Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சூடு கண்ட பூனை

என்.கே. அஷோக்பரன்

பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதியால் அவசரகால நிலை, 2021 ஓகஸ்ட் 30ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் வழங்கலை உறுதிசெய்யும் காரணத்தின் நிமித்தமாக, அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

ஆனால், அவசரகால நிலை பிறப்பிப்பு என்பது, ஜனாதிபதியின் கையில் கிட்டத்தட்ட எல்லாம் வல்ல அதிகாரத்தைக் கையளிப்பது போன்றதாகும். இதன் பாதகங்கள் பற்றி, ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண, ஜனாதிபதி சட்டத்தரணியும் எம்.பியுமான எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் நிறையவே, பொதுவௌியில் பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த இடத்தில், இரண்டு கேள்விகள் எழுகின்றன. முதலாவது, இந்த அவசர கால நிலைப் பிரகடனம் அவசியம் தானா? 

இரண்டாவது, உணவுத் தட்டுப்பாடு ஒன்று ஏற்படும் என்ற அச்சம், இலங்கை மக்கள் மத்தியில் எவ்வாறு பரவ ஆரம்பித்தது?

கொவிட்-19 பெருந்தொற்று, இலங்கையைப் பீடித்து ஒன்றரை ஆண்டுகளைத் தாண்டியும், ‘கொவிட்-19’ என்ற பெருஞ்சவாலை எதிர்கொள்வதற்காக எந்தவொரு பொழுதிலும், அவசரகாலநிலை பிறப்பிக்கப்படவில்லை. அது, அவசியமில்லை என்று, அரசாங்கம் சுட்டிக்காட்டி இருந்தது.  

இதற்கான காரணத்தை, தனது கட்டுரையொன்றில் விவரிக்கும் கலாநிதி விக்கிரமரட்ண, ‘கொவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்ட ஆரம்ப காலத்தில், பாராளுமன்றத்தைக் கலைத்து, தேர்தல் வைப்பதில் அரசாங்கம் குறியாக இருந்தது. ஏனெனில், அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டால் பாராளுமன்றத்தில் அதற்கான அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்ளுதல் அவசியமாகிறது. அன்றைய பாராளுமன்றத்தில், இந்த அரசாங்கத்துக்குப்  பெரும்பான்மை இருக்கவில்லை. அத்தோடு, தேர்தல் நடத்துவதில் அரசாங்கம் குறியாக இருந்தது’ என்று சுட்டிக்காட்டியிருந்தார். 

ஆகவே, கலாநிதி விக்கிரமரட்ணவின் கருத்தின்படி, ஒருவேளை அன்று, பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு அறுதிப் பெரும்பான்மை இருந்திருக்குமானால், கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக அவசரகாலநிலை பிறப்பிக்கப்பட்டிருக்கும். ஆனால், கொவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்ள, அவசரகாலநிலை தேவையில்லை என்று சொன்ன இந்த அரசாங்கத்துக்கு உணவு வழங்கலை உறுதிசெய்ய, அவசரகாலநிலை தேவையா என்ற கேள்வி இங்கு எழுவது தவிர்க்க முடியாதது. 

இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுவதில், மேற்சொன்ன இரண்டாவது கேள்வி முக்கியம் பெறுகிறது. உணவுத்தட்டுப்பாடு ஒன்று ஏற்படும் என்ற அச்ச நிலை, இலங்கைக்கு ஏன் வந்தது?

கொவிட்-19 பெருந்தொற்று உலகளாவிய பொருட்கள், சேவைகள் வழங்கல் விநியோகத்தைக் கணிசமாகப் பாதித்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், இதைத் தாண்டியும் சிங்கப்பூர் போன்ற உணவுக்காக இறக்குமதியை மட்டுமே நம்பிய நாடுகள், சுமூகமாக இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன என்பதும், இங்கு கவனிக்கப்பட வேண்டியது. 

அப்படியானால், உள்ளூரில் உணவு உற்பத்தி நடக்கும் இலங்கை போன்ற நாட்டில், உணவுத் தட்டுப்பாட்டு அச்ச நிலை வரக் காரணமென்ன?

 உணவு உற்பத்தியில், இலங்கை தன்னிறைவு பெற்ற நாடல்ல. ஆகவே, உணவுக்காக இறக்குமதியிலும் கணிசமாக இலங்கை தங்கியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர், உள்ளூர் உற்பத்தியை ஊக்கப்படுத்துகிறோம் என்ற பெயரிலும், டொலர் கையிருப்பை தக்கவைக்கவும் அரசாங்கம் இறக்குமதித் தடைகளை அறிமுகப்படுத்தியது. இதில், பொதுமக்களின் கடும் விசனத்துக்கு உள்ளான தடையென்றால், மஞ்சள் இறக்குமதிக்கான தடையைக் குறிப்பிடலாம். 

தண்ணீரில் கரைத்து வீட்டுக்குத் தௌிக்குமளவிற்கு மலிவாக இருந்த மஞ்சள், சில நாட்களில் ஒரு கிலோ 7000-வைத் தாண்டிய ஒரு விலைமதிப்பு மிக்க பொருளாக இந்த இறக்குமதித் தடையின் பின்னர் மாறிவிட்டது. உள்நாட்டு உற்பத்தி அதிகரித்ததும், விலை குறையும் என்று அன்று சொன்ன அரசியல்வாதிகளின் கருத்து, அவர்களது வாக்குறுதியைப் போலவே இன்று பல மாதங்கள் கடந்தும் பொய்யாகவே இருக்கிறது. 

இறக்குமதியைத் தடைசெய்தால், உள்ளூர் உற்பத்தி அதிகரிக்கும் என்ற பத்தாம் ஆண்டு மாணவனின் பொருளியல் அறிவளவு ஞானத்தில் சிந்தித்து இறக்குமதியைத் தடைசெய்துவிட்டு, அதன் பிறகு உள்நாட்டு உணவு உற்பத்தியின் ஆணிவேரான இரசாயன உர இறக்குமதியையும் இந்த அரசாங்கம் தடை செய்தது. 

டொலர் கையிருப்பைப் பாதுகாத்தல் அதற்கான ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது. இப்போது, எப்படி உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது? பத்தாம் ஆண்டு மாணவனின் பொருளியல் அறிவளவான ஞானம், திக்கி விக்கி நிற்கிறது.

இறக்குமதியை அனுமதித்தால், டொலர் கையிருப்பு குறையும். டொலர் கையிருப்பைப் பாதுகாக்க, இறக்குமதியைத் தடைசெய்தால், உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் நிலை வரும். அப்படியானால் என்னதான் செய்வது?

 உலக நாடுகளில் இத்தகைய பொருளாதார, நிதி நெருக்கடிகள் எழும்போது, அவற்றுக்கு உதவி செய்யவும், வழிகாட்டவும்தான் சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகள் இருக்கின்றன. இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பல மாதங்களுக்கு முன்பே நாடியிருக்க வேண்டும். 

அதனூடாகத் திட்டமிட்ட முறையில், பொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்களை முன்னெடுத்து, இலங்கையின் பொருளாதாரத்தை பெரும் வீழ்ச்சியிலிருந்து பாதுகாப்பது முடியாத காரியமல்ல. 

ஆனால், வறட்டுப் பிடிவாதமும் ‘நான்’ என்ற அகங்காரமும் கொண்ட தலைமைகள், பொருளாதார மறுசீரமைப்பு திட்டங்களைத் தவிர்த்து, தற்காலிக கடன்களை அங்கே கொஞ்சம், இங்கே கொஞ்சம் என்று வாங்கி, வெறுமனே சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். 

இப்படி, அடிப்படை பொருளியல் அறிவு இல்லாத, ஆனால் அதிகாரத் திமிரும் வறட்டுப் பிடிவாதமும் ஆணவமும் கொண்ட தலைமைகளின் அடுத்தடுத்த பிழையான பல முடிவுகள்தான், இலங்கையின் இன்றைய பொருளாதார நிலைக்குக் காரணம். 

இங்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலையும், உணவு வழங்கல் எனும் பொருளியல் பிரச்சினையைத் தீர்க்காது. ‘மடிவற்றிய மாட்டை, எவ்வளவு அடித்தாலும் சூடு போட்டாலும், அது பால் கறக்காது’ என்று, அதன் முட்டாள் உரிமையாளனுக்கு யார் சொல்லிப் புரிய வைப்பது?

1970களிலும் இலங்கை இதே போன்றதொரு பொருளாதார நிலையை எதிர்கொண்டது. அப்போதும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவென ஆட்சியிலிருந்த கூட்டம் இறக்குமதியைத் தடை செய்து, மூடிய பொருளாதாரத்தை உருவாக்கியது. 

அன்றைய காலத்தில் வாழ்ந்த முன்னைய தலைமுறையிடம், ஐந்து மணிக்கு பாண் வாங்க வரிசையில் காத்துக்கிடந்த கதைகளையும் உடுப்புத் தைக்க துணிவாங்க மாதக்கணக்காக காத்திருந்த கதைகளையும் அந்த நரக அனுபவங்களையும் கேட்டுப்பாருங்கள்! 

ஏழு வருடங்கள் இலங்கையை இருண்ட காலத்துக்குள் தள்ளிய சிறிமாவினதும் ‘தோழர்’களினதும் கொடுமையான ஆட்சி அது. அன்றும் ‘கலாநிதிகள்’ பல பேர் அந்த ஆட்சியில் இருந்தார்கள். அரிசிச் சோறும் கறியும் உண்டு வாழ்ந்த இலங்கையர்களை, மரவள்ளிக்கிழங்கு தின்று உயிர்பிழைக்க வைத்த ‘அறிவுஜீீவிகள்’ அவர்கள். 

உலகநாடுகள் ஒன்றிலொன்று தங்கிய, பொருளாதார சூழல் உருவாகிவிட்ட பின்னர், நாம் இறக்குமதியை தடை செய்வோம்; அதனூடாக உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்போம் என்பதெல்லாம் காலாவதியாகிப்போன பொருளியல் சிந்தனைகள்.
 ஏற்றுமதி, இறக்குமதி சமநிலையைத் தக்கவைக்க, ஏற்றுமதிக்கான கேள்வியை அதிகரிப்பதும், ஏற்றுமதிக்கான வழங்கலை அதிகரிப்பதும் தான் மிகச் சிறந்த, நன்மை பயக்கின்ற உபாயமாகும். அதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். 

உணவு உள்ளிட்ட ஏறத்தாழ எல்லா உற்பத்திகளுக்கும் வௌிநாடுகளை நம்பிய சிங்கப்பூர், மாலைதீவு போன்ற நாடுகளால், தமது இறக்குமதியைச் சமாளிக்கக் கூடியளவுக்கு டொலர் வரவைத் தக்கவைக்க முடியுமென்றால், இயற்கை வளங்களும் மனித வளமும் மிக்க இலங்கையால், அது முடியாது போனால், இலங்கையில் நிர்வாகத்தில் மிகப் பெரிய பிழை இருக்கிறது என்று தான் அர்த்தம்.

இலங்கையின் அரசியல் தலைவர்களும் இலங்கையின் மக்களும் காலாவதியாகிப்போன பொருளியல் சிந்தனைகளிலிருந்து வௌிவர வேண்டும். 1970களில், ஒரு முறை கண்ட சூடு, இலங்கை என்ற பூனைக்குப் போதுமாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், வட-கொரியாவைப் போன்றதொரு நாடாகத் தான் நாம் ஆவோம். ஆனால், வடகொரியாவிடம் அணு ஆயுதமாவது இருக்கிறது. நாம் எதுவுமற்ற ‘கோமாளி’ நாடாகத்தான் ஆகிவிடுவோம்.
 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சூடு-கண்ட-பூனை/91-280356

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
    • ஓமண்ணை…. பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது. 70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.
    • மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது.    டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.   டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.