Jump to content

சீமான்: "திராவிடம் என்றால் ஏன் எரிகிறது? உங்கள் செயலை பெரியாரே விரும்ப மாட்டார்"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்: "திராவிடம் என்றால் ஏன் எரிகிறது? உங்கள் செயலை பெரியாரே விரும்ப மாட்டார்"

23 நிமிடங்களுக்கு முன்னர்
சீமான் திராவிடம்
 
படக்குறிப்பு,

சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர் - நாம் தமிழர் கட்சி

திராவிடம் என்றால் தனக்கு ஏன் எரிகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பேசிய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சங்க இலக்கியங்களை சந்திப்பிரித்து எளிமைப் பதிப்புகளாகவும், திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூலையும் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தமிழ் பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் கூட்டு வெளியிடாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இந்த அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்த நிலையில், அவரை விமர்சித்து சமூக ஊடகங்களில் பலரும் கருத்துகளை பகிர்ந்தனர்.

இந்த நிலையில், வ.உ.சி. பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி அவரது சிலைக்கு மாலை அணிவித்து விட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம் திராவிடம் தொடர்பான அவரது எதிர் நிலைப்பாடு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு விரிவாக பதில் அளித்தார் சீமான். அதன் விவரம்:

தமிழக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி உறுதியாக போட்டியிடுவோம். அது தொடர்பாக தொடர்ந்து நிர்வாகிகளுடன் விவாதித்தோம். கடந்த முறை எங்களுக்கு மக்கள் 12 சதவீத வாக்குகளை வழங்கினார்கள். இம்முறை அதை விட அதிகமான வாக்குகள் வரும் என நம்புகிறோம்.

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதை பொருட்களை விற்க தடை விதித்திருக்கிறது தமிழக அரசு அதை வரவேற்கிறோம். அதுபோல, டாஸ்மாக் மதுபான கடைகளையும் இந்த அரசு மூடுமா? தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது திமுக. ஆனால், ஏதோ இப்போதுதான் அந்த கட்சி தமிழ்நாட்டில் முதல் முறையாக ஆட்சிக்கு வருவது போல, தமிழ் படித்தவர்களுக்கு ஆட்சியில் முன்னுரிமை என்ற அறிவிப்பை வெளியிடுகிறது.

இதை கேட்கும்போது "ஆஹா" என இருக்கலாம். ஆனால், இத்தனை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது நீங்கள் என்ன செய்தீர்கள்?

எங்களுடைய அண்ணன் தமிழீழ வைப்பகம் என்ற பெயரில் வங்கி நடத்தினார். அதை போலவே நாங்களும் தமிழர் வைப்பகம் என்ற சேமிப்பகத்தை நடத்தி, மிகக் குறைந்த வட்டிக்கு தொழில் முனைவோருக்கும் வேளாண் குடிமகளுக்கும் கடன் கொடுத்து உதவுவதாக கூறியிருக்கிறோம்.

ஆனால், 18 ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த ஒரு கட்சி, மாநிலத்தில் கால் நூற்றாண்டாக ஆட்சியில் இருந்த கட்சி, மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, ஏதோ புதிதாக ஆட்சிக்கு வந்து ஒரு திட்டத்தை அறிவிப்பது போல, தமிழ்நாடு ஸ்டேட் வங்கி ஆரம்பிப்போம் என்று ஓர் அறிவிப்பை வெளியிடுகிறார்கள்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

மறைந்த கருணாநிதியின் நினைவிடத்துக்கு ரூ. 39 கோடி நிதி செலவிட்டு சமாதி கட்டுவோம் என அரசு அறிவிக்கிறது. அது யாருடைய பணம்? ஆனால், ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் ஈழத் தமிழர்களுக்கு வீடு கட்டித் தருவோம், ஆறு கோடி ரூபாயில் தமிழ்நாட்டில் உள்ள தென்னை மரங்களை பராமரிப்போம் என்கிறீர்கள்.

கள்ளுக்கடைகள், கேரளாவில் உள்ளன, ஆந்திராவில் உள்ளன, புதுச்சேரியில் கூட உள்ளன. ஆனால், ஏன் தமிழ்நாட்டில் அப்படி திறப்பதில்லை? அப்படி செய்தால் டாஸ்மாக் வியாபாரம் முடங்கி விடும். அது நடந்தால் மதுபான ஆலைகள் படுத்து விடும். அதுதான் இவர்களுக்குப் பிரச்னை.

நாங்கள் ஏன் திராவிடத்தை எதிர்க்கிறோம்?

பெரியார்

பட மூலாதாரம்,DHILEEPAN RAMAKRISHNAN

பெரியாருக்கு ரூ. 100 கோடிக்கும் மேலாக சிலை வைப்போம் என்று கூறுகிறார்கள். பெரியாரிடம் எதை கேட்டாலும் அதற்கு அவர் பணம் வாங்கும் வழக்கத்தை கொண்டவர். திருமணத்துக்கு அவர் வருவதானாலும் காசு வாங்குவார். மேடையில் அவர் பேசும்போது ஒரு முறை யாரோ ஒருவர் செருப்பை எடுத்து வீசுகிறார். அதை எடுத்து வைத்துக் கொண்டு, மற்றொரு செருப்பை என்ன செய்யப்போகிறார், அதையும் எடுத்து வீசு என்று கூறி அதையும் வாங்கி வைத்துக் கொள்கிறார்.

மற்றொரு முறை தன் மீது வீசப்பட்ட செருப்புகளை எல்லாம் அடுக்கி வைத்து ஜோடி அரையணா விலை என்று கூறி அவற்றை விற்று அந்த செருப்புகளை காசாக்கி பணம் சேமித்தார். அப்படி எல்லாம் பணம் சேர்த்து பல பள்ளிகள், கல்லூரிகளை ஆரம்பிக்க உதவிச் சென்றார்.

இங்கே பேருந்து கட்டணமில்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கிறீர்கள். அதற்கு என்ன காரணம்? அவர்கள் வறுமையில் இருக்கிறார்கள் என அர்த்தம். குடும்பத்தலைவிக்கு ஆயிரம் ரூபாய் தருவதாக அறிவிக்கிறீர்கள். காரணம் என்ன? அவருக்கு கைச்செலவுக்கு காசில்லை. அங்கும் வறுமை. அரசி இலவசம் என்கிறீர்கள். காரணம், அதை விலை கொடுத்து வாங்கவும் வசதியில்லை.

இந்த நிலையை எல்லாம் மாற்றுவதற்கு சீர்திருத்தவாதி, முற்போக்குவாதி, அதற்கான தலைவர் என்று பேசப்பட்ட ஐயா பெரியாருக்கு ரூ. 100 கோடியில் சிலை வைப்பதாக பேசுவது எப்படி இருக்கிறது?

குஜராத்தில் சர்தார் வல்லபபாய் படேலுக்கு ரூ. 3,000 கோடியில் மோதி சிலை வைத்ததற்கும், நீங்கள் ரூ. 100 கோடியில் பெரியாருக்கு சிலை வைப்பதாக அறிவிப்பதால் உங்களிருவருக்கும் என்ன பெரிய மாறுபாடு இருக்கிறது? தமிழ்நாட்டில் பெரியாருக்கு போதும் என்ற அளவுக்கு சிலைகள் உள்ளன. இப்படி செய்வதற்குப் பெயர்தான் பணக்கொழுப்பு, அதிகாரத் திமிரு. பெரியார் இருந்தால் கூட இப்படி செய்வதை விரும்பியிருக்க மாட்டார். இந்தக் கொடுமைகளை எல்லாம் எடுத்துரைத்தால், சிலர் திராவிடத்துக்கு எதிராக பேசுகிறார்கள் என்று கொதிக்கிறார்கள்.

திராவிடம் என்றால் ஏன் எங்களுக்கு எரியாது? 50 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆளக்கொடுத்து கணக்கிலடங்கா ஊழலை செய்து, என் நிலத்தின் வளத்தைக் கெடுத்து, மக்களின் நலத்தைக் கெடுத்து, காடு, மலை, ஏரி, குளம் எல்லாவற்றையும் அழித்து நாசமாக்க பார்க்கும்போது ஒரு தூய தமிழ் மகனுக்கு நெஞ்சும் வயிறும் எரியாமல் என்ன செய்யும்?

திராவிடம் என்றால் எங்களுக்கும் சிறிது சொறியத்தான் செய்கிறது. ஆனால், தமிழ், தமிழர், தமிழம் என்றால் உங்களுக்குத்தான் எரிகிறது என்றார் சீமான்.

https://www.bbc.com/tamil/india-58465076

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பெரியார் சிலையை அரசு கட்டவில்லையாமே?

Crowd funding மூலம் ஒரு தனியார் அமைப்பு செய்கிறதாமே?

உண்மையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த "தூய தமிழ் மகன்" என்றால் என்ன? யாராவது ஆய்வாளர்கள் விளக்கம் தருவார்களா?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இந்த "தூய தமிழ் மகன்" என்றால் என்ன? யாராவது ஆய்வாளர்கள் விளக்கம் தருவார்களா?😂

நான் ஆய்வாளர் இல்லை, இருந்தாலும் மனதில் பட்டதை எழுதுகிறேன். தூய தமிழ் மகன் என்றால் ஊழல் லஞ்சத்தில் ஈடுபடாதவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஏராளன் said:

நான் ஆய்வாளர் இல்லை, இருந்தாலும் மனதில் பட்டதை எழுதுகிறேன். தூய தமிழ் மகன் என்றால் ஊழல் லஞ்சத்தில் ஈடுபடாதவன்.

 

நீங்கள்  உயர்ந்த  மனிதரைய்யா

சிலர்  இதை  பிறப்பு சம்பந்தப்படுத்தி  பார்ப்பர்

சிரிப்பர்???😂

Link to comment
Share on other sites

13 minutes ago, ஏராளன் said:

நான் ஆய்வாளர் இல்லை, இருந்தாலும் மனதில் பட்டதை எழுதுகிறேன். தூய தமிழ் மகன் என்றால் ஊழல் லஞ்சத்தில் ஈடுபடாதவன்.

நல்ல நகைச்சுவை. இந்த நூற்றாண்டின் நல்ல ஜோக் இது. சிரிக்க வைத்த‍த்தற்கு நன்றி ஏராளன். 2009 ம் ஆண்டு சுவிற்சர்லாந்தில் இருந்திருந்தால் எப்படி எல்லாம் மக்கள் பணத்தை தூய தமிழன் கொள்ளை அடித்தான் என்று தெரிந்திருக்கும்.  😂

1 hour ago, Justin said:

இந்த "தூய தமிழ் மகன்" என்றால் என்ன? யாராவது ஆய்வாளர்கள் விளக்கம் தருவார்களா?😂

தனக்கு என்ன துன்பம் நடந்தாலும் தனது தவறுகளை மறைத்து அடுத்தவன் மீது பழி போட்டு திட்டி தீர்ப்பவன் தான் தூய தமிழன் என்பதே உண்மையான ஜதார்த்தம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்திட்டார்  பணப்பெட்டிக்கு  காவல்  நின்றவர்???

ஆனால்  பலதரம் கேட்டும்  காட்டிக்கொடுக்கமாட்டார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, tulpen said:

நல்ல நகைச்சுவை. இந்த நூற்றாண்டின் நல்ல ஜோக் இது. சிரிக்க வைத்த‍த்தற்கு நன்றி ஏராளன். 2009 ம் ஆண்டு சுவிற்சர்லாந்தில் இருந்திருந்தால் எப்படி எல்லாம் மக்கள் பணத்தை தூய தமிழன் கொள்ளை அடித்தான் என்று தெரிந்திருக்கும்.  😂

தனக்கு என்ன துன்பம் நடந்தாலும் தனது தவறுகளை மறைத்து அடுத்தவன் மீது பழி போட்டு திட்டி தீர்ப்பவன் தான் தூய தமிழன் என்பதே உண்மையான ஜதார்த்தம். 

சீமான் 2009 இல் கொள்ளை அடித்தாரா?!

தமிழனின் பின்னடைவிற்கு கூட இருந்தே குழிபறிப்போரும் காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஏராளன் said:

சீமான் 2009 இல் கொள்ளை அடித்தாரா?!

தமிழனின் பின்னடைவிற்கு கூட இருந்தே குழிபறிப்போரும் காரணம்.

இது  ஒருவகை  வியாதி

எவரும்  அமைதியாக  இருந்தால் சொறியச்சொல்லும்

அதுவும்  புலி சார்ந்தவர்களாக 

பார்த்து பார்த்து  சொறியணும்

ஆனால்  எங்களுக்கும் அவர்களுக்கும்  எந்த  சொந்த  பந்தமும்  இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ஏராளன் said:

நான் ஆய்வாளர் இல்லை, இருந்தாலும் மனதில் பட்டதை எழுதுகிறேன். தூய தமிழ் மகன் என்றால் ஊழல் லஞ்சத்தில் ஈடுபடாதவன்.

அப்ப ஒபாமா தூய தமிழரா? (நானும் ஆய்வாளர் இல்லை! பகிடி தான்:grin:)

Link to comment
Share on other sites

24 minutes ago, ஏராளன் said:

சீமான் 2009 இல் கொள்ளை அடித்தாரா?!

தமிழனின் பின்னடைவிற்கு கூட இருந்தே குழிபறிப்போரும் காரணம்.

நீங்கள் தூய தமிழ் மகனை பற்றி கூறியதால் தூய தமிழ் மகனைப் பற்றி  பொது படையாகவே தெரிவித்தேன் ஏராளன். நான் சீமானை பற்றி கூறவில்லை. எல்லா இனத்திலும் நல்லவர்களும் உள்ளார்கள்.  ஊழல் செய்யும் திருடர்களும் உள்ளார்கள். தமிழரில் அப்படி லஞ்சம் ஊழல் செய்வோர் இல்லை என்று நீங்கள் ஜோக் அடித்த‍தால் உங்களுக்கு பதில் எழுதினேன்.

சுவிற்சர்லாந்து பொது துறை ஊழல்கள் குறைந்த நாடு. அப்படியானல் சுவிஸ் மக்கள் தூய தமிழரா?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஏராளன் said:

சீமான் 2009 இல் கொள்ளை அடித்தாரா?!

தமிழனின் பின்னடைவிற்கு கூட இருந்தே குழிபறிப்போரும் காரணம்.

கூட இருந்து குழிபறித்தோரைத் தான் ருல்பென் அடிக்கடி சுட்டிக் காட்டுறார்! மக்களை ஏமாற்றிக் காசடித்து விட்டு இன்று முன்னாள் போராளிகளையும் குடும்பங்களையும் கைவிட்டு விட்டவர்கள் அவர்கள்!

ஆனால், இதை சுட்டிக் காட்டும் ருல்பெனுக்கு கிடைக்கும் வசவுகளைப் பார்த்தீர்களா? நான் கருதுவது இந்தப் போக்குத் தான் எங்களுக்கு அடுத்த நூறாண்டுகளுக்கு முன்னோக்கி நகர விடாத தடை! 

Link to comment
Share on other sites

32 minutes ago, விசுகு said:

இது  ஒருவகை  வியாதி

எவரும்  அமைதியாக  இருந்தால் சொறியச்சொல்லும்

அதுவும்  புலி சார்ந்தவர்களாக 

பார்த்து பார்த்து  சொறியணும்

ஆனால்  எங்களுக்கும் அவர்களுக்கும்  எந்த  சொந்த  பந்தமும்  இல்லை

அரசியல் விமர்சனம். நடந்த, நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கு உங்களுக்கு உள்ள அதே உரிமை எனக்கும் உள்ளது விசுகு.  தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விமர்சிக்கலாம் எவரும் உலகில் புனிதர்கள் இல்லை.  தவறு செய்தவர்கள் உங்கள் அன்பிற்கு உரியவர்கள் என்பதால் நீங்கள் கடுப்பாகிறீர்களோ தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

அரசியல் விமர்சனம். நடந்த, நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கு உங்களுக்கு உள்ள அதே உரிமை எனக்கும் உள்ளது விசுகு.  தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விமர்சிக்கலாம் எவரும் உலகில் புனிதர்கள் இல்லை.  தவறு செய்தவர்கள் உங்கள் அன்பிற்கு உரியவர்கள் என்பதால் நீங்கள் கடுப்பாகிறீர்களோ தெரியவில்லை. 

அரசியல் விமர்சனம் என்பது புலிகள் சார்ந்தது தானா உங்களுக்கு??

எல்லா திரிகளிலும் இதையே எழுதி எழுதி புலம்புவது எந்த வகையான விமர்சனம்??

வருவதே எப்பொழுதாவது

வந்தால் இவற்றை மணந்து பிடித்து விசத்தை கக்குவது தான் விமர்சனமோ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விமர்சிக்கலாம் எவரும் உலகில் புனிதர்கள் இல்லை

எப்போதாவது நடுநிலமையாக நின்று கருத்து தெரிவித்து இருக்கின்றீர்களா?

அதென்ன உங்களுக்கு புலிகள் மட்டும் தவறு செய்தவர்களாக தெரிகின்றாகள்? யாழ்களத்தில் எத்தனையோ திரிகளில் வேறு  இயக்கங்கள் பற்றி கடுமையான கருத்தாடல்கள் நடந்தனவே? சிங்கள இனவாதம் பற்றி காரசரமான கருத்தாடல் எல்லாம் நடந்தனவே? அங்கு எல்லாம் வர மாட்டீர்கள். அப்படியே அந்த திரிகளுக்குள் தாங்கள் சமூகமளித்தாலும் புலி சொல் கட்டாயம் இருந்தே தீரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

அப்ப ஒபாமா தூய தமிழரா? (நானும் ஆய்வாளர் இல்லை! பகிடி தான்:grin:)

ஒபாமாவின் முழுவிபரமும் உங்கள் கூட்டாளி டொனால்ட் ரம்பை கேட்டால் சொல்லுவார்  நானும் பகிடிக்கு 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

ஒபாமாவின் முழுவிபரமும் உங்கள் கூட்டாளி டொனால்ட் ரம்பை கேட்டால் சொல்லுவார்  நானும் பகிடிக்கு 😜

ஒபாமா பற்றி ட்ரம்ப் சொல்வது உண்மையாக இருக்கும்! 
பிரபாகரன் பற்றி மகிந்த குழு சொல்வது உண்மையாக இருக்கும்!

(கோபிக்காதேங்கோ, குமாரசாமி தியரியை அப்ளை பண்ணிப் பார்த்தேன்! , அவ்வளவே!) 

48 minutes ago, விசுகு said:

அரசியல் விமர்சனம் என்பது புலிகள் சார்ந்தது தானா உங்களுக்கு??

எல்லா திரிகளிலும் இதையே எழுதி எழுதி புலம்புவது எந்த வகையான விமர்சனம்??

வருவதே எப்பொழுதாவது

வந்தால் இவற்றை மணந்து பிடித்து விசத்தை கக்குவது தான் விமர்சனமோ???

இதில் விசம் எங்கே இருக்கிறது விசுகர்? அவர் சொன்ன விடயம் சுவிசில் நடந்ததா இல்லையா? ஒரு கருப்பொருள் பற்றிப் பேச்சு வரும் போது நடந்த சம்பவத்தைச் சொல்வது ஏன் இவ்வளவு பிரச்சினையாக இருக்கிறது உங்களுக்கு?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Justin said:

பிரபாகரன் பற்றி மகிந்த குழு சொல்வது உண்மையாக இருக்கும்!

இது வரைக்கும் தமிழினத்தலைவர் எமது பிரபாகரனைப்பற்றி எந்த சிங்கள தலைவர்களும் இழிவாக பேசியது இல்லை. மாற்றாக அவர் எமக்கு எதிரியாக இருந்தாலும்  சட்டம் ஒழுங்கில் நேர்மையானவர்,பண்பானவர் என்றுதான் இன்று வரைக்கும் எமது தலைவருக்கு புகழாரம் சூட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் எமது ஈனத்தமிழர்கள் மட்டும் இன்றும் நாறல் வாயால்.......😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு இனத்தை சேர்ந்த நேர்மையான மனிதனும் ஊழல் லஞ்சம் செய்யமாட்டான் தமிழ்நாட்டு அரசியல்வாதி இனவாத கவர்ச்சிக்காக துய தமிழன்  என்ற சொல்லை பாவிக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

இந்த "தூய தமிழ் மகன்" என்றால் என்ன? யாராவது ஆய்வாளர்கள் விளக்கம் தருவார்களா?😂

 

"தூய தமிழ் மகன்"  என்பது....
தன்  இனத்தையும், சனத்தையும் ... என்றும், நேசிப்பவன்.

எப்ப பார்த்தாலும்... தன்  இனத்துக்கு எதிராகவும்,
புலி வாந்தி... எடுப்பவர்களும், இந்தப்  பட்டியலில் அறவே.. இல்லை. 

பிற் குறிப்பு:  உ + ம்...  சுமந்திரன்,  அவரின்..அல்லக்கைகள்...
தூய தமிழ் இனத்தில், சேர்க்கப் படவில்லை. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கேள்வி.. நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே.. மோடியை நானும்தான் நக்கலடித்தேன் சிலைக்கு.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூய தமிழ் மகன் என்பது....

தன் இனத்தை... நேசிக்காது... பிற இனத்தை,
தூக்கிப் பிடிப்பவனை... 

மற்ற.. நாட்டவர்களாக... இருந்தால், 
சுவரோடு... மோதி, அடித்துக்  கொன்று  இருப்பார்கள்.

தமிழினம்... மென்மையான இனம், என்ற படியால்...
போரில் தோற்று... உங்கள், நக்கல், நையாண்டிகளை...  
பார்த்துக் கொண்டு,  இருக்கின்றது.      

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 போராட்டம் நடந்த காலத்தில் தாயகத்தில் உள்ள பெரும்பான்மை தமிழர்கள் உயிரை கொடுத்து புலிகளை வளர்த்தார்கள்,

புலம் பெயர் பெரும்பான்மை தமிழர்கள் பொருளை கொடுத்து புலிகளை வளர்த்தார்கள்.

போராட்டம் முற்று பெற்ற பின்னரும் தாயகத்திலும் சரி புலம் பெயர் தேசத்திலும் சரி புலிகளை வசைபாடிய தாயக கனவுடன் வாழ்ந்த தமிழர்களே கிடையாது.

போராட்டத்துக்கு நிதி சேகரித்தவர்கள் அது முற்று பெற்ற பின்னர் அதை கையாடல் செய்தது முற்று முழுதான உண்மைதான், அதை தவறு என்று சொல்பவர்கள் அதிகம்தான், ஆனால் அவர்களை தண்டிக்க ஏது வழி? வாழும் நாடுகளின் சூழலும் சட்டமும் இடம் கொடுக்குமா?

காசு கொடுத்தவர்களே அதுபற்றி கதைத்து புண்ணியமில்லை என்று ஒதுங்கிகொண்டார்கள், தூர நின்று ஒருகாலம் வேடிக்கை பார்த்தவர்களே அதை துருவி துருவி சந்தடி சாக்கில் எம் போராட்ட அமைப்பையும் தலைமையையும் போராளிகளையும் சீண்டி போகிறார்கள்.

எண்ணெய் பூசிகொண்டு மண்ணில் புரண்டதுபோல் மண்மீட்புகாலத்தில் வாழ்ந்தவர்களே நியாயத்தை கேட்கிறோம் என்ற பேரில் தமது தனிப்பட்ட விமர்சனங்களை போராட்ட அமைப்பு தலைமைமீது கொட்டி தீர்க்கிறார்கள், ஒருகாலம்   உயிரையும் பொருளையும் உணர்வையும் தமிழரின் எதிர்கால வாழ்வுக்காய் கொடுத்து ஏங்கியவர்கள் கொடுத்தவர்கள் அதை சகித்து கொள்ள மாட்டார்கள்.

ஒபாமா தூய தமிழரா சுவிஸ்காரர்கள் தூய தமிழரா என்று கேட்பதெல்லாம் விதண்டாவாத நகைசுவையின் உச்சம்.

சீமான் என்ற தமிழர் தமிழர்கள் பற்றிய விசயத்தில் பேசியதால் தூய தமிழன் என்ற வார்த்தை அங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதுவே அமெரிக்கர்கள் ஒபாமாபற்றி பேசினால், சுவிஸ் மக்கள் சுவிஸ் அரசியல்பற்றி பேசினால் அங்கே தூய அமெரிக்கர்கள் தூய  சுவிஸ்காரர்கள் என்ற சொல்லாடல் கையாளப்படும்.

தூய தமிழர் என்ற சொல் எதுக்கு அங்கே வரபோகிறது?

பொருத்தமற்ற சொற் கையாடல்கள்  வெறும் சீண்டல் கருத்தாடலில் நீங்கள்  ஈடுபடுகிறீர்கள் என்பதை காட்டி கொடுத்துவிடும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நல்ல கேள்வி.. நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே.. மோடியை நானும்தான் நக்கலடித்தேன் சிலைக்கு.. 

புலவரே,

நான் அறிந்த வரையில் (பிழை எனில் திருத்தி கொள்கிறேன்).

1. இந்த சிலையை தமிழ் நாடு அரசு, மக்கள் வரிபணத்தில் வைக்கவில்லை. 

2. இது ஒரு தனியார் முன்னெடுப்பு. 3 வருடம் முதலே மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டது. எடப்பாடி அரசு வழங்கவில்லை. இப்போ ஸ்டாலின் அனுமதி வழங்கியுள்ளார்.

ஆகவே மோடி வைத்த சிலையோடு இதை ஒப்பிடுவது எவ்வளவு தூரம் சரி என்று தெரியவில்லை.

அடுத்து, சிலைக்குள் நூலகம், இன்னும் பல வசதிகள், மேலே ஏறி போகும் லிப்ட் எல்லாம் இருக்குமாம். நல்லதுதானே, தனியார் காசில் கட்டட்டுமே?

இல்லை நீங்கள் சிலை வைப்பதையே எதிர்கிறீர்களா? அப்போ பொன் சிவகுமாரன் சிலையையும் எதிர்கிறீர்களா? ஒப்பீடு நமக்கு கசக்கலாம் ஆனால் அவர்களுக்கு பெரியார் அப்படி ஒருவர்தானே?

இல்லை பெரியார் அப்படி இல்லை என்கிறீர்களா? ஆனால் பெரியாரை தூற்றி அரசியல் செய்வோருக்கு ஒரு சீட்டும் கிடைக்காமல் போகும் நிலைதானே அங்கே உள்ளது. ஆகவே சில ஈழத்தமிழருக்கும், 30 லட்சம் தமிழக தமிழர்களை விட, இரு திராவிட கட்சிகளின் கூட்டணிக்கு வாக்களித்த லட்சோப, லட்சம் மக்கள் இதை ஆதரிக்க கூடும் அல்லவா? அப்படி இல்லை என்றால் அவர்கள் இந்த கட்சிகளை அடுத்த தேர்தலில் தோற்கடித்து, சிலையை எதிர்தவர்களை முதல்வர் ஆக்கட்டுமே?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/9/2021 at 15:23, ஏராளன் said:

அப்படி எல்லாம் பணம் சேர்த்து பல பள்ளிகள், கல்லூரிகளை ஆரம்பிக்க உதவிச் சென்றார்.

சீமான் சொல்லும் இந்த பள்ளிகள், கல்லூரிகள் எங்கே இருக்கிறன? தமிழ் நாட்டில்தானே? 

அதனால் நன்மை அடைந்தவர்கள்? தமிழ்நாட்டினர்தானே?

ஆகவே அந்த தமிழ்நாட்டினரில் ஒரு அமைப்பினர் தனியார் நிதி மூலம் சிலை வைக்கிறார்கள்.  மத்திய, மாநில அரசுகள் அனுமதி கொடுத்துள்ளன.

அவ்வளவுதான் மேட்டர்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.