Jump to content

இந்தியாவின் திருமணங்களில் ஆபாச படங்களின் தாக்கம் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • அனகா பாதக்
  • பிபிசி மராத்தி

மகாராஷ்டிராவின் பின்தங்கிய பகுதியொன்றை சேர்ந்த ரத்னா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனக்கு திருமணம் நடைபெற்றவுடன் பேரின்ப காலத்தை எதிர்நோக்கி புதியதொரு வாழ்க்கையை தொடங்கினார்.

அவள் தன்னுடைய கணவர் பாலிவுட் படங்களான தில்வாலே துல்ஹனியா, லே ஜாயங்கே அல்லது ஹம் தில் தே சுகே சனம் ஆகியவற்றில் காட்டப்பட்டுள்ளதைப் போன்று தன்னை நேசிக்க வேண்டுமென்று விரும்பினார். அடுத்த சில தினங்கள் ஸ்கிரிப்ட்டிற்கு அப்பாற்பட்டு நடந்தது. நன்கு படித்தவரான அவளின் கணவர், அவளின் தேவையை பூர்த்தி செய்தார்.

ஒரே ஒரு பிரச்சனை மட்டுமே இருந்தது: உடலுறவு முரட்டுத்தனமாகவும், சில நேரங்களில் வன்மமாகவும் இருந்தது.

ஆபாசப் படத்திற்கு அடிமையாகிவிட்ட ரத்னாவின் கணவர், அவளை அந்த வீடியோவில் இருப்பதை போன்று செயல்படுமாறு வற்புறுத்தினார். சில காலத்தில் தன்னுடைய நடத்தையை கணவர் மாற்றிக்கொள்வார் என்று நம்பிய அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் மேலும் வன்மமாக மட்டுமே மாறினார். அவன் இரவு முழுவதும் ஆபாசப் படங்களை பார்க்க தொடங்கினான். பாலியல் உணர்வைத் தூண்டும் மாத்திரையை எடுத்துக்கொண்டு, அவனுடன் உறவு கொள்ளுமாறு மனைவியை வற்புறுத்தினான். அவன் சொன்னதை செய்யாவிட்டால் தாக்கவும் செய்தான்.

ஒருநாள் ரத்னாவின் கால்களை சீலிங் பேனுடன் கட்டி வைத்து, ஆபாசப் படத்தில் உள்ளதை போன்று உடலுறவுக் கொண்டான். இந்த முழுச் செயலும் அவள் மனதை உடைத்ததுடன், அவளை உணர்ச்சி ரீதியாய் நொறுக்கியது.

அவனது செயல்பாடு தாங்கி கொள்ள முடியாத அளவுக்கு அதிகமானதால், மனமின்றி விவாகரத்துக்கு விண்ணப்பித்தாள். "இந்த முழு நிகழ்வும் ரத்னாவின் வாழ்க்கையை மாற்றிவிட்டது. அவளுக்கு தன்னை சுற்றியுள்ளவர்களை நம்புவதில் பிரச்சனைகள் உள்ள நிலையில், தற்போது தன்னுடைய பெற்றோர்களுடன் வசிக்கிறார். அவளது கணவன் மறுதிருமணம் செய்துக்கொண்டான்,"என்கிறார் சமூக சேவகரான ராதா கவாலே.

பல்வேறு விதமான வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின் மறுவாழ்வுக்காக டாடா டிரஸ்ட் மற்றும் மகாராஷ்டிர அரசாங்கம் இணைந்து உருவாக்கியுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைப்பிற்காக வேலை செய்யும் சமூக சேவகர்களில் ஒருவராகவும் ராதா இருக்கிறார்.

"ஆபாசப் படங்களுக்கு அடிமையான கணவர்களால் வன்முறை மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளான பெண்கள் குறித்த புகார்கள் எங்களுக்கு ஏராளமாக வருகின்றன," என்று அவர் கூறுகிறார். "ஆபாசப் படங்களில் பார்த்த வாய்வழி உறவு அல்லது ஆசனவாய் புணர்ச்சிக்கு மனைவியை இணங்கும்படி கூறுவதும் மற்றும் அவர்கள் இந்த கோரிக்கைகளுக்கு இணங்கவில்லையானால், அவர்களைத் தாக்குவதும் ஒரு பொதுவான நடைமுறையாக மாறிவிட்டது. இந்த சூழ்நிலையானது கிராமம் அல்லது நகரம் அல்லது வேறுபட்ட சமூக மற்றும் பொருளாதார நிலை என்று பாகுபாடில்லாமல் உள்ளது. ஆண்கள் போதையில் இருக்கும்போது இத்தகைய தாக்குதல்களில் பெரும்பாலானவை நடக்கிறது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வன்முறைகள் அதிகரிக்க காரணமாகும் ஆபாசப் படங்கள்:

இந்தியாவின் சில திருமணங்களில் ஆபாசப் படம் செய்யப்போவது என்ன?

மலிவான விலையில் கிடைக்கும் திறன்பேசிகள் மற்றும் இலவச இணைய பயன்பாட்டின் ஆகியவை ஆபாசப் படம் தொடர்பான வன்முறைகள் அதிகரித்து வருவதற்கு காரணமாக உள்ளன.

விடோலி என்னும் அமைப்பின் இணை நிறுவனரும், தலைமை செயலதிகாரியுமான சுப்ரட் கர், இந்தியாவில் ஆபாசப் படங்களை பார்ப்பது 2016-2017ம் ஆண்டு காலக்கட்டத்தில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக கூறுகிறார். விடோலி பகுப்பாய்வு மற்றும் தரவு நுண்ணறிவு சேவைகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. "எங்கள் கணக்கெடுப்பின்படி கடந்த வருடத்தில் இலவச இணையம் மற்றும் மலிவான திறன்பேசிகளின் காரணமாக ஆபாசப் படங்களை பார்ப்பது அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது," என்று அவர் தெரிவித்தார்.

மரத்வாடா பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ஜோதி சப்கல், இதுபோன்ற நிகழ்வுகள் ஒரு சில பகுதிகள் என்றல்லாது மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் நடப்பதாக கூறுகிறார். "சில நேரங்களில் ஆண்களின் இறுதி நோக்கமாக பாலியல் திருப்தி என்பது இருப்பதில்லை. ஆனால், அவர்கள் தங்களின் ஆண்மையை நிரூபிக்க அல்லது தங்களின் மனைவிகளை கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதற்காக அவ்வாறு செய்கின்றனர். 'என்னுடைய மனைவி என்னுடைய சொத்து, நான் ஆவலுடன் எதை வேண்டுமானாலும் செய்வேன்' என்ற எண்ணத்தின் காரணமாக அதுபோன்ற வன்முறைகள் நடக்கின்றன'.

ஒரு பெண்ணின் கணவர் ஆபாச படங்களை பார்த்து அதில் சித்தரிக்கப்பட்ட பாலியல் நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று தன் மனைவியிடம் கோரிய ஒரு சம்பவத்தை ராதா விவரிக்கிறார். ஒருமுறை, அவன் தன் மனைவியை ஒரு மர கட்டிலில் கட்டி, அவளது உறுப்பில் வாழைப்பழத்தை சொருகி, அதை படம்பிடித்து தனது நண்பருடன் பகிர்ந்து கொண்டார். "அவன் ஒரு தினசரி ஊழியராக இருந்தாலும், அவனிடம் ஆபாசப் படம் பார்ப்பதற்காக ஒரு திறன்பேசியும், மலிவான இணைய இணைப்பும் இருந்தது," என்று அவர் கூறுகிறார்.

உணர்ச்சி சம்பந்தப்பட்ட ஈடுபாடு இல்லை

இந்தியாவின் சில திருமணங்களில் ஆபாசப் படம் செய்யப்போவது என்ன?

ஹைதராபாத்தை சேர்ந்த பாலியல் மருத்துவரான ஷர்மிளா முஜும்டர், அதுபோன்ற நிலையில் இருப்பதாக ஒரு பெண் உணரும்பட்சத்தில் உடனடியாக உதவியை நாட வேண்டும். "தீவிர பாலியல் செயல்கள் மூலமாக நடக்கும் எந்த வகையான வன்முறை அல்லது அசாதாரண பாலியல் எண்ணங்களை தூண்டுவதை ஏற்றுக்கொள்ள கூடாது."

ஜோடிகள் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் உறவுக் கொண்டால்தான் அதில் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும். துரதிருஷ்டவசமாக, இந்தியாவில் காதலையும், காமத்தையும் எதிர்பார்க்கின்ற ரத்னா போன்ற பெண்களுக்கு இது இன்னும் சிம்ம சொப்பனமாகவே உள்ளது. பாலியல் தொடர்பான விடயங்களில் இந்திய பெண்களின் கருத்துக்கள் ஏற்கப்படுவது அரிதே.

ஆபாசப் படங்களை பார்ப்பதில் தவறேதும் இல்லை என்றும் சர்மிளா நம்புகிறார். "சில வேளைகளில் காதலர்களின் கூச்ச உணர்வை போக்கி, ஆரோக்கியமான உடலுறக்கு உதவுகிறது," என அவர் எண்ணுகிறார்.

பாலுறவு பற்றி பேசுவது தவறானது என நினைக்கும் ஒரு நாட்டில், பாலியல் பற்றி பள்ளிகளிலும், குடும்பங்களிலும் வெளிப்படையான உரையாடல்கள் இல்லாதவரை, கணவன் மற்றும் மனைவி இடையே ஆரோக்கியமான உடலுறவு என்பது தொலைத்தூர கனவாகவே இருக்கும்."

முதலில் பெண்கள் பேசத்தொடங்குவது முதல் படியாக இருக்கிறது என்று நம்பும் ராதா, பின்னர் அவர்களின் கணவர்களும், குடும்பங்களும் செவிமடுக்க தொடங்குமென்று நம்புகிறார்.

இந்தியாவில் ஆபாசப் படங்களை பார்ப்போரின் பழக்கவழக்கங்கள் பற்றிய புள்ளிவிவரங்கள்

ஒருநாளில் ஆபாசப் படம் பார்ப்பதற்கு செலவிடும் நேரம்:

உலகம் - 8.56 நிமிடங்கள்

இந்தியா - 8.22 நிமிடங்கள்

மகாராஷ்டிரா - 8.37 நிமிடங்கள்

சராசரி பக்கப் பார்வைகள்:

உலகம் - 7.60 நிமிடங்கள்

இந்தியா - 7.32 நிமிடங்கள்

மகாராஷ்டிரா - 7.91 நிமிடங்கள்

(போர்ன் ஹப் வெளியிட்ட தரவுகளின்படி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பிழம்பு said:

அவன் சொன்னதை செய்யாவிட்டால் தாக்கவும் செய்தான்.

அப்பிடி உலகத்திலை இல்லாத என்ன கோதாரியை செய்ய சொன்னான் பாவி 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, குமாரசாமி said:

அப்பிடி உலகத்திலை இல்லாத என்ன கோதாரியை செய்ய சொன்னான் பாவி 😡

அது உங்களுக்கு சரிப்பட்டு வராது😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, நந்தன் said:

அது உங்களுக்கு சரிப்பட்டு வராது😝

ஏன் சரி வராது? எனக்கென்ன குறைச்சல் எண்டு கேக்கிறன்? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

ஏன் சரி வராது? எனக்கென்ன குறைச்சல் எண்டு கேக்கிறன்? :cool:

உங்களுக்கு ஜிம்னாஷ்டிக் தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நந்தன் said:

உங்களுக்கு ஜிம்னாஷ்டிக் தெரியுமா?

பதினாறு வயதிலை தொடக்கி வைச்சது இன்னும் ஓயவேயில்லை...என்ன மருந்து மாயமோ தெரியேல்லை. :cool:

5-scientifically-proven-benefits-push-ups.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, சுவைப்பிரியன் said:

நந்தன்மேடைக்கு வரவும்.

அவர் எங்க மேடைக்கு வர்றது, இன்னும் இந்த அதிர்ச்சியில் இருந்து ஆள் மீளவில்லை.......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/9/2021 at 23:24, சுவைப்பிரியன் said:

நந்தன்மேடைக்கு வரவும்.

நான் மேடைக்கு வரலாமோ

 

On 8/9/2021 at 23:47, suvy said:

அவர் எங்க மேடைக்கு வர்றது, இன்னும் இந்த அதிர்ச்சியில் இருந்து ஆள் மீளவில்லை.......!   😁

அதிர்ச்சி ரெண்டு பேருக்குமா அண்ண 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.