிறார்கள் என அர்த்தம். குடும்பத்தலைவிக்கு ஆயிரம் ரூபாய் தருவதாக அறிவிக்கிறீர்கள். காரணம் என்ன? அவருக்கு கைச்செலவுக்கு காசில்லை. அங்கும் வறுமை. அரசி இலவசம் என்கிறீர்கள். காரணம், அதை விலை கொடுத்து வாங்கவும் வசதியில்லை.

இந்த நிலையை எல்லாம் மாற்றுவதற்கு சீர்திருத்தவாதி, முற்போக்குவாதி, அதற்கான தலைவர் என்று பேசப்பட்ட ஐயா பெரியாருக்கு ரூ. 100 கோடியில் சிலை வைப்பதாக பேசுவது எப்படி இருக்கிறது?

குஜராத்தில் சர்தார் வல்லபபாய் படேலுக்கு ரூ. 3,000 கோடியில் மோதி சிலை வைத்ததற்கும், நீங்கள் ரூ. 100 கோடியில் பெரியாருக்கு சிலை வைப்பதாக அறிவிப்பதால் உங்களிருவருக்கும் என்ன பெரிய மாறுபாடு இருக்கிறது? தமிழ்நாட்டில் பெரியாருக்கு போதும் என்ற அளவுக்கு சிலைகள் உள்ளன. இப்படி செய்வதற்குப் பெயர்தான் பணக்கொழுப்பு, அதிகாரத் திமிரு. பெரியார் இருந்தால் கூட இப்படி செய்வதை விரும்பியிருக்க மாட்டார். இந்தக் கொடுமைகளை எல்லாம் எடுத்துரைத்தால், சிலர் திராவிடத்துக்கு எதிராக பேசுகிறார்கள் என்று கொதிக்கிறார்கள்.

திராவிடம் என்றால் ஏன் எங்களுக்கு எரியாது? 50 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆளக்கொடுத்து கணக்கிலடங்கா ஊழலை செய்து, என் நிலத்தின் வளத்தைக் கெடுத்து, மக்களின் நலத்தைக் கெடுத்து, காடு, மலை, ஏரி, குளம் எல்லாவற்றையும் அழித்து நாசமாக்க பார்க்கும்போது ஒரு தூய தமிழ் மகனுக்கு நெஞ்சும் வயிறும் எரியாமல் என்ன செய்யும்?

திராவிடம் என்றால் எங்களுக்கும் சிறிது சொறியத்தான் செய்கிறது. ஆனால், தமிழ், தமிழர், தமிழம் என்றால் உங்களுக்குத்தான் எரிகிறது என்றார் சீமான்.

https://www.bbc.com/tamil/india-58465076

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பெரியார் சிலையை அரசு கட்டவில்லையாமே?

Crowd funding மூலம் ஒரு தனியார் அமைப்பு செய்கிறதாமே?

உண்மையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த "தூய தமிழ் மகன்" என்றால் என்ன? யாராவது ஆய்வாளர்கள் விளக்கம் தருவார்களா?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இந்த "தூய தமிழ் மகன்" என்றால் என்ன? யாராவது ஆய்வாளர்கள் விளக்கம் தருவார்களா?😂

நான் ஆய்வாளர் இல்லை, இருந்தாலும் மனதில் பட்டதை எழுதுகிறேன். தூய தமிழ் மகன் என்றால் ஊழல் லஞ்சத்தில் ஈடுபடாதவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஏராளன் said:

நான் ஆய்வாளர் இல்லை, இருந்தாலும் மனதில் பட்டதை எழுதுகிறேன். தூய தமிழ் மகன் என்றால் ஊழல் லஞ்சத்தில் ஈடுபடாதவன்.

 

நீங்கள்  உயர்ந்த  மனிதரைய்யா

சிலர்  இதை  பிறப்பு சம்பந்தப்படுத்தி  பார்ப்பர்

சிரிப்பர்???😂

Link to comment
Share on other sites

13 minutes ago, ஏராளன் said:

நான் ஆய்வாளர் இல்லை, இருந்தாலும் மனதில் பட்டதை எழுதுகிறேன். தூய தமிழ் மகன் என்றால் ஊழல் லஞ்சத்தில் ஈடுபடாதவன்.

நல்ல நகைச்சுவை. இந்த நூற்றாண்டின் நல்ல ஜோக் இது. சிரிக்க வைத்த‍த்தற்கு நன்றி ஏராளன். 2009 ம் ஆண்டு சுவிற்சர்லாந்தில் இருந்திருந்தால் எப்படி எல்லாம் மக்கள் பணத்தை தூய தமிழன் கொள்ளை அடித்தான் என்று தெரிந்திருக்கும்.  😂

1 hour ago, Justin said:

இந்த "தூய தமிழ் மகன்" என்றால் என்ன? யாராவது ஆய்வாளர்கள் விளக்கம் தருவார்களா?😂

தனக்கு என்ன துன்பம் நடந்தாலும் தனது தவறுகளை மறைத்து அடுத்தவன் மீது பழி போட்டு திட்டி தீர்ப்பவன் தான் தூய தமிழன் என்பதே உண்மையான ஜதார்த்தம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்திட்டார்  பணப்பெட்டிக்கு  காவல்  நின்றவர்???

ஆனால்  பலதரம் கேட்டும்  காட்டிக்கொடுக்கமாட்டார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, tulpen said:

நல்ல நகைச்சுவை. இந்த நூற்றாண்டின் நல்ல ஜோக் இது. சிரிக்க வைத்த‍த்தற்கு நன்றி ஏராளன். 2009 ம் ஆண்டு சுவிற்சர்லாந்தில் இருந்திருந்தால் எப்படி எல்லாம் மக்கள் பணத்தை தூய தமிழன் கொள்ளை அடித்தான் என்று தெரிந்திருக்கும்.  😂

தனக்கு என்ன துன்பம் நடந்தாலும் தனது தவறுகளை மறைத்து அடுத்தவன் மீது பழி போட்டு திட்டி தீர்ப்பவன் தான் தூய தமிழன் என்பதே உண்மையான ஜதார்த்தம். 

சீமான் 2009 இல் கொள்ளை அடித்தாரா?!

தமிழனின் பின்னடைவிற்கு கூட இருந்தே குழிபறிப்போரும் காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஏராளன் said:

சீமான் 2009 இல் கொள்ளை அடித்தாரா?!

தமிழனின் பின்னடைவிற்கு கூட இருந்தே குழிபறிப்போரும் காரணம்.

இது  ஒருவகை  வியாதி

எவரும்  அமைதியாக  இருந்தால் சொறியச்சொல்லும்

அதுவும்  புலி சார்ந்தவர்களாக 

பார்த்து பார்த்து  சொறியணும்

ஆனால்  எங்களுக்கும் அவர்களுக்கும்  எந்த  சொந்த  பந்தமும்  இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ஏராளன் said:

நான் ஆய்வாளர் இல்லை, இருந்தாலும் மனதில் பட்டதை எழுதுகிறேன். தூய தமிழ் மகன் என்றால் ஊழல் லஞ்சத்தில் ஈடுபடாதவன்.

அப்ப ஒபாமா தூய தமிழரா? (நானும் ஆய்வாளர் இல்லை! பகிடி தான்:grin:)

Link to comment
Share on other sites

24 minutes ago, ஏராளன் said:

சீமான் 2009 இல் கொள்ளை அடித்தாரா?!

தமிழனின் பின்னடைவிற்கு கூட இருந்தே குழிபறிப்போரும் காரணம்.

நீங்கள் தூய தமிழ் மகனை பற்றி கூறியதால் தூய தமிழ் மகனைப் பற்றி  பொது படையாகவே தெரிவித்தேன் ஏராளன். நான் சீமானை பற்றி கூறவில்லை. எல்லா இனத்திலும் நல்லவர்களும் உள்ளார்கள்.  ஊழல் செய்யும் திருடர்களும் உள்ளார்கள். தமிழரில் அப்படி லஞ்சம் ஊழல் செய்வோர் இல்லை என்று நீங்கள் ஜோக் அடித்த‍தால் உங்களுக்கு பதில் எழுதினேன்.

சுவிற்சர்லாந்து பொது துறை ஊழல்கள் குறைந்த நாடு. அப்படியானல் சுவிஸ் மக்கள் தூய தமிழரா?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஏராளன் said:

சீமான் 2009 இல் கொள்ளை அடித்தாரா?!

தமிழனின் பின்னடைவிற்கு கூட இருந்தே குழிபறிப்போரும் காரணம்.

கூட இருந்து குழிபறித்தோரைத் தான் ருல்பென் அடிக்கடி சுட்டிக் காட்டுறார்! மக்களை ஏமாற்றிக் காசடித்து விட்டு இன்று முன்னாள் போராளிகளையும் குடும்பங்களையும் கைவிட்டு விட்டவர்கள் அவர்கள்!

ஆனால், இதை சுட்டிக் காட்டும் ருல்பெனுக்கு கிடைக்கும் வசவுகளைப் பார்த்தீர்களா? நான் கருதுவது இந்தப் போக்குத் தான் எங்களுக்கு அடுத்த நூறாண்டுகளுக்கு முன்னோக்கி நகர விடாத தடை! 

Link to comment
Share on other sites

32 minutes ago, விசுகு said:

இது  ஒருவகை  வியாதி

எவரும்  அமைதியாக  இருந்தால் சொறியச்சொல்லும்

அதுவும்  புலி சார்ந்தவர்களாக 

பார்த்து பார்த்து  சொறியணும்

ஆனால்  எங்களுக்கும் அவர்களுக்கும்  எந்த  சொந்த  பந்தமும்  இல்லை

அரசியல் விமர்சனம். நடந்த, நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கு உங்களுக்கு உள்ள அதே உரிமை எனக்கும் உள்ளது விசுகு.  தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விமர்சிக்கலாம் எவரும் உலகில் புனிதர்கள் இல்லை.  தவறு செய்தவர்கள் உங்கள் அன்பிற்கு உரியவர்கள் என்பதால் நீங்கள் கடுப்பாகிறீர்களோ தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

அரசியல் விமர்சனம். நடந்த, நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கு உங்களுக்கு உள்ள அதே உரிமை எனக்கும் உள்ளது விசுகு.  தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விமர்சிக்கலாம் எவரும் உலகில் புனிதர்கள் இல்லை.  தவறு செய்தவர்கள் உங்கள் அன்பிற்கு உரியவர்கள் என்பதால் நீங்கள் கடுப்பாகிறீர்களோ தெரியவில்லை. 

அரசியல் விமர்சனம் என்பது புலிகள் சார்ந்தது தானா உங்களுக்கு??

எல்லா திரிகளிலும் இதையே எழுதி எழுதி புலம்புவது எந்த வகையான விமர்சனம்??

வருவதே எப்பொழுதாவது

வந்தால் இவற்றை மணந்து பிடித்து விசத்தை கக்குவது தான் விமர்சனமோ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விமர்சிக்கலாம் எவரும் உலகில் புனிதர்கள் இல்லை

எப்போதாவது நடுநிலமையாக நின்று கருத்து தெரிவித்து இருக்கின்றீர்களா?

அதென்ன உங்களுக்கு புலிகள் மட்டும் தவறு செய்தவர்களாக தெரிகின்றாகள்? யாழ்களத்தில் எத்தனையோ திரிகளில் வேறு  இயக்கங்கள் பற்றி கடுமையான கருத்தாடல்கள் நடந்தனவே? சிங்கள இனவாதம் பற்றி காரசரமான கருத்தாடல் எல்லாம் நடந்தனவே? அங்கு எல்லாம் வர மாட்டீர்கள். அப்படியே அந்த திரிகளுக்குள் தாங்கள் சமூகமளித்தாலும் புலி சொல் கட்டாயம் இருந்தே தீரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

அப்ப ஒபாமா தூய தமிழரா? (நானும் ஆய்வாளர் இல்லை! பகிடி தான்:grin:)

ஒபாமாவின் முழுவிபரமும் உங்கள் கூட்டாளி டொனால்ட் ரம்பை கேட்டால் சொல்லுவார்  நானும் பகிடிக்கு 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

ஒபாமாவின் முழுவிபரமும் உங்கள் கூட்டாளி டொனால்ட் ரம்பை கேட்டால் சொல்லுவார்  நானும் பகிடிக்கு 😜

ஒபாமா பற்றி ட்ரம்ப் சொல்வது உண்மையாக இருக்கும்! 
பிரபாகரன் பற்றி மகிந்த குழு சொல்வது உண்மையாக இருக்கும்!

(கோபிக்காதேங்கோ, குமாரசாமி தியரியை அப்ளை பண்ணிப் பார்த்தேன்! , அவ்வளவே!) 

48 minutes ago, விசுகு said:

அரசியல் விமர்சனம் என்பது புலிகள் சார்ந்தது தானா உங்களுக்கு??

எல்லா திரிகளிலும் இதையே எழுதி எழுதி புலம்புவது எந்த வகையான விமர்சனம்??

வருவதே எப்பொழுதாவது

வந்தால் இவற்றை மணந்து பிடித்து விசத்தை கக்குவது தான் விமர்சனமோ???

இதில் விசம் எங்கே இருக்கிறது விசுகர்? அவர் சொன்ன விடயம் சுவிசில் நடந்ததா இல்லையா? ஒரு கருப்பொருள் பற்றிப் பேச்சு வரும் போது நடந்த சம்பவத்தைச் சொல்வது ஏன் இவ்வளவு பிரச்சினையாக இருக்கிறது உங்களுக்கு?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Justin said:

பிரபாகரன் பற்றி மகிந்த குழு சொல்வது உண்மையாக இருக்கும்!

இது வரைக்கும் தமிழினத்தலைவர் எமது பிரபாகரனைப்பற்றி எந்த சிங்கள தலைவர்களும் இழிவாக பேசியது இல்லை. மாற்றாக அவர் எமக்கு எதிரியாக இருந்தாலும்  சட்டம் ஒழுங்கில் நேர்மையானவர்,பண்பானவர் என்றுதான் இன்று வரைக்கும் எமது தலைவருக்கு புகழாரம் சூட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் எமது ஈனத்தமிழர்கள் மட்டும் இன்றும் நாறல் வாயால்.......😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு இனத்தை சேர்ந்த நேர்மையான மனிதனும் ஊழல் லஞ்சம் செய்யமாட்டான் தமிழ்நாட்டு அரசியல்வாதி இனவாத கவர்ச்சிக்காக துய தமிழன்  என்ற சொல்லை பாவிக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

இந்த "தூய தமிழ் மகன்" என்றால் என்ன? யாராவது ஆய்வாளர்கள் விளக்கம் தருவார்களா?😂

 

"தூய தமிழ் மகன்"  என்பது....
தன்  இனத்தையும், சனத்தையும் ... என்றும், நேசிப்பவன்.

எப்ப பார்த்தாலும்... தன்  இனத்துக்கு எதிராகவும்,
புலி வாந்தி... எடுப்பவர்களும், இந்தப்  பட்டியலில் அறவே.. இல்லை. 

பிற் குறிப்பு:  உ + ம்...  சுமந்திரன்,  அவரின்..அல்லக்கைகள்...
தூய தமிழ் இனத்தில், சேர்க்கப் படவில்லை. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கேள்வி.. நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே.. மோடியை நானும்தான் நக்கலடித்தேன் சிலைக்கு.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூய தமிழ் மகன் என்பது....

தன் இனத்தை... நேசிக்காது... பிற இனத்தை,
தூக்கிப் பிடிப்பவனை... 

மற்ற.. நாட்டவர்களாக... இருந்தால், 
சுவரோடு... மோதி, அடித்துக்  கொன்று  இருப்பார்கள்.

தமிழினம்... மென்மையான இனம், என்ற படியால்...
போரில் தோற்று... உங்கள், நக்கல், நையாண்டிகளை...  
பார்த்துக் கொண்டு,  இருக்கின்றது.      

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 போராட்டம் நடந்த காலத்தில் தாயகத்தில் உள்ள பெரும்பான்மை தமிழர்கள் உயிரை கொடுத்து புலிகளை வளர்த்தார்கள்,

புலம் பெயர் பெரும்பான்மை தமிழர்கள் பொருளை கொடுத்து புலிகளை வளர்த்தார்கள்.

போராட்டம் முற்று பெற்ற பின்னரும் தாயகத்திலும் சரி புலம் பெயர் தேசத்திலும் சரி புலிகளை வசைபாடிய தாயக கனவுடன் வாழ்ந்த தமிழர்களே கிடையாது.

போராட்டத்துக்கு நிதி சேகரித்தவர்கள் அது முற்று பெற்ற பின்னர் அதை கையாடல் செய்தது முற்று முழுதான உண்மைதான், அதை தவறு என்று சொல்பவர்கள் அதிகம்தான், ஆனால் அவர்களை தண்டிக்க ஏது வழி? வாழும் நாடுகளின் சூழலும் சட்டமும் இடம் கொடுக்குமா?

காசு கொடுத்தவர்களே அதுபற்றி கதைத்து புண்ணியமில்லை என்று ஒதுங்கிகொண்டார்கள், தூர நின்று ஒருகாலம் வேடிக்கை பார்த்தவர்களே அதை துருவி துருவி சந்தடி சாக்கில் எம் போராட்ட அமைப்பையும் தலைமையையும் போராளிகளையும் சீண்டி போகிறார்கள்.

எண்ணெய் பூசிகொண்டு மண்ணில் புரண்டதுபோல் மண்மீட்புகாலத்தில் வாழ்ந்தவர்களே நியாயத்தை கேட்கிறோம் என்ற பேரில் தமது தனிப்பட்ட விமர்சனங்களை போராட்ட அமைப்பு தலைமைமீது கொட்டி தீர்க்கிறார்கள், ஒருகாலம்   உயிரையும் பொருளையும் உணர்வையும் தமிழரின் எதிர்கால வாழ்வுக்காய் கொடுத்து ஏங்கியவர்கள் கொடுத்தவர்கள் அதை சகித்து கொள்ள மாட்டார்கள்.

ஒபாமா தூய தமிழரா சுவிஸ்காரர்கள் தூய தமிழரா என்று கேட்பதெல்லாம் விதண்டாவாத நகைசுவையின் உச்சம்.

சீமான் என்ற தமிழர் தமிழர்கள் பற்றிய விசயத்தில் பேசியதால் தூய தமிழன் என்ற வார்த்தை அங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதுவே அமெரிக்கர்கள் ஒபாமாபற்றி பேசினால், சுவிஸ் மக்கள் சுவிஸ் அரசியல்பற்றி பேசினால் அங்கே தூய அமெரிக்கர்கள் தூய  சுவிஸ்காரர்கள் என்ற சொல்லாடல் கையாளப்படும்.

தூய தமிழர் என்ற சொல் எதுக்கு அங்கே வரபோகிறது?

பொருத்தமற்ற சொற் கையாடல்கள்  வெறும் சீண்டல் கருத்தாடலில் நீங்கள்  ஈடுபடுகிறீர்கள் என்பதை காட்டி கொடுத்துவிடும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நல்ல கேள்வி.. நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே.. மோடியை நானும்தான் நக்கலடித்தேன் சிலைக்கு.. 

புலவரே,

நான் அறிந்த வரையில் (பிழை எனில் திருத்தி கொள்கிறேன்).

1. இந்த சிலையை தமிழ் நாடு அரசு, மக்கள் வரிபணத்தில் வைக்கவில்லை. 

2. இது ஒரு தனியார் முன்னெடுப்பு. 3 வருடம் முதலே மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டது. எடப்பாடி அரசு வழங்கவில்லை. இப்போ ஸ்டாலின் அனுமதி வழங்கியுள்ளார்.

ஆகவே மோடி வைத்த சிலையோடு இதை ஒப்பிடுவது எவ்வளவு தூரம் சரி என்று தெரியவில்லை.

அடுத்து, சிலைக்குள் நூலகம், இன்னும் பல வசதிகள், மேலே ஏறி போகும் லிப்ட் எல்லாம் இருக்குமாம். நல்லதுதானே, தனியார் காசில் கட்டட்டுமே?

இல்லை நீங்கள் சிலை வைப்பதையே எதிர்கிறீர்களா? அப்போ பொன் சிவகுமாரன் சிலையையும் எதிர்கிறீர்களா? ஒப்பீடு நமக்கு கசக்கலாம் ஆனால் அவர்களுக்கு பெரியார் அப்படி ஒருவர்தானே?

இல்லை பெரியார் அப்படி இல்லை என்கிறீர்களா? ஆனால் பெரியாரை தூற்றி அரசியல் செய்வோருக்கு ஒரு சீட்டும் கிடைக்காமல் போகும் நிலைதானே அங்கே உள்ளது. ஆகவே சில ஈழத்தமிழருக்கும், 30 லட்சம் தமிழக தமிழர்களை விட, இரு திராவிட கட்சிகளின் கூட்டணிக்கு வாக்களித்த லட்சோப, லட்சம் மக்கள் இதை ஆதரிக்க கூடும் அல்லவா? அப்படி இல்லை என்றால் அவர்கள் இந்த கட்சிகளை அடுத்த தேர்தலில் தோற்கடித்து, சிலையை எதிர்தவர்களை முதல்வர் ஆக்கட்டுமே?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/9/2021 at 15:23, ஏராளன் said:

அப்படி எல்லாம் பணம் சேர்த்து பல பள்ளிகள், கல்லூரிகளை ஆரம்பிக்க உதவிச் சென்றார்.

சீமான் சொல்லும் இந்த பள்ளிகள், கல்லூரிகள் எங்கே இருக்கிறன? தமிழ் நாட்டில்தானே? 

அதனால் நன்மை அடைந்தவர்கள்? தமிழ்நாட்டினர்தானே?

ஆகவே அந்த தமிழ்நாட்டினரில் ஒரு அமைப்பினர் தனியார் நிதி மூலம் சிலை வைக்கிறார்கள்.  மத்திய, மாநில அரசுகள் அனுமதி கொடுத்துள்ளன.

அவ்வளவுதான் மேட்டர்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.