Jump to content

வங்கியில் வைப்பில்லிட்டவர்களின் அவலநிலை : அவசரகால சட்டம் : திணறும் அரசு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஏராளன் said:

வங்கியில போட்ட காசும் அம்போவா?!

இருக்குற 1000 ரூபாவையும் ஏரிஎம் காட்டு பிடிச்சு இருக்கு என்னத்த சொல்ல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

இருக்குற 1000 ரூபாவையும் ஏரிஎம் காட்டு பிடிச்சு இருக்கு என்னத்த சொல்ல 

எல்லாம் அவன் செயல்! மிக நெருக்கடியான காலம் வரப்போகுதோ? இல்லை நாங்க பாக்காத நெருக்கடியா என்று இருப்பமோ தெரியல!
ஆடு மாடு வளர்ப்பும் தோட்டம் துரவு செய்யத் தெரிஞ்சால் உசிரோட இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஏராளன் said:

எல்லாம் அவன் செயல்! மிக நெருக்கடியான காலம் வரப்போகுதோ? இல்லை நாங்க பாக்காத நெருக்கடியா என்று இருப்பமோ தெரியல!
ஆடு மாடு வளர்ப்பும் தோட்டம் துரவு செய்யத் தெரிஞ்சால் உசிரோட இருக்கலாம்.

"சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்" என்பதெல்லாம் மெய்ப்பட்டே தீரும். ஆடு மாடு வளர்ப்பும் உழவின் ஒரு பகுதியே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து இந்தியாதான். ரயில்வே, இன்சூரன்ஸ், தொலைத்தொடர்பு, நெடுஞ்சாலை என இலாபத்தில் இயங்குபவற்றைக் கூட  இந்திய ஒன்றிய அரசு தனியாரிடம்  விற்பது இதற்கான அறிகுறியே. தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, சமூக முன்னேற்றம் என்பதையெல்லாம் விடுத்துப்  பெரும்பான்மையினரின் மதம், இனம், மொழி என ஆதிக்க செலுத்த எண்ணும்  அரசுகள் மக்களை இந்த இழிநிலையில்தான் கொண்டு விடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சொறிலங்கா எம்பஸி தரகு ஆளின் லண்டன் பவுன்ஸ் ரேட்  350 ரூபா .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த பொருளாதர சரிவால் சீனா இன்னும் உதவ முன்வர, இலங்கை அரசு ஒரு நிலை எடுத்து சீனா பக்கம் சாய, நாம் சும்மா இருந்து நடப்பதை வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்

நல்லதொரு ஆய்வு, தொடருங்கள் சம்சும் கோஷ்டிகளைப்பற்றி கவலைப்படாமல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kuna kaviyalahan said:

விபரம் சொல்லுங்கள் 

குணா அண்ணை 
பிரிச்சு மேயுறீங்கள் ....தொடருங்கோ 
இப்போ ஒவ்வொரு நாளும் உங்களிட வீடியோ வந்திருக்கா என்று யூடூபிலை பார்க்கிறதே வாடிக்கையாக போயிட்டு...முகப்புத்தகம், டுவீட்டரில்  கூத்தமைப்பும் கூத்தமைப்பின் வால்களும் கிடந்து கதறுறினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குணா புதிதுபுதிதாக முழங்கி தள்ளுகிறீர்கள்.

இதனால் தமிழருக்கு உள்ள நன்மை தீமையையும் உங்கள் பஞ்சாங்கத்தைப் பார்த்து சொல்லுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

குணா புதிதுபுதிதாக முழங்கி தள்ளுகிறீர்கள்.

அவர் சொன்னது தான் அப்படியே நடக்குது 
அமெரிக்க காங்கிரஸ் அறிக்கை கைமா, புலிகள் மீதான தடை கைமா, எல்லோருக்கும் முதல் முண்டியடிச்சுக்கொண்டு சுமந்திரன் ஓடிப்போய் அமெரிக்காவையும் பீரிசையும் டீல் பண்ணி அரசியல் தீர்வும் கைமா , P2P பேரணி கைமா, பொறுத்திருந்து பாருங்கோ ஜெனிவாவில் இலங்கையை கூப்பிட்டு தலையில் தடவிகொடுத்து அனுப்புவினம் அத்தோடு ஜெனிவாவும் கைமா, புலம்பெயர்ந்தவர்களிடம் இருந்து வரும் ஓசையை மட்டுப்படுத்த புலிகள்  ஈடுபட்ட போர்க்குற்றங்களையும் விசாரிக்கவேண்டும் என்று சுமந்திரனை வைத்தே அறிக்கை எழுதப்பட்டு,வெளியிடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும்  (அதற்கு முத்தாய்ப்பு தான் புலிகள் செய்த இனச்சுத்திகரிப்பை எண்ணி நாணி கோணி புதிதாக சமைந்த பருவ மங்கை போல் சும் வெட்கப்பட்டு நின்றது  ). வெளிநாடுகளுக்கு தப்பிப்போய் அங்கேயாவது நிம்மதியாக வாழும் முன்னாள் போராளிகளை குறிவைத்து ரோம் சாசனத்தில் (Rome Statute) கைச்சாத்திட்ட அந்தந்த நாடுகளில் அவர்களுக்கெதிராக பாயப்போகும் வழக்குகளால் அவர்களும் கைமா, 
ஊரில் நம்முடைய சொந்தங்களில் ஒருவரான வட்டிக்கந்தப்பர் ஒருவர் முழுசிக்கொண்டிருக்கிறார் 
முழு நேர கந்துவட்டி தொழில் பார்த்தவர் முதலிட்ட இடங்களில் எல்லாம் கறந்த வட்டி கொடுத்த  முதலினை விட ஏறி விட்டதால் வழக்கும் போடமுடியாது, வட்டிக்கு வாங்கியவர்கள் தவிலடிப்பதால் முதலினையும் கொடுக்கிறார்கள் இல்லை, நம்ம ஆளும் வட்டியை கணக்கு வைத்து போட்ட சீட்டுக்கள் எல்லாம் துருத்திக்கொண்டு வேறு  நிற்கிறது , வங்கியோ நிலையான வைப்பிற்கான வட்டிவீதத்தினை பாதிக்கும் கீழாக குறைத்துவிட ஆளோ இரவினில் எழுந்து தனியாக உலாத்துவதும், யோசனை பிடித்துப்போய் திரிவதாகவும் மிக விரைவில் இந்த ஆளுக்கு லூஸ் பிடிச்சிடும் போல் கிடக்கு என்று மனைவி அழுது அரற்றினார். ஆக மொத்தத்தில் எல்லாமே கைமா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அக்னியஷ்த்ரா said:

கைமா 

இந்தக் கைமா என்றால் என்னடா தம்பி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்தக் கைமா என்றால் என்னடா தம்பி?

எல்லாம் ஏமாற்று என்று நினைக்கிறேன்.🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் கோத்தபய அரசு பதவியேற்றது. புதிய அரசு பொறுப்பேற்ற அந்த ஆண்டு மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 20 சதவிகித்ததுக்கும் அதிகமாகச் சரிந்தது. இலங்கை மத்திய வங்கிகளின் தரவுகளின் படி 2019-ம் ஆண்டு இலங்கையின் அன்னிய செலவாணி கையிருப்பு 7.5 பில்லியன் டாலராக இருந்தது. கடந்த ஜூலை மாத நிலையில் இந்த கையிருப்பு வெறும் 2.8 பில்லியன் டாலர் என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 7.5 சதவிகிதம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பொருளாதார சரிவு இந்தியாவை பாதிக்கும். 
ப சிதம்பரம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.